வியாழன், 20 அக்டோபர், 2011

Pothigai.

தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை. பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில், மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல் எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும் திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம் முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள் சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம் பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி ஆசிரியர் பசுபதி இளமைக் காலத்தில் ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுதான் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார். அப்பா வழிப்பாட்டி சொன்ன இயற்கை குறித்தான கதைகளும் இப்பெரு முயற்சிக்கு அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம், எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன், ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.
இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன் காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.
தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும் பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில் இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம் பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.
கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன் செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு, பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும் வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக் காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.
ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00 எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை” சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும் யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால் படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.
தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில் சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு, கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம் படமாகப்பட்டிருக்கின்றது.
ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும் மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது. பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான். பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.
சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி, திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.
சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428
Clap
எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும் நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது. நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை இசைக்கும் முதல் மணி இவர்தான். ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
Clap

Pothigai.

தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை. பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில், மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல் எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும் திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம் முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள் சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம் பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி ஆசிரியர் பசுபதி இளமைக் காலத்தில் ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுதான் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார். அப்பா வழிப்பாட்டி சொன்ன இயற்கை குறித்தான கதைகளும் இப்பெரு முயற்சிக்கு அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம், எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன், ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.
இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன் காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.
தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும் பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில் இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம் பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.
கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன் செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு, பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும் வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக் காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.
ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00 எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை” சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும் யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால் படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.
தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில் சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு, கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம் படமாகப்பட்டிருக்கின்றது.
ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும் மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது. பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான். பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.
சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி, திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.
சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428
Clap
எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும் நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது. நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை இசைக்கும் முதல் மணி இவர்தான். ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
Clap

Pothigai.

தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை. பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில், மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல் எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும் திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம் முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள் சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம் பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி ஆசிரியர் பசுபதி இளமைக் காலத்தில் ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுதான் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார். அப்பா வழிப்பாட்டி சொன்ன இயற்கை குறித்தான கதைகளும் இப்பெரு முயற்சிக்கு அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம், எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன், ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.
இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன் காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.
தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும் பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில் இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம் பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.
கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன் செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு, பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும் வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக் காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.
ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00 எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை” சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும் யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால் படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.
தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில் சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு, கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம் படமாகப்பட்டிருக்கின்றது.
ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும் மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது. பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான். பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.
சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி, திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.
சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428
Clap
எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும் நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது. நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை இசைக்கும் முதல் மணி இவர்தான். ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
Clap

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Prabanchan. Two ladies.



இரண்டு பிரஞ்சுப் பெண்கள்



இரண்டு பிரஞ்ச் பெண்களை அறிமுகம் செய்துகொள்ளப் போகிறோம். பொதுப்புத்தியில் பதிந்து போயிருக்கும் 'அழகி' என்கிற பிம்பமோ, வீர தீரச் சாகசம் செய்த பெண்மணிகளோ அல்லர். அவர்கள் இருவருமே தம் காலத்து சமூக வரம்புகளுக்குள் ஒரு மீறலை ஏற்படுத்தியவர்கள் என்பதனாலும், தங்கள் செயல்பாடுகளுக்குத் தங்கள் ஆத்மாவின் உள்ளுணர்வின் திசை காட்டுதலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள் என்பதாலேயே நம் கவனத்தைக் கோருப வர்களாக இருக்கிறார்கள். முதலில் ழான். பிரான்சில் பாரிசில் பிறந்து மருத்துவம் பயின்று இந்தியாவுக்கு வந்தவர் அவ்பேர். அரசு மருத்துவமனை அதிகாரியாகப் புகழ்பெற்றவர் அவர். பிரஞ்சுக்காரர்களின் தலை நகரான புதுச்சேரித் தெருவில் அவ் பேர், எலிசபெத்தைச் சந்திக்கிறார். ஒரு போர்ச்சுக்கீசியரின் இந்திய மனைவிக்குப் பிறந்தவர் எலிசபெத். புதுச்சேரித் தெருக்களில் ஷாம் பெய்ன் ஒயினின் மதுர மணம் பரவிய ஒரு மாலையில் அவர்கள் திருமணத்தில் இணைகிறார்கள். அவர்கள் எட்டுக் குழந்தைகளைப் பெறுகிறார்கள். அதில் மூத்தவள் ழான். பிறந்த வருடம் 1706.



ழானின் குழந்தைப் பருவம், கோட்டையைச் சுற்றிய பூங்காக்களில் பட்டாம்பூச்சியின் பின்னே மலர்ந்து கொண்டிருந்தது. நோயாளிக் கிடங்குக்கு அருகேயே இருந்த அவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால், கரும் பச்சைப் பாய் விரித்த கடல் தெரிந்தது. வீட்டு மாடி ஜன்னலிலிருந்து, புரண்டு புரண்டு வரும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் தன்னை மறப்பவள் ழான். கடலும் அலையும் அவளுக்குத் தினம் தினம் புதிது புதிதாய் என்னென்னவோ சொல்லிக் கொண்டே இருந்தன.



கடல் எப்போதும் ஒரு கண்ணாடி. மனிதர்களின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் அது பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். தெருக் குழந்தைகளிடம்தான் அவள் தமிழ் பேசக் கற்றாள். பிரஞ்ச் ஒலியில் தமிழ் பேசினாள். கடற்கரை மணலில் அவள் நிறைய வீடுகள் கட்டினாள். மறுநாள் சென்று பார்த்தால், அவை இருப்பதில்லை. தெருக்களில் ராணுவ, காவல் துறை ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். வெள்ளைக்காரர்கள், தனியாகவும் தம்பதி சமேதராகவும் தெருக்களில் நிரம்பி இருப்பார்கள். கோட்டைக்குள் அடிக்கடி உயர் உத்தியோகஸ்தர்கள், குவர்னர், துணை குவர்னர்களின் கொண்டாட்டங்கள் நிகழும். நிறைய மதுப்புட்டிகளுடன் வயதான ஒயின்கள் மனிதர்களைப் பருகிக்கொண்டே இருக்கும். பெரிய பெரிய தீனி மேசைகள் போடப்பட்டு இந்திய ஐரோப்பிய உணவு வகைகள் பரிமாறிக் கொள்ளப்படும். ழான் இந்திய உணவை நோக்கியே கை நீட்டுகிறவளாக இருந்தாள்.



அம்மா எலிசபெத் 'இந்தியப் பெண்ணின்' மனோபாவங்களைக் கொண்டவளாக இருந்தார். அதாவது தன்னைப் பின் கட்டிலேயே வைத்திருக்கும் பெண். (ஆண்களால் அப்படி வைக்கப்பட்டு அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பெண்.) ழானுக்கும் அவள் அம்மாவுக்கும் இது பற்றியே முரண்கள் தோன்றிக் கொண்டிருந்தன. தனக்குப் பறக்கத் தோன்றுவதை நினைவுறுத்தினாள் ழான். பெண்ணுக்குச் சிறகுகள் தேவையில்லை என்றார் எலிசபெத்.



ஒருநாள், கடற்கரை ஓரம் நின்று வந்துபோகும் கப்பல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ழான். அவளைத் தேடிவந்து அவள் வீட்டார் அழைத்துச் சென்றார்கள். வீட்டில் அவளை மணக்கப்போகும் மாப் பிள்ளை வேன்சான் காத்திருந்தார். பிரஞ்ச் கும்பினியில் ஒரு உத்தியோகஸ்தர். அதோடு வணிகர். தேவகுமாரனுக்கு முன்னால் அவள் விரலில் வேன்சான் திருமணத்தை உறுதி செய்தார். ழானுக்கு அப்போது வயது 13.



திருமணத்தின் அர்த்தத்தை இரவுகளில் அவள் புரிந்துகொள்ள நேர்ந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. கூடிக் குசுகுசுத்துக் குருட்டறைகள் இட்ட கரு. போர்க் குதிரைகளின் காலில் இடர்பட்டாற்போல் இருந்தது. தொடர்ந்து பதினொரு குழந்தைகளைப் பெற்றாள் ழான். சிலது வாழ்ந்தன. சிலதைக் கர்த்தர் எடுத்துக் கொண்டார்.



வீட்டின் வரவேற்பறையில் இப்போதெல்லாம் புதிய நபர், அவள் கணவனுடன் பேசிக்கொண்டு இருப்பதை அவள் காணத் தொடங்கினாள். புதுச்சேரிப் பகல்கள் இத்தனை வெளிச்சமாக இருப்பதை இப்போது தான் அவள் பார்த்தாள். வேன்சானின் மதாம் என்ற முறையில் விருந்தாளிக்குக் குடிக்கவும், அருந்தவும், தின்னவும் அவள் பணி செய்ய வேண்டி இருந்தது. அந்த இளைஞன், பிறந்த பிரான்ஸ் தேசத்தையும் விட்டு தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் துய்ப்பிளக்ஸ். அவன் கண்களில் கனவு மிதந்து கொண்டிருந்தது. அரசியலில் பெரும் சாதனைகளைச் செய்யப் போகிறவன்தான் என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வார்த்தைகளில் தங்க நாணயங்களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பணம் பண்ண வேண்டும். பண மூட்டைகளை இருக்கைகளாகப் போட்டு அவைகளின்மேல் உட்கார வேண்டும். கும்பினியின் மிக முக்கிய இடத்தில் இருந்தான். விரைவில் துய்ப்பிளக்ஸ், வேன்சானின் வியாபாரக் கூட்டாளியாக மாறினான். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். சரக்குகளைக் கப்பல்களில் ஏற்றிக் கரைகடந்த நாடுகளுக்குச் சென்று விற்றுத் திரும்பிக் கொண்டிருந்தான் வேன்சான்.



துய்ப்பிளக்ஸ், மிக நுணுக்கமான மெல்லிய உணர்ச்சிகள் கொண்டவனாகத் தெரிந்தான், ழானுக்கு. அவள் குழந்தைகளிடம் அவன் பிரியமாக இருந்தான். அவன் வருகை, வரவேற்பறையில் பகல் நேரத்திலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருப்பதாயும், சாம்பிராணிப்புகை மணமூட்டுவதாகவும் ழானுக்குத் தோன்றியது. புகை, இரவு நேரத்திலும் அவள் கட்டில் ஓரம் கமழ்வதாகவும் அவளுக்குத் தோன்றவாரம்பித்தது. இந்த நேரத்தில்தான், குழந்தைக் கை முறுக்கைக் காக்கை அடித்ததுபோல், துய்ப்பிளக்ஸ், புதுச்சேரியிலிருந்து கல்கத்தாவை அடுத்த சந்திரநாகூருக்கு மாற்றப்படுகிறான். அங்கு அவன் கும்பினியின் இயக்குநர். ஹுக்ளி நதிக்கரை ஓரம் அவன் இருக்கை இருந்தது. சில்லிட்டு வீசிய இரவு நேரக் காற்று துய்ப்பிளக்ஸை இம்சை செய்தது என்று ஒரு வரலாற்றாளர் எழுதுகிறார். வேன்சானைத் தான் இருக்கும் பகுதிக்கே அழைத்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடர்கிறான் துய்ப்பிளக்ஸ். வேன்சானுடன் ழானும் வங்கத்துக்குக் குடிபெயர்கிறாள்.



விரைவிலேயே ஒரு பெரிய வணிகப் பயணத்தை மேற்கொண்ட வேன்சான், புயலில் சிக்கி, உடல் நலம் கெட்டு, வங்கம் திரும்பிய சில நாட்களுக்குள் மரணத்தை அழைத்துக் கொள்கிறான். நண்பனுக்காகத் துக்கம் காத்த துய்ப்பிளக்ஸ், கிறித்துவ நெறிகளுக்குட்பட்டு ழானைத் திருமணம் செய்துகொள்கிறான். திருமணம் நிகழ்ந்த சில நாட்களுக்குள் துய்ப்பிளக்ஸ், புதுச்சேரியைத் தலைமை அகமாகக் கொண்ட பிரஞ்சு பிரதேசத்துக்குக் குவர்னராக உயர்த்தப்படுகிறான்.



ழான், தன் கனவு நகரமான புதுச்சேரிக்குத் திரும்புகிறாள். கடல் அலைகள், அதே சப்தத்துடன் ஆர்ப்பரிக்கிறது. கடற்கரை மணல் மட்டும் லேசாக அழுக்குப்பட்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. இப்போது அவள் நகரத்தின் முதல் பெண்மணி. குவர்னர் துய்ப்பிளக்ஸின் மதாம். ஆகவே மதாம் துய்ப்பிளக்ஸ். ஒரு உயர்தரத்து அதிகாரி, 'மதாம் துய்ப் பிளக்ஸுக்கு நகரத்தின் நல்வரவு' என்கிற போது, 'நான் மதாம் துய்ப்பிளக்ஸ் மட்டும் இல்லை. நான் ழான் அல்பெரும்கூட, என்கிறாள். பதவியும், சௌகர்யப் பௌதிகப் பொருள்களும், திரும்பிய பக்கமெல்லாம் ஏவல் பாத்திரங்களும், அதீத உண்மைக் கலப்படம் அற்ற பணிவு நாடகங்களும் அவளை எரிச்சல் அடையச் செய்தன. கடற்கரையில் தன்னந்தனியாகக் காலாற நடக்கும்போதுகூட, துப்பாக்கிச் சனியன்கள் அவள் பாதுகாப்பாயின. துய்ப்பிளக்ஸ் குவர்னர் என்றால், நான் அதில் பாதி. அதிகாரச் சுவருக்குள் அலங்கார பொம்மை அல்ல நான் என்ற முடிவுக்கு அவள் ஒரு நாள் வந்தாள்.



அந்தக் காலத்தில் லஞ்சம், ஊழல் என்பதெல்லாம் அரசு அந்தஸ்தோடு விளங்கின. அதிலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மானுட சங்கல்பங்களை உலகுக்கு வழங்கிய பிரான்சிலா என்றால் நமக்கு வியப்பாகத் தோன்றலாம். பிரஞ்சுப் புரட்சிக்கு முந்தியவள் ழான். அதோடு, பின்வந்த காலனிய வாதிகள், அந்தத் தத்துவங்களை பிரஞ்சு நாட்டு எல்லைக்குள் முடக்கிக் கொண்டார்கள். காலனி நாடுகளில் மிக மோசமான ஆதிக்கச் சக்திகளாகவே இருந்தார்கள். பிரான்ஸ் தேசத்தில் முக்கிய, அ-முக்கியப் பதவிகள் எல்லாமும் ஏலத்துக்கு விற்று அதிகப் பணம் தருவோரே பதவியில் அமர்த்தப்பட்டனர்.



மாநிலத்தில் கோர்த்தியேவாக, மிக முக்கிய அரசுப் பொறுப்பில் இருந்த கனகராயமுதலி, காலம் பண்ணிப் போனார். ஒரு பெரிய அறுவடை பூமியாயிற்று புதுச்சேரி. ஏற்கெனவே, துணை கோர்த்தியே வாக-துபாஷியாக-குவர்னருக்கு நெருக்கமான ஆனந்தரங்கப் பிள்ளைக்கே அந்தப் பதவி போய்ச்சேரும் என்றே அரசியல் வட்டாரம் நினைத்தது. ஊடாக, அன்னபூர்ண ஐயன் என்கிற வைத்தியன் புகுந்து, ழானைச் சந்திக்கிறான். அவளுக்கு 1500 வராகனும் (1 வராகன்- 3 ரூபாய்), குவர்னருக்கு 5000 வராகனும் தருவதாகவும், அந்தப் பதவி தனக்கு வேண்டும் என்கிறான். செத்துப்போன கனகராய முதலியின் தம்பி சின்ன முதலியும் அந்தப் பதவிக்குப் பணம் தரத் தயாராகிறான். ழான், மிக புத்திசாலித்தனமாக யோசிக்கிறாள். பதவியின் 'விலை'யை ஆனந்தரங்கப் பிள்ளையிடம் இவ்வாறு சொல்லிக் கொக்கி போடுகிறாள்.



'அந்த அன்னபூர்ண ஐயனுக்கு வாணிபம், நிர்வாகம் போன்ற எதிலுமே அனுபவம் இல்லை. நீயானால் இந்த உத்தியோகத்தில் சின்னப் பிள்ளையாயிருந்து எங்கள் கையின் கீழ் பழகினவன். . . நீ எனக்குப் பிள்ளை. துரையும் உன்னைப் பிள்ளையாக நினைத்தே என்னிடம் கெட்டியாகச் சொன்னார்' என்பதாகச் சொல்லி, பிள்ளையை ஆராய்கிறாள் ழான்.



'காசு சத்தம் கேட்டாலே அம்மாள் வாயைத் திறக்கிறாள்' என்று பிள்ளை (தன் டைரியில்) எழுதுகிறார். குவர்னர் துரை வாங்கலாம். துரைசானி லஞ்சம் வாங்கக் கூடாதா என்பது ழானின் கேள்வியாக இருந்தது. ஆனந்தரங்கர், குவர்னருக்கு மட்டுமல்லாமல் தனக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் ழான். கனகராய முதலி வாரிசில்லாமல் செத்துப் போக, அவர் சொத்துக்கு மனைவி, மருமகள், தம்பி என உறவுகள் எதிர்பார்க்க, சொத்துகளைத் தன்பக்கம் வளைத்துக் கொள்ள பெரு முயற்சி எடுத்து வெற்றியும் பெறுகிறாள் ழான். அரசாங்கத்தின் முக்கிய அச்சாணியாகவும் பணி ஆற்றுகிறாள். பிரஞ்சியர்க்கும் ஆங்கிலேயர்க்கும் விளைந்த யுத்தத்தின் போது, ஊரைவிட்டு ஓடிப்போன செட்டிகள், கோமட்டிகளின் வீடுகளில் தாழ்த்தப்பட்ட, வீடற்றவர்களைக் குடியேற்றுகிறாள் ழான். தனக் கென்று தனிப்படையே வைத்துக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறாள் ழான்.



துய்ப்பிளக்ஸுக்குப் பன்னிரண்டாவது குழந்தையைப் பெறுகிறாள் ழான். ஆண் குழந்தை. அது காலை நேரத்தில் பிறக்கிறது. கோயில் மணியோசை ஊரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மக்களுக்குச் சர்க்கரை விநியோகம் செய்கிறார் பிள்ளை. மாலை, மணியோசை துக்கத்தைக் கொண்டு சேர்க்கிறது. பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் இறந்து போகிறது.



சுமார் 12 ஆண்டுத் துரைத்தனத்துக்குப் பிறகு, பிரான்ஸ், துய்ப்பிளக்ஸைத் திருப்பி அழைத்துக் கொள்கிறது. வியாபாரம் செய்வதற்கு மாறாக, நாடு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டான் என்பது குற்றச்சாட்டு. நாடு பிடிக்கும் வியாபாரம் வெற்றி பெற்றிருக்கும் என்றால் பிரான்ஸ் அவனைப் பாராட்டி இருக்கும். துய்ப்பிளக்ஸ் வீழ்ந்த இடத்தில் கிளைவ் வெற்றி பெற்றான். ஏறக்குறைய ஒரு கைதியாகப் பிரான்சுக்குப் புறப்பட்டான் துய்ப்பிளக்ஸ். மகள்கள், மரு மகன்கள் ழானைத் தங்களுடன் வைத்துக் கொள்ளவே பிரியப்பட்டார்கள். ஆனாலும் கைதியுடன் தான் தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டாள் ழான். பிரான்சுக்குப் சென்ற ழான், அங்குள்ள குளிர் வாட்ட, மண் ஒட்டாமல் போக, வறுமை வந்தெய்த, நிராசையுடன் அங்கேயே தன் கடைசி மூச்சை விட்டாள். இறக்கும்முன், சில நாட்கள் முன்னர், புதுச்சேரியில் இருந்த தன் தோழிக்கு எழுதினாள்.



'புதுச்சேரி மண்ணில் இறந்து, அங்கேயே புதைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். அது நடக்காது என்றே தோன்றுகிறது'



ழான் ஆசை நிறைவேறவில்லை. சரியாக ஐம்பது ஆண்டுகளே மண்ணில் வாழ்ந்தாள், அவள். ஆண்களால் மட்டுமே நிரம்பி இருந்த அரசியல் களத்தில் தனக்கான இடத்தைக் கடும் பிரயாசையுடன் ஏற்படுத்திக் கொண்டவள் அவள். அவள் அரசியல் பிழைத்தாள் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். முதலிலும் இடையிலும் கடைசியிலும் தப்பாகவே ஆகிப்போன அரசியலில் அவள் மட்டுமே பிழை செய்தாள் என்பது எங்ஙனம் சரி? அவள், அவள் விருப்பப்படி வாழ்ந்தாள். தனக்கான தடத்தைத் தானே தேடினாள். தனக்கான கூட்டைக் கட்டினாள்.



வாழ்க்கை அவளுக்காகத் தரப்பட்டது. அதை முழுதுமாகவே அவள் வாழ்ந்தாள். அப்புறம் என்ன?



அடுத்த பெண், மார்க்கெரித் துராஸ். பிரஞ்சு மொழியில் எழுதிய 'காதலன்' நாவலில் இடம் பெறும் அந்த 'அவள்'. பிரஞ்சு மூலத்திலிருந்தே தமிழ் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. உலகம் முழுதும் சுமார் 40 மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்ட நாவல் இது.



ஆசிரியை மார்க்கெரித் துராஸ், 1996 வரை வாழ்ந்தவர். வாழ்வின் கடைசிப் பகுதியில் மிகுந்த புகழோடு, நிறைய மர்மப் பூச்சுகளைப் பூண்டவராக விளங்கியவர். தீவிரமான அரசியல் ஈடுபாட்டுக்கும் செயல்பாட்டுக்கும் இவர் பேசப்பட்டிருக்கிறார். பிரான்சின் அனைத்து அரசியல், கலாச்சாரப் போராட்டங்களிலும் அழுத்தமாகப் பங்கெடுத்துக் கொண்டவர். பிரான்ஸ், ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்குள்ளானபோது தலைமறைவு வாழ்க்கையை மேற் கொண்டு நாஜிகளுக்கு எதிராக இயங்கியவர். மே 68 மாணவர் போராட்டம், அல்ஜீரியா நாட்டின் விடுதலை ஆதரவுப் போராட்டம், தீவிரப் பெண்ணியம் என்று இவர் வாழ்க்கையை அடர்த்தி பண்ணிக் கொண்டார். கீழைத் தேசத்தை நேசித்த பெண்மணி. கங்கையையும், கல்கத்தாவையும் எழுதி இருக்கிறார். துராசின் நண்பரும், பிரான்சின் ஜனாதிபதியுமான மித்ரானிடம், ஒரு உணவு விடுதியில் உரையாடியபோது அவர் சொன்னார். 'மித்ரான். நான் இப்போ சாதாரணமானவள் இல்லை. உன்னைக் காட்டிலும் நான் பெரியவள். உலகம் என்னை அறியத் தொடங்கி இருக்கிறது.’ என்றபோது மித்ரான் 'அதிலென்ன சந்தேகம். உன் மரியாதை பற்றி நான் ஆச்சரியப்படவில்லை' என்றார்.



துராசின் எல்லாப் படைப்புகளுமே தன் வரலாறு வகையைச் சேர்ந்தவை. அந்த வரலாற்றைச் சொல்ல அவர் தேர்ந்தெடுத்த வசீகரமான மொழியும், விசித்திரச் சொப்பனம் காணும் பாத்திரங்களும் அவர் படைப்புகளைத் தரப்படுத்தி இருக்கின்றன. ஒற்றைத் திறப்பு அல்லாது, பாத்திரங்களின் பல கதவங்களைத் திறக்கிற நுட்பம் அவருக்கு இருந்தது. ஒன்றைச் சொல்லும்போதே பல அடுக்குகளையும் வெளிச்சப்படுத்திக் கொண்டே நகரும் எழுத்துப்போக்கு துராசுடையது.



மனிதப் புரிதலில், 'முழுமை' என் பதில் அறவே நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் துராஸ். தத்தளிப்பவர்கள், கனவுலகவாசிகள், நீர்த்த கற்பனையில் மிதப்பவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள், விட்டேற்றியான வழிப்போக்குப் பயணிகளின் மனோபாவக்காரர்கள், உறுதி என்பதை அறியாதவர்கள் என்பவர்களே துராசின் பாத்திரங்கள். உண்மை என்பது ஒன்று இல்லை ஆதலால், உண்மை என்பது போன்ற ஒன்றைக் கட்டமைக்கிறவராக இருக்கிறார் துராஸ். தான் அறிந்த 'உண்மையை', மொழிக்குக் கொண்டுவரச் சிரமப்படுபவர்போல நடிக்கிறார் துராஸ். எதிர்காலத்தில் எழுத்து எப்படி இருக்கும் என்பது பற்றித் துராஸ் இப்படிச் சொல்கிறார். 'எதிர் காலத்தில் எழுத்தென்பது எழுதப்படாததாக இருக்கக்கூடும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. மிகச்சுருக்கமாக இலக்கணம் இன்றி சொற்களை மட்டும் நம்பி எழுதப்படும். இலக்கணம் மறுக்கும். அலைக்கழிக்கும் சாத்தியங்களுடன் இருக்கும்'.



காதலன் 1984-இல் பிரசுரமாயிற்று. பதினாறு வயதுகூட நிறையாத ஒரு பெண்ணுக்கு அவளை விடவும் இரு மடங்கு வயதான ஆணுடன் காதல் ஏற்படுகிறது. அவன், பணக்கார சீன இளைஞன். அவள், வியட்நாமில், பிரஞ்ச் ஆதிக்கத்துக்குப் பட்ட பூமியில் பிறந்து வளர்பவள். ஏழை. அல்லது தேவைகள் பூர்த்திசெய்து கொள்ள முடியாத சூழல் உள்ள குடும்பம். இருவருக்குமான 'காதல்', நிகழ்காலம் தொடங்கிக் கடந்த காலத்துக்கும் பின்வாங்கிச் சொல்லப்படுகிறது. இருவருக்குமே இக் காதல் 'கைகூடாது' என்பது தெரியும். அவளுக்கு அவன் தான் முதல் அனுபவம். அவனுக்கு அது உண்மையான முதல் காதல்.



'கை கூடாது' என்பதுதான் என்ன? காதல் என்பது முறையாக, திருமணத்தில் பழுத்து, குடும்பத்தில் நிலை பேறுடையது என்பதாகக் கருதுவதையே கைகூடுதல் என்று கருதப்படக் கூடியது. இவ்வாறு நலமோங்கும் விதத்தில் அதன் வளர்ச்சிப் போக்காக அமையாதது, திரளாதது, கைகூடாதது. துராஸ், கைகூடாமல் போனால் என்ன போயிற்று என்கிறார். சூரியன் அஸ்தமனம் நின்றுவிடுமா என்கிறார் அவர். புத்திக்குள் ஏன் இந்த நிறுவனச் சிலுவைகளைச் சுமக்கிறீர்கள் என்கிறார் துராஸ். நியாயம்தானே?



துராசின் காதலன் நாவலில் வரும் அவள், அந்த அந்தக் கணத்தில் வாழ்பவள். அவனுக்கு அருளப்பட்ட அற்புதம் எனத்தக்க வாழ்வின் கணங்களின் முழுமையில் தன்னைக் கரைத்துக் கொள்கிறாள். அவள் தன் அனுபவங்களைச் சொல்வதாக, தன்மை இடத்தில்வைத்து நிகழ் காலத்தையும் கடந்ததையும் இணைத்துச் சொல்லுவதாக நாவல் நிகழ்கிறது. நாவல் இப்படித் தொடங்குகிறது.



'ஒரு நாள் வளர்ந்து பெரியவளாக இருந்த காலம். பொது மண்டபமொன்றில் நின்று கொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், 'வெகுநாட்களாக உங்களை அறிவேன். பலரும், நீங்கள் இளவயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ இப்பொழுதுதான் உங்கள் முகம் அழகாயிருக்கிறது. அதைச் சொல்லவே வந்தேன். உங்கள் இளவயது முகத்திலும் பார்க்க, சோபையற்றிருக்கும், இப்போதைய முகத்தை விரும்புகிறேன்' என்றான்.



'எனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை. இருந்தால்தானே சொல்ல. மையம் என்ற ஒன்றை ஒரு போதும் கண்டதில்லை' எனச் சொல்லும் அவள், தொடர்கிறாள். ‘என் பதின்பருவத்துக் காலங்களான பதினெட்டும் பதினைந்தும் என் கண்முன்னே விரிகின்றன. தெரிகிற முகம் பின்னர் (அதாவது எனது நடுத்தர வயதில்) குடித்துச் சீரழியவிருந்த எனது முகத்தை ஓரளவு முன்கூட்டியே தெரிவிக்கும் முகம். கடவுளால் நிறைவேற்ற இயலாத பணியினை மது முடித்து வைத்தது. என்னைக் கொல்லும் பணியையும் மது ஏற்றிருந்தது’ என்று விசாரத்துக்குள் புகுகிறாள் துராசின் கதை நாயகி.



இப்போது அந்தப் பெண்ணின் முகம் சுமாராக, கதாநாயகித்தனம் இல்லாத விதத்தில் தட்டுப்பட்டிருக்கும். அவள் தன் அம்மாவிடம், 'தான் எழுதப்போவதாகச் சொல்கிறாள். அம்மா மௌனம் காத்தாள். பின், 'என்ன எழுதப்போகிறாய்' என்கிறாள். அவள் 'புத்தகங்கள், நாவல்கள்' என்கிறாள். அம்மா முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, தடித்த குரலில் 'முதலில் கணக்கில் பட்டம் பெற்றாகணும். பிறகு உனது விருப்பம் போல் எதையாவது எழுதித் தொலை' என்கிறாள். எழுத்தின்மேல் இப்படியான 'கரிசனம்' உலகம் முழுதும் இருக்கிறது போலும்.



நமது அவளின் ஆசிரியர், அவள் அம்மாவிடம், அவள் பிரஞ்சுப் பாடத்தில் முதலாவதாக வந்திருப்பதைச் சொல்கிறாள். அம்மா அமைதியாக இருக்கிறாள். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. நமது கதாநாயகி இப்படி எழுதுகிறாள். 'பிரஞ்சுப் பாடத்தில் முதலாக வந்திருப்பது அம்மாவின் ஆண்பிள்ளைகள் அல்லவே!'



ஆண்களுக்கான தொப்பியை அவள் அணிய நேர்கிறது. அதற்கும் வீட்டு வறுமைக்கும் சம்பந்தம் இருக்கிறது. அம்மாவைச் சுற்றி இருப்பது வறட்சியும் பாலையும். அவள் பிள்ளைகள் பாலை நிலமே, எஞ்சி இருப்பது பெண் மட்டுமே. அனேகமாக பணத்தை எப்படி வீட்டுக்குக் கொண்டுவருவது என்பதை அவள் புரிந்து கொள்ளலாம். ஒரு வேளை அதற்காகத்தான் அம்மா தன் மகளை வேசிக்கோலத்தில் வெளியில் அனுப்புகிறாளோ என்னவோ?



அவள் முதல் முறையாக ஆணை அறிந்த அந்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறாள். ஒரு பெண்ணின் பார்வை மட்டுமல்ல. ஒரு ஐரோப்பியப் பெண், ஒரு சீனனை ஏற்றுக் கொண்ட விதம் பற்றியும்கூட. அவள், தான் ஒரு பிரஞ்சுக்காரி என்பதை ஏனோ மறப்பதே இல்லை. 'தனது சொகுசுக் காரிலிருந்து மிடுக்குடன் ஒருவன் இறங்குகிறான். இங்கிலீஷ் சிகரட் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆண்கள் தொப்பியும், மின்னும் காலணியுமாக நிற்கும் சிறுமியைப் பார்க்கிறான். அவளை நோக்கி நடந்து வருகிறான். அவன் தயங்குவதுபோலத் தெரிந்தது. அவனது கை நடுங்குகிறது. சிகரட்டை நீட்டுகிறான். சைகோனில் இருக்கிற வீட்டுக்கு வருகிறாயா என்கிறான். அவள் மறுக்கவில்லை. கறுப்புநிற வாகனத்துக்குள் அவள் நுழைகிறாள். வாகனத்தின் கதவு மூடிக் கொள்கிறது. திடுக்கென்று மெலிதான ஒரு துயரம் அவளைச் சூழ்கிறது. ஒருவித அயற்சி, மெல்ல மெல்ல நதிமீது பரவி இருந்த வெளிச்சம் மங்கி வருவதுபோலத் தோற்றம். . நதியெங்கும் மூடுபனி.



இந்த நிகழ்வுக்குப் பின்னர், அவள் நினைவுகள் இப்படிச் செல்கின்றன.



'இனி உள்ளூர் மக்களுடன் பேருந்தில் பயணிப்பது நின்று போகலாம். விடுதியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்குப் போகவும் வரவும் சொகுசு வாகனம் ஒன்று வைத்துக் கொள்வேன். இரவு உணவுக்கு, நகரத்தில் உள்ள மிகவும் ஆடம்பரமான இடங்களுக்குச் செல்லக்கூடும்.. . .'



ஒரு வியாழக்கிழமை அவன், பின் நேரம் விடுதிக்கு வந்திருந்தான். அவளைத் தன் கறுப்பு நிற மோட்டார் வாகனத்தில் அழைத்துப் போனான். அவனது இருப்பிடம் நவீனமாக இருந்தது. தனி அறை. போதிய வெளிச்சம் இல்லை. ஜன்னலைத் திறக்கச் சொல்லவில்லை அவள். சூழலுக்கு இணங்கும் பக்குவம். நிராகரிக்கும் மனம் இல்லை. அவன் உடலில் நடுக்கம். அவன் அவள் கருணையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவளுக்கு மகிழ்ச்சி தந்திருக்கக்கூடும். உன்னை வெறித்தனமாக நேசிக்கிறேன் என்று முணுமுணுக்கிறான். இவள் 'உன்னிடத்தில் அப்படி ஒன்றும் பிரியம் இல்லை' என்று சொல்ல வேண்டும். ஆனால் சொல்லவில்லை. ஒன்று புரிகிறது அவனுக்கு. அவளை அவனுக்குப் புரியாது. இப்போது மட்டும் அல்ல. ஒரு போதும் அவளைப் புரிந்து கொள்ள அவனால் முடியாது.



அவள் அவனிடத்தில், 'என்னை நீ விரும்பித்தான் அழைத்து வந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பிற பெண்களை நீ எப்படி நடத்துவாயோ, அப்படியே என்னை நீ நடத்தலாம். அதற்கு என்னை நீ விரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை' என்கிறாள். அவன் முகம் வெளிறுகிறது. அவன் மிக நெருக்கடிக்குள்ளானான். அவர்கள் அவர்களுக்கிடையில் எழுந்து நிற்கும் பருத்த முரண்களுக்கிடையே, தூர தூரங்களுக்கிடையே உரையாடலை, பெரும்பாலும் மாற்று வார்த்தைகளில் நிகழ்த்திக் கொள்கிறாள். 'தயவு செய்து உடனே ஆரம்பி' என்கிறாள் அவள்.

அவன் பரவசம் கொள்கிறான்.



அவன் அவள் குடும்பத்து நிலைக்கு வருந்துகிறான். அது தேவை இல்லை என்கிறாள் அவள். அவன் பணம் தருகிறான். வாங்கிக் கொள்கிறாள். . .



அவளுக்குப் பணம் தேவைப்படுகிறது உண்மைதான். ஆனால், பணம் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் இல்லை. இருவருக்கும் இடையே காதல் இருந்ததா என்றால் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லலாம். அவன் அவளது கருணையை எதிர்பார்த்தே இருந்தான் என்பது மட்டும் உண்மை. நமது அவளை இன்புறுத்துவது இந்த நுட்பம்தான்.



இந்தக் காதல், உண்மையில் விருப்பத்தின் அடிப்படையில் எழுந்தது அல்ல. வெறுப்பில், பரஸ்பரம் வெறுப்பில் எழுந்தது என்று சொன்னால், அது பெரும்பாலும் உண்மை ஆகலாம். அவளுக்கு அவன் கறுப்பு நிற சொகுசுக் கார் பிடித்திருந்தது. அவன் படுக்கை சுகமாக இருந்தது. அவன் அழைத்துச் செல்லும் இரவு உணவு விடுதிகள் பிடித்திருந்தன. எல்லாமும் பிடித்திருந்தன.



அவன் அவளுக்காக உருகுவதாகச் சொல்கிறான். அப்படி ஒன்றும் இல்லை. அவள் இடத்தில் வேறு அவள்கள் இருந்தாலும், அவன் அப்படி உருகி இருப்பான். அவனுக்கு அவன் மேல் அப்படியான சாய்வு எதுவும் இல்லை.

நாவல் முழுக்க, பச்சையான மனித மாமிச வாசனை, எந்த மணப்பூச்சும் இல்லாமல் விசுகிறது. ஆண் பெண் உறவின் நுட்பத்துக்குப் புதுப்பரிமாணம் தந்த நாவல் இது. நமது கதை நாயகி அவள், எந்தக் காதல் கதைக்கும் உகந்தவள் இல்லை. அவள் அவளாக மிக இயற்கையாக இருக்கிறாள். அது அவளது பலம் என்றாலும் சரி, பலவீனம் என்றாலும் சரி, இரண்டுக்கும் அவள் பொறுப்பானவள் இல்லை.



அவளும் சரி, ழானும் சரி இரு வருமே பிரஞ்சு மண்ணில் இருந்து வந்தவர்கள். இருவருக்கும் இடையே 300 ஆண்டுகள் பாரதூரம் இருக்கிறது. என்றாலும் எலும்பும் சதையுமாக நமக்குத் தென்படுகிறார்கள். வாழ்க்கை, இதுகாறும் இலக்கியம் காணாத, கண்டு முடிக்காத, இன்னும் இருளிலேயே உலவுகிற, வெளிச்சம் காணாத மனிதச் சுரங்கங்களைக் கொண்டே இருக்கிறது. தரிசிக்கும் கண்களுக்கு எப்போதாவது அவர்கள் தட்டுப்படுகிறார்கள். மாறுபடுகிறவர்களால்தான் உலகம் முன்னோக்கி அடி வைக்கிறது.



ஓவியங்கள் : ஆ.விஜயகுமார்



Mathu.


Prabanchan.
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு உலகெலாம்



எழுதப்பட்ட வரலாறு தொடங்கும் காலத்துக்கு முன்பிருந்தே, நாங்கள் மது அருந்தி வாழ்ந்து வந்திருக்கிறோம். நாங்கள் என்பது புதுச்சேரி (பாண்டிச்சேரி என்பது தவறான வழக்கு) மக்களை உணர்த்துகிறது என்று கொள்க. தமிழ்நாடே வறண்டு கிடந்த, மதுவிலக்கு எனும் மூடத்தனமான சட்டங்கள் அமலில் இருந்த காலத்தில் நாங்கள் மது என்கிற அர்த்தத்தினால் வாழ்வைச் செறிவூட்டிக் கொண்டிருக்கிறோம். பூக்கள் என்கிற அதிசயத்தை ரசிக்கத் தெரியாதவர்களே, குழந்தைகள் என்கிற அபூர்வத்தை உணரத் தெரியாதவர்கள், கோழிக்குஞ்சுகளை, ஓடும் நதியை, எதையெதையோ மொழிந்து கொண்டிருக்கும் மலைச் சிகரங்களை, ரகசியங்களை மௌன வெளிகளில் முணு முணுத்துக் கொண்டே இருக்கும் காடுகளை நேசிக்கத் தெரியாதவர்கள், ஒரு அழகிய சம்போகத்தை நிகழ்த்த முடியாத உள்ளீடற்ற வெற்று மனிதர்களே மதுவை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் ஒரு பிரஞ்சுக் கவிஞர்.



பிரான்ஸ் தேசத்தோடு தொடர்பு கொண்டிருந்த, அழகிய பிரஞ்சுக் கலாச்சாரத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்ட பல நூறு பிரஞ்சுக் குடும்பங்களைக் கொண்ட ஞானபூமி எங்கள் புதுவை. ஓரிரண்டு பத்து ஆண்டுகளுக்கு முன்னால், அக்குடும்ப நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால், அங்கே இருக்கும் முசியோவோ, மதாமோ நம்மிடம், 'முசியோ / மதாம், எது உங்களுக்கு உவப்பு, தண்ணீரா, சோடாவா' என்று கேட்கிற இன்னோசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். பூத்தையில் போர்த்திய சௌகரியமான இருக்கைகளில் நாம் அமர்ந்த பிறகு, நம்மை நோக்கி, தட்டில் உட்கார்ந்து வரும் நீலகண்டப் பறவை மாதிரி, மதுரம் நம்மைத் தேடிவரும். மது என்ற ஆச்சரியத்தைக் கண்டுபிடித்த உலகத்தின் அந்த ஆதி விஞ்ஞானியை நீங்கள் நினைக்க மறக்காதீர்கள் என்றால், சொர்க்கத்தின் கதவுகள் உங்களுக்கு ஒரு போதும் திறக்காது.



மது என்ற முறையில் நான் முதலில் அருந்தியது தென்னங்கள்ளைத் தான். தாய்ப்பாலுக்கு அடுத்தது தென்னங்கள்தானே? துரதிருஷ்டம் பிடித்த தமிழ்நாட்டிலிருந்து பலரும் வந்து எங்கள் (அக்காலத்து) சத்திரம் போன்ற வீட்டில் தங்கி, கள் குடித்து விட்டுச் செல்வார்கள். அவர்களின் வைத்தியர்கள், தினம் ஒரு மரத்துக் கள்ளாகக் குடித்து வந்தால், ஒரு மண்டலமோ, அரை மண்டலமோ (ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள்) கள்ளைப் பாவித்து வந்தால், மேனி புடமிட்ட பொன்னாகும் என்று சொல்லி இருப்பார். அதாவது ஒரு தென்னையிலிருந்து வடிந்த ஒரு மரத்துக் கள். காலை, மாலை இருவேளை பாவிக்க. 'கோல் கொண்டு முக்காலோடு நடந்து வந்த கிழம் கூட, வேட்கொண்டு களம் நோக்கி விரைந்து செல்வாரே, கள்ளுணர்ந்து குடித்தோரே' என்று யாரோ ஒரு பாரதி பாடியதாக ஒரு கள்ளன்பர் எனக்கும் சொல்லி இருக்கிறார்.



உடம்பைப் பொன் செய்ய வரும் முக்கிய உறவினர்களைத் தோப்புக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கிராமணிகள் யாரையேனும் கள் வடித்துத் தரச் சொல்லி, அவரைக் குடிக்கச் செய்து, பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பு எனக்களிக்கப்படும். வழிகாட்டியாக இருப்பது எனக்கும் பிடிப்பதில்லையானாலும் தென்னந்தோப்பில் மரங்களின் கீழ், ஓலைகளின் கூச்சல்களைக் கேட்டுக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கும். தோப்பில், சூரியனைக் கீழே விழாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தென்னைகள். அதனாலேயே, மண் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தரையில், விழுந்து உருளும் சின்னக் கால்பந்து போல இருக்கும் குரும்பிகள் எனக்கு விளையாட்டுப் பொருள். கள் மணக்கும் காற்று.



ஒரு தஞ்சாவூர் உறவினர், "நீயும் கொஞ்சம் குடியேன்டா" என்றார். கிராமணியைப் பார்த்து, "இவனுக்கும் கொஞ்சம் கொடு" என்றார். நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. புதிய மொந்தையொன்றில் கள்ளை ஊற்றிக் கொடுத்தார் அவர். கள் மட்டுமல்ல, அது வார்க்கப்படும் பாத்திரமும் மிக முக்கியம். அக்பர் குடித்த பொற்கோப்பைகளில் கள்ளை நீங்கள் ஊற்றிக் கொடுத்தாலும் கூட நான் மண்ணால் ஆன மொந்தையைத்தான் விரும்புவேன். மண்ணுக்குள் வேரோடி நாகலோகத்திலிருந்து தென்னை கொணர்ந்து தரும் கள்ளை, மண்ணால் ஆன பாத்திரத்தில் அல்லவோ அருந்த வேண்டும். தென்னையை நன்றி மறவா மரம் என்கிறாள் அவ்வை. நமக்கு வேண்டாமா நன்றி.



எட்டாம் வகுப்பு வரும்போது,கள் பற்றிய ஞானத்தை நான் எய்திவிட்டேன். கள்கள் மூன்று. ஒன்று தென்னங்கள், இரண்டு பனங்கள், மூன்று ஈச்சைக்கள். தென்னைக் கள், வைகறைக்குப் பிறகான காலத்துக்கு மிக சிலாக்கியம். மதியத்தை நெருங்கும் வேளை மிக உன்னதம். போதை, செங்குத்தாக, மலை ஏற்றக்காரர்களைப் போல தாவித் தாவி எகிறும். தென்னங்கள்ளை அருந்திவிட்டு, கப்பி ரஸ்தாவுக்கு வருவது போலப் பாவம் உலகில் வேறு ஏதும் இல்லை. தென்னை ஓலை உங்களுக்குச் சாமரம் வீசும். நீங்கள் ஆணாக இருந்தால், மரங்கள், பெண்ணாக தீட்சை பெறும். பெண்ணாக இருந்தால் மரங்கள் யுவர்களாகும். அரவாணியாக இருந்தால், நீங்கள் தேர்வு செய்யும் பாலாகவோ அவை மாறும். உங்கள் தேர்வு உங்களுடையது. தென்னங்கள், வெளியே இருக்கும் உங்களை உள்ளே கொண்டு சேர்க்கும். சுருதியோடு இழையும் சுத்த சங்கீதத்தை நீங்கள் அப்போது உணர்வீர்கள். பனங்கள், இருள் புலராத, கதிர் உதிக்கும் முன் அருந்த வேண்டி வஸ்து. மத்திய வயது நரைமுடி என ஒளியும் இருளும் பிணைந்த பொழுதில் அருந்தத் தொடங்குவது மிக உத்தமம். பனங்கள்ளுக்கும் சூரிய உதயத்தில் ரேகைகளுக்கும் நுணுக்கமான உறவுண்டு. காலை வெயில் ஏற ஏறப் போதை ஏறிக் கொண்டிருக்கும். பனங்கள், 'கோமூத்ரி' போதைத் தன்மையைக் கொண்டதாம். மகான்கள் சொல்கிறார்கள். 'கோமூத்ரி' என்பது என்னவோவெனில் நடக்கும் மாட்டின் மூத்திரம் மண்ணில் படிகிற வடிவு. வளைந்து, வட்டமிட்டு, மேலேறும் தன்மையது. பனங்கள் அருந்திய பிறகு, கடற்கரையில் உலவுவது சாலச் சிறந்தது. கேவலம் மனித ஜென்மங்களை, விசுவத்தோடு இணைக்கும் ஞானப்பால் பனையின் பால். ஈச்சை, மிக அருகியே நம் மண்ணில் காணப்படுகிறது. பாலையின் தோழன்/தோழி அது. மாலை நேரத்து பானம் அது. வீட்டில் இருந்து, பனங்கள்ளும் வாய்க்கப் பெற்றால், கசல் கேளுங்கள். பாகிஸ்தான் பாடகர்களுடைய கசல். இறைமையின் மிக அருகில் உங்களைக் கொண்டு வைப்பது ஈச்சைக் கள். அதோடு, உங்கள் காம வீரியத்தைக் குதிரையின் பக்கத்தில் கொண்டு சேர்க்கும் என்று விளம்பர வைத்தியர்கள் சொல்வார்கள். நம்பாதீர்கள். சிட்டுக் குருவி, குதிரை முதலான சமாச்சாரங்கள் எல்லாம், அந்தந்தச் சூழல், மனநிலை, உடல்நிலைகளைப் பொறுத்தவை. லேகியங்கள் புக முடியாத பிரதேசங்கள் அவை.



ஒன்பதிலிருந்து பத்தாம் வகுப்புக்கு வருகிற, கோடை கால விடுமுறை ஒன்றின் போதுதான் முதன்முதலாக சாராயம் என்கிற மதுவை நான் அறிந்தேன். சுஜனரஞ்சனி என்கிற பழம் பெரும் பத்திரிகை நடந்த கட்டடத்தின் மாடி அறைகளில் ஒன்றில், பாரதிதாசனின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவரைப் பார்க்கச் செல்கிறேன். (அப்போது நான் கவியாக முயன்று கொண்டிருந்த காலம். அதற்கு இசைவாக காதல் ஒன்றில் தோல்வி பெற்றிருந்தேன். ஆகவே கவிதை எழுதத் தொடங்கி இருந்தேன்.) அக்கவி இன்றும் இருக்கிறார். புதுச்சேரியில் வரலாற்றுப் புகழ் பெற்ற உணவு விடுதி நடத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். அங்கு, தமிழகத்தில் மாபெரும் நகைச்சுவை நடிகரும், கலைவாணரும் ஆனவரின் மகனுமான என்.எஸ்.கே.கோலப்பன் இருந்தார். பாரதிதாசனின் எதிர்பாராத முத்தத்தில் (சினிமா பெயர் பொன்முடி) நடித்த கதாநாயகர் நரசிம்ம பாரதி இருந்தார். அந்தக் கலைக்குழுவில் பொடியன் நான் ஒருவனே. கவிஞர் ஒரு கண்ணாடிக் கிளாசில் புதுச்சேரிச் சாராயத்தை ஊற்றி, எலுமிச்சைப் பழம் பிழிந்து, 'சாப்பிடு' என்று சொல்லித் தந்தார். காரநெடியும், வினோதமான கசப்பும், எலுமிச்சைப் புளிப்பும் இணைந்து வினோதமாக இருந்தது அந்தச் சரக்கு. பின்னாளில் தமிழ்நாட்டில் விற்ற 'கடா' மார்க் சாராயம் எங்கள் புதுச்சேரி சாராயத்துக்கு முன், ஒன்றுமே இல்லை. தமிழ்நாடு கடாதான். எங்களுடையது புலி.



மீண்டும் ஒரு 'கிளாஸ்' எனக்கு அருளப்பட்டது. அருந்தினேன். வீட்டுக்குப் புறப்பட்டேன். அஜந்தா தியேட்டரில் கர்ணனும், ராஜா தியேட்டரில் வணங்கா முடியும். ரத்னா தியேட்டரில் விசுவரூபம் எடுத்து நின்றார் மாயாபஜார் கிருஷ்ணன். என்னுடைய பிரக்ஞையை மீறியே, என் உடம்பு கடிகாரப் பெண்ணுருவம் மாதிரி ஆடியபடி இருந்தது. கால்கள் என்கிற உடம்பின் உறுப்பு சாட்டின் துணி மாதிரி காற்றில் வெலவெலத்தது. தெரு விளக்குகள் மிகப் பிரகாசமாக எரிந்ததன் காரணம் விளங்கவில்லை. என் சுட்டு விரலால் காற்று வெளியில் ஏதோ எழுதிக் கொண்டே நடந்தேன். எதுவும் நடக்காமலேயே சிரிப்பு சிரிப்பாய் வந்து கொண்டிருந்தது. குடித்தது வெளியே தெரியக்கூடாது என்கிற அதீதப் பிரக்ஞையில் மிக நிதானமாக, நிமிர்ந்து நேராக நடந்து கொண்டிருந்தேன். எவனும் என்மேல் குறை காணமுடியாது. அவ்வப்போது என் நினைவுகளில் என் அப்பா வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். எங்கள் குலத் தொழிலே கள் விற்பதும், சாராயம் விற்பதும்தான். மூன்று கள்ளுக் கடைகளுக்கும் இரண்டு சாராயக் கடைகளுக்கும் சொந்தக்காரராக இருந்தவர்தான் என் அப்பா. அவர் குடித்ததே இல்லை. நான் குடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா. அதோடு, அவர் கைக்கு அசுர பலம் இருந்தது என் கேடு காலம். ஒருமுறை என்னை அவர் அறைந்ததில் அவர் விரலில் இருந்த மோதிரத்தின் வைரக்கல் தெறித்து விழுந்தது. அதையும் நானே தேடிக் கொடுக்கும் படியான துரதிருஷ்டம் நேர்ந்தது.



நடந்து கொண்டிருந்த என் முன், ஒரு சைக்கிள் வந்து நின்றது. மங்கலாக என் உறவினர் முகம் தெரிந்தது. அவர் சொன்னார்.



"இப்படியாடா குடிக்கிறது. தெருகூட தெரியாமே, சாக்கடை மேலேயே நடக்கிறியே, ஓரமா நகர்ந்து தெருவிலே நட."



அவர் என்னைத் தெருவுக்குக் கொண்டு வந்து நிலை நிறுத்தினார். 'நேரா நடந்து போ' என்றார். வளைவுகள், திருப்பங்கள் அற்ற, பிரஞ்சுக்காரர் போட்ட அருமையான தெருவில் நடக்கத் தொடங்கினேன்.



இரண்டு, மது தொடர்பான பிரஞ்சுத் தொடர்புகள். ஒன்று எங்கள் ஊருக்கும் குறுகிய சில மாதங்கள் மது விலக்கு வந்தது.



கடந்த ஐயாயிர ஆண்டுக்கால எங்கள் ஈர வாழ்வில், ஆறு மாதங்கள் மட்டும் நாங்கள் வறட்சிக்கு ஆளானோம். பிரஞ்சு ஆட்சியின்போது, அந்தப் பதினெட்டாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் எங்கள் ஊர் தொடர்ந்த படையெடுப்பைக் கண்டது. படை வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கஜானாவில் காசு இல்லையென்றால், ராஜாக்கள் படையெடுப்பார்கள். அப்படி மராத்தியர்கள் எங்கள் ஊர்ப்பக்கம் வந்தார்கள். திருப்பாப்புலியூர் (கடலூர்), மஞ்சக்குப்பம், சிங்கிரி கோவில், அழிசப்பாக்கம் என்று எங்கள் ஊருக்கு எல்லை ஊர்களைக் கொள்ளை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம், மக்களிடம் ஒழுங்கு, கட்டுப்பாடு குழைந்து போய்விடக் கூடாதென்று காரணம் சொல்லி, அப்போதைய குவர்னர் துய்மா ஒரு சட்டம் போட்டான். 1741 பிப்ரவரி 28-ஆம் தேதி.



'வெள்ளைக்காரர், தமிழர், மற்றும் கறுத்த சனங்களுக்கு (Black Town) அறிவிக்கிறதாவது: மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரைக்கும் பிராந்தி, சாராயம், கோவை (கோவா) சாராயம், லிக்கர் சாராயம் (புதுச்சேரி சாராயம்), பத்தாவி (படேவியா) சாராயம், கொழும்பு சாராயம், பட்டை சாராயம் போன்றவற்றை விற்றாலும், விற்பித்தாலும் ஆயிரம் வராகன் அபராதமும் கொடுத்து ஒரு வருடம் காவலில் கிடக்கிறது. அவற்றை வாங்கிப் போகிறவனுக்குக் காலடியிலே கட்டி அடிச்சு வலது தோளிலே சுணக்கி நோய் முத்திரை போட்டு ஊருக்கு வெளியே துரத்தி விடுகிறது. தோட்டத்திலும் வீட்டிலும் தென்னை மரம் வைத்திருப்பவர்கள் எவருக்காவது கள்ளு ஒரு காசளவிலே வித்தாலும் விற்கச் செய்தாலும், யார் ஒருத்தர் குடிச்சாலும், குடிக்கச் செய்வித்தாலும் அவர்களுக்கும் முன்னே சொன்ன அபராதம் உண்டு'.



ஆறு மாதம் மட்டுமே இந்தச் சட்டம் அமலில் இருந்தது. அதன்பின் எங்கள் வீர முன்னோர்கள் இச்சட்டத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிந்தார்கள்.



மது ஒரு அற்புதம் என்றால், அதை அடக்கிக் கொள்ளும் பாட்டிலும் ஒரு அற்புதம்தான். அந்தப் பாட்டில்கள், எங்கள் ஊரை மராத்தியர்களிடம் இருந்து காப்பாற்றியதை நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று. மராத்தியப் படைத் தலைவன், ரகோஜி போஸ்லே புதுச்சேரியைச் சுற்றிக் கொண்டு குவர்னர் துய்மாவுக்கு (Dumas) ஒரு கடிதம் அனுப்புகிறான். ஆற்காடு நவாப்புக் குடும்பத்தார், குறிப்பாக சந்தாசாகிப்பின் மனைவியும், மகனும் உங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்களையும், அவர்கள் புதுச்சேரி வரும்போது கொண்டு வந்திருக்கிற நகைகள், தங்க, வைர அணிகலன்கள், தங்கக் காசுகள், குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் அனைத்தையும் எங்கள் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லையெனில் புதுச்சேரி ஜனத்தொகையை விட அதிகமான எங்கள் படை ஊருக்குள் நுழையும்.



துய்மாவிடம் படை பலம் இல்லை. நெஞ்சில் நேர்மையும், துணிவும் மட்டுமே அவனிடம் இருந்தன. பிரஞ்சு புதுச்சேரியின் சிறந்த மூன்று குவர்னர்களில் அவன் ஒருவன். அவன் பதில் கடிதம் எழுதினான்.



'.... பல ஆற்காட்டு நவாப்புகள் பிரஞ்சுக்காரர்களிடம் நட்பு பாராட்டி நண்பர்களாக இருந்துள்ளார்கள். அந்த நட்பை முன்னிட்டு ஆபத்துக் காலத்தில் எங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளார்கள். நண்பர்கள் உதவி கேட்டு வரும்போது, கதவை அடைப்பது மனித தர்மம்தானா? என்னிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்றால், எங்கள் பேரரசர் பிரஞ்சு தேச மாமன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்றே அர்த்தம். அவருக்குமானக்குறைவு ஏற்படுத்தும் காரியத்தை நான் செய்யமாட்டேன். தோஸ்த் அலியின் விதவையும், சந்தா சாயபுவின் மனைவியும், மகனும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் வெளியேற்ற முடியாது. புதுச்சேரியில் இருக்கும் கடைசிப் பிரஞ்சுக்காரனின் கடைசித்துளி ரத்தம் மண்ணில் விழும் வரைக்கும், கடைசிப் பிரஞ்சுக்காரன் உயிருடன் இருக்கும் வரைக்கும் அடைக்கல மனிதர்களை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் . . .'



இந்த வீரம் மிகுந்த பதில், ரகோஜி போஸ்லேவுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. சந்தா சாகிப்பின் குடும்பம் மட்டுமல்ல, துய்மாவின் அலட்சியத்து அபராதமாக ஆறு கோடி ரூபாய் அபராதமும், ஆண்டு தோறும் பிரஞ்சு அரசு கோடிக்கணக்கில் தமக்குக் கப்பம் கட்ட வேண்டும் எனச் சொல்லி, ஒரு தூதுவரையும் அனுப்பி வைத்தேன். மராத்தியத் தூதுவரை மிக மரியாதையுடன் வரவேற்ற துய்மா, அவரைச் சிறப்பாக நடத்தி தன் படைக்கலச் சாலையை அவருக்குக் காண்பித்தான். துப்பாக்கிகள், பீரங்கிகள், படை அணிவகுப்பையும், ராணுவ ஒழுங்கையும் கண்ட தூதுவர் மனநிலை மாற்றம் அடைந்தது. அவர் விடைபெறும்போது, ரகுஜி போஸ்லேவுக்கு மரியாதை நிமித்தம் 10 ஐரோப்பிய மது பாட்டிலையும் கொடுத்து அனுப்பினான்.

கதையின் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறோம். அந்த பாட்டில் மதுவை ரகுஜி தன் அன்புக்குரிய

மனைவியுடன் பகிர்ந்து கொண்டான். மராத்திய வரலாறு அவளைப் 'பேரழகி' என்று சொல்கிறது. அந்தப் பேரழகி, அத்தனை பாட்டில்களையும் அனுபவித்து அருந்தி முடித்து 'இன்னும் வேண்டும்' என்றாள். ரகுஜிக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. விரோதியிடம் பாட்டில் கேட்பதா என்பது அவன் பிரச்சினை. ஒரு பக்கம் பேரழகி. மறுபக்கம் கௌரவம். எது வெல்லும்? எது வென்றிருக்கிறது? அதுதானே வென்றிருக்கிறது. அந்த இல்லாத, இருப்பது போல் இல்லாத, ஆனால் இருக்கிற, சூன்ய மாயும், சேதன மாயும், அசேதனமாயும், மாயமாயும், ரூபமாயும் நிலைபேறுற்ற அதுதான் கடைசியில் வென்றது. 'சந்தா சாயுபு மனைவியா, மகனா, பணமா, இதெல்லாம் என்ன' என்றான் ரகுஜி. துய்மா மிக அன்புடன் முப்பது பாட்டில்கள் - அன்புடன்தான்- அனுப்பி வைத்தான். ரகுஜி, கொள்ளை அடிக்க வேறு பக்கம் நகர்ந்தான்.



முப்பது பாட்டில்களும் தீர்ந்த பிறகு, அந்தப் பேரழகி என்ன செய்து அவன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டாள், என்பதை எந்த சரித்திர ஆசிரியனும் எழுதி வைக்கவில்லை. யுத்தங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். பாட்டில்கள் தீர்த்து வைக்கின்றன.



தமிழ்நாட்டில் நிலவி இருந்த மது விலக்கு, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டது. மதுக்கடை மீண்டும் தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட அந்த நள்ளிரவில், நான் தஞ்சாவூரில் மாணவனாக இருந்தேன். தஞ்சைப் பழைய பேருந்து நிலையத்து அருகில், இன்று ஆரிய பவன் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி, சாராயக் கடை திறக்கப்பட இருந்தது. நானும் பிரகாஷும் அந்தச் சொர்க்க வாசல் திறப்பைக் காணக் காத்திருந்தோம். பிரகாஷ் குடிக்க மாட்டார். நானும் பிரடரிக் சுந்தர்ராஜன், இருளாண்டி, தஞ்சை மோகன் முதலான நண்பர்களும் நின்றிருந்தோம். ரஜினி திரைப்படத் தொடக்கக் காட்சி போல் மக்கள் குழுமி இருந்தார்கள். கடை, சீரியல் விளக்குகளாலும் மல்லிகைச் சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாழியாக நாழியாக கூட்டம் எங்களை நெருக்கித் தள்ளியது. திடுமென மழை லேசாகத் தூறத் தொடங்கியது. லவுட் ஸ்பீக்கரிலிருந்து மிகப் பெரும் சப்தமுடன் சினிமாப் பாடல்கள், முழங்கிக் கொண்டியிருந்தன. எல்லாமும் எம்.ஜி.ஆர். படத்துப் பாடல்கள், எம்.ஜி.ஆர் தத்துவ, சமூக, காதல் பாடல்கள் சூழலுக்குப் பெரும் சோபையை நல்கிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் இருண்ட காலம் நீங்கி, பொற்காலம் பிறந்து கொண்டிருந்த ஒரு அற்புத யுகத்தின் பிரசவ அறைக்குள் நாங்கள் இருந்தோம். குழந்தையின் தலை வெளியே தெரிந்தது. கடை உரிமையாளர், கடை விளம்பரப் பலகைக்குக் கற்பூரத் தீபம் காட்டிக் கொண்டிருந்தார். கூட்டம் வாயிலை நோக்கிச் சாடி முன்னேறியது. சரியாக மணி 12. இந்த நிமிஷம் முதல் குடிப்பவர்கள் சட்ட பூர்வமான குடிமக்கள். பத்து நிமிஷத்துக்கு முன் குடித்தவர்கள் குற்றவாளிகள். அரசு, எவ்வளவு எளிதாக மக்களின் முகங்களை மாற்றி அமைக்கிறது? எனக்கு எப்போதும் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமோ, பெரு விருப்போ இருந்ததில்லை. நான் குடிப்பது பெரும்பாலும் என்னுடன் அமரும் நண்பர்களைப் பொறுத்தது. என் அளவு ர-ழ ஆகும் வரை. அதாவது ராயப்பேட்டை ழாயப்பேட்டை என்று எந்தக் கணம் உச்சரிக்கிறேனோ, அந்தக் கணமே நான் எழுந்துவிடுவேன். பிரகாஷுக்கு எல்லா மட்டத்திலும் அறிமுகம் உண்டு. அவருடைய செல்வாக்கைக் கொண்டு, ஒரு பாட்டில்ரம் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். அந்தக் காலத்திலிருந்தே, சாராயக் கடைகள் இன்றைய டாஸ்மாக் கடைகள் வரை பெரும்பாலும் நாய்கள் புகத் தயங்கும் அழுக்குக் கட்டிடமாகவே இருப்பதன் காரணம் என்ன என்பதின் பதில், குடிகாரர்கள் மேல், சமூகத்துக்கு இருக்கும் மனோபாவம்தான். அவர்களுக்கு இதுபோதும் என்று அரசு நினைக்கிறது. ஆனால், அவர்கள் பணம் மட்டும் வேண்டும்.



எங்கள் ஊர் பிராந்திக் கடைகள் மிக அழகியவை. நாகரிகமானவை. பார்கள் மிக நவீனமானவை. உங்களை மதிப்பவை. புதுச்சேரிகாரர்களாகிய நாங்கள் மது அருந்துபவர்கள். குடிகாரர்கள் அல்லர். குடிப்பது வேறு. அருந்துவது வேறு. தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடையைப் போல ஒரு ஆபாசக் கட்டிடம் எங்கள் ஊரில் இருக்கவே முடியாது. நாங்கள் அதைச் சகிக்க மாட்டோம். இது பிரஞ்சியரிடம் இருந்து நாங்கள் கற்ற பல அழகுகளில் ஒன்று.



உணவு மேசையை (இதைத் தீனி மேசை என்பார் ஆனந்த ரங்கர்) நாங்கள் அலங்கரிக்கும் முறையே வேறு. அழகும், சௌகரியமும் மிகுந்த மேசையும், நாற்காலிகளும் முக்கியம். மேசை மேல், அப்பழுக்கற்ற, பூப் போட்ட வெள்ளைத் துணிகள் விரித்து ஒழுங்கு செய்வோம். மதுவில் வகைக்கு ஏற்ப கிளாஸ்களை மட்டுமே பயன்படுத்துவோம். பீர் என்றால் பெரிய அகன்ற கிளாஸ். விஸ்கி, பிராந்திக்கு வேறு. சின்னக் குப்பிகளையும் ஒயின்களுக்குப் பயன்படுத்துவோம். சுற்றி அழகான சீனத் தட்டுகள். நிறைய பூக்கள் வரையப்பட்டவை. அவைகளில் உபகாரத் தீனி (சைட்டிஷ்) இருக்கும்.ஆளுக்கொரு சிறிய கைத்துண்டு கட்டாயம். தனியாக சோடா, தண்ணீர், இனிப்பு பாட்டில் டிரிங்க் என்று இருக்கும். எங்கள் சப்தம், அடுத்த மேசைக்குக் கேட்பது அநாகரிகம் என்று எங்களுக்குத் தெரியும்.



தெருவில், துணியில்லாமல், குறியை வானத்துக்குக் காட்டியபடி மயங்கிக் கிடப்பவர்கள் சர்வ நிச்சயமாகத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே இருப்பார்கள். நாங்கள் காட்டுவதில்லை. அண்மைக் காலமாக புதுச்சேரியும் சீரழியத் தொடங்கி இருக்கிறது.



ஜப்பானியர்களின் தேநீர் அருந்துவதில் இருக்கும் ஓர்மை மற்றும் ஆன்மீகப் பரவசத்துடன் அருந்த வேண்டிய ஒரு உள்நோக்குப் பயணம் மது. வன்மம், பகை, கோப தாபம், சிறுமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் இடமாக மதுப்பிரதேசம் சீரழிவது, மதுவை அல்ல, அதைக் குடிப்ப வரையே நிரூபிக்கிறது.

Aravanigal...




ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல்



தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.



வரலாற்றுக் காலத்தில் இருந்து சாதி, மத மற்றும் பார்ப்பனியக் கட்டமைப்புகளால் ஒடுக்கப்பட்ட தலித்துகள் பெண்கள், சிறுபான்மையினர் மேலெழும் காலம் இது. அவர்கள் பற்றி அவர்களாலும் பிற சமூகத்தாலும் எடுக்கப்படும் கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. விளிம்பு நிலை மக்களினும் புறத்ததாக, வெளிச்சமே பரவாத இருட்டில் வைக்கப்பட்டவர்களாக அரவாணிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆகக்கடைசிப் படிகளில் வைக்கப்பட்டவர்கள் இவர்களே ஆவர். ஒரு சமூகமே மெலெழுந்து அவர்களை, மிகுந்த அருவருப்பு கொண்டு விலக்கியும், இழிவு படுத்தியும், கேலி கிண்டலுக்கும் வசை மொழிக்கும் உள்ளாக்கியும் தனித்து வைத்திருக்கும் ஒதுக்கலில் இருந்து மீறிச் சில ஒற்றைக் குரல்கள் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. மிகுந்த ஆளுமையும் வன்மையும் கொண்ட குரலாகப் பிரியா பாபு வெளிப்பட்டிருக்கிறார். இயக்க பூர்வமாகவும், செயல்பாட்டு அளவிலும் ஏற்கனவே அரவாணிகளின் மனசாட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் வெகுசிலரில் குறிப்பிடத்தகுந்த பிரியாபாபு இப்போது நாவலுடன் சமூகத்தின் மனசாட்சியுடன் ஓர் உரையாடல் நிகழ்த்த வந்திருக்கிறார்.



ரமேஷ் என்கிற பதின்பருவச் (டீன்ஏஜ்) சிறுவன், எங்ஙனம் படிப்படியாகத் தான் பெண் என்பதை உணர்கிறான் என்பதிலிருந்து கதையைத் தொடங்குகிறார் ஆசிரியர். பார்வதி வெளியே சென்று திரும்புகிறபோது, வீட்டிலிருந்து ஒரு பெண் பாடும் சப்தம் கேட்கிறது. பெண் வீட்டில் இல்லாதபோது, எங்கிருந்து பெண்பாட்டு? அவள் ஜன்னல் வழி கவனிக்கிறாள். உள்ளே அவள் மகன் ரமேஷ், அம்மாவின் ஜாக்கெட்டையும் புடவையையும் அணிந்து, அழுத்தமான மேக்கப்போடு, கண்ணாடிமுன் நின்று பாடியும் ஆடியும் களிப்பதைக் கண்டு பார்வதி அதிர்ச்சியடைகிறாள். . இது குடும்பத்துக்கு நேரும் அவமானம் என்று துவள்கிறாள். ரமேஷின் அண்ணனும் தம்பி 'இப்படி' இருப்பதை வெறுக்கிறான். வெறுப்புக்கும், தெரு, பள்ளியில் கேலிக்கும் இழிவுக்கும் உள்ளாகும் ரமேஷ், மூத்த அரவாணியான ஜானகியம்மாளிடம் அடைக்கலம் ஆகிறான். ஜானகி, அவனுக்குப் புத்தி சொல்லி அரவாணி வாழ்க்கையின் அவலத்தைச் சொல்லி எச்சரிக்கிறாள். பார்வதி, அரவாணிகள் சிலர் சைதைக் கடைத்தெருவில் பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டு, தன் மகனுக்கும் அதுவே கதி என்று பதறுகிறாள். . . பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு அரவாணி, தன்முன் பிச்சை கேட்கும் ஒரு மூதாட்டிக்கு உதவுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள் பார்வதி. ஒரு ரயில் பயணத்தில் பார்வதி, அரவாணிகளுக்குப் பணி செய்கிற கண்மணி என்பவளைச் சந்திக்கிறாள். அவள் மூலம், பால்திரிபு அல்லது பால் மாற்றம் பற்றிய புரிந்துணர்வை அடைகிறாள். ரமேஷை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. ரமேஷ், தான் அவாவும் பெண்பாலைத் தேர்வு செய்கிறான். பாரதி என்ற புதிய பெயரை ஏற்கிறான். தன் அரவாணி சமூகத்துக்காகப் பணி செய்ய உறுதி கொள்கிறாள் பாரதி.



மூன்றாம் பாலின் முகம் நாவலின் நிகழ்ச்சி அடுக்குகள் இவை. மிகச்சரியான இடத்தில் தொடங்குகிறது கதை. பொதுவாகச் சிறுவர்கள், வளர்ச்சிப் போக்கில் அம்மா, சகோதரிகள் என்கிற வளையங்களில் இருந்து விடுபட்டு, பையன்கள், பையன்கள் சார்ந்த வெளிகளில் புழங்கி, தாங்கள் ஆண்கள் என்கிற உணர்வை எய்தி, சமூகம் அவர்களுக்கென்று ஏற்படுத்தித் தந்த பிரதேசங்களில் தங்களைப் பொறுத்திக் கொள்கிறார்கள். ஆண் இடம், ஆண் செய்கைகள் என்று எவையும் இல்லை. இவையெல்லாம் சமூகக் கருத்தியல்களின் விளைவுகள். சிறுவன் ஒருவன், தன் பதின்பருவத்தில் பெண் சார்ந்து, அம்மா, அக்கா, தங்கை மற்றும் அருகிலிருக்கும் பெண்கள் சார்ந்து, பெண்களுக்கென்று விதிக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிகளைச் செய்து, மனத்தளவில் தான் பெண், தனக்குள் ஓங்கி வளர்வது பெண் உணர்வே என்று அறியத் தலைப்பட்டபோது அவன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். ஆணாக அறியப்படும் ஒருவன், தான் தன்னைப் பெண்ணாய் உணர்வதும், அதற்குத் தக நிலவும் ஆடை அணிகளை அணிவதும், அந்த மனிதனின் சுதந்திரம் என்பதைச் சமூகம் ஏற்க மறுக்கிறது. ஆண் என்பவன், எங்ஙனம் பெண் ஆகலாம் என்பதே சமூகத்தின் கேள்வியாகிறது. ஆண், பெண்ணாவது என்பது, ஆணின் அதிகாரத்தை எதிர்க்கும் சவாலாக ஆண் சமூகம் உணர்ந்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகிறது. அரசுகள், அவை கைக்கொள்ளும் அதிகாரங்கள் எல்லாம் ஆண்மையம் கொண்டவை. எனவே, அரவாணிகளின் இருப்பை, அவர்களின் புழங்குவெளியைச் சட்டங்களாலும் நெறி முறைகளின் பெயராலும் ஒடுக்குகிறவைகளாக அரசுகள் மாறுகின்றன. அரசு அதிகாரம் ஆகியவைகளின் குறுவடிவமாக குடும்பங்கள், தன் அரவாணிக் குழந்தையைத் தம் பகை வடிவாகக் கொள்கின்றன. அவமானச் சின்னமாகவும் கருதி அரவாணிக் குழந்தைகளைப் புறக்கணிக்கின்றன. கடும் சிறை, தாக்குதலால், ஒரு கட்டத்தில் அச்சிறுவன் வெளியேறி, தன் இனம் என்று அவன் உணரும் அரவாணிகள் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறான். இதில் அவன் அடையும் சமூகப் பாதுகாப்பே மிக முக்கியம். அவன், தன்னைப் பெண்ணாக ஆக்கிக் கொள்கிறான். அவன் விருப்பம், ஆசை, வாழ்முறை அது என்று அதை ஏற்றுக் கொள்வதே அறிவுபூர்வமான சமூகத்தின் செயல்முறை. நம் சமூகம் மூடச் சமூகம். ஆகவே அர வாணிகள் இவ்வளவு இழிவுக்குள்ளாகிறார்கள்.



அரவாணிகளில் பலர் பள்ளி வகுப்புகளையும் முடிக்காதவர்கள். அந்தப் பதின் பருவத்திலேயே அவர்களின் அடையாளக் குழப்பம் தொடங்குவதன் காரணமாக அவர்கள் குடும்பங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். தொழில் அறிவும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே, வேறு வழி இன்றியே அவர்கள் பிச்சை ஏற்கவும், விபசாரம் செய்யவும் நேர்கிறது. இதில் அரவாணிகளின் தவறு எங்கிருக்கிறது? அந்த அரவாணிக் குழந்தையின் குழப்பம் தலைப்படும்போதே, அதைப் பரிந்து பேசி, அக்குழந்தையைப் புரிந்து கொள்ளும் கடமையை மேற்கொள்ளாத குடும்பங்களே/சமூகமே/அதிகாரக் கூடாரங்களே தவறு செய்தவர்கள்.



ஒரு அரவாணி உருவாவது என்பது பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் பல புதிர்களைக் கட்டவிழ்க்கின்றன. மகாராசன் தொகுத்த 'அரவாணிகள்' என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் ஷாலினி நமக்குப் புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் 'ஜனிக்கும்' அந்தக் கணத்தில் பெண் பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது. அந்தக் கருவின் உடம்பில் ஒற்றை Y குரோமோசோம் வீற்றிருந்தால், அது கரு உருவான ஆறாம் வாரத்தில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார் மோனை உற்பத்தி செய்கிறது. அந்த டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் அந்தக் கருவின் உடம்பு முழுக்கப் பரவி எல்லா செல்களையும் 'ஆண்மைப்படுத்தி' விடுகிறது. ஆறு வாரம் வளர முலைகள், மூளை நரம்புகள், கர்ப்பப்பையாகப் பிறகு வளரப் போகும் முலேரியன் குழாய்கள் என்று முழுவதுமாய் பெண்பாலாய் இருந்த அந்த சிசு, டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் மெல்ல மெல்ல மாறுகிறது. அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஆண்மைப்படுத்தப்படுவதால் விரைப்புறுப்பு, விந்தகம் மாதிரியான புதுப்புது உறுப்புகள் உருவாகின்றன. அதே போல, சிசுவின் மூளை நரம்புகளும் மாற்றி அமைக்கப்படுவதால் 'ஆண்' என்கிற உடல் உருவம் மூளையில் பதிகிறது. இதனை 'பாடி இமேஜ்' என்கிறோம். நம் எல்லோரின் மூளையிலும் நமது ஒவ்வொரு புற உறுப்பிற்கான உருவகமும் பதிந்திருக்கிறது.



'நான் ஆம்பிளையாக்கும்' என்று மீசை முறுக்கும் சண்டியர்கள் எல்லோருமே முதல் ஆறு வாரங்கள் பெண்ணாக இருந்து, 'பெண்மயம்' கருணையினால் ஆண்களாகப் பிழைத்தவர்கள்தான் என்பதை அறியும்போது மகிழ்ச்சி தோன்றுகிறது. அதோடு, மரபணுக்கள் கர்ப்பப்பைக்குள் செய்த யுத்தமும் மூன்றாம் பால் தோன்றக் காரணமாகிறது என்பது விஞ்ஞானம். இதற்கு அப்பன்மார்களும் அண்ணன் மார்களும் குதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?



தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியமும் நன்னூலும் அரவாணிகள் பற்றிப் பரிசீலிக்கின்றன. என்றாலும் அவர்களது மனோபாவம் பற்றிய ஆய்வாக அவை இல்லை. இன்னும் மேலாக, அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் அவை இல்லை. இந்த உலகம், மனிதர்களின் தொகுதியால் ஆனது என்பதையும், உலகத்தின் அடிப்படை அலகாகவும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை ஒப்புகின்றன. அந்த வகையில் அவை முன்னேற்றகரமானவை என்றாலும், மக்கள், ஆண்கள், பெண்கள் என இருவகைத்தானவர் என்ற அளவுக்கு மட்டும் தான் இலக்கண ஆசிரியரின் பயணங்கள் நடந்திருக்கின்றன. 'உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே' என்கிறார் தொல்காப்பியர். அதாவது, 'மக்கள்' என்று சமூகம் சுட்டுகிற பொருள்களை உயர்திணை என்கிறார். மக்கள் என்று கருதப்படாத பிற பொருள்களை அஃறிணை என்கிறார். மண்ணின்மேல் உள்ள உயிர்ப் பொருள்களில் மக்கள் சிறந்தவர். ஆகவே அவர்கள் உயர்திணை. உரையாசிரியர்கள், மக்கள் பற்றிய ஆராய்ச்சியை மேலும் நீட்டித்தார்கள். 'மக்கள் என்றது மக்கள் எனும் உணர்வை' என்று ஆழப்பட்டார்கள். ஆனால் பால் திரிந்த மக்களிடம் வரும்போது இந்த ஆண்களின் ஆய்வுகள் இறுக்கம் அடைகின்றன. 'ஆண்மை திரிந்து பெண்மையை ஏற்கும் பெடியை உணர்த்துதற்கு, உயர்திணைக்குரிய ஈறுகளைச் (கடைசி எழுத்துகள்) சேர்த்துக்கொண்டு, உயர்திணையாகவே பாவியுங்கள் என்கிறார் தொல்காப்பியர். குறைந்தபட்சம், பெண்மையை விரும்புகிற மக்களை அஃறிணை என்று புறக்கணிக்கவில்லை தொல்காப்பியர். ஆனால் தொல்காப்பியருக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின்வந்த நன்னூல் ஆசிரியர், அரவாணிகள் மேல் கடுமை காட்டுகிறார்.



'பெண்போலப் பிறந்து, பெண் தன்மையை விட்டு ஆண்தன்மைகளை அவாவுகிறவர்களைப் பேடுகள் என்றழையுங்கள். அவர்களை ஆண் பாலாகவே அழைக்கலாம். எழுதலாம். அதுபோல, ஆண்போலப் பிறந்து, பெண்தன்மையை அவாவுகிறவர்களும் பேடுகளே ஆவார்கள். அவர்களைப் பெண்கள் (பெண்பால்) என அழையுங்கள். இவர்கள் பேடி என்றும் அறியப்பட்டார்கள். இவர்களை உயர்திணையாகவும், அஃறிணையாகவும் அழைக்கலாம். இது நன்னூல் இலக்கண ஆசிரியரின் திரண்ட கருத்து. நன்னூல் ஆசிரியர் ஒன்று-ஜனநாயக பூர்வமாகவும் இயங்குகிறார். இரண்டு -சமூக வழக்கையும் விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயகம் என்றது, மக்கள் தாங்கள் எந்தப் பாலை அவாவுகிறார்களோ, அந்த விரும்பிய பாலாலேயே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். இது நம் இலக்கண மரபில் மிகச் சிலாக்கியமானது. ஆனால், தன் காலத்து (எட்டாம் நூற்றாண்டில்) சமூகம், அரவாணிகளுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்திருக்கிறது. ஆகவே பால் திரிந்தவர்களை அஃறிணை என்றும் அழைக்கலாம் என்கிறார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத இழிவு, நன்னூல் ஆசிரியர் காலத்தில் ஏற்பட்டுவிட்டது. நம் காலத்துவரை, இந்த இழிவு நீடிக்கிறது.



காதல் வரலாறு-டயன் அக்கர் மென் (தமிழில்: ச.சரவணன்) எழுதிய உலகப் புகழ்பெற்ற புத்தகம். உலக இனங்கள் காதலை எப்படியெல்லாம் வண்ணம் பூசி, வாசனை தெளித்து வளர்த்து வந்திருக்கிறது என்பதையெல்லாம் மிகுந்த ஆராய்ச்சியோடு (ஆராய்ச்சியின் நெடியே இல்லாமல்) எழுதி இருக்கிறார். கிரேக்கர்கள் வளர்த்த காதல் பற்றி நிறைய நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை எழுதி இருக்கிறார். (நமக்கு ருஷ்டி மேல் வழக்கு போடத்தானே தெரியும்?) கிரேக்கம், வாக்கெடுப்பு எடுத்து ஜனநாயகத்தை ஓம்பிய நாடு என்பதை நாம் அறிவோம். வெறும் முப்பது ஆயிரம் மக்களைக் கொண்ட ஏதென்ஸ், ஒரு தனி உரிமை பெற்ற ராஜ்யம். இந்தியா போலவே, அதுவும் ஆண்மையம் கொண்ட நாடுதான். பெண்கள், வீட்டுப் பின் கட்டுகளில், இருள்படிந்த சமையல் அறைகளில் தான் இருந்தார்கள். பாட்டுக் கலையும் நாட்டியமும் விரும்பப்பட்டன. அவை மனைவிமார்களால் கற்று வெளிப் படுத்தப்படாதவரை. விலைமகளிர் மந்தைகளாக அலைந்தார்கள். சாக்ரட்டீஸ்கள் சாதாரணமாகத் தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பிளேட்டோக்கள் விறகு வெட்டிக் கொண்டே மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்தான். ஏதேன்ஸ் தெருக்களில் சாக்கடைகளே இல்லை. அதற்குப் பதிலாக அறிவுத் தேடலே வழிந்து ஓடின என்பதுபோன்ற சித்திரங்களே நமக்குக் காட்டப்பட்டிருந்தன. அங்கே, கிறிஸ்து பிறக்கும் முன்னர் ஆண் பெண் காதல்களைக் காட்டிலும் ஆண் ஆண் காதல்கள் அங்கீகரிக்கப்பட்ட பெருவழக்காக இருந்தன என்பதைப் பற்றிய எந்தப் பதிவும் பொதுவாக வருவதில்லை. டயன் அக்கர்ரெமன் அவ்வழக்கங்களைப் பதிவு செய்கிறார்.



கிரேக்க இலக்கியங்கள் இந்த வகை உறவுகளைப் போற்றி இருக்கின்றன. உடற்பயிற்சிக் கூடமே, கிரேக்க இளைஞர்கள் காதலர்களைத் தேர்வு செய்யும் இடமாக இருந்துள்ளன. உடற் பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் நிர்வாணமாகவே பயிற்சி செய்தனர். ஆரோக்கியமான உடற்கட்டினை அழகு என்று அவர்கள் நம்பினார்கள். தங்கள் காதலர்களை அங்கே அவர்கள் தேர்வு கொண்டார்கள். அரிஸ் டோபேன்சுடைய 'மேகங்கள்' என்ற படைப்பில் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறும் பகுதி இது:



'எப்படி அடக்கத்துடன் இருப்பது, விதைகளைக் காட்டாது அமர்வது, எழுந்திருக்கும்போது அவனது புட்டங்களினால் ஏற்பட்ட பதிவு தெரியாதவாறு மண்ணைச் சரி செய்தல், மேலும் எவ்வாறு வலுவாக இருப்பது. . . அழகு வலியுறுத்தப்பட்டது. ஒரு அழகிய இளைஞர் நல்ல இளைஞனாகக் கருதப்பட்டான். கல்வி என்பது ஆணின் காதலுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்ற இந்தக் கருத்து ஸ்பார்ட்டாவினுடைய கருத்தை ஒட்டியிருந்த ஏதென்சின் கருத்தியல் கோட்பாடாயிருந்தது. அவனைவிட மூத்த ஒரு ஆணைக் காதலிக்கும் இளைஞன் அவரைப் பின்பற்ற முயல்வான். அதுதான் அவன் கல்விப் பயிற்சியின் அனுபவ மையம். மூத்த அந்த ஆணும் இளைஞனின் அழகின் மேல் உள்ள விருப்பத்தினால் அவனை மேம்படுத்த தான் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வார்’



ஒரு சிறுவனின் கல்வியில் இவ்வகையான ஓரினச் சேர்க்கை ஒரு பண்பட்ட நிலை என்பது ஒரு கோட்பாடாகவே கிரேக்கப் பகுதியில் இருந்தது என்பது அக்கர்மென் குறிப்பிடும் வரலாற்றுச் செய்தி. ஆசிரியர், பழைய கிரேக்கத்தை வழிமொழிகிறார் என்பதல்ல இதன் பொருள். இன்றைய காதல் மற்றும் காமச் செயல்பாடுகள், அவைகளின் மேல் இன்றைய சமூகம் விதித்திருக்கும் அற மற்றும் சட்டக் கோட்பாடுகள் என்பவை இன்றைய அதிகாரமையங்களின் கருதுகோள்களே ஆகும். மனிதர்களின் காதல் உள்ளிட்ட அனைத்து வாழ்முறைகளும் இன்று அதிகாரம் கட்டமைக்கும் ‘பவித்திர’மாகவே எல்லாக்காலத்தும் இருந்ததாக இல்லை, மற்றும் பல்வேறு கட்டங்களைக் கடந்தே மனிதகுலம் இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது என்பதைச் சொல்வதே வரலாற்றாசிரியர்கள் நோக்கமாக இருந்தது. இது குற்றம் இது குற்றமற்றது என்கிற இருநிலைகளை, அதன் வழி குற்றமனோபாவங்களை அவ்வக் காலத்துச் சமூகமே கட்டமைக்கிறதே அன்றி, அச் செயல்கள் அல்ல.



தனி மனிதர்களின் படுக்கை அறைக்குள் நுழைந்து சட்ட நகல்களை நீட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன அதிகாரச் சக்திகள். இது மனித உரிமை மீறல் என்பதையே அறிவுவர்க்கம் காலா காலமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.



அரிஸ்டோ பேன்சின் ‘பறவைகள்’ கவிதை. ஒரு முதியவன். இன்னொருவனுக்குச் சொல்வது போல அமைந்தது.



‘நல்லது. துணிச்சல் மிக்கவனே! நடைமுறைக் காரியங்கள் நன்றாகவே உள்ளன. உடற்பயிற்சிக் கழகக் குளியல் அறையிலிருந்து புத்துணர்ச்சியுடன் வெளிவரும் என் மகனை நீ சந்தித்த போதும், நீ அவனை முத்தமிடவில்லை. நீ அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நீ அவனை அணைத்துக் கொள்ளவும் இல்லை. நீ அவனது விதைகளை உணர்ந்து பார்க்கவும் இல்லை. மேலும் நீ எங்களுடைய நண்பன் என்று கருதப்படுகிறாய்’



கிரேக்கப் பெண்கள் சாப்போவை நேசிப்பவர்களாக இருந்துள்ளார்கள். பெண் ஒடுக்குமுறையில் இந்தியாவுக்குச் சற்றும் குறையாதது கிரேக்கம். அங்கேயும் பல மநுக்களும் மநு புத்திரர்களும் சாக்ரட்டீசின் அங்கியைப் போர்த்திக் கொண்டு பிரசங்கம் செய்திருக்கிறார்கள். காலம் காலமாகப் பெண்களின் பிறப்புறுப்புகளுக்கு ஆக கனமான பூட்டுகளைப் போட்டு, சாவியைத் தம் இடுப்பில் செருகிக் கொண்டு அலைந்திருக்கிறார்கள் கிரேக்க ஆண்கள். உலக ஆண்களில் முக்கால் வாசிப்பேர்கள், தங்களின் மனைவிமார்களின் அந்தரங்கங்களில் அன்னிய ஆண்கள் பிரவேசித்து விடக் கூடாதே என்ற கவலையிலேயே வாழ்ந்து சாகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் 'கள்ளக்காதல்' என்ற வினோதமான வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். காதலில் கள்ளம் ஏது? காதலில் கறுப்பு வெள்ளை இருக்கிறதா என்ன? இந்திய எய்ட்சின் எண்ணிக்கை உலக மக்களைத் திடுக்கிடச் செய்திருக்கிறது என்பதை எவ்வளவு சுலபமாக மறந்து கண்ணகியைப் பற்றிக் கவலைப்படுகிறோம் நாம்?



பெண்கள் தன்பால் புணர்ச்சி குறித்து ஒரு மேற்கோளை ரியேடான் னாஹிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் அக்கர்மென்.



'சுய இன்பம், கிரேக்கர்களுக்கு ஒழுங்கீனமான செயலாக இல்லாமல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக இருந்தது. ஆசியா மைனரில் உள்ள மிலெட்டஸ் என்ற செல்வச் செழிப்பான நெய்தல் நில நகரம், கிரேக்கர்களால் 'ஒலிபாஸ்' என்று அழைக்கப்பட்ட 'டில்டோ' சாதனங்களைத் தயாரிப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கியது. இது ஆண் குறியின் மாற்று உரு அமைப்பு. கிரேக்கர் காலத்தில் மரத்தினாலோ, தோல் அட்டைகளாலோ செய்யப்பட்டு, உபயோகிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் கொண்டு வழுவழுப்பாக்கப்பட வேண்டியதாக இருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன இலக்கிய நாடகத்தில் ஒரு காட்சி. மெட்ரோ மற்றும் கோரிட்டோ எனும் இரண்டு பெண்கள் பேசிக் கொள்ளும் காட்சி. மெட்ரோ, கோரிட்டாவிடம் டில்டோவைக் கடனாகக் கேட்கிறாள். அவள் அதை வேறு ஒருத்திக்குக் கடன் கொடுத்திருக்கிறாள். கடன் வாங்கியவள், இன்னொருத்திக்குக் கொடுத்திருக்கிறாள். . .!



உலகம், இன்று வந்து சேர்ந்திருக்கும் இந்தப் புள்ளிக்கு வர நடந்து கடந்து வந்த காலம் பல யுகங்கள் என்பதையும், இன்று விபரீதம், வினோதம் என்றெல்லாம் கணிக்கத்தக்க பல விஷயங்கள் சாதாரண நடை முறைகள் என்பதையும், ஒழுக்கத் தராசைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் ஒழுக்கப் போலீஸ்காரர்கள் உணரவேண்டும். பெண்கள் கையில் துடைப்பத்தையும், செருப்பையும் கொடுத்துச் சக பெண்ணை எதிர்க்கத் தூண்டும் நாசகார சக்திகள் இதை உணர வேண்டும்.



பிரியாபாபுவின் வாழ்க்கையை அவரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்தும், அவர் விழிப்புணர்வு இதழுக்குக் கொடுத்துள்ள (இப்பேட்டி 'அரவாணிகள்' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. பேட்டி கண்டவர்கள் இராஜீவ் காந்தி, ஆனந்தராஜ்) பேட்டியிலிருந்தும் தொகுத்து அறிந்து கொள்வது நல்லது. எந்தச் சூழலில் இருந்து, எப்படிப்பட்ட மனிதர் மூன்றாம் பாலின் முகம் நாவலைத் தந்திருக்கிறார் என்பதை வாசகர் அறிய வேண்டும்.



இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்த பிரியாவுக்குப் பூர்வீகம் முசிறி கிராமம். 1974-இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் அவரைத் தமிழ் மண்ணில் கொண்டு வந்து போட்டது. 12 வகுப்புவரை படித்தவர். பள்ளிப் பருவத்திலேயே தன் பால் வேறு பாட்டுப் பிரச்சினையால் சகல துன்பங்களுக்கும் ஆளானார். 1998இல் அறுவைச் சிகிச்சைமூலம் பெண்ணாக அடையாளம் கண்டார். அரவாணிகளுக்கான ஓட்டுரிமை வழக்கில் முக்கிய பங்காற்றியவர். 2007-இல் இவரது 'அரவாணிகள் சமூக வரைவியல்' நூலை வெளியிட்டார். கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் காவல்துறையினருக்கும் (இவர்களிடம் பேசுவதுதான் மிக முக்கியம். அரவாணிகளின் முதல் விரோதிகள் காவல்துறையே என்பதே அரவாணிகளின் கருத்து) அரவாணிகள் பற்றிய வகுப்புகள் நடத்துகிறார். பிரியாபாபு, தன்னைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்கள் இரண்டு பேர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறார். (தெய்வங்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர்கள். இவர்களுக்காகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது) வெளிநாடுகளில் வாழும் அரவாணிகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை பிரியா பாபு நினைவுகூர்கிறார். பாலின மாற்று அறுவைச் சிகிச்சை சட்டபூர்வமாக்கப்பட்டு, பெண்ணாக மாறுவது எளிதானதாக டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவுகிறது என்று கூறும் அவர், நார்வே நாடு அரவாணிகளின் சொர்க்கபூமி என்கிறார். அரவாணிகளின் இருத்தலுக்காகவும் மற்றவர்கள் அனுபவிக்கும் சகல மனித உரிமைகளையும் அரவாணிகளும் பெற வேண்டும் என்பதற்காக இயக்கபூர்வமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொதுப்பரப்பில் அரவாணிகள் மேல் திணிக்கப்பட்டிருக்கும் அவமானங்கள் கலைய ஊடகங்கள் மூலம், ஆஷாபாரதியுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த நாவலையும் அந்த எண்ணத்தின் நீட்சியாகவே அவர் காண்கிறார்.



அரவாணிகள், அரவாணிகளாக வாழ்வது என்பது அவர்கள் தேர்வு. அது அவர்களின் சுதந்திரம். இதில் ஏனைச் சமூகம் செய்யக்கூடியது, அவர்களுக்கு இசைவாகச் சூழலை உருவாக்கித் தருவதே ஆகும். சூழல், முன்பைவிடவும் மேம்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது. அரவாணிகள் சார்பாக ஓர் உரையாடல் தொடங்கி இருக்கிறது. தமிழக அரசு சில சாதகமான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற பெரும்பாலும் சட்டபூர்வமற்ற தேசத்தில், சட்டபூர்வமாகவே மக்கள் மட்டும் வாழ வேண்டியிருக்கிறது. எனவே, அரவாணிகளுக்கு சட்டபூர்வமான பாலின அடையாளம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அப்படியே கருதி, வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு போன்றவற்றில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. குடும்பம் என்கிற ஒரு ஒடுக்குமுறை அமைப்பில், பெற்றோர்களால் அவர்களின் கல்வி அழிக்கப்பட்டது. தொழில் அறிவும் அவர்கள் பெரும்பாலோர்க்கு இருக்க நியாயம் இல்லை. அதற்கான சிறப்புப் பள்ளிகளும் தொழிற்பள்ளிகளும் அவர்களுக்கென்றே தொடங்க வேண்டும். பொதுப் பள்ளிகள் அவர்களுக்குப் பயன்பட முடியாது. 'அரவாணிகள் கல்வி' தனிச் சட்ட வரையறைகளுக்குள் கொண்டு வரவேண்டும். அவர்களின் உயிர்த் தேவையாக இருப்பது-வீடும் சமூகமும் புறக்கணித்த பிறகு போக்கிடம் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கான தங்கும் இடங்கள், வாழ்வதற்கான கொஞ்சம் பணம் இவையே. அந்தப் பணத்தை அவர்களின் உழைப்புக்கான ஊதியமாகத் தரலாம்.



விளிம்பு நிலைக்கும் மேலாகச் சிக்கிச் சீரழிந்து கொண்டு வாழ்வதற்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் செம்மை அடையும் வரை, சமூகம் தன்னை நாகரிகமானது என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறாது.



பயன் கொண்ட நூல்கள்



* மூன்றாம் பாலின் முகம் - நாவல்

பிரியாபாபு, சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை-83

தொலைபேசி : 24896979, 65855704