சனி, 20 ஆகஸ்ட், 2011

Shoba.


Prabanchan- Agavan.

கல்வி செத்து புனைவு தோன்றும் கவி வெளி






சங்க இலக்கியம் என்று இன்று அறியப்படும் பிரதிகள், பாட்டும் தொகையுமான பதினெட்டுத் தொகுப்புகளின் கவிதைகள் எழுதப்பட்ட காலம் கி.மு.மூன்றாம் நூற்றாண்டு தொடங்கி கி.பி.இரண்டாம் நூற்றாண்டில் முடிவுறுகிறதாகப் பெரும்பான்மை ஆராய்ச்சியாளர்கள் ஏற்றுக் கொள்கிறார்கள். அதாவது சுமார் ஐநூறு ஆண்டுகள் அவகாசத்தில் சங்க இலக்கியக் கவிதைகள்/பாட்டுகள் எழுதப்பட்டிருக்கின்றன.



கமில் ஸ்வலபில், சங்க இலக்கியக் காலத்தை இப்படியாக வரையறை செய்திருக்கிறார். ÔÔகி.மு.150 அளவில் ஆதிப் பாணர்கள் பாடல்கள். இவை பெரும்பாலும் கிடைக்கவில்லைÕÕ என்கிறவர் கி.பி. 350-400 கால அளவில் பாணர் மரபு மறைவு என்று கருத்துரைக்கிறார். இந்தக் காலக் கணக்கில் எந்தக் கருத்து வேறுபாடும் எழவில்லை. சுமார் முன்னூறு ஆணடு கால மரபு மறைந்து, புலமை மரபு எனப்படும் புலவர் அல்லது கிழார் மரபு அல்லது விவசாயம் சார்ந்த ÔÔமேலோர்ÕÕ மரபு உருவாகிறது.

சங்க இலக்கியப் புலமை தோற்றிய கவிதைகளைப் படிக்க நேர்கிற தொடக்க நிலை வாசகரும் கூட அதன் ஆச்சரியம் தரும் நுட்பங்களிலும், மனதின் அடி ஆழத்தைத் துழாவும் கவிப்பயணத்திலும் கவனம் குவிக்காமல் இருக்க முடியாது என்றால், பாணர் மரபு மறைந்துவந்த காலகட்டத்தில் உருவாகி வளர்ந்த புலமை மரபு உடனடியாக இத்தகைய செழுமையான விளைச்சலைத் தரமுடியாது. பெரிதும் வாய்மொழி மரபினவாகிய பாண் மரபுக் கவிதைகள் இன்னும் நீண்ட காலம் வழக்கத்தில் இருந்திருக்க வேண்டும். ஒரு பெரும் மரபாக நிலைத்திருந்த பாணர் மரபு, சிறந்திருந்த நிலைக்கும் பசியே உடம்பாகத் தேய்ந்த நிலைக்கும் சில நூறு ஆண்டுகளாவது இருக்க வேண்டும். அதோடு, பாணர் மரபின் சத்தான பகுதிகளைச் செரித்துக்கொண்டே, புலமை மரபு தோன்றியிருக்க வேண்டும்

பாணர்கள் காலத்துப் பாடல்கள் என்று சங்க இலக்கியப் பெரும்பரப்பில் எதையும் திட்டவட்டமாக எடுத்துச்சொல்ல முடியவில்லை. அனுமானங்கள் துணைகொண்டே மறைந்துபோன இந்த வரலாற்றைக் கட்டமைக்க வேண்டி இருக்கிறது. தமிழ் இலக்கிய வரலாற்றில் பல சரடுகள், அனுமானம் கொண்டே நிறுவ வேண்டியவையாக இருக்கின்றன.



ஆய்வாளர் அம்மன்கிளி முருகதாஸ், புலவர்களைக் கூறும் இடங்கள்தோறும் பாணர்களையும் சேர்த்தே உரைக்கிறார். சங்கப் பாடல்களில் பண்பாட்டுக்கும் புலவர் பாட்டுக்கும் வித்தியாசம் தெரியாத நிலையில் இல்லாது சொல்வதே நியாயம். மட்டுமின்றி, பாணர் குழாத்தையும் தொகுத்து ஆராய்ந்த சிறப்பும் அம்மன் கிளிக்கு உண்டு.

பாடுநர் குழாம்களாக அவர் (சங்கக் கவிதையாக்கம், மரபும் மாற்றமும்) எட்டே பேரை அடையாளம் காண்கிறார். 1. பாணர், 2. புலவர். 3. கோடியர் 4. வயிரியர் 5. கண்ணுளர் 6. கிளைஞர். 7. பொருநர் 8. அகவுனர். கூத்துக் குழுவினரும் இதில் உண்டு. கிளைஞரும் பொரு நரும் பாணர்குழுக்களுடன் சேர்த்துப் பேசப்பட, அகவுனர் மந்திரச் சடங்குகளுடன் இணைந்தவராகக் காணப்படுகின்றனர் என்கிறார் அவர்.



அகவுனர் என்கிற மந்திரச் சடங்கோடு சம்பந்தப்பட்டவர்கள் பற்றிய குறிப்புகள் சங்க இலக்கியத்தில் குறைவாகவே காணப்படுகிறது. சமூக வளர்ச்சிப் போக்கில் இந்த அகவுனர் என்கிற மந்திரச் சடங்காளர்கள் முக்கியத்துவம் இழப்பது இயல்பேயாகும். மலை சார்ந்த இடங்களிலும் மற்றும் காடு, சமதளம், ஆற்றுப்படுகை, கடல்சார் மண்வெளி என்பது பழந்தமிழர் வாழ்வாதாரங்கள். காடும், அதன் செறிவும், இருண்மையும், தீ முதலான அபாயங்களுமாக வாழ்ந்த மக்கள், அதன் உருவமாகவே காளியை, காடுகிழானைப் படைத்து வணங்கினார்கள். ஐவகை நிலத்தும் வாழ்ந்த மானுடக் குழுக்கள், அந்தந்த நிலப்பகுதிக்கும் தாங்கள் வாழ்வாதாரங்களுக்கும் ஏற்பத் தெய்வங்களைப் படைத்துக் கொள்கிறார்கள் எனில், அதற்கான மந்திரமும் சடங்குகளும் தேவைப்படுகிறது. மனித மனதின்ஆதார சக்திகளுள் ஒன்று அச்சம்: காற்றும், தீயும், பெருமழையும், இடியும், மின்னலும், புரிபடா நோயும் அவர்களை அலைக்கழிக்கும்போது அவர்களுக்குத் தம்மைக் காக்கும் புறச்சக்தி தேவைப்படுகிறது. அந்தச் சக்திக்குத்தாம் உண்ணும் உணவையும் தாம் அரிதில் பெற்ற பொருளையும் தந்து சாந்தி செய்து கொள்வதில் இந்த மந்திரச் சடங்குகள் தோன்றி இருக்கின்றன. இவைகளை முன்னிறுத்திய சடங்காளர்களே அகவுனர்கள்.



அகவன் மகளை அழைத்து தன் தலைவன் குன்றத்தைப் பாடச் சொல்லிக் கேட்டுக் கொள்கிறாள் ஒரு தலைவி.



அகவன் மகளே! அகவன் மகளே!

மனவுக் கோப்பன்ன நல்நெடுங் கூந்தல்

அகவன் மகளே! பாடுக பாட்டே;

இன்னும், பாடுக, பாட்டே- அவர்

நல்நெடுங்குன்றம் பாடிய பாட்டே.

(குறுந்தொகை :23)



தெய்வாம்சத்தை அல்லது முருகாம்சத்தைத் தம் உடலில் ஏற்றிக் குறி சொல்வது அகவர்கள் தொழில். அத்தொழிலில் ஈடுபட்ட அகவன் மகள், தன் தலைவனின் குன்றைப் பாடினால் தலைவனுக்கும் தலைவன் குன்றுக்கும் நன்மைகள் விளையும் என்பது தலைவியின் எண்ணமாகலாம்.

பாடுநர் குழாம்களின் ஊடாக அகவுனர்களைச் சேர்த்த காரணம், மந்திரச் சொற்களை உச்சரிக்கும் பழக்கத்தின் ஊடாகச் சொற்களுக்கு வந்து சேரும் ஒருவித இசைச் சேர்க்கையைக் கணக்கில் கொண்டு, பின்னர் தழைத்து வளர்ந்த இசையைக் கைக்கொண்ட பாணர்களுக்கு முன்தலைமுறையினர் அவர்கள் என்கிற காரணமாய் இருக்கலாம்.



மக்கள் அடர்த்தி கூடக்கூட, நெருப்பை உருவாக்கிச் சமைக்கும் அறிவும், ஆயுதங்களைச் செய்துகொள்ளும் அனுபவம் வாய்த்த பிறகும், மந்திரங்களின் இடம் மற்றும் அதன் வாழ்க்கை வியாபகம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்துவிட்டிருக்கிறது என்பதையே சங்க இலக்கியங்கள் அகவுனர்கள் பற்றி அதிகம் பேசாமைக்குக் காரணம். என்றாலும், பெண்களின் காதல் நோயைப் புரிந்துகொள்ளாத மூத்த தலைமுறையினரான செவிலித் தாய்கள் மற்றும் தாய்கள் மந்திரம் ஆடிகளை அழைத்துக் கொண்டிருந்தார்கள். தெய்வம் ஏறி இசைத்தலும், பிறகு ஆடலும் பிறகு தோன்றிய இசை நடனங்களுக்கு ஆதாரம் என்ற வகையில் பாணர்கள் அவர்களுக்குக் கடன்பட்டுள்ளார்கள்.



பாணர்களோடு வயிர் என்னும் இசைக்கருவியை இசைத்தவர்களும், கோடு என்னும் வாத்தியத்தை இசைத்தவர்களும், சேர்ந்தே பார்க்கப்பட வேண்டியவர்கள். ஆக, பாணர்கள் என்று பொதுவாகப் பேசும்போது ஆடற்குழுவினரும், இசைக்குழுவினரும் இணைந்தே இருக்கிறார்கள் என்பதைக் கருத்தில் கொள்ளவேண்டும். இதன் பொருள், இவர்கள் கூட்டம் கூட்டமாக இசைக் குழுவோடு பயணம் செய்து தொழில் செய்கிற இயல்புடையவர்கள் என்று ஆகிறது.



பாணர்கள் தங்கள் கவிதை அல்லது பாடல் இயற்றும் ஆற்றலை எங்ஙனம் கொண்டார்கள், அவர்களின் கல்வி எத்தகையது, எழுத்தறிவு எத்தன்மையது, புரவலர்களிடம் அவர்கள் தங்கள் பாடலை/கவிதையை எழுதிப் பாடினார்களா என்றால் அந்த எழுதப்பட்ட கவிதைகள் எங்கு போயின என்பது போன்ற பல கேள்விகளை ஆய்வாளர்கள் எழுப்பி விடை காண முயல்கிறார்கள்.



வரலாற்றுக்கு முந்தைய அல்லது வரலாறு அமைந்த காலத்து விஷயங்கள் குறிப்பாக இலக்கியம் குறித்த கருதுகோள்களுக்கு நாட்டார் மரபே பதில் உரைக்கும் ஒரே சாத்தியமாக இருக்கிறது. நாட்டுப்புற மக்கள், அக்காலத்தில் கல்வி அறிவும், எழுத்தறிவும் பெற்றவர்களாக இருக்கச் சாத்தியம் இல்லை. இன்றுவரை, பல கூத்துக் கலைஞர்கள் எழுதப் படிக்கத் தெரியாதவர்களே. ஆனால் கேள்வி மூலம் இராமாயண, பாரதக் கதைகளின் கிடங்குகளாக அவர்கள் இருக்கிறார்கள். தங்களிடம் வந்து சேர்ந்த கதைகளை அவர்கள் தங்களின் புனைவுகளைச் சேர்த்துப் புதுக் கதைகளைப் புனைகிறார்கள். கற்பனைக்கும் புனைவுக்கும் கல்வி அறிவு தேவையில்லை. இன்னும் கேட்டால் பெரும் புலமைகள், கவித்துவம் இழந்த சக்கைகளாகவே இருக்கின்றன என்பது கண்கூடு.



கோவலன் கண்ணகி கூத்தும், இளங் கோவின் சிலம்பும் வேறுவேறானவை. நான் பார்த்த தென் ஆற்காடு கூத்து ஒன்றில், கண்ணகி கோவலனிடம், Ôஎங்கடா வந்தே? உன் கூத்தியாளுக்கு நகை வாங்கிப்போக வந்தியா? இந்தா, எடுத்துக்கிட்டு ஓடுÕ என்று கம்மலைக் கழற்றிக் கோவலனிடம் எறிந்தாள். அமைதியாகக் குனிந்து அந்தக் கம்மல்களை எடுத்துக்கொண்டு கோவலன் வெளியேறுவான். அவன் முதுகுப் பக்கம், பலமாகக் காறித்துப்புவாள் கண்ணகி. மக்கள் கரகோஷம் செய்வார்கள்.

ஒரு பாரதக் கூத்தில், பாஞ்சாலியின் துகிலை உரியப் போகும் துச்சாதனன் அதற்கும் முன்பாக, ஒரு தட்டில் கற்பூரம் ஏற்றி, பாஞ்சாலிக்கு முன்பு வந்து, Ôஅம்மாதாயே, தப்பு பண்ணப் போறேன். கதைப்படி நான் செய்தாகணுமே, என்ன பண்றது? மன்னிச்சுக்கோ. என்மேல் கோபம் வேணாம். என் குலத்தை வாழ வையிÕ என்று சொல்லியபடி கற்பூர ஆரத்தி காட்டி, வணங்கிச் சேவித்துக்கொண்டு அதன் பிறகே வஸ்திர அபகரணத்தை ஆரம்பிப்பார். அதுவரை உறக்கத்தில் இருந்த பார்வையாளர்கள் எழுந்து கன்னத்தில் போட்டுக் கொள்வார்கள். இது ஒரு சமூகத்தின் கூட்டு நிகழ்வு. அறம் என்பதன் கலை வெளிப்பாடு இது.



ஒரு காதலன்-காதலி உரையாடல் இப்படி நிகழ்கிறது

ஒரு மரம் ஏறி

ஒரு மரம் பூசி

ஒரு மரம் பிடித்து

ஒரு மரம் வீசிப்

போகிறவன்-

“பெண்ணே உன் வீடு எங்கே?”

“பாலுக்கும் பானைக்கும் நடுவிலே

ஊசிக்கும் நூலுக்கும் அருகிலே.”

“நான் எப்போ வரட்டும்.”

“இந்த ராஜா செத்து

அந்த ராஜா பட்டம் கட்டிக் கொண்டு

மரத்தோடு மரம் சேர்ந்த

பிறகு வந்து சேர்."



ஒரு காதலன் காதலியைத் தனிமையில் சந்திக்க அலாவுகிறான். அவன் எப்படி இருக்கிறானாம். ஒரு மரத்தில் செய்த பாதக் குறடில் ஏறி நிற்கிறான். தோல் செருப்பு மாதிரி கால் கட்டைகள என்று சொல்லப்பட்ட குறடுகள் அந்தக் காலத்தில் இருந்தன. ஒரு மரம் பூசி என்றால் சந்தனம் பூசி இருக்கிறான் என்று பொருள்.



ஒரு மரமாகிய பனை மரத்தால் ஆனபனை ஓலை விசிறியை வீசிக்கொண்டு, ஒரு மரமாகிய கைத்தடி வைத்துக் கொண்டு இருப்பவன், உன் வீடு எங்கே என்று கேட்கிறான். அதற்கு அவள் "பால் விற்கும் இடையர் வீட்டுக்கும், பானை செய்யும் குயவர் வீட்டுக்கும் நடுவில் இருக்கிறது என் வீடு. ஊசி செய்யும் கொல்லர் வீட்டுக்கும், நூல் நெசவு செய்யும் நெசவாளர் வீட்டுக்கும் அருகில் என் வீடு” என்கிறாள். இப்போது அவன் Ôநான் எப்போது வரட்டும்" என்கிறான். மிக உண்மையானதும் நேர்மையானதுமான பதிலை இப்போது அவள் சொல்கிறாள். “இந்த ராஜா- சூரியன் அஸ்தமனமாகி, அந்த ராஜாவாகிய சந்திரன் பட்டம் கட்டிக்கொண்டு வரும் இரவு வேளையில் மரக்கதவு, மரத்தால் ஆன நிலைப்படியோடு (மரத்தோடு மரம்) சேர்த்து மூடப்பட்டிருக்கும். நேரமாக வந்து சேர்" என்கிறாள் அந்தக் காதலி. கதவு மூடப்பட்டிருக்கும், தாழிடப்பட்டிருக்காது என்பது குறிப்புப் பொருள். மூடப்படுவது மக்களுக்காக. திறக்கப்படுவது உனக்காக என்பது மறைபொருள்.



நல்லவேளையாக நாட்டார் பள்ளி, கல்லூரிகளுக்குப் போனதில்லை. ஆகவேதான் இந்த வகைக் கற்பனைகள் தோன்றுகின்றன. இந்த நாட்டார் மரபு போன்றது தான் பாணர் மரபும். இந்தச் சொல் முறைகளைப் பாணர்கள் தங்கள் வாழ்வனுபவத்திலிருந்தே பெறுகிறார்கள். இந்தக் கற்பனையுடன் தாங்களே உருவாக்கிக் கொண்ட இசையோடும், உடல் அசைவுகளோடும் புரவலர்களிடம் சென்று அரங் கேற்றுகிறார்கள். இந்த மக்களைக் கல்வியும் எழுத்தும் அற்ற புலவர் மரபு 'கல்லா மாந்தர்' என்று கேலி, இழிவு செய்கிறது. உரிய இடத்தில் அந்தப் பாடல்களையும் காண்போம்.



சங்க காலத்தும் சங்க காலத்து ஒட்டியும் பரவலான எழுத்தறிவு சமூகத்தின் சகல தரப்பார்களிடமும் இருந்ததாக அறிஞர்கள் கூறுகிறார்கள். ஆதாரமாக, கிடைத்திருக்கும் பானை ஓடுகளின் மேல் பொறித்திருக்கும் உரிமையாளர்கள் பெயர்களையும் அவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள். அப்பெயர்கள், மக்களே எழுதியது என்பதற்கு ஆதாரம் இல்லை. சரவணா ஸ்டோர்சின் வாசலில் அமர்ந்து தொழிலாளி ஒருவர் பாத்திரங்களில் உரிமையாளர் பெயர் பொறிப்பது இன்று நடப்பது போல அன்றும் நடந்திருக்கலாம். தவிரவும் கல்வி அறிவும், எழுத்தறிவும் அன்றைய வாழ்க்கை முறைக்குத் தேவைப்படவில்லை. சங்க மனிதர்கள் குமாஸ்தா வேலைக்குச் செல்லவில்லை. விவசாயம், அது சார்ந்த வேலைகள், இரும்பு மற்றும் மண்பானை வேலைகள், தேவைப்பட்டால் போருக்குச் செல்வது போன்ற தொழில்களுக்கு மேலாகச் சமூகத்தில் வேறு ஒன்றும் இருக்கவில்லை. காதல் செய்யவும், சண்டை செய்யவும், நாற்று நடவும், பானை வனையவும், கல்லூரியில் யாரும் சொல்லித் தந்ததாக வரலாறு இல்லை.



மலைமுகடுகள், பனி வெண்மேகம் வந்து தங்கிப் போகும் குன்றின் பக்கச் சாரல்கள், பூக்கள், யானைகள், தேன் அடைகள், கருத்த காடுகள், முல்லைப்பூக்கள், தேர்கள், குதிரைகள், எருமைகள், ஆறுகள் என்று வாழ்ந்த தலைமுறை பாணர்களுடையது. ஆறுகள், நதியின் ஓடை, நாற்றின் அசைவுகள், மழை, பாலை வெம்மை ஆகியவைகளில் இருந்து கற்றுக் கொண்டவர்களாகவே பாணர்கள் இருந்தார்கள். அவர்கள் ஓலையில் அல்லது செம்பில் எழுதி வைத்துப் பாட்டு படித்தவர்கள் அல்லர். அந்தச் சமயத்து முன் நிற்கும் மனிதர்கள், சூழல்களே அவர்களுக்கு உந்துதல் தந்தன. மனதுக்குள் அவர்களுக்கு வார்த்தைகள் இருந்தன. அனுபவங்களை இசையாகப் பொருத்திக் கொள்ளும் கற்பனையும் இருந்தது. அவர்கள் பண் இசைத்துப் பாடினார்கள்.



பாணர்கள் பாடல்கள் ஒன்றும் கிடைக்கப் பெறவில்லை. இவை பாணர்களுடையதாக இருக்கலாம் என்று சில பாடல்களைச் சங்கப் பாடல்களில் அறிஞர்கள் இனம் கண்டிருக்கிறார்கள்.

பாணர் பாடல்களாகிய இசைப் பாடல்கள், எதிரில் இருப்போரை விளித்துச் சொல்லும் தன்மை பெற்றவை என்கிற தொ.பரமசிவம், சங்க இலக்கியத்தில் சில பாடல்களை அடையாளம் கண்டு இவை பாணர் பாடல்களாக இருக்கலாம் என்று கருத்துரைக்கிறார். பெயரையும், பனையையும் மூன்று நான்கு முறை திரும்பத் திரும்பச் சொல்லி இசைக்கும் பாட்டு முறையைக் கொண்டு அவர் அடையாளம் கண்ட பாணர் பாடல்கள் இவை. அகவன் மகளே என்கிற பாடலை முதலில் கண்டோம்.



பார்ப்பன மகனே பார்ப்பன மகனே

செம்பூ முருக்கின் நல்நார் களைந்து

தண்டொடு பிடித்த தாழ் கமண்டலத்துப்

படிவ உண்டிப் பார்ப்பன மகனே...

எழுதாக் கற்பின் நின் சொலுள்ளும்

பிரிந்தோர்ப் புணர்க்கும் பண்பின்

மருந்தும் உண்டோ? மயலோ இதுவே.

குறுந்தொகை: 156



பார்ப்பன மகனே, பார்ப்பன மகனே. புரசமரத்துக் கோலினைக் கையில் பிடித்து, கரகம் ஏந்தி விரத உணவு உண்ணும் பார்ப்பன மகனே. நீ படித்த வேதத்துக்குள் காதலித்துப் பிரிந்தாரைப் பிறகு சேர்த்து வைக்கும் மருந்து போன்ற சொற்கள் ஏதேனும் உண்டோ, சொல். இன்னொரு பாடலையும் பார்க்கலாம்.



மெல்லிய லோயே! மெல்லிய லோயே

நல் நாண் நீத்த பழிதீர் மாமை

வன்பின் ஆற்றுதல் அல்லது செப்பின்

சொல்ல கிற்றாம் மெல்லிய லோயே

சிறியரும் பெரியரும் வாழும் ஊர்க்கே

நாள் இடைப் படாஅ நளிநீர் நீத்தத்து

இடிகரைப் பெருமரம் போல,

தீது இல் நிலைமை முயங்குகம் பலவே

(குறுந்தொகை : 368)



மெல்லிய இயல்பை உடைய என் தோழியே. ஊர் எல்லாம் என் காதலைப் பற்றி தூற்றுகிறது. என் மேனி அழகு (மாமை) நீங்கிவிட்டது. இருந்தாலும் என்ன, காதல் அனுபவம் இல்லாத சின்னப் பையன்களும், காதல் மறந்துபோன கிழவர்களும் கொண்ட ஊருக்குச் சொல்கிறேன். குளக்கரையில் செழிப்புடன் நிற்கும் மரம் போல, நான் என் காதலனுடன் சேர்ந்து வாழும் நாள் வெகு தூரத்தில் இல்லை.



இதேபோன்று ஐங்குறுநூற்றுப் பாடல்களான 'வாழி ஆதன் வாழி அவினி’ என்று தொடங்கும் பாடல்கள், பாணர்த்தன்மை பெற்றன என்று கொள்வதில் தவறில்லை. சங்க இலக்கியக் கவிதை மரபில் இருந்து விலகிச் சென்றிருக்கும் குறுந்தொகை, ஐங்குறு நூறு மற்றும் கலித்தொகை பரிபாடல் போன்றவை அதிகமும் இசைத் தன்மையும், நாடகத் தன்மையும் பெற்று இருக்கின்றமை சிந்திக்கத்தக்கதாகும்.



சங்க இலக்கியத்தில் பாணர்ப் படைப்புகள் இவை போல்வன என்று அடையாளம் காணக் கூடும். பெரும் பாலும் எழுதி வைத்துப்படிக்கப்படாத இந்தப் பாடல்கள், சில வேளைகளில் பாணர்களாலும் பல வேளைகளில் புரவலர்கள் பக்கம் இருந்தோராலும் எழுதி வைக்கப்பட்டிருக்கக்கூடும். சங்க இலக்கியத் தொகுப்புக் காலத்து அரசியல் அவைகளைப் புறக் கணித்திருக்கும்.

கி.மு. 3-ஆம் நூற்றாண்டு தொடங்கி கி.பி. 2- ஆம் நூற்றாண்டு வரையிலும் சுமார் 500 ஆண்டுகள் நீடித்த சங்க இலக்கியப் புலவர் கவிதைகள் இயற்றப்பட்ட காலத்துக்கும்முன், சில நூறு ஆண்டுகளில் பாணர் கவிதைகள் இயற்றப்பட்டிருக்கலாம். சங்க இலக்கியம், எழுதப்பட்ட காலத்திலிருந்து அவை தொகுக்கப்பட்ட காலம் சில நூறு ஆண்டுகள் தள்ளிப் போய் இருக்கிறது என்கிறார்கள் அறிஞர்கள்.



மன்னர்களே இவைகளைத் தொகுக்கச் சொல்லி இருக்கிறார்கள். புலவர்கள் தொகுத்துள்ளார்கள். தொகுப்பின்போது செயல்பட்ட அரசியலில் பாணர்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். புலமை மரபு ஏற்பட்ட பின், பாணர்களைக் Ô கல்லா வாய்ப்பாணர்Õ என்று புறக்கணித்தார்கள். இப்புறக்கணிப்புக்கு முக்கிய காரணம், பார்ப்பன மேலாண்மை, பூணூல் அணியாத பிராமணர்களாகிய Ôகிழார்Õ அல்லது விவசாயத் தலைவர்கள் உருவாக்கம் ஆகும்.



நாட்டுப்பாடல்கள் உதவி : திருவள்ளுவன்

ஓவியங்கள் : செல்வம்



Creaa.

Saturday, January 8, 2011அடையாளம்


க்ரியா ஸ்டாலில் வீடு போல விரிக்கப்பட்டிருந்தது பாய். க்ரியாவை 80களில் இருந்து பைலட் தியேட்டர் பக்கத்தில் இருந்த காலத்தில் இருந்தே பார்த்தவன் ஆதலால் எனக்கு வித்தியாசமாகப் படவில்லை.





ஒரு அடர்கருமீசைப் பையர் பில்லுக்குப் பணம் கொடுத்துக் கொண்டிருந்தார். முதுகில் தட்டினேன். சிரித்தார். ஈரடியில் தாண்டி உள்ளேபோய் திலீப்குமாரின் கடவு புத்தகத்தைப் புரட்டிக் கொண்டிருந்தவர் முதுகில் தட்டினேன். சார் என்றார் சிரித்தபடி.



கொஞ்சம் பேசிக் கொண்டிருக்கையில் பில் கொடுத்து வாங்கிய புத்தகத்துடன் மீசையும் சேர்ந்து கொண்டது. அப்புறம் நான் அப்படியே வெளியே செல்ல மீசைப் பையரும் சிரித்தபடி கூடவே வந்தார். பேசிக்கொண்டே வர ஒரு எழுத்து கூட இன்னும் எழுதப்படாத புதிய கதை ஒன்றை சொல்லிக் கொண்டே வந்தேன்.





இது போல ஏகப்பட்ட கதைகள் சொல்லி வருகிறேன் பல வருஷங்களாய் ஆனாலும் ஒருத்தரும் எழுதியதாகத் தெரியவில்லை என்றேன்.





எழுதத்தெரியணும் இல்லே. அவனவனுக்குத் தெரிஞ்ச கதையவே இன்னும் எழுதின பாடில்லே. இதுல கேட்ட கதைய கேள்விப்பட்ட கதையை எப்படி எழுதுவது என்றார்.





எனக்கு ஒரு செய்தியை அனிச்சையாக அந்த சிரித்தமுக இளைஞர் அளித்ததாகப் பட்டது. கொஞ்சம் நெருக்கமாய் உணர்ந்தேன். க்ரியாவின் உள்ளே இருந்தவரின் பெயர் சொல்லி அவர் எங்கே என்றேன்.





ஓ அவர்தான் அவரா!





நான் திகைத்து விட்டேன்.யோவ் என்னைய்யா நீர் அதுக்காக டைப்படிக்கிறவர் இல்லையா!





ஆமாம் நான் மட்டும் இல்லை சென்ஷியும்





எனக்கு ஒன்றுமேப் புரியவில்லை! ஏளனத்திற்கு ஆளாகக்கூடும் என்கிற பிரக்ஞை கிஞ்சித்தும் அற்ற, தீவிர பெந்தகொஸ்தே பிரச்சாரகர்கள் போலவோ அல்லது டீயும் கஜுரேவும் சாப்பிட்டு, அந்த நேரப் பசியை ஒத்திபோட்டு, கைக்கெட்டும் தூரத்தில் இருக்கும் புரட்சி, தான் சரியாக ஒட்டாத போஸ்டரால் தவறிவிடப் போகிறதே என்கிற பதற்றத்தில் சுவர் தேடும் இளம் போராளியைப் போலவோ மாங்கு மாங்கென்று டைப்படித்து தமிழின் நவீன முகத்தைப் போஷிக்கும் இவர்கள் ஒருவருக் கொருவர் நேர்ப்பரிச்சயம் கூட இல்லாதவர்கள்.





என்னால் நம்பவே முடியவில்லை. எப்படிய்யா ஒருத்தருக்கொருத்தர் தெரிஞ்சிக்காம...





ஒருத்தருக்கொருத்தர் மெய்ல் அனுப்பிப்போம் அவ்ளவுதான்.





அந்தப் பையரின் முன்னால் தழுதழுத்து விடுவேனோ, என உள்ளூர நான் உதறிக் கொண்டிருந்த நேரம் பார்த்து, நல்ல வேளையாக அதிஷாவும் யுவ கிருஷ்ணாவும் வந்து சேர்ந்தனர்.





விஷயத்தைச் சொல்லி யோவ் நீங்க ரெண்டுபேர் மட்டும்தான் எனக்குப் பரிச்சயம்னு நெனச்சிகிட்டு இருக்காங்கய்யா என்றேன்.





மொதல்ல உங்களைப் பார்க்கறவங்க உங்ககிட்டப் பேசறவங்க லிஸ்ட்டை எடுங்க. லிஸ்டை வெளியிட்டு இவங்கள்ளாம் என்னோட நண்பர்கள்னு அறிவிங்க, அப்பதான் உங்குளுக்கே தெரியும். உங்களுக்கு எவ்ளோ பேருன்னு.





ஒருத்தருக்கொருத்தர் தனிப்பரிச்சயத்திற்கு வராமலே மெயிலில் இணைந்து முன்னோடிகளின் எழுத்துக்களை சி.சு.செல்லப்பா போல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் வலையேற்றிக் கொண்டிருப்பவர்கள் தன்னலமற்ற இலக்கியப் போராளிகள் இல்லையா?





கீழ்மையென்று நாம் நம்புவதை ஆயுதம் தாங்கி மூர்க்கமாக எதிர்த்து அழிப்பதே போராட்டம் என்பதாக ஸ்தபிக்கப் பட்டுவிட்டது. ஸ்தாபனத்தின் நீடு துயிலைக் கலைக்க ஊதப்படும் பாஞ்சஜண்யம் எல்லாம் சைக்கிள் பெல் போல ஆகிவிட்டது. கிணுகிணுப்பெல்லாம் நானும் ஒரு கச்சேரி வாசிச்சேனே எனக்கும் ஒரு தேங்காய் மூடி எடுத்து வை என்பதாக ஆகிவிட்ட்டது.





மேன்மை என்று நாம் நினைப்பது, அடுத்தவனுக்கும் போய்ச் சேரவேண்டும் போஷிக்கப்பட வேண்டும் என்று மனதை நிறைத்த எழுத்துக்களை ஏதோ விளையாட்டு போல சுமந்து திரிந்து இணையத்தில் இறக்குவதை இலட்சியமாகக் கொண்டிருப்பதும்தான் எவ்வளவு பெரிய விஷயம்.





நான் சுமந்த புத்தகங்களைப் பார்த்துவிட்டு அதிஷா கேட்டான் என்ன இது! எல்லாம் அந்தக் காலம்?





பழைய பொக்கிஷம் தேடித்தேடி வாசி. கலையின் செய்திறனை உள்வாங்கி செரித்துக் கொள். உனக்குப் பரிச்சயப்பட்ட உலகத்தைவிட்டு ஒரு போதும் பார்வையை விலக்காதே. பொறிதட்டும் போதெல்லாம் புதிதாக யோசி. முடிந்தபோது எழுதிப்பார். வரும் போது சரியாக வரும்.





அப்ப அழியாச்சுடர்கள் படிச்சாலே போதும் போல இருக்கே.





க்ரியாவிற்கு உள்ளே இருந்து கடவு புத்தகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தது அழியாச்சுடர்கள் வலைபூ நடத்தும் ராம் பிரஸாத்.





க்ரியாவிலிருந்து பேசியபடி, என்கூடவே வந்தது சங்கர நாராயணன்.





கடல்களைத் தாண்டி சத்தமில்லாமல் டைப்படித்துக் கொண்டிருப்பவன் சென்ஷி.





இன்று நான் வாங்கி இருந்த புத்தகங்கள் மூன்று. தி.ஜானகிராமன் சிறுகதைகள் இரண்டு பாகங்கள் ஐந்தினைப் பதிப்பகம் மற்றும் குபரா முழுத்தொகுதி - அடையாளம் வெளியீடு.



முன் அட்டை ஓவியம்: மருது

அட்டை வடிவமைப்பு: த பாபிரஸ்

அடையாளம். தரமான புத்தகங்களைத் தரமாகத் தயாரிப்பதற்கு மட்டுமல்ல நன்றி, தரம் இல்லாதவற்றை வியாபாரம் கருதியும்கூட தராதரமற்று வெளியிட மாட்டேன் எனப் பிடிவாதமாய் இருப்பதற்காக. இப்படியே நீர் என்றும் இருப்பீராக - கை சுட்டுக் கொள்ளாமல் - இன்ஷா அல்லாஹ்.



சிறு பத்திரிகைகள் போல சிறு பதிப்பகங்கள் என்கிற பெருமரியாதைக்கு உரியவை உங்களது அடையாளம் போன்ற பதிப்பகங்கள்.



குறைந்த பட்சமாக நாம் செய்யக் கூடியதெல்லாம் அடையாளம் மாதிரியான பதிப்பகங்களை வெளிச்சம் போட்டு அடையாளப் படுத்துவதுதான். தயவு செய்து கடை எண் 247க்குச் செல்லுங்கள். ஒருவர் புத்தகம் வாங்குவதும் வாங்காததும் அவரவரின் அந்த நேர வசதி. இந்தப் புத்தகத்தை எடுத்துப் புரட்டிப் பார்த்து, காசா பணமா, ஒரு பதிப்பகக் கலைஞனைக் கெளரவியுங்கள்.





தன்னைக் கரைப்பதில்தான் இருக்கிறது ’தான்’ அழிந்த பொதுமை.




வியாழன், 18 ஆகஸ்ட், 2011

G Nagarajan.

டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்த மனிதர்-ஜி. நாகராஜன்


வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 10:28 PM
வகை: கதைகள், ஜி. நாகராஜன்



ஜி. நாகராஜன்







போலீஸ் ரெய்டு ,ருக்கலாம் என்று நம்பகமான தகவல் வந்திருந்ததால், கதவைத் திறந்து வைத்துக்கொண்டு வீட்டு வாசலில் நிற்க வேண்டாம் என்றுவிட்டான் அத்தான். 'ஓரு மாதத்துக்கு முன் வீட்டைவிட்டு ஓடிவிட்ட கமலாவைப் பற்றி ஒரு செய்தியும் ,ல்லை. ஓணத்துக்குப் பிறந்த ஊர் போயிருந்த சரசா ,ன்னும் திரும்பி வரவில்லை. வெளிக் கதவை அடைத்துவிட்டு ரேழியை அடுத்திருந்த அறையில் குழல் விளக்கொளியில் மெத்தைக் கட்டிலின் மீது தனியே உட்கார்ந்திருந்த தேவயானைக்கு அலுப்புத் தட்டிற்று.







ஏதோ நினைவு வந்தவளாய் ரேழியிலிருந்து படிக்கட்டுகளின் வழியே ஏறி மாடியறைக்குச் சென்று விளக்கைப் போட்டாள். அங்கு கீழறையைக் காட்டிலும் சற்று அதிகமான வசதிகள் ,ருந்தன. பலவகை அந்நிய நாட்டுப் படங்கள் சுவரை அலங்கரித்தன. அறையில் மிகப் பெரிய செட்டிநாட்டுக் கட்டில் ஒன்றும். அதன் மீது 'டபில்' மெத்தை ஒன்றும் சுவரோரமாக ,ருந்தன. 'நைட் புக்கிங்'குக்கு மட்டுமே பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டு வந்த அவ்வறை சென்ற ஒரு மாத காலமாக மனித நடமாட்டம் அற்றுக் கிடந்தது. கமலாவுக்குத்தான் 'நைட் புக்கிங்' ராசி அதிகம். தேவயானை கட்டிலின் மீது ,ருந்த மெத்தையை ,லேசாகத் திருப்பி, அதன் அடியிலிருந்து ஒரு நீளமான அரை டூஞ்சு மணிக்கயிற்றை எடுத்தாள். அவள் ஊரிலிருந்து வரும்போது அவளது தாயார் அவளது படுக்கையைக் கட்டுவதற்குப் பயன்படுத்திய கயிறு அது. அறையின் நடுவில் நின்றுகொண்டு, கயிற்றின் உறுதியைச் சோதிப்பது போல அதைப் பலவிடங்களில் டூழுத்துவிட்டுக்கொண்டே, மேலே அறையின் நெற்றுக் கண்ணைப் பார்த்தாள். உத்திரத்தில் ஒரு டூரும்பு வளையம் தொங்கிக்கொண்டிருந்தது. அது கட்டிலின் விளிம்புக்கு நேர் மேலே சற்று விலகி அமைந்திருந்தது. கட்டிலின் மீது நின்றுகொண்டு, கயிற்றைக் கொண்டு வளையத்தை எட்ட முடியுமா? நடுவில் டூருந்த மெர்க்குரி விளக்கின் மேற்பாதி, ஒரு வளைந்த தகட்டினால் மறைக்கப்பட்டிருந்ததால், வளையம் தெளிவாகக் கண்களுக்குக்குப் படவில்லை. சற்று அவசரமாகக் கீழே சென்று துணி உலர்த்தப் பயன்படும் நீளமான மூங்கிற் கழியொன்றை எடுத்து வந்தாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு, கழியின் ஒரு நுனியில் கயிற்றைச் செலுத்த முடியுமா என்று பார்த்தாள். கீழே கதவு தட்டும் சத்தம் கேட்டது. கழியையும் கயிற்றையும் கட்டிலில் போட்டுவிட்டு, கீழே ஓடினாள். வெளிக் கதவைத் திறக்குமுன் சற்றுத் தயங்கினாள். கதவை யாரும் தட்டவில்லை என்பதுபோல் பட்டது. அடுத்த பூங்காவனத்து வீட்டின் கதவு திறக்கும் சத்தம் மட்டுமே கேட்டது. கதவிடுக்கின் வழியே யாரும் நின்றுகொண்டிருந்தனரா என்று பார்த்தாள். யாரும் நின்றுகொண்டிருந்ததாகப் படவில்லை. தேவயானை மாடிப்படியறைக்கு வந்தாள்.



மீண்டும் கழியைக் கொண்டு கயிற்றை வளையத்தின் உள்ளே செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். தோள்பட்டைகளில் நோவு எடுத்தது. முகத்தில் வியர்வை அரும்பி, நெற்றி வியர்வை ஜவ்வாதுப் பொட்டைக் கரைத்து வழிந்தது. தேவயானைக்கு ஒரு யோசனை வந்தது. அவசர அவசரமாகக் கழியையும் கயிற்றையும் தரையில் போட்டுவிட்டுக் கீழே ஓடிவந்தாள். புழக்கடையில் ஒரு சன்னலருகே கிடந்த அரையடி நீளமான துருப்பிடித்த ஆணியொன்றைக் கண்டுபிடித்தாள். அதை எடுத்துக்கொண்டு மாடியறைக்கு வந்தாள். ஆணியின் நடுவில் கயிற்றின் ஒரு நுனியை டூறுகக் கட்டினாள். அவள் டூழுத்த டூழுப்பில் கயிறு கையை அறுத்துவிட்டது. வலி பொறுக்காமல் கையில் எச்சிலைத் துப்பிவிட்டு, அதன் மீது ஊதிக்கொண்டாள். கட்டிலின் மீது நின்றுகொண்டு கழியின் உதவியால் ஆணியை டூரும்பு வளையத்துக்குள் செலுத்த முயன்றாள். ஆணி கழி நுனியில் ஸ்திரமாக அமையாமல் பொத்துப் பொத்தென்று கீழே விழுந்தது. ஒரு நிமிஷம் டூளைப்பாறிவிட்டு, கை நடுக்கத்தையும் சரிபடுத்திக்கொண்டாள். பிறகு ஆணியை டூரும்பு வளையத்துக்குள் செலுத்தும் முயற்சியில் ஈடுபட்டாள். ஆணியின் ஒரு பாதி வளையத்துக்குள் நுழைந்தாலும், மறு பாதி நுழைவதைக் கயிற்றின் முடிச்சு தடை செய்தது. கயிற்றின் கனமும் ஆணி வளையத்துக்குள் செல்வதைத் தடுத்தது. கயிறு நீளமான கயிறு. அவ்வளவு நீளம் கூடாதென்று தேவயானைக்குப் பட்டது. கயிற்றைப் போதுமான அளவுக்கு வெட்டக் கத்தி எங்கு கிடைக்கும் என்று யோசித்தாள். வீ£££££££ட்டில் கத்தி ஒன்றும் கிடையாது. பிளேடு? அதுவும் டூல்லை. தேவயானைக்கு அடுப்பங்கரை அரிவாள்மனை நினைவுக்கு வந்தது. குதித்துத் கீழே சென்று அரிவாள்மணையை எடுத்து வந்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு, தன் கழுத்துக்கும் டூரும்பு வளையத்துக்கும் உள்ள டூடைவெளியையும், சுறுக்கு விட வேண்டிய நீளத்தையும் உத்தேசமாகக் கயிற்றைத் துண்டிக்க வேண்டும் என்று தீர்மானித்தாள். நல்ல வேளையாக அரிவாள்மணை சற்றுப் பதமாகவே டூருந்ததால் , கயிற்றை நறுக்குவதில் சிரமம் டூல்லை. மற்றொரு யோசனையும் தேவயானைக்கு வந்தது. அரிவாள்மணையைக் கொண்டே கழியின் ஒரு நுனியை சிறிதளவுக்கு டூரண்டாக வகுத்துக்கொண்டாள். டூப்போது கயிற்று நுனியைக் கழிநுனியில் டூருந்த பிளவில் கவ்வவைத்துக் கயிறு கீழே நழுவாதவாறு கழியை உயர்த்த முடிந்தது. டூவ்வாறு ஆணியை வளையத்துக்குள் செலுத்தி, ஆணி வளையத்தைக் குறுக்காக அழுத்திக்கொண்டிருக்க, கயிறு நேர்ச்செங்குத்தாகத் தொங்குமாறு செய்தாள். கட்டிலின் விளிம்பில் நின்றுகொண்டு கயிற்றின் நுனிப்புறம் தலை செல்லுமளவுக்கு ஒரு வளையம் செய்து சுறுக்கு முடிச்சுப் போடப் பார்த்தாள் தேவயானை. சுறுக்கு முடிச்சும் சரியாக விழவில்லை. அவளுக்கு டூதிலெல்லாம் அனுபவம் போதாது. டூரண்டு மூன்று தோல்விகளுக்குப் பிறகு, ஒருவாறாக முடிச்சு சரியாக விழுந்தது. அப்போது கீழ்க் கதவை யாரோ தட்டும் சத்தம் கேட்டது. தேவயானை சற்றுத் தயங்கினாள். கீழே கதவைத் தட்டும் சத்தம் பலப்பட்டது. 'டூப்போது டூதுக்கு என்ன அவசரம்?' என்று நினைத்தவள் போல், தேவயானை கீழே ஓடிச்சென்று, சேலை முந்தானையால் முகத்தை ஒற்றிவிட்டு ஆடைகளையும் சரி செய்தவாறே வெளிக் கதவைத் திறந்தாள்.



அத்தானும் வேறொருவரும் வெளியே அறை வெளிச்சத்தில் நின்று கொண்டிருந்தனர்.



''கதவெத் தெறக்க டூந்நேரமா?'' என்றான் அத்தான்.



''மேலே டூருந்தேன்'' என்றாள் தேவயானை.



''கதவை அடைச்சிட்டு, லைட்டை அணைச்சிட்டு டூருன்னா, ஒன்னே யாரு மேலே போகச் சொன்னது?'' என்றுகொண்டே அத்தான் நுழையவும், கூட டூருந்தவரும் உள்ளே நுழைந்தார்.



''உம், லைட்டைப் போடு'' என்றுவிட்டு அத்தான் வெளிக்கதவை அடைத்தான். ரேழி விளக்கைப் போட்டாள் தேவயானை. அத்தான கூட வந்திருந்தவர் நன்றாக வளர்ந்து டூருந்தார். அரைகுறை பாகவதர் கிராப்போடு, டெர்லின் ஷர்ட்டும் எட்டு முழ வேட்டியும் அணிந்திருந்தார். வழக்கமாக வருபவர்களைப் போல் அவளையே உற்று நோக்காது ரேழியையும், ரேழியை ஒட்டியிருந்த அறையையும் சுற்றுமுற்றும் பார்த்துக் கொண்டிருந்தார். ''சரிதானேங்க?'' என்றான் அத்தான், அவரைப் பார்த்து.



ரேழியை அடுத்திருந்த அறையினுள் நுழைந்து, குழல் விளக்கொளியில் அறையின் சுவர்களை மேலும் கீழும் பார்த்துவிட்டு, ''பரவாயில்லை, எல்லாம் சுத்தமாகவே வச்சிருக்கீங்க'' என்றார் அவர்.



''டூங்கே எல்லாம் சுத்தமாகத்தான் டூருக்கும்'' என்றான் அத்தான் கள்ளச் சிரிப்போடு. ''அப்ப நா வர்றேன்.''



''பணம்?'' என்றார் வந்தவர்.



''எல்லாம் டாக்டர்கிட்டே வாங்கிக்கறேன்'' என்றுகொண்டே வெளியேறினான் அத்தான்.



வெளிக் கதவைச் சாத்தித் தள்ளிவிட்டு, ரேழி விளக்கையும் அணைத்துவிட்டு, வந்தவரிடத்து, ''வாங்க'' என்று கூறிக்கொண்டே ரேழியை அடுத்திருந்த அறையின் குழல் விளக்கின் பிரகாசத்தில் பிரவேசித்தாள் தேவயானை. அவள் நேராகச் சென்று கட்டிலில் அமர்ந்தாள். அவர் தயங்கியவாறு அருகில் வந்து நின்றார்.



''டூப்படி உட்காருங்க'' என்றாள் அவள்.



''டூல்லே, அந்த ரேழி ஓரத்துலே ஒரு நாற்காலி டூருக்கே, அதை எடுத்திட்டு வா'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.



''எப்போதுமே சாய்வு நாற்காலியில் சுகமாய் படுத்துத்தான் எனக்குப் பழக்கம்'' என்று அவர் விளக்கினார்.



பலர் அந்தச் சாய்வான பிரம்பு நாற்காலியில் உட்கார்ந்துகொண்டு தேவ¨யானையைக் கொஞ்சியதுண்டு. எனவே உடன் எழுந்து பிரம்பு நாற்காலியை எடுத்து வந்து கட்டிலின் அருகே அதைப் போட்டாள். அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்துகொண்டார்; அவள் மீண்டும் கட்டிலில் உட்கார்ந்துகொண்டாள். டூருவரும் ஒருவரையொருவர் நோக்கிக் கொண்டனர்.



''நீ அழகா டூருக்கே'' என்றார் அவர். அவள் சிரித்தாள்.



''கொஞ்சம் சேலையை வெலெக்கிக்க'' என்றார் அவர். அவள் மீண்டும் சிரித்தாள். ''உம், வேடிக்கைக்குச் சொல்லலே; ஒன் மார்ப முழுசும் மறைக்காதபடி சேலய கொஞ்சம் வெலெக்கிப் போட்டுக்க.''



அவள் அவ்வாறே செய்தாள்.



''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரு.''



அவள் மீண்டும் சிரித்தாள்.



''கொஞ்சம் நிமிர்ந்து உட்காரேன்'' என்று கொஞ்சுவது போல் அவர் சொன்னார்.



''நீங்க என்ன போட்டாப் படம் பிடிக்கப் போறீங்களா?'' என்று அவள் சிரித்தாள்.



''ஆமா, அப்படித்தான் வச்சிக்கயேன்'' என்றார் அவர்.



அவளும் அவளது சேலையையும், முடியையும் ஒரு சைத்ரீகனுக்கு முன் உட்கார்ந்து சரி செய்துகொள்வதுபோல் சரி செய்துகொண்டாள். சற்று நேரம் அவளைப் பார்த்து ரசித்துவிட்டு, ஏதோ குறை கண்டவராய், ''உட்கார்ந்திருந்தா சரியாப்படலயே; கொஞ்சம் படுத்துக்க'' என்றார் அவர்.



''நீங்க உட்கார்ந்துதானே டூருக்கீங்க, வெறுமனே'' என்றாள் அவள் சிரிக்காமல்.



''நான் டூங்கே உக்காந்து டூருந்திட்டுப் போகத்தானே வந்திருக்கேன்'' என்றார் அவர். அவள் சிரித்துக்கொண்டே படுத்துக்கொண்டாள். ஒரு கையை மடித்து அதைக் கொண்டு தலையைத் தாங்கி அவரை நோக்கிச் சிரித்தவாறே அவள் படுத்துக்கொண்டாள். அவர் அவளைப் பார்த்துக் கொண்டு டூருந்தார்.



''உங்களுக்கு ஆசை டூல்லையா?'' என்றாள் அவள்.



''நிறைய டூருக்கு.''



''அப்ப?''



''அதனாலேதான் ஒன்னைப் பார்த்துகிட்டே டூருக்கேன்.''



''பாத்துகிட்டே டூருந்தாப் போதுமா?'' அவள் சிரித்தாள்.



''தொட்டுப் பார்க்கலாம்.''



''நீங்க தொட்டுப் பாக்கலயே.''



''தொட்டா நீ சும்மா டூருக்கணுமே!'' என்றார்.



அவள் சிரித்தாள். ''நான் ஒண்ணும் சேட்டை செய்யமாட்டேன்; நீங்க சும்மா தொட்டுப் பாருங்க.''



வெளிக்கதவு தட்டும் சத்தம் கேட்டது. அவள் எழுந்திருக்க முடியாது போல் தவித்தாள். அவர் நிதானமாக எழுந்து கதவைத் திறந்தார். கதவைத் தட்டியது அத்தான்தான். அத்தான் அவரை எதுவும் கேட்குமுன் அவர் பையிலிருந்து எதையோ எடுத்து அத்தானிடம் கொடுக்க வந்தார்.



''டூல்லே வச்சிக்கோங்க, எல்லாம் டாக்டர்கிட்டேருந்து வாங்கிக்கறேன். டாக்டர் கடைக்கு வந்திட்டாரு; நீங்க வர்லயான்ட்டு கேட்டாரு'' என்றான் அத்தான்.



''டூப்ப வந்திடறேன்ட்டு சொல்லுங்க'' என்றார் அவர்.



அத்தான் வெளியேறுகிறான்; அவர் கதவை அடைத்துத் தாளிடுகிறார்.



''கொடுமை'' என்றுகொண்டே அவர் நாற்காலியில் சாய்கிறார்.



''எது?'' என்றாள் அவள், கட்டிலிலிருந்து எழுந்து அவர் அருகே நின்றுகொண்டு.



''டூந்த நேரக் கணக்குதான்'' என்று அவர் சொல்லவும் அவள் அவரைக் கட்டியணைக்க முயன்றபடியே, அவரது டூரு கன்னங்களிலும்டூ டூறுதியாக அவசரமாக அவர் உதடுகளிலும் முத்துகிறாள்.



''சரி, நீ போய்ப் படுத்துக்க'' என்கிறார் அவர்.



''நீங்க என்ன செய்யறீங்க?'' என்று கேட்டுக்கொண்டே அவள் மெத்தையில் சாய்கிறாள்.



''டூங்கே டூருக்கேன்'' என்கிறார் அவர்.



''அதெக் கேக்கலே; என்ன தொளில் செய்யறீங்க?''



''பெறந்து, வளந்து, சாவற தொளில்தான் செய்யறேன்.''



அவள் கட்டிலிலிருந்து எழுந்து அவரை கட்டியணைக்க முயலுகிறாள். அவரோ நாற்காலியில் சாய்ந்தவராகவே கிடக்கிறார். தோல்வியுற்றவளாய் அவள் கட்டில் மெத்தைக்குச் சென்று அதன் மீது விழுகிறாள்.



''எனக்குத் தண்ணி தவிக்குது'' என்கிறாள் தேவயானை.



அவர் எழுந்து, ரேழி விளக்கைப் போட்டு, மூலையிலிருந்த பானையிலிருந்து தண்ணீர் கொண்டு வந்து அவளுக்குக் கொடுக்கிறார். படுத்தபடியே அவள் தண்ணீரைப் பருகும்போது, அதில் ஒரு பகுதி வாய்க்குள் நுழையாது அவளது மார்பகத்தை நனைக்கிறது.



நின்றுகொண்டிருக்கும் அவர், ''சென்று வருகிறேன்'' என்கிறார்.



''அடுத்த வாட்டி எப்ப வருவீங்க'' என்றுவிட்டு அவர் பையிலிருந்து ஒரு ஐந்து ரூபாய்த் தாளை அவளிடத்து நீட்டுகிறார். அவள் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் அதை வாங்கிக் கண்களில் ஒற்றிக்கொண்டு, தலையணைக்கு அடியில் வைக்கிறாள். அவர் கதவைத் திறந்துகொண்டு வெளியே செல்கிறார்.



டூரவு மூன்று மணிக்கு அத்தான் வீட்டுக்கு வந்தான். அவரைப் பற்றி விசாரிக்க வேண்டும் என்று அவளுக்கு ஆவல். ஆனால் வாடிக்கைக்காரர் யாரிடத்தும் அவள் விசேட ஆர்வம் காட்டுவது அத்தானுக்குப் பிடிக்காது. எனவே அவள் எடுத்த எடுப்பிலேயே, ''அவர் எனக்கு அஞ்சு ரூவா கொடுத்தார்'' என்றாள்.



''யாரவன்?'' என்றான் அத்தான்.



''அதான் நீங்க மொதல்லே கூட்டியாந்தீங்களே, அவருதான்.''



''மொதல்லே யாரக் கூட்டியாந்தேன்? நான் டூன்னிக்கு ஒருவாட்டி தானே வந்தேன்?''



''அதான், ஏளு ஏளரை மணிக்குக் கூட்டியாந்தீங்களே, அவரே நெனப்பில்லையா?''



''ஏளு, ஏளரை மணிக்கா? நான் சுப்பு வீட்லேந்து கிளம்பும்போதே ஒம்பது மணி ஆயிருக்குமே!''



'',ன்னிக்கு சுப்பு வீட்டுக்குப் போயிருந்தீங்களா?''



''ஆமாம், டூருபது ரூபா வரைக்கும் கெலிப்பு. டூன்னைக்கு ஒன்பது மணிவரைக்கும் தெருவுலே தலைகாட்ட வேண்டாம்னுட்டு ஏட்டையா சொல்லியிருந்தாரு. நானும் ஒம்பது வரைக்கும் சுப்பு வீட்டோடவே டூருந்திட்டேன்.''



''அப்ப, அந்த டெர்லின் சட்டைக்காரரே நீங்க கூட்டியாரலையா? அவர் கூட ஒரு டாக்டர் வந்தாராமே; நீங்க கூட டாக்குட்டரே வேறே வீட்டுக்குக் கூட்டிப் போனீங்களே?''



''டாக்டரா? அவர் யாரு டாக்குட்டரு? ஒனக்கு என்ன புத்தி தடுமாறிடுச்சா, டூல்லே கதவெத் தெறந்து போட்டுக்கிட்டு கனவு கண்டிட்டிருந்தயா?''



'',ல்லயே, கதவ அடச்சிட்டு மேலேதான் டூருந்தேன். நீங்க கதவைத் தட்டினப்பதான் கீளே வந்தேன்.''



அத்தான் முழித்தான். அவள் தொடர்ந்தாள்.



''கொஞ்சம் நீளமா முடி வச்சிருந்தார். நீலநெற டெர்லின் சட்டையும் எட்டு மொள வேட்டியும் கட்டிருந்தாரு. ஆனா என்னெத் தொட்டுக்கக் கூட டூல்லே'' என்றுவிட்டு தேவயானை சிரித்தாள்.



''தேவு, சும்மா உளறாதே. நான் தெருவுக்கு வரும்போதெ மணி ஒம்பதுக்கு மேலே ஆயிரிச்சே. அந்த சாயபுப் பையனே மட்டுந்தானே டூன்னைக்கு நா கூட்டியாந்ததே. அதுக்கு முன்னாடி யாரெக் கூட்டியாந்தேன்?''



''நா உளர்றேனா, நீங்க உளர்றீங்களா?'' என்றுகொண்டே, தான் அவரிடமிருந்து வாங்கிய ஐந்து ரூபாயை அத்தானிடம் காட்ட தலையணையைத் திருப்பினாள் தேவயானை. தலையணைக்கு அடியே எதுவும் காணப்படவில்லை. தேவயானைக்கு மெய் சிலிர்த்தது. பதட்டத்தில் தலையணையை முழுமையாகப் புரட்டினாள். எதுவும் காணோம். மெத்தைக்கு அடியிலும், பிறகு தலையணை உறைக்குள்ளும் தேடினாள். ஒன்றும் காணவில்லை. தலையணை உறையின் டூரு முனைகளைப் பிடித்துக்கொண்டு தலையணையைத் தலைகீழாகக் கவிழ்த்தாள். தலையணை தலையில் விழுந்தது. உறையினுள் தேடினாள். தரையில் தேடினாள். ஐந்து ரூபாயைக் காணோம். அத்தான் முழித்தான்.



''எங்கே போயிருக்கும்; டூங்கேதான் எங்காவது டூருக்கணும்'' என்றாள் தேவயானை நம்பிக்கையோடு.



''எது?'' என்றான் அத்தான்.



''அந்த டெர்லின் சட்டைக்காரர் கொடுத்த அஞ்சு ரூபாதான்.''



''நீ என்ன கனவு ஏதாச்சும் கண்டாயா?'' என்றுகொண்டே அத்தான் சிரித்தான்.



''நீங்கதான் வெறிச்சீலே எல்லாத்தையும் மறந்திடுவீங்க'' என்றாள் தேவயானை, டூன்னும் காணாமற் போன ஐந்து ரூபாயைத் தேடியவாறே.



''ஒருவேளை மேலே மாடியிலே டூருக்கும்'' என்றுகொண்டே, தேவயானை வேகமாகப் படிகளேறி மாடிறயறைக்குச் சென்றாள். அவள் அணைக்காது விட்டுப்போன மெர்க்குரி விளக்கு ஒளியில், அவள் பிரயாசைப்பட்டு டூரும்பு வளையத்திலிருந்து தொங்கவிட்ட கயிறும், அதன் கீழ் நுனியை அலங்கரித்த வட்டமும் அவளைத் திகைக்க வைத்தன.



Yumaa vasugi.

வேட்டை- யூமா வாசுகி


வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 6:19 AM
வகை: கதைகள், யூமா வாசுகி



வாசல் வரை வந்து நின்று தயங்கித் திரும்பினார் உஸ்மானி. தளர்ந்த உடலை நாற்காலியில் கிடத்திக்கொண்டு விறகுச் சாம்பல் கிடக்கும் கணப்படுப்பிற்குள் கண்களைச் செலுத்தியிருந்தவனை அவரது அழைப்புக்குரல் சலனப்படுத்தவில்லை.



“பொனாச்சா....”



“-------------”



“மகனே பொனாச்சா”



“----------------”



“சீக்கிரம் வந்துவிடுவேன். வீட்டிலேயே இரு. குடிக்கறதானா கொஞ்சம் சாப்பிட்ட பிறகு குடி, உடம்பு தாங்காது.” கெட்டுச் சீரழிந்து கொண்டிருக்கிற மகனது உடல் நிலைக்காக வெளிப்பட்ட பெருமூச்சுடன் உஸ்மானி படியிறங்கினார். கொழுத்த புலி மாதிரி திமிராய் அலைந்து கொண்டிருப்பான் பொனாச்சா. சேர்ந்தாற் போல ஒரு மணி நேரம் வீட்டில் நிலைக்குமா அவன் கால்கள். ரத்தம் உறைந்து போகிற இரவுக் குளிரில், அகால நேரங்களில் உறங்குவதற்கு வீடு திரும்புகிறவன். ஒரு நண்பனின் பின்னால் அமர்ந்து பைக்கிலோ, தனித்த நடையிலோ வரும் மகனை எதிர்பார்த்து, உஸ்மானி ஜன்னலைப் பிடித்தபடி நின்றிருப்பார். மகன் தோட்டத்திலிருக்கும்போது சில தடவைகள் அவரும் செல்வதுண்டு. கூலிப் பெண்களுடன் சிரிப்பு அரட்டையுமாயிருப்பான் பொனாச்சா. அப்பாவைக் கண்டதும், கடுகடுப்பாய் வேலை வாங்குபவன் போல அவர்களை அதட்டுவான். சில நிமிடங்கள் நின்றிருந்து புன்னகை மனதுடன் உஸ்மானி புறப்படுவார். சரிவில் இறங்கி அருவிப்பாலத்தைக் கடப்பதற்கு முன்பாகவே பின்னாலிருந்து வரும் பொனாச்சாவின் பாட்டு. அதிரடியான பேச்சையும் சிரிப்பையும் போன இடம் தெரியாமலாக்கி வீட்டோட முடக்கிவிட்டாயே ராசய்யா, சரிதானா இதெல்லாம். உரித்த ஆட்டுத் தோலாய்த் துவண்டு கிடக்கிறான் என் மகன்.



சூரியன் மேகத்துள் சோம்பியிருந்தான். காலையின் மங்கலான வெளிச்சத்தோடு மலைச் சரிவுகளின் செழுமையை இன்னும் போர்த்தியிருந்தது பனி. கணுக்கால்வரை தொளதொளப்பாய் நடையில் அசைந்தது கருப்பு கூர்க் உடை. விழா நாட்களில் மட்டுமே அணிப் படுவதால் படிந்து போன பீரோ வாசனை. தோளிலிருந்து குறுக்கே தொடங்கிய சங்கிலியின் இடுப்பு முடிச்சில் இணைக்கப்பட்டிருந்த குறுவாளின் கைப்பிடி சற்று துருவேறியிருந்தது. நினைவாய் எடுத்து வைத்திருந்த ரப்பர் பையைத் தொட்டுப் பார்த்துக்கொண்டார். வந்து உரசி முதுமையைச் சீண்டிப் பார்க்கும் குளிருக்கு மார்போடு கைகளை அணைத்து மெதுவாக நடந்துக் கொண்டிருந்தார். வழியின் இருபுறமும் மண்டிக்கிடந்த ஊதா மலர்கள் நடையைத் தட்டுபடுத்திற்று. நேற்றிருந்ததை விட இன்று அதிகம். அடுத்த நாட்களில் இலைகளே தெரியாமல் பெருகும் போலிருக்கிறது. இதுதானே பருவம். பொனாச்சாவின் அம்மா இருந்தால் இவைகள் காவேரியம்மனுக்கு மாலையாகும். குளிருக்கெல்லாம் பயப்படாமல் பூப்பறிக்கவென்றே வெயில் வருமுன் எழுந்துவிடுவாள். இரவு யாருக்கும் தெரியாமல் மலர்ந்த பூக்களை விடியலில் பார்க்கிற சந்தோஷத்தை அனுபவிக்கத் தெரிந்திருந்தது. பொனாச்சா சிறுவனாக இருந்தபோது இந்தப் பூக்களை அவனுக்குச் சூட்டி, சிறுமிகளின் உடையை இரவல் பெற்று அணிவித்து - ஒரு பெண் குழந்தையைப் போன்ற ஒப்பனையில் போட்டோ எடுத்து வைத்திருந்தாள்.



தூரத்திலிருந்தே மண்டபத்தின் முகப்பிலுள்ள ‘அப்பர் கோடவா சமாஜ்’ எனும் வார்த்தைகள் வெளிறியும் சில எழுத்துக்கள் அழிந்தும் தெரிந்தன. யாரு கண்டுகொள்கிறார்கள் இதையெல்லாம். கூர்க் ஆச்சாரப்படி நடப்பவன் எவனைப் பார்க்க முடிகிறது. சண்டை சச்சரவின் போது ஒருத்தருக்கொருத்தர் வெட்டிக் கொள்ளும்போதுதான் மூதாதைகளின் வேட்டைப் புத்தி தெரிகிறது. மற்றபடி நிஜ கூர்க் என்று எவனுமில்லை. கல்யாணம் கருமாதின்னு வரும்போது செய்கிற சடங்குகளெல்லாம் கூட கொஞ்ச நாளைக்குத்தான். பிள்ளைகளை வெளிநாடு, வெளி மாநிலம்னு படிக்க அனுப்பிவிடுகிறார்கள். அதுகள் படிக்கப் போனபோது கத்துக்கிட்ட பழக்கத்தையெல்லாம் இங்கேயும் நடத்த ஆரம்பிச்சாச்சு. எதுவானாலும் ராசையா, இந்த மடிக்கேரி மண்ணில் கூர்க்க பொறந்த ஒருவர் எந்த நிலையிலேயும் வாக்குத் தவறக்கூடாது.



வெளியே பறையடிப்பவர்களைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்தது சிறு கூட்டம். அவ்வப்போது துந்துபியொத்த இசைக்கருவியிலிருந்து பிளிறிய ஓசை மேலும் அவர்களை உற்சாகப்படுத்தியது. புதுப்புது மனிதர்களாய் பலர் வாசலருகே நின்று ஆடுபவர்களைப் பார்த்திருந்தார்கள். வெளியாட்கள். மாப்பிள்ளை உறவுகளாயிருக்கலாம். உஸ்மானி நுழைவுத் தோணத்தைத் தாண்டும்போது ஓட்டமும் நடையுமாக வந்து எதிர்கொண்டார் ராசையா.



குனிந்து உஸ்மானியின் பாதங்களை மூன்று முறை தொட்டு நெஞ்சில் ஒற்றிக்கொள்ள, தன் இடதுகையை மார்பில் வைத்து மேலே முகமுயர்த்தி ராசையாவின் சிரத்திற்குமேல் நீண்ட வலக்கரத்தால் ஆசிர்வதித்தார் உஸ்மானி. பவ்யமாக உள்ளே அழைத்துச் செல்லப்படுகையில் ராசையாவின் கருப்பு அங்கியை உரிமையுடன், சரிப்படுத்திவிட்டு “எல்லாம் முறைப்படிதானே ராசையா” என்றார் லேசான அதிகாரத் தோரணையில்.



“ஆமாம். ஷகீலாவிற்கு இதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நான்தான் சொல்லிப் புரியவச்சேன். சிறுசுகள் சொல்லுதேன்னு வம்ச பழக்கத்தையெல்லாம் விட முடியுமா...”



“விடக்கூடாது ராசையா. கூடாது. ரொம்ப காலம் வெளியே போய் படிச்சவள்ளே, மாறிப்போய்ட்டாள். எவனையோ இழுத்துக்கிட்டு வராம ஒரு ‘கூர்க்’கா பாத்து காதலிச்சாளே - அதுவரைக்கும் சந்தோஷம்.”



விஸ்தாரமான ஹாலில் வரிசையில் அமைந்திருந்த இருக்கைகளில் ஒன்றில் உஸ்மானி அமர்ந்தார். அருகில் உட்காந்திருந்தவர்களை நோட்டமிட்டு - மெலிதான புன்னகையில் இதழ்கள் விரிய நரைபுருவத்தை நீவி விட்டுக் கொண்டார்.



கூட்டம் சேர ஆரம்பித்திருந்தது. திடீரென்று எழும் உரத்த சிரிப்புகளும் பரபரப்பாய் வேலை ஏவும் சப்தமும் கூடமெங்கும். வண்ணக் காகித ஜோடனை நேர்த்தியை குழந்தைகள் ரகசியமாகப் பிய்த்துப் பார்த்து சிதைத்தார்கள். வெளியிலிருந்து வந்த தாளகதிக்கு உள்ளேயும் சிலர் சேர்ந்து ஆடத்தொடங்கினார்கள். இருவர் இணைசேர்ந்து ஆடும் போட்டி ஆட்டத்தில் ஒருவர் சட்டென்று நடன அசைவை மாற்றினால் சேர்ந்து ஆடுபவரும் நொடியும் தாமதமின்றி ஆட்டத்தை அதேபோல் மாற்றியாக வேண்டும். ஆணும் பெண்ணுமாய் ஆடும்போது தோற்றுப்போய் அசடுவழிபவர்கள் அனேகமாக ஆண்களாகத்தான் இருக்கிறார்கள். தோற்ற ஆண்மகன் வெட்கி அந்த இடத்தைவிட்டு நகரும்படிக்கு கிண்டலால் துரத்துபவர்கள் பெண்கள். பிறழ்ந்தும் முறை தவறியும் ஆடப்படும் நடனத்தை வெறுப்புடன் பார்த்துக்கொண்டிருந்த உஸ்மானிக்கு அருகே பினு வந்து நின்று மண்டியிட்டாள். எழுந்து நின்று ஆசி வழங்கி பக்கத்து இருக்கையைக் காட்டினார். மறுத்து தரையிலேயே காலருகில் உட்கார்ந்த தங்கையின் சிரத்தை பரிவுடன் தொட்டன விரல்கள்.



”ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து... ம், சௌக்கியம்தானே. நீயும் கிழவியாயிட்டு வரே போலிருக்கு. தலையில் பாதி நரைச்சாச்சு. ராசையாவிற்கு அக்கா மாதிரியிருக்கே” அண்ணனுக்கு மட்டும் கேட்கும் மெதுவான குரலில், “நீங்க கல்யாணத்துக்கு வர மாட்டீங்கன்னு நெனச்சேன்” என்றாள். உஸ்மானி சற்றுக் குனிந்து செவிமடுத்துக் கொண்டார்.



“அப்படியெல்லாம் ஏன் நினைக்கிற பினு. யார் வராவிட்டாலும் நான் வராமல் இருக்க முடியுமா? நாம் எதிர்பார்க்கிறபடியா எல்லாம் நடக்குது. யாரைக் குத்தம் சொல்றது இதுக்கெல்லாம்... சரிதான்னு ஏத்துக்க வேண்டியதுதான்.” பினுவின் கண்களிலிருந்து நீர் உதிர்வதைக் கண்டு பதட்டமாய் “அழாதே! அழாதே பினு. பொண்ணுக்கு அம்மா நீ. யாரும் பாத்துடப் போறாங்க, நீ என்ன செய்வே பாவம். உம்மேலே எனக்கொண்ணும் வருத்தமில்லே. வருத்தப்பட்டிருந்தா இங்கே வந்து உட்கார்ந்திருப்பேனா. ஷகிலாக்குட்டிக்கு இது சந்தோஷம்னா எனக்கும் தான்” கனிந்து குழைந்தது குரல்தொனி. தலை மூடிய துணியை இழுத்து பினு கண்களையும் முகத்தையும் துடைத்துக் கொண்டாள்.



“பொனாச்சா எப்படியிருக்கான்.”



“கொஞ்சம் நாளானா எல்லாம் சரியாகும்.”



”சின்ன வயசிலேர்ந்து சொல்லிச்சொல்லி வளர்த்துவிட்டு இப்போது இப்படி முடியுதுன்னா எவ்வளவு வேதனைப்பட்டிருப்பான். காதலிச்சவனை கல்யாணம் பண்ணலேன்னா செத்துப்போவேன்னு மிரட்டுகிறாள் அண்ணா இவள். திமிர். ரொம்பப் படிக்க வச்சிட்டோம் பாருங்க அந்தத் திமிருதான்.”



“அவளைத் திட்டாதே. அப்போதெல்லாம் ராசையா கூடத்தான் ஷகிலாவை பொனாச்சாவிற்காகத்தான் பெத்திருக்கேன்னு அடிக்கடி சொல்லிட்டிருப்பான். அவனே சம்மதப்பட்டு செய்யும்போது நீ என்ன பண்ண முடியும்... சரி போகட்டும். மாப்பிள்ளைப் பையன் யாருன்னு தெரியலையே. இன்னும் மண்டபத்துக்கு அழைத்து வரவில்லையா....”



வெளியே ஆட்டக்காரர் மத்தியில் மதுப்புட்டியுடன் தள்ளாடுபவனை பார்வையில் சுட்டினாள்.



“பெரிய வசதிக்காரனோ...”



“அவங்கப்பா துணிமில் வச்சிருக்காருண்ணா.”



”சரிதான்! நான் வீட்லேர்ந்து இவ்வளவு தூரம் நடந்தே வரேன். என் வீட்டுக்கு வந்தா என் மருமகளும் இப்படித்தான் இருக்கணும்.... பணக்காரனாக் கெடச்சது ஷகிலாவுக்குப் பாக்கியம்.”



மீண்டும் கண்களில் நீர் துளிர்க்க, “என்னை மன்னிச்சுடுங்கண்ணா” என்றாள் பினு. “மன்னிக்கறதாவது! எங்கேர்ந்து கத்துக்கிட்ட இப்படியெல்லாம் பேச, சரி எழுந்துபோ. போய் ஆகவேண்டியதைப் பாரு. நான் இருந்து நெறயக் குடிச்சிட்டு தின்னுட்டுதான் போவேன். பை கொண்டு வந்திருக்கேன் பாத்துக்க....” எடுத்து வைத்திருந்த ரப்பர் பிளாடரை வெளியே உருவிக் காண்பித்ததும் அமைதியாகச் சிரித்து பினு அகன்றாள்.



உஸ்மானி எழுந்து மறைவாக கழிப்பறைப் பக்கம் சென்று ரப்பர் பிளாடரை தொடையிடுக்கில் சரியாகப் பொருத்திக்கொண்டு வந்தார். அழகான பெரிய டிரேக்களில் விஸ்கி நிரம்பிய கண்ணாடிக் குவளைகளைச் சுமந்து வரிசையாக விநியோகித்து வந்தார்கள். ததும்பி தரை விரிப்பில் தெறித்தது மது. சிறுக சிறுக சுவைத்துப் பருகினார் உஸ்மான். பெண்களிடமும் சிறு பிள்ளைகளிடத்தும் விநியோகம் கொஞ்சம் தாராளமாகவே. தேவைப்பட்டுக் கேட்பவர்களுக்கு மட்டும் சிகரெட். கல்யாணத்திற்காக நாற்பதாயிரம் ரூபாய்க்கு மதுவகைகளை பெங்களூரில் இருந்து ராசையா வாங்கி வந்திருப்பதாக பக்கத்திலிருந்தவர்கள் பேசிக் கொண்டார்கள். வியப்பு மேலீட்டால் உஸ்மானி மேலும் இரண்டு குவளைகள் பெற்றுப் பருகினார். சிறிது நேரத்தில் சிறுநீருக்காக பொருத்தப்பட்ட பை லேசாக மேடிட்டிருந்தது உடைக்குள்.



பிடித்து வைத்திருந்த காவேரியம்மனுக்கு சில பெரிய உயர்ரக மதுப்புட்டிகளை வைத்து வணங்கி வாளை உயர்த்தி சில சம்பிரதாய வார்த்தைகளை உச்சரித்து முடிந்ததும் - மணமக்களை எதிரெதிரே இருந்த இரண்டு தனியறைகளுக்கு அலங்கரிப்பதற்காக அழைத்துச் சென்றனர். கூட மத்தியில் ஒரு பீப்பாயை வைத்து அனைத்துவகை மதுவையும் கலந்து காக்டெயில் தயாரிக்கும் வேலை நடந்துகொண்டிருந்தது. குடியில் மயங்கி விழுந்த தம் சிறார்களை அம்மாக்கள் தூக்கிச் சென்று யாருக்கும் இடையூறு இல்லாதபடி சுவரோரங்களில் கிடத்தினர். போதை உந்த அனாயாசமாய் நடனமாடும் தங்கள் பிள்ளைகளை வாத்ஸல்யத்துடன் மகிழ்ந்து பார்த்தனர் சிலர்.



வெளியே இசைத்துக் கொண்டிருந்தவர்களில் ஒருவன் பையில் ஐந்து ரூபாய் தாளொன்றைத் திணித்து - அவருக்கு இஷ்டமான இசைலயத்தைச் சொல்லிக் கொடுத்து அவர்கள் அதை வாசிப்பது கேட்டு உஸ்மானியும் நடனமாடினார். தவறாக ஆடியவர்களிடம் சொன்னார். “பார்த்துக் கொள்ளுங்கள்! இதுதான் கூர்க் நடனம், இப்படித்தான் ஆட வேண்டும்.” உடை வியர்வையில் நனைய ஆட்ட முனைப்பிலிருந்தவரை பெண் பிள்ளைக்கு மருதாணியிட வேண்டுமென்று ராசையா உள்ளே அழைத்துப் போனார்.



அலங்காரம் பூர்த்தியாகி மாப்பிள்ளையும் பெண்ணும் அருகருகே அமர்த்தப்பட்டிருந்தார்கள். எதிரே வெள்ளித்தட்டில் குழைந்த மருதாணி. கூடவே நிறைய ஒடித்த ஈர்க்குச்சிகளும். ஒவ்வொருத்தராக குச்சியில் மருதாணியைத் தொட்டெடுத்து மணமக்களின் உள்ளங்கைகளில் வாழ்த்துக்களோடு பதித்தார்கள். ஷகிலாவின் தோழி குச்சியின் ஒரு முனையை பல்லில் கடித்து கூராக்கிக்கொண்டு மருதாணியைத் தொட்டு மணமகனின் கையில் கொஞ்சம் பலமாக அழுத்தினாள். சுருக்கென்ற வலியில் புன்னகையுடம் பார்த்தான் அவன். “இது போதாது, சஷீவ் கிட்டே ஹேர்பின் கொடுத்து மருதாணியை வைக்கச் சொல்லவா....” காதலன் காதில் சன்னமாகக் கிசுகிசுத்தாள் ஷகிலா. இருவருக்கும் மருதாணியிடுகையில் “ஒரு கூர்க் தம்பதிகளா வாழணும் மக்களே....” என வாழ்த்தி வந்து மீண்டும் உஸ்மானி மதுவைத் தொடர்ந்தார். கையை விரித்து மணமகன் அமர்ந்திருந்த இடத்தில் ஒரு கணம் பொனாச்சா இருந்து மறைந்தான்.



தரையில் ஓங்கி வீசப்பட்ட பாட்டில் உடைந்து சிதறி கூடமெங்கும் சிதறல்களாய்க் கீழிறங்கின. உறக்கத்திலிருந்த உஸ்மானி பதறியெழுந்து பார்த்தார். வியர்த்து மூச்சிரைக்க தரையைப் பார்த்துக்கொண்டிருந்தான் பொனாச்சா. கண்ணாடிச் சில்லுகளின்மீது கால்பட்டுவிடாமல் அணைத்து மகனை நாற்காலிக்குள் அழுத்தினார். “கொஞ்சம் சாந்தமாயிரு பொனாச்சா! வளர்ந்த பையனில்லே... அமைதியாயிரு. இப்படியெல்லாம் செய்யலாமா நீ” தரையில் கிடந்த பாதி உடைந்த பாட்டிலை எடுத்து ஆவேசங்கொண்டவனாய் எரிந்து கொண்டிருந்த கணப்படுப்பிற்க்குள் எறிந்தான். உஸ்மானி இறுக்கமாய் அணைத்துக் கொண்டு ஆதரவாய்ப் பேசினார். பேச்சிடையில் குரல் கம்மியது. “இப்படிச் செய்வதையெல்லாம் நிறுத்திவிடு மகனே. சித்ரவதையாயிருக்கு எனக்கு. அவள் மட்டும்தானா பெண். அவள் இல்லாவிட்டால் இன்னொருத்தி. இவ்வளவுதான் விஷயம். உன்னை சிதைத்துக்கொள்வதால் என்ன நடந்துவிடப்போகிறது. நான் இன்னும் சாகவில்லையடா பொனாச்சா, அவளைவிடவும் அற்புதமான பெண்ணொருத்தியை உனக்குக் கொண்டு வருவேன். மனசை அலட்டிக் கொள்ளாமல் அவளை மறக்கத்தான் வேணும் நீ.” அலமாரியிலிருந்து ஒரு புதிய பாட்டிலை எடுத்துத் திறந்து டம்ளரின் விளிம்பு வரை ஊற்றி பொனாச்சாவின் அதரத்தில் பதித்தார்.



மாப்பிள்ளை பெண்ணுக்கு கருகமணி கட்டியாயிற்று. இருவரையும் ஒன்றாய் உட்காரவைத்து கழுத்திலிருந்து முழங்கால்களை மறைக்கும் விதமாக பட்டுத்துணியைக் கட்டினார்கள். அருகிலேயே பெரிய பாத்திரத்தில் அரிசி. ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியே வரிசையமைந்தது. வரிசையில் வருபவர்கள் பாத்திரத்திலிருந்து எடுத்த கொஞ்சம் அரிசியை மணமக்களின் பட்டு விரிப்பிலிட்ட பிறகு அன்பளிப்புகளைக் கொடுத்துச் சென்றனர். உஸ்மானியின் முறை வரும்போது தன் மோதிரத்தைக் கழற்றி மணமகனுக்கு அணிவித்தார். தன் விரலுக்குப் பொருந்தாமல் பெரிதாயிருந்த தங்க மோதிரம் கழன்று விழாமலிருக்க மணமகன் கையை மூடிக்கொண்டான்.



விருந்தில் பன்றியிறைச்சியும் காக்டெயில் மதுவும் பரிமாறப்பட்டன. கூடுதலாக பருப்பு நீரும் கோதுமை ரொட்டியும். எதிர்வரிசையில் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்த ஷகிலாவிடம் - மணமகனுக்கு இறைச்சி ஊட்டிவிடச் சொல்லி ஜாடை செய்து உஸ்மானி பலமாகச் சிரித்தார். சிரிப்பின் வேகத்தில் வாயிலிருந்து இறைச்சித் துணுக்குகள் வெளிவந்து விழுந்தன. பக்கத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்தவனை உடைக்குள் உப்பிப் பருத்திருந்த தன் சிறுநீர்ப்பையை தொட்டுப் பார்க்கச் சொல்லி ஆனந்தப்பட்டுக்கொண்டார். குடித்தவர்கள் போதையிறங்கி சாப்பிட வேண்டுமென்பதற்காக கொண்டுவந்து வைக்கப்பட்ட டிகாக்‌ஷன் டீயிலும் ஒரு குவளை குடித்துவைத்தார் உஸ்மானி.



தகப்பனிடமிருந்து டம்ளரைப் பெற்று ஒரே மூச்சில் காலி செய்து டம்ளரைக் கீழே வைப்பதற்குக் குனிந்தவன் - அப்படியே முழங்கால்களிடையில் முகத்தை மறைத்துக்கொண்டு குலுங்கியழுதான். செய்வதறியாது திகைத்துப் போனார் உஸ்மானி. அவரும் கண்கலங்கி வார்த்தைகளற்று பொனாச்சாவின் அதிரும் முதுகைத் தடவியபடியிருந்தார். இரவுகளில் இதைப்போல ஏதாவது நடந்து கொண்டுதான் இருக்கிறது - ஷகிலாவின் திருமணம் நிச்சயிக்கப்பட்டதிலிருந்து. ”அவள் உன்னைக் காதலிக்கவில்லையே, நீதானே அவளை விரும்பிக் கொண்டிருந்தாய். நீ அழுகின்ற பாவம் அவளைத் தொட வேண்டாம். போகட்டும் விடு. போகிற இடத்தில் நல்லா இருக்கட்டும்....” ஒரு பாம்பைப்போல சட்டென்று தலை நிமிர்த்திப் பார்த்தான் பொனாச்சா. “இருக்கட்டும். சந்தோஷமா இருக்கட்டும். நான் இதே ஊர்லே இருக்க முடியாது. இருக்கறதை வித்துட்டு நாம எங்கேயாவது போயிடலாம்...” ஒரு துணியைச் சுருட்டி கையில் வைத்துக்கொண்டு தரையில் கிடந்த பாட்டில் சிதறல்களை உஸ்மானி ஒன்று சேர்த்தார்.



“கொஞ்சம் யோசித்துப் பேசுகிறாயா நீ. ஆறு ஏழு தலைமுறைகளாக வாழ்ந்த இடத்தைவிட்டு ஒரு பெண்ணுக்காகப் போய்விடமுடியும... என்னைப் போல இல்லாவிட்டாலும் நீ ஒரு கோழையாக மாறாமல் இருக்கணும்.”



“இங்கே யார் இருக்கா உங்களுக்கு. யாருக்கும் நாம தேவைப்படலே. எல்லோருக்கும் பணம் இருந்தா போதும். எம்மேலே நம்பிக்கையிருந்த என்னோட புறப்பட்டு வாங்க. இனிமேலும் நான் இங்கே இருந்தால் பைத்தியம் பிடிச்சிதான் சாக வேண்டியிருக்கும்.”



நொடியில் சினம் கவ்விக்கொள்ள நின்றபடி உஸ்மானி முறைத்தார். சிவப்பேறின விழிகள். “இது உன் பேச்சுதானா பொனாச்சா! பொத்திப் பொத்தி வளர்த்து உன்னை ஒரு பெண் பிள்ளையாக்கிட்டனோன்னு சந்தேகமா இருக்கு. தேவைக்கதிகமா கவலைப்படுறே ஒன்றுமில்லாத காரியத்துக்கெல்லாம். வம்ச கௌரவத்தையும் பொருட்படுத்தாம ஒருத்திக்காக ஓடிப்போயிடலாம்னு சொல்றவன் ‘கூர்க்’கா இருக்க முடியாது. உனக்கு விருப்பமிருந்தா சொல்லு. இந்த இரவே செத்துப் போறேன். நான் செத்தபிறகு நீ எங்கே வேண்டுமானாலும் போ...” பக்கத்திலமர்ந்து மகன் தோளைப் பற்றி மடியில் சாய்த்துக் கொண்டார்.



“இன்னும் குழந்தையாகவே இருக்கிறாயே மகனே. உனக்கு ஏன் பைத்தியம் பிடிக்கணும், ஏன் சாகணும். உனக்காகத்தானே என்னைக் காப்பாத்திட்டு இருக்கேன். மனம் பொறுக்கலைடா எனக்கு, சாகற அளவுக்கா துணிஞ்சிருக்கே. போயிடலாம். எங்கே போகலாம்னு நெனக்கறயோ அங்கே போயிடலாம். உன்னைவிட முக்கியமானது எனக்கு என்ன இருக்கு. போயிட வேண்டியதுதான்... தூங்கு அமைதியா. தூங்கிடு பொனாச்சா. எல்லாம் நல்லபடியாகும்.” ஆஜானுபாகுவான தன் மகனை வெகுநேரம் தட்டிக்கொண்டிருந்துவிட்டு விளக்கை அணைத்தார். ஜன்னலைத் திறந்ததும் குப்பென்று முகத்திலறைந்தது குளிர். தூரத்து மலைமுகடுகளின் விளிம்புகள் லேசாகத் தெரிந்தன. ரேடியோ நிலைய கோபுரத்தின் உச்ச விளக்கு பனியில் மறைந்து மங்கலான செம்புள்ளியாயிருந்தது.



பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட விளக்குகளின் பிரகாசத்திற்கு இருள் சற்றுத் தொலைவே ஒதுங்கிக் கொண்டது. மதுமகிமையில் குளிர் உறைக்கவில்லை யாருக்கும். இடைவிடாத ஆட்டத்தில் போதை விலகியவர்கள் உள்ளே சென்று ஊற்றிக்கொண்டு வந்தார்கள். இதற்காக உள்ளே செல்வது அசௌகரியமாகப் பட்டதால் வெளியே கொண்டு வரப்பட்டது பீப்பாய். விளக்கிலிருந்து தவறி விழுந்த வெட்டுக்கிளியொன்று மதுவிற்குள் தத்தளித்தது. ஐம்பது அடி தொலைவில் மண்டபத்தைப் பார்த்தபடி ஷகிலா நிறுத்தி வைக்கப்பட்டாள். பாதி நிரம்பிய பன்னீர்ப் பானையை தலையில் வைத்துப் பிடித்திருந்தாள். பானைக்குள் ரோஜா இதழ்கள் மிதந்தன.



அவள் பின்னால் தோழி சஷீவ். ஷகிலாவிற்கு எதிர்ப்புறமாய் மூன்றடி தூரத்தில் மணமகனின் தம்பி ஆர்ப்பாட்டமாய் ஆடிக்கொண்டிருந்தான். அருகிலேயே அவன் அம்மா, மகனுக்கு ஆட்டக் கிளர்ச்சி குன்றிவிடாதிருக்க சரியான விகிதத்தில் மது கலந்து கொடுத்துக் கொண்டிருந்தாள். வேகம் விஞ்சிப்போய் இரண்டொருதரம் ஷகிலாவின் மேல் விழத்தெரியவே ஷகிலாவிற்கு முன்னால் சஷீவ் நின்றுகொண்டாள். மாப்பிள்ளைத் தம்பியின் பெயரைக் கேட்டுத் தெரிந்துகொண்டு, ”விடாதே சுகிர்த்! ஒரு அடிகூட விட்டுக்கொடுக்காதே. அவள் உள்ளே நுழைந்துவிட்டால் உன்னையும் உன் அண்ணனையும் பிரித்துவிடுவாள். விடாதே” உரக்கச் சத்தமிட்டார் உஸ்மானி. நேரம் கடந்துகொண்டிருந்தது. ஒரே இடத்தில் - உச்ச வெறியில் களைப்படையாமல் ஆடிக் கொண்டிருந்தான். சில தடவைகள் சஷீவின் மேலே விழுந்தான். மேலே விழுந்தவனை நகைப்புடன் விலக்கி நிற்க வைத்தாள் சஷீவ். சுகிர்த் சீக்கிரம் வீழ்ந்து ஷகிலா உள்ளே போவதற்காக காட்டமான மதுவை பெண் வீட்டார் கொண்டு வந்து கொடுத்தார்கள். சுகிர்த் அதை தட்டிவிட்டு பக்கத்திலிருந்தவனைப் பிடித்து அவனிடத்தில் நிற்க வைத்தான். “இங்கேயே நின்று ஆடிக்கொண்டிரு. வந்துவிடுகிறேன்” என்று சொல்லி அவனுக்குத் தேவையானதை தேவையான கலவையில் பருகி வந்து - இடத்தைப் பெற்றுக்கொண்டு ஆடினான். தலையில் பானைச் சுமையில் நெளிந்தாள் ஷகிலா. சஷீவிடம் கேட்டான் சுகிர்த். “ஒரு முத்தம் தருகிறாயா, இரண்டடி வழிவிடுகிறேன்.”



“இரண்டடி வேண்டாம். பத்தடி விட்டுக் கொடுக்கிறாயா?” சஷீவிடமிருந்து கன்னத்தில் ஒரு முத்தம் பெற்றுக்கொண்டு பின்னால் சென்று ஆடினான். பெண்ணும் தோழியும் பத்தடி முன்னேறினார்கள். கிண்டலும் சிரிப்புமாய் உஸ்மானி இரைந்தார். “அடே சுகிர்த் மடையா ஒரு முத்தத்துக்குப் பத்தடி தூரமா. இது அநியாயம்...”



“என்னையும் அண்ணனையும் பிரித்து விடுவாயா நீ? மாட்டேன் என்று சொல், ஐந்தடி வழிவிடுகிறேன்....” ஷகிலா பத்தடி வேண்டுமென்றாள்.



சுகிர்த் ஆட்டத்திலேயே தலையாட்டி மறுத்தான்.



“முடியாது ஐந்தடிதான்.”



“சரி பிரித்துவிடமாட்டேன் உங்களை” என்று ஷகிலா ஒத்துக் கொள்ளவும், சுகிர்த் ஐந்தடி பின்னகர்ந்தான். சஷீவ், அவள் கன்னத்தைக் கிள்ளிப் பார்க்க அனுமதித்ததற்காகவும் - அவன் அழகைப் புகழ்ந்ததற்காகவும் மேலும் சில அடிகள் சலுகை கொடுத்தான்.



மண்டபத்திற்குச் சுமார் இருபதடி தூரம் நெருங்கிய பிறகு எந்த சமரசத்திற்கும் கட்டுப்படாமல் ஆட்டத்தில் தீவிரமானான். அவனாக மனமிரங்கி வழிகொடுத்தால்தான் ஆயிற்று என்ற நிலையில் - அசைவு புலப்படாமல் காற்பெருவிரலால் ஷகிலா ரகஸியமாக முன்வந்து கொண்டிருந்தாள். சற்றுத் தள்ளி கரகோஷங்கள் நடுவில் ஆடிக் கொண்டிருந்த மாப்பிள்ளை அங்கிருந்தபடியே கூச்சலிட்டான். “நகர்கிறாள் பார் சுகிர்த்! அவ்வளவு சீக்கிரம் விட்டுவிடாதே!” பறையோசையால் அவன் சொல்வது சரியாகக் கேட்காமல், அண்ணன் விட்டுக் கொடுக்கச் சொல்கிறான் எனக்கருதிய சுகிர்த் “முடியாது!” என்றலறினான். சுகிர்த்தை விரைவில் படுக்க வைக்க பெண்வீட்டாரும் - இன்னும் நீண்ட நேரம் பெண்ணைத் தடுத்து வைப்பதற்காக மாப்பிள்ளை வீட்டாரும் அவரவர் வழிகளில் முயற்சித்துக் கொண்டிருந்தனர்.



சாக்கடையில் விழுந்துவிட்ட மாப்பிள்ளையின் நண்பன் ஒருவனுக்கு போதை தெளிவதற்கான சிச்ருஷைகளைச் செய்துவிட்டு சிறுநீர்ப்பை அசைய நடந்துவந்த உஸ்மானி “போகட்டும் விடு. எவ்வளவு நேரம்தான் தலையில் பானையுடன் நிற்பாள் பாவம்” என்றார். மேலும் சக்தியேற ஆடிக்கொண்டிருப்பவனின் காதுகளில் அவர் சொன்னது விழவில்லை. அவன் அம்மாவிடம் அவனுக்கு மிகப் பிடித்த மதுவின் பெயரைச் சொல்லி அதைக் கொண்டு வரும்படி ஏவினான். சென்று கொண்டிருக்கும் அவளுக்குக் கேட்க வேண்டும் என்பதற்காக அவனறியாமல் பக்கவாட்டில் ஓரடி விலகி “கிளாஸில் ஊற்ற வேண்டாம் - பாட்டிலைத் திறந்து அப்படியே எடுத்து வா” என்று சொல்லி முடிப்பதற்குள் பெண்ணும் தோழியும் அவனைக் கடந்து பாய்ச்சலாய் உள்ளே ஓடினார்கள்.



அமர்ந்தபடியே பொனாச்சா வெளிக்கிளம்ப ஆயத்தமாகிக் கொண்டிருந்த தந்தையை வெறித்துப் பார்த்தான். ஸ்வெட்டர் கைகளிலிருந்து கையை எடுத்து நெஞ்சோடு சேர்த்திருந்தான். தோளின் இருபுறமும் ஸ்வெட்டரின் நீள் கைகள் கூடாய்த் தொங்கி அசைந்தன.



“நீங்கள் போகத்தான் வேண்டுமா?” அந்தப் பலகீனமான கேள்வி பதில் கொண்டு வரவில்லை. ஸ்வெட்டருக்குள் கைகளைத் திணித்துக் கொண்டு உள்ளங்கைகளைத் தேய்த்துக் கன்னத்தில் வைத்துக்கொண்டான். விழி சிவந்து வெளுத்திருந்தது முகம். உதட்டில் தோல் வெடிப்புகளை நாவால் தடவிக் கொண்டான்.



“அந்தக் கல்யாணத்திற்கு நீங்கள் போக வேண்டாம். அது உங்கள் மகனுக்கு நடக்க வேண்டிய கல்யாணம்” மரபான கருப்பு உடை அணிந்து தோற்சங்கிலியைப் பொருத்திக் கொண்டிருந்தார் உஸ்மானி.



“உங்களுக்கு நான் வேண்டுமென்றால் போக வேண்டாம். உங்கள் தங்கை மகள் திருமணம்தான் முக்கியமென்றால் தாராளமாகப் போய்க் கொள்ளலாம்” உஸ்மானி அந்த தீர்க்கமான எச்சரிக்கைக்காகப் புன்னகைத்தார். கண்ணாடிமுன் நின்று ஏதாவது விட்டுப் போயிருக்கிறதாவென சரிபார்த்துக் கொண்டார். நீட்டிய சுட்டுவிரல் கோபத்தில் நடுங்க கண்ணாடிக்குள்ளிருந்து மகன் பேசினான், “நீங்கள் திரும்பி வரும்போது நான் இங்கே இருக்கமாட்டேன்...” கடைசியாக தன் ரப்பர் பையைத் தேடுவதில் முனைந்தார். விழாக்காலங்களில் அதிகம் குடிக்க நேரும்போது அது இல்லாமல் முடிவதில்லை. மேசை இழுப்பறையிலிருந்ததை உடைக்குள் வைத்துக்கொண்டு - முதுகின் பின்னே துளைக்கும் பார்வைக்கு எதிர்வினை எதுவும் காட்டாமல் வாசலை நோக்கி நடந்தார். கம்பீரமாயிருந்தது நடை.



உஸ்மானி, முடிந்தவரையில் குடித்தும் - நடனமாடியும் அயர்ந்து நின்றிருந்தார். தள்ளாட்டத்தை மறைப்பது சிரமமாயிருந்தது. இளவட்டங்களெல்லாம் இன்னும் ஆடிக்கொண்டுதானிருந்தனர். எப்படி மிதமாகப் பருகி போதையைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டுமென்பதில் பெண்கள் தேர்ந்திருந்தனர். சரிந்த ஆண்களைச் சுட்டிக்காட்டி பெண்கள் பேசிச் சிரித்தபோது - விழுந்தவர்களின் மனைவிகள் வெட்கினார்கள்.



தலைவெட்டப்பட்ட வாழைமரங்கள் போதுமான இடைவெளியில் வரிசையாக ஊன்றப்பட்டிருந்தன. அன்றுதான் வெட்டப்பட்ட செழுமையான மரங்கள். அதன் வட்டமான மேற்தளத்தில் குச்சி செருகி சுற்றப்பட்டிருந்தது பூச்சரம். மரங்களைச் சுற்றிலும் நீர் தெளித்து தரை துப்புரவாக்கப்பட்டிருந்தது. மரங்களைச் சூழ்ந்தது கூட்டம். மாப்பிள்ளையின் தாய்மாமன் முறைக்கு ஒருவர் வந்தார். நீளமான வாளொன்று கொடுக்கப்படவும் - வாளின் முனையால் தாம் வெட்டுவதற்குரிய மரங்களின் உச்சியிலுள்ள பூச்சரத்தை அகற்றிப்போட்டார். விளிம்பின் கூர்மையில் ஒளிமிளிரும் வாள் மந்திர உச்சாடனங்களுடன் பின்னோக்கி உயர்ந்தது. பிறகு அரைவட்டமாய்ச் சுழன்று மரத்தைத் துண்டித்தது. பறையோசையும் உணர்ச்சிக் கூவலும் கீழே - பள்ளத்தாக்கின் வீடுகளையும் தொட்டெழுப்பின. ஒவ்வொரு மரமும் வெட்டப்படும்போது மேல்ஸ்தாயிக்குத் தாவியது பேரோசை. மரங்களின் அருகிலேயே நின்று - தடையில்லாமல் வெட்டுண்டு விழ வேண்டுமென மணமகன் பார்த்திருந்தான். மாப்பிள்ளை தரப்பு மரங்கள் வெட்டுப்பட்டு முடிவதற்குக் காத்திருந்து வாளௌ உஸ்மானி பெற்றுக் கொண்டார் பெண்ணுக்குத் தாய்மாமனாய்.



இரண்டு கைகளாலும் வாளை உயர்த்தி மந்திரம் சொல்வதற்கு அதிக நேரமானது. உச்சிப்பூச்சரத்தை நீக்கிய பிறகு அவரது வாள்வீச்சில் துண்டாகி விழுந்தது மரம். அவரது வேக அசைவில் அதிர்ந்தாடும் சிறுநீர்ப்பந்து எங்கும் சிரிப்பைத் தூவியது. அடக்க முடியாமல் வயிற்றைப் பிடித்துக்கொண்டு ஆண்களும் பெண்அளும் சிரித்தார்கள். உடைத்துக்கொண்டு பீறிட்ட சிரிப்பால் பறையடிப்பவர்களாலும் இசைக்க முடியவில்லை. குழலூதுபவன் குழலைத் தரையில் ஊன்றி அதன்மேல் நெற்றியை முட்டுக்கொடுத்து மறைவாகச் சிரித்தான். பினு தர்மசங்கடமாக அண்ணனையே பார்த்துக்கொண்டிருந்தாள். உஸ்மானியும் சிரித்துக்கொண்டுதான் மரம் வெட்டினார். ஒவ்வொரு மரத்தையும் வெட்டி நிமிரும்போது மணமகன் நிற்கும் இடத்தை கவனித்துக் கொண்டார். இன்னும் ஒரே ஒரு மரம். இதோடு திருமணம் முடிந்தது. மணமகன் நிற்கும் பக்கத்தில் வாகாக தள்ளி நின்றுகொண்டார். முகத்தில் சிரிப்பில்லை. போதையின் அலைக்கழிப்பில்லை. சர்வ கவனமாய் கூர்ந்த விழிகளில் வேட்டைக்களை. வாளை பக்கவாட்டில் ஓங்கினார் உஸ்மானி. சுவாசம் திணறியது. கடைசி மரமும் சாய்ந்தவுடன் தீவிர இசை முழக்கத்திற்கு சமிக்ஞை கொடுப்பதற்காக ஒரு கையை உயரே தூக்கியிருந்தான் மணமகன். இறுதி முறையாக வீசப்பட்ட வாள் மின்னல் தெறிப்பாய் வந்து மணமகனின் அடிவயிற்றில் ஆழப்பதிந்து நின்றதை, புலன் குவியப் பார்த்துக்கொண்டிருந்தனர் அனைவரும்.



Pramil.

வண்ணத்துப்பூச்சியும் கடலும்


சமுத்திரக் கரையின்

பூந்தோட்டத்து மலர்களிலே

தேன்குடிக்க அலைந்தது ஒரு

வண்ணத்துப் பூச்சி...

வேளை சரிய

சிறகின் திசைமீறி

காற்றும் புரண்டோட

கரையோர மலர்களை நீத்து

கடல்நோக்கிப் பறந்து

நாளிரவு பாராமல்

ஓயாது மலர்கின்ற

எல்லையற்ற பூ ஒன்றில்

ஓய்ந்து அமர்ந்தது.

முதல் கணம்

உவர்த்த சமுத்திரம்

தேனாய் இனிக்கிறது.







******



(உன்) பெயர்

சீர்குலைந்த சொல்லொன்று

தன் தலையைத்

தானே

விழுங்கத் தேடி

என்னுள் நுழைந்தது.

துடித்துத் திமிறி

தன்மீதிறங்கும் இப்

பெயரின் முத்தங்களை

உதறி உதறி

அழுதது இதயம்.

பெயர் பின் வாங்கிற்று.

“அப்பாடா“ என்று

அண்ணாந்தேன்...

சந்திர கோளத்தில் மோதியது

எதிரொலிக்கிறது.

இன்று, இடையறாத உன்பெயர்

நிலவிலிருந்திறங்கி

என்மீது சொரியும் ஓர்

ரத்தப் பெருக்கு.



****



நன்றி: அரியவை



புதன், 17 ஆகஸ்ட், 2011

Aadukalam.

ஆடுகளம் : துரோகத்தின் வினைத்தொகை


Posted by நர்சிம் Thursday, January 20, 2011 comments (32) எல்லாப் படங்களையும் பார்த்துவிட்டாலும் சில படங்களைப் பார்க்கும்பொழுது மட்டும்தான் அதுகுறித்து எழுதத் தோன்றுகிறது. ஆடுகளம். துரோகம் ஆடியது,ஆடுகின்றது,ஆடும் என்ற வினைத்தொகையின் பண்பு, உலகம் இருக்கும் வரை. ஒருவரின் அன்பில்,அவர் நம்மீது கொண்டிருக்கும் அக்கறையில் திக்கித்திணறி நாம் மூர்ச்சையாகிப் போகும்பொழுது முதுகில் விழும் குத்து...ஆடுகளம்.



சேவல் சண்டையைப் பற்றிய வரலாற்று குறிப்போடு டைட்டில் தொடங்குகிறது. பொல்லாதவன் பாணியில் முதலில் க்ளைமேக்ஸ்..அதிலிருந்து பின்னோக்கி என வெற்றி ஃபார்முலாவை மீண்டும் கையாண்டிருக்கிறார்,வெற்றி-மாறன்.



கதையைப் பற்றிப் பேசுவதை விட அதற்கும் அப்பால் பேச நிறைய இருக்கிறது இப்படத்தில்.



சினிமாவில் வில்லன், நாயகன், குணச்சித்திரம் என அவரவர் பாத்திரம் உணர்ந்து எப்பொழுதுமே நல்லவனாகவும் எப்பொழுதுமே கெட்டவனாகவும் சித்தரிக்கப்பட்டுவந்ததில் இருந்து முற்றும் மாற்றாக, அன்றாடத்தில் எப்படி அவ்வந்த சூழலுக்கு ஏற்ப வாழ்கிறோம் என்பதை மிக நுட்பமாகக் காட்சிப்படுத்தி இருப்பதே இப்படத்தின் ஆகச் சிறப்பு.



கிஷோர்/துரை பாத்திரம். கொஞ்சம் பணமும் பார் வைக்குமளவிற்கு செல்வாக்கும் இருக்கும் ஒரு மதுரைக்காரன் எப்படி இருப்பானோ அப்படியே இப்பாத்திரம். மிகக் கூர்ந்து கவனித்ததில் இந்தப் படத்தின் அற்புதமானப் பாத்திரம் என்றால் அது துரைதான். ஒரு இடத்தில் கூட இயல்பிற்கு மீறியச் செய்கையைச் செய்யவில்லை.



எதிர் அணியில் இருந்த இன்ஸ்பெக்டர் தன்னை ஸ்டேஷனில் இருந்து விடுவிக்க உதவியதும் மறுநாள் அவர் வீட்டிற்கே சென்று நன்றி தெரிவிப்பது.



தன் கூட்டாளி அயூப்பை அதே இன்ஸ்ப்பெக்டர் கொன்றது தெரிந்து, தண்ணியடித்துவிட்டு, ‘இப்பிடி எல்லாத்தையும் செஞ்சுப்புட்டு ஒண்ணுமே தெரியாதமாதிரி நிக்கிறாங்களே’ என அவரை அடிக்கப்போவது.



குருவின் பேச்சைக் கேட்காத தனுஷின் முதல்சுற்று போட்டிக்கு, ‘விடுண்ணே சின்னப்பய,தெரியாம பண்ணிட்டான்’ என ஆதரிப்பது. மீண்டும் திமிறில் தனுஷ் களம் இறங்கும்பொழுது, ‘என்னடா ஓவராப் போற’ என தனுஷை எதிர்ப்பது.



மீண்டும் தனுஷ்க்கு வாழ்க்கையில் செட்டில் ஆகும் வாய்ப்பு வரும் எனத் தெரிந்ததும், தனுஷை ஆதரித்து, மூன்று லட்சம் வாங்கித் தருவது.



குரு அளவிற்கு மீறி கோவப்பட்டதும், ‘எனக்கென்னமோ நீ பண்றது தப்புன்னு தோணுதுண்ணே’ என குருவிடம் நியாயத்தைப் பேசுவது.



கடைசிவரை துரைக் கதாப்பாத்திரம் எந்த இடத்திலும் பிசகவே இல்லை.



பேட்டைக்காரன் என்ற பெரியசாமி : நான் சில மாதங்களுக்கு முன்னர் ‘அம்பத்தாறு’ என்ற கதையை எழுதி இருந்தேன். அந்த அம்பத்தாறு பாத்திரத்தின் குணாதிசயம், அடிப்படையில் நல்லவன், ஆனால் எவராவது ஊரில் நல்லபெயர் வாங்கினால் பொறுக்காது, தனக்கு யாராவது துரோகம் செய்வதாகப் பட்டால், நேரடியாக மோதாமல் கெடுதல் செய்வது.



இந்த குணாதிசயத்தையும் தாண்டிய படைப்பு பேட்டைக்காரன். அடிப்படையில் திறமையான, நல்லவர் தன் சிஷ்யன் தன்னை மீறும் பொழுது ஏற்படும் மனஉளைச்சலை எப்படி துரோகமாக மாற்றுகிறார் என்பதே.



இவர் பேச்சை மீறி தனுஷ் களத்தில் இறங்கும்பொழுது, கோயில் முன்னர் நின்று கொண்டிருப்பார் பேட்டைக்காரன். ‘அண்ணே நம்ம சேவ ஜமீனாகிப்போகும் போலண்ணே, தோத்துறும்’ என ஒருவன் வந்து சொன்னதும், லேசான திருப்தியோடு கடவுளைப் பார்க்கும்பொழுது அவரின் குரூரம் தெரிகிறது. ஆனாலும் தனுஷ் முதல் சுற்றில் வெற்றிப் பெற்றதும், தன் மானம் காப்பாற்றப்பட்டது போன்ற திருப்தியும் அடுத்த முகபாவனையில்.



‘அதிர்ஷ்டம் அவன செயிக்க வச்சுருச்சுடா’ என மீசை மண் வசனத்தில் சமாளிப்பது.



‘இல்லண்னே, அன்னிக்கு மாதிரி ஏதாச்சும் மாத்தி ஆகிப்போச்சுண்டா’ என சேவல் வாங்க வருபவன், இவரின் பேச்சை மீறி வேறு சேவல் கேட்கும்பொழுது, மனம் முழுதும் வன்மம் குடிகொள்வதை டாப் ஆங்கிளில் பேட்டைக்காரனின் முதுகில் காட்டி இருப்பது.



இந்தக் கதாப்பாத்திரத்தின் மிகச்சிறந்த டீட்டெய்லிங், கடைசியில் எல்லா உண்மையும் தெரிந்த தனுஷை குத்தக் கத்தியைக் கையில் எடுக்கும் பேட்டைக்காரன், தனுஷ் சொல்லும், ‘வெளில தெரிஞ்சா இம்புட்டு நாளா உனக்கு இருந்த பேரு என்னண்ணே ஆகும்,’ என்ற வார்த்தைகளைக் கேட்டதும், கத்தியின் முனை திசை மாறும். அவ்வளவே. தன்மீது இருந்த பிம்பம் சிதைபடும்பொழுது ஒருவன் என்ன செய்வானோ அதைச் செய்துகொள்ளும் அற்புத பத்திரப்படைப்பு பேட்டைக்காரன்.



தனுஷ்/கருப்பு : I AM LOVE YOU என்ற மதுரை திருப்/தென்பறங்குன்ற கைலி இளைஞன். எல்லாக் கோவத்தையும் தாயிடம் காட்டும் சராசரியாக, டைவாவைக் கரெக்ட்பண்ணும் காதலனாக, நல்லது செய்யும் கிஷோரை அண்ணண் நிலையில் வைக்கும் நண்பனாக, துரோகம் தெரியவந்ததும் வெடித்துச் சிதறும் சிஷ்யனாக...



மிகக் கச்சிதமாய் செய்திருக்கிறார் தனுஷ். மதுரை பாஷை கொஞ்சம் தடுமாறினாலும், ஒன்றச் செய்துவிடுகிறது. தனுஷிடம் இருக்கும் நடிப்புத் திறமையே இவரை இந்த இடத்தில் வைத்திருக்கிறது என்பதை நிரூபிக்கும் படம் இது. புதுப்பேட்டையில் ஒரு பெரிய கூட்டமே அடித்துத் துவைத்தும், முகமெல்லாம் ரத்தமாக, எழுந்து நிற்கும்பொழுது ஒரு சிங்கத்தின் பார்வையை ரீரிக்கார்டிங்கோடு செல்வராகவன் கொண்டு வந்திருப்பார். அந்தக் காட்சி தனுஷின் மிகச்சிறந்த நடிப்பிற்கு ஒரு உதாரணம். அதைப்போல இந்தப் படத்தில் நிறைய இடங்களில்.



அயூப் : ஃபாரின் சரக்கை ஆசையாக, இதை திருப்பி கேட்க மாட்டியே என வெள்ளந்தியாக கேட்பதாகட்டும், தன்னை விலை பேசுவது தெரிந்த அடுத்த நிமிடத்தில், “என்னடா வேணும் உங்களுக்கு” என அதே பாட்டிலை தரையில் எறிந்து விட்டு, நாலு கிளாஸ் சாராயத்துக்கே இம்புட்டு கேட்குறீங்களேடா, நாப்பது வருச பழக்கம்னா எம்புட்டு இருக்கும்’ என்று நிற்பது கம்பீரம்.



ஊளை : மதுரையில், கிட்டத்தட்ட எல்லா கேங்கிலும் ஒரு ஊளை கேரக்டர் உண்டு. அவ்வளவு தத்ரூபமாக செய்திருக்கிறார். ‘எந்தத் தெருடா ஏழுமணிக்கு வெறிச்சோடி இருக்கு, தப்பாத் தெரிதே மாப்ள’ இந்த ஒரு வசனம் போதும். அவ்வளவு கச்சிதமான ஏற்ற இறக்கம். படம் முழுதும் வரும் இப்பாத்திரம் தனுஷ் என்ற பாத்திரம் எது செய்தாலும் அதற்கு உடன்பட்டு எப்பொழுதும் உடன் இருக்கும் நண்பன் பாத்திரம். காதலியைத் தேடிப்போகும் பொழுது உடன் வந்து கம்பெனி கொடுப்பதில் துவங்கி இறுதியில் வழியனுப்பி வைக்கும் வரை இருக்கும் மதுரை நட்பை அப்படியே திரையில் கொண்டு வந்திருக்கும் இந்தப் பாத்திரமும் கிஷோருக்கு அடுத்தபடியாக அமைந்திருக்கும் அற்புதம்.



தவிர, சில சுவாரஸ்யங்கள் :



1.சேவல் சண்டையின் நுட்பங்களை உள்வாங்கி அற்புதமாக திரையில் கொண்டு வந்திருப்பது. குறிப்பாக இருவாசியின் பொழுது ஜெயிப்பது யார் என சீட்டின் நுனிக்கு நம்மை இட்டுச் சென்றது.



2. மதுரை என்றாலே அங்கிட்டு இங்கிட்டு அறுவா என்பது மட்டும் அல்ல, அதையும் தாண்டிய ஒரு வாழ்க்கை இருக்கிறது என்பதை காட்டிய விதம்.



3. சேவல் சண்டை நடக்கும் இடத்தில் வைக்கப்பட்டிருக்கும் ஃப்ளெக்ஸ் பேனரில், கிஷோர் ராஜா உடை அணிந்து நிற்பார். பேட்டைக்காரன் சிம்மாசனத்தில் அமர்ந்திருப்பார். மதுரையின் அன்றாட காட்சிகள் இவை. இதில் துவங்கி ஒவ்வொரு காட்சியில் நுட்பங்களை காட்சிப் படுத்திய விதம்.



4. ஒவ்வொரு பாத்திரத்தின் தேர்வும், அவர்கள் ஒரு இடத்தில் கூட தேவையில்லாமல் கையை என்ன பண்ணுவது என்று தெரியாமல் நிற்பதோ, மற்றவர் வசனம் பேசும்பொழுது அடுத்த வசனத்திற்கு ரெடியாக துடித்துக்கொண்டு நிற்பதோ இல்லாமல், வெகு இயல்பாக வந்து போவது.



5. வாழ்வினூடாக பாடல் இருப்பதை அப்படியே வசனங்களுக்கு ஊடாக சேர்த்து இருப்பது..யாத்தேப் பாடலின் பொழுது தனுஷின் குதூகலம் நம்மையும் தொற்றச் செய்துவிடும் கேமிரா/டான்ஸ்/இசை.



6. இரண்டாம் பாதியில், ஒரு இடத்தில் கூட நாம் நினைப்பது நடக்காதது போல அமைத்திருக்கும் திரைக்கதை. இன்ஸ்பெக்டர் மொட்டை அடித்ததும் அறுவா பறக்கும் என்று எதிர்பார்த்தால் ..இல்லை. இதே நிலம உனக்கும் வரும்ணே..என தனுஷ் கிஷோரைப் பார்த்து சொல்லும் பொழுது கிஷோரின் நிலை அப்படி ஆவது இல்லை, காதலி இனி அவ்வளவுதான் எனில் அவ்வளவு இல்லை என மிக இயல்பாய் சம்பவங்களைக் கடந்திருக்கிறார் இயக்குனர் வெற்றிமாறன்.



7. ‘என்கிட்டயே உன்னத் தப்பாச் சொல்றாரு’ என காதலியின் நம்பிக்கை.இந்த வசனம் வந்ததும் கைத்தட்டல் எழுகிறது அரங்கில். சாதாரண வார்த்தைகளில் வாழ்வைக் காட்டுவதே வசனம். விக்ரம் சுகுமாரன் & வெற்றி மாறன் இருவரின் வசனங்கள் இயல்பான உரையாடல்களாக அற்புதமாய் இருக்கிறது.



8. மதுரை என்றாலே இரவு. அதை அற்புதமாய் பாடலில் கொண்டு வந்திருக்கும் நேர்த்தி.



9. ராதாரவின் வெகுநேர்த்தியான பின்குரல்.



10. மீனாள் கதாப்பாத்திரம்.



நன்றி வெற்றிமாறன்.



Labels: சினிமா விமர்சனம்

þÐ ±ÉÐ Ó¾ø ¨¸¦Â¡ôÀõ


¸ýÉ¢ ±ØòÐ.

¾Á¢ú ±ÉìÌ ¯Â¢÷ÐÊôÒ.

±ØЧÅý þÉ¢ ±ý ÐÊôÒ «¼íÌõŨÃ...

-¦Å.ᧃó¾¢Ãý. 17.08.2011

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

Manushiya putthiran.

பகுதி-1




கடந்த சில ஆண்டுகளாக பேட்டி எதுவும் அளிக்காமலிருந்த மனுஷ்ய புத்திரனின் நீண்ட பேட்டி இது. அகநாழிகை முதல் இதழுக்காக கேட்டு, இரண்டாம் இதழில்தான் வெளியிட முடிந்தது. தனது உள்ளத்து உணர்ச்சிகளை ஒளிவு மறைவின்றி பதிவு செய்திருக்கும் மனுஷ்ய புத்திரனின் மனம் திறந்த பேட்டி. வெகுநாட்களாக பதில் ஏதும் அளிக்காமல் மௌனமாய் இருந்த மனுஷ்யபுத்திரனின் குறிப்பிடத் தக்க நேர்காணல் இது. இந்த நேர்காணல் அகநாழிகை டிசம்பர் 2009 இதழில் வெளியானது.



…………………………………………………………………………………………………………………….



நேர்காணல் : பொன்.வாசுதேவன்







உங்கள் புதிய கவிதைத் தொகுதி ‘அதீதத்தின் ருசி’ டிசம்பரில் வெளிவர இருப்பதாய் அறிகிறோம். இது சற்று நீண்ட இடைவெளிக்கு பின்வரும் உங்கள் தொகுப்பு. ஏன் இந்த இடைவெளி?



ஒரு எழுத்தாளன் எழுதாமல் இருப்பது என்பது ஒன்று அவனது ஆயத்தமாகும் காலமாக இருக்கவேண்டும் அல்லது சபிக்கப் பட்ட காலமாக இருக்கவேண்டும். இரண்டில் எது எனக்குப் பொருத்தமான காலம் என்று தீர்மானிக்க முடியாமல் குழப்பமடைகிறேன். ‘கடவுளுடன் பிரார்த்தித்தல்’ தொகுப்பில் இடம் பெற்ற ‘அன்பிற்காக’ என்ற கவிதையை நான் எழுதி முடித்த தினத்தில் எனக்குத் தெரியாது அதற்குப்பிறகு ஒரு நீண்ட காலத்திற்கு நான் ஒரு வரிகூட எழுதப் போவதில்லையென்று.



யார் படைப்பின் ஊற்றுக்கண்களில் ஒரு அரக்கை வைத்து அடைத்து விட்டு போகிறார்கள் என்று தெரியவில்லை. தூக்கமற்றுத் தவித்த பல இரவுகளில் மனம் கலைந்து எழுத முயன்று தோல்வியடைந் திருக்கிறேன். அது ஒரு ஆதார மான உடல் உறுப்பு திடீரென செயலற்று போவது போல. பிறகு பனி விலகும் காலம் வந்தது. கடந்த ஆறு மாதத்தில் நான் எழுதிய கவிதைகளின் எண்ணிக்கையும் அவற்றின் தளமும் எனக்கே நம்ப முடியாதது. எத்தனை முறை நான் அழிந்தாலும் நான் மீண்டு வருவேன் என்ற உறுதியை தந்த நாட்கள் இவை. இப்போதும் ஒவ்வொரு கவிதையையும் எழுதிமுடிக்கும் போது இது ஒரு வேளை கடைசிக் கவிதையாக இருந்து விடக்கூடாது என்கிற சின்ன பதட்டத் தோடுதான் அதிலிருந்து விலகிச் செல்கிறேன்.



கவிதையின் படிமலர்ச்சித் தருணங்களை உடற்சிந்தனை, அனுபவத்தின் ஏக்கம் சார்ந்ததாக வடிவமைத்துக் கொண்ட தனித்துவம் உங்களுக்கே உரித்தானது. இம்மாதிரி வடிவம் வலிந்து ஏற்படுத்திக் கொண்டதா அல்லது உங்கள் சிந்தனை மொழி இயல்பாகவே அதை நிகழ்த்தி விடுகிறதா?



தனித்துவமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிற யாரும் தனித்துவத்தை உருவாக்க இயலாது. நான் எனது மொழிப் பழக்கத்தின் வழியே ஒரு சொல்முறையை உருவாக்கிக் கொண்டிருக்கிறேன். அந்த சொல்முறைதான் கவித்துவத்தின் அபூர்வ கணங்களை அடை வதற்கான முதல் திறப்பாக இருக்கிறது.



பொதுவாக என் மீது மட்டுமல்ல, வேறு கவிஞர்களின் மீதும்கூட அவர்கள் ஒரே பாணியிலான கவிதையை எழுதுகிகிறார்கள் என்று ஒரு எளிய அணுகுமுறை இருக்கிறது. படத்துக்கு படம் தந்து ஒப்பனைகளை மாற்றிக் கொள்ள ஒரு கவிஞன் ஒரு நடிகன் அல்ல. அவன் தனக்கென சில பிரத்யேக அழகியல் விதிமுறைகளை உருவாக்கிக் கொள்ளும்போது மட்டுமே தொடர்ந்து எழுதுவது சாத்தியமா கிறது. இந்த அழகியல் விதி கவித்துவ தரிசனங்களுக்கு ஏற்ப மாறியும், நெகிழ்ந்தும் புதிய அனுபவங்களை ஏற்படுத்தலாம்.



ஆனால் கவிதைகளை வடிவ ரீதியாக மட்டும் எதிர்கொள்வது அந்தக் கவிதையை எதிர் கொள்வதிலிருந்து ஒருவர் தப்பிச் செல்வதே ஆகும்.



பொதுவாகவே உங்கள் கவிதையின் மொழி நெகிழ்ச்சியாகவே இருந்து வந்துள் ளது. நேரடிப் பேச்சு, கட்டளை, சுயம்புவான தீர்மானம் என்ற வகையிலேயே கவிதைகளை வகைமையாக்குவது ஏன்?



முதலாவதாக, உரையாடல்தான் எனது மொழி. அதுவே என் தியானம். அவற்றின் வழியாகவே என் கவித்துவ தரிசனங்களை அடைகிறேன். இரண்டாவதாக என்னுடைய இருப்பு என்று என் கவிதைகளில் பிரத்யேகமாக இல்லை. நான் அறிகிற எல்லா மனிதர்களின் தீவிரமான நிலைகளையும் என் வயமாக்கிக் கொள்வதன் வழியாகவே எனக்கு கவிதை சாத்தியமாகிறது. மூன்றாவதாக யதார்த்த வாழ்க்கையில் நிகழ்த்தமுடியாத உரையாடல் களை கவிதைக்குள் நிகழ்த்துவதன் வாயிலாக மௌனங்களின் கொடூரமான உறை பனியைக் கடந்து செல்ல முற்படுகிறேன். அதற்கு இந்த வெளிப்பாடு முறையே இணக்கமானதாக இருக்கிறது.



ஒரு படைப்பாளியைப் பற்றிய தனிபட்ட தகவல்கள் வழியே அவரது படைப்புலகம் குறித்த தீர்மானங்களுக்கு வருவது பற்றி என்ன நினைக்கிறீர்கள்? இன்னும் நேரடியாகவே கேட்கிறேன். உங்கள் உடல் சார்ந்த பிரச்சினை யோடு உங்கள் கவிதைகள் எதிர்கொள்ளப் படுவது சம்பந்தமான ஒரு விவாதம் சமீபத்தில் இணைய தளங்களில் பார்க்க முடிகிறது.



ஒருவன் ஆணாகவோ, பெண்ணாகவோ, அரவாணியாகவோ இருக்க வேண்டியிருப்பது போல, இந்தியனாகவோ ஒரு ஐரோப் பியனாகவோ இருப்பதுபோல, இன்னும் தலித்தாகவோ, கறுப்பனாகவோ இருப்பது போல, புத்தி கூர்மையற்றவராகவோ, புத்தி சுவாதீனம் அற்றவராகவோ இருப்பதுபோல அல்லது ஒரு அரசு ஊழியராகவோ, ஒரு சிறு பத்திரிகை நடத்துபவராகவோ இருப்பது போல, ஒருவர் முழு உடல் நலமுள்ள வராகவோ, உடல் நலமற்றவராகவோ இருக்க வேண்டியிருக்கிறது. இந்த உடலும் இதன் ஆரோக்கியமும் பலவீனங்களும் நமக்கு வழங்கபட்டவை. இவ்வாறு வழங்கப்பட்ட எதையும் என்ன செய்வது என்று எனக்கு இன்று வரை புரிந்ததே இல்லை. அது போகட்டும், இந்த உடல் தரும் சௌகர் யங்களும் அசௌகர்யங்களும் நமது அன்றாட வாழ்க்கையில் ஒரு செல்வாக்கை செலுத்துவது போலவே ஒருவர் எழுதக் கூடிய கவிதையிலும் செலுத்தலாம்.



ஆனால் அதன் வழியே ஒருவரது ஒட்டு மொத்த உலகத்தையும் வரையறுக்க முயற்சிப்பதில் ஒரு தந்திரம் இருக்கிறது. அது ஒருவரை ஒரு பிம்பத்தோடு தளைப்படுத்தும் தந்திரம். அந்த தந்திரம் ஏன் மேற்கொள்ளப் படுகிறது என்பதற்கு திட்டவட்டமான காரணங்கள் இருக்கின்றன. ஒன்று நான் என் கவித்துவத்தின் வழியாக அடைந்தவற்றை ஒரு இயலாமைக்கு எதிரான செயல்பாடு என்று சுருக்க விரும்புவது. இந்த உடல் வேறொரு உடலாக இருந்திருந்தால் அப்போது அது வேறு காரணமாக இருக்கும். வறுமை, அல்லது மோசமான பால்ய காலம் இப்படி ஏதாவது ஒன்றைக் கண்டுபிடிப்பார்கள். ஒரு கவிதை யோடு உரையாடுவதைவிட ஒரு கவிஞன் எப்படி உருவாகிறான் என காரணங்களை கற்பித்துக் கொள்வது சுலபமானது. அப்படிக் கற்பித்துக் கொள்கிறவன் கவிஞனைவிட மேலான இடத்தில் தன்னை நிறுவ முற் படுகிறான். ஆனால் ஒரு கவிஞன் இத்தகைய கண்டுபிடிப்புகளை எல்லாம் தலைக்குப்புற கவிழ்த்து விடுகிறான். நீங்கள் அவனை ஒரு கான்ஸ்டபிள் ஒரு ஜேப்படி திருடனை பிடிப்பதுபோல பிடித்து உங்கள் காவல் நிலையத்தில் ஒரு புகைப்படமாக ஒட்டிவைக்க முடியாது. அவன் ஒரு சூனியக்காரி. உங்களது எல்லா வழிமுறைகளையும் அவள் குழப்பி விடுவாள்.



இரண்டாவதாக நமது கலாச்சாரம் என்பது மனிதர்களின் பொது அடையாளங்கள வழியே அவர்களின் ஸ்தானங்களை உருவாக்க முயல்வது. சாதிய ரீதியாகவோ மத ரீதீயாவோ இன-மொழி ரீதியாகவோ அல்லது தொழில் ரீதியாகவோதான் ஒருவரது இடம் இங்கே தீர்மானிக்கபடுகிறது. அதன் ஒரு நீட்சிதான் ஒருவரது உடலை மைய்யமாகக் கொண்ட பார்வைகளும்.



இந்த உடலால் நான் சௌகர்யங்களையே பெரிதும் அடைந்திருக்கிறேன். அது அனா வசியமான பல சமூகக் கஷ்டங்களிலிருந்து என்னைக் காப்பாற்றியிருகிறது. அந்தரங்கமாக எவ்வளவோ ஆழமான உறவுகளை ஏற்படுத்தித் தந்திருக்கிறது. ஆனால் நான் போராடி வெற்றி பெற்ற மனிதன் என்பதாக ஒருவர் புரிந்து கொள்ளும்போது நமது மத்திய தர வர்க்க மனோபாவம் குறித்த பெரும் ஆபாச உணர்வை அடைகிறேன். நான் ஒரு துளியும் போராடிய தில்லை. ஒரு துளி தியாகம் செய்யவும் இல்லை. ஒரு நீச்சல் வீரன் அல்லது மலையேறுபவனின் பித்து நிலைகொண்ட அர்ப்பணிப்பு. நான் அதையெல்லாம் செய்ய முடியாததால் இதைச் செய்து கொண்டிருகிறேன் அவ்வளவே.



நான் உடலின் துயரங்கள் பற்றிய கவிஞனாக இருந்தால்தான் என்ன? ஆனால் அது காலம்காலமாக தொடர்ந்து அழிக்கப்படும் உடல், தண்டிக்கப்படும் உடல், மறுக்கப் படும் அங்கஹீனப் படுத்தப்படும் உடல். நான் வரலாறு முழுக்க இத்தகைய உடல்களையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருகிறேன். என் வழியே நான் எழுத விரும்புவது அதையே. ஆனால் ஒருவர் அதை என்னுடைய அந்தரங்க குறிப்பேடாக மாற்றும்போது, தன்னிரக்கமாக புரிந்துகொள்ளும்போது அந்தக் குரூரம் என்னை பதட்டமடைய வைப்பதில்லை. அவ்வளவுதான் அவர் ஒரு கவிதைக்குள் பயணிக்கக் கூடிய தூரம். கடவுள் அவ்வளவே அவருக்கு பார்க்கும் சக்தியை அளித்திருக்கிறார்



ஒரு விமர்சகனின் அல்லது வாசகனின் அறியாமைக்கு எதிராக ஒரு கவிஞன் தனது மகத்தான கருணையை வெளிப்படுத்தவே விரும்புகிறான். ஏனென்றால் அறியாமையிலிருந்து பிறக்கும் தந்திரம் என்பது மன்னிக்கப் படக்கூடியதே.



உங்கள் கவிதைகளுக்காக நீங்கள் எதிர்கொள்ளும் விமர்சனங்கள் எத்தகையவை?



பொதுவாக அவை குழந்தைகளோடு விளையாடுவது போன்றதுதான். எந்த தர்க்கமும் அதில் கிடையாது. நான் ஈழத்தில் 20 ஆயிரம் பேர் காணாமல் போனதைப் பற்றி மிக உக்கிரமான கவிதை எழுதியிருப்பேன். ஒருவர் அதைப் படித்து அந்தக் கவிதையில் மிகச் சிறப்பான இரண்டு வரிகளை அடையாளம் காட்டுவார். அல்லது இதே போன்ற ஒரு கவிதையை நான் பத்தாண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறேன் என்று எனக்கு சொல்லித் தருவார். அந்தக் கவிதை விவாதிக்க விரும்பும் விஷயம் பற்றி ஏதாவது அவருக்கு அபிப்ராயம் இருக்கிறதா என்று முகத்தை, முகத்தை பார்ப்பேன். அவர் தானும் இதுபோல ஒரு கவிதை எழுதியிருப்பதாகச் சொல்லி அதை படிக்க ஆரம்பிப்பார். இதெல்லாம் பழகிப் போய்விட்டது. ஆனால் சில மூர்க்கமான வாசகர்கள் இருக்கிறார்கள். அவர்கள்தான் என் மனதை அணையாமல் தொடர்ந்து பற்றி எரியச் செய்பவர்கள்.



விமர்சனம் என்ற பெயரில் செய்யப்படும் தனிப்பட்ட தாக்குதல்கள் தமிழ் அறிவுச் சூழலில் தொடர்ந்து நடைபெறுகிறதே?



அதெல்லாம நடைபெறவேண்டியதுதான். அது நம் பண்பாடு. கலாச்சார வாழ்கை. ஒருவரை சாதியின் பெயரால் இழிவு படுத்துவது, மதத்தின் பெயரால், பாலினத்தின் பெயரால், தொழிலின் பெயரால், உடலின் பெயரால் இழிவு படுத்துவதெலாம் நாம் காலம் காலமாக செய்துவரும் காரியங்கள். இலக்கியம் மட்டும் அதற்கு விதிவிலக்காக இருக்க வேண்டும் என்று நினைத்தால் எப்படி? இலக்கியமும், இலக்கியவாதிகளும் வாழ்க்கை யையும் பண்பாட்டையும் பிரதிபலிப்பவர்கள் ஆயிற்றே. மண்டியிட வேண்டும் அல்லது எட்டி உதைக்கவேண்டும். யாரையாவது சொறிந்து கொடுக்காமல் அல்லது இழிவுபடுத்தாமல் நம்மால் ஒரு புத்தக விமர்சனம்கூட எழுத முடியாது. எனவே நம் எழுத்தாளர்களும் விமர்சகர்களும் இலக்கிய பத்திரிகை ஆசிரியர்களும் இன்னும் ஆவேசமாக இன்னும் மனம் திறந்து தங்கள் மனித வெறுப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப் படுகிறேன். நம்முடைய அற்பமான மனங்களை மூடிவைப்பது அல்லது அவற்றைத் தடை செய்வது அந்த அற்பத்தனத்தை இன்னும் தீவிரமாக மாற்றுகிறது. உண்மையில் இந்த வகையில் நமது ஊடகங்கள், சிறுபத்திரிகைகள், இணைய தளங்கள் மகத்தான பங்காற்றி வருகின்றன. நாம் கலாச்சார ரீதியாக விடுதலை அடைந்து வருகிறோம். எனவே பிறரை துன்புறுத்தும் அவமதிக்கும் வழிமுறைகளை நாம் தங்கு தடையின்றி மேற்கொள்வதற்கான எண்ணற்ற வாசல்கள் இன்று திறந்து விடப் பட்டிருக்கின்றன. நாம் இந்த சுதந்திரத்தை முழுமையாக பயன்படுத்துவோம்



முரண்பட்ட படைப்பாளிகளுக்கு இடையே ‘உயிர்மை’ எப்படி ஒரு இணக்கமான சூழலையும் செயல்பாட்டையும் உருவாக்குகிறது?



யாருக்கு இடையேயும் எந்த இணக்கத்தையும் ஏற்படுத்துவது உயிர்மையின் நோக்கம் அல்ல. அது சாத்தியமும் அல்ல. ஒரு வாசகனாக, எழுத்தாளனாக எனது நண்பர் களுக்காக நான் இந்த பத்திரிகையையும் பதிப்பகத்தையும் நடத்துகிறேன். எனக்கு பிடித்த விஷயங்களை நான் பதிப்பிக்கிறேன். நான் ஒரு மேதை இல்லை என்பதாலும் நான் ஒரு நட்சத்திரம் இல்லை என்பதாலும் என்னுடைய இடம் குறித்து எனக்கு எந்த பதட்டமும் இல்லை என்பதாலும் எனக்கு யாரோடும் எந்த மனச்சிக்கலும் இல்லை. உயிர்மை ஒரு எழுத்தாளனுக்கு உரிய கௌரவத்தை முழுமையாக அளிக்க விரும்புகிறது. அது மட்டுமே அதனுடைய பலம்.



சில மாதங்களுக்கு முன்பு உயிர் எழுத்து இதழில் ‘காலச்சுவடு’ கண்ணன் உங்களுக்கு எதிராக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் ஏன் பதில் அளிக்கவில்லை. குறிப்பாக நீங்கள் காலச்சுவடில் வேலை செய்து கொண்டே பதிப்பகம் ஆரம்பித்தீர்கள், சென்னை அலுவலகத்தின் ஊழியர்களால் உங்களை சகித்துக் கொள்ள முடியவில்லை, ராஜினாமா செய்துவிட்டு வாபஸ் வாங்க முயற்சித்தீர்கள் என்றெலாம் அதில் குற்றம் சாட்டப்பட்டிருந்ததே...



நான் காலச்சுவடு பற்றியோ கண்ணன் பற்றியோ எப்போதுமே அவதூறாகப் பேச விரும்பியதில்லை. அதற்கு முக்கியமான காரணம் அவர் செய்கிற எதையும் நான் செய்யக்கூடாது என்கிற பிடிவாதம்தான். இந்த வித்தியாசம் இருக்கிற வரைதான் எனது செயல்பாடுகளுக்கு அர்த்தம் இருக்க முடியும். எல்லாவற்றையும்விட கண்ணனை ஏதாவது சொன்னால் சுந்தரராமசாமியின் ஆவி துன்புறுமே ! அதை நான் விரும்பவில்லை. நீங்கள் குறிப்பிடும் பேட்டியில் கண்ணன் ‘சிலர் பத்திரிகையின் பக்கங்களை மேன்ஷனாக பிரித்து வாடகைக்கு விடுவதாக’ ஒரு சிறந்த கருத்தை கூறியிருந்தார். இதைப் படித்து கோபமான ஒரு சிற்றிதழ் அன்பர் ‘விபச்சார விடுதி நடத்துவதைவிட மேன்ஷன் நடத்துவது தப்பிலையே’ என்றார். அவரை நான் வன்மையாக கண்டித்தேன்.



ஆனால் காலச்சுவடுக்கும் எனக்கும் இடையே உள்ள உறவைப் பற்றி கண்ணன் மிகுந்த தடுமாற்றத்துடன்தான் பதிவு செய்ய வேண்டியிருகிறது. அந்த மகத்தான வரலாற்றில் எனக்கு எந்த இடம் கொடுப்பது என்ற குழப்பம். இதே குழப்பம் கவிஞர் சல்மா விற்கும் அவரது மகத்தான வரலாற்றை எழுதும் போதெல்லாம் ஏற்படுவதை காண்கிறேன். நான் இதுபோன்ற மகத்தான வரலாறு களிலிருந்து என்னை துண்டித்துக் கொள்ளவே விரும்புகிறேன். நான் சுந்தரராமசாமியின் வாசகனாக அவரைப் போய் பார்த்தவன் என்ற அளவிலும் அவர்கள் வீட்டில் தந்த அவியலை விரும்பிச் சாப்பிட்டவன் என்ற அளவிலும் இந்த வரலாற்றை நான் சுருக்கிக் கொள்ள விரும்புகிறேன்



‘நீதான் காலச்சுவடில் இருந்தவனா?’ என்று யாராவது என்னை கேட்கும்போது எனக்கு மிகவும் பதட்டமாகி விடுகிறது. இல்லை அவர் காலச்சுவடில் பேக்கிங் Section ல் வேலை பார்த்தவர் என்று சொல்லி, கேட்டவரை கண்ணனின் அடியாட்கள் யாரவது அடிக்கப்போகிறார்கள் என்ற பதட்டம். ஒரு முறை தீராநதியில் என்னை பேட்டி எடுத்த போது பேட்டி எடுத்தவர் என்னை காலச்சுவடு ஆசிரியர் என்று குறிப்பிட்டு விட்டார். உடனே அதை மறுத்து தீராநதிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதேபோல Poetry International Web-ல் அம்பை என் கவிதைகளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து அளித்திருந்தார். அப்போது இந்த ஆள் காலச்சுவடு ஆசிரியராக வேலை பார்த்தான் என்று என்னைப் பற்றிய குறிப்பில் எழுதிவிட்டார். உடனே அங்கும் மின்னஞ்சல் பறந்தது. அந்தக் குறிப்பு திருத்தப்பட்டது. ரொம்ப நாள் காலச்சுவடில் ஆசிரியர்கள் : கண்ணன், மனுஷ்யபுத்திரன் என்றுதானே imprintல் இருந்தது என்று நான் ஜெராக்ஸ் காப்பி அனுப்பி நிரூபிக்கலாம். அது என்னுடைய இழிவிற்கு நானே வழங்கிக் கொள்ளும் சர்டிபிகேட் போல ஆகிவிடும்.

உண்மையில் காலச்சுவடு சம்பந்தமான எல்லா பெருமைகளையும் சிறுமைகளையும் கண்ணனுக்கே கொடுத்துவிடுகிறேன். அந்த சவத்தை அவர் எவ்வளவு தூரம் தூக்கிக் கொண்டு நடக்க முடியுமோ நடக்கட்டும். அது அவரது தலையெழுத்து. ‘காலச்சுவடு’ ஒவ்வொரு இதழிலும் ‘நான், நான்’ என தன்னை முன்னிறுத்தி அவர் எழுதும் பரிதாபகரமான எல்லா குறிப்புகளிலும் இந்த சவத்தின் சுமையை தாங்க முடியாத முனகல்தான் வெளிப்படுகிறது. ஒரு கதையையோ கவிதையையோ வாசித்தறிய முடியாத ஒரு படிப்பறிவற்ற ஆள் இரு இலக்கிய பத்திரிகையை நடத்த முடியும் என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் அவர். இது அவரைப் போன்ற பலருக்கும் தன்னம்பிக்கையை அளித்திருக்கிறது. பௌத்த அய்யனார் என்பவர் ஒரு ஆங்கிலப் பதிப்பகமும் பாரிஸ் ரிவ்யூ மாடலில் ஒரு பத்திரிகையும் ஆரம்பிக்கப் போவதாக கேள்விப்பட்டேன். கண்ணனின் சாதனைகள் இதற்கு எந்த வகையிலும் குறைந்தவை அல்ல.



அவருடனான கசப்புகளுக்கு பல காரணங்கள் உள்ளன. அவை ஒரு பொது அரங்கில் விவாதிக்க முடியாதவை. ஒருவருடைய நிழல்களை அறிவது என்பது நல்லதல்ல. நான் அவரே அச்சப்படும் அவரது நிழல்களை அறிந்து கொண்டிருந்தேன் என்பதுதான் பிரச்சினை. அதற்கு நான் சாட்சியமாகி விடுவேனோ என்று அவர் அஞ்சினார். அதற்காகவே அவர் என்னை அப்புறப்படுத்த விரும்பினார்.

ஆனால் இரண்டு விஷயங்களை குறிப்பிட வேண்டும். ‘தமிழ் இனி 2000’ மாநாட்டை கண்ணன் கையாண்ட விதம் அவர் எவ்வளவு அற்பமான நபர் என்பதை எல்லோருக்கும் புரிய வைத்தது. அந்த அவச்சொல்லிலிருந்து இன்று வரை காலச்சுவடினால் வெளியே வர முடிய வில்லை. சென்னையில் ஆரம்பத்தில் எனது வீடுதான் காலச்சுவடு அலுவலகமாக செயல்பட்டு வந்தது. ‘தமிழ் இனி 2000’ க்கு பணம் வர ஆரம்பிக்கப் போகிறது என்று தெரிந்ததும் பழைய கம்ப்யூட்டர்கள் விற்கும் ஒரு நிறுவனத்தை ‘தமிழ் இனி’ அலுவலகமாக பயன்படுத்த ஆரம்பித்தார். அது எனக்கு ஏன் என்று புரியவில்லை.



பண பரிவர்த்தனைகளுக்காக அரவிந்தன் என்பவர் திடீரென நியமிக்கப்பட்டார். இதெல்லாம் எனக்கு ஏன் என்று புரியவில்லை. ‘தமிழ் இனி 2000’ முழுக்க முழுக்க என்னுடைய யோசனை. ஆனால் அதன் ஒருங்கிணைப் பாளர்களாக கண்ணன் பெயரும் திடீரென வந்து சேர்ந்த சேரனின் பெயரும் மட்டும் இருந்தது. ஆனால் நாம் அந்த மாநாட்டிற்காக எவ்வளவு வேலை செய்தேன் என்பதை அதில் பங்கெடுத்த எழுத்தாளர்கள் அறிவார்கள். மாநாடு நடந்த ஹோட்டலில் கண்ணனின் அறையில் சிறிது நேரம் இருந்தேன். அப்போது வழக்கம்போல என்னை சந்திக்க யுவன் சந்திரசேகர் உள்ளிட்ட நண்பர்கள் வந்தார்கள். இங்கே கூட்டம் போடாதீர்கள் என்று என்னை கண்ணன் எச்சரித்தார். இதே போலத்தான் மாநாட்டுக்கு வந்த எண்ணற்ற எழுத்தாளர்கள் பல்வேறு விதங்களில் அவமதிக்கபட்டார்கள். எம்.ஏ.நுஃமான் ‘கண்ணனின் மனைவி என்னை உள்ளே விடமாட்டேன் என்கிறார்’ என வாசற்படியில் நின்று என்னிடம் வந்து குமுறியபோது அவரை கெஞ்சி சமாதானப் படுத்தி உள்ளே அழைத்துக் கொண்டு போனேன். அந்த் மாநாடு முடியும் முன்னரே மனம் கசந்து வெளியேறினேன்.



காலச்சுவடு சென்னை அலுவலகம் உலகத் தமிழ் இணைய இதழுக்காக ஸ்ரீராம் நிறுவனத்தால் வழங்கப்பட்டது. தழிழுக்காக அரிய பல காரியங்களை செய்துவரும் ஸ்ரீராம் நிறுவனம் மனமுவந்து பெரும் தொகையை அதற்காக செலவிட்டது. அதற்கு முன்பு காலச்சுவடில் ஏழு வருடம் எந்த ஊதியமும் இல்லாமல் பங்களித்து வந்த நான் உலகத் தமிழ் இணைய தளத்தில் ஆசியர் பொறுப்பு அளிக்க வேண்டும் என்று கோரினேன். அது மூர்க்கமாக நிராகரிக்கபட்டது. ‘எனக்கு எதற்கு பணம்?’ என்று கேட்டார் கண்ணன். நான் எந்த மனநல மருத்துவரை பார்க்க வேண்டும் என்று எனக்கு ஆலோசனை வழங்கினார். அவரது குடும்ப உறுப்பினர் ஒருவர் ‘ஹமீதுக்கு சரளமாக ஆங்கிலம் பேச வராது. பல இடங்களுக்குப் போக முடியாது’ என்று காரணம் கூறினார். பிறகு ‘உலகத் தமிழ் இணைய தள ஆலோசகர்’ என்ற பெயரில் எனக்கு ஒரு சிறிய தொகை மாதாமாதம் அளிக்கபட்டது. அந்த சமயத்தில் அரவிந்தன் உலகத் தமிழுக்காக சம்பளம் பெற்றுக் கொண்டே பிற இணைய தளங்களுக்கும் ‘தன்னார்வ நிருபர்’ வேலை பார்த்து வந்தார். அரவிந்தன் போன்ற ஒரு முட்டாளுடன் வேலை செய்வது எனக்கு மிகுந்த மனச் சோர்வு தரும் அனுபவமாக இருந்தது. சுதர்சன் கடையில் கணக்கு எழுதவேண்டிய ஒருவர் இங்கே ஏன் வந்து உட்கார்ந்திருக்கிறார் என எனக்கு தோன்றாத நாள் இல்லை.



அப்புறம் கண்ணன் இன்னும் இரண்டு விசுவாசிகளை கொண்டுவந்து அலுவலகத்தில் விட்டார். ஒருவர் இன்று பௌத்த அய்யனார் என்று வழங்கப்படும் அய்யனார். இன்னொருவர் சிபிச்செல்வன். இரண்டு பேரையுமே எனக்கு ரொம்ப பிடிக்கும். ஆனால் அது கவுண்டமணிக்கு செந்திலை பிடிப்பது போல. அவர்கள் இரண்டு பேரும் மிகவும் சீரியசாக நினைத்துக்கொண்டு செய்யும் காமெடிகள் அந்த நாளில் அரவிந்தன் என்ற நபர் உருவக்கிய மனச்சோர்விலிருந்து விடுபட பெரிதும் உதவியது. முக்கியமாக இரண்டு பேரையும் Civilize பண்ணுவதுதான் எனது முழுநேரப் பணியாக இருந்தது. சில சமயம் கவுண்டமணியின் அடி செந்தில் மேல் பலமாக விழுந்திருக்கலாம். அதற்காக இப்போது வருத்தப்படுகிறேன்.



நான் காலச்சுவடிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப் பட்டதன் உண்மையான காரணம் சுந்தரராமசாமி ‘சொல் புதிது’ இதழ் தொடர்பாக ஒரு நாற்பது பக்க அபத்தமான டாக்குமெண்டை காலச்சுவடில் பிரசுரிக்க விரும்பினார். அப்போது எனக்கும் ஜெய மோகனுக்கும் கடும் முரண்பாடுகள் நிலவிய சூழலில்கூட நான் அதை பிரசுரிக்க மறுத்தேன். இதுபோன்ற குப்பைகள் ஒரு வாசகனுக்கு தேவையற்றவை என்று கூறினேன். எப்படித் தாங்க முடியும்? அப்புறம் காலச்சுவடு பற்றி எதிர்மறையாக ஒரு குறிப்பு ‘இந்தியா டுடே’யில் வெளிவந்ததற்காக அதை எழுதிய செய்தி யாளரை முஸ்லீம் தீவிரவாதி என்று வர்ணித்து ஒரு கட்டுரை எழுதி கண்ணன் பிரசுரிக்கச் சொன்னார். முடியாது என்று மறுத்தேன். இவை காரணமாகவே காலச்சுவடிலிருந்து வெளியேற நிர்பந்திக்கப்பட்டேன். நான் காலச்சுவடின் முழு நேர ஊழியன் அல்ல. எனவே உயிர்மை பதிப்பகத்தை தொடங்கும் பூர்வாங்க வேலைகளை செய்துவிட்டு காலச்சுவடிலிருந்து வெளியேறினேன். அப்புறம் இந்த ராஜினாமா விவகாரம். நான் வெளியேறிய போது அப்போது காலச்சுவடிற்கு நெருக்கமாக இருந்த நண்பர் ரவிக்குமார் நான் வெளியே போகக்கூடாது என்று தனிப்பட்ட முறையில் கேட்டு க்கொண்டார். அதன் அடிப்படை யிலேயே அந்தக் கடித்தை அனுப்பினேன். பதிலுக்கு ‘அவரை பத்திரிகையில் சேர்க்க முடியாது. பதிப்பகத்தில் பிழை திருத்துனர் பணி ஏதாவது தரலாம்’ என்று சொல்லப்பட்டதாக அறிந்தேன். அதற்கான பதில்தான் உயிர்மையின் இந்த ஏழாண்டு செயல்பாடுகள். ‘உயிர் எழுத்து’ பேட்டியில் நான் வெளியே போனது மிகப்பெரிய விடுதலையாக இருந்தது என்று கண்ணன் குறிப்பிட்டிருக்கிறார். அது மிகவும் சரியானது. நான் காலச்சுவடின் தொந்தரவான மனசாட்சியாக இருந்தேன். மனசாட்சியிலிருந்து விடுபடுவதுதான் எல்லா கிரிமினல்களுக்கும் மிகப் பெரிய விடுதலை.



சமீபத்தில் உயிர் எழுத்து இதழில் கரிகாலன் காலச்சுவடும், உயிர்மையும் தமிழ் சிறு பத்திரிகை இயக்கத்தை அழிப்பதாக குற்றம் சாட்டியிருப்பது பற்றி...



அந்தக் குற்றச்சாட்டை ஆமோதிக்கிறேன். கரிகாலன், சுதீர் செந்தில் போன்றவர்கள் உருவாக்கிய மாபெரும் இயக்கம் அது. அதற்காக அவர்கள் எவ்வளவு ரத்தம் சிந்தியிருக்கிறார்கள். தமிழ் சிறு பத்திரிகையின் தியாக வரலாற்றின் கடைசி பெஞ்சில் கண்டிப்பாக அவர்களுக்கு ஒரு இடம் உண்டு. அழிவு வேலை செய்வதில் எப்போதுமே எனக்கு மிகுந்த உற்சாகம் உண்டு. அதனால் இந்த அழிவுப் பணிகள் மென்மேலும் தொடரும் ‘உயிர் எழுத்து’ இந்தக் கட்டுரையை வெளியிடுவதற்கு ஒரு முக்கியமான காரணம் உண்டு. அதன் ஆசிரியர் ஒரு பின்நவீனத்துவ பத்திரிகையாளர். இதுவரை சிற்றிதழ் இயக்கம் சார்ந்த அடிப்படைகளை அவர் வெற்றிகரமாக அடித்து தகர்த்து வருகிறார். மிகவும் சீரியஸான முகம் கொண்ட சிற்றிதழ் இயக்கத்தை கேளிக்கையின், கோமாளித்தனத்தின் பெரு வெளியாக மாற்றுவதில் அவரது பங்கு பிரதானமானது. பிரசுர வாய்ப்பைத் தவிர வேறு எந்த நிபந்தனைகளும் இல்லாத நமது எழுத்தாளர்களும் இந்த கோலாகலத்தில் உற்சாகமாக பங்கெடுத்து வருகிறார்கள். ஆனால் தனது பத்திரிகை ஏன் தொடர்ந்து வாசகர்களால் நிராகரிக்கபடுகிறது என்பதை அவரால் கண்டுபிடிக்க முடிவில்லை. காலச்சுவடும், உயிர்மையும் இருப்பதுதான் அதற்குக் காரணம் என்று அவரது குழந்தை உள்ளம் யோசிக்கிறது. இரண்டையும் காலி பண்ணிவிட்டால் அப்புறம் உயிர் எழுத்துதானே. தி.மு.கவும், அ.தி.மு.கவும் இல்லாவிட்டால் ம.தி.மு.க.தான் ஆட்சிக்கு வரும் என்று வைகோ யோசிக்கலாம். ஆனால் எல்லோருக்கும் தெரியும் விஜயகாந்த்தான் வருவார் என்று. தமிழ் சிறு பத்திரிகை சூழலில் உயிர் எழுத்து, ம.தி.மு.க என்றால் விஜயகாந்த் யார் என்று உங்களுக்கே தெரியும்.

Thanjai Prakash Short story.



மேபல் - தஞ்சை பிரகாஷ்

வலையேற்றியது: "அழியாச் சுடர்கள்" ராம்
நேரம்: 7:15 AM
வகை: கதைகள், தஞ்சை பிரகாஷ்



மேபலுக்கு ரொம்ப பயம். அப்பான்னாலே பயம். அவளுக்கு அப்பா மட்டும்தான் மிச்சம். அம்மா மோனத்திலிருக்கிறாள். கர்த்தரின் மடியில் அம்மா இருக்கிறதை மேபல் பல தடவையும் கனவில் பார்த்திருக்கிறாள். அம்மா ரொம்ப அழகு. சிவப்பு வெள்ளப் பட்டுடுத்தி சம்மனசு மாதிரி கர்த்தரோட மடியில் உட்கார்ந்திருக்கிறதை யாரும் நம்ப மாட்டார்கள். அப்பா கறுப்பு! முரடு. திமுசு மாதிரி, புளியமரத்து அடி மரம் மாதிரி கண்டு முண்டா இருக்கிற அப்பாவெ மேபல் குட்டிக்கு எப்படிப் பிடிக்குமாம்? கொஞ்சம்கூடச் சிரிக்காத மனுஷன் உண்டா? மேபலுக்குத் தெரியுமே அப்பா சிரித்துப் பார்த்ததேயில்லை. சர்ச்சுக்குப் போய் வரும்போது எல்லார் முகமும் திருப்தியாக இருக்கும். அப்பக்கூட அவள் அப்பாவை நிமிர்ந்து பார்க்க முடியாமல்தான் வருவாள். அப்பா அம்மாவை அடிப்பதைப் பார்த்திருக்கிறாள். மேபல், அண்ணனை, அக்காளை, பெரிய அத்தையைக் கூட அப்பா அடிப்பார். எல்லோருமே ரொம்பப் பயப்படுவார்கள். மேபல் கடைக்குட்டி. இயேசுநாதர் கையில் இருக்கும் ஆட்டுக்குட்டி மாதிரி. ஏதாவது தப்பு செய்துவிட்டால், அவளை அள்ளிக்கொண்டு மறைக்கும் அம்மா. திட்டு வாங்கிக் கொள்ள அப்பாவிடம் போகும் அண்ணன் ஃப்ரெடி. ஏதாவது தள்ளி உடைத்துவிட்டால் பாய்ந்து ஒளித்து வைத்து மேபலுக்குப் பதிலாக அப்பாவின் பலிபீடம் போகும் அக்கா நான்ஸினி. மேபலை இத்தனை பேரும் சேர்ந்து காப்பாற்றினாலும் அப்பாவின் அடி உதை நிச்சயம்.



ஞாயிற்றுக்கிழமை மேபலுக்கு நரகம். அப்பா ஆபிஸ் போகாத நாள். குடிப்பார். யாரும் சத்தம் போடக்கூடாது. மூச்சு விடக்கூடாது. காலையிலேயே குளித்து ஸூட் போட்டு டை கட்டி கோவிலுக்குப் புறப்பட்டுவிடுவார். அம்மா ஜோரான ஆப்பம் சுடுகிறாள். மேபலுக்கு ஆப்பம்ன்னா ரொம்ப இஷ்டம். கள் நுரை போல உப்பிய பஞ்சு பஞ்சாய் மெதுமெதுக்கும் ஆப்பம். அதையும் ஒரு நாளும் நிம்மதியாய்ச் சாப்பிட விடமாட்டார் அப்பா.



மேபலுக்கு அப்பா இஷ்டம் நிறைய, தஞ்சாவூர் மிஷன் மேட்டுத்தெருவில் வேறு யாருமே அப்பா மாதிரி ஆம்பிளை கிடையாது. பெண்கள் பார்த்தால் கண்களை எடுக்காமல் அப்பாவைப் பார்ப்பதை மேபல் வியப்பாகப் பார்த்திருக்கிறாள். ரொம்ப நாளாய் ஆப்பம் சாப்பிட எல்லாருடன் டைனிங் டேபிளில் உட்காரமாட்டாள். மேபலுக்கு நாலு ஆப்பம் வேணும். நிறைய தேங்காய்ப் பால் வேண்டும். நாக்கைத் தட்டிச் சப்புக் கொட்டி ருசித்து நக்கிச் சாப்பிட வேணுமே. அப்ப கொலுவீற்றிருக்கும் சாப்பாட்டு மேஜையில் எல்லாருடன் உட்கார்ந்தால் அப்பா கத்துவார். நக்கக் கூடாது; நாக்கைத் தட்டக்கூடாது. அசிங்கம்! டேபிளில் சாப்பிட ‘மானர்ஸ்’ வேண்டும். மிருகம் மாதிரி நாக்கைச் சொடுக்கி லப் லப் என்று விழுங்கிச் சப்தம் எழுப்பக் கூடாதாம். இதற்காக மேபல் குளிக்கிற அறையிலேயோ உடுத்துகிற சாக்கிலோ லெட்ரினிலோ நேரத்தைக் கடத்தி எல்லாருக்கும் பின்னால் லேட்டாக டேபிளுக்கு வருவாள். அப்பாவை ரொம்பப் பிடிக்கும். கட்டிப்பிடித்து அப்பாவை முத்தங்கொஞ்சி சிரிப்புத் தரவேண்டும் என்று மேபலுக்கு ஆசைதான். கூடாதாம் எச்சில் தப்பாம். கிறிஸ்தவர்கள் கிட்டதான் இந்த அசிங்கம் இருக்காம். வெள்ளைக்காரர்கள் வழியா இந்திய கிறிஸ்தவர்கள் படித்த கெட்ட வழக்கமாம். அப்பா அகராதி தனி. அவர் மட்டும் ராத்திரியில் பெட்ரூமுக்குப் போகும்போது எல்லாருக்கும் முன்னாலே கூட அம்மாவையும் அண்ணனையும் முத்தி விடுவது எதில் சேர்த்தி? அக்காவுக்கும் சின்னக்காவுக்கும் முத்தா தருவதில்லை! என்ன யோக்யதை இது. சர்ச் பக்கத்தில் இருந்ததால் இரண்டாம் மணி அடித்த பின்னர்தான் வீட்டைவிட்டுக் கிளம்ப வேண்டும். எரிச்சலுடன் கத்திக்கொண்டேயிருப்பார். ஒன்று அம்மா, இல்லை மேபல், இல்லாவிட்டால் அண்னன் ஃப்ரெடி. சின்னக்கா எப்போதும் பதுங்கிக்கொண்டே பின்னால் வருவாள். ஆனி எப்போதும் திட்டு வாங்கி உதை வாங்குகிறதில் புலி மூத்தவள். நேர் எதிர் சின்னக்கா மாகி! பதுங்கல் புலி! மேபல் தூரத்தில் வருவாள். ஆப்பம் ருசித்துச் சாப்பிடும்போதே வாசலில் அப்பா கூப்பாடு “மூணாம் மணியடிச்சாச்சு! ஏ கழுதெ! சீக்கிரம் உடுத்திட்டு வாடீ! நாங்க முன்னாலே போறோம்!” அப்பாவின் விஸ்கி மூச்சு ரூமுக்குள் வீசுகிற மாதிரி இருக்கும். கோவிலில் “எல்லாம் ஏசுவே எனக்கெல்லாம் ஏசுவே” ஞானப்பாட்டின் கோரஸ் கொயர் பாடகர்களுடைய கூட்டமான குரலில் இங்கு கேட்கும். திண்ணைக்கு ஓடிவந்து பார்க்கும் போதே அப்பாவுடன் குடும்பமே புதுச்சலவை உடுத்தி கோவிலை நோக்கி போகும் காட்சி மேபலுக்கு இனந்தெரியாத இன்பமாய் இருக்கும். அம்மா பட்டுப்புடவையில் தான் என்ன அழகாயிருக்கிறார்கள். குரலே எழுப்பாமல் அப்பாவுடன் குடும்பம் நடத்தும் ஆச்சர்யம் மேபலுக்குப் புரியாது. ஃப்ரெடி அண்ணனின் வெள்ளை பாண்ட் ஸூட் எத்தனை அருமையாய் இருக்கிறது. அம்மா சாயல் சிவப்பு பிள்ளை அண்ணன். அக்கா ஆனிரோஸ் அம்மாவை உரித்தெடுத்த வடிவு. சின்னக்கா மாக்னஸ் கூட அம்மா பிள்ளைதான். அதெப்படி? அவர்கள் எல்லாரும் அழகாய் அம்மா மாதிரி - மேபல் குட்டி மட்டும் எப்படி அம்மாவும் அப்பாவும் சேர்ந்த மாதிரி மங்கலானாள்? மேபல் கறுப்பில்லை - அப்பா சிவப்பா? புது நிறம்! சிவப்பும் கறுப்புமல்லாத பொன்னிறம், கண்ணாடியில் பார்க்கும் போதெல்லாம் கறுப்பு மாதிரி இருக்கும் வருத்தமாக. அம்மா திட்டுவார்கள் எப்போதும் கண்ணாடி பாத்துக்கிட்டே இருக்கப்டாதாம். மேபலை வீட்டில் கருப்பு குட்டீன்னுதான் கூப்பிடுவார்கள். அப்பா மட்டும்தான் மேபல்! அம்மா சாவு எதிர்பாராமல் நடந்தது. மேபலுக்குத் தெரியாது. தூங்கிப்போன நேரம். கண்விழித்துப் பார்த்தபோது அம்மா தூங்குவதுபோல் சம்மனசாகியிருந்தார்கள். பயந்து பயந்து பயந்தே ஹார்ட் அட்டாக் வந்திருக்க வேணும். அப்போது மேபலுக்கு வயசு பதினைந்து. இப்போது பத்து வருஷம் ஆகிவிட்டது. அம்மா இல்லாத பத்து வருடங்கள். பெரியக்கா ஆனி ரோஸ் கல்யாணம் ஆகி டெல்லி போய்விட்டாள். சின்னக்கா மாக்னஸ் ஆலமரத் தெருவிலிருந்த தாஸில்தார் மகன் ரூபனை லவ் பண்ணிவிட்டாள். மேபலுக்குக் கூட ரூபனைப் பிடிக்காது. கோவிலில் ஜெபம் நடந்துகொண்டிருக்கும் போது புளிய மரத்தடியில் சின்னக்காவை நிறுத்தி பேசிக்கொண்டிருப்பான். அப்பாவுக்குத் தெரிந்தால் பயத்தில் உடல் நடுங்கும். ரூபனுக்கும் மாக்னஸுக்கும் நல்ல பொருத்தம். ஏனோ மேபலுக்கு அவனைப் பிடிக்கவில்லை. அப்பா மாதிரி ரூபன் காலிப் பயலாம். வேலை வெட்டியில்லாத ராஸ்கலாம். அப்பா சொல்வார். மேபலுக்கு அடிவயிற்றை கலக்கும். சின்னக்கா மாக்னஸ் கொடி மாதிரி இருப்பாள். குளிக்கும்போதெல்லாம் மாக்னஸோட உடம்பு மேபலுக்கு ஆச்சர்யமாயிருக்கும். அம்மா, அம்மா! அப்படியே அம்மா மாதிரி. ஆனா வலுவா செழிப்பா எடுப்பா இருப்பா, மாக்னஸ் ரூபனோட பேசும்போது பூத்துப்போன மல்லிகை மரம் மாதிரி ஆச்சர்யமான அழகோட மாக்னஸைப் பார்த்தாலே தேவதை மாதிரியிருப்பா. இந்த உடம்பை அப்பா துவைத்து எடுத்து ரத்தவிளாராக்கி வீட்டுக்குள் அடைத்தபோது இரவெல்லாம் முனகிக் கிடந்தது மாக்னஸ் மட்டுமில்லை, மேபலும்தான். மாக்னஸை அடித்துத் துவைத்துக் கொண்டிருந்த போது இடையில் மேபலையும் பிடித்து நாலு அறை வைத்தார் அப்பா, ரொம்ப திருப்தியாய் இருந்தது மேபலுக்கு. ரூபன் தேடித்தேடி வந்தான். ஒருநாள் வீட்டு வாசலிலேயே லாவிப் பிடித்து விட்டார் அப்பா. ரூபன் ரொம்ப தைரியம். அவனையும் அப்பா அடித்து நொறுக்கியதைத் தெருவே வேடிக்கை பார்த்தது. யாரும் தடுக்கவில்லை. அவர்கள் வீட்டிலும் பெண்கள் இருந்தார்களாம். ரூபன் பொறுக்கியாம். மாக்னஸ் மயிரைப் பிடித்துச் சுழற்றி அடித்தது போலவே ரூபனின் சுருள் முடியைப் பிடித்து அடிக்க அப்பாவுக்குக் கூச்சமேயில்லை. அம்மா இல்லை இதெல்லாம் பார்க்க. மேபல் கன்றிச் சிவந்த அடிபட்ட கன்னத்துடன் புளித்த நாக்குடன் கண்ணாடியில் பார்த்தபோது உதடு கிழிந்திருந்தது தெரிந்தது. ரூபன் செய்த தப்பு அப்பா அடித்தபோது விடாமல் திருப்பியடித்ததுதான். அப்பாவின் உக்கிரப்பிடியில் என்ன செய்ய முடியும்? மேபல் கண்களை இறுக மூடிக்கொண்டாள். பளார் பளாரென்று அறை விழும் சப்தம். நெஞ்சு படபடவென்று அடித்துக் கொண்டது. ஒரு மாதம் வீட்டுக்குள் யாரும் பேச முடியவில்லை. மாக்னஸ் ரூமிலிருந்து வெளியே வரவேமாட்டாள். அப்பா விஸ்கி பாட்டிலும் சோடாவுடனும் காமிரா அறையில் அல்லது ஹாலில் உட்கார்ந்திருப்பார். அண்ணன் பெரும்பாலும் வெளியில் கத்திக் கொண்டிருக்கும். ராத்திரி பத்து மணிக்கு மேல்தான் வருகிறதே. விடிந்தால் எழுந்து எங்கோ போய்விடும். சின்னத்தை மார்க்கெட் போய் காய்கறி வாங்கி வரும்போது வழியில் அண்ணனைப் பார்த்து அழுது.... பேசி... “உங்கப்பன் தாயழி இப்ப ஊட்டையே ரெண்டு படுத்தீட்டான்டா பாவீ.. நீயாவது ஒழுங்கா வேலை கண்ணிக்கிப் போயி உருப்பட்டா நானு ஏண்டா இவங்கிட்ட கெடந்து நெக்கிழயிறேன்”னு ஆரம்பித்து அப்பாவை நேரில் திட்ட முடியாத கூப்பாட்டையெல்லாம் ரோட்டில் அண்ணன் ஃப்ரெடியிடம் கொட்டி அழுது மூக்கைச் சிந்தி எறிந்துவிட்டு வீட்டுக்குள் வரும் சின்னத்தை. மேபலைப் பார்த்ததும் கேட்கும் முதல் கேள்வி “ங்கொப்பன் ஆபீஸ் போய்ட்டானா இருக்கானம்மா?” “போகல்லெத்தை. உள்ளதான் இருக்காங்க அப்பா!” என்று மேபல் சொன்னால் போதும். பதுங்கி வாசல் வழியாகப் போகாமல் காம்பவுண்டைச் சுற்றிக் கொல்லைப்பக்கமாகப் போவாள் சின்னத்தை. மேபல் ரகசியமாய்க் கொல்லைக் கதவைத் திறந்துவிட வேண்டும்.



அக்கா ஆனிரோஸ் கல்யாணமும் ரகளையாகத்தான் நடந்தது. சொன்ன டௌரிப்பணம் தரலை. இருபத்தைந்தாயிரம். வாழைப்படம் மட்டும் வெள்ளித் தாம்பாளத்தில் வைத்து இருபதாயிரம் ரூபாய் மட்டும் வைத்தார் அப்பா. மாப்பிள்ளை விட்டுக்காரங்க, “ஜேவியரு, பேசினது இருவத்தஞ்சி. தட்ல இருக்கிறது இருவது. பொண்ணு ரெயிலேறனுமா ஊட்லியே வெச்சிக்கிறாயா பொட்டணம் கட்டி” கேவலமா பேசி அப்பா கம்பை எடுத்துக்கிட்டு பாய பந்தல்லியே ஏக கலாட்டா. அப்பவே ரூபன் அதே பந்தல்ல நின்னவன்தான். அப்பவே மாக்னஸ் குட்டியோட பேச்சு ஆரமிச்சாச்சு. மூணு மாசம் கல்யாணப்பொண்ணு ஆனிரோஸ் புருஷன் வீட்டுக்குப் போகலெ. மூணு மாசமும் அப்பாகிட்ட அப்பப்ப அந்த எரிச்சல் கூட அடிவாங்கினா. அத்தைதான் காப்பாத்துவாங்க. அப்பாலே எல்லாரும் திட்டுவாங்க நேர இல்ல பின்னால. நேர யாருமே பேச முடியாது. அவன் கெடக்கான் முசுறு. வாய் கொழுத்தவன் அப்டீன்னு மிஷன் தெருவு பூராவும் சொல்வாங்க. ஆறுமாசம் ஆனப்புறம்தான் ஆனிரோஸெ ஹஸ்பெண்ட் வீட்டுக்கு அனுப்பி வெச்சார். செலவு பத்தாயிரம் சமாதானமெல்லாம் கெடையாது. ஐயாயிரம் குடுக்க வேண்டிய எடத்ல பத்தாயிரமா விட்டெறிஞ்சுட்டு “இவ இனிமே அங்க வரப்படாது இதோட சரி” என்று கத்திவிட்டு வந்தார். கூடப்போன மேபலுக்குத்தான் நடுக்கல். எங்கே திரும்பியும் அக்கா ‘வாழ’ மாட்டாளோ என்று. ஆனிரோஸ் வரவேயில்லை. அக்கா பேருதான் மேபலுக்குப் பத்து வருஷம் ஞாபகம்.



மேபல் வளர்ந்தது யாருக்கும் தெரியாமல் போச்சு. கடக்குட்டியா பொறந்தாலே கஷ்டம். எல்லாருக்கும் ஏவல், எல்லாருக்கும் எளப்பம், ஏ குட்டி தண்ணி கொண்டா, காலெப்புடி, ஏய்... எல்லாருக்கும் ஏதாவது உபதேசம். நிறம் செத்த கொறச்சல்தான். இல்லன்னு சொல்ல முடியுமா? ஆளு உடம்பு அப்பம் மாதிரி கைகால் எல்லாம் அளவா வலுவா செதுக்கி எடுத்த மாதிரி கொஞ்சம் கொஞ்சமா பூசிப்பூசிப் பண்ணின மெழுகுப் பொம்மை மாதிரி. திடீர்னு எப்படி ‘பளிச்சினு” ஆகிப்போய்ட்டா? எல்லாருக்குமே அது ஞாபகமில்லே. அப்பாகூட இப்ப ஏதோ கூப்பிட்டு நிறுத்திப் பேசுறார். தெருவு பெரிய மனுஷங்க குட்டீன்னு கூப்புட்றதில்லெ. அப்பா அதிகமா திட்ற வேலெ வெச்சுக்கிறதில்லை. ஆனா சின்னத்தை மட்டும் கெட்ட வார்த்தை சொல்லித் திட்றாங்க. மேபலுக்கு உடம்பு பெரிய ஆச்சர்யமா இருக்கு. அண்ணன் பார்வெ கூட மாறிப் போயிருக்கு. மாசா மாசம் உடம்பே வற்றி, திரும்பியும் பூக்கிற மாதிரி வியர்வை கூட ஒரு நெடி, சுயமாவே மணக்கிற மாதிரி. ராத்திரியெல்லாம் உடம்புக்குள்ளே தேனீ ஒண்ணு குடைஞ்சு தேன் உறியிற மாதிரி உள்ளுக்குள்ளே அனல் படர்ற சுகம். யாருகிட்ட சொல்ல முடியும். புதுசு புதுசா பாவாடை தாவணி எல்லாம் போயி பெரிசு பெரிசா பட்டு ஜரின், கோட்டா வாயில், விமல், அமெரிக்கன் டிஷ்யூ, ஜப்பான் என்று புதுப்புது சேலைகள் வந்து சுற்றிக் கொண்டன. மேபல் கேட்காமலேயே அப்பாவின் நெருக்கம் ஜாஸ்தி. பணம் கொண்டு வந்து கொடுப்பதே அவள்கிட்டெதான். ஏதும் வேணுமா? அப்பாவுக்கு மேபல்தான் வேணும். காலையில எழுப்புறப்பக்கூட சின்னத்தை அப்பா கிட்ட வரப்படாது. வீட்டுக்குள் நுழையும்போதே ‘மேபல்’ங்கிற அப்பா அழைப்பு இனிக்கும். இதே மாதிரிதான் ஆனி அக்காவையும் மாக்னஸ் சின்னக்காவையும் இனிக் கடிச்சிருப்பாரோ இந்த அப்பா. மேபலுக்கு இந்த இனிப்பும் பயமாய்த்தான் இருக்கும். சின்னக்குட்டியாய் இருந்தப்போ இந்த அப்பா நெருக்கம் பிடித்தால் கூட கிடைத்ததில்லை. மேபலுக்கு வயசு பதினெட்டு ஆனப்போதான் அப்பா நெருக்கமும் அத்தையின் கெட்ட வார்த்தைகளும் கிடைக்க ஆரம்பித்தது. ஆச்சர்யம், “வாசல்லியே போயி ஏண்டி நிக்கிறே தேவுடியா? ஒன்னெ குளியில வக்ய. என்னடி பேசிட்டிருப்பே இருட்ல? உங்கப்பனாத்தான் இருக்கட்டுமேடி. ஆம்பளெல்லெ அவன். ஏந் தம்பித்தான் பெருசாய்டே, நெருப்புமாறி இருக்கணும்டீ. மாரெ நிமித்திட்டு நடக்காதே, ஆனிமுண்டெயும் அந்தத் தத்தாரி நாயி மாக்னஸும் இப்படிதான் அலஞ்சு குட்டிச் செவுரு ஆனாவள்டீ! நீயும் அழிஞ்சு போய்டாதே!” என்பாள் சின்னத்தே. அப்பா கூப்பிடும்போது அவர் ரூமுக்குள் போகும்போது விஸ்கி நெடி ரொம்ப இன்பமாயிருக்கும். சின்னத்தெ கிட்ட சொல்ல முடியாது. திட்டுவாங்க! பொட்டெச்சிக்கி இது எல்லாம் சந்தோஷம் வரப்படாதுடீ நாயெம்பாங்க. அப்பா கோல்ட் ஃப்ளேக் சிகரெட் குடிக்கும்போதும் ரம்யமான புகை மணம்.



ரூம் முழுசும் புஸ்தகங்கள், அப்பா படிச்சது. சுவரில் தொங்கும் மான் தலைகள் கொம்போடு பயமா இருக்கும். கோட் ஸ்டாண்ட் ஒன்றில் கோட்டுகள் தொங்கும். நரையும் கறுப்புமாய் அளவில் கலந்த முரட்டு முடிச்சுருள்கள் பளபளக்க அற்புதமாய் இளமை சொல்லும். இதுவரைக்கும் அப்பனைப் பார்க்காத செருக்கி அப்பா அப்பான்னு கொழைறாளே என்பார்கள் சின்னத்தை. மேபலுக்கும் இப்போது அதே சந்தேகம் உண்டு. அண்ணன் உட்பட எல்லா ஆம்பளையும் தேவையில்லாமெ கொழையிறது ஏன்? “ஏம்பா குடிக்கறீங்க?”ன்னு கேக்கனும்ன்னு ஆசைதான். கேக்க முடியாது. “மேபல்குட்டி அந்த பீர் கிளாஸ்ல பாதிக்கி கொஞ்சம் அதிகமா விஸ்க்கி ஊத்து” - “சோடாவும் வேணுமா?” - ஒரு ரவுண்ட் ஆனது - அப்பா ஆள் வேறயாகிக் கொண்டிருந்தார். பயம் அடிவயிற்றில், நகங்கள் பிறாண்ட புலி உலுக்கியது மேபலுக்கு. அப்பா ஆம்பளைன்னு சொன்னாங்களே சின்னத்தை - ஆம்பளையா? மேபல் பயத்தில் நடுங்கினாள். வியர்த்து பளபளத்த பயில்வான் உடம்போட விஸ்கி நெடியோடே சிகரெட் வாசனை மீறி அப்பாவை அந்த மங்கல் வெளிச்சத்தில் பயந்தாள் மேபல். “உங்கண்ணன் வீட்டுக்கு வர்றானா? இல்லெ ராத்திரிலேயும் ஊர்தான் சுத்தீட்டிருக்கானா? ஏம்மா மேபல்? வந்தா நான் பாக்கணும்ன்னு சொன்னேன்னு சொல்றியா?” அதே கரகரத்த குரல். குடியில் நெறிந்த மனசு! ஏன் இது? இவரையா ஆம்பளைன்னாங்க சின்னத்தை! ச்சீ! மேபலுக்கு இன்னும் புரியத்தான் இல்லை. அப்பா ஏன் இப்படி இருக்கணும்? ஆனாலும் அப்பாவெ ரொம்பப் பிடிக்கிறது. அவர் முரட்டுத்தனம் இப்ப இப்ப ஆச்சரியமா ஆனந்தமாயிருக்கு. இப்போவெல்லாம் அப்பா குளிச்சிட்டு வந்தா மேபல்தான் தலை துவட்டிவிடணும். பவுடர் கூட போட்டுவிடணும்! அண்ணன் ஃப்ரெடி எம்மெஸ்ஸி முடிச்சாச்சு. கிளாஸ் வாங்காததுனால வேலெ கிடைக்க மாட்டேங்குது! பாவம். அப்பா எப்போதும் போலத் திட்டித் தீக்கணும்! மேபல் சொல்லலே! கலெக்டர் ஆபிஸ்ல ஒரு ஸெக்‌ஷன் ஆபீஸ் அப்பா! ஜீப் தனிய்யா உண்டு. கலெக்டரோடயே சுத்தி அலையிற வேலை. ராத்திரிதான் வருவார். வந்ததும் மேபல்தான் வேணும் சாப்பாடு பரிமாற! சங்கதி பேச!



இப்ப பயம் ஜாஸ்த்தி மேபலுக்கு! சின்னத்தையோட நோட்டம் ஜாஸ்த்தியாப் போச்சு! ரூபன் வந்து காம்பவுண்ட் அந்தப் பக்கம் நின்னு கூப்புட்றதும் ஜாஸ்த்தியாத்தான் போச்சு. ரூபன் பழக்கம் பதினைஞ்சு வருஷம். அப்பா அடிச்சு நொறுக்கி அள்ளினாரே பத்து வருஷம். அப்பா பத்து வருஷம் ஓடிப்போச்சு! அதுக்கப்புறம் மாக்னஸ்ஸெ வலுக்கட்டாயமா அமுக்கி நிறுத்தி ஸ்டேட்ஸ் மாப்பிளை, ஒரு அமெரிக்கன் கிராஜ்வெட் - ‘லாஸ்ஸரஸ் மாணிக்கம்’ சொந்தமா அமெரிக்காவுல எலக்ட்ரானிக்ஸ் பார்ட் கம்பனி இருக்கு! பணம்! தடபுடலா கல்யாணமும் பண்ணி - ஊருக்குப் போகும்போது உள் அறையில கதறி அழுதாளே அவள் மாக்னஸ் சின்னக்கா! நெனைச்சாலே பயமும் எரிச்சலும் இப்பக்கூட மேபலுக்குத் தொண்டையடைக்கும். ரூபன் அடிபட்டு ஆஸ்பத்திரியில கிடந்த சங்கதி அப்பறம்தான் வெளிய தெரிஞ்சது! அதுகூட அப்பா பண்ணின வேலைன்னுதான் சொன்னாங்க. மேபலுக்கும் கேட்கப் பயம். ரூபன் மேபலைச் சந்திக்க ஆரமிச்சது பீட்டர் ஸ்கூல் க்ரவுண்டுல.



காலை நேரம் இப்பவெல்லாம் மேபல் தினமும் சர்ச் போறா! அழ நல்ல இடம் அதானே! யாரும் கேட்க மாட்டாங்க! ஜீஸஸ்! இதெல்லாம் ஏன் நடக்குது? அப்பா ஏன் இப்படி கல்நெஞ்சா இருக்கணும்? எங்களுக்கு மோட்சமேயில்லையா? கதறி அழமுடியாது. ஆனா அழுது கொட்டலாம். கிறிஸ்த்தவப் பொண்ணுக்கு இது ஒரு வசதி. ஜெபம் பண்றேன்னு அழுது கொட்டினா யாரும் கண்டுக்க மாட்டாங்க. பெரிய்ய ப்ளே க்ரவுண்ட குறுக்க கடந்து சர்ச்சுக்கு போக முடியும். ஏழுமணி சர்வீசுக்கு யாரும் வரமாட்டாங்க! இப்போ சர்ச்சுக்கே யாரும் அதிகமா வர்றதில்லே. வசதிதானே! மேபல்! அவளுக்கு இப்ப யார்? பயங்கரம்! அவளுக்கே புரியல. எப்படிப் புரியும். மாக்னஸ் சின்னக்காவுக்குப் புரிஞ்சுதா? பணிஞ்சு போயே குனிஞ்சு போன ஆனி அக்காவுக்கு தெர்ஞ்சுதா? வேலையில்லாமெத் திரிஞ்சு கஞ்சா நெடியோட ராத்திரித் திருடன் மாதிரி வர்றானே அண்ணன் ஃப்ரெட்ரிக்! அவனுக்குத்தான் புரியுமா? எல்லாருக்கும் அவங்கவங்களுக்கு ஏதாவது துணை இருக்கு. அப்பா குடிக்கிறார். என்ன தப்பு? சின்னத்தைக்குத் தெரியுமா? சொந்தத் தம்பியெ கீழபோட்டு மிதிச்சு அவர் நிழல்ல இருந்துகிட்டு அவர் உசிரை வாங்குறாங்க! மேபல் மட்டும் கோவில்ல அழுது தீக்குறது எதுக்கு? அவளுக்கே தெரியாதே! அதுக்குப் பேர்தான் ஜெபம்! அவளுக்குத் துணை ரூபன்! எப்போதும் இது சாத்தியமில்லேன்னு அவளுக்குத் தெரியும். ரூபன் அப்பாவுக்குப் பகைன்னு தெரியாதா? தெரியும். ஆனா ரூபன் யார்ன்னு மேபலுக்கு இப்பதான் தெரியும். ரூபன் அவளோட சின்னக்கா மாக்னஸ்ஸின் லவ்வர். ஆரம்பம் என்னமோ இதுதான். ஆனா... இப்ப மேபல் அவனோட லவ்! இதுதான் மேபலோட பயம்! ரூபன் மாக்னஸ் கல்யாணம் தடைப்பட்டதே, மேபல் ரூபன் கிட்ட விழுந்து போனதுக்கான காரணம்! காலை ஏழு மணி திருவிருந்து ஆராதனை நற்கருணையில் சேர்ந்து தினமும் அழுது புலம்பி விட்டு வருவதற்குமே இதுதான் காரணம். மேபலுக்கு ஆல்ட்டரியில் முழங்கால் படியிட்டு, “யேசுவே! இந்தப் பாத்திரத்தை என்னிடமிருந்து நீக்கி என்னை உம்மிடம் ஏத்துக் கொள்ளும் கர்த்தாவே! ரூபனை என் கண்களிலிருந்து மறையும் தேவனே! நான் ரூபனிடமிருந்து தப்ப வழி காட்டும் ஆண்டவரே!” என்று கதறி அழுது ஜெபம் செய்வாள் மேபல். டாண்டாண்டாண் என்ற மணியோசையுடன் தேவ சமூகத்து அப்பத்தை திருவிருந்தாய் அவள் கையில் இடுவார் பாதிரியார். ஏசுவின் ரத்தமாய் திராட்சை ரசமும் வெள்ளிக்கிண்ணத்தில் அவள் உதடுகளருகே பாதிரியார் கொண்டு வந்து வைக்க - கண்களில் நீர்வழிய அதனை அருந்தி சுத்தியும் சுகமும் ஆவாள் மேபல். கோவில் ஆராதனை முடிந்து அவள் வெளியே வரும் போது மைதானம் முழுவதும் பனியால் நனைந்திருக்கும். புல் நுனியெல்லாம் பனித்துளி காலை வெயிலில் மினுக்கும். மைதானத்தில் ஏறத்தாழ ஒரு பர்லாங்கு தூரம் தள்ளிக் குட்டைச்சுவர் ஒன்று. பழைய காலத்துக் கைப்பிடிச் சுவர். அதன் மேல் உட்கார்ந்திருப்பது யார்? ரூபன்! திரும்பிச் சுற்றிப் போகும் தார்ரோடு வழி நடக்கலாமா முடியாது. ரூபனுக்கு வயசு முப்பத்தேழு. ஒரு காலத்தில் நன்றாகப் படித்து ஓடியாடி விளையாடி அற்புதமான இளமை கொண்டிருந்தவன். மிஷன் தெருவிலேயே அவனைக் கண்டு மயங்காத பெண் யாரும் இல்லை. மாக்னஸ்ஸை அவளது சந்தோஷமாய் ரூபனைத் தரிசித்தவள் மேபல். துள்ளித்திரிந்தாள். அப்போதெல்லாம் மாக்னஸ் ரூபனைப் பார்க்கப் போவது எல்லாவற்றையும் அப்பாவிடம் காட்டிக் கொடுக்கிற வேலையைப் பதிமூணு வயதுக் குட்டி மேபல்தான் செய்வாள். அப்பாவின் பிடியில் மாக்னஸ் சிக்கியதே மேபலால்தான். நிஜமாகவே அக்காவை இந்தக் காலிப்பயல் கெடுத்து விடுவானாமே! ரூபன் வந்து கோவிலில் மாக்னஸ் சின்னக்காவுக்காக நின்றதும் உடனே மேபல் ஓடிப்போய் அப்பாவிடம் சொல்வாள். அக்காவையும் திட்டுவாள். சின்னத்தையிடமும் காட்டிக் கொடுப்பாள். ரூபனும் மாக்னஸும் அகப்படுவார்கள். மின்னல் வேகத்தில் ரூபன் தப்பி மறைவான்.



அப்படியிருந்தும் அப்பாவிடம் அடி வாங்கிச் சுருளும் மாக்னஸ் சின்னக்கா கண்ணீர் ததும்ப, “இல்லெப்பா இல்லெ! அவனோட எனக்கென்ன பேச்சு! ஒண்ணுமில்லே. பேசவேயில்லெ. அவன் தான் டைம் கேட்டான். நான் ஒண்ணும் பேசவேயில்லெப்பா!” என்று புரண்டு அழுதாள். ஆனா அப்பா விடவில்லை. மாக்னஸ் குட்டி உன்னே இஷ்டம் போல விடமாட்டேன் என்று கத்தியது ஞாபகம் இருக்கிறது. மாக்னஸ்ஸுக்கு அப்போதெல்லாம் என்ன நடந்தது, இந்தக் குடும்பத்துக்குள் என்ன நடந்து கொண்டிருந்தது என்பது அப்போது மேபலுக்குப் புரியாது. புரிய முடியாது. இப்போது ரூபனை முழுதாகப் புரிந்தது. மாக்னஸ் குட்டி அக்காவுக்கு நேர்ந்த அதே கோளாறு அதே கோணல் அதே ரூபனுடன் இப்போது நேர்ந்திருப்பதை எப்படி யாரிடம் என்னவென்று சொல்வாள் மேபல்! அதோ கட்டைச் சுவரிலிருந்து குதித்து அருகே வருகிறான் ரூபன். மைதானத்தில் யாருமே இல்லை. ஒன்றிரண்டு கான்வெண்ட் பெண்கள் சுமந்த புத்தகங்களோடு முன் தள்ளி நடந்துப் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவன் என்ன செய்யப் போகிறான்? படபடப்பும் பரிதவிப்பும் இன்னதென்று சொல்ல முடியாத ஒரு வித விருப்பமும் மகிழ்ச்சியும் மேபலாம் தாங்க முடியவில்லை. தொடப்போகிறான் ரூபன்! கலங்கல் சட்டை, பதினைந்து நாள் தாடி, அழுக்குப் பாண்ட், ஊத்தைப் பற்கள். கலைந்துபோய் காதோரம் நரையோடிய சுருண்ட முடி. இவனை மாக்னஸ் சின்னக்காவுடன் பார்த்தபோது இப்படியா இருந்தான். நாளுக்கொரு ஜீன்ஸ்! வேளைக்கொரு பார்லல் பாண்ட்ஸ். கட்டம் கட்டம் போட்ட டெர்லீன் சட்டை, ஸூட் கோட்! தூரத்திலிருந்தே வீசும் இன்பமான பாரீஸ் ஸெண்ட்! அப்போதும் இவனைப் போக்கிரி என்றார்கள் மிஷன் தெரு கிறிஸ்தவர்கள்! இன்றும் ரௌடிப்பயல் என்கிறார்கள்! மாக்னஸ் சின்னக்கா மயங்கினாள். ஆனால் பயம்! அப்பா பயம்! கிட்டே வந்து நின்றான் ரூபன்! என்ன தைரியம்! அவள் கையைக் கோர்த்துப் பிடித்தான். என்ன வலு! மார்பில் வெறுமையாகச் சுருண்ட முடிகளிடையே கறுப்புக்கயிறு ஒன்று வெறுமையாய்க் கிடந்தது. கையை விடுவிக்கவில்லை மேபல்! அவன் ஸ்பரிசம் அவளுக்கு வேண்டும். அவன் வேர்வை மணம். அவன் குடித்திருந்த விஸ்க்கியின் மணம், காலைப்பனியிலும் அவளுக்கு வந்து நாசியை மலர்த்தியது. அப்பாவின் அதே விஸ்கி! சிகரெட்! ரூபன்!



”தப்பிச்சுகிட்டு போலாம்ன்னு பாத்தியா மேபல்! விடமாட்டேன்!”



“யாராவது பாத்தா அப்பாகிட்ட சொல்லீடுவாங்க. உயிரெ எடுக்காம விடமாட்டாங்க அப்பா! என்னே உட்டுடுங்க...”



“அடெ! உன்னெ நானா புடிச்சு வெச்சிருக்கேன்!”



“பின்னெல்லியா? தினமும் யாரு வீட்டுக்காம்பவுண்ட் கொல்லையில் வந்து நிக்கிறதாம்?”



“நின்னா? உனக்காகவாக்கும்?”



“இல்லியா பின்னே? சுத்திச்சுத்தி வர்றீங்களே எதுக்காகவாம்?”



"வராம இருந்துட்றேனே! உன்னக்காவே நெனைச்சு....”



“என்னெச் சுத்தணுமாக்கும்.”



“ச்சீ”



“என்ன ச்சீ? ஏம் பொய் சொல்றீங்க! என்னெத் தொரத்தினா அப்பா விட்டுடுவாங்களா?”



“உங்கப்பா ஒரு அய்யோக்கிய ராஸ்க்கல்.”



”உங்களை மாதிரியா?”



“என்ன சொன்னே?”



பளீரென்று அறை விழுந்தது எதிர்பாராத இடத்திலிருந்து. கன்னம் சிவந்தது. அப்படியே நின்றாள் மேபல். அவளும் பேசியது எல்லாம் பொய்தானே. அவனுடன் பேசும்போதெல்லாம் இப்படித் தர்க்கம்தான் வருகிறது. அவன் மேல் எப்போது ஆசை வந்தது என்று இனம் தெரியவில்லை. அவனும் ஒப்புக் கொள்வதில்லை. தினமும் மாலை மயங்கும் வேளையில் வீட்டுக்காம்பவுண்ட் கொல்லைப்புறம் வெளியே காத்திருப்பதும் மேபல் ஓடி ஒவ்வொரு நாளும்... அவன் என்ன செய்து விட்டான்?! வெறும் பேச்சு! அவன் மௌனமாய் கேட்டுக் கேட்டு... மேபலுக்கு ரூபன், அவன் விஸ்க்கி வாசனை வியர்வை, முடி அடர்ந்த மார்பு, அவன் அடாவடித்தனம் அதே முரட்டுத்தனம்.... எல்லாமே வேண்டியதாகிவிட்டது. ரூபன்! பைத்தியமாய் அடித்தான். எப்படி என்றுதான் அவளுக்கே புரியவில்லை. புரியாததுதான் சந்தோஷமே. அவள் அப்பாவை அவளுக்குள் இணைத்திருக்கும் அதே புதிர்! நிச்சயம் ரெண்டு புதிரும் விடுவிக்கப்படப் போவதில்லை. மேபலின் பயம் தொடர்ந்தது. அப்பாவிடம் பயந்தாள். ரூபனிடம் சிக்கினாள். பயப்படுத்திக் கொண்டேயிருக்கிறான் ரூபன். அக்காவைத் தொடர்ந்தது. அப்பா மிஷன் தெரு பார்க்க அடித்து நொறுக்கியது. எல்லாம் கண் முன்னே பார்த்தும் எப்படி இந்த அபத்தம் தெரிந்தே எரியும் குப்பை! ஆ! இவனை அக்கா மாக்னஸ் நேசித்தாளா? இன்னுமா? மாக்னஸ் கல்யாணம் ஆனபோது லாரியில் அடிபடாமல் இருந்தால்... கல்யாணத்தில் கலாட்டா செய்து.. கல்யாணம் நின்று... அப்பா அவமானப்பட்டு... ஜீஸஸ்! இந்தப் பாத்திரத்தை என்னிலிருந்து எடுத்துப் போடும் ஆண்டவரே... இவன் பாவம் ஸ்வாமி! அக்கா மாக்னஸோட ஆத்மாவைக் காப்பாத்தியருளும் பிதாவே! என் உடம்பிலிருந்து வாலிபத்தின் முள்ளை எடுத்துப்போடும் ஜீவனுள்ள கர்த்தாவே!... உதடு முணுமுணுக்க அவன் முன்னிலையிலேயே மனசுக்குள் ஜெபம் செய்தாள் மேபல். கண்களில் கண்ணீர்.



அவன் கேலியாய்ச் சிரித்தான்.



“என்னடி ஜெபம் பண்றியா? நான் வேண்டாம்ன்னு? ராஸ்க்கல்!”



“எனக்கு இதெல்லாம் வேண்டாம் ரூபன்.”



“உங்கக்கா என்னெ நடுத்தெருவுல அலையவெச்சா... நீ என்னெ கால்ல போட்டு மிதிக்கிறெ. உங்கப்பன் என்னெ கொன்னு தீர்க்கலாம்னு அலையறான். இதுல பேசீட்டுருக்கும் போதே ஜெபம் வேற ஜெபம்.. நேரா மோஷத்துக்கு போறவள்கள்லெ?”



”ரூபன் டியர்! நான் நரகத்துக்குத்தாம் போவேன். அக்காவுக்கும் அப்பாவுக்கும் நான் செய்யிறது துரோகம் இல்லையா? சண்டாளி உங்களையா நானும் நேசிக்கணும்! ஆண்டவரே ஸ்வாமீ!”



“யேய்! அழுகையெ நிறுத்தடி பசப்பி! எனக்காக இதுவரைக்கும் என்ன பண்ணீருக்கே நீ! உங்கக்கா மாக்னஸ் மாதிரியே நீயும் இருக்கேன்னு என்னெ ஆட்டி வெக்யலாம்ன்னு பாக்றியா? உங்கக்கா அப்பா அப்பான்னு பயந்த மாதிரி நீயும் என்னெ ஏமாத்தி குழியில எறக்கலாம்ன்னு நெனைச்சே.. படவா ராஸ்க்கல் தேவுடியா ஒன்னெ குத்திக் கொன்னுட்டு உங்கொப்பனையும் என்னை மாறியே நடூ ரோட்ல திரிய உடாமெ நான் சாகமாட்டேன்டீ தெரிஞ்சுக்கோ!”



கண்களில் நீருடன் சிரித்தாள் மேபல்.



“இந்தத் திமிர் பேச்சு பேசியே என்னெ மயக்கீட்டிங்க!”



“உங்கப்பங்கிட்ட என்னடீ வெச்சிருக்கே?”



”அப்பாவெ உங்களுக்குத் தெரியாது!”



“களிமண்ல என்ன தெரிஞ்சுக்கணும்! களிமண் தான்!”



“எங்கப்பாவெ கேவலமா பேசுனா எனக்கும் பிடிக்காது. மாக்னஸ் சின்னக்காவுக்கும் பிடிக்காது தெரியுமா?”



”சரி! எப்பதான் வருவெ?”



“எஞ்ச?”



“என்னோட!”



“அதான் எஞ்சன்னு கேட்டேன்!”



”எங்கியாவது. உங்கப்பன் இல்லாத எடத்துக்கு!”



“எங்கப்பா இல்லென்னா நானும் வரமாட்டேன்! என்னெ உட்ருங்க!”



“யேய்! நிறுத்துடி உங்கொப்பம் புராணத்தெ!”



“எங்கப்பாவே உட்டுட்டு வர்றது இந்த ஜென்மத்ல இல்லே!”



“இப்டிப் பேசியேதாண்டி உங்கக்காவும் என்னெத் தெருவுல நிக்க வெச்சிட்டு அவ ஜாலியாப் போனா.... நீயும்....”



”வாய மூடுங்க!”



அவள் நடந்தாள். அவன் பின்னிட்டு நின்றான். திரும்பித் திரும்பிப் பார்த்தபடி மைதானத்தில் குறுக்கே நடந்து ரோட்டில் இறங்கும்வரை இடுப்பில் கை வைத்துக் கால்களை அகட்டி பார்த்தபடியே மிஷன் மேட்டுத் தெருவில் நடந்தாள் மேபல்! யாரும் பார்க்கும் முன் கண்களைத் துடைத்துக் கொண்டு படியேறினாள். அப்பா கட்டிய வீடு. புதுசாக கட்டியது. அப்பா ப்ளான். எல்லாருக்கும் தனித் தனி ரூம். கல்யாணமாகிப்போன ஆனி ரோஸ்க்கும் தனி வீட்டெ இந்த வீட்டில் இணைச்ச மாதிரி! மாக்னஸ் திரும்பி வந்தா அவளுக்கும் ஒரு தனி வீடு. அத்தைக்கும், அண்ணனுக்கும், மேபலுக்கும் கூட தனித்தனி வீடு. எல்லாம் ஒரு நடுக்கூடம் ஒன்றில் இணைந்து அற்புதமாய் அபூர்வமாய்ச் செய்திருந்தார். ஆனால் யாரையும் அண்டவிடவில்லை. அண்ணன் ஃப்ரெடி யாரிடமும் அண்டுவதில்லை. வரத்தும் போக்கும் எங்கேயென்று மேபலுக்கு மட்டும்தான் தெரியும். அத்தை அப்பாவுடன் பேசறதேயில்லை. மாக்னஸ் கல்யாணம் எல்லார் வாயையும் அடைச்சுப் போட்டுவிட்டது. எல்லாருக்கும் மேபல் மட்டும் வேணும். கல்யாணம் ஆகிப்போன பத்து வருஷத்தில் பத்துத் தட்வை மாக்னஸ் சின்னக்கா வந்து போயிருக்கா. அமெரிக்காவிலிருந்து வரணும்னு யாரும் கூப்பிட்டதில்ல. அப்பா இந்த பத்து வருஷத்துல மாக்னஸ் புருஷன் லாசரஸ் அமெரிக்கன் பேச்சு அப்பாகிட்ட மட்டும். மேபல் கிட்ட சிரிக்கிறதோட சரி. மாக்னஸ் வரும்போதெல்லாம் ரூபன் வீட்டுக்குத் தனியாப் போயி பேசீட்டு வருவா. என்ன பேசுவாளோ... என்ன சொல்வாளோ? கொஞ்சம் எரிச்சலாயிருக்கும் மேபலுக்கு. ரெண்டு குழந்தையும் பெத்திருந்தா! ஒரு ஆண் ஒரு பெண். வெரி ஸ்வீட் சில்ரன். நடுக்கூடத்திலிருந்து நாலு ஐந்து வீட்டுப் போர்ஷனிலும் ஓடிக் கூச்சலிடும் குழந்தைகள் ரெண்டும். ஒருத்தன் ஸ்சடோன் லாஸரஸ், பெண் ஹனி! ஸ்டேட்ஸ் போகப் புறப்பட்டபோது உள் அறைக்குள் மேபலை இழுத்துக்கொண்டு போய் மாக்னஸ் சொன்னாள், “த பார் மேபல்குட்டி! அப்பாவெச் சுத்திகிட்டெயிருக்காதே. உனக்குக் கல்யாணம் நடக்காது தெரியிதா? ரூபனோட புறப்பட்டு ஸ்டேட்ஸ் வந்துடுங்க. ரூபனுக்கு வேலை ஒண்ணு அவுங்கிட்டச் சொல்லி ஏற்பாடு பண்ணீடலாம். பணம் நான் அனுப்புறேன். உங்கப்பன் உனக்கு கல்றயிலதான் கல்யாணம் வெப்பான்! இஞ்சியே இருந்தீன்னா அதான் நடக்கும்!”



“ஏங்கா அப்டீச் சொல்றே. அப்பா இப்ப ரொம்ப மாறீட்டாஅரு..>!”



“ஆம்மா மாறீட்டான்! இந்த உத்யோகமும் பணமும் இல்லேன்னா இந்தக் குடிகாரனெ யாரு மதிப்பா.”



“அப்பாவெ ஒண்ணும் சொல்லாதேக்கா! அப்பா பாவம்!”



“பாவமா? அவம் பண்ண பாவத்துக்கு இன்னும் என்னன்ன பாடுபடப் போறாம் பாரு நீயே.”



“இப்ப என்ன பாடு பட்றாருங்கிறே நீ?”



”என்னெ இந்த நரகத்ல தள்னத்துக்கு ... அவன்...” மாக்னஸ் அழ ஆரம்பித்தாள். குமுறல் பகை அவள் கண்களில் எரிந்தது. ஆத்திரம் கத்தலில் முடிந்தது....



“நீயும் இஞ்ச இருக்காதெ! அழிச்சு ஒழிச்சுடுவாம் பாவி!”



’நான் எஞ்சியும் வல்லக்கா!”



”அடீப்பாவி! உனக்கு நல்லது தாண்டீ சொல்றேன்”



“இந்த நெனப்போட இஞ்ச வர்றதுன்னா நீ வரவே வாண்டாம்! அப்பாவெ உட்டுட்டு நான் எஞ்சியும் வல்லெ.”



“அப்ப ரூபனே நீ லவ் பண்ணல்லியா?” கண்களைத் துடைத்துக் கொண்டு கேட்டாள்.



”சின்னக்கா நீயும் ரூபனெ எப்பமும் ‘லவ்’ பண்ணவேல்லெ...!”



“என்னெ சொன்னியாடீ பாவி நாயே! உனக்கு வந்து உதவி பண்ணனும்ன்னு நெனைச்ச என்னே!”



“கத்தாத சின்னக்கா! அப்பா காதுல உளுந்தா கொன்னுடுவாரு!”



“சின்னத்தெ சொன்னப்ப நான் நம்பல்லெ. இப்பல்லெ தெரியிது!”



“என்ன தெரியிது? எப்ப உனக்கு என்ன தெரிஞ்சுது. ரூபனே உட்டுட்டு லாஸரஸத்தானெ கல்யாணம் பண்ணிக் கிட்டப்ப இந்த ஞாயம்ல்லாம் தெரியாமெப் போச்சா?”



”என்னப் பேச்சுடீ பேசுறே பட்டி நாயே? தேவுடியா!”



கூச்சல் அதிகமானபோது கெட்ட வார்த்தைகள் சுழன்று எழும்பின. சின்னத்தை எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டே வெங்காயம் உரித்துக் கொண்டிருந்தாள். இப்போதெல்லாம் யாரோடும் அவளும் பேச்சில் அழுத்தம்தான். அவள் வீடும் அந்த வீட்டுக்குள் தனியே கட்டியிருந்தார் அப்பா.



மறுநாளே புறப்பட்டு விட்டாள் மாக்னஸ் ஸ்டேட்ஸ்க்கு!



****



வீட்டைப் பெரிசாக்கிக் கட்ட ஆரம்பித்தபோது மேபல் வீட்டை ரிப்பேர் செய்யப் போவதாகத்தான் நினைத்தாள். அப்பா ஆபிஸிலிருந்து ஆட்கள் வந்து அளந்து சுற்றிலும் ஆறு வீடுகள். நடுவில் கூடம், வாசலில் போர்ட்டிக்கோ என்று சுற்றுக் கட்டாக் கட்டி வந்தபோது இத்தனை பெரிய வீடுஎதுக்கு என்று மிஷன் தெருவில் எல்லாருக்கும் யோசனை. தைர்யமாய் எவன்போய் இவங்கிட்ட கேக்கிறது! உனக்கென்னம்பான்! என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.



வீட்டின் முன் போர்ஷன் மேபலுடையைது. எட்டு ஜன்னல். அழகான சின்ன வீடு அது! பக்கத்து வீடு அப்பாவுக்கு.



மேபல் அப்பா போர்ஷனில் நுழைந்தாள். மேஜை மேல் ஏகப்பட்ட ஃபைல்கள். ஏதோ ஒரு பைலில் தலையை நட்டுக் கொண்டு எழுதிக் கொண்டிருக்கிறார். சுற்றிலும் சுவர்களில் மான் தலைகள் விழித்தன. தரையில் புலித்தோல். சுற்றிலும் கருங்காலி ஃபர்னிச்சர்கள். பீரோக்கள். தலையைத் தூக்கி “யாரது?” என்றார் அப்பா.



நரையோடிய சுருள் மீசையை நாக்கால் நக்கிவிட்டுக் கொண்டார் அவளைப் பார்த்தபடி “என்னம்மா” “அக்கா ஆனியே வரச்சொல்லி எழுதுங்கப்பா! ஞாபகப்படுத்தீட்டு போலாம்ன்னு வந்தேன்...!”



“அவ ஏம்மா இஞ்ச? வாண்டாம்!”



”எனக்கு பாக்கணும் போல இருக்குப்பா.”



அப்பா ஒண்ணுமே சொல்லல்லெ. கொஞ்ச நேரம் கழிச்சு “நீயே எழுதி வரச் சொல்லு மேபல்!” என்றார்.



"தாங்க்ஸ்ப்பா!” என்றாள் மேபல். அப்பா வசத்தில் இல்லை என்பது தெரிந்தது. எப்போதும் வசமில்லைதான்..!



“அந்த நாயி வரட்டும், ஆனால் ரெண்டு நாள்ல போயீறணும்! ஆமா!”



“பின்னே ஏம்பா ஒவ்வொருத்தருக்கும் ஒரு வீடுகட்டி எல்லாத்தையும் ஒரே வீடாக்கினீங்க?”



“அதெல்லாம் பன்னிக் கூட்டம்மா! என்னெ யாரும் மதிச்சதில்லே! உங்கம்மா உள்பட எல்லாரும் ஏங்கிட்ட பயந்தாங்கம்மா யாரும் நேசிச்சதில்லை. பீ தின்றதுக்கு வர்ற பன்னிக் குட்டி எல்லாம் தின்னட்டும். என் ப்ராயாசையோட பலனெ அனுபவிச்சாங்க. பயந்துக்கிட்டே இஷ்ட்டம்போல ஆடுனாங்க. இன்னும் எத்தனை நாளம்மா மேபல்? அன்பில்லாத வீடு அட பெரிசாத்தான் இருக்கட்டுமே எனக்கென்ன? இன்னைக்கு நாளையோ நான் ஏன் விஸ்க்கியிலேயே ஊறிக்கிட்டு இருக்கேம்மா! நீ ஒருத்திதாண்டா என்னை மாதிரி! ஏங்கண்ணு உங்கம்மா பயந்துகிட்டேதான் ஏங்கிட்ட பெத்தா எல்லாத்தையும். எல்லாரும் ஏங்கிட்ட பயப்புட்றாங்களாம். நான் நம்பவேனா ராஸ்கல்ஸ்” உறுமினார்.



“நீங்க பேசுறது தப்புப்பா! எல்லாரும் உங்களை நேசிச்சாங்க. அம்மாவுக்கு உங்க மேல் உயிர்!”



“அட போடி கறுப்பி. உனக்கு யாரையும் தெரியாது. எல்லோருக்கும் பயம். அவ்வுளதான். என் ஆபிஸ்ல வேலக்காரங்க மாறி வீட்ல எம்பெண்டாட்டி எல்லாருக்கும் பயம். நடுக்கம் பயம்போனா எல்லாருக்கும் நான் அல்ப்பம்! இல்லியா? உங்கம்மா கல்யாணம் ஆன மறுநாள் வாய மூடினவதான், சாகும்போது கூட வாயெத் தொறக்கில்லெ. நீ ஒர்த்திதான் என்னோட நின்னுகேட்டு எதுத்து சண்டை போட்டு என் பொண்ணா எனக்காக நிக்கிறேம்மா.”



இல்லப்பா எனக்கும் பயந்தான்! நடுக்கந்தான்.



எதிரேயிருந்த விஸ்க்கி பாட்டிலெத் திறந்து நுரைக்க அப்படியே சோடா கலக்காமல்... “என்னப்பா ஆச்சு? இன்னைக்கு இப்படிக் குடிக்கிறீங்க?”



“என்னமா புதுச்சு? எப்போதும்தான் இது வேண்டியிருக்கு உனக்கு ஏது புதுசு!”

”இல்லெ அப்படியே ராவா கடகடன்னு..”



“எனக்கு உங்கிட்ட பேசணும்மா! பயம்மாயிருக்கு எனக்குப் பேச்சு வழக்கமில்லெ.”



“பயமா? உங்களுக்கா? என்னப்பாது?”



“என்னெ மொரடன்ங்கறாங்க? உங்கம்மாவும்கூட முசுடும்பா என்னெ! யாரு கிட்டியும் பேசறதில்லெ! ஏந் தெரியுமா? நிஜமாவே நான் முரடன். எல்லாரையும் அடிச்சு நொறுக்கி அசிங்கமான பேர் வாங்கிட்டேன். ஏன் தெரியுமா? யாரவது என்னெ நேசிக்கிறாங்களான்னு சந்தேகம்தான்!”



“எல்லாரும் வெலகி வெலகிப் போய்ட்டாங்க உன்னெத் தவிர. உங்கம்மாகூட பயந்துகிட்டே காலத்தெத் தள்ளீட்டுப் போய்ச் சேந்துட்டா. பாவம் ஏம்மா அவ என்னெ ஏங் கோபத்தெ எதுத்து என் மொரட்டுத்தனத்தெ எதுத்துப் போராடல்லெ? அவ பொய்ம்மா பொய். நீ மட்டும்தான் என்னெ எதுத்துப் போராடிட்டிருக்கே. எனக்குத் தெரியும். அவங்களுக்கெல்லாம் நான் வாண்டாம். இந்த தொரட்டுத் தாயழி வாண்டாம். போய்ட்டாங்க. அவங்களுக்கெல்லாம் அவங்களே போது. அப்பன் வாண்டாம். ஆனிமுண்டெயக் கூப்படணுமிங்கிறியே அவளுக்கே ஏன் வரணும்ன்னு இல்லெ?”



“நானல்ல இருக்கே! இஞ்ச? வீடு கட்டினேன். அதனால்தான் யாரும் வரமாட்டாங்க. வர வேண்டாம். வரும்போது நான் இருக்க மாட்டேன். வீடு இருக்கும். ஆனா ஒரே வீடு ஆறுவீடானாலும் ஒரே வீடுதான். உடைக்கப் பிரிக்க முடியாது. உயில் அப்படி எழுதியிருக்கேன். இந்த கெழவன் சாகும்போது, குடிச்சு எரியும்போது நீ ஏம்பக்கம் இருப்பேடா கண்ணு. இருப்பே. ரூபன் வந்து கூப்பிட்டாலும் ஓடமாட்டேம்மா ராஜாத்தீ. தெரியும் எனக்கு. உன்னே யாரும் வளைக்க முடியாது. வாண்டாம்ன்னாலும் இந்தக் கெழவன் காலடீலயே நீ கெடப்பேம்மா. இந்தச் சிலுவெயெச் சொமந்துட்டே கடைசீ வரைக்கும் நடந்துடுவோம்மா கண்ணுமணீ. இந்தக் கழுதே மாக்னஸ் ரூபனெ கட்டிக்கணும்ன்னு ஏங்கிட்ட எப்பவாவது வந்து ஒருநாள் வந்து கேட்டாளா? ரூபன் நாயாவது அவளெ இழுத்துட்டுப் போயி கல்யாணம் பண்ணிக்கிற துணிச்சல் உண்டாயிருந்தானா? நான் சொன்னப்போ முடியாது லாஸரஸ் கட்டிக்க மாட்டேன் ரூபனத்தான் பண்ணிக்குவேன்னு சண்டைபோட்டு அப்பாவெச் சம்மதிக்க வெக்க அப்பம் மேலே பிரியம் இருந்ததா? இல்லியேம்மா. இல்லே அப்பங்கிட்ட பயமாம்! உன்னப்பங்கிட்ட சண்டைபோட, கேட்டு வாங்க எதுக்காவுது வந்தியா? நீயும் லாஸரஸ்ஸெக் காட்டினதும் ஓடிப்போயி கட்டிக்கிட்டே. எனக்கென்ன உன் தலையெழுத்து. காசு! உத்தியோகம்! ஸ்டேட்ஸ்ல பெரிய வியாபாரம். அந்தஸ்து! ரூபன் வாண்டாம்! அப்பன்தானா காரணம்? ஏண்டி நாய்ங்களா? கேட்டு முட்டி மோதி வாங்கியிருக்க முடியாதா?”



”என்னப்பா நீங்க! இப்டி இருமி கக்கிகிட்டு பேசணுமா?”



“போதும் அப்புறம் நாளைக்குச் சொல்லுங்க.”



“மேபல்! கண்ணம்மா, நான் இனிமே பேச முடியாதும்மா. நான் காலமெல்லாம் பேசினவனுமில்லே. தஞ்சாவூர் பாரிஷ்ல என்னெ மதிச்சவனுமில்லெ. நான் மதிச்சவனுமில்லெ. உன்னெயும் நான் விட்டுட்டு ஒதுங்க முடியாது. என்னெ நீயும் பயந்து பயந்து ஒதுங்கிப்போயி கிட்டத்துல வந்து கட்டிப் பிடிச்சுகிட்டே. எங்கிட்ட எல்லாத்தையும் ஒடச்சு வெக்யிற. ரூபன் கோபிச்சுகிட்டு இருக்கான். பாவம்! அவனெ வந்து நேரா ஏங்கிட்ட பொண்ணு கேக்கச் சொல்லுவா! பாப்போம். நானா தூக்கி இந்தான்னு என் கண்ணுமணியெத் தர முடியுமா? ரூபன் கோழைப் பயல். அதுனாலதான் இன்னிக்கு வரைக்கும் உன்னையோ இதுக்கு முந்தி மாக்னஸையோ பொண்ணு கேக்க வர்லெ! இழுத்திட்டு ஓடலாம்ன்னு பாத்தா.. விடுவேனா? இது என்ன எல்லாருமே பயப்படுறோம் பயப்படுறோம்னு தாறுமாறா நடக்க முடியும்? ஜேவியரு பொண்ணுன்னா சாதாரணா? உனக்கு ஆசைன்னா நீ வேணும்ன்னா ரூபன் பயலோட ஓடு! ஆனா திருட்டுத்தனமா ஓடாதெ! அப்பா, நான் இவனோட போறேன்னு சொல்லீட்டு ஓடு! உங்கப்பன் வேட்டைக்காரம்மா! புலியையும் தெரியும் இந்த நரிகளையும் புரியும்....”



“என்னெ மன்னிச்சிருங்கப்பா! நான் ரூபனோட பேசித் திரியிறதெல்லாம் தப்புதாம்ப்பா!”



”தப்புன்னா என்னன்னே தெரியாதேடீம்மா மேபல் உனக்கு! ரூபன் பயலுக்கு மாக்னஸெ நான் ஏன் குடுக்கல? அவங்க ரெண்டு பேரும் ‘லவ்’ பண்ணலெ, ஏம் மேலே பழியப் போட்டா மாக்னஸ்! என்னெ யாரு வகை வெச்சான்ங்க? உண்மையிலேயே மாக்னஸ் ரூபனெ நேசிச்சது நிஜம்னா அவ என்னோட போராடி சம்மதம் வாங்கி ஜெயிச்சிருக்கணும். உங்கம்மாவெ நாப்பது வருஷம் முந்தி நானும் லவ் பண்ணுனேம்மா மேபல். தெரியுமா உனக்கு? இந்த மாக்னஸ்குட்டி மாதிரியே உங்கம்மா அவ அப்பன் மெரட்னதும் ஊட்டுக்குள்ற நாய்க்குட்டி மாதிரியே அவவூட்டுக்காரங்களுக்காகப் பயந்து வாலைச் சுழட்டிக்கிட்டுப் பதுங்கீட்டா! எனக்குத் தெரியும் அவ்வளவுதான்னு. உட்டேனா? பட்டப்பகல்ல அவ வூட்டுக்குள்ள போயி அவுங்கப்பனுக்கெதுர்க்கவே உங்கம்மாவெ இழுத்துக்கிட்டு வந்து பீட்டர்ஸ் சர்ச் ஆல்ட்டர்ல ஐயர் கூட இல்லாமெ நானே தாலியெ கட்டினேன். அப்றம்ல எல்லாருமா வந்து அழுது கெஞ்சி மொறையவும் திருப்பியும் அதே சர்ச்ல லாம்ப் ஐயர் தாலி குடுத்து நான் வாங்கிக் கட்டினேன். கல்யாணம் ஆச்சி! நாந்தாம்மா உங்கம்மாவெ ‘லவ்’ பண்ணினேன். அவ பொண்டாட்டியா இருந்தா, புள்ள பெத்தா, வளத்தா! எல்லாம் சரி, ஏங்கிட்ட பயம் எப்போதும்! நான் அடிப்பேனாம் உதைப்பேனாம் கொடுரமானவனாம்! நான் கோலியாத் மாதிரி ராட்சசனாப் போனேன்...”



“அப்டீல்லாம் நீங்க இருந்தீங்கதானேப்பா! அது உண்மையில்லையா அடிச்சுத் தொவைக்கலியா?”



“நாலஞ்சு புள்ளை பெத்தாளேம்மா உங்கம்மா! அதுமட்டும் ஐயமில்லாம எப்டி நடந்துதாம்? பயம் பயம்ங்கிறது அப்ப வல்லியா? ஏம் புருஷன் மொரடன்ங்கிறது ஒரு வசதி! யாரும் கிட்ட வராம ஒரு வழி. எங்கப்பா ஒரு கோலியாத் ராட்சசங்கிறது ஒரு தெம்பு! பண்ற தப்பு தெரியாம மத்தவங்ககிட்ட தப்பிச்சு தலையில சுமத்த ஒரு லாபம்! இல்லியா? அப்பன் எதுக்கும் விடமாட்டான்! அடாவடி புடிச்சவன்னா யாருகிட்ட வந்து பேசுவான். ஜேவியர் ரொம்ப கண்டிப்புன்னு ஆபீஸ்ல எல்லாப்பயலும் பேசியே ஒதுக்கிட்டா.. தப்பிகிட்டே ஒழுங்கீனம் பண்ணலாம்ல! அதான் பெத்த பொண்ணுங்க கூட, ஏன் கட்டின பொண்டாட்டி கூட ஒதுங்கியே தூரத்ல இருந்தே போய்ட்டாங்க... பெத்த பய தெருப் பொறுக்கி மாதிரி சுத்துகிறான். அவனுக்கும் அப்பன் வாண்டாம்!”



“நான் மட்டும் என்னப்பா ஒஸத்தி? நானும்தான் ரூபனெத் தேடீட்டு போய்க்கிட்டு இருக்கேன்!”



மேஜையில் இருந்த இன்னொரு கிளாஸ் திரவமஞ்சளும் ஜேவியர் தொண்டையை எரித்து உள்ளே கடந்தது. நிதானமாக மகளை உற்றுப் பார்த்தார். உடல் முழுவதும் ஆறாத வியர்வை. நீண்ட நேரம் பேசியதால் வந்த பதைபதைப்பு. மகள் அருகில் கண்ணீர் ததும்ப நிற்பதைப் பார்த்ததும் கலங்காது ஒரு கடுமை பறந்தது முகத்தில்...



“மேபல்! நீ உன்னெ மட்டும் நேசிக்கல்லெம்மா.. நீ இல்லாவிட்டால் ப்ரெட்ரிக் இந்த ஊரெ விட்டே எங்கியோ ஓடிப்போயிருப்பாம்மா. இஞ்ச நீதான் எனக்கும் அவனுக்கும் எடையில் இணைச்சுப் பிடிச்சுட்டு நிற்கிற. உங்கக்காமார் என்னெப் புழுதியா நெனைச்சுப் போய்ட்டாலும், அவங்களோட அப்பனை ஞாபகம் பண்ணி அவங்ககிட்ட எணைச்சிகிட்டு நிக்கிறது யாரும்மா? நீதானே எனக்கு மகன், மகள் எல்லாம் இல்லாமல் போய்டாமெ ஆவியோட சேத்து அப்பனை அவங்ககிட்ட விடாமெ உயிர் குடுத்துகிட்டு நிக்கிறது யாரும்மா? அட உங்க சின்னம்மா சின்னத்தை கூட யாரெ நெனச்சுகிட்டு இங்க வர்றாகடீ? பொண்ணே எங்கக்கா என்னெ இன்னும் நெனச்சி இஞ்சயே நிக்கிறாளே உங்களோட இந்த வூட்ல, ஏன்? உன்னாலம்மா உன்னால். நீ இல்லென்னா நான் கட்டின இந்த வூட்டெ பிரிச்சு வேண்டியதை எம்ப்பரயாசையோட பலனெயெல்லாம் அள்ளிகிட்டு போய்டுவாங்க. இஞ்ச ஒரு ஈ காக்கா இருக்காது. என்னெப்போல யாரும் இருக்கக்கூடாது. எனக்கு யாரும் இல்லெ. தெரியும் எனக்கு நாம் பொறந்ததுல இருந்தே, நானே வளந்து, மேபல் இதுல இனிமே நானே எப்டி மாறி, நானே எப்டி மத்தவங்களோட ஆசைக்கேத்தபடி மாறி திரும்பியும் வாழபோறம்மா? முடியாது. என்னைக்காவது அவங்க எல்லாரும் திரும்பி வரும்போது நானும் இருக்க மாட்டேன். இருக்கவும் கூடாது. ஆனா இந்தப் பெரியவீடும் நீயும் இருப்பீங்க. தேடி வரணும். நீ படிச்சவ. எல்லா க்ளாஸ்லியும் காலேஜிலியும் என்னெப் போலவே அபாரமா மார்க் எடுத்து டிஸ்டிங்ஷன்ல பாசானவ. சொத்தும் உனக்காக நான் நிறைய சேத்து வெச்சிருக்கேன். உன்னெ அவனுக்கு இல்லெ. எவனுக்குமே கொடுக்க ஏம்மனசு ஒப்பாதுதான். எனக்கு நீ மட்டும்தான் மிச்சம். என்னோட எல்லாமே மேபல் கண்ணுதான். ஆனா உனக்கு நான் ரூபனெத் தரத்தயார். ஏன் தெரியுமா! எனக்கு நீ தந்திருக்கிறது உன்னையேயல்ல. ஆனா ரூபனைப் போயி நீ கேக்கக்கூடாது? என்னெக் கல்யாணம் வந்து கேளுன்னு கூப்டக் கூடாது. நான் உங்கிட்ட சொன்ன எதையும் யாருகிட்டயும் - உங்க சின்னத்தைக்கிட்டக் கூட சொல்லக் கூடாது. உங்கப்பன் உங்கப்பன் தான்னு நீதான் நிரூபிக்கணும். ரூபனா வந்து பொண்ணு கேட்டு இந்த ஒலகமே எதுத்தாலும் என்னோட போராடி உன்னெ ஜெயிக்கணும்மா. உங்கப்பனெ இந்த உலகம் புரிஞ்சுக்காட்டி பரவால்லெ. நீ புரிஞ்சுக்கணும். உன்னோட வாழ்க்கைக்கு மட்டுமில்ல. உங்கம்மா, உங்கக்காமார், யாரோட வாழ்க்கைக்கும் உங்கப்பன் என்னைக்கும் தடையாயிருந்ததில்லே! அவங்களேதான் தடையாயிருந்தாங்க என்னோட வாழ்க்கைக்கும்.” இருமல் ஆரம்பித்த ஜேவியரு தொடர்ந்து இருமினார். மேலும் குடித்தார். மேபல் அழுதாள். இரண்டு பேரும் தழுவிக் கொண்டார்கள். மேபலை உச்சி முகர்ந்து முத்தமிட்டார். மேபல் பொருமிப் பொருமி அழுதாள். உதடுகளில் அப்பனின் முத்தங்கள். அவரது விஸ்க்கியின் சீற்றமும் அதிகப் பேச்சின் உக்ரமும் கொஞ்சமாய்த் தணிந்தன. அப்பாவின் அணைப்பில் இருந்து விடுவித்துக் கொண்டபோது மேபலுக்கு நெஞ்சுபூராவும் நிரம்பியிருந்தது ரூபன் மட்டுமே. இதை ரூபன் தர வேணும். தருவானா? உலகம் தராவிட்டாலும் ரூபன் தரவேண்டும். அப்பா கேட்டதை அவன் அவளுக்கு தராவிட்டாள். பயங்கரமாய் இருந்தது. இது யாருக்கும் புரியப்போகிறதில்லை. அவள் இப்போது அப்பா சொத்தல்ல. ஆனாலும் ரூபனுக்கு அவள் வேண்டுமா வேண்டாமா? அவன் அவளை அப்பாவிடமிருந்து எடுத்துக் கொள்வானா?



காலம் முழுவதும் ரூபன் தேடியது, அப்பா தேடியது. அக்காமார், சின்னத்தை எல்லாம் தேடியதும் மேபல் வியந்து கண்ணீர் வடித்தாள். குழந்தைப் பருவமெல்லாம் அவள் ஏங்கியது கிடைத்துப் புரிந்துவிட்டது. இந்தப் புதையல் இத்தனை காலம் கண் முன்னேதான் இருந்தது. கனவாய் மயங்கியது. நிஜமாய்ச் சுட்டது. ரூபன் இது உனக்கு முடியுமா? அப்பா சொன்னதுபோல் மேபல் கேட்கமாட்டாள். உன்னிடம் மட்டுமில்லை எந்த ஆணிடமும் கேட்க மாட்டாள். மேபல் அப்பாவின் பெண். வாட்டசாட்டமாய் வளர்ந்துவிட்ட பெண். அவளது ஆகிருதி உயரம் எல்லாமே ஜேவியரதுதான். எம்.ஏ. பாஸ் செய்தாயிற்று. அப்பா தடுத்துக் கொண்டிருப்பதால் வேலைக்குப் போகவில்லை. மிஷன் சர்ச்சில் வேலை கிடைத்தும் தடுத்துவிட்டார். காரணம் பெரிய திட்டம்!



ஒரு முழு அலுவலகத்தைத் தாங்குகிற வேலை வருகிறதாம். பலத்த திட்டம் உட்பட அலுவலர்கள் குவார்ட்டஸ் எல்லாவற்றோடும் சீக்கிரமே வந்துவிடும். அப்பா ஏற்பாடு எல்லாம் சரி! ரூபன்? தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் கோவில் மைதானத்தில் நிற்பான். நாட்கள் ஓட ஓட ரூபனும் திரைந்து கொண்டிருந்தான். பெரிய்ய வீட்டில் அத்தையுடன் சமையல் செய்த நேரம் போக அண்ணன் ஃப்ரெட்ரிக்கை எதிர்பார்ப்பதும் கடிந்து கொள்வதும் காசு கொடுப்பதும் தவிர மேபலுக்கு வீட்டில் வேலை? அப்பாவின் புத்தகங்கள்தாம் துணை.



காலை ஆறு மணிக்கே கோவிலுக்குப் போகிறதில் நற்கருணை ஆராதனையில் கலந்து கொள்வதில் தவறுவதேயில்லை. அப்பாவின் ஆபிஸ் ஜீப் வாசலில் வருகிற சப்தம் போர்ட்டிக்கோவில் ஜீப் வந்து நிற்கும் சப்தம் போதும். மேபல் வாசலுக்கு ஓடி வந்தால் அப்புறம் இரவு வெகு நேரம் வரை அப்பாவுடன் தான் நேரம் கழியும். அப்பாவுக்கு எது பிடிக்கும் அதுதான் சமையல். அப்பா வேட்டைக்குப் போனால் இப்போது மேபலும் கூடப் போகிறாள். தடுமாற்றமில்லாமல் இப்போதும் துப்பாக்கி பிடிக்கிறார் ஜேவியர். அவளும் சுடக் கற்றுக் கொண்டிருக்கிறாள். வேதாரண்யம் காட்டுக்குள் ஞாயிறுகள் கழியும். மூன்று ஜீப்புகள், அப்பாவின் ஆடர்லிகள் வேட்டைக்காரர்களுடனும் மேபலும் வியர்வையில் ஊறி ஆவி பறக்கத் திரிந்து தஞ்சாவூர் திரும்பும்போது ஜீப்பில் மான்கள் உயிரற்றுக் கிடக்கும். அப்பாவுடன் சீட்டு விளையாடுவது, அப்பாவுடன் குளிப்பது, காலையில் பனி மூட்டத்தில் வீட்டு மொட்டை மாடியில் எக்ஸர்ஸைஸ் செய்வது. வியர்த்து வடியவடிய டம்பல்ஸ், ஸ்கிப்பிங் பயிற்சி, பனியன் ஹாஃப் டிராயர்ஸ் வியர்வையில் ஊறிவிடும். பேய் மாதிரி கொட்டும் அருவிகளில் காட்டில் தலை கொடுத்து அப்பனின் எல்லா ஆட்ட பாட்டங்களுக்கும் துணை நிற்பது. இப்போதெல்லாம் மேபலுக்கு நேரமேயில்லை. கண்ணாடியில் பாத்ரூமில் உடம்பைப் பார்க்க ஆச்சர்யமாயிருக்கும். இப்போதெல்லாம் ரூபனைப் பார்க்க மறப்பதேயில்லை. முன்பெல்லாம் அவனிடம் தப்பினால் போதும் என்றிருக்கும். அவன் தொடும்போதெல்லாம் பயமாய் இருக்கும். காலையில் அவனைத் தாண்டுவது ஒரு பிரச்சனை. இப்போதோ ரூபன் ஒரு சுகம். அவனை எங்கு பார்த்தாலும் கூப்பிட்டு நிறுத்திப் பேசுகிறாள் மேபல். பேச்சின் தோரணையே தனி!



“என்ன மிஸ்டர் ரூபன்! எப்படியிருக்கீங்க. என்ன பண்ணிட்டிருக்கீங்க?”



”ம்! சும்மாதான் இருக்கேன்.. வந்து....”



“சீக்கிரமா ஒரு கல்யாணம் பண்ணிக்குங்க!... இப்படியே திரிஞ்சிட்டிருந்தா எப்படி? உங்கம்மாவெக்கூட மானிங்ஸர்வீஸ்ல பாத்தேன். அழுதாங்க! சீக்கிரமா ஏதாவது வேலையில சேந்தா சந்தோஷப்படுவாங்க!”



“அழட்டுண்டி! உனக்கென்ன! உன் வேலையப் பாத்திட்டுப் போடீ”



“டீஸண்டாப் பேசக் கத்துக்குங்க ரூபன்”



“ஆமா! இனிமேத்தான்! உங்கிட்ட டீஸன்ஸி கத்துக்கப் போறேன்! அதுசரி நீ பெரிய வேலைக்கிப் போப்போறியாமே!”



”ஆமா! ஆமா!”



“எப்போ கல்யாணம்?”



“யாருக்கு?”



“ஏய் உனக்குத்தான்டீ!”



”ஏன் கேக்கிறீங்க?”



”ல்லெ... உனக்கெல்லாம் எதுக்குக் கல்யாணம்ன்னுதான் கேக்கிறேன்!”



“ஜீஸஸ்! அப்பா! ரொம்ப நல்லதாப் போச்சு. இனிமே ஏம்பின்னாடி சுத்தமாட்டீங்கள்ல?”



”ஏங் கொப்பனோட போட்ற ஆட்டம் போதலையா? தொலைச்சுடுவேன் ஆமா!”



“ச்சீ உங்க அசிங்கம் இவ்வளவுதானா இன்னும் இருக்கா?”



”மேபல் இனிமேயும் உன்னெச் சும்மா விடமாட்டேன் ஆமா உன்னெ... உன்னெ...”



காலை நேரத்தில் அந்த மைதானத்தில் ரூபன் மேபலை இழுத்துத் தடவி.. வெட்ட வெளியில்.. மேபல் பதட்டமேயில்லாமல் அவனை விலக்கித் துரத்துவாள். லேசாக வரும் கண்ணீரை புறங்கையால் துடைத்துக் கொண்டு ரூபனைப் பார்த்து “ரூபன் என்ன இது? சும்மாயிருக்கமாட்டீங்களா? யாராவது பாத்தா என்ன ஆகும்? இப்டி முரட்டுத்தனம் பண்ணினா என்ன ஆகும்? நீங்க என்ன ஆம்பளை? ஸ்பரிசம் பட்டதும் மயங்கி ஒங்க கைல விழ எனக்கு உங்க ஸ்பர்சமும் புதுசு இல்ல வயசும் பதினாறு இல்லெ. நான் அரைக்கிழவி நீங்க முக்காகெழவன். இனிமே உங்களாலெ என்ன முடியும்? வேலையா ஒண்ணுமில்லெ. சம்பாத்யமும் இல்லெ. சுயமா ஒண்ணும் செய்ய முடியாது... ஒண்ணு பண்ணுவீங்க விட்டா.. ஒரு புள்ளே பெத்துக்குவீங்க. இல்லெ? என்ன முறைப்பு இது? உங்க சிரிப்பப்பாத்து மயங்கிட்டிருந்த மாக்னஸ் இல்ல நான். மூஞ்சியெல்லாம் தாடி அழுக்குப் பாட்டமா ஜீன்ஸ்பாண்ட் தொள தொளன்னு வியர்வை நாத்தம் பிடிச்ச ஜிப்ப.. பத்து பதினைஞ்சு வருஷமா என்னமும் மிச்சம் இருக்கா? அக்கால்லாம் போயாச்சு என்னெப் பிடிச்சீங்க இப்ப? தாடி கிருதா தலைமுடி எல்லாம் வளந்து ஒண்ணாப் போச்சு. வெட்டிப் பேச்சு இன்டீஸண்டா பிஹேவ் பண்றது கெட்டவார்த்தை பேசறது கஞ்சா அடிக்கிறது தெருச் சுத்தி வர்றது கேக்க ஆளு இல்லன்னா என்னெச் சுத்துறது. இதுக்குப் பேரு லவ்வா? மிஸ்டர் ரூபன் வேண்ணா சொல்லுங்க. அக்கா மாக்னஸ் உங்களெ லவ் பண்ணா நான் பண்ணலை.”



“ஒவ் அப்பனை லவ் பண்றியாக்கும்!”



“ஆம்மா! அப்பனை லவ் பண்ணத்தாம் பண்றேன். ஆனா உங்க மாக்னஸ்ஸெ பண்ணின மாதிரி லவ் இல்லெ. இது அப்பனை நேசிக்கிற லவ். உங்களுக்கெல்லாம் புரியிற லவ் இல்லெ!”



“தேவுடியா!”



“உங்ககிட்டருந்து வேற எனக்கு என்ன பட்டம் கிடைச்சிடும்! நிஜமா இதுதான் சரி! உங்களுக்கெல்லாம் உங்க மேலதான் லவ்! நிச்சயம் எங்க மேல இல்ல!”



மேபல் நடந்தாள். எப்போதும் போல மோனத்தில் நிற்கும் செய்ன்பீட்டர்ஸ் சர்ச்! கோழி முட்டை வடிவ கோபுரம் காலை வெயிலில் கோணலான நிழலை விழுத்தியது. மெல்லென நடந்தாள். ரூபன் பின்னால் வெறியுடன் அவளைப் பார்த்து நின்றான். அப்பா சொல்வது நிஜம். இவர்கள் எல்லாம் தன்னையே நேசித்து தன்னையே வளர்க்கிற கூட்டம். அம்மான்னும் அண்ணன்னும் அக்கான்னும் தங்கைன்னும் உறவு சொல்லி அதையே சொல்லி ஏமாத்தி காதல்ன்னும் பாசம்ன்னும் வார்த்தையவெச்சு வியாபாரம் பண்ற தன்னல கும்பல்! மைதானம் முழுவதும் இன்னும் பனி விலகல்லெ... எதிரே வர்றது யார்?



வெய்யிலும் பனியும் கலந்து ஒரு மாதிரி சாம்பல் நீலப்புகை மாதிரி எங்கும் படர்ந்து... எதிரில் வந்தது அண்ணன் ஃப்ரெட்ரிக். அட இவரும் காலையிலியே வர்ராறே என்ன கஷ்டமோ. வர்றதெல்லாம் பணம் வாங்கத்தானே?



”வாங்கண்ணே என்னது காலைல? கோயில் பக்கமா?.... ஆச்சர்யமாயிருக்கே...”



“உன்னெப் பாக்கத்தான்.. வந்த.. இது கல்யாண விஷயம்.. அதாவது?”



“கல்யாணமா? யாருக்குன்னே?”



“எனக்கும் ஒரு பொண்ணுக்கும்”



“யாரு அந்தப் பொண்ணு?”



“நீதான் அப்பாட்ட சொல்லி... எனக்கு பயம்.. நீயே சொல்லி.. எப்டியாவது....”



”நோ! நான் மாட்டேன்!... ஏண்ணே உங்களுக்கு இப்படி புத்திபோவுது? நீயே அப்பாட்ட கேளேன்.”



“முடியாதும்மா பதினைஞ்சு வருஷமாவுது அவர்ட்டெ பேசியே. அவரு நெனைச்சிருந்தா எனக்கு வேலையும் வாங்கி வைச்சு எங்கியோ கொண்டு போய் வெச்சு எப்படியோ உசத்தியிருக்கலாம். தன்னலம் புடிச்ச மனுஷன் செய்ய மாட்டார் தெரியும். நான் வாழ்றதே புடிக்காத மனுஷன். நீ இல்லென்னா நான் இருந்த எடத்ல புல்லுல்ல மொளைச்சிருக்கும்? ஆங்காரம் புடிச்ச அயோக்யன்....”



“அப்பாவெ நீ என்னைக்கி அப்பாவா நெனச்சிருக்கே? நீதான் இருக்கியே அப்பா பொண்ணா நான் இல்லெங்கறியே நான் அப்பா பொண்ணு மட்டுமில்ல உனக்கும் தங்கச்சிதான். அதான் கேக்கிறேன் ஒரு கல்யாணம் பண்ணி வெய்யின்னு.. ஏண்ணே இப்படி அப்பாவெ ஒதுக்கி வெக்கிறீங்க? உங்களுக்கெல்லாம் என்ன செய்யல்லெ அவரு? உங்களுக்கு எடையில நான் ஏண்ணே இப்டி அவதிப்படணும்? வீட்டுக்கு வரமாட்டெ.. பத்து வருஷமாச்சு.. ஒனக்கு ஒரு வீடே கட்டி வெச்சிருக்காங்க அப்பா...”



“ஏய் சும்மா அப்பனெப் பத்தி பேசாதே எனக்காக வீடு கட்டியிருக்கான் ராஸ்க்கல் உயிலெப் பாத்தேன். செத்தாக் கூட நான் எடுத்து விக்ய முடியாது தெரியும்ல்ல?”



“நீ விக்யறதிலியும் சுட்டு எரிக்கிறதிலியுமே இரு... பதினைஞ்சு வருஷமா நீ எம்மெஸ்ஸி பாஸ் போனதிலிருந்தே நீ என்னதாண்ணே பண்ணீட்டிருக்கியாம்? இந்த கஞ்சா அடிக்கறிதெத் தவிர தெனம் தெனம் ராத்ரி வந்து செலவுக்குப் பணம் வாங்கிட்டுப் போறியே அதெல்லாம் மட்டும் அப்பாவுக்குத் தெரியாதுன்னு நெனைக்கிறியா? இல்லெ ரொம்ப ஞாயம்ங்கிறியா?”



“அவனுக்குத் தெரிஞ்சா எனக்கென்ன தெரியாட்டி எனக்கென்னடீ. எனக்கு வேணும்ங்கும்போது வருவேன். இப்ப எனக்கும் ஒருத்தன் பொண்ணு தர்றேங்கிறான். பண்ணி வெக்யச் சொல்லு அவ்வளவுதான்.”



“முடியாது”



“ஏம் முடியாதுங்கிறே”



”என்னால முடியாது நீயே போயி கேளு”



“ஓஹா சின்னத்தெ சொன்னது சரிதான். உன்னெ வெச்சிட்டிருக்க வரைக்கும் நாங்க தெருவுலதான் நிக்கணும். வர்றேன் ஒரு நாளைக்கி உங்கப்பனெ கண்டமாவெட்டி....”



அவன் வாயிலிருந்து அசிங்கங்களாய்ப் புறப்பட்டு வந்து கொண்டேயிருந்தது. வழக்கம்தான் இதுவும். மேபல் நடந்தாள். இவுங்க யாரும் மாறமாட்டாங்க. ஏன் மாறணுமாம் இடையில நீ இருக்க வரைக்கும்.. இடையில இருந்தது இருக்கிறது எல்லாம் அவள். மேபல்தானே.. ஒருத்தன் அண்ணன்... ஒருத்தன் ஆசைப்பட்டவன்... ஒருத்தன்... அப்பன் ஜீஸஸ்.... இது என்ன சிலுவை இது எனக்கு ஏன், கண்ணீர் வழிய மேட்டுத்தெருவில் திரும்பினாள் மேபல். அவளுக்கும் தெரியும் இதெல்லாம் இப்படியே.. இப்படியே...



வாசலில் ஜீப் நின்றிருந்தது... ஆடர்லிகள் நின்று கொண்டிருந்தார்கள்.. ரெண்டு வேலைக்காரர்கள் துப்பாக்கிகளைத் துடைத்து க்ளீன் பண்ணிக் கொண்டிருந்தார்கள். அடுப்பங்கரையிலிருந்து சின்னத்தை தாளிக்கும் மணம் வீடு முழுவதும் கமழ்ந்தது. சின்னத்தை இருக்கிற வரைக்கும்... எதுவும்.. மாறாமல் எப்படியோ ரூபன் அவனும் அப்படியே. ப்ரெடி... அவனும் அப்படியே கொஞ்சம் கொஞ்சமா.. வாம்மா வேட்டைக்கிப் பெறப்பட்டுகிட்டு இருக்கேன்! வர்றியா நீயும்...? போலாம்ப்பா அதுதான் சரி... வேட்டை மனுஷனுக்கும் மிருகத்துக்கும் பேதமில்லாத காடு வேதாரண்யம் காடு... சிங்கம் புலியெல்லாம் கிடையாது. ஆடு மான் முயல் காட்டுப் பன்றி கடுவா எல்லாம் உண்டு.... ஒண்ணை ஒண்ணு சாப்டும் ஆளு மனுஷனைக் கண்டா பதுங்கும். ஒளியும். பயம். பறவைக் கூட்டம் கொளம் குட்டை எல்லாம் உண்டு. மேடுகள் புகையிலைச் செடிகள் வளர்ந்து புதர்புதராய் சிட்டுக்கள் வலியன் குருவிகள் இடையில் கழுகுகள் செத்த மிருகங்களைத் தின்னும் நரிகள்.



ஜீப் பறந்து கொண்டிருக்கிறது. இருபுறங்களிலும் செம்மண் மேடுகள் கள்ளிக் குப்பல்கள். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி ஆறாய் நனைப்பது போலிருந்தது மேபலுக்கு. முகத்தைத் துடைத்துக் கொள்ள முயன்றபோது கண்ணீரேயில்லை. அழுவது நன்றாய்ப் புரிந்தது. அவளுக்கு விம்மவேயில்லை. குரலே எழும்பவில்லை. கண்களிலிருந்து எதுவும் வடியவில்லை. அழுகை இல்லை. கண்ணீரில்லை. பக்கத்தில் அப்பாதான் ஜீப் ஓட்டினார். வேட்டை ஒன்றுதான் குறி. கடம்பைமான்கள் நான்காவது சுட்டுத் தள்ள வேண்டும். விடமாட்டார். மேபலுக்கும் அதே பரபரப்பு. எங்காவது மானின் கண்கள் தெரிகிறதா. உச்சிவேளை கடந்தும் ஜீப் காட்டுக்குள் பாய்ந்து போய்க் கொண்டேயிருந்தது.



மேபல் கதறியழ முனைந்து பார்க்கிறாள். இனி அது முடியாது. கோவிலில் கூட முடியாதுதான். எப்போதும் இனி அப்பாவுடன் வேட்டைதான். இருட்டும் போது மிருகங்கள் வரும் எங்கும் பயம் பதிவிருக்கிறது. அப்பாவுடன் இருக்கும் வரை எந்த மிருகமும் வராது. முடியாது. மேபல் தப்ப முடியாது. அவள் இனி எங்கும் பறந்து போக முடியாது.



அப்பா இருக்கும் வரை மட்டுமல்ல அப்பாவுக்கு அப்புறமும். மேபலுக்கு மேபல் மட்டும் போதும்!



-கணையாழி, ஜனவரி 1988