வியாழன், 16 மே, 2013

neenda edaiveluikku pin...

சங்கராச்சாரியின் கள்ளக்காதலும் கருணாநிதியின் இளமைக்காதலும்!


பாஜக என்கிற அரசியல் கட்சிக்கும், விஎச்பி, பஜ்ரங்தள், எபிவிபி, இந்துமுன்னணி உள்ளிட்ட வெவ்வேறு பெயர்களில் இயங்கும் வலதுசாரி இந்துதுவ அமைப்புக்களுக்கும் தாய் அமைப்பு ஆர்எஸ்எஸ். இந்த எல்லா அமைப்புக்களையும் சேர்த்து சங்பரிவார் என்று ஆர்எஸ்எஸ்காரர்கள் அழைக்கிறார்கள்.


இவர்களின் அரசியல் எல்லாமே இந்து மதம் சார்ந்தது. இந்துமதக் கடவுள்கள் தான் இவர்களின் உதாரண புருஷர்கள். வழிபாட்டுக்குரிய, பின்பற்றத்தக்க முன்னோடிகள். இந்து மதத்தின் பிரதான கடவுள்கள் மும்மூர்த்திகள் என்றழைக்கப்படும் சிவன், விஷ்ணு, பிரம்மா. முன்றாவது மூர்த்தியான பிரம்மனைப் பற்றி அவர்கள் அதிகம் பேசுவதில்லை. ஒருவேளை தன் மகளான சரஸ்வதியை, தந்தையான பிரம்மனே மணந்த செயலை நியாயப்படுத்துவதில் சங்பரிவாரங்களுக்கே கூட சங்கடம் ஏற்பட்டிருக்கலாம். அதனால் அவர்கள் பிரம்மன் குறித்து அதிகம் பேசுவதில்லை. எனவே நாமும் அவரை இப்போதைக்கு விட்டுவிடலாம்.


சிவனுக்கு சக்தி என்கிற மனைவி, கங்கை என்கிற துணைவி. சிவனைப் பொறுத்தவரை அவர் ஒருபக்கம் தன்னிடம் காமத்தை தூண்ட முயன்ற மன்மதனை நெற்றிகண்ணால் எரித்து சாம்பலும் ஆக்கியிருக்கிறார். மறுபக்கம் திருவிளையாடல் புராணத்தில் இதே சிவபெருமான் தனது பக்தனின் சின்னவீட்டுக்கு தானே தூது போய் (என்ன ஒரு முக்கிய சேவை பாருங்கள்) சின்னவீட்டை பக்தனுக்காக செட் அப் செய்தும் கொடுத்திருக்கிறார்.


அடுத்து விஷ்ணுவுக்கு எத்தனை மனைவிகள் என்று கணக்கிடுவதில் இன்றுவரை பெரிய சிக்கல் நீடிக்கிறது.காரணம் விஷ்ணுவின் பத்து அவதாரங்கள் எவை என்பதில் வைணவர்கள் மத்தியில் இன்னும் இறுதி முடிவு எட்டப்படவில்லை. இதில் ஒவ்வொரு அவதாரத்திலும் விஷ்ணு ஒவ்வொரு மாதிரி துணைகளை, இணைகளை வைத்துக்கொள்கிறார்.


பரசுராம அவதாரத்தில் அவர் பிரம்மச்சாரி. ராம அவதாரத்தில் அவருக்கு சீதை என்கிற ஒரே மனைவி. அந்த ஒரே ஒரு மனைவியை ராமர் படுத்திய பாடு கொஞ்சநஞ்சமல்ல. முதலில் தீயில் இறங்கி தனது தூய்மையை நிரூபிக்கச்சொன்னார். அடுத்து நிறைமாத கர்ப்பிணியான சீதையை காட்டுக்கு விரட்டினார். அவ்வளவு தூரம் மனைவியையே நம்பாத சந்தேகப்பேர்வழிதான் விஷ்ணுவின் அவதாரமான ராமர்.


இதற்கெல்லாம் சேர்த்துவைத்து கிருஷ்ண அவதாரத்தில் விஷ்ணு காதல் விஷயத்தில் சும்மா புகுந்து விளையாடுகிறார். ராதா, ருக்மணி, சத்யபாமா, ஜாம்பவதி, களிந்தி, மித்ரவிந்தா, நாகநஜிதி, பத்ரா, லக்‌ஷமணா என்று மொத்தம் ஒன்பது அதிகாரப்பூர்வ மனைவி மற்றும் துணைவிகள். இவர்கள் தவிர கிருஷ்ண பகவான் கணக்கிலடங்கா கோபிகைகளுடன் ராசலீலையிலும், ஜலக்கிரீடைகளிலும் ஈடுபட்டுக்கொண்டிருந்தார்.


இப்படியாக வெறும் பெண்களை மட்டுமே கூடி கூடிக் களைத்துப் போகும் போது ஒரு சேஞ்சுக்காக கிருஷ்ண பகவான் மோகினி அவதாரமெடுத்து சிவனுடனும், நாரதனுடனும் கூடி பிள்ளைகள் பெற்றுக் கொண்டார். அப்படி அவர் பெற்ற பிள்ளைகளில் சிவனுக்கு பிறந்தவர் ஐயப்பன். நாரதருக்குப் பிறந்தவர்கள் தான் சித்திரை மாதம் துவங்கும் தமிழ் ஆண்டுப்பெயர்களில் இருக்கும் அறுபது குழந்தைகள்.


விஷ்ணுவின் அவதாரமான திருப்பதி வெங்கடாஜலபதிக்கு ஒரு மனைவி, ஒரு துணைவி. இதுபோறாதென்று துலுக்கநாச்சியார் என்று மூன்றாவதாக ஒரு தொடுப்பு வேறு.


இங்கே தமிழ்நாட்டில் விஷ்ணுவின் தீவிர பக்தையான ஆண்டாள் பாசுரத்தில் வெளிப்படாத காதலோ காமமோ வேறொரு இலக்கியத்தில் இல்லை. அப்படி ஒரு அனுபவித்து எழுதிய காதல் சுரங்கக் கவிதைகள்.


சரி இதெல்லாம் கற்பனையென்று ஒரே வரியில் நீங்கள் புறந்தள்ளலாம். அதனால் அவற்றை நாமும் விட்டுவிடலாம். ஆனால் நம் சமகால காஞ்சி சங்கராச்சாரியார் கதைக்கு உங்கள் பதில் என்ன சங்பரிவாரிகளே? ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் பாஜக அரசியல்வாதிகளும், சங்பரிவாரத் தலைவர்களும் தவறாமல் போய் சலாம் போடுவது காஞ்சி சங்கராச்சாரியார்களின் மடத்தில். அந்த மடத்தின் மூத்தவர் பெயர் ஜெயேந்திரர்; இளையவர் பெயர் விஜயேந்திரர்.


இவர்கள் இருவரும் சேர்ந்து ஒருவரை கோவிலுக்குள்ளேயே கொடூரமாக வெட்டிக்கொன்றதாக குற்றச்சாட்டு. கொல்லப்பட்டவர் பெயர் சங்கரராமன். கொலைக்கான காரணம் இரண்டு சங்கராச்சாரியார்களும் பல பெண்களிடம் கள்ளக்காதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகவும் அதை தான் வெளியில் சொல்லிவிடுவேன் என்று சங்கரராமன் மிரட்டியதாகவும் அந்த மிரட்டலைத் தொடர்ந்து தங்களின் கள்ளக்காதல் விவகாரங்கள் வெளியில் வராமல் தடுக்கும் நோக்கில் சங்கராச்சாரியார்கள் கூலிப்படை மூலம் சங்கரராமனை கோவிலுக்குள்ளேயே வைத்து கொடூரமாக கொலை செய்ததாகவும் தமிழக காவல்துறை தொடர்ந்த வழக்கு பாண்டிச்சேரி நீதிமன்றத்தில் இன்னமும் நடந்துகொண்டிருக்கிறது.


சன்னியாசியான சங்கராச்சாரியார் காதல் விவகாரத்தில் சிக்கியது இது முதல்முறையல்ல. ஏற்கெனவே 1987 ஆம் ஆண்டு சன்னியாசிக்கான அடையாளமான தனது தண்டத்தை மடத்தில் விட்டுவிட்டு அவர் பாட்டுக்கு தலைக்காவிரிக்கு இரவோடிரவாக ஓடிப்போனார். அவருடன் கூடவே ஒரு பெண்ணும் போனதாக ஊடகங்களில் எல்லாம் ஊகங்கள் வெளியானது.


அப்போது டெல்லியில் இந்தியாவின் குடியரசுத்தலைவராக இருந்த சங்கராச்சாரியாரின் சீடர் ஆர் வெங்கட்ராமனின் மனைவி இரவோடிரவாய் சிறப்பு விமானத்தில் ஓடோடி வந்து சமாதானம் பேசி குடும்பஸ்தனாகப் போனவரை மீண்டும் கொண்டுவந்து சன்னியாசியாக்கினார்கள்.


அதற்குப்பிறகும் சங்கராச்சாரியார் சும்மா இல்லை. விதவைகள் எல்லாம் "தரிசு நிலம்" என்று கூறிய ஜெயேந்திரர், அவரது பார்வையில் "தரிசு நிலமாக" இருந்த புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளர் அனுராதா ரமணனின் கையை பிடித்து இழுத்து "தரிசுநில மேம்பாடு" செய்ய முயன்றதாக அந்தம்மாவே கண்ணீர் மல்க விரிவாக புகரை பதிவு செய்திருக்கிறார்.


ஊரறிந்த துறவியான (?) "லோக குருவின்" லட்சணம் இதுவென்றால், அரசியல் துறவிகளான பாஜக தலைவர்களைப்பற்றி என்னத்தை சொல்ல. அது ஒரு நீண்ட பட்டியல், சமீபத்திய சில உதாரணங்களை மட்டும் தொட்டுக்காட்டினால் போதும்.


ஆர் எஸ் எஸ் அமைப்பிலிருந்து பாரதீய ஜனதா கட்சிக்கு அனுப்பப்பட்ட இரண்டு பெரிய தலைவர்கள் கோவிந்தாச்சார்யா மற்றும் சந்நியாசினி உமாபாதி. இவர்களுக்கு இடையில் உருவான காதல் கல்யாணத்தில் முடிவதற்குள் கட்சிக்குள் இருந்த சிலர் இதை ஊடகங்களுக்கு வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி விட்டதால் திருமணம் நின்று போனது.


அதேபோல, ஆர் எஸ் எஸ் அமைப்பிலிருந்து பாரதீய ஜனதாவுக்கு அனுப்பப்பட்ட இன்னொரு பெரிய ஆள் சஞ்சய் ஜோஷி. பாரதீய ஜனதா கட்சியின் பொதுச்செயலாளராக இருந்தவர் காதல் விவகாரத்தில் சிக்கி பதவியை ராஜினாமா செய்தார்.


தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான கர்நாடகத்தில் ஒரே ஒருமுறை ஆட்சி செய்தாலும், பாஜக தலைவர்களின் காதல் லீலைகள் கொஞ்சநஞ்சமல்ல. கர்நாடக சட்டமன்றத்திற்குள்ளேயே, கைபேசிகளில் பாரதீய ஜனதா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்த காணொளிகளில் துவங்கி, உடுப்பி சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி பட் ஏடாகூடமான காணொளியில் சிக்கியதுவரை பாரதீய ஜனதா கட்சியின் கர்நாடக லீலாவிநோதங்களுக்கு தனி அத்தியாயம் தேவை.


இப்படியான சின்ன ஆட்களைத்தவிர ஆனப்பெரிய தலைவரான அடல்பிஹாரி வாஜ்பாய் கதை இன்னும் சுவாரஸ்யமானது. அதிகாரப் பூர்வமாக அவர் திருமணம் செய்துகொள்ளவில்லை. ஆனால் அவருக்கு “குடும்பம்” இருக்கிறது, “குழந்தைகள்” இருக்கிறார்கள் என்கிறார் அவரது முன்னாள் நெருங்கிய நண்பரும், தற்போது பாரதீய ஜனதா கட்சியின் மிக முக்கிய கூட்டாளியுமான சுப்பிரமணிய சுவாமி. வாஜ்பாயியின் லீலாவிநோதங்கள் மற்றும் அவரது “குடும்பம்” எப்படி உருவானது (?) என்கிற விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புபவர்கள் கீழ்கண்ட பதிவை சென்று படித்து பயன்பெறவும். அதை தமிழில் மொழிபெயர்த்தால் வரக்கூடிய திட்டுக்களைத் தாங்க எதிரொலியால் முடியாது. அவ்வளவு மோசம்.


http://bachelorenjoyingfruitsofmarriage.blogspot.co.uk/2011/10/subramaniam-swamy-on-atal-behari.html


பாரதீய ஜனதா கட்சியின் முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் கதை இதுவென்றால், அவர்களின் எதிர்கால பிரதமராக முன் நிறுத்தப்படும் நரேந்திரமோடியின் கதை இதைவிட விசித்திரமானது. வாஜ்பாயி திருமணாமாகாமலே “குடும்பத்”துடன் வாழ்கிறார் என்றால், நரேந்திர மோடி தனக்கு இருக்கும் குடும்பத்தை மறைப்பதில் கவனமாக இருக்கிறார். தனக்கு ஏற்கெனவே திருமணம் நடந்த கதையை பேசாமல், தனக்கு ஒருமனைவி இருக்கிறார் என்பதையும் வெளி உலகுக்கு காட்டாமல் மறைப்பதில் மோடி மிக மிக கவனமாக இருக்கிறார். நரேந்திர மோடியால் மிகக்கவனமாக மறைக்கப்படும் அவரது மனைவியை சந்தித்து பேட்டி எடுக்கப்போன ஊடகவியலாளருக்கு நேர்ந்த அனுபவம் குறித்த விரிவான செய்திக்கு இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.


http://www.openthemagazine.com/article/nation/i-am-narendra-modi-s-wife


இந்த கட்டுரையில் பட்டியலிடப்பட்டிருப்பவை எல்லாமே ஏற்கெனவே ஆவணரீதியில் பதிவு செய்யப்பட்ட தகவல்களே. இதில் எதுவுமே எதிரொலியின் புதிய கண்டுபிடிப்பல்ல. கடவுளானாலும், மனிதர்களானாலும் அவரவர் காதலும் காமமும் அவரவர் தனிப்பட்ட அந்தரங்கம். அவற்றில் தலையிடவோ, அவர்கள் செய்ததில் எது சரி எது தவறு என்று தீர்ப்பு எழுதவோ எதிரொலி உட்பட யாருக்குமே எந்த உரிமையும் இல்லை. யோக்கியதையும் இல்லை. அவர்களின் காதல் அல்லது காமம், சட்ட மீறலாகவோ, மனித உரிமை மீறலாகவோ புகாராக வந்தால் மட்டுமே, அரசு உட்பட மற்றவர் இதில் தலையிட முடியும், இது குறித்து கருத்து சொல்ல முடியும். விவாதிக்க முடியும்.


சங்பரிவாரிகளுக்கு பொருந்தும் இந்த நியாயம், இந்த அளவுகோல் கருணாநிதிக்கும் பொருந்தும் என்பதை எடுத்துக்காட்டவே எதிரொலி இந்த உதாரணங்களை இங்கே அடுக்கியது. அவ்வளவே.