<?xml version='1.0' encoding='UTF-8'?><?xml-stylesheet href="http://www.blogger.com/styles/atom.css" type="text/css"?><feed xmlns='http://www.w3.org/2005/Atom' xmlns:openSearch='http://a9.com/-/spec/opensearchrss/1.0/' xmlns:georss='http://www.georss.org/georss' xmlns:gd='http://schemas.google.com/g/2005' xmlns:thr='http://purl.org/syndication/thread/1.0'><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574</id><updated>2012-02-29T07:40:14.661-08:00</updated><title type='text'>நதி.rvr.rajendiran</title><subtitle type='html'>rvr.rajendiran</subtitle><link rel='http://schemas.google.com/g/2005#feed' type='application/atom+xml' href='http://rvrrajen.blogspot.com/feeds/posts/default'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default?max-results=100'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/'/><link rel='hub' href='http://pubsubhubbub.appspot.com/'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><generator version='7.00' uri='http://www.blogger.com'>Blogger</generator><openSearch:totalResults>94</openSearch:totalResults><openSearch:startIndex>1</openSearch:startIndex><openSearch:itemsPerPage>100</openSearch:itemsPerPage><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-168054534287656294</id><published>2012-02-29T07:25:00.000-08:00</published><updated>2012-02-29T07:25:15.738-08:00</updated><title type='text'>shobasakthi.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;ரூபம்&lt;br /&gt;&lt;br /&gt;Print this Page&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;th&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச் சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்பாளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ‘ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா” என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைகளில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் ” அய்யா நாங்கள் பொது மக்கள்” எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. “கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்” என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது. அவர்களில் ஒருவன் தனது ஆடைகளைக் கழற்றி வீசுவதிலேயே குறியாயிருந்தான். அதற்காக இராணுவத்தினரிடம் ஒவ்வொரு நாளும் உதைபட்டான். அவன் அங்கிருந்து விடுதலையாவதற்காக நாடகம் போடுகிறான் என இராணுவ அதிகாரி சொன்னான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவர்களில் தெரிவு செய்யப்பட்ட அய்ம்பது பேர்களிற்கு பயிற்சியளிக்க ஒரு மனநல மருத்துவர் வந்தார். அவர் மனச் சோர்விலிருந்து விடுபட்டு மகிழ்ச்சியாக இருப்பது எவ்வாறு என உரையாற்றிக் கொண்டிருக்கும் போதே இவன் குறுக்கிட்டு “இங்கிருந்து விடுதலையாகி வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சியாயிருப்போம் என நினைக்கிறேன்’” என்றான். மருத்துவர் எது சொன்னாலும் இவன் விட்டேற்றியாக அவரைத் தட்டிக்கழித்தான். கடைசியில் மருத்துவர் மனச் சோர்வுக்கு ஆளாகிவிட்டார் போலிருந்தது. அடுத்த பயிற்சி வகுப்பை இராணுவத்தினருக்கு எடுக்கவிருப்பதால் முன்னாள் போராளிகளிற்கான முதல்நாள் பயிற்சி வகுப்பை இத்துடன் முடித்துக் கொள்ளலாம் என்று மருத்துவர் சொன்னார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரியாக ஒன்றரை வருடங்கள் கழித்து அங்கிருந்து விடுதலையான முதலாவது அணியில் இவனுமிருந்தான். அந்த அணியில் அவயங்களை இழந்திருந்தவர்கள் மட்டுமேயிருந்தனர். புதிய வேட்டியும் சட்டையும் இராணுவத்தினரால் வழங்கப்பட்டன. முகாமில் விழா நடத்திப் பத்திரிகையாளர்கள் முன்னிலையில் முன்னாள் போராளிகள் அவர்களது பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டனர். இவனை அழைத்துச் செல்ல அம்மா வந்திருந்தார். அம்மாவின் முகம் முழுவதும் சிரிப்புத் தொற்றியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அக்காவுக்கு கல்யாணமாகி அவள் நகரத்தில் குடியிருந்தாள். இவ்வளவு நாட்களும் அம்மா அக்காவுடனேயே தங்கியிருந்தார். அம்மா தன்னை அக்காவின் வீட்டுக்குத்தான் அழைத்துச் செல்வதாக இவன் எண்ணினான். ஆனால் அம்மா இவனைக் கிராமத்து வீட்டிற்கு அழைத்து வந்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீடு உருக்குலைந்திருந்தது. கதவுகளையும் நிலைகளையும் கூடத் திருடிச் சென்றிருந்தார்கள். வாசலுக்கும் ஜன்னல்களிற்கும் அம்மா துணியால் திரை செய்து போட்டார். இவனது அறைக்குள் ஒரு மேசையும் நாற்காலியும் படுக்கையும் வாங்கிப் போட்டார். இவன் அந்த அறைக்குள்ளேயே அடைந்து கிடந்தான். வீட்டுக்குப் போனால் மகிழ்ச்சி உருவாகும் என மனநல மருத்துவரிடம் சொன்னதை அடிக்கடி நினைத்துப் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைத் தெருவே மாறியிருந்தது. முன்பு இவன் தொலைக்காட்சி பார்க்கச் செல்லும் ‘மீனா கபே’ இப்போது ‘லங்கா கபே’ ஆகியிருந்தது. அதை இராணுவத்தினர் நடத்திக்கொண்டிருந்தனர். இப்போதும் அங்கே இடையறாது தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருந்தது. இவன் தலையைக் கவிழ்ந்தவாறே அதைக் கடந்து சென்றான். கடைத் தெருவில் எல்லோருமே தன்னைப் போலவே தலையைக் குனிந்தவாறே நடந்துகொண்டிருப்பதாக இவனுக்குத் தோன்றியது. தற்செயலாகச் சந்தித்த கண்களில் அச்சத்தை மட்டுமே இவன் பார்த்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இவனுக்குச் செயற்கைக் கால் பொருத்துவதற்காகப் பணம் திரட்டிக் கொண்டிருந்தார். காலைப் பொருத்தி நான் எங்கே போகப் போகிறேன், அந்தப் பணத்தில் ஒரு தொலைக்காட்சி வாங்கினாலாவது அறைக்குள்ளிருந்து பார்த்துக்கொண்டிருக்கலாமென நினைத்தான். ஆனால், அவ்வாறு கேட்பது அம்மாவைப் புண்படுத்தக் கூடுமென்பதால் இவன் வெறுமனே அறைக்குள் அடைந்து கிடந்தான். வாரம் ஒருமுறை இராணுவச் சாவடிக்குச் சென்று கையெழுத்திட வேண்டியிருந்தது. அந்த நாட்களில் மட்டுமே வெளியே போனான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அன்று மாலையில் பக்கத்து வீட்டிலிருந்து பாட்டுச் சத்தம் வந்து கொண்டிருந்தது. மகிழ்ச்சி என்பது நாம் உருவாக்கிக் கொள்வதே என மனநல மருத்துவர் சொன்னது ஞாபகத்திற்கு வந்தது. கண்களை மூடிக்கொண்டு படுத்திருந்தான். பொழுது பட்டதும் ஊன்றுகோலை எடுத்துக்கொண்டு வெளியே நடந்தான். அவன் பக்கத்து வீட்டு வாசற்படியில் தட்டுத் தடுமாறி ஏறிய போது உள்ளேயிருந்த தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். சற்று நேரத்தில் தொலைக்காட்சி திடீரென நிறுத்தப்பட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டுக்காரர் வாசலுக்கு வந்து இவனைப் பார்த்தார். இவன் தொலைக்காட்சி பார்ப்பதற்காக வந்ததாகச் சொன்னான். வீட்டுக்காரர் தலையைக் குனிந்து நிலத்தைப் பார்த்தவறே அவர்கள் சாப்பிடப் போவதாகச் சொல்லிவிட்டு வாசலிலேயே நின்றார். இவன் கையை வாசற்படியில் ஊன்றித் தட்டுத் தடுமாறி எழுந்து சுவரில் சாய்த்து வைத்திருந்த ஊன்றுகோலையும் எடுத்துக்கொண்டு படியிறங்கும் போது வீட்டுக்காரர் ‘கானகன் நீ இஞ்ச வந்து போனால் ஆமியால எங்களுக்கும் பிரச்சினை வரும்’ என்று முணுமுணுத்தது இவனுக்குத் தெளிவாகக் கேட்டது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீதியில் நின்று சட்டைப் பையிலிருந்து பீடியை எடுத்துப் பற்றவைக்க முயன்றான். கை நடுங்கிக் கொண்டிருந்தது. நான்காவது தீக்குச்சியிலேயே பற்ற வைக்க முடிந்தது. இந்தப் பழக்கம் தடுப்பு முகாமிலிருந்தபோது வந்திருந்தது. அம்மா காலையில் ஒரு கட்டு பீடி வாங்கிக் கொடுப்பார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாயில் பீடியை வைத்தவாறே நடந்தான். இவனது ரவி என்ற பெயரை வீட்டுக்காரர் மறந்து இவனைக் கானகன் என அவர் அழைத்தது இவனுக்கு ஆச்சரியமாயிருந்தது. பீடியை இழுத்துக் கொண்டே நடந்தான். விடுதலையாகி வந்து இவ்வளவு நாளாகியும் அக்காவோ அத்தானோ தன்னை இதுவரை வந்து பார்க்காதது திடீரென இவனுக்கு உறைத்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடுநிசியில் அம்மா எழுந்து கை விளக்கையும் எடுத்துக் கொண்டு மெதுவாக நடந்து இவனது அறையை நோக்கிப் போனார். ஒவ்வொரு நாளும் அம்மா இவ்வாறு சென்று பார்ப்பார். இவன் தூங்கிக்கொண்டிருப்பது அவருக்கு நிம்மதியாகயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா இவனது அறையின் வாசலில் நின்று இவனது படுக்கையிருந்த திசையில் விளக்கைப் பிடித்தபோது படுக்கை காலியாயிருந்தது. அம்மா பதற்றத்துடன் அறையின் மூலையொன்றிற்கு வெளிச்சத்தைத் திருப்பினார். அங்கே அவன் சுவரோடு சாய்ந்து தரையில் ஆடாமல் அசையாமல் சிலைபோல உட்கார்ந்திருந்தான். அம்மா அவனது முகத்திற்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது அவனது கண்கள் மேசையையே உற்றுப் பார்த்துக்கொண்டிருப்பதைப் பார்த்தார். அம்மா மேசைக்கு வெளிச்சத்தைத் திருப்பியபோது மேசையில் ஒரு தீப்பெட்டி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அம்மா திடீரென வெடித்துப் பெருங்குரலெடுத்து அழத் தொடங்கினார். இவன் ஆடாமல் அசையாமல் உட்கார்ந்திருந்தான். இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டிருந்தன.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-168054534287656294?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/168054534287656294'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/168054534287656294'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2012/02/shobasakthi.html' title='shobasakthi.'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-1085492704814206251</id><published>2012-01-19T06:07:00.001-08:00</published><updated>2012-01-19T06:07:45.782-08:00</updated><title type='text'>Puthumaipitthan.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;table cellpadding="0" cellspacing="0"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;&lt;td align="center" style="background-color: #d65b20; height: 50px;" width="100%"&gt;&lt;span id="ctl00_ContentPlaceHolder1_lblContentTitle" style="color: #dfe726; font-size: 18pt; font-weight: bold;"&gt;கண்மணி கமலாவுக்கு புதுமைப் பித்தன் (ஒரு வாசிப்பு அனுபவம்)&lt;/span&gt;                         &lt;/td&gt;                     &lt;/tr&gt;&lt;tr&gt;                         &lt;td align="center" colspan="4" style="background-color: #d65b20; height: 50px; padding-left: 10px;"&gt;                             &lt;table align="Center" border="0" cellspacing="0" id="ctl00_ContentPlaceHolder1_dlContentDescription" style="border-collapse: collapse; width: 100%;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt;   &lt;td&gt;                                   &lt;span class="indexAuthor" id="ctl00_ContentPlaceHolder1_dlContentDescription_ctl00_lblAuthor"&gt;உஷாதீபன்&lt;/span&gt;                                                                                                                     &lt;/td&gt;  &lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/td&gt;                     &lt;/tr&gt;&lt;tr&gt;                         &lt;td colspan="4" style="text-align: left;"&gt;                             &lt;div id="ctl00_ContentPlaceHolder1_divContent" style="padding: 0px 10px 0px 10px; width: 95%;"&gt;                                 &lt;div align="justify"&gt;                                     &lt;span class="indexAbstract" id="ctl00_ContentPlaceHolder1_lblcontents"&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வா&lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ழ்க்கையின் அர்த்தத்தைச் சொல்லுவது தத்துவம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;வாழ்க்கையைச் சொல்லுவது&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அதன் இரசனையைச் சொல்லுவது இலக்கியம் என்றார் புதுமைப்பித்தன்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அந்த அளவுக்கான ஆழ்ந்த ரசனையோடுதான் தனது ஒவ்வொரு படைப்பினையும் வடித்தெடுத்திருக்கிறார் என்று சொல்ல வேண்டும்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அதனால்தான் இலக்கியம் என்பதன் முழு அர்த்தத்தை உள்ளடக்கியதாக நம்மை பிரமிக்க வைக்கிறது அவரது ஒவ்வொரு படைப்புக்களும்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இல்லையென்றால் தனது மனைவிக்கு எழுதும் கடிதங்களைக் கூட இத்தனை ரசனையோடும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பிடிப்போடும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;உள்ளார்ந்த அனுபவச் செறிவோடும் அன்பையும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பாசத்தையும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பொறுப்புணர்ச்சியையும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;கடமையுணர்ச்சியையும் நுணுகி நுணுகி உணர்ந்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அனுபவித்து அதன் ஆழமான உட்பரிமாணங்களில் &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;மனமுவந்து பயணித்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;தனக்கு ஊனாகவும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;உடலாகவும் இருந்து பரிமளித்திடும் தன் மனையாளிடம் அதன் மொத்த சாரத்தையும் வடித்துக் கொடுத்துக் கடிதங்கள் எழுதியிருப்பாரா&lt;span style="font-family: Verdana;"&gt;?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;strong&gt;கண்மணி கமலாவுக்கு &lt;span style="font-family: Verdana;"&gt;– &lt;/span&gt;புதுமைப்பித்தன்&lt;/strong&gt; &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;இதுதான் புத்தகம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இத்தனை கடிதங்களைத் தொகுக்கும் பணி என்ன சாதாரணமா&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;என்ன விலையோ அதைத் தயங்காமல் கொடுத்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;ஆர்வமாகப் படித்து முடித்து விடுகிறோம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர் என்ன ஒரு உழைப்பையும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;முனைப்பையும் காட்டியிருப்பார்&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;திரு இளையபாரதி அவர்கள் நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;இதுதான் புத்தகம்இத்தனை கடிதங்களைத் தொகுக்கும் பணி என்ன சாதாரணமாஎன்ன  விலையோ அதைத் தயங்காமல் கொடுத்துஆர்வமாகப் படித்து முடித்து  விடுகிறோம்ஆனால் அந்தப் புத்தகத்தை உருவாக்குவதற்கு அந்தத் தொகுப்பாளர்  என்ன ஒரு உழைப்பையும்முனைப்பையும் காட்டியிருப்பார்திரு இளையபாரதி அவர்கள்  நிரம்பவும் பாராட்டுக்குரியவர்தான் &lt;span style="font-size: x-small;"&gt;நாமெல்லாம் என்ன வாழ்க்கை வாழ்கிறோம் என்றுதான் தோன்றுகிறது நமக்கு&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;முணுக்கென்றால் முன்னூறு முறை கோபித்துக் கொள்ளும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;முகத்தைத் திருப்பிக் கொள்ளும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;சண்டைக்கு சதிராய்ப் பறக்கும் சாதாரண மானிடப் பிறவியாய் அன்றாட வாழ்க்கையைக் கழித்துக் கொண்டிருக்கிறோம்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இத்தனைக்கும் பொருளாதாரத் தேவை என்பது நிறைவடைந்திருக்கும் நிலையில்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;எதடா சாக்கு என்று ஒன்றுமில்லாததற்கெல்லாம் முறுக்கிக் கொண்டு அலைகிறோம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;என்னதான் புத்தகங்கள் படித்தாலும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;உணர்ந்தாலும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;மனிதனின் இயல்பான கோணல் புத்தி என்ன அத்தனை சீக்கிரமாகவா தன்னை மூடி மறைத்துக்கொள்கின்றன&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;அல்லது எல்லா முரண்களிலிருந்தும் விலகிக் கொள்கின்றனவா&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அன்றாட வாழ்க்கையே பிரச்னையாக இருந்த நிலையில்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பொருள் ஆதாரத்தை முற்றிலுமாக நம்பி நின்ற பொழுதில்&lt;span style="font-family: Verdana;"&gt;, &amp;nbsp;&lt;/span&gt;ஒருவருக்கொருவர் பரஸ்பரம் அவரவருக்கான மனச் சங்கடங்களைக் கூட நேரில் பகிர்ந்து கொள்ள முடியாது வெகு தூரம் பிரிந்து நின்ற வேளையில்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;எத்தனை கரிசனத்தோடும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அன்போடும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;கருணையோடும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பாசத்தோடும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பரஸ்பரம் &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;எப்படியெல்லாம் உறவாடியிருக்கிறார்கள்&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;மனதுக்குள்ளே எப்படி ஆரத் தழுவியிருக்கிறார்கள்&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;இதுதான் உண்மையான அன்பு என்பதோ&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மூத்த தலைமுறையினரின் அடிப்படையான விழுமியங்கள் அவர்கள் வாழ்க்கையை எப்படியெல்லாம் செழுமைப் படுத்தியிருக்கின்றன&lt;span style="font-family: Latha;"&gt;! &lt;/span&gt;ஒழுக்கமும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பண்பாடும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;கடமையுணர்ச்சியும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;கட்டுப்பாடும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;இந்த வாழ்க்கையை இப்படித்தான் வாழ்ந்து காட்ட வேண்டும் என்றல்லவா நமக்குப் பாடம் கற்பிக்கின்றன&lt;span style="font-family: Latha;"&gt;! &lt;/span&gt;சொல்லும் ஒவ்வொரு சொல்லும் அட்சர லட்சம் பெறும் என்கிற உண்மை இங்கே எப்படியெல்லாம் பரிணமிக்கின்றன&lt;span style="font-family: Latha;"&gt;!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பொருளீட்டுவதற்கான நமது உழைப்பு &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;என்பது எங்ஙனம் இருக்க வேண்டும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;ஈட்டிய பொருள் எத்தனை அர்த்தபூர்வமாய்ப் பயன்படுத்தப்பட வேண்டும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பொருள் ஆதாரம் என்பது அதற்கான தேவைகளை நீட்டித்துக் கொண்டே போகாமல் அவசரம்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அவசியம் என்பவைகளை அடிப்படையாகக் கொண்டு தவிர்க்க முடியாதவைகளாயும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;தவிர்க்கக் கூடியவைகளாகவும் எப்படிப் பொறுப்போடு &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;உணரப்பட வேண்டும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;என்பதாக வாழ்க்கையின் நிகழ்வுகளை எத்தனை அக்கறையோடு போதிப்பதாக உள்ளன&lt;span style="font-family: Latha;"&gt;!.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வாழ்க்கையில் மனிதனுக்கு எல்லாவிதமான அனுபவங்களும் கிட்டி விடுவதற்கு வாய்ப்பே இல்லை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;காரணம் ஒருவனுடைய வாழ்க்கை எல்கை மிகக் &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;குறுகிய அளவிலானதாக இருப்பதுதான்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;வீடு&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அங்கிருந்து பொருளீட்டும் நிறுவனம் வரையிலான தூரம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;வீடு&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அங்கிருந்து பணியாற்றும் அலுவலகம் வரையிலான தூரம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இடைப்பட்ட மற்றும் பணியாற்றும் இடங்களில் பழகும் மனிதர்கள்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அவர்களின் குணாதிசயங்கள்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அவர்களின் நடத்தைகள்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பழக்க வழக்கங்கள்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அனுபவங்கள் என்று மிகக் குறிப்பிட்ட அளவிலான மனிதர்களின் சந்திப்புகளோடு பெரும்பாலும் முடிந்து போகின்றனவாய் அமைந்து விடுகின்றன&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அப்படியானால் ஒரு மனிதன் முழுமையான அனுபவம் வாய்ந்தவனாக&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;இந்த சமூகத்தை&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அதன் நிகழ்வுகளை முற்றிலுமாகப் புரிந்து நடந்துகொள்பவனாக ஒரு முழு மனிதனாக எப்பொழுது&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;எப்படி உலா வருவது&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அதற்குத்தான் வாசிப்பு அனுபவம் என்பது பெரிதும் உதவுகிறது எனலாம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;வாசிப்பு ஒரு மனிதனைப் பக்குவப்படுத்துகிறது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அவனது சளசளப்பைப் போக்கி அவனை அமைதியானவனாக்குகிறது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;வாசிப்பனுபவத்தினால் மிகப்பெரிய விவேகியானவர்கள் பலர் என்று கூறுகிறார் திரு சுந்தரராமசாமி அவர்கள்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;&amp;nbsp;&amp;nbsp;&lt;/span&gt;இதுதான் சத்தியமான உண்மை&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மேற்கண்ட புத்தகத்தின்பால் ஏற்பட்ட வாசிப்பனுபவம்தான் இந்த அளவுக்கான தொகையறாவை முன்னே வைக்கும் அவசியத்தை ஏற்படுத்தி விட்டது&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;திரு இளையபாரதி அவர்கள் தொகுத்து புதுமைப்பித்தன்  அவர்கள் தனது துணைவியாருக்கு எழுதிய கடிதங்கள்தான் கண்மணி கமலாவுக்கு  என்கிற பெயரில் அற்புதமான ஒரு இலக்கியப் பெட்டகமாக இங்கே மிளிர்கிறது&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வாழ்வதாகச் சொல்கிறோம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;ஆனால் உண்மையில் வாழ்கிறோமா&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;என்று  கேட்ட கலைஞனின் வாழ முடியாமல் போன வாழ்வு அவன் வாக்கு மூலமாய் இங்கே  ஒலிக்கிறது என்று தனது முன்னுரையில் முன் வைக்கிறார் திரு இளையபாரதி  அவர்கள்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;புதுமைப்பித்தன் என்கிற மகாகலைஞனின் இன்னொரு பரிமாணம் இந்தக் கற்பூர ஆரத்தியில் தரிசனமாகிறது என்கிறார்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஆம்&lt;span style="font-family: Latha;"&gt;! &lt;/span&gt;அவர் சொன்னது போல் தன் இருதயத்தை&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அதன் தவிப்பை&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;தணலைக்கொட்டி முழக்கியிருக்கிறார் புதுமைப்பித்தன்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வாழ்க்கை எப்படியெல்லாம் நீண்ட காலத்திற்குப் பிரிந்து நின்றது&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;எப்படியெல்லாம் சிதைந்து போனது&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;தேவைகள் எங்ஙனமெல்லாம் குன்றிப் போயின&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;சுயபூர்த்தியில்லாமலே நாட்கள் எத்தனை வேதனையாய்க் கழிந்தன&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அவற்றினூடே மனம் தன்னை&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;தன்  எண்ணங்களை அகல விரித்து எப்படியெல்லாம் ஆறுதல் தேடிக் கொண்டன என்பனவாக  விரிந்து செல்லும் கண்மணி கமலாவுக்கு என்னும் இந்த இலக்கியப் பெட்டகம் நம்  மனதைப் பிழிந்து எடுத்து விடுகிறது என்பது சத்தியமான உண்மை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இலக்கியத்தை ஆதாரமாகக் கொண்ட ஒருவனின் வாழ்க்கை எப்படித்தான் சிதைந்தாலும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அந்தக் கனவின்பால் ஏற்பட்ட பிடிப்பு ஒருவனை எங்ஙனம் &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;ஆட்டிப் படைக்கிறது என்பதைத் தன் மனைவிக்கான ஒவ்வொரு கடிதம் மூலமாக அப்படியே வடித்தெடுத்திருக்கிறார் பு&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;பி&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அவர்கள்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பழைய திரைப்படங்களிலும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;நாவல்களிலும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;கடிதம் எழுதும் முறைமையில் கண்டவற்றை தன் மனைவிக்கான முதல் அழைப்பின் வாயிலாக பு&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;பி&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அவர்கள் முன் வைக்கும்போது இம்மாதிரியெல்லாம் விளித்து நாம் எழுதியதேயில்லையே என்று தோன்றத்தான் செய்கிறது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அப்படி எழுதியிருந்தால் அது ஒரு செயற்கையான விஷயமாகத்தானே பட்டிருக்கும்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;எல்லோராலும் விரும்பப் பட்டிருக்குமா&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;மனைவியால் கூட விரும்பத் தக்கதாக இருந்திருக்குமா என்றெல்லாம் கூடத் தோன்றினாலும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பு&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;பி&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அவர்கள் கடிதத்திற்குக் கடிதம் அப்படியே தன் மனைவியை விளித்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;தன் ஆழமான அன்பை&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பாசத்தை&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;தன் குடும்பத்தின்பாலான தன் நேசத்தை நிலைநிறுத்தும்போது ஒரு மனிதன் முதலில் தன்னை நேசித்தால்தான் தன் நெருக்கமான சொந்தத்தை&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;சுற்றத்தை இப்படி நேசித்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அரவணைக்க முடியும் என்கிற மன நியாயம் நம்மைக் கட்டுப்படுத்தி நிலை நிறுத்தி விடுகிறது&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;img align="right" alt="" hspace="7" src="http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-177/s%201.jpg" vspace="7" width="250" /&gt;கண்மணி கமலாவுக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;….&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனதாருயிர்க் கண்ணாளுக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனதாருயிருக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கமலாளுக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;… &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனது கட்டிக் கரும்பான ஆருயிர்க் கண்ணாளுக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;என் கண்ணம்மா&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கண்ணா&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கண்ணாளுக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனது கண்ணாளுக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கண்ணான எனது உயிருக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனது கண்ணுக்குக் கண்ணான கட்டிக் கரும்புக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனது உயிருக்கு உயிரான கட்டிக் கரும்புக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனது கண்ணான கட்டிக் கரும்புக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;…&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எனது அருமைக் கண்ணாளுக்கு&lt;span style="font-family: Verdana;"&gt;….&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கடிதத்தின் முதல் அழைப்பே எவ்வளவு அன்பைப் பொழிந்து நிற்கிறது&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பொருளை மட்டுமே ஆதாரமாக வைத்து வாழும் தற்போதைய வாழ்க்கையில் விழுமியங்களான விஷயங்கள் எங்கிருந்து எடுபடும்&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பழைய மதிப்பு மிக்க விஷயங்கள் இன்றும் அந்த மூத்த தலைமுறையினரால் மட்டுமே உணரப்படுகிறது என்றால் அதுதான் உண்மை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இவற்றையெல்லாம் நாம் நம் வாரிசுகளுக்குச் சொன்னோமா&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;அப்படியே சொல்லப் புறப்பட்டால்தான் யார் காதைத் தீட்டிக் கொண்டு கேட்கத் தயாராயிருக்கிறார்கள்&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;? &lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;1938 &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;களிலிருந்து &lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;1948 &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;வரையிலான சுமார் பத்தாண்டு கால கடிதப் போக்குவரத்துகள் இப்புத்தகத்தில் தொகுக்கப்பட்டிருக்கின்றன&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;இக்குறிப்பிட்ட பத்தாண்டு கால இடைவெளியில் புதுமைப்பித்தன் அவர்கள் சென்னையில் வெவ்வேறு முகவரிகளில் மாறி மாறி இருந்திருக்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;மதுரை&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;புனே&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;பெங்களுர்&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;என்று பல இடங்களுக்கும் சென்றிருக்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;அதுவே அவரின் வாழ்க்கைப் போராட்டத்தின் ஆரம்ப அடையாளங்களாக&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;காரண காரியங்களை முன்னிறுத்தியதானதாய் நமக்குத் தோன்றி மனதை மிகவும் கஷ்டப்படுத்தி விடுகிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மனிதன் வறுமையோடு போராடுவது என்பது மிகக் கொடுமை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;பொருளாதாரக் கஷ்டத்தினால் ஒருவனின் அன்றாட வாழ்க்கைப் பாடுகளே சீர்குலைந்துதான் விடுகிறது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;கையில் கிடைக்கும் பணத்தைக் கண்ணும் கருத்துமாகக் கணக்கிட்டு&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;கவனமாகச் செலவு செய்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;விரயங்களைக் கட்டாயமாகத் தவிர்த்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;குடும்பத்திற்கு என்று கரிசனத்தோடு அனுப்பி வைத்து மன நிறைவு கொள்ளுதலும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;கடிதத்திற்குக் கடிதம் அன்பையும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;ஆறுதலையும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அரவணைப்பையும் &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;தந்து பக்கத்தில் இல்லாத குறையைப் போக்க முயலுதலும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அருகில்  இல்லாவிட்டாலும் என் கடிதங்கள் கட்டாயம் உன்னை ஆறுதல்படுத்தும் என்கிற  நம்பிக்கையில் ஒவ்வொரு கடிதத்தையும் அவர் வடித்திருக்கும் பாங்கு&lt;span style="font-family: Verdana;"&gt;….&lt;/span&gt;பின்னால் இது இலக்கியமாகப் பேசப்பட வேண்டும் அல்லது பேசப்படும் என்கிற எதிர்பார்ப்பிலா எழுதப்பட்டது&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;மன ஆழத்திலிருந்து உண்மையான அன்பின்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பாசத்தின் வெளிப்பாடல்லவா அவைகள்&lt;span style="font-family: Latha;"&gt;! &lt;/span&gt;அதிலும் குழந்தை குஞ்சு இறந்து போய்விட அவர் அந்தத் துயரத்தை மறக்க தன் மனைவிக்கு எழுதும் வரிகள் நம் நெஞ்சத்தை அறுத்து எடுக்கின்றன&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;தொலைபேசி வசதி கூட இல்லாத அந்தக் காலத்தில் வெறும் கடிதங்கள் மட்டுமே தொடர்பு படுத்துபவை என்கிற அளவில்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;கடுமையான வேலைகளுக்கு இடையில் அடுத்தடுத்து விடாமல் அவர் தன் மனைவிக்கு எழுதியுள்ள கடிதங்கள்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;வீட்டின் தொடர்ந்த &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;நடவடிக்கைகளை சென்னையிலிருந்தே எவ்வளவு பொறுப்பாக இயக்க முடியுமோ அந்த அளவுக்குக் கட்டுப்பாட்டோடு இயக்கி&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;மனைவியையும் ஆறுதல்படுத்தி&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;தான் இல்லாத குறையைப் போக்க அவர் எடுத்திருக்கும் முயற்சிகள்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;மனிதர்கள் எவ்வாறு தங்கள் வாழ்க்கையை சீர்பட நடத்திச் செல்ல முயற்சித்திருக்கிறார்கள் என்பதற்கான அற்புதமான அடையாளங்களாகப் &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;பரிணமிக்கின்றன&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;எப்படியும் வாழலாம் என்பது எந்தக் காலத்திலும் எவருக்கும் பொருந்தியதாக இருந்ததில்லை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;நமது குடும்ப அமைப்பு கற்றுக் கொடுத்த பாடங்கள் அவை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இப்படித்தான் வாழ்ந்தாக வேண்டும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அதுதான் ஒரு மனிதனின்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அவன் சார்ந்த குடும்பத்தின் நன்னடத்தைகளின் அடையாளங்களாகக் காலத்திற்கும் நிலைத்து நிற்கும் என்பதுதான் சத்தியமான உண்மை&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அம்மாதிரியான விழுமியங்களை அவற்றின் அடையாளங்களை வறுமையும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பொருளாதாரப் பற்றாக்குறையும் குலைக்க முயலும்போது மனிதன் முரண்படாமல்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அந்தப் பேரலையில் அடித்துச் செல்லப்படாமல்&lt;span style="font-family: Verdana;"&gt;, &amp;nbsp;&lt;/span&gt;அவற்றை  எப்படிச் சமாளித்து முன்னேறுகிறான் என்பதுதான் வறுமையிற் செம்மை என்ற  தத்துவ நிகழ்வாகக் காலத்துக்கும் இருந்து வந்திருக்கின்றன&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இந்த அடையாளங்களின் பிரதிநிதியாய் பு&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;பி&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அவர்கள் இந்தப் புத்தகத்தில் தான் வரைந்த கடிதங்களின் மூலம் நம் மனக் கண்ணில் திகழ்கிறார்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கமலா கண்ணே&lt;span style="font-family: Latha;"&gt;! &lt;/span&gt;கட்டிக் கரும்பே&lt;span style="font-family: Latha;"&gt;! &lt;/span&gt;மறந்து விடாதே&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;உனக்கு ஏற்படும் துன்பம் எனக்கும்தான்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;நாம் இருவரும் சேர்ந்தே அனுபவிக்கிறோம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அதனால் உனக்கென்று ஒரு வழி என்னும் அசட்டு யோசனைகளை விட்டுவிடு&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;மனசை மாத்திரம் தளர விடாதே&lt;span style="font-family: Latha;"&gt;! &lt;/span&gt;அது எனக்கு எவ்வளவு கவலை கொடுக்கிறது தெரியுமா&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;உன்னுடன் தவிக்கும்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;உனது சொ&lt;span style="font-family: Latha;"&gt;..&lt;/span&gt;வி&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;விடாமல் கடிதத்திற்குக் கடிதம் அவர் தன் மனைவிக்கு ஆறுதல் சொல்லும் விதம்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அடக் கடவுளே&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;ஒரு அற்புதமான படைப்பாளிக்கு வாழ்க்கைப் போராட்டம் எத்தனை கொடுமையாக அமைந்து விட்டது என்று நம்மைப் பிழிந்து எடுத்து விடுகிறது&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மனைவியை ஊக்கப்படுத்தும் நிமித்தம்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அவர் எழுதும் கதைகளைத் தனக்கு அனுப்பிவைக்கச் சொல்கிறார்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அடுத்தடுத்து விடாமல் எழுது என்று உற்சாகப்படுத்துகிறார்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;உன் கதைகள் நன்றாகவே உள்ளன&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;ஓரிரு வார்த்தைகளை மாற்றிப் போட்டால் போதும்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அவற்றை நான் சரி பண்ணி&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;பிரசுரத்திற்குக் கொடுத்து விடுகிறேன் என்று கூறி&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;இன்னும் ஏதாவது எழுதியிருந்தாயானால் உடன் எனக்கு அனுப்பிக் கொடு என்று கேட்கிறார்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt; &lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;1947 &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;ஆரம்ப வரையிலான காலங்கள் சென்னையிலேயே கழிந்து விடுகின்றன&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;பிறகுதான பட விஷயமாக என்று மதுரைக்குப் பயணிக்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;சூழ்ந்திருந்த இருள் விலக ஆரம்பித்து விட்டது என்று மகிழ்ச்சியை மனைவியோடு பகிர்ந்து கொள்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;மதுரை சித்திரகலா ஸ்டுடியோவில் பட வேலைகளைக் கவனிக்க என்று கிளம்புகையில் அவர் மனம் பெரிதும் உவகை கொள்கிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;அப்பொழுது  கூட அங்கிருந்து உன் மனக் கவலை தீர்க்கும் தகவலை உனக்கு அனுப்ப முடியும்  என்று நினைக்கிறேன் என்று மனைவிக்குத் தெரிவிக்கிறார்&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;மதுரையில் மேலமாசி வீதியில் இருந்த உடுப்பி&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;b&gt;N&lt;/b&gt;&lt;/span&gt;உறாட்டலில்தான் அந்தக் காலத்தில் எழுத்தாளர்கள் வந்தால் தங்குவார்கள் என்று கேள்விப் பட்டதுண்டு&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;அங்கு அறை எண் &lt;span style="font-family: Verdana;"&gt;13&lt;/span&gt;ல் பு&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;பி&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;வந்து  தங்கியிருக்கிறார் என்கிற தகவல் இன்று பெரிய ஜவுளி நிறுவனமாயும் வேறு பல  கடைகளாயும் இருக்கும் அவ்விடத்தைப் பார்க்கும்போது நம் மனதை கனக்க  வைக்கிறது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;எல்லாவிதமான பழைய அடையாளங்களும்தான் பணம் என்கிற புள்ளியில் இங்கே படிப்படியாக அழிக்கப்பட்டு விட்டனவே&lt;span style="font-family: Latha;"&gt;! &lt;/span&gt;காலத்தின் வேக ஓட்டத்தில் விரட்டியடிக்கப்பட்டுவிட்டனவே&lt;span style="font-family: Latha;"&gt;!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt; &lt;/span&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;1948 &lt;/span&gt;&lt;span style="font-size: x-small;"&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;களில் புனாவிற்கும் பிறகு பெங்களுருக்கும் செல்லும் வாய்ப்புக் கிட்டிய பு&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;பி&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;அவர்கள் பெங்களுரிலிருந்து எழுதும் ஒரு கனமான கடிதத்தோடு இப்புத்தகம் நிறைவு பெறுகிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;நம் மனதையும் அது நிறைத்து கனக்க வைத்து விடுகிறது&lt;/span&gt;&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt; &lt;br /&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அங்கே நிபுணர்கள் என்னைப் பரிசோதனை செய்து இரண்டு  சுவாசப் பையிலும் துவாரம் விழுந்து விட்டதினால் இனி ஒன்றும் செய்வதற்கில்லை  என்று சீட்டுக் கிழித்து விட்டார்கள்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இனி அவர்களைப் பொறுத்தவரை மரணம்தான் முடிவு&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;என்பதாக அந்தக் கடிதத்தின் வரிகள் &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;விரிகின்றன&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;முக்கியமான செய்தி ஒன்றைத் தரும் ஒரு கடிதத்தையும் நாம் இங்கே கவனித்தாக வேண்டும்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அது புனேயிலிருந்து எழுதப்படுகிறது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt;5.2.48 &lt;/span&gt;என்று தேதியிட்ட அந்தக் கடிதத்தில் மகாத்மாவைச் சுட்டுக் கொன்றுவிட்ட செய்தியைப் பெரும் அதிர்ச்சியோடு தெரிவித்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;அதன் தொடர்பான கலகங்களைச் சுருக்கமாக விவரிக்கிறார்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;கொன்றது உறிந்து&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;புனா நகரத்து ஆள் என்று சொன்னார்கள்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;புனாவில் உறிந்து மகாசபை பத்திரிகை நடத்தியவன் என்று தெரிந்ததும்&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;நகரம் கொந்தளித்துப் போயிற்று&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;உறிந்து மகா சபைக்காரர்களைக் குத்தி அவர்கள் வீடுகளை எரித்தார்கள்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;காந்தியைச் சுட்டவன் பத்திரிகாலயத்தை &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;ஜனங்கள் எரிக்கும்போது நெருப்பு அணைக்கும் யந்திரம் வந்தது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அணைக்கக் கூடாது என்று ஜனங்கள் தடுக்க&lt;span style="font-family: Verdana;"&gt;, &lt;/span&gt;ராணுவம் துப்பாக்கி பிரயோகித்து எட்டுப் பேர் மரணம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;எங்கு பார்த்தாலும் பிராமணர்களை அடித்துக் கொல்லுவது அவர்கள் வீடுகளைக் கொளுத்துவது என்ற காரியம் நாலு நாட்களாக நடந்து வருகிறது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;காந்தி மாண்டதற்காகச் சர்க்கரை கொடுத்த ஒருவன்ய கடை தீ&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;வெளியில் எங்கும் செல்ல முடியாத நிலை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;நான்கு நாட்கள் எனக்கு வெற்றிலை இல்லை என்றால் நிலை எப்படி என்று யோசித்துக் கொள் என்று முடிக்கிறார்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இருக்கும் அதிரடியைச் சொல்லி அவருக்கான வெற்றிலையோடு முடிக்கும் பாங்கு எத்தனை சரளமும் யதார்த்தமும் நிறைந்தது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;நல்லிலக்கியம் என்பது தானே கூடி வருவதாய்த்தானே இருக்க வேண்டும்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;காலம் பின்னால் உணரும் என்று அவர் நினைத்திருப்பாரா&lt;span style="font-family: Verdana;"&gt;? &lt;/span&gt;அவரது உள்ளக் கிடக்கை அத்தனை தத்ரூபமாய்ப் பரிணமித்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பெரு முயற்சி செய்து இந்தக் கடிதங்களைத் தொகுத்தளித்த திரு இளையபாரதி மிகவும் பாராட்டுக்குரியவர்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Verdana;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;இந்தக் கடிதங்களில் காணக் கிடைக்கும் புதுமைப் பித்தன் நமக்கு முற்றிலும் புதியவர்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;ரொம்பவும் நெகிழ்ச்சியானவர்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;தமிழ் இலக்கியத்தின் எல்லாவிதமான பரிசோதனைகளுக்கும் என்னிடம் வாருங்கள் என்று களம் அமைத்துக் கொடுத்த பெருமை பு&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;பி&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அவர்களைச் சாரும்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அவரைத் தொடாமல் இந்த இலக்கிய வானுக்குள் எவரும் சஞ்சாரம் செய்ய இயலாது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;தன் மனைவிக்கு &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;அவர் எழுதிய இக்கடிதங்கள் காலத்தால் இலக்கியமாகப் பரிணமிக்கும் என்ற நினைத்தெல்லம் அன்று அவர் எழுதவில்லை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;ஆனால் இன்று அவையும் அந்தத் தகுதியைப் பெற்று தலை நிமிர்ந்து நிற்கின்றன&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;நாம்தான் அவற்றை உணர்ந்து பயன்படுத்திக் கொள்ள வேண்டும்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இலக்கியத்தை விரும்பும் ஒவ்வொருவர் நூலகத்திலும் கட்டாயம் இருக்க வேண்டிய அரிய பொக்கிஷம் இது&lt;span style="font-family: Latha;"&gt;!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;வ&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;வு&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;சி&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;நூலகம்&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;ஜி&lt;span style="font-family: Latha;"&gt;-&lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;1, &lt;/span&gt;லாயிட்ஸ் காலனி&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;இராயப்பேட்டை&lt;span style="font-family: Times New Roman;"&gt;,&lt;/span&gt;சென்னை&lt;span style="font-family: Latha;"&gt;-&lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;14 &lt;/span&gt;ன் அற்புதமான வெளியீடு இது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இந்தப் பதிப்பகம் எத்தனையோ நல்ல நூல்களைத் தேடித் தேடி வெளியிட்டு வருகிறது&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;அதில் இது அதி முக்கியமானது&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-1085492704814206251?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/1085492704814206251'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/1085492704814206251'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2012/01/puthumaipitthan.html' title='Puthumaipitthan.'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-4529971724542096584</id><published>2011-12-27T23:33:00.001-08:00</published><updated>2011-12-27T23:33:34.281-08:00</updated><title type='text'>Sukumaran.Bharathimani</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div&gt;&lt;h2 class="uiHeaderTitle"&gt;வாழிய நிலனே! --சுகுமாரன் உயிர்மையின் நூல் வெளியீட்டு விழா.&lt;/h2&gt;&lt;/div&gt;&lt;div class="clearfix"&gt;&lt;div class="mbs uiHeaderSubTitle lfloat fsm fwn fcg"&gt;by &lt;a href="http://www.facebook.com/profile.php?id=1507276454"&gt;Bharati Mani&lt;/a&gt; on Monday, December 26, 2011 at 7:02pm&lt;/div&gt;&lt;/div&gt;டிசம்பர் 25-ம் தேதி&lt;em&gt; உயிர்மை&lt;/em&gt; நூல் வெளியீட்டு விழாவில் சுகுமாரன் எழுதிய &lt;em&gt;வாழிய நிலனே! கட்டுரைத்தொகுப்பை வெளியிட்டு நான் பேசியதன் சுருக்கம்:&lt;/em&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;வாழிய&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;நிலனே&lt;/em&gt;&lt;em&gt;!&lt;/em&gt;&lt;br /&gt;&lt;em&gt;&lt;/em&gt;&lt;br /&gt;முதலில், &amp;nbsp;&lt;em&gt;உயிர்மை&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;பதிப்பகம்  நேற்றும் இன்றும் வெளியிடும் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கும், 2012  சென்னை புத்தகச்சந்தைக்காக வெளியிடப்படும் எல்லா நூல்களின்  ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! ’&lt;em&gt;உயிர்மை&lt;/em&gt;’  பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன் வெளியிடும் எல்லா புத்தகங்களும் சந்தையிலேயே  விற்றுத்தீர்ந்து பணமாகக்கொட்ட நான் வணங்கும் ஆண்டவன் அருள்வானாக!&lt;br /&gt;&lt;br /&gt;நண்பர் சுகுமாரன் எழுதிய &lt;em&gt;வாழிய&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;நிலனே&lt;/em&gt;&lt;em&gt;!&lt;/em&gt;  புத்தகத்தை வெளியிட மனுஷ்ய புத்திரன் கேட்டபோது, ‘சார்!  முக்கியமானவங்களையெல்லாம் கூப்பிட்டாச்சு. பிரபலங்கள் யாரும் இல்லே. அதனாலே  உங்க பெயர் போட்டிருக்கேன்!’ என்று சொன்னபோது அதிலிருந்த உட்குத்து  எனக்கும் புரிந்தது. அவர் என்னை நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்! மனுஷ்ய  புத்திரனுக்கு என் நன்றி!&lt;br /&gt;&lt;br /&gt;’இந்தப்புத்தகம் நேற்றுத்தான்  வந்தது….அதனால் படிக்கமுடியவில்லை’யென்று பொய் சொல்லி தப்பித்துக்கொள்ள  நான் விரும்பவில்லை. இப்போதெல்லாம் வாசிக்கும் பழக்கம் அறவே நின்றுவிட்ட  போதிலும், சுகுமாரனின் 29 சிறிய கட்டுரைகள் கொண்ட &lt;em&gt;வாழிய&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;நிலனே&lt;/em&gt;&lt;em&gt;!&lt;/em&gt;  புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். வாசிக்க வாசிக்க அவரது பரந்த  ஆளுமை இந்தப்புத்தகத்தில் வெளிப்பட்டது. சுகுமாரன் எனக்கு… தூரத்து  உறவினர் என்பது போல ‘தூரத்து நண்பர்’. பார்க்கும்போதெல்லாம் ‘வணக்கம்’  சொல்லியிருக்கிறேனே தவிர நெருங்கிப்பழகியதில்லை. மாறாத  புன்சிரிப்புக்குப்பின் இவரைப்போன்ற அறிவுஜீவிகள்,&amp;nbsp; நெருங்கிப்பழகினால்,&amp;nbsp;  ஒரே வார்த்தையால் நம்மை ஆயுசுக்கும் மறக்காத&amp;nbsp; சந்தோஷத்துக்கோ அல்லது ஒரே  வார்த்தையில் எப்போதும் வலிக்கும் காயத்துக்கோ ஆளாக்கிவிடுவார்களென்ற  தேவையற்ற பயம் எனக்குண்டு! மலையாளத்தில் சொன்னால் ’அயாள் ஒரு அமுக்கனாணு’  என்பது எனக்குப்புரிந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;முதல் கட்டுரையிலேயே ‘ஒரு  கலைப்படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயர்ப்பதென்பது  திருமணமான பெண்ணைக்காதலிப்பது போல. அதை அவள் கணவனின் நேரடி மேற்பார்வையில்  செய்யமுடியாது!’ என்பது எனக்குப்பிடித்தமான வரி. ஒரு இடத்தில், ‘கவிதை  வாசிப்பில் சிற்பி பாலசுப்பிரமணியம் ஒரு கவிதை வாசித்தார். அதில் கவிதை  காற்பங்கு, சாதுரியம் முக்காற்பங்கு. இதை சிற்பியும் ஒப்புக்கொள்வார்’  என்று பூத்தாப்போலெ ஒரு வெடியை கொளுத்தி போட்டுவிட்டுப் போகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;இன்னொரு  கட்டுரையில் அதிகம் பிரபலமாகாத புல்லாங்குழல் வித்வான் குடமாளூர்  ஜனார்த்தனன் இவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தியாகராஜர் ராமனைத்தேடி,  நெக்குருக வேண்டிக்கொள்ளும் ஒரு கீர்த்தனைக்கு ஏன் நீண்ட ராக ஆலாபனை,  விஸ்தாரமான நிரவல், ஸ்வரம்? என்று கேட்கும் கேள்விக்கு நம்மிடமும் பதில்  இல்லை. அவரது இன்னொரு கேள்வி: ‘உலகத்தில் எங்காவது நூற்றுக்கணக்கான  கலைஞர்கள் ஒரே சமயம் அபஸ்வரத்தில் பாடுவதைக்கேட்டிருக்கிறீர்களா?’ விடை  தெரியாத சுகுமாரனுக்கு ஜனார்த்தனன் சிரிக்காமல் சொன்ன பதில்: ‘திருவையாறு  ஆராதனை என்பது வேறு என்ன?’ அந்தக்கலைஞர் சொன்ன பொன்மொழி எனக்கும்  பிடித்திருந்தது: “எவருடைய பாராட்டுக்கும் அல்லது குற்றச்சாட்டுக்கும் நான்  அக்கறை காட்டுவதில்லை. என்னுடைய உணர்வுகளை மட்டுமே பின்தொடர்கிறேன்.”  &amp;nbsp;புத்தகத்திலிருந்து இன்னொரு வரி: ‘பத்துக்கிணறுகள் ஒரு குளத்துக்கு சமம்.  பத்துக்குளங்கள் ஓர் ஏரிக்கு சமம். பத்து ஏரிகள் ஒரு மகனுக்கு சமம். பத்து  மகன்கள் ஒரு மரத்துக்கு சமம்.”&lt;br /&gt;&lt;br /&gt;’கடவுளில் நித்திரையான  நாத்திகம்’ கட்டுரையில், ஒரு பசுவுக்கும் கொக்குக்குமான அழகான நட்பை  விவரிக்கும்போது, அந்தப்பசுவுக்கு சொந்தக்காரர் பெயர் சோமன்  என்றிருக்கிறது. இரண்டு பாரா தள்ளி அவர் சார்ங்கதரன் ஆகிறார். அதற்கடுத்த  பாராவில் மீண்டும் சோமனாகவே மாறி பசுவை மேய்ச்சலுக்கு கொண்டுவருகிறார்.  இந்த செப்பிடுவித்தை சுகுமாரன் கட்டுரையில் ஏன்….எப்படி நிகழ்ந்தது?&lt;br /&gt;&lt;br /&gt;இவரது  கட்டுரைகளில், நிறைய Names Dropping ... பல பெயர்களை உதிர்த்துக்கொண்டே  போகிறார். இளைய ராஜாவிலிருந்து, ஜாஃபர் பனாஹி, சியாட்டில் மூப்பன், ஞானபீட  விருது பெற்ற ஓ.என்.வி. குறுப், ஷெஹ்ரியார், விர்ஜீனியா உல்ஃப், ஸல்மான்  ருஷ்டி,&amp;nbsp; புற்றுநோயால் இறந்துபோன சூஸன் சாண்டக், கேளிக்கை கலைஞன் மைக்கெல்  ஜாக்ஸன், பாப்லோ நெரூதா, சிறுமி ஜீனத், நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர்  காவ் ஜிங்ஜியானிலிருந்து கதகளி மகாபாரதக்கதை மூலம் விசித்திரமான பெயர்  தேடிக்கொண்ட, இரண்டு காலும் இல்லாத ரயில் பிச்சைக்காரர் கலலன் வரை இவருக்கு  கதைமாந்தர்கள். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலுக்குப்போய்,  மாதவிக்குட்டி, கமலா தாஸ், கமலா சுரய்யா என்று பலபெயர் கொண்டவரின்  சமாதியைத்தேடி பார்த்துவிட்டு வருகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;என்னை அறிந்தவர்கள்  ‘ஸார்! உங்ககிட்டே அந்த ’வயோதிகக்குசும்பு’ கொஞ்சம் இருக்கு!’ என்று  சொல்வார்கள். சுகுமாரனிடம் ’இளமைக்குசும்பு’ நிறையவே இருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;இவர்  அசோக மித்திரனையும் விட்டுவைக்கவில்லை. நண்பர் தேவிபாரதியோடு, காலில்  அடிபட்டு, சிகிச்சையிலிருந்த அசோக மித்திரனை அவர் வீட்டில்  பார்க்கப்போகிறார். வாசலில் நின்று வரவேற்ற எழுத்தாளரிடம் பேசிவிட்டு  விடைபெறும்போது, வழியனுப்ப வந்த அசோக மித்திரன் சொன்னார்: ‘ஒடம்பு  சரியில்லாத ஒரு ஆளைப்பார்க்க வந்தா, அந்த ஆளே வாசல்லே&amp;nbsp; வரவேற்கிறது  உங்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்……..ஸாரி!’ இப்படி யார் சொல்லமுடியும்  அசோக மித்திரனைத்தவிர?&lt;br /&gt;&lt;br /&gt;தில்லி சாகித்ய அகாதெமியின்  கவியரங்கில் சந்தித்த மராத்தியக்கவிஞர் அருண் கொலாட்கர் மாதிரி தானும் ஒரு  தான்தோன்றிக் கவிஞனாக இருக்கமுடியுமாவென்று ஏங்கியிருக்கிறார் சுகுமாரன்.  அங்கே சந்தித்த மூத்த அசாமியக்கவிஞர் ஹிரேன் பட்டாச்சார்யா இவரிடம் கேள்வி  கேட்கிறார்: ‘நீ எந்த மொழியில் எழுதுகிறாய்?.... தமிழில்……சரி!..... அதை  எவனாவது படிக்கிறானா? ....தெரியாது!.....உனக்கு எத்தனை வாசகர்கள்  இருக்கிறார்களென்று தெரியாமல், நீ யாருக்காக எழுதுகிறாய்?’ என்று  கேட்டுவிட்டு, சுகுமாரன் கவிதைகளின் ஹிந்தி மொழிபெயர்ப்பை சிலாகித்து  படித்துப்பார்த்துவிட்டு, ‘அரே பையா! உனக்கு நிச்சயம் மூன்று வாசகர்கள்  இருக்கிறார்கள்…….. உறுதி……. ஒன்று…நீ………இரண்டாவது உன் மனைவி………மூன்றாவது  அசாமியக்கவிஞனான ஹிரேன் பட்டாச்சார்யா!’ என்று கூறி இவரை  ஆரத்தழுவிக்கொள்கிறார். அதோடு விடவில்லை…. இந்தக்குசும்பன். ’அந்தக்கிழவர்  நெருக்கத்தில் வந்தபோது, முந்தியநாள் அருந்திய மதுவின் நெடியும், சற்றுமுன்  புகைத்த சாக்லேட் புகையிலையின் மணமும் என் மூக்கில் பரவியது!’ என்று  முடிக்கிறார்! ஹிரேன் தாவும் என்னைப்போல் பைப் பிடிக்கும் நல்ல பழக்கத்தை  வைத்திருந்தார்!&lt;br /&gt;&lt;br /&gt;கட்டுரைகளில், இவரைத்தொடர்ந்து பயணித்தால் மட்டுமே, அவர் என்ன சொல்ல விழைகிறார் என்பது புலப்படும்.&lt;br /&gt;&lt;br /&gt;அடூர்  கோபாலகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையில், அவர் நடிகர்களின் ‘உடல் மொழி’க்கு  கொடுக்கும் முக்கியத்தை விளக்கியிருப்பார். ‘நிழல் குத்து’  படப்பிடிப்பின்போது, காந்தி வழியில் வந்த முத்துவாக பாத்திரமேற்ற நடிகர்  நரேனை, சரியான உடல் மொழிக்காக, பத்து நாட்கள் தொடர்ந்து சர்க்காவில் நூல்  நூற்க பயிற்சியளித்தாராம்! இவ்வளவுக்கும் படத்தில் இந்தக்காட்சி  இடம்பெறவில்லை. அடூரிடம் இதைப்பற்றி கேட்டதற்கு, ‘ராட்டை நூற்கும்போதுள்ள  &amp;nbsp;உடல்மொழி….அதை வேறு எப்படித்தான் கொண்டு வருவது?’ நாடக நடிகனான எனக்கும்  உடல்மொழி முக்கியம். பல தமிழ்ப்படங்களில் நீங்கள்  பார்த்திருக்கலாம்…..ஷாட்டுக்கு முன்னால், கதாநாயகன் கையில் ஒரு வயலினை  திணித்து வாசிக்கச்சொன்னால், நளினமாக வலதுகை மூன்று விரல்களால் வில்லை  பிடிப்பதற்கு பதிலாக, ஏதோ திருப்பாச்சி அருவாளை சாணை தீட்டுவதுபோல ஐந்து  விரல்களாலும் அழுந்தப்பிடித்து, வயலின் குறுக்காக – கிச்சுக்கிச்சு  தாம்பாளமாக -- ஒரே சீரில் அறுப்பார்கள். ஆனால் பின்னணியில் லால்குடி  ஜெயராமன் வாசித்த வசந்தபைரவி சுநாதமாக காதில் விழும்! இதுவாவது  பரவாயில்லை….சில சமயங்களில் Interlude-ல் நம் ஹீரோ திரையில் அறுக்கும்  வயலினுக்கு பின்னணியில் ஸிதார் ஒலி கேட்கும்! வயலினுக்கும் சித்தாருக்கும்  வித்யாசம் தெரியாத இயக்குநர் திலகங்கள்!.........ஒரு பழைய படத்தில்  எம்.ஆர். ராதா கடம் வாசிப்பார்……ஆனால் திரையில் நாம் கேட்பது மிருதங்க ஒலி!  என்ன கொடுமை……..சரவணா!&lt;br /&gt;&lt;br /&gt;இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! ஆனால் என் பேச்சை நிறுத்துமாறு சீட்டு வருவதற்குமுன், நான் முடித்தாகவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;சுகுமாரனின் &lt;em&gt;வாழிய&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;நிலனே&lt;/em&gt;&lt;em&gt;!&lt;/em&gt; புத்தகத்தில் நிறைய விஷயங்கள் புதைந்திருக்கின்றன. நான் படித்து ரசித்தேன். நீங்களும் அவசியம் படியுங்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;நன்றி……வணக்கம்!&amp;nbsp;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;em&gt;பாரதி&lt;/em&gt;&lt;em&gt; &lt;/em&gt;&lt;em&gt;மணி&lt;/em&gt;&lt;em&gt;&amp;nbsp;&lt;/em&gt;&lt;br /&gt;25 டிசம்பர், 2011.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-4529971724542096584?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/4529971724542096584'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/4529971724542096584'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/12/sukumaranbharathimani.html' title='Sukumaran.Bharathimani'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-3143397018637208561</id><published>2011-11-27T01:54:00.000-08:00</published><updated>2011-11-27T01:54:04.244-08:00</updated><title type='text'>Jayamohan..Aram.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;கோவை முருகன் விடுதி அறையில் அதிகாலையில் ஐந்துமணிக்கு&amp;nbsp; எங்கள் குழுவின்  கமாண்டராக தன்னை தானே நியமனம் கொண்டிருந்த கிருஷ்ணன் எழுந்து படாரென்று  கழிப்பறை கதவைத் திறந்து, பெரியபடாராக அதை மூடி, அனைவரையும் பதறி  எழச்செய்தார். அவர் துண்டை உதறிய ஒலியில் அந்த விடுதி அலறி  எழுந்திருக்கும். வேறுவழியில்லை, ஈரோடு அழைக்கிறது. இருந்தாலும் நான்  அரைமணிநேரம் கண்மூடி படுத்திருந்தேன்.&lt;br /&gt;எல்லாரும் குளித்து முடித்ததும் கிளம்ப ஆரம்பித்தோம். ஆறரைக்கு கிளம்ப  கமாண்டர் போட்டிருந்த திட்டம் ஏழாகியும்&amp;nbsp; ஆரம்பிக்கவில்லை. ஆகவே  நாஞ்சில்நாடனையும் மரபின்மைந்தன் முத்தையாவையும் கிளம்பி ஈரோட்டுக்கே  செல்லும்படி சொல்லிவிட்டார். செந்தில் நிதானமாகவே குளித்தார்.  பாட்டுபாடாமல் இத்தனைநேரம் குளிப்பவராக அவரை மட்டுமே நான்  பார்த்திருக்கிறேன்.&lt;br /&gt;நான், கிருஷ்ணன், தங்கமணி, அரங்கசாமி ,செந்தில் ஆகியோர் ஒருவழியாகக்  கிளம்பி ஈரோட்டுக்கு செல்லும் வழியில் கோவைக்கு வெளியே ஒரு உணவகத்தில்  அவர்களைச் சந்தித்தோம். நாஞ்சில்நாடன் புதிதாக இருந்தார். எனக்கு எப்போதுமே  அவரைப்போல நேர்த்தியாக உடையணியும் ஆசை உண்டு. மிகையாகவும் போகாமல்,  குறைவாகவும் ஆகாமல் உடையணிவதென்பது ஒரு கலை. அதற்கு நாம் அவரைப்போல  விற்பனைமேலாளராக கொஞ்சநாள் பணியாற்றியிருக்கவேண்டும்போல.&lt;br /&gt;ஈரோட்டுக்கு செல்லும் வழி முழுக்க விதவிதமான நகைச்சுவை நிகழ்ச்சிகளைப்  பேசிக்கொண்டிருந்தோம். சென்றுசேர்ந்தபோது தாமதமாகிவிட்டது. சாலையோரமாக  என்னுடைய முகம் கொண்ட வினைல்போர்டு. உள்ளே போனால் சாயரசாயன விற்பனையாளர்  சங்கத்தின் புதிய அரங்கில் வாசலில் வசந்தகுமார் கடைவிரித்து தம்பியர்  புடைசூழ அமர்ந்திருந்தார்.&lt;br /&gt;பத்துமணிக்கு நிகழ்ச்சி. ஒன்பது ஐம்பதுக்கு அமைப்பாளர் தவிர யாருமே  இல்லை. பத்துமணிக்கு ஒரு பத்துபேர் தேறினார்கள். பத்து என்றால் பத்துக்கே  ஆரம்பிக்கவேண்டும் என்றார் பாபு. அது ஈரோடு பசுமைபாரதத்தின் கொள்கை என்று  சொல்லப்பட்டாலும் உண்மை என்பது சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாத பிற  நிகழ்ச்சிகளில் சென்று கலாட்டா செய்த இறந்தகாலம் குறித்த அச்சம்தான்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://i49.tinypic.com/wt6ihl.jpg"&gt;&lt;img alt="" id="imgElement" src="http://i49.tinypic.com/wt6ihl.jpg" title="Click for a larger view" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அமைப்பாளர் விஜயராகவன் காய்ச்சல்கண்ட முகத்துடன் இருந்தார். ‘என்ன  விஜயராகவன்’ என்றேன் ”ஏமாத்திட்டாங்களே சார்…யாருமே வரல்லியே’ என்றார்.  ‘வந்தவங்க போரும்…இப்ப என்ன?” என்றேன்.&lt;br /&gt;ஆரம்பித்தோம். காலி நாற்காலிகளை நோக்கி பேசுவது எழுத்தாளர்களுக்கு  ஒன்றும் புதியவிஷயம் அல்லதானே? முதலில் ஈரோடு வாசிப்பியக்கத்தைச் சேர்ந்த  பாபு பம்மிப்போய் வரவேற்புரை அளித்தார். விமரிசகர் க.மோகனரங்கன் ஜெயில்சிங்  போன்ற அதிநிதானத்துடன் மேடைக்கு வந்து மென்மையான குரலில் – பாலியல்  வழக்கில் சிக்கியவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பது போல குனிந்த  தலையுடன் – விழாவை அறிவித்தார். ‘இன்றையகாந்தி’&amp;nbsp; நூலை நாஞ்சில்நாடன்  வெளியிட இராசு பெற்றுக்கொண்டார்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://i45.tinypic.com/24l1tow.jpg"&gt;&lt;img alt="" id="imgElement" src="http://i45.tinypic.com/24l1tow.jpg" title="Click for a larger view" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;தலைமையுரையாக ஜீவானந்தம் சுருக்கமாகப் பேசினார். தன்னை காந்தியில்  ஆர்வம்கொண்டவரே ஒழிய காந்தியவாதி என்று சொல்லிவிடமுடியாது என்றார்.  காந்தியம் என்பது ஒரு பெரிய பொறுப்பு. இடைவிடாத சோதனைகள் கொண்டது. தன்  சூழலில் செயல்பட காந்தியம் ஒரு வழிகாட்டு நெறியாக இருந்தது, அவ்வளவுதான்  என்றார்.&lt;br /&gt;அடுத்து நாஞ்சில்நாடன் பேசினார். காந்தியின் பாலியல் சோதனைகள் குறித்த  விவாதத்தை மையமாக்கிய உரை அவருடையது. காந்தியின் சோதனைகளை  கிறுக்குத்தனமானவை என்று நூலாசிரியர் சொல்வதை தான் ஒப்புக்கொள்ளவில்லை  என்றார் நாஞ்சில்நாடன். பாலியலை அவதானிப்பதும் அதை கடந்துசெல்ல முயல்வதும்  எந்த மனிதனுக்கும் இயல்பான விஷயமே. காந்தி அந்த விஷயத்தில் அப்பட்டமானவராக  வெளிப்படையானவராக இருந்திருக்கிறார்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0348.jpg"&gt;&lt;img alt="" class="size-medium wp-image-6401 aligncenter" src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0348-300x225.jpg" title="ராசு அய்யா" width="300" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;அடுத்துப்பேசிய  செ.இராசு தமிழகத்தில் ஈரோட்டில்தான் முதன்முறையாக காந்திக்குச் சிலை  வைக்கப்பட்டது என்று சொல்லி அந்தப்படத்தைக் காட்டினார். 1932ல் காந்தி  உயிருடன் இருக்கும்போதே சிலை வைக்கப்பட்டுவிட்டது. காந்திக்கும் ஈவேராவின்  குடும்பத்திற்கும் உள்ள உறவைப்பற்றி விரிவாகப்பேசினார். காந்தி ஈரோட்டுக்கு  இருமுறை வந்திருக்கிறார். முதன்முறை ஈவேரா அவர்களின் இல்லத்தில்  தங்கினார். மறுமுறை கிட்டப்பா மறைவால் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி  இருந்த கெ.பி.சுந்தராம்பாளைப் பார்த்து பொதுப்பணிக்கு வரச்சொல்லுவதற்காக  வந்தார் என்றார்.&lt;br /&gt;‘நாஞ்சில்நாடன் என் காதில் ‘ என்ன, கூட்டம் ஒருமணிநேரத்திலே  முடிஞ்சிரும் போல இருக்கே’ என்றார். ஆனால் அடுத்து மரபின் மைந்தன்  முத்தையா&amp;nbsp; பேச ஆரம்பித்தபோது மெல்லமெல்ல கூட்டம் அரங்கை நிறைக்க  ஆரம்பித்து, பதினொருமணிக்கு அரங்கு முழுமையாக நிரம்பியிருந்தது. ஈரோட்டில்  பத்து என்றால் பதினொருமணி என்றுதான் அர்த்தமாம்.&lt;br /&gt;&lt;div style="text-align: center;"&gt;&lt;a href="http://i50.tinypic.com/nd8yhc.jpg"&gt;&lt;img alt="" id="imgElement" src="http://i50.tinypic.com/nd8yhc.jpg" title="Click for a larger view" /&gt;&lt;/a&gt;&lt;/div&gt;முத்தையா காந்தியின் மகன்களைப்பற்றி பேசினார். காந்தி தன் புதல்வர்களை  சரியாக வளர்க்கவில்லை என்ற பொதுநம்பிக்கை சூழலில் உள்ளது. ஆனால் காந்தி  அவர்களை போராளிகளாக, அதிகாரத்துடன் சமரசம்செய்துகொள்ளாதவர்களாக வளர்த்தார்.  அதை ஆசிரியர் விரிவாக விளக்குகிறார்&lt;br /&gt;&lt;a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_03512.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-medium wp-image-6403" src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_03512-300x225.jpg" title="IMG_0351" width="300" /&gt;&lt;/a&gt;காந்தியின்  எல்லைகளையும் நாம் கவனிக்கவேண்டும், ஆகவே தனக்கு காந்தி மீது  வழிபாட்டுணர்வு ஏதும் இல்லை என்றார் முத்தையா.காந்தி இந்திய அரசியலில் பதவி  இல்லாத அதிகாரமையமாக விளங்க விரும்பினார். பதவியில் இல்லாத அவர் இந்திய  அரசை பாகிஸ்தானுக்கு கஜனாவை பங்கிட்டுக்கொடுக்க நிர்ப்பந்தித்தது உதாரணம்.&lt;br /&gt;காந்தியின் பிள்ளைகள் என்னும்போது இன்றைய இந்தியர்களையே அப்படிக்  குறிப்பிடலாம். இந்தியாவுக்கு காந்தி ஒரு இலட்சியத்தையும் அதை அடைவதற்கான  வழிமுறையையும் அளித்தார் என்று ஆசிரியர் சொல்கிறார். காந்தி ஒரு கனவை  அளித்தார், ஆனால் அவர் காட்டிய வழி குழப்பமானது. அதுவே இந்தியா  சிக்கல்களில் ஆழ்ந்தமைக்கு வழிவகுத்தது என்றார் முத்தையா.&lt;br /&gt;தந்தை பழ.கருப்பையா அவர்களின் குரல், உடலசைவுடன் பேசினார்  ஆறுமுகத்தமிழன். காந்தி ஓர் அடையாளமாகவே தனக்குக் கிடைத்தார் என்றவர் அந்த  அடையாளம் இன்று செலவேறியதாக ஆகிவிட்டிருக்கிறது என்றார். அவரது தந்தையின்  காந்திய நோக்கு காரணமாக அவர் சிறுவயது முதலே கதர் அணிபவர் என்றார். ஆனால்  தினம் பத்து ரூபாய் இல்லாமல் கதரை சலவைசெய்து அணிய முடியாது, அது உயர்தர  உடையைவிட செல்வேறியது….&lt;br /&gt;&lt;a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0350.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-medium wp-image-6404" src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0350-300x225.jpg" title="IMG_0350" width="300" /&gt;&lt;/a&gt;இத்த¨கைய  அடையாளங்களில் இருந்து காந்தியை விடுவிக்கும் முயற்சியாக&amp;nbsp; இன்றைய காந்தி  நூலை தான் காண்பதாக ஆறுமுகத் தமிழன் சொன்னார். காந்திய வழி என்பது தனக்கு  ஏற்புடையதாக இருந்தாலும் தன்னால் பிரபாகரனையும் விட்டுவிட முடியாது. காந்தி  தந்தை என்றால் பிரபாகரன் அண்ணன் போல. இருவருடைய வழிமுறைகள் வேறு ஆனால்  அர்ப்பணிப்பும் தியாகமும் சமம்தான். ஈழப்போராட்டம் வன்முறையால் வெல்ல  முடியவில்லை, அது காந்தியவழியால் வென்றிருக்கலாம். ஆனால் அதனால்  பிரபாகரனின் தியாகம் அர்த்தமற்றது என்று ஆகிவிடாது.&lt;br /&gt;இன்றையகாந்தி நூலில் தேசியம் குறித்து சொல்லப்படும் ஆசிரியரின்  கருத்துக்களில் தனக்கு உடன்பாடில்லை என்றார் ஆறுமுகத்தமிழன். ஆசிரியர்  மொழிவழித்தேசியத்தை பிளவுவாதம் என்று எதிர்க்கிறார், அதை உணர்வுபூர்வமாக  ஏற்பவன் நான் என்றார். மொழிவழித்தேசியம் சிலரை அன்னியராக்கும் என்றால் அவர்  பேசும் பண்பாட்டுத்தேசியமும் அதேபோல வேறுசிலரை அன்னியர்களாக்க்கும்.  இந்திய தேசியம் என்பது செயற்கையானது, மொழிவழித்தேசியமே இயற்கையானது  என்றார்.&lt;br /&gt;&lt;a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0353.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-medium wp-image-6406" src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0353-300x225.jpg" title="IMG_0353" width="300" /&gt;&lt;/a&gt;அடுத்துப்பேசிய  முருகானந்தம் இன்றையகாந்தி நூல் இளைய தலைமுறைக்கு காந்தியை  மீட்டளித்திருக்கிறது என்றார். இன்றைய இளைஞன் காந்தியை இன்றைய வாழ்க்கையில்  பொருத்திப்பார்க்க ஆசைப்படுகிறான். அவனுடைய வினாக்களுக்குப் பதிலாக  அமையும் நூல் இது. ஆனால் இதில் சில விஷயங்கள் தவறாக உள்ளன. காந்தியின்  அழகியலுணர்வின்மை குறித்து ஆசிரியர் சுட்டும் பகுதிகள் உதாரணம். காந்தி&amp;nbsp;  இலக்கியம், இசை குறித்த உணர்வில்லாதவரல்ல. அவர் அவற்றைப்பற்றி விரிவாகவே  பேசியிருக்கிறார்.&amp;nbsp; அவர் போராட்டக்களத்தில் இருந்தார். இந்தியாவையே  போராட்டத்தில்&amp;nbsp; நிறுத்தினார். ஆகவே அவர் கலையிலக்கியங்களை ஊக்குவிக்கவில்லை  என்று முருகானந்தம் சொன்னார்.&lt;br /&gt;&lt;a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0354.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-medium wp-image-6405" src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0354-300x225.jpg" title="IMG_0354" width="300" /&gt;&lt;/a&gt;பவா  செல்லத்துரை ஒரு மார்க்ஸியச்சூழலில் வளர்ந்த தனக்கு படத்தில்கூட காந்தி  கவரக்கூடியவராக இருந்ததில்லை என்றார். ஆனால் இந்த நூல் காந்தியைப்பற்றிய  ஒரு சித்திரத்தை அளிக்கிறது. காந்தியை சாமானிய மக்களுடன் பேசிய ஒரு  மக்கள்தலைவராக இது காட்டுகிறது. காந்தியின் எளிமையும் மக்களுடன் அவர்  கொண்டிருந்த தொடர்பையும் இந்நூலில் ஒரு கட்டுரையில் கூறும் ஆசிரியர் இன்றைய  மார்க்ஸிய தலைவர்களிடம் காண்பதாகச் சித்தரித்திருப்பது  குறிப்பிடத்தக்கது.ஆசிரியர்&amp;nbsp; காந்தியத்தாக்கம் கொண்ட தலைவராக சொல்லும்  ஈ.எம்.எஸ் குறித்து அவர் ஒரு நல்ல நூல் எழுதவேண்டும் என்று கோருவதாக பவா  சொன்னார்.&lt;br /&gt;&lt;a href="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0355.jpg"&gt;&lt;img alt="" class="aligncenter size-medium wp-image-6408" src="http://www.jeyamohan.in/wp-content/uploads/2010/01/IMG_0355-300x225.jpg" title="IMG_0355" width="300" /&gt;&lt;/a&gt;கடைசியாக  நான் பேசினேன். ‘மூன்று சந்திப்புகள், மூன்று அவதூறுகள்’ என அவ்வுரையை  சுருக்கலாம். காந்தியை நானும் எதிர்மறையாகவே புரிந்துகொண்டிருந்தேன்.  மூன்று சந்திப்புகள் வழியாக காந்தியை புரிந்துகொள்ள முடிந்தது.&lt;br /&gt;முதல் சந்திப்பு, எம்.கோவிந்தன். மலையாளச் சிந்தனையாளரான கோவிந்தனைச்  சந்தித்தபோது அண்டோனியோ கிராம்ஷி பற்றி சொன்னார். இப்போது ஆளும்  ஆட்சியாளர்களை அதிகாரிகளை ஒட்டுமொத்த அதிகாரவற்கத்தை கொன்றழித்தால் என்ன  ஆகும்? அதே அதிகார அமைப்பு மீண்டும் உருவாகி வரும். புல்லை வெட்டினால்  மீண்டும் முளைப்பதுபோல. அதாவது வேர், உண்மையான அதிகாரம் கண்ணுக்கு  தெரியாமல் உள்ளே இருக்கிறது. அது மக்களிடம் கருத்தியல்வடிவில் உள்ளது.&lt;br /&gt;மக்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவில் இருந்தே அரசு அதிகாரத்தை பெறுகிறது  என்று கிராம்ஷி சொல்வதைச் சொன்னார் கோவிந்தன். அந்த ஆதரவு  கருத்தியல்ரீதியானது. அன்றைய பிரிட்டிஷ் அரசின் உண்மையான அதிகாரம்  அன்றிருந்த மக்கள் அதற்கு அளித்த ஆதரவில் இருந்தது. காந்தி அந்த மக்களை  நோக்கி பேசியது அதனாலேயே. அரசை வீழ்த்த அவர் முயலவில்லை, மக்களை மாற்றவே  முயன்றார். அதுவே காந்தியப்போராட்டம். மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்த  நல்ல நிர்வாகம்மீது மதிப்பிருந்தது. அதன் மாபெரும் சுரண்டல்  தெரிந்திருக்கவில்லை. அதை மக்களுக்குத் தெரிவிக்கவே காந்தி  உப்புசத்தியாக்கிரம் போன்ற போராட்டங்களை உருவாக்கினார்.&lt;br /&gt;காந்தியைப்பற்றிய புதிய பார்வையை உருவாக்கியது அந்த கருத்துதான்.  காந்தியை பிரிட்டிஷ் அரசை ‘பிளாக்மெயில்’ செய்பாவ்ர் என்றே நானும்  எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் மாறி அவரை புதிய கோணத்தில் பார்க்க  ஆரம்பித்தேன்.&lt;br /&gt;இரண்டாவது சந்திப்பு லாரிபேக்கர். நவீன கட்டிடவரைகலை நிபுணர் அவர். அவர்  கார்ட்டூன் வரைவதற்காக காந்தியைப் பார்க்கச் சென்றார். காந்தி அவரிடம்  ‘சிறந்த கட்டிடம் என்றால் என்ன?’ என்றார். விடையாக அவரே ‘குறைந்த அளவுக்கு  சரக்குப் போக்குவரத்துச் செலவு உடையது’ என்றார். அந்த வரி பேக்கரை  மாற்றியமைத்தது. இந்தியாவில் தங்கி ‘தேசிய வீடு’ என்ற கருத்தை உருவாக்க  வைத்தது&lt;br /&gt;அப்படி காந்தி அவரைச் சந்தித்த எத்தனையோ பேரை பாதித்திருக்கிறார்.  சந்தித்தவர்களை எல்லாம் புரட்சிகரமாக மாற்றி அமைத்திருக்கிறார்.  அவர்களெல்லாம் மாமனிதர்களாக ஆனார்கள். காந்தி வாழ்நாள் முழுக்க காந்திகளை  உருவாக்கிக்கொண்டே இருந்தார். வெரியர் எல்வின், ஜெ.சி.குமரப்பா என எத்தனையோ  பேரைச் சொல்லலாம்.&lt;br /&gt;மூன்றாவது சந்திப்பு ஈ.எம்.எஸ். வாழ்நாள் முழுக்க காந்தியக்  கோட்பாடுகளுக்கு எதிரான அரசியலை நடத்தியவர் அவர். ஆனால் தனிவாழ்க்கையில்  காந்தியின் எளிமையை அர்ப்பணிப்பை தானும் கொண்டிருந்தார். எதிரிகளிடம் கூட  ஆழமாக ஊடுருவும் காந்தியை அவரிடம் கண்டுகொண்டேன்.&lt;br /&gt;பின்னர் மூன்று அவதூறுகள். ஒன்று ரயிலில் ஒருவர் காந்தி தன் மூத்தமகனை  பாரிஸ்டர் படிப்புக்கு அனுப்பாத காரணத்தால் அவன் குடிகாரன் ஆனான் என்றார்.  மீண்டும் மீண்டும் மேடையில் சொல்லப்படுகிறது அது. ஆனால் ஹரிலால்  மெட்ரிகுலேஷனை நான்குமுறை எழுதி தோற்றவர் என்பதை நானே வாசித்து  தெரிந்துகொண்டேன்.&lt;br /&gt;காந்தி தகுதியிருந்தும் பட்டேலை விட்டுவிட்டு நேருவை தலைவராக்கியது  தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் என்ற அவதூறை அடுத்து கேட்டேன். ஆனால்  இந்தியா மதவெறுப்பால் அழிந்துகொண்டிருந்த நாட்களில் முற்றிலும்  மதச்சார்பற்ற ஒருவர் இந்தியாவை வழிநடத்தவேண்டுமென காந்தி விரும்பியதை  வரலாற்றில் இருந்து புரிந்துகொண்டேன்.&lt;br /&gt;கடசியாக, காந்தியின் மூன்றாம் வகுப்பு ரயில்பயணம் முதல்வகுப்பு  பயணத்தைவிட செலவேறியது என்று சரோஜினிநாயிடு சொன்ன அவதூறை எதிர்கொண்டேன்.  அது சொல்லப்பட்ட தருணத்தை அன்றைய சூழலை தேடி அறிந்தேன். லட்சக்கணக்கான  தொண்டர்கள் காந்தி பேச்சை கேட்டு எளிமையிலும் எளிமையான வாழ்க்கக்கு சென்று  தொண்டாற்றியது காந்தியும் எளிமையாக இருந்தமையாலேயே. அந்த எளிமை ஒரு பதாகை.  ஒரு முன்னுதாரணம். எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக இந்தியாவைச் சுற்றி  வந்த காலத்தில்கூட காந்தி மூன்றாம்வகுப்பிலேயே பயணம்செய்திருக்கிறார்&lt;br /&gt;அந்த அவதூறில் இருந்து காந்தியை பற்றி எழுத ஆரம்பித்ததே இந்நூல். இதில்  சமகாலத்தில் காந்தியை எப்படி புரிந்துகொள்வதென்ற தேடல் உள்ளது. இத்தனை  அவதூறுகள் ஒரு சிந்தனையாளரைப் பற்றி ஏன் எழுகிறதென்ற கேள்வியே என்னை  காந்திக்குள் செல்ல வைத்தது.&lt;br /&gt;இந்திய தேசியம் குறித்த என் கருத்துக்களை நான் பதிவுசெய்திருக்கிறேன்.  நான் சொல்லும் தேசியம் நேற்றில் இருந்து எடுக்கும் அடையாளங்களால் ஆனதல்ல.  இந்தமண்ணில் இப்போது வாழும் அனைவரும் நாளை குறித்த ஒரு கனவை உருவாக்கிக்  கொள்வதனால் வரும் தேசியம் அது. எவரையுமே விலக்குவதல்ல.&lt;br /&gt;இந்திய மண்ணில் இரண்டாயிரம் வருடங்களாக போர்களால்,  பண்பாட்டுக்காரணங்களால், கடைசியாக பஞ்சங்களால், மக்கள்ப்பரிமாற்றம்  நிகழ்ந்து இன்று இந்த நிலம் ஒரே பண்பாட்டு வெளியாக உள்ளது. மக்கள் எங்கும்  கலந்து வாழ்கிறார்கள். ஆகவே இவர்கள் சேர்ந்து வாழ்ந்தாகவேண்டும். இது  வரலாற்று நிர்ப்பந்தம். அதற்கான தேசியமே நம் தேவை.&lt;br /&gt;எல்லைப்பிரிவினை இந்தியாவில் 1948ல் ஐந்து லட்சம்பேரை பலிகொண்டது.  சின்னஞ்சிறு இலங்கையில் ஒரு பிரிவினை லட்சம்பேரை காவுகொண்டது.இந்திய  மக்கள்தொகையில் 20 சதவீதம் பேராவது இன்று மாற்றுமொழி நிலங்களில்  நூற்றாண்டுகளாக குடியேறி வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட இருபதுகோடிப்பேர்!  இந்தியாவில் எங்குமாக ஒருகோடி தமிழர்கள் அப்படி குடியேறி வாழ்கிறார்கள்.  யாரோ எதற்கோ பேசும் பிரிவினைவாதம் கோடிக்கணக்கான மக்களை இடம்பெயரச்செயும்.  பரஸ்பர வெறுப்பை கிளறும்.&amp;nbsp; அவர்களை அர்த்தமற்ற அழிவுக்கே கொண்டுசெல்லும்.  அந்த மனுடப்பேரழிவு நடந்தபின்னும் அதைப் பேசியவர்கள் அதற்குப் பொறுப்பேற்க  மாட்டார்கள்.&lt;br /&gt;தேசியம் மயிர் மட்டை என்று கொள்கை பேசி உயிர்களுடன் விளையாடாதீர்கள்.  அதிகாரவெறியால் உயிர்வாழ மட்டுமே விரும்பும் எளிய மக்களை கொன்றழித்துவிட்டு  எண்ணிக்கைக் கணக்கையும் கோட்பாட்டையும் சேர்த்துப்பேசும் திமிரை  அறிவுஜீவிகள் இனிமேலாவது கைவிட வேண்டும் என்றேன். ஈ.எம்.எஸ்.குறித்து ஒரு  நூல் எழுதும் எண்ணம் உண்டு என்று சொல்லி முடித்துக்கொண்டேன்.&lt;br /&gt;ஈரோட்டுக்கும் வெளியூரில் இருதெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள்.  பெங்கலூரில் இருந்து கார்த்திகேயன் வந்திருந்தார். அனைவரிடமும் தனியாக  நிறையவே பேசமுடிந்தது&lt;br /&gt;விழா சரியாக ஒரு மணிக்கே முடிந்தது. மாடியில் அனைவருக்கும் மதிய உணவு  ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு வந்தவர்களே பரிமாறியது உற்சாகமாக  இருந்தது. விஜயராகவன் முகமலர்ச்சியுடன் ”ஈரோடு காப்பாத்திடிச்சு சார்”  என்றார்.&lt;br /&gt;மாலை ஐந்து மணிவரைக்கும் அங்கேயே அறையில் அமர்ந்து நண்பர்களிடம்  பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் இருகார்களிலும் இருசக்கரவண்டிகளிலுமாக  வள்ளிபுரத்தான்பாளையம் சென்றோம். எட்டுமணிவரை அங்கே  பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம். நான் இரவு பத்து மணிக்கு  நாகர்கோயில் ரயிலை பிடித்தேன். நண்பர்கள் வந்து வழியனுப்பி வைத்தார்கள்.  படுத்ததுதான் தெரியும். காலையில் நாகர்கோயில்.&lt;br /&gt;&lt;a href="http://erodetamizh.blogspot.com/2010/01/blog-post_24.html" target="_blank"&gt;http://erodetamizh.blogspot.com/2010/01/blog-post_24.html&lt;/a&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-3143397018637208561?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/3143397018637208561'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/3143397018637208561'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/11/jayamohanaram.html' title='Jayamohan..Aram.'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author><media:thumbnail xmlns:media='http://search.yahoo.com/mrss/' url='http://i49.tinypic.com/wt6ihl_th.jpg' height='72' width='72'/></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-8773515165644112457</id><published>2011-11-25T04:38:00.000-08:00</published><updated>2011-11-25T04:38:05.254-08:00</updated><title type='text'>vairamuthu sanga kavithaigal</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div align="left" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="color: red; font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 11pt; font-weight: 700;"&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;கவிஞர்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 11pt;"&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;வைரமுத்துவின்&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 11pt; font-weight: 700;"&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;கவிதைகள்  &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 11pt; font-weight: 700;"&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;?&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 11pt; font-weight: 700;"&gt; &lt;/span&gt;&lt;span style="color: blue; font-family: aAvarangal; font-size: 12pt; font-weight: 700;"&gt;இசை&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="color: white; font-size: 5pt;"&gt;.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" id="AutoNumber2" style="border-collapse: collapse;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td align="justify" valign="top" width="50%"&gt; &lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt;  &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;துளைகள் கொண்டது  மனிதமனது&lt;br /&gt;எறும்பின் கண்ணினும் நுண்ணிய துளைகள் &lt;br /&gt;விழியினும் சவ்வினும் மெல்லிய  துளைகள் &lt;br /&gt;ஆயிரம் லட்சம் கோடித் துளைகள் &lt;br /&gt;&lt;br /&gt;பல துளைகள் &lt;br /&gt;பிறந்தது  முதலாய்ப் பூட்டிக் கிடப்பவை &lt;br /&gt;இறக்கும் வரைக்கும் திறக்காதவை &lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை  துளைகளும் &lt;br /&gt;திறத்தல் அரிது &lt;br /&gt;&lt;br /&gt;அத்தனை கோடித் துளைகளையும்&lt;br /&gt;ஒரே கணத்தில்  திறந்துவைக்கும் &lt;br /&gt;விசை எங்கு கண்டாய் &lt;br /&gt;இசையே!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காற்றை நுரைக்க வைக்கிறாய்  &lt;br /&gt;காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய் &lt;br /&gt;வெறுமை நிரப்புகிறாய் &lt;br /&gt;மாயைக்குள்  மெய்யாகிறாய் &lt;br /&gt;&lt;br /&gt;கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய் &lt;br /&gt;மிருகங்களுக்குக் கனவு  தருகிறாய் &lt;br /&gt;தாவரங்களின் தலை கோதுகிறாய்&lt;br /&gt;மேகங்கள் பீச்சுகிறாய்  &lt;br /&gt;&lt;br /&gt;மூங்கிலில் வண்டு செய்த &lt;br /&gt;புண்ணில் பண்ணிசைக்கிறாய் &lt;br /&gt;பிறையை  வளர்ப்பிக்கிறாய் &lt;br /&gt;விண்மீன்கள் தூங்கவைக்கிறாய் &lt;br /&gt;&lt;br /&gt;எங்கள்&lt;br /&gt;மனப்பாறை  இடுக்குகளில் &lt;br /&gt;தேன்கூடு கட்டுகிறாய் &lt;br /&gt;&lt;br /&gt;உன் வருகைக்கு எங்கள்&lt;br /&gt;கண்ணிமைகள்  தாழ்ந்து &lt;br /&gt;கம்பளம் விரிக்க &lt;br /&gt;&lt;br /&gt;கண்ணீர் ஆங்காங்கே&lt;br /&gt;திரவமலர்  தெளிக்க&lt;br /&gt;&lt;br /&gt;புல்லரிக்கும் உரோமங்கள்&lt;br /&gt;எழுந்து நின்று வரவேற்க  &lt;br /&gt;&lt;br /&gt;உனக்குத்தான் எத்தனை&lt;br /&gt;ராஜமரியாதை இசையே!&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;நாவுக்குச் சிக்காத அமிர்தம்&lt;br /&gt;நீ  நாசிக்குச் சிக்காத வாசம் நீ&lt;br /&gt;கண்ணுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ&lt;br /&gt;ஸ்பரிசம்  இல்லாத தீண்டல் நீ&lt;br /&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt; &lt;td align="justify" valign="top" width="50%"&gt; &lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;நீயே சொல் இசையே &lt;br /&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ச&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ெ&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;வ&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ி&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ய&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ே&lt;span id="dtx-highlighting-item"&gt; &lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ப&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ோ&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;த&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ு&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ம&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ா&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;?&lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt; &lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ந&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ா&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ன&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;்&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;க&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ு&lt;span id="dtx-highlighting-item"&gt; &lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ப&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ு&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ல&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ன&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;்&lt;span id="dtx-highlighting-item"&gt; &lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;உ&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ப&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ர&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ி&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ய&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;ா&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;?&lt;/span&gt;&lt;span id="dtx-highlighting-item"&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;மரக்கிளை அசைவில் மணிகளின் ஒலியில்  &lt;br /&gt;பறவையர் பாட்டில் அலைகளின் அதிர்வில் &lt;br /&gt;மாறுவேடம் போட்டபடி &lt;br /&gt;நீயே எங்கும்  நிறைந்துள்ளாய் இசையே!&lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;br /&gt;நதி  -&lt;br /&gt;நடந்துபோகும் சங்கீதம்&lt;br /&gt;&lt;br /&gt;மழை -&lt;br /&gt;அவரோகண சங்கீதம்&lt;br /&gt;&lt;br /&gt;மழலை -  &lt;br /&gt;பிழைகளின் சங்கீதம்&lt;br /&gt;&lt;br /&gt;மெளனம் கூட &lt;br /&gt;உறைந்துபோன சங்கீதம் &lt;br /&gt;&lt;br /&gt;பூமி  சுற்றிக் காற்று &lt;br /&gt;காற்று சுற்றி இசை &lt;br /&gt;இசைக்குள் மிதக்குகம் &lt;br /&gt;ஜீவராசிகள்  &lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;br /&gt;இசையே!  &lt;br /&gt;தூங்கவை எங்களை &lt;br /&gt;&lt;br /&gt;உன் மயிற்பீலி விரல்கொண்டு &lt;br /&gt;மனசு தடவு  &lt;br /&gt;&lt;br /&gt;இரத்தக் குழாய்களின் &lt;br /&gt;துருக்கள் துலக்கு&lt;br /&gt;&lt;br /&gt;உள்ளிருக்கும்  விலங்குத்தோல்&lt;br /&gt;உரி &lt;br /&gt;&lt;br /&gt;மென்குணங்கள் மேம்படுத்து&lt;br /&gt;&lt;br /&gt;நாங்கள் &lt;br /&gt;இறுகி  இறுகிக் &lt;br /&gt;கல்லாகும்போது &lt;br /&gt;இளகவிடு &lt;br /&gt;&lt;br /&gt;குழைந்து குழைந்து &lt;br /&gt;கூழாகும்போது  &lt;br /&gt;இறுகவிடு &lt;br /&gt;&lt;br /&gt;நீயில்லாத பூமி &lt;br /&gt;மயானம் &lt;br /&gt;&lt;br /&gt;மன்னித்துவிடு  &lt;br /&gt;மயானத்திலும் இசை உண்டே. &lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-8773515165644112457?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/8773515165644112457'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/8773515165644112457'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/11/vairamuthu-sanga-kavithaigal_25.html' title='vairamuthu sanga kavithaigal'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-7024916855357824573</id><published>2011-11-25T04:30:00.001-08:00</published><updated>2011-11-25T04:30:44.673-08:00</updated><title type='text'>vairamuthu sanga kavithaigal</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div align="left" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 11pt; font-weight: 700;"&gt;கவிஞர் &lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 11pt;"&gt;வைரமுத்துவின்&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 11pt; font-weight: 700;"&gt; கவிதைகள் &lt;/span&gt;&lt;span style="color: red; font-family: Arial; font-size: 11pt; font-weight: 700;"&gt;?&lt;/span&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 11pt; font-weight: 700;"&gt; &lt;/span&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 12pt; font-weight: 700;"&gt;&lt;span style="color: blue;"&gt;காலந்தோறும் காதல&lt;/span&gt;்&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="color: white; font-size: 5pt;"&gt;.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடக்கிறது  தமிழ் இலக்கியப் பரப்பு. காதல் என்ற உள்ளடக்கம் மட்டும் மாறாமல் தொடர்கிறது  வடிவங்களை மாற்றிக்கெண்டு. அந்தந்தக் காலங்களில் மேலோங்கி விளங்கும் இயக்கங்களில்  காற்றெடுத்துக் கொண்டுதான் காதல் சுவாசித்து வந்திருக்கிறது. இதை உணர்த்தவே -  இந்தக் கவிதைகளில் அந்தந்தக் கால உள்ளீடுகளையும் வடிவங்களையும் சொல்லாட்சிகளையும்  கையாண்டிருக்கிறேன்.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;table border="0" cellpadding="0" cellspacing="0" id="AutoNumber2" style="border-collapse: collapse;"&gt;&lt;tbody&gt;&lt;tr&gt; &lt;td align="justify" valign="top" width="50%"&gt; &lt;div style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt;  &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;span style="color: red;"&gt;  &lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;b&gt;1. சங்க காலம் &lt;/b&gt;&lt;br /&gt;ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு&lt;br /&gt;குருகு  பறக்கும் தீம்புனல் நாடன் &lt;br /&gt;&lt;br /&gt;கற்றை நிலவு காயும் காட்டிடை &lt;br /&gt;என்கை பற்றி  இலங்குவளை ஞெகிழ்த்து&lt;br /&gt;&lt;br /&gt;மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து &lt;br /&gt;வாட்கண் மயங்க  உண்டதை மீண்டும்&lt;br /&gt;பசலை உண்ணும் பாராய் தோழி&lt;/span&gt;&lt;/span&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;br /&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="font-family: aAvarangal;"&gt;&lt;span style="color: red;"&gt; &lt;/span&gt;&lt;br /&gt;&amp;nbsp;&lt;b&gt;2 காவிய  காலம்&lt;/b&gt;&lt;br /&gt;பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்&lt;br /&gt;மின்னல் மிடைந்த  இடையென்பார் - இன்னும் &lt;br /&gt;கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்  &lt;br /&gt;கரும்பிருக்கும் என்பார் கவி.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;b&gt;3 சமய காலம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வெண்ணிலவால்  பொங்குதியோ&lt;br /&gt;விரக்தியால் பொங்குதியோ &lt;br /&gt;பெண்ணொருத்தி நான்விடுக்கும்  &lt;br /&gt;பெருமூச்சாற் பொங்குதியோ &lt;br /&gt;பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட  பான்மையினால்&lt;br /&gt;விண்ணளந்து பொங்குதியோ&lt;br /&gt;விளம்பாய் பாற்கடலே! &lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;b&gt;4 சிற்றிலக்கியக் காலம்  &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம் &lt;br /&gt;துள்ளி ஓடும்விழிக்  கெண்டையாள் - நெஞ்சைத்&lt;br /&gt;தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும் &lt;br /&gt;சண்டையாள் -  வெள்ளித் தண்டையாள் &lt;br /&gt;முலை அதிரும்படி மணி உதிரும்படி &lt;br /&gt;மனம் பதறும்படிஆடும்  பாவையாள் - வில் &lt;br /&gt;மாரன் பகைமுடிக்கத் தேவையாள் &lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;b&gt;5 தேசிய காலம்&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சின்னஞ்  சிறுகமலப் பூவினாள் - என் &lt;br /&gt;சித்தத்திலே வந்து மேவினாள்&lt;br /&gt;கண்ணில் ஜோதிஒன்று  காட்டினாள் - என்&lt;br /&gt;கவியில் காதல்ரசம் ஊற்றினாள்&lt;br /&gt;விண்ணில் நிலவெரியும் வேளையில்  - பொன் &lt;br /&gt;வீணை கரம்கொண்டு மீட்டினாள்&lt;br /&gt;மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்  &lt;br /&gt;மறைந்தகதை எங்கு சொல்குவேன்? &lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt; &lt;td align="justify" valign="top" width="50%"&gt; &lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;b&gt;6 திராவிட காலம் - 1&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இல்லாத  கடவுள் போன்ற&lt;br /&gt;இடைகொண்ட பெண்ணே உந்தன் &lt;br /&gt;பொல்லாத அழகு பாடப் &lt;br /&gt;பூவாடும்  கூந்தல் பாட &lt;br /&gt;சல்லாப விழிகள் பாடத் &lt;br /&gt;தனித்தமிழ் கொண்டு வந்தேன்&lt;br /&gt;நில்லாமற்  போனால் கூட்டில்&lt;br /&gt;நிற்குமோ எந்தன் ஆவி? &lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;b&gt;7 திராவிட காலம் - 2&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விண் -  அப்பம் போன்ற நிலவுவந்து - காதல் &lt;br /&gt;விண்ணப்பம் எழுதுகின்ற இரவு&lt;br /&gt;முத்தமென்ற  சொல்போல - நான் &lt;br /&gt;இதழ்சேர வரும்போது &lt;br /&gt;உதடுஒட்டாத குறள்போல - நீ &lt;br /&gt;தள்ளியா  நிற்பது? &lt;br /&gt;விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே &lt;br /&gt;விடிவெள்ளி கண்ணயரும்  முன்னே&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;b&gt;8 புதுக்கவிதைக் காலம் -  1&lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஏப்ரல் சூரியன்&lt;br /&gt;டீசல் புகை&lt;br /&gt;பேருந்து நெரிசல்&lt;br /&gt;அலுவலக எரிச்சல்  &lt;br /&gt;இவையெதிலும் வாடாமல்&lt;br /&gt;பத்திரமாய் வைத்திருக்கிறேன் &lt;br /&gt;உனக்குத் தெரியாமல்  உதிர்ந்து &lt;br /&gt;யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த &lt;br /&gt;உன் கருங்கூந்தற்  சிறுபூவை&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;span style="font-family: aAvarangal; font-size: 9pt;"&gt;&amp;nbsp;&lt;b&gt;9 புதுக்கவிதைக் காலம் - 2  &lt;/b&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உன்வீட்டு ஆன்ட்டனாவிலும்&lt;br /&gt;என்வீட்டு நைலான்  கொடியிலும்&lt;br /&gt;தனித்தனியே காயும்&lt;br /&gt;நேற்று &lt;br /&gt;ஊருக்கு வெளியே நாம்&lt;br /&gt;ஒன்றாய்  அழுக்குச் செய்த உள்ளாடைகள்.&lt;/span&gt; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&amp;nbsp; &lt;/div&gt;&lt;div align="justify" style="margin-bottom: 0px; margin-top: 0px;"&gt;&lt;b&gt;&lt;span style="font-family: Arial;"&gt;&amp;nbsp;&amp;nbsp; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;* &lt;/span&gt;&lt;span style="color: #ff9900;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: green;"&gt;*&lt;/span&gt; &lt;span style="color: red;"&gt;*&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/b&gt;&lt;span style="font-size: 9pt;"&gt;&lt;span style="color: red; font-family: aAvarangal;"&gt; &lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/td&gt;&lt;/tr&gt;&lt;/tbody&gt;&lt;/table&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-7024916855357824573?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/7024916855357824573'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/7024916855357824573'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/11/vairamuthu-sanga-kavithaigal.html' title='vairamuthu sanga kavithaigal'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-4692795996520161808</id><published>2011-11-24T02:46:00.001-08:00</published><updated>2011-11-24T02:46:43.093-08:00</updated><title type='text'>Uyirin osai...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;div id="ctl00_ContentPlaceHolder1_divContent" style="padding: 0px 10px; width: 95%;"&gt;                                 &lt;div align="justify"&gt;                                     &lt;span class="indexAbstract" id="ctl00_ContentPlaceHolder1_lblcontents"&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமும்&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;தேசமும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது எனும் பின்பத்தை இந்திய தேசியம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;பிச்சையெடுக்கும் குடிகளிடம் பிச்சையெடுத்து அப்படியான&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;பின்பும்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;போலியானது&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;என்று&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;உடைத்தெறிந்துள்ளார்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொள்ளும் தமிழாளர்கள் &lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;வழக்கம்போல்&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;இம்முறையும்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க சர்வாதிகாரியின் கைகளில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;மூன்று தமிழர் உயிர்காக்க சட்டப்பேரவையில் தீர்மானமேற்றி சிறிது&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;நம்பிக்கை தந்த புது ஆட்சியாளர்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;சமச்சீர் கல்வியில் ஆரம்பித்தார் தனது பழைய செயல்பாடுகளை&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பரமக்குடி படுகொலைகள்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;,&lt;/span&gt;சமச்சீர் கல்வி&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாய் எதுவும் செயல்படாமல் மௌனம் காப்பது&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;சட்டமன்றத் தீர்மானத்தை முழுமையாய் முரண்கொண்டு மூன்று தமிழர்களுக்கு எதிராய் நீதிமன்றதில் பதில்தந்தது&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;அண்ணா நூலகத்தை இடமாற்ற முனைந்தது&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;இறுதியாய் அடிப்படைத் தேவைகளின் விலையேற்றம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;6.25 &lt;/span&gt;காசுகள் உயர்த்தப்பட்டிருக்கும் பால்விலை&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;உயரப்போகும் மின்சார கட்டணம்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;உயர்ந்துபோன பேருந்துக் கட்டணங்கள்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;விலைஉயர்வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள காரணம் அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதுவே&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;பொது நிறுவனங்கள் என்பவை மக்களுக்கான சேவை செய்பவையே அன்றி லாபமீட்டத் தொடங்கியவையன்று&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;அவை லாபத்தில் இயங்க ஏழை எளியவர் குருதியை சுவைக்கக் கூடாது என்பதை புரியாத ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் எதன்&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;மீதும் நம்பிக்கையில்லை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இருக்கின்ற ஏரி குளங்கள் அனைத்தையும் குப்பைகளால் நிரப்பி வானளவு கட்டிடங்கள் காட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;டாடாவுக்கும்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;ரிலையன்சுக்கும் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு இந்த தேசத்தில் இன்னும் நாற்பது கொடி மக்கள் உறங்க வீடின்றி வீதிகளில் உறங்குவதையோ&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;சுகாதாரமில்லாத வாழ்க்கை குறித்தோ&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;தினமும் உண்ணும் ஒருவேளை உணவு குறித்தோ எந்த அக்கறையுமேயில்லை&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;div align="center"&gt;&lt;img align="middle" alt="" src="http://www.uyirmmai.com/Images/ContentImages/uyirosai-169/ilavenil2.jpg" width="300" /&gt;&lt;/div&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பன்னாட்டு எசமானர்களுக்கு சேவகம் புரியும் பத்துக் கோடி பேருக்கு மட்டுமே இந்த தேசம் சுருங்கிக் கிடக்கிறது&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;தமிழக ஆட்சியாளர்களும் முந்தய ஆட்சி சீர்கேடுகள்&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;மைய அரசு நிதி தராமை எனும் பல காரணங்களைக் &lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;கொண்டு இப்பணிகளை செவ்வனே&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;செய்கின்றனர்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;. &lt;/span&gt;ஆறு ரூபாய் விலை உயர்வு என்பது ஆட்சியாளர்களின் பிள்ளைகளையோ&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;இருக்கும் சிறுஅளவு மேல்வர்க்கத்துக்கோ எந்த பாதிப்புமில்லை ஆனால் மிகுதியான மக்கள் வறுமையில் வாழ்வது என்பதே நிசம்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;பேருந்து பயணக் கட்டண உயர்வென்பது கார்களில் பவனி வருபவரையும்&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;குளிரூட்டப்பட்ட சொகுசு தனியார் பேருந்துகளில் செல்பவரை எந்த அளவிலும் பாதிக்கப்போவதில்லை ஆனால் எதார்த்தத்தில் தினமும் இரண்டு ரூபாய் கட்டணத்தில் பிதுங்கி&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;வழியும் பேருந்துகளில் பயணிக்கும் மனிதர்களே முழுமையான தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;முந்மைய ஆட்சியினர் இருக்கும் சாதாரணப் பேருந்துகளை டீலக்ஸ்&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;, &lt;/span&gt;அல்ட்ரா டீலக்ஸ்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp; &lt;/span&gt;எனும் வழியில் இயக்கி ஒரு தாக்குதலைத் தொடுத்தனர்&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;இன்றைய ஆட்சியாளர்கள் கட்டணங்களை உயர்த்தி அடுத்த தாக்குதலைத் தொடுத்துள்ளனர்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;என் நண்பனொருவன் சொன்னதைப்போல் பேருந்துக் கட்டணங்கள் விமானக் கட்டணங்களுடன் போட்டியிடுகின்றன&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;சாதிய அடக்குமுறை&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;அறிவு அடக்குமுறை&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;, &lt;/span&gt;பொருளாதாரத்&lt;span style="font-family: Times New Roman;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;தாக்குதல் என்று அனைத்து வகையிலும் இன்றைய ஆட்சியாளர்கள் சர்வாதிகார ஆட்சி புரிகின்றனர்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நாமும் நம் மீது கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள்&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;கலாசார இருட்டடிப்புகள் என்று எதையும் உணராமல் உன்ன சோறு கிடைக்கின்ற ஒரே காரணத்துக்காய் எதையும் கண்டுகொள்ளாமல் சிறந்த அடிமைகளாய் எதையும் எதிர்த்துப் போராடத் துணிவின்றி வாழ்கிறோம்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;ஆட்சியாளர்கள் தம்சுயலாபத்துக்காய் நம் நிலத்தை கொலை பூமியாய் மாற்றுவர்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;நாம் நம் நிலத்தை விட்டே துரத்தப்படுவோம்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;உறவுகளின்றி&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;நிலமின்றி ஏதோ ஓர் தேசத்தில் நம் தலைமுறைகள் அகதிகளாய் அலைந்துகொண்டிருக்கும் காலம் தொலைவிலேயில்லை&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;இதைத் தமிழ்பெருமை பேசும் முன்னாள் ஆட்சியாளர்களும்&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;ஆர்ய புகழ் பாடும் இன்றைய ஆட்சியாளர்களும் செவ்வனே&lt;span style="font-family: Times New Roman,serif;"&gt;&amp;nbsp;&lt;/span&gt;செய்வர்&lt;span style="font-family: Latha;"&gt;. &lt;/span&gt;பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதை முடியும்போது தமிழகம் எனும் தேசம் வரலாறுகளின் நீண்டதூரத்தில் புதையுண்டு கிடக்கும்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;/span&gt;&lt;br /&gt;&lt;span style="font-size: x-small;"&gt;சில&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;நாட்களுக்குமுன்&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;ஈழத்து&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;நண்பன்&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;இப்படிச் சொன்னான்&lt;span style="font-family: Times New Roman;"&gt; " &lt;/span&gt;நாங்கள்&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;நிலத்தை&lt;span style="font-family: Times New Roman;"&gt;, &lt;/span&gt;லட்சக்கணக்கான&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;மக்களை&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;இழந்திருக்கலாம்&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;ஆனால்&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;தமிழகத்&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;தமிழர்களைப் போல்&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;தன்மானமற்ற&lt;span style="font-family: Times New Roman;"&gt; &lt;/span&gt;அடிமைகளில்லை&lt;span style="font-family: Latha;"&gt;.&lt;/span&gt;&lt;span style="font-family: Times New Roman;"&gt;"&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/span&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-4692795996520161808?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/4692795996520161808'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/4692795996520161808'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/11/uyirin-osai.html' title='Uyirin osai...'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-1340319919197609926</id><published>2011-10-20T02:41:00.001-07:00</published><updated>2011-10-20T02:41:52.140-07:00</updated><title type='text'>Pothigai.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை.  பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால்  உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில்,  மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை  உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல்  எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.&lt;br /&gt;முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும்  திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம்  முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு  நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு  இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள்  சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம்  பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.&lt;br /&gt;சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி ஆசிரியர் பசுபதி  இளமைக் காலத்தில் ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த  விழிப்புணர்வுதான் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார்.  அப்பா வழிப்பாட்டி சொன்ன இயற்கை குறித்தான கதைகளும் இப்பெரு முயற்சிக்கு  அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.&lt;br /&gt;தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான  தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை  மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை  இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம்,  எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன்,  ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.&lt;br /&gt;இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன்  காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது  வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான  எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.&lt;br /&gt;மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான  ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான  எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே  படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.&lt;br /&gt;தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக்  கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும்  பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில்  இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம்  பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.&lt;br /&gt;கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன்  செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி  மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப்  படமாக்கியுள்ளனர்.&lt;br /&gt;11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும்  பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான  சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு,  பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும்  வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக்  காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.&lt;br /&gt;ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00  எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி  எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை”  சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர்.  பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை  உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த  நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும்  யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால்  படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.&lt;br /&gt;தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற  அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில்  சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.&lt;br /&gt;தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு,  கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம்  படமாகப்பட்டிருக்கின்றது.&lt;br /&gt;ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும்  மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து  வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த  ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை  உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான  எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும்  குறிப்பிட மறக்கவில்லை.&lt;br /&gt;அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது.  பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று  ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான்.  பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை  மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.&lt;br /&gt;சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி,  திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.&lt;br /&gt;சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428&lt;br /&gt;&lt;img alt="Clap" class="smiley-content" src="http://cdn3.tamilnanbargal.com/sites/all/modules/smileys/packs/GigaSmiley/bravo.gif" title="Clap" /&gt;&lt;br /&gt;எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும்  நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது.  நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும்  பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று  பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை  ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை  இசைக்கும் முதல் மணி இவர்தான். ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48&lt;br /&gt;சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445 &lt;br /&gt;&lt;img alt="Clap" class="smiley-content" src="http://cdn3.tamilnanbargal.com/sites/all/modules/smileys/packs/GigaSmiley/bravo.gif" title="Clap" /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-1340319919197609926?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/1340319919197609926'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/1340319919197609926'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/10/pothigai.html' title='Pothigai.'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-5572788045842783833</id><published>2011-10-09T04:12:00.000-07:00</published><updated>2011-10-09T04:12:20.689-07:00</updated><title type='text'>Prabanchan. Two ladies.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பிரஞ்சுப் பெண்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு பிரஞ்ச் பெண்களை அறிமுகம் செய்துகொள்ளப் போகிறோம். பொதுப்புத்தியில் பதிந்து போயிருக்கும் 'அழகி' என்கிற பிம்பமோ, வீர தீரச் சாகசம் செய்த பெண்மணிகளோ அல்லர். அவர்கள் இருவருமே தம் காலத்து சமூக வரம்புகளுக்குள் ஒரு மீறலை ஏற்படுத்தியவர்கள் என்பதனாலும், தங்கள் செயல்பாடுகளுக்குத் தங்கள் ஆத்மாவின் உள்ளுணர்வின் திசை காட்டுதலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள் என்பதாலேயே நம் கவனத்தைக் கோருப வர்களாக இருக்கிறார்கள். முதலில் ழான். பிரான்சில் பாரிசில் பிறந்து மருத்துவம் பயின்று இந்தியாவுக்கு வந்தவர் அவ்பேர். அரசு மருத்துவமனை அதிகாரியாகப் புகழ்பெற்றவர் அவர். பிரஞ்சுக்காரர்களின் தலை நகரான புதுச்சேரித் தெருவில் அவ் பேர், எலிசபெத்தைச் சந்திக்கிறார். ஒரு போர்ச்சுக்கீசியரின் இந்திய மனைவிக்குப் பிறந்தவர் எலிசபெத். புதுச்சேரித் தெருக்களில் ஷாம் பெய்ன் ஒயினின் மதுர மணம் பரவிய ஒரு மாலையில் அவர்கள் திருமணத்தில் இணைகிறார்கள். அவர்கள் எட்டுக் குழந்தைகளைப் பெறுகிறார்கள். அதில் மூத்தவள் ழான். பிறந்த வருடம் 1706.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ழானின் குழந்தைப் பருவம், கோட்டையைச் சுற்றிய பூங்காக்களில் பட்டாம்பூச்சியின் பின்னே மலர்ந்து கொண்டிருந்தது. நோயாளிக் கிடங்குக்கு அருகேயே இருந்த அவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால், கரும் பச்சைப் பாய் விரித்த கடல் தெரிந்தது. வீட்டு மாடி ஜன்னலிலிருந்து, புரண்டு புரண்டு வரும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் தன்னை மறப்பவள் ழான். கடலும் அலையும் அவளுக்குத் தினம் தினம் புதிது புதிதாய் என்னென்னவோ சொல்லிக் கொண்டே இருந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடல் எப்போதும் ஒரு கண்ணாடி. மனிதர்களின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் அது பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். தெருக் குழந்தைகளிடம்தான் அவள் தமிழ் பேசக் கற்றாள். பிரஞ்ச் ஒலியில் தமிழ் பேசினாள். கடற்கரை மணலில் அவள் நிறைய வீடுகள் கட்டினாள். மறுநாள் சென்று பார்த்தால், அவை இருப்பதில்லை. தெருக்களில் ராணுவ, காவல் துறை ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். வெள்ளைக்காரர்கள், தனியாகவும் தம்பதி சமேதராகவும் தெருக்களில் நிரம்பி இருப்பார்கள். கோட்டைக்குள் அடிக்கடி உயர் உத்தியோகஸ்தர்கள், குவர்னர், துணை குவர்னர்களின் கொண்டாட்டங்கள் நிகழும். நிறைய மதுப்புட்டிகளுடன் வயதான ஒயின்கள் மனிதர்களைப் பருகிக்கொண்டே இருக்கும். பெரிய பெரிய தீனி மேசைகள் போடப்பட்டு இந்திய ஐரோப்பிய உணவு வகைகள் பரிமாறிக் கொள்ளப்படும். ழான் இந்திய உணவை நோக்கியே கை நீட்டுகிறவளாக இருந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அம்மா எலிசபெத் 'இந்தியப் பெண்ணின்' மனோபாவங்களைக் கொண்டவளாக இருந்தார். அதாவது தன்னைப் பின் கட்டிலேயே வைத்திருக்கும் பெண். (ஆண்களால் அப்படி வைக்கப்பட்டு அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பெண்.) ழானுக்கும் அவள் அம்மாவுக்கும் இது பற்றியே முரண்கள் தோன்றிக் கொண்டிருந்தன. தனக்குப் பறக்கத் தோன்றுவதை நினைவுறுத்தினாள் ழான். பெண்ணுக்குச் சிறகுகள் தேவையில்லை என்றார் எலிசபெத்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒருநாள், கடற்கரை ஓரம் நின்று வந்துபோகும் கப்பல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ழான். அவளைத் தேடிவந்து அவள் வீட்டார் அழைத்துச் சென்றார்கள். வீட்டில் அவளை மணக்கப்போகும் மாப் பிள்ளை வேன்சான் காத்திருந்தார். பிரஞ்ச் கும்பினியில் ஒரு உத்தியோகஸ்தர். அதோடு வணிகர். தேவகுமாரனுக்கு முன்னால் அவள் விரலில் வேன்சான் திருமணத்தை உறுதி செய்தார். ழானுக்கு அப்போது வயது 13.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;திருமணத்தின் அர்த்தத்தை இரவுகளில் அவள் புரிந்துகொள்ள நேர்ந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. கூடிக் குசுகுசுத்துக் குருட்டறைகள் இட்ட கரு. போர்க் குதிரைகளின் காலில் இடர்பட்டாற்போல் இருந்தது. தொடர்ந்து பதினொரு குழந்தைகளைப் பெற்றாள் ழான். சிலது வாழ்ந்தன. சிலதைக் கர்த்தர் எடுத்துக் கொண்டார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வீட்டின் வரவேற்பறையில் இப்போதெல்லாம் புதிய நபர், அவள் கணவனுடன் பேசிக்கொண்டு இருப்பதை அவள் காணத் தொடங்கினாள். புதுச்சேரிப் பகல்கள் இத்தனை வெளிச்சமாக இருப்பதை இப்போது தான் அவள் பார்த்தாள். வேன்சானின் மதாம் என்ற முறையில் விருந்தாளிக்குக் குடிக்கவும், அருந்தவும், தின்னவும் அவள் பணி செய்ய வேண்டி இருந்தது. அந்த இளைஞன், பிறந்த பிரான்ஸ் தேசத்தையும் விட்டு தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் துய்ப்பிளக்ஸ். அவன் கண்களில் கனவு மிதந்து கொண்டிருந்தது. அரசியலில் பெரும் சாதனைகளைச் செய்யப் போகிறவன்தான் என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வார்த்தைகளில் தங்க நாணயங்களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பணம் பண்ண வேண்டும். பண மூட்டைகளை இருக்கைகளாகப் போட்டு அவைகளின்மேல் உட்கார வேண்டும். கும்பினியின் மிக முக்கிய இடத்தில் இருந்தான். விரைவில் துய்ப்பிளக்ஸ், வேன்சானின் வியாபாரக் கூட்டாளியாக மாறினான். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். சரக்குகளைக் கப்பல்களில் ஏற்றிக் கரைகடந்த நாடுகளுக்குச் சென்று விற்றுத் திரும்பிக் கொண்டிருந்தான் வேன்சான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துய்ப்பிளக்ஸ், மிக நுணுக்கமான மெல்லிய உணர்ச்சிகள் கொண்டவனாகத் தெரிந்தான், ழானுக்கு. அவள் குழந்தைகளிடம் அவன் பிரியமாக இருந்தான். அவன் வருகை, வரவேற்பறையில் பகல் நேரத்திலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருப்பதாயும், சாம்பிராணிப்புகை மணமூட்டுவதாகவும் ழானுக்குத் தோன்றியது. புகை, இரவு நேரத்திலும் அவள் கட்டில் ஓரம் கமழ்வதாகவும் அவளுக்குத் தோன்றவாரம்பித்தது. இந்த நேரத்தில்தான், குழந்தைக் கை முறுக்கைக் காக்கை அடித்ததுபோல், துய்ப்பிளக்ஸ், புதுச்சேரியிலிருந்து கல்கத்தாவை அடுத்த சந்திரநாகூருக்கு மாற்றப்படுகிறான். அங்கு அவன் கும்பினியின் இயக்குநர். ஹுக்ளி நதிக்கரை ஓரம் அவன் இருக்கை இருந்தது. சில்லிட்டு வீசிய இரவு நேரக் காற்று துய்ப்பிளக்ஸை இம்சை செய்தது என்று ஒரு வரலாற்றாளர் எழுதுகிறார். வேன்சானைத் தான் இருக்கும் பகுதிக்கே அழைத்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடர்கிறான் துய்ப்பிளக்ஸ். வேன்சானுடன் ழானும் வங்கத்துக்குக் குடிபெயர்கிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விரைவிலேயே ஒரு பெரிய வணிகப் பயணத்தை மேற்கொண்ட வேன்சான், புயலில் சிக்கி, உடல் நலம் கெட்டு, வங்கம் திரும்பிய சில நாட்களுக்குள் மரணத்தை அழைத்துக் கொள்கிறான். நண்பனுக்காகத் துக்கம் காத்த துய்ப்பிளக்ஸ், கிறித்துவ நெறிகளுக்குட்பட்டு ழானைத் திருமணம் செய்துகொள்கிறான். திருமணம் நிகழ்ந்த சில நாட்களுக்குள் துய்ப்பிளக்ஸ், புதுச்சேரியைத் தலைமை அகமாகக் கொண்ட பிரஞ்சு பிரதேசத்துக்குக் குவர்னராக உயர்த்தப்படுகிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ழான், தன் கனவு நகரமான புதுச்சேரிக்குத் திரும்புகிறாள். கடல் அலைகள், அதே சப்தத்துடன் ஆர்ப்பரிக்கிறது. கடற்கரை மணல் மட்டும் லேசாக அழுக்குப்பட்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. இப்போது அவள் நகரத்தின் முதல் பெண்மணி. குவர்னர் துய்ப்பிளக்ஸின் மதாம். ஆகவே மதாம் துய்ப்பிளக்ஸ். ஒரு உயர்தரத்து அதிகாரி, 'மதாம் துய்ப் பிளக்ஸுக்கு நகரத்தின் நல்வரவு' என்கிற போது, 'நான் மதாம் துய்ப்பிளக்ஸ் மட்டும் இல்லை. நான் ழான் அல்பெரும்கூட, என்கிறாள். பதவியும், சௌகர்யப் பௌதிகப் பொருள்களும், திரும்பிய பக்கமெல்லாம் ஏவல் பாத்திரங்களும், அதீத உண்மைக் கலப்படம் அற்ற பணிவு நாடகங்களும் அவளை எரிச்சல் அடையச் செய்தன. கடற்கரையில் தன்னந்தனியாகக் காலாற நடக்கும்போதுகூட, துப்பாக்கிச் சனியன்கள் அவள் பாதுகாப்பாயின. துய்ப்பிளக்ஸ் குவர்னர் என்றால், நான் அதில் பாதி. அதிகாரச் சுவருக்குள் அலங்கார பொம்மை அல்ல நான் என்ற முடிவுக்கு அவள் ஒரு நாள் வந்தாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்தக் காலத்தில் லஞ்சம், ஊழல் என்பதெல்லாம் அரசு அந்தஸ்தோடு விளங்கின. அதிலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மானுட சங்கல்பங்களை உலகுக்கு வழங்கிய பிரான்சிலா என்றால் நமக்கு வியப்பாகத் தோன்றலாம். பிரஞ்சுப் புரட்சிக்கு முந்தியவள் ழான். அதோடு, பின்வந்த காலனிய வாதிகள், அந்தத் தத்துவங்களை பிரஞ்சு நாட்டு எல்லைக்குள் முடக்கிக் கொண்டார்கள். காலனி நாடுகளில் மிக மோசமான ஆதிக்கச் சக்திகளாகவே இருந்தார்கள். பிரான்ஸ் தேசத்தில் முக்கிய, அ-முக்கியப் பதவிகள் எல்லாமும் ஏலத்துக்கு விற்று அதிகப் பணம் தருவோரே பதவியில் அமர்த்தப்பட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மாநிலத்தில் கோர்த்தியேவாக, மிக முக்கிய அரசுப் பொறுப்பில் இருந்த கனகராயமுதலி, காலம் பண்ணிப் போனார். ஒரு பெரிய அறுவடை பூமியாயிற்று புதுச்சேரி. ஏற்கெனவே, துணை கோர்த்தியே வாக-துபாஷியாக-குவர்னருக்கு நெருக்கமான ஆனந்தரங்கப் பிள்ளைக்கே அந்தப் பதவி போய்ச்சேரும் என்றே அரசியல் வட்டாரம் நினைத்தது. ஊடாக, அன்னபூர்ண ஐயன் என்கிற வைத்தியன் புகுந்து, ழானைச் சந்திக்கிறான். அவளுக்கு 1500 வராகனும் (1 வராகன்- 3 ரூபாய்), குவர்னருக்கு 5000 வராகனும் தருவதாகவும், அந்தப் பதவி தனக்கு வேண்டும் என்கிறான். செத்துப்போன கனகராய முதலியின் தம்பி சின்ன முதலியும் அந்தப் பதவிக்குப் பணம் தரத் தயாராகிறான். ழான், மிக புத்திசாலித்தனமாக யோசிக்கிறாள். பதவியின் 'விலை'யை ஆனந்தரங்கப் பிள்ளையிடம் இவ்வாறு சொல்லிக் கொக்கி போடுகிறாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'அந்த அன்னபூர்ண ஐயனுக்கு வாணிபம், நிர்வாகம் போன்ற எதிலுமே அனுபவம் இல்லை. நீயானால் இந்த உத்தியோகத்தில் சின்னப் பிள்ளையாயிருந்து எங்கள் கையின் கீழ் பழகினவன். . . நீ எனக்குப் பிள்ளை. துரையும் உன்னைப் பிள்ளையாக நினைத்தே என்னிடம் கெட்டியாகச் சொன்னார்' என்பதாகச் சொல்லி, பிள்ளையை ஆராய்கிறாள் ழான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'காசு சத்தம் கேட்டாலே அம்மாள் வாயைத் திறக்கிறாள்' என்று பிள்ளை (தன் டைரியில்) எழுதுகிறார். குவர்னர் துரை வாங்கலாம். துரைசானி லஞ்சம் வாங்கக் கூடாதா என்பது ழானின் கேள்வியாக இருந்தது. ஆனந்தரங்கர், குவர்னருக்கு மட்டுமல்லாமல் தனக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் ழான். கனகராய முதலி வாரிசில்லாமல் செத்துப் போக, அவர் சொத்துக்கு மனைவி, மருமகள், தம்பி என உறவுகள் எதிர்பார்க்க, சொத்துகளைத் தன்பக்கம் வளைத்துக் கொள்ள பெரு முயற்சி எடுத்து வெற்றியும் பெறுகிறாள் ழான். அரசாங்கத்தின் முக்கிய அச்சாணியாகவும் பணி ஆற்றுகிறாள். பிரஞ்சியர்க்கும் ஆங்கிலேயர்க்கும் விளைந்த யுத்தத்தின் போது, ஊரைவிட்டு ஓடிப்போன செட்டிகள், கோமட்டிகளின் வீடுகளில் தாழ்த்தப்பட்ட, வீடற்றவர்களைக் குடியேற்றுகிறாள் ழான். தனக் கென்று தனிப்படையே வைத்துக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறாள் ழான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துய்ப்பிளக்ஸுக்குப் பன்னிரண்டாவது குழந்தையைப் பெறுகிறாள் ழான். ஆண் குழந்தை. அது காலை நேரத்தில் பிறக்கிறது. கோயில் மணியோசை ஊரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மக்களுக்குச் சர்க்கரை விநியோகம் செய்கிறார் பிள்ளை. மாலை, மணியோசை துக்கத்தைக் கொண்டு சேர்க்கிறது. பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் இறந்து போகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சுமார் 12 ஆண்டுத் துரைத்தனத்துக்குப் பிறகு, பிரான்ஸ், துய்ப்பிளக்ஸைத் திருப்பி அழைத்துக் கொள்கிறது. வியாபாரம் செய்வதற்கு மாறாக, நாடு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டான் என்பது குற்றச்சாட்டு. நாடு பிடிக்கும் வியாபாரம் வெற்றி பெற்றிருக்கும் என்றால் பிரான்ஸ் அவனைப் பாராட்டி இருக்கும். துய்ப்பிளக்ஸ் வீழ்ந்த இடத்தில் கிளைவ் வெற்றி பெற்றான். ஏறக்குறைய ஒரு கைதியாகப் பிரான்சுக்குப் புறப்பட்டான் துய்ப்பிளக்ஸ். மகள்கள், மரு மகன்கள் ழானைத் தங்களுடன் வைத்துக் கொள்ளவே பிரியப்பட்டார்கள். ஆனாலும் கைதியுடன் தான் தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டாள் ழான். பிரான்சுக்குப் சென்ற ழான், அங்குள்ள குளிர் வாட்ட, மண் ஒட்டாமல் போக, வறுமை வந்தெய்த, நிராசையுடன் அங்கேயே தன் கடைசி மூச்சை விட்டாள். இறக்கும்முன், சில நாட்கள் முன்னர், புதுச்சேரியில் இருந்த தன் தோழிக்கு எழுதினாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'புதுச்சேரி மண்ணில் இறந்து, அங்கேயே புதைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். அது நடக்காது என்றே தோன்றுகிறது'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ழான் ஆசை நிறைவேறவில்லை. சரியாக ஐம்பது ஆண்டுகளே மண்ணில் வாழ்ந்தாள், அவள். ஆண்களால் மட்டுமே நிரம்பி இருந்த அரசியல் களத்தில் தனக்கான இடத்தைக் கடும் பிரயாசையுடன் ஏற்படுத்திக் கொண்டவள் அவள். அவள் அரசியல் பிழைத்தாள் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். முதலிலும் இடையிலும் கடைசியிலும் தப்பாகவே ஆகிப்போன அரசியலில் அவள் மட்டுமே பிழை செய்தாள் என்பது எங்ஙனம் சரி? அவள், அவள் விருப்பப்படி வாழ்ந்தாள். தனக்கான தடத்தைத் தானே தேடினாள். தனக்கான கூட்டைக் கட்டினாள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வாழ்க்கை அவளுக்காகத் தரப்பட்டது. அதை முழுதுமாகவே அவள் வாழ்ந்தாள். அப்புறம் என்ன?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த பெண், மார்க்கெரித் துராஸ். பிரஞ்சு மொழியில் எழுதிய 'காதலன்' நாவலில் இடம் பெறும் அந்த 'அவள்'. பிரஞ்சு மூலத்திலிருந்தே தமிழ் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. உலகம் முழுதும் சுமார் 40 மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்ட நாவல் இது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆசிரியை மார்க்கெரித் துராஸ், 1996 வரை வாழ்ந்தவர். வாழ்வின் கடைசிப் பகுதியில் மிகுந்த புகழோடு, நிறைய மர்மப் பூச்சுகளைப் பூண்டவராக விளங்கியவர். தீவிரமான அரசியல் ஈடுபாட்டுக்கும் செயல்பாட்டுக்கும் இவர் பேசப்பட்டிருக்கிறார். பிரான்சின் அனைத்து அரசியல், கலாச்சாரப் போராட்டங்களிலும் அழுத்தமாகப் பங்கெடுத்துக் கொண்டவர். பிரான்ஸ், ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்குள்ளானபோது தலைமறைவு வாழ்க்கையை மேற் கொண்டு நாஜிகளுக்கு எதிராக இயங்கியவர். மே 68 மாணவர் போராட்டம், அல்ஜீரியா நாட்டின் விடுதலை ஆதரவுப் போராட்டம், தீவிரப் பெண்ணியம் என்று இவர் வாழ்க்கையை அடர்த்தி பண்ணிக் கொண்டார். கீழைத் தேசத்தை நேசித்த பெண்மணி. கங்கையையும், கல்கத்தாவையும் எழுதி இருக்கிறார். துராசின் நண்பரும், பிரான்சின் ஜனாதிபதியுமான மித்ரானிடம், ஒரு உணவு விடுதியில் உரையாடியபோது அவர் சொன்னார். 'மித்ரான். நான் இப்போ சாதாரணமானவள் இல்லை. உன்னைக் காட்டிலும் நான் பெரியவள். உலகம் என்னை அறியத் தொடங்கி இருக்கிறது.’ என்றபோது மித்ரான் 'அதிலென்ன சந்தேகம். உன் மரியாதை பற்றி நான் ஆச்சரியப்படவில்லை' என்றார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துராசின் எல்லாப் படைப்புகளுமே தன் வரலாறு வகையைச் சேர்ந்தவை. அந்த வரலாற்றைச் சொல்ல அவர் தேர்ந்தெடுத்த வசீகரமான மொழியும், விசித்திரச் சொப்பனம் காணும் பாத்திரங்களும் அவர் படைப்புகளைத் தரப்படுத்தி இருக்கின்றன. ஒற்றைத் திறப்பு அல்லாது, பாத்திரங்களின் பல கதவங்களைத் திறக்கிற நுட்பம் அவருக்கு இருந்தது. ஒன்றைச் சொல்லும்போதே பல அடுக்குகளையும் வெளிச்சப்படுத்திக் கொண்டே நகரும் எழுத்துப்போக்கு துராசுடையது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனிதப் புரிதலில், 'முழுமை' என் பதில் அறவே நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் துராஸ். தத்தளிப்பவர்கள், கனவுலகவாசிகள், நீர்த்த கற்பனையில் மிதப்பவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள், விட்டேற்றியான வழிப்போக்குப் பயணிகளின் மனோபாவக்காரர்கள், உறுதி என்பதை அறியாதவர்கள் என்பவர்களே துராசின் பாத்திரங்கள். உண்மை என்பது ஒன்று இல்லை ஆதலால், உண்மை என்பது போன்ற ஒன்றைக் கட்டமைக்கிறவராக இருக்கிறார் துராஸ். தான் அறிந்த 'உண்மையை', மொழிக்குக் கொண்டுவரச் சிரமப்படுபவர்போல நடிக்கிறார் துராஸ். எதிர்காலத்தில் எழுத்து எப்படி இருக்கும் என்பது பற்றித் துராஸ் இப்படிச் சொல்கிறார். 'எதிர் காலத்தில் எழுத்தென்பது எழுதப்படாததாக இருக்கக்கூடும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. மிகச்சுருக்கமாக இலக்கணம் இன்றி சொற்களை மட்டும் நம்பி எழுதப்படும். இலக்கணம் மறுக்கும். அலைக்கழிக்கும் சாத்தியங்களுடன் இருக்கும்'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதலன் 1984-இல் பிரசுரமாயிற்று. பதினாறு வயதுகூட நிறையாத ஒரு பெண்ணுக்கு அவளை விடவும் இரு மடங்கு வயதான ஆணுடன் காதல் ஏற்படுகிறது. அவன், பணக்கார சீன இளைஞன். அவள், வியட்நாமில், பிரஞ்ச் ஆதிக்கத்துக்குப் பட்ட பூமியில் பிறந்து வளர்பவள். ஏழை. அல்லது தேவைகள் பூர்த்திசெய்து கொள்ள முடியாத சூழல் உள்ள குடும்பம். இருவருக்குமான 'காதல்', நிகழ்காலம் தொடங்கிக் கடந்த காலத்துக்கும் பின்வாங்கிச் சொல்லப்படுகிறது. இருவருக்குமே இக் காதல் 'கைகூடாது' என்பது தெரியும். அவளுக்கு அவன் தான் முதல் அனுபவம். அவனுக்கு அது உண்மையான முதல் காதல். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'கை கூடாது' என்பதுதான் என்ன? காதல் என்பது முறையாக, திருமணத்தில் பழுத்து, குடும்பத்தில் நிலை பேறுடையது என்பதாகக் கருதுவதையே கைகூடுதல் என்று கருதப்படக் கூடியது. இவ்வாறு நலமோங்கும் விதத்தில் அதன் வளர்ச்சிப் போக்காக அமையாதது, திரளாதது, கைகூடாதது. துராஸ், கைகூடாமல் போனால் என்ன போயிற்று என்கிறார். சூரியன் அஸ்தமனம் நின்றுவிடுமா என்கிறார் அவர். புத்திக்குள் ஏன் இந்த நிறுவனச் சிலுவைகளைச் சுமக்கிறீர்கள் என்கிறார் துராஸ். நியாயம்தானே?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துராசின் காதலன் நாவலில் வரும் அவள், அந்த அந்தக் கணத்தில் வாழ்பவள். அவனுக்கு அருளப்பட்ட அற்புதம் எனத்தக்க வாழ்வின் கணங்களின் முழுமையில் தன்னைக் கரைத்துக் கொள்கிறாள். அவள் தன் அனுபவங்களைச் சொல்வதாக, தன்மை இடத்தில்வைத்து நிகழ் காலத்தையும் கடந்ததையும் இணைத்துச் சொல்லுவதாக நாவல் நிகழ்கிறது. நாவல் இப்படித் தொடங்குகிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ஒரு நாள் வளர்ந்து பெரியவளாக இருந்த காலம். பொது மண்டபமொன்றில் நின்று கொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், 'வெகுநாட்களாக உங்களை அறிவேன். பலரும், நீங்கள் இளவயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ இப்பொழுதுதான் உங்கள் முகம் அழகாயிருக்கிறது. அதைச் சொல்லவே வந்தேன். உங்கள் இளவயது முகத்திலும் பார்க்க, சோபையற்றிருக்கும், இப்போதைய முகத்தை விரும்புகிறேன்' என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை. இருந்தால்தானே சொல்ல. மையம் என்ற ஒன்றை ஒரு போதும் கண்டதில்லை' எனச் சொல்லும் அவள், தொடர்கிறாள். ‘என் பதின்பருவத்துக் காலங்களான பதினெட்டும் பதினைந்தும் என் கண்முன்னே விரிகின்றன. தெரிகிற முகம் பின்னர் (அதாவது எனது நடுத்தர வயதில்) குடித்துச் சீரழியவிருந்த எனது முகத்தை ஓரளவு முன்கூட்டியே தெரிவிக்கும் முகம். கடவுளால் நிறைவேற்ற இயலாத பணியினை மது முடித்து வைத்தது. என்னைக் கொல்லும் பணியையும் மது ஏற்றிருந்தது’ என்று விசாரத்துக்குள் புகுகிறாள் துராசின் கதை நாயகி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போது அந்தப் பெண்ணின் முகம் சுமாராக, கதாநாயகித்தனம் இல்லாத விதத்தில் தட்டுப்பட்டிருக்கும். அவள் தன் அம்மாவிடம், 'தான் எழுதப்போவதாகச் சொல்கிறாள். அம்மா மௌனம் காத்தாள். பின், 'என்ன எழுதப்போகிறாய்' என்கிறாள். அவள் 'புத்தகங்கள், நாவல்கள்' என்கிறாள். அம்மா முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, தடித்த குரலில் 'முதலில் கணக்கில் பட்டம் பெற்றாகணும். பிறகு உனது விருப்பம் போல் எதையாவது எழுதித் தொலை' என்கிறாள். எழுத்தின்மேல் இப்படியான 'கரிசனம்' உலகம் முழுதும் இருக்கிறது போலும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நமது அவளின் ஆசிரியர், அவள் அம்மாவிடம், அவள் பிரஞ்சுப் பாடத்தில் முதலாவதாக வந்திருப்பதைச் சொல்கிறாள். அம்மா அமைதியாக இருக்கிறாள். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. நமது கதாநாயகி இப்படி எழுதுகிறாள். 'பிரஞ்சுப் பாடத்தில் முதலாக வந்திருப்பது அம்மாவின் ஆண்பிள்ளைகள் அல்லவே!'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆண்களுக்கான தொப்பியை அவள் அணிய நேர்கிறது. அதற்கும் வீட்டு வறுமைக்கும் சம்பந்தம் இருக்கிறது. அம்மாவைச் சுற்றி இருப்பது வறட்சியும் பாலையும். அவள் பிள்ளைகள் பாலை நிலமே, எஞ்சி இருப்பது பெண் மட்டுமே. அனேகமாக பணத்தை எப்படி வீட்டுக்குக் கொண்டுவருவது என்பதை அவள் புரிந்து கொள்ளலாம். ஒரு வேளை அதற்காகத்தான் அம்மா தன் மகளை வேசிக்கோலத்தில் வெளியில் அனுப்புகிறாளோ என்னவோ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் முதல் முறையாக ஆணை அறிந்த அந்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறாள். ஒரு பெண்ணின் பார்வை மட்டுமல்ல. ஒரு ஐரோப்பியப் பெண், ஒரு சீனனை ஏற்றுக் கொண்ட விதம் பற்றியும்கூட. அவள், தான் ஒரு பிரஞ்சுக்காரி என்பதை ஏனோ மறப்பதே இல்லை. 'தனது சொகுசுக் காரிலிருந்து மிடுக்குடன் ஒருவன் இறங்குகிறான். இங்கிலீஷ் சிகரட் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆண்கள் தொப்பியும், மின்னும் காலணியுமாக நிற்கும் சிறுமியைப் பார்க்கிறான். அவளை நோக்கி நடந்து வருகிறான். அவன் தயங்குவதுபோலத் தெரிந்தது. அவனது கை நடுங்குகிறது. சிகரட்டை நீட்டுகிறான். சைகோனில் இருக்கிற வீட்டுக்கு வருகிறாயா என்கிறான். அவள் மறுக்கவில்லை. கறுப்புநிற வாகனத்துக்குள் அவள் நுழைகிறாள். வாகனத்தின் கதவு மூடிக் கொள்கிறது. திடுக்கென்று மெலிதான ஒரு துயரம் அவளைச் சூழ்கிறது. ஒருவித அயற்சி, மெல்ல மெல்ல நதிமீது பரவி இருந்த வெளிச்சம் மங்கி வருவதுபோலத் தோற்றம். . நதியெங்கும் மூடுபனி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த நிகழ்வுக்குப் பின்னர், அவள் நினைவுகள் இப்படிச் செல்கின்றன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'இனி உள்ளூர் மக்களுடன் பேருந்தில் பயணிப்பது நின்று போகலாம். விடுதியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்குப் போகவும் வரவும் சொகுசு வாகனம் ஒன்று வைத்துக் கொள்வேன். இரவு உணவுக்கு, நகரத்தில் உள்ள மிகவும் ஆடம்பரமான இடங்களுக்குச் செல்லக்கூடும்.. . .'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு வியாழக்கிழமை அவன், பின் நேரம் விடுதிக்கு வந்திருந்தான். அவளைத் தன் கறுப்பு நிற மோட்டார் வாகனத்தில் அழைத்துப் போனான். அவனது இருப்பிடம் நவீனமாக இருந்தது. தனி அறை. போதிய வெளிச்சம் இல்லை. ஜன்னலைத் திறக்கச் சொல்லவில்லை அவள். சூழலுக்கு இணங்கும் பக்குவம். நிராகரிக்கும் மனம் இல்லை. அவன் உடலில் நடுக்கம். அவன் அவள் கருணையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவளுக்கு மகிழ்ச்சி தந்திருக்கக்கூடும். உன்னை வெறித்தனமாக நேசிக்கிறேன் என்று முணுமுணுக்கிறான். இவள் 'உன்னிடத்தில் அப்படி ஒன்றும் பிரியம் இல்லை' என்று சொல்ல வேண்டும். ஆனால் சொல்லவில்லை. ஒன்று புரிகிறது அவனுக்கு. அவளை அவனுக்குப் புரியாது. இப்போது மட்டும் அல்ல. ஒரு போதும் அவளைப் புரிந்து கொள்ள அவனால் முடியாது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் அவனிடத்தில், 'என்னை நீ விரும்பித்தான் அழைத்து வந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பிற பெண்களை நீ எப்படி நடத்துவாயோ, அப்படியே என்னை நீ நடத்தலாம். அதற்கு என்னை நீ விரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை' என்கிறாள். அவன் முகம் வெளிறுகிறது. அவன் மிக நெருக்கடிக்குள்ளானான். அவர்கள் அவர்களுக்கிடையில் எழுந்து நிற்கும் பருத்த முரண்களுக்கிடையே, தூர தூரங்களுக்கிடையே உரையாடலை, பெரும்பாலும் மாற்று வார்த்தைகளில் நிகழ்த்திக் கொள்கிறாள். 'தயவு செய்து உடனே ஆரம்பி' என்கிறாள் அவள். &lt;br /&gt;&lt;br /&gt;அவன் பரவசம் கொள்கிறான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அவள் குடும்பத்து நிலைக்கு வருந்துகிறான். அது தேவை இல்லை என்கிறாள் அவள். அவன் பணம் தருகிறான். வாங்கிக் கொள்கிறாள். . .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளுக்குப் பணம் தேவைப்படுகிறது உண்மைதான். ஆனால், பணம் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் இல்லை. இருவருக்கும் இடையே காதல் இருந்ததா என்றால் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லலாம். அவன் அவளது கருணையை எதிர்பார்த்தே இருந்தான் என்பது மட்டும் உண்மை. நமது அவளை இன்புறுத்துவது இந்த நுட்பம்தான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்தக் காதல், உண்மையில் விருப்பத்தின் அடிப்படையில் எழுந்தது அல்ல. வெறுப்பில், பரஸ்பரம் வெறுப்பில் எழுந்தது என்று சொன்னால், அது பெரும்பாலும் உண்மை ஆகலாம். அவளுக்கு அவன் கறுப்பு நிற சொகுசுக் கார் பிடித்திருந்தது. அவன் படுக்கை சுகமாக இருந்தது. அவன் அழைத்துச் செல்லும் இரவு உணவு விடுதிகள் பிடித்திருந்தன. எல்லாமும் பிடித்திருந்தன. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் அவளுக்காக உருகுவதாகச் சொல்கிறான். அப்படி ஒன்றும் இல்லை. அவள் இடத்தில் வேறு அவள்கள் இருந்தாலும், அவன் அப்படி உருகி இருப்பான். அவனுக்கு அவன் மேல் அப்படியான சாய்வு எதுவும் இல்லை.&lt;br /&gt;&lt;br /&gt;நாவல் முழுக்க, பச்சையான மனித மாமிச வாசனை, எந்த மணப்பூச்சும் இல்லாமல் விசுகிறது. ஆண் பெண் உறவின் நுட்பத்துக்குப் புதுப்பரிமாணம் தந்த நாவல் இது. நமது கதை நாயகி அவள், எந்தக் காதல் கதைக்கும் உகந்தவள் இல்லை. அவள் அவளாக மிக இயற்கையாக இருக்கிறாள். அது அவளது பலம் என்றாலும் சரி, பலவீனம் என்றாலும் சரி, இரண்டுக்கும் அவள் பொறுப்பானவள் இல்லை. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவளும் சரி, ழானும் சரி இரு வருமே பிரஞ்சு மண்ணில் இருந்து வந்தவர்கள். இருவருக்கும் இடையே 300 ஆண்டுகள் பாரதூரம் இருக்கிறது. என்றாலும் எலும்பும் சதையுமாக நமக்குத் தென்படுகிறார்கள். வாழ்க்கை, இதுகாறும் இலக்கியம் காணாத, கண்டு முடிக்காத, இன்னும் இருளிலேயே உலவுகிற, வெளிச்சம் காணாத மனிதச் சுரங்கங்களைக் கொண்டே இருக்கிறது. தரிசிக்கும் கண்களுக்கு எப்போதாவது அவர்கள் தட்டுப்படுகிறார்கள். மாறுபடுகிறவர்களால்தான் உலகம் முன்னோக்கி அடி வைக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஓவியங்கள் : ஆ.விஜயகுமார்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-5572788045842783833?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/5572788045842783833'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/5572788045842783833'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/10/prabanchan-two-ladies.html' title='Prabanchan. Two ladies.'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-2588189656335084335</id><published>2011-10-09T04:04:00.000-07:00</published><updated>2011-10-09T04:07:11.811-07:00</updated><title type='text'>Mathu.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;Prabanchan.&lt;br /&gt;மது நமக்கு மது நமக்கு மது நமக்கு உலகெலாம்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எழுதப்பட்ட வரலாறு தொடங்கும் காலத்துக்கு முன்பிருந்தே, நாங்கள் மது அருந்தி வாழ்ந்து வந்திருக்கிறோம். நாங்கள் என்பது புதுச்சேரி (பாண்டிச்சேரி என்பது தவறான வழக்கு) மக்களை உணர்த்துகிறது என்று கொள்க. தமிழ்நாடே வறண்டு கிடந்த, மதுவிலக்கு எனும் மூடத்தனமான சட்டங்கள் அமலில் இருந்த காலத்தில் நாங்கள் மது என்கிற அர்த்தத்தினால் வாழ்வைச் செறிவூட்டிக் கொண்டிருக்கிறோம். பூக்கள் என்கிற அதிசயத்தை ரசிக்கத் தெரியாதவர்களே, குழந்தைகள் என்கிற அபூர்வத்தை உணரத் தெரியாதவர்கள், கோழிக்குஞ்சுகளை, ஓடும் நதியை, எதையெதையோ மொழிந்து கொண்டிருக்கும் மலைச் சிகரங்களை, ரகசியங்களை மௌன வெளிகளில் முணு முணுத்துக் கொண்டே இருக்கும் காடுகளை நேசிக்கத் தெரியாதவர்கள், ஒரு அழகிய சம்போகத்தை நிகழ்த்த முடியாத உள்ளீடற்ற வெற்று மனிதர்களே மதுவை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் ஒரு பிரஞ்சுக் கவிஞர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரான்ஸ் தேசத்தோடு தொடர்பு கொண்டிருந்த, அழகிய பிரஞ்சுக் கலாச்சாரத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்ட பல நூறு பிரஞ்சுக் குடும்பங்களைக் கொண்ட ஞானபூமி எங்கள் புதுவை. ஓரிரண்டு பத்து ஆண்டுகளுக்கு முன்னால், அக்குடும்ப நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால், அங்கே இருக்கும் முசியோவோ, மதாமோ நம்மிடம், 'முசியோ / மதாம், எது உங்களுக்கு உவப்பு, தண்ணீரா, சோடாவா' என்று கேட்கிற இன்னோசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். பூத்தையில் போர்த்திய சௌகரியமான இருக்கைகளில் நாம் அமர்ந்த பிறகு, நம்மை நோக்கி, தட்டில் உட்கார்ந்து வரும் நீலகண்டப் பறவை மாதிரி, மதுரம் நம்மைத் தேடிவரும். மது என்ற ஆச்சரியத்தைக் கண்டுபிடித்த உலகத்தின் அந்த ஆதி விஞ்ஞானியை நீங்கள் நினைக்க மறக்காதீர்கள் என்றால், சொர்க்கத்தின் கதவுகள் உங்களுக்கு ஒரு போதும் திறக்காது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மது என்ற முறையில் நான் முதலில் அருந்தியது தென்னங்கள்ளைத் தான். தாய்ப்பாலுக்கு அடுத்தது தென்னங்கள்தானே? துரதிருஷ்டம் பிடித்த தமிழ்நாட்டிலிருந்து பலரும் வந்து எங்கள் (அக்காலத்து) சத்திரம் போன்ற வீட்டில் தங்கி, கள் குடித்து விட்டுச் செல்வார்கள். அவர்களின் வைத்தியர்கள், தினம் ஒரு மரத்துக் கள்ளாகக் குடித்து வந்தால், ஒரு மண்டலமோ, அரை மண்டலமோ (ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள்) கள்ளைப் பாவித்து வந்தால், மேனி புடமிட்ட பொன்னாகும் என்று சொல்லி இருப்பார். அதாவது ஒரு தென்னையிலிருந்து வடிந்த ஒரு மரத்துக் கள். காலை, மாலை இருவேளை பாவிக்க. 'கோல் கொண்டு முக்காலோடு நடந்து வந்த கிழம் கூட, வேட்கொண்டு களம் நோக்கி விரைந்து செல்வாரே, கள்ளுணர்ந்து குடித்தோரே' என்று யாரோ ஒரு பாரதி பாடியதாக ஒரு கள்ளன்பர் எனக்கும் சொல்லி இருக்கிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உடம்பைப் பொன் செய்ய வரும் முக்கிய உறவினர்களைத் தோப்புக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கிராமணிகள் யாரையேனும் கள் வடித்துத் தரச் சொல்லி, அவரைக் குடிக்கச் செய்து, பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பு எனக்களிக்கப்படும். வழிகாட்டியாக இருப்பது எனக்கும் பிடிப்பதில்லையானாலும் தென்னந்தோப்பில் மரங்களின் கீழ், ஓலைகளின் கூச்சல்களைக் கேட்டுக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கும். தோப்பில், சூரியனைக் கீழே விழாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தென்னைகள். அதனாலேயே, மண் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தரையில், விழுந்து உருளும் சின்னக் கால்பந்து போல இருக்கும் குரும்பிகள் எனக்கு விளையாட்டுப் பொருள். கள் மணக்கும் காற்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு தஞ்சாவூர் உறவினர், "நீயும் கொஞ்சம் குடியேன்டா" என்றார். கிராமணியைப் பார்த்து, "இவனுக்கும் கொஞ்சம் கொடு" என்றார். நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. புதிய மொந்தையொன்றில் கள்ளை ஊற்றிக் கொடுத்தார் அவர். கள் மட்டுமல்ல, அது வார்க்கப்படும் பாத்திரமும் மிக முக்கியம். அக்பர் குடித்த பொற்கோப்பைகளில் கள்ளை நீங்கள் ஊற்றிக் கொடுத்தாலும் கூட நான் மண்ணால் ஆன மொந்தையைத்தான் விரும்புவேன். மண்ணுக்குள் வேரோடி நாகலோகத்திலிருந்து தென்னை கொணர்ந்து தரும் கள்ளை, மண்ணால் ஆன பாத்திரத்தில் அல்லவோ அருந்த வேண்டும். தென்னையை நன்றி மறவா மரம் என்கிறாள் அவ்வை. நமக்கு வேண்டாமா நன்றி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எட்டாம் வகுப்பு வரும்போது,கள் பற்றிய ஞானத்தை நான் எய்திவிட்டேன். கள்கள் மூன்று. ஒன்று தென்னங்கள், இரண்டு பனங்கள், மூன்று ஈச்சைக்கள். தென்னைக் கள், வைகறைக்குப் பிறகான காலத்துக்கு மிக சிலாக்கியம். மதியத்தை நெருங்கும் வேளை மிக உன்னதம். போதை, செங்குத்தாக, மலை ஏற்றக்காரர்களைப் போல தாவித் தாவி எகிறும். தென்னங்கள்ளை அருந்திவிட்டு, கப்பி ரஸ்தாவுக்கு வருவது போலப் பாவம் உலகில் வேறு ஏதும் இல்லை. தென்னை ஓலை உங்களுக்குச் சாமரம் வீசும். நீங்கள் ஆணாக இருந்தால், மரங்கள், பெண்ணாக தீட்சை பெறும். பெண்ணாக இருந்தால் மரங்கள் யுவர்களாகும். அரவாணியாக இருந்தால், நீங்கள் தேர்வு செய்யும் பாலாகவோ அவை மாறும். உங்கள் தேர்வு உங்களுடையது. தென்னங்கள், வெளியே இருக்கும் உங்களை உள்ளே கொண்டு சேர்க்கும். சுருதியோடு இழையும் சுத்த சங்கீதத்தை நீங்கள் அப்போது உணர்வீர்கள். பனங்கள், இருள் புலராத, கதிர் உதிக்கும் முன் அருந்த வேண்டி வஸ்து. மத்திய வயது நரைமுடி என ஒளியும் இருளும் பிணைந்த பொழுதில் அருந்தத் தொடங்குவது மிக உத்தமம். பனங்கள்ளுக்கும் சூரிய உதயத்தில் ரேகைகளுக்கும் நுணுக்கமான உறவுண்டு. காலை வெயில் ஏற ஏறப் போதை ஏறிக் கொண்டிருக்கும். பனங்கள், 'கோமூத்ரி' போதைத் தன்மையைக் கொண்டதாம். மகான்கள் சொல்கிறார்கள். 'கோமூத்ரி' என்பது என்னவோவெனில் நடக்கும் மாட்டின் மூத்திரம் மண்ணில் படிகிற வடிவு. வளைந்து, வட்டமிட்டு, மேலேறும் தன்மையது. பனங்கள் அருந்திய பிறகு, கடற்கரையில் உலவுவது சாலச் சிறந்தது. கேவலம் மனித ஜென்மங்களை, விசுவத்தோடு இணைக்கும் ஞானப்பால் பனையின் பால். ஈச்சை, மிக அருகியே நம் மண்ணில் காணப்படுகிறது. பாலையின் தோழன்/தோழி அது. மாலை நேரத்து பானம் அது. வீட்டில் இருந்து, பனங்கள்ளும் வாய்க்கப் பெற்றால், கசல் கேளுங்கள். பாகிஸ்தான் பாடகர்களுடைய கசல். இறைமையின் மிக அருகில் உங்களைக் கொண்டு வைப்பது ஈச்சைக் கள். அதோடு, உங்கள் காம வீரியத்தைக் குதிரையின் பக்கத்தில் கொண்டு சேர்க்கும் என்று விளம்பர வைத்தியர்கள் சொல்வார்கள். நம்பாதீர்கள். சிட்டுக் குருவி, குதிரை முதலான சமாச்சாரங்கள் எல்லாம், அந்தந்தச் சூழல், மனநிலை, உடல்நிலைகளைப் பொறுத்தவை. லேகியங்கள் புக முடியாத பிரதேசங்கள் அவை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒன்பதிலிருந்து பத்தாம் வகுப்புக்கு வருகிற, கோடை கால விடுமுறை ஒன்றின் போதுதான் முதன்முதலாக சாராயம் என்கிற மதுவை நான் அறிந்தேன். சுஜனரஞ்சனி என்கிற பழம் பெரும் பத்திரிகை நடந்த கட்டடத்தின் மாடி அறைகளில் ஒன்றில், பாரதிதாசனின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவரைப் பார்க்கச் செல்கிறேன். (அப்போது நான் கவியாக முயன்று கொண்டிருந்த காலம். அதற்கு இசைவாக காதல் ஒன்றில் தோல்வி பெற்றிருந்தேன். ஆகவே கவிதை எழுதத் தொடங்கி இருந்தேன்.) அக்கவி இன்றும் இருக்கிறார். புதுச்சேரியில் வரலாற்றுப் புகழ் பெற்ற உணவு விடுதி நடத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். அங்கு, தமிழகத்தில் மாபெரும் நகைச்சுவை நடிகரும், கலைவாணரும் ஆனவரின் மகனுமான என்.எஸ்.கே.கோலப்பன் இருந்தார். பாரதிதாசனின் எதிர்பாராத முத்தத்தில் (சினிமா பெயர் பொன்முடி) நடித்த கதாநாயகர் நரசிம்ம பாரதி இருந்தார். அந்தக் கலைக்குழுவில் பொடியன் நான் ஒருவனே. கவிஞர் ஒரு கண்ணாடிக் கிளாசில் புதுச்சேரிச் சாராயத்தை ஊற்றி, எலுமிச்சைப் பழம் பிழிந்து, 'சாப்பிடு' என்று சொல்லித் தந்தார். காரநெடியும், வினோதமான கசப்பும், எலுமிச்சைப் புளிப்பும் இணைந்து வினோதமாக இருந்தது அந்தச் சரக்கு. பின்னாளில் தமிழ்நாட்டில் விற்ற 'கடா' மார்க் சாராயம் எங்கள் புதுச்சேரி சாராயத்துக்கு முன், ஒன்றுமே இல்லை. தமிழ்நாடு கடாதான். எங்களுடையது புலி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மீண்டும் ஒரு 'கிளாஸ்' எனக்கு அருளப்பட்டது. அருந்தினேன். வீட்டுக்குப் புறப்பட்டேன். அஜந்தா தியேட்டரில் கர்ணனும், ராஜா தியேட்டரில் வணங்கா முடியும். ரத்னா தியேட்டரில் விசுவரூபம் எடுத்து நின்றார் மாயாபஜார் கிருஷ்ணன். என்னுடைய பிரக்ஞையை மீறியே, என் உடம்பு கடிகாரப் பெண்ணுருவம் மாதிரி ஆடியபடி இருந்தது. கால்கள் என்கிற உடம்பின் உறுப்பு சாட்டின் துணி மாதிரி காற்றில் வெலவெலத்தது. தெரு விளக்குகள் மிகப் பிரகாசமாக எரிந்ததன் காரணம் விளங்கவில்லை. என் சுட்டு விரலால் காற்று வெளியில் ஏதோ எழுதிக் கொண்டே நடந்தேன். எதுவும் நடக்காமலேயே சிரிப்பு சிரிப்பாய் வந்து கொண்டிருந்தது. குடித்தது வெளியே தெரியக்கூடாது என்கிற அதீதப் பிரக்ஞையில் மிக நிதானமாக, நிமிர்ந்து நேராக நடந்து கொண்டிருந்தேன். எவனும் என்மேல் குறை காணமுடியாது. அவ்வப்போது என் நினைவுகளில் என் அப்பா வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். எங்கள் குலத் தொழிலே கள் விற்பதும், சாராயம் விற்பதும்தான். மூன்று கள்ளுக் கடைகளுக்கும் இரண்டு சாராயக் கடைகளுக்கும் சொந்தக்காரராக இருந்தவர்தான் என் அப்பா. அவர் குடித்ததே இல்லை. நான் குடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா. அதோடு, அவர் கைக்கு அசுர பலம் இருந்தது என் கேடு காலம். ஒருமுறை என்னை அவர் அறைந்ததில் அவர் விரலில் இருந்த மோதிரத்தின் வைரக்கல் தெறித்து விழுந்தது. அதையும் நானே தேடிக் கொடுக்கும் படியான துரதிருஷ்டம் நேர்ந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நடந்து கொண்டிருந்த என் முன், ஒரு சைக்கிள் வந்து நின்றது. மங்கலாக என் உறவினர் முகம் தெரிந்தது. அவர் சொன்னார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;"இப்படியாடா குடிக்கிறது. தெருகூட தெரியாமே, சாக்கடை மேலேயே நடக்கிறியே, ஓரமா நகர்ந்து தெருவிலே நட."&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவர் என்னைத் தெருவுக்குக் கொண்டு வந்து நிலை நிறுத்தினார். 'நேரா நடந்து போ' என்றார். வளைவுகள், திருப்பங்கள் அற்ற, பிரஞ்சுக்காரர் போட்ட அருமையான தெருவில் நடக்கத் தொடங்கினேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரண்டு, மது தொடர்பான பிரஞ்சுத் தொடர்புகள். ஒன்று எங்கள் ஊருக்கும் குறுகிய சில மாதங்கள் மது விலக்கு வந்தது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடந்த ஐயாயிர ஆண்டுக்கால எங்கள் ஈர வாழ்வில், ஆறு மாதங்கள் மட்டும் நாங்கள் வறட்சிக்கு ஆளானோம். பிரஞ்சு ஆட்சியின்போது, அந்தப் பதினெட்டாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் எங்கள் ஊர் தொடர்ந்த படையெடுப்பைக் கண்டது. படை வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கஜானாவில் காசு இல்லையென்றால், ராஜாக்கள் படையெடுப்பார்கள். அப்படி மராத்தியர்கள் எங்கள் ஊர்ப்பக்கம் வந்தார்கள். திருப்பாப்புலியூர் (கடலூர்), மஞ்சக்குப்பம், சிங்கிரி கோவில், அழிசப்பாக்கம் என்று எங்கள் ஊருக்கு எல்லை ஊர்களைக் கொள்ளை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம், மக்களிடம் ஒழுங்கு, கட்டுப்பாடு குழைந்து போய்விடக் கூடாதென்று காரணம் சொல்லி, அப்போதைய குவர்னர் துய்மா ஒரு சட்டம் போட்டான். 1741 பிப்ரவரி 28-ஆம் தேதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'வெள்ளைக்காரர், தமிழர், மற்றும் கறுத்த சனங்களுக்கு (Black Town) அறிவிக்கிறதாவது: மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரைக்கும் பிராந்தி, சாராயம், கோவை (கோவா) சாராயம், லிக்கர் சாராயம் (புதுச்சேரி சாராயம்), பத்தாவி (படேவியா) சாராயம், கொழும்பு சாராயம், பட்டை சாராயம் போன்றவற்றை விற்றாலும், விற்பித்தாலும் ஆயிரம் வராகன் அபராதமும் கொடுத்து ஒரு வருடம் காவலில் கிடக்கிறது. அவற்றை வாங்கிப் போகிறவனுக்குக் காலடியிலே கட்டி அடிச்சு வலது தோளிலே சுணக்கி நோய் முத்திரை போட்டு ஊருக்கு வெளியே துரத்தி விடுகிறது. தோட்டத்திலும் வீட்டிலும் தென்னை மரம் வைத்திருப்பவர்கள் எவருக்காவது கள்ளு ஒரு காசளவிலே வித்தாலும் விற்கச் செய்தாலும், யார் ஒருத்தர் குடிச்சாலும், குடிக்கச் செய்வித்தாலும் அவர்களுக்கும் முன்னே சொன்ன அபராதம் உண்டு'.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஆறு மாதம் மட்டுமே இந்தச் சட்டம் அமலில் இருந்தது. அதன்பின் எங்கள் வீர முன்னோர்கள் இச்சட்டத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிந்தார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மது ஒரு அற்புதம் என்றால், அதை அடக்கிக் கொள்ளும் பாட்டிலும் ஒரு அற்புதம்தான். அந்தப் பாட்டில்கள், எங்கள் ஊரை மராத்தியர்களிடம் இருந்து காப்பாற்றியதை நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று. மராத்தியப் படைத் தலைவன், ரகோஜி போஸ்லே புதுச்சேரியைச் சுற்றிக் கொண்டு குவர்னர் துய்மாவுக்கு (Dumas) ஒரு கடிதம் அனுப்புகிறான். ஆற்காடு நவாப்புக் குடும்பத்தார், குறிப்பாக சந்தாசாகிப்பின் மனைவியும், மகனும் உங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்களையும், அவர்கள் புதுச்சேரி வரும்போது கொண்டு வந்திருக்கிற நகைகள், தங்க, வைர அணிகலன்கள், தங்கக் காசுகள், குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் அனைத்தையும் எங்கள் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லையெனில் புதுச்சேரி ஜனத்தொகையை விட அதிகமான எங்கள் படை ஊருக்குள் நுழையும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துய்மாவிடம் படை பலம் இல்லை. நெஞ்சில் நேர்மையும், துணிவும் மட்டுமே அவனிடம் இருந்தன. பிரஞ்சு புதுச்சேரியின் சிறந்த மூன்று குவர்னர்களில் அவன் ஒருவன். அவன் பதில் கடிதம் எழுதினான். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'.... பல ஆற்காட்டு நவாப்புகள் பிரஞ்சுக்காரர்களிடம் நட்பு பாராட்டி நண்பர்களாக இருந்துள்ளார்கள். அந்த நட்பை முன்னிட்டு ஆபத்துக் காலத்தில் எங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளார்கள். நண்பர்கள் உதவி கேட்டு வரும்போது, கதவை அடைப்பது மனித தர்மம்தானா? என்னிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்றால், எங்கள் பேரரசர் பிரஞ்சு தேச மாமன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்றே அர்த்தம். அவருக்குமானக்குறைவு ஏற்படுத்தும் காரியத்தை நான் செய்யமாட்டேன். தோஸ்த் அலியின் விதவையும், சந்தா சாயபுவின் மனைவியும், மகனும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் வெளியேற்ற முடியாது. புதுச்சேரியில் இருக்கும் கடைசிப் பிரஞ்சுக்காரனின் கடைசித்துளி ரத்தம் மண்ணில் விழும் வரைக்கும், கடைசிப் பிரஞ்சுக்காரன் உயிருடன் இருக்கும் வரைக்கும் அடைக்கல மனிதர்களை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் . . .'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இந்த வீரம் மிகுந்த பதில், ரகோஜி போஸ்லேவுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. சந்தா சாகிப்பின் குடும்பம் மட்டுமல்ல, துய்மாவின் அலட்சியத்து அபராதமாக ஆறு கோடி ரூபாய் அபராதமும், ஆண்டு தோறும் பிரஞ்சு அரசு கோடிக்கணக்கில் தமக்குக் கப்பம் கட்ட வேண்டும் எனச் சொல்லி, ஒரு தூதுவரையும் அனுப்பி வைத்தேன். மராத்தியத் தூதுவரை மிக மரியாதையுடன் வரவேற்ற துய்மா, அவரைச் சிறப்பாக நடத்தி தன் படைக்கலச் சாலையை அவருக்குக் காண்பித்தான். துப்பாக்கிகள், பீரங்கிகள், படை அணிவகுப்பையும், ராணுவ ஒழுங்கையும் கண்ட தூதுவர் மனநிலை மாற்றம் அடைந்தது. அவர் விடைபெறும்போது, ரகுஜி போஸ்லேவுக்கு மரியாதை நிமித்தம் 10 ஐரோப்பிய மது பாட்டிலையும் கொடுத்து அனுப்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;கதையின் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறோம். அந்த பாட்டில் மதுவை ரகுஜி தன் அன்புக்குரிய &lt;br /&gt;&lt;br /&gt;மனைவியுடன் பகிர்ந்து கொண்டான். மராத்திய வரலாறு அவளைப் 'பேரழகி' என்று சொல்கிறது. அந்தப் பேரழகி, அத்தனை பாட்டில்களையும் அனுபவித்து அருந்தி முடித்து 'இன்னும் வேண்டும்' என்றாள். ரகுஜிக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. விரோதியிடம் பாட்டில் கேட்பதா என்பது அவன் பிரச்சினை. ஒரு பக்கம் பேரழகி. மறுபக்கம் கௌரவம். எது வெல்லும்? எது வென்றிருக்கிறது? அதுதானே வென்றிருக்கிறது. அந்த இல்லாத, இருப்பது போல் இல்லாத, ஆனால் இருக்கிற, சூன்ய மாயும், சேதன மாயும், அசேதனமாயும், மாயமாயும், ரூபமாயும் நிலைபேறுற்ற அதுதான் கடைசியில் வென்றது. 'சந்தா சாயுபு மனைவியா, மகனா, பணமா, இதெல்லாம் என்ன' என்றான் ரகுஜி. துய்மா மிக அன்புடன் முப்பது பாட்டில்கள் - அன்புடன்தான்- அனுப்பி வைத்தான். ரகுஜி, கொள்ளை அடிக்க வேறு பக்கம் நகர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முப்பது பாட்டில்களும் தீர்ந்த பிறகு, அந்தப் பேரழகி என்ன செய்து அவன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டாள், என்பதை எந்த சரித்திர ஆசிரியனும் எழுதி வைக்கவில்லை. யுத்தங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். பாட்டில்கள் தீர்த்து வைக்கின்றன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்நாட்டில் நிலவி இருந்த மது விலக்கு, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டது. மதுக்கடை மீண்டும் தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட அந்த நள்ளிரவில், நான் தஞ்சாவூரில் மாணவனாக இருந்தேன். தஞ்சைப் பழைய பேருந்து நிலையத்து அருகில், இன்று ஆரிய பவன் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி, சாராயக் கடை திறக்கப்பட இருந்தது. நானும் பிரகாஷும் அந்தச் சொர்க்க வாசல் திறப்பைக் காணக் காத்திருந்தோம். பிரகாஷ் குடிக்க மாட்டார். நானும் பிரடரிக் சுந்தர்ராஜன், இருளாண்டி, தஞ்சை மோகன் முதலான நண்பர்களும் நின்றிருந்தோம். ரஜினி திரைப்படத் தொடக்கக் காட்சி போல் மக்கள் குழுமி இருந்தார்கள். கடை, சீரியல் விளக்குகளாலும் மல்லிகைச் சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாழியாக நாழியாக கூட்டம் எங்களை நெருக்கித் தள்ளியது. திடுமென மழை லேசாகத் தூறத் தொடங்கியது. லவுட் ஸ்பீக்கரிலிருந்து மிகப் பெரும் சப்தமுடன் சினிமாப் பாடல்கள், முழங்கிக் கொண்டியிருந்தன. எல்லாமும் எம்.ஜி.ஆர். படத்துப் பாடல்கள், எம்.ஜி.ஆர் தத்துவ, சமூக, காதல் பாடல்கள் சூழலுக்குப் பெரும் சோபையை நல்கிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் இருண்ட காலம் நீங்கி, பொற்காலம் பிறந்து கொண்டிருந்த ஒரு அற்புத யுகத்தின் பிரசவ அறைக்குள் நாங்கள் இருந்தோம். குழந்தையின் தலை வெளியே தெரிந்தது. கடை உரிமையாளர், கடை விளம்பரப் பலகைக்குக் கற்பூரத் தீபம் காட்டிக் கொண்டிருந்தார். கூட்டம் வாயிலை நோக்கிச் சாடி முன்னேறியது. சரியாக மணி 12. இந்த நிமிஷம் முதல் குடிப்பவர்கள் சட்ட பூர்வமான குடிமக்கள். பத்து நிமிஷத்துக்கு முன் குடித்தவர்கள் குற்றவாளிகள். அரசு, எவ்வளவு எளிதாக மக்களின் முகங்களை மாற்றி அமைக்கிறது? எனக்கு எப்போதும் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமோ, பெரு விருப்போ இருந்ததில்லை. நான் குடிப்பது பெரும்பாலும் என்னுடன் அமரும் நண்பர்களைப் பொறுத்தது. என் அளவு ர-ழ ஆகும் வரை. அதாவது ராயப்பேட்டை ழாயப்பேட்டை என்று எந்தக் கணம் உச்சரிக்கிறேனோ, அந்தக் கணமே நான் எழுந்துவிடுவேன். பிரகாஷுக்கு எல்லா மட்டத்திலும் அறிமுகம் உண்டு. அவருடைய செல்வாக்கைக் கொண்டு, ஒரு பாட்டில்ரம் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். அந்தக் காலத்திலிருந்தே, சாராயக் கடைகள் இன்றைய டாஸ்மாக் கடைகள் வரை பெரும்பாலும் நாய்கள் புகத் தயங்கும் அழுக்குக் கட்டிடமாகவே இருப்பதன் காரணம் என்ன என்பதின் பதில், குடிகாரர்கள் மேல், சமூகத்துக்கு இருக்கும் மனோபாவம்தான். அவர்களுக்கு இதுபோதும் என்று அரசு நினைக்கிறது. ஆனால், அவர்கள் பணம் மட்டும் வேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;எங்கள் ஊர் பிராந்திக் கடைகள் மிக அழகியவை. நாகரிகமானவை. பார்கள் மிக நவீனமானவை. உங்களை மதிப்பவை. புதுச்சேரிகாரர்களாகிய நாங்கள் மது அருந்துபவர்கள். குடிகாரர்கள் அல்லர். குடிப்பது வேறு. அருந்துவது வேறு. தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடையைப் போல ஒரு ஆபாசக் கட்டிடம் எங்கள் ஊரில் இருக்கவே முடியாது. நாங்கள் அதைச் சகிக்க மாட்டோம். இது பிரஞ்சியரிடம் இருந்து நாங்கள் கற்ற பல அழகுகளில் ஒன்று.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உணவு மேசையை (இதைத் தீனி மேசை என்பார் ஆனந்த ரங்கர்) நாங்கள் அலங்கரிக்கும் முறையே வேறு. அழகும், சௌகரியமும் மிகுந்த மேசையும், நாற்காலிகளும் முக்கியம். மேசை மேல், அப்பழுக்கற்ற, பூப் போட்ட வெள்ளைத் துணிகள் விரித்து ஒழுங்கு செய்வோம். மதுவில் வகைக்கு ஏற்ப கிளாஸ்களை மட்டுமே பயன்படுத்துவோம். பீர் என்றால் பெரிய அகன்ற கிளாஸ். விஸ்கி, பிராந்திக்கு வேறு. சின்னக் குப்பிகளையும் ஒயின்களுக்குப் பயன்படுத்துவோம். சுற்றி அழகான சீனத் தட்டுகள். நிறைய பூக்கள் வரையப்பட்டவை. அவைகளில் உபகாரத் தீனி (சைட்டிஷ்) இருக்கும்.ஆளுக்கொரு சிறிய கைத்துண்டு கட்டாயம். தனியாக சோடா, தண்ணீர், இனிப்பு பாட்டில் டிரிங்க் என்று இருக்கும். எங்கள் சப்தம், அடுத்த மேசைக்குக் கேட்பது அநாகரிகம் என்று எங்களுக்குத் தெரியும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தெருவில், துணியில்லாமல், குறியை வானத்துக்குக் காட்டியபடி மயங்கிக் கிடப்பவர்கள் சர்வ நிச்சயமாகத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே இருப்பார்கள். நாங்கள் காட்டுவதில்லை. அண்மைக் காலமாக புதுச்சேரியும் சீரழியத் தொடங்கி இருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஜப்பானியர்களின் தேநீர் அருந்துவதில் இருக்கும் ஓர்மை மற்றும் ஆன்மீகப் பரவசத்துடன் அருந்த வேண்டிய ஒரு உள்நோக்குப் பயணம் மது. வன்மம், பகை, கோப தாபம், சிறுமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் இடமாக மதுப்பிரதேசம் சீரழிவது, மதுவை அல்ல, அதைக் குடிப்ப வரையே நிரூபிக்கிறது.&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-2588189656335084335?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/2588189656335084335'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/2588189656335084335'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/10/mathu.html' title='Mathu.'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-3225680466351174562</id><published>2011-10-09T03:54:00.000-07:00</published><updated>2011-10-09T03:58:24.366-07:00</updated><title type='text'>Aravanigal...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரவாணியின் முதல் தமிழ் நாவல் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ்ப் புனைகதை வெளியில் ஒரு முக்கிய நிகழ்வாக, பிரியாபாபு எழுதிய 'மூன்றாம் பாலின் முகம்' என்று ஒரு நாவல் வெளிவந்திருக்கிறது. மிக அண்மையில் வெளிவந்த இதுவே அரவாணி ஒருவரால் எழுதப்பட்ட முதல் தமிழ் நாவல் என்கிற ஒரு ஆவணத்துக்குரிய பெருமையைப் பெறுகிறது. ஆண்களும் பெண்களும் மட்டுமே அடர்ந்த கதை வெளியில் அரவாணிகள் பிரவேசிப்பது மிகவும் ஆரோக்கியமான சூழல் என்பதோடு, சகல மனித உரிமைகளோடும் கூடிய நிகழ்வாக இது விளங்குகிறது. பிரியா பாபு ஏற்படுத்தி இருப்பது ஒற்றையடிப்பாதை எனினும், பாதை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வரலாற்றுக் காலத்தில் இருந்து சாதி, மத மற்றும் பார்ப்பனியக் கட்டமைப்புகளால் ஒடுக்கப்பட்ட தலித்துகள் பெண்கள், சிறுபான்மையினர் மேலெழும் காலம் இது. அவர்கள் பற்றி அவர்களாலும் பிற சமூகத்தாலும் எடுக்கப்படும் கதையாடல்கள் மேலெழத் தொடங்கிவிட்டன. விளிம்பு நிலை மக்களினும் புறத்ததாக, வெளிச்சமே பரவாத இருட்டில் வைக்கப்பட்டவர்களாக அரவாணிகள் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆகக்கடைசிப் படிகளில் வைக்கப்பட்டவர்கள் இவர்களே ஆவர். ஒரு சமூகமே மெலெழுந்து அவர்களை, மிகுந்த அருவருப்பு கொண்டு விலக்கியும், இழிவு படுத்தியும், கேலி கிண்டலுக்கும் வசை மொழிக்கும் உள்ளாக்கியும் தனித்து வைத்திருக்கும் ஒதுக்கலில் இருந்து மீறிச் சில ஒற்றைக் குரல்கள் வெளிப்படத் தொடங்கி இருக்கின்றன. மிகுந்த ஆளுமையும் வன்மையும் கொண்ட குரலாகப் பிரியா பாபு வெளிப்பட்டிருக்கிறார். இயக்க பூர்வமாகவும், செயல்பாட்டு அளவிலும் ஏற்கனவே அரவாணிகளின் மனசாட்சியாகவும் இயங்கிக் கொண்டிருக்கும் வெகுசிலரில் குறிப்பிடத்தகுந்த பிரியாபாபு இப்போது நாவலுடன் சமூகத்தின் மனசாட்சியுடன் ஓர் உரையாடல் நிகழ்த்த வந்திருக்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ரமேஷ் என்கிற பதின்பருவச் (டீன்ஏஜ்) சிறுவன், எங்ஙனம் படிப்படியாகத் தான் பெண் என்பதை உணர்கிறான் என்பதிலிருந்து கதையைத் தொடங்குகிறார் ஆசிரியர். பார்வதி வெளியே சென்று திரும்புகிறபோது, வீட்டிலிருந்து ஒரு பெண் பாடும் சப்தம் கேட்கிறது. பெண் வீட்டில் இல்லாதபோது, எங்கிருந்து பெண்பாட்டு? அவள் ஜன்னல் வழி கவனிக்கிறாள். உள்ளே அவள் மகன் ரமேஷ், அம்மாவின் ஜாக்கெட்டையும் புடவையையும் அணிந்து, அழுத்தமான மேக்கப்போடு, கண்ணாடிமுன் நின்று பாடியும் ஆடியும் களிப்பதைக் கண்டு பார்வதி அதிர்ச்சியடைகிறாள். . இது குடும்பத்துக்கு நேரும் அவமானம் என்று துவள்கிறாள். ரமேஷின் அண்ணனும் தம்பி 'இப்படி' இருப்பதை வெறுக்கிறான். வெறுப்புக்கும், தெரு, பள்ளியில் கேலிக்கும் இழிவுக்கும் உள்ளாகும் ரமேஷ், மூத்த அரவாணியான ஜானகியம்மாளிடம் அடைக்கலம் ஆகிறான். ஜானகி, அவனுக்குப் புத்தி சொல்லி அரவாணி வாழ்க்கையின் அவலத்தைச் சொல்லி எச்சரிக்கிறாள். பார்வதி, அரவாணிகள் சிலர் சைதைக் கடைத்தெருவில் பிச்சை எடுக்கும் காட்சியைக் கண்டு, தன் மகனுக்கும் அதுவே கதி என்று பதறுகிறாள். . . பிச்சை எடுத்துப் பிழைக்கும் ஒரு அரவாணி, தன்முன் பிச்சை கேட்கும் ஒரு மூதாட்டிக்கு உதவுவதைக் கண்டு ஆச்சரியப்படுகிறாள் பார்வதி. ஒரு ரயில் பயணத்தில் பார்வதி, அரவாணிகளுக்குப் பணி செய்கிற கண்மணி என்பவளைச் சந்திக்கிறாள். அவள் மூலம், பால்திரிபு அல்லது பால் மாற்றம் பற்றிய புரிந்துணர்வை அடைகிறாள். ரமேஷை அவளால் புரிந்து கொள்ள முடிகிறது. ரமேஷ், தான் அவாவும் பெண்பாலைத் தேர்வு செய்கிறான். பாரதி என்ற புதிய பெயரை ஏற்கிறான். தன் அரவாணி சமூகத்துக்காகப் பணி செய்ய உறுதி கொள்கிறாள் பாரதி.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மூன்றாம் பாலின் முகம் நாவலின் நிகழ்ச்சி அடுக்குகள் இவை. மிகச்சரியான இடத்தில் தொடங்குகிறது கதை. பொதுவாகச் சிறுவர்கள், வளர்ச்சிப் போக்கில் அம்மா, சகோதரிகள் என்கிற வளையங்களில் இருந்து விடுபட்டு, பையன்கள், பையன்கள் சார்ந்த வெளிகளில் புழங்கி, தாங்கள் ஆண்கள் என்கிற உணர்வை எய்தி, சமூகம் அவர்களுக்கென்று ஏற்படுத்தித் தந்த பிரதேசங்களில் தங்களைப் பொறுத்திக் கொள்கிறார்கள். ஆண் இடம், ஆண் செய்கைகள் என்று எவையும் இல்லை. இவையெல்லாம் சமூகக் கருத்தியல்களின் விளைவுகள். சிறுவன் ஒருவன், தன் பதின்பருவத்தில் பெண் சார்ந்து, அம்மா, அக்கா, தங்கை மற்றும் அருகிலிருக்கும் பெண்கள் சார்ந்து, பெண்களுக்கென்று விதிக்கப்பட்டுள்ள வீட்டுப் பணிகளைச் செய்து, மனத்தளவில் தான் பெண், தனக்குள் ஓங்கி வளர்வது பெண் உணர்வே என்று அறியத் தலைப்பட்டபோது அவன் பிரச்சினைகளை எதிர்கொள்கிறான். ஆணாக அறியப்படும் ஒருவன், தான் தன்னைப் பெண்ணாய் உணர்வதும், அதற்குத் தக நிலவும் ஆடை அணிகளை அணிவதும், அந்த மனிதனின் சுதந்திரம் என்பதைச் சமூகம் ஏற்க மறுக்கிறது. ஆண் என்பவன், எங்ஙனம் பெண் ஆகலாம் என்பதே சமூகத்தின் கேள்வியாகிறது. ஆண், பெண்ணாவது என்பது, ஆணின் அதிகாரத்தை எதிர்க்கும் சவாலாக ஆண் சமூகம் உணர்ந்து, எதிர் நடவடிக்கையில் இறங்குகிறது. அரசுகள், அவை கைக்கொள்ளும் அதிகாரங்கள் எல்லாம் ஆண்மையம் கொண்டவை. எனவே, அரவாணிகளின் இருப்பை, அவர்களின் புழங்குவெளியைச் சட்டங்களாலும் நெறி முறைகளின் பெயராலும் ஒடுக்குகிறவைகளாக அரசுகள் மாறுகின்றன. அரசு அதிகாரம் ஆகியவைகளின் குறுவடிவமாக குடும்பங்கள், தன் அரவாணிக் குழந்தையைத் தம் பகை வடிவாகக் கொள்கின்றன. அவமானச் சின்னமாகவும் கருதி அரவாணிக் குழந்தைகளைப் புறக்கணிக்கின்றன. கடும் சிறை, தாக்குதலால், ஒரு கட்டத்தில் அச்சிறுவன் வெளியேறி, தன் இனம் என்று அவன் உணரும் அரவாணிகள் குழுவில் தன்னை இணைத்துக் கொள்கிறான். இதில் அவன் அடையும் சமூகப் பாதுகாப்பே மிக முக்கியம். அவன், தன்னைப் பெண்ணாக ஆக்கிக் கொள்கிறான். அவன் விருப்பம், ஆசை, வாழ்முறை அது என்று அதை ஏற்றுக் கொள்வதே அறிவுபூர்வமான சமூகத்தின் செயல்முறை. நம் சமூகம் மூடச் சமூகம். ஆகவே அர வாணிகள் இவ்வளவு இழிவுக்குள்ளாகிறார்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரவாணிகளில் பலர் பள்ளி வகுப்புகளையும் முடிக்காதவர்கள். அந்தப் பதின் பருவத்திலேயே அவர்களின் அடையாளக் குழப்பம் தொடங்குவதன் காரணமாக அவர்கள் குடும்பங்களிலிருந்து வெளியேறுகிறார்கள் அல்லது வெளியேற்றப்படுகிறார்கள். தொழில் அறிவும் அவர்களுக்கு வாய்ப்பதில்லை. எனவே, வேறு வழி இன்றியே அவர்கள் பிச்சை ஏற்கவும், விபசாரம் செய்யவும் நேர்கிறது. இதில் அரவாணிகளின் தவறு எங்கிருக்கிறது? அந்த அரவாணிக் குழந்தையின் குழப்பம் தலைப்படும்போதே, அதைப் பரிந்து பேசி, அக்குழந்தையைப் புரிந்து கொள்ளும் கடமையை மேற்கொள்ளாத குடும்பங்களே/சமூகமே/அதிகாரக் கூடாரங்களே தவறு செய்தவர்கள். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு அரவாணி உருவாவது என்பது பற்றிய விஞ்ஞானத் தகவல்கள் பல புதிர்களைக் கட்டவிழ்க்கின்றன. மகாராசன் தொகுத்த 'அரவாணிகள்' என்னும் மற்றும் ஒரு முக்கிய ஆவணமான நூலில் டாக்டர் ஷாலினி நமக்குப் புதிய பல தகவல்களைச் சொல்கிறார். இந்தப் பூலோகத்தில் பிறக்கும் எல்லா ஜீவராசியும் 'ஜனிக்கும்' அந்தக் கணத்தில் பெண் பாலாய்த்தான் ஜனிக்கிறது. அந்த உயிர்க்கரு பெண்ணாகவே இருக்கிறது. அந்தக் கருவின் உடம்பில் ஒற்றை Y குரோமோசோம் வீற்றிருந்தால், அது கரு உருவான ஆறாம் வாரத்தில் டெஸ்டோஸ்டீரோன் எனும் ஹார் மோனை உற்பத்தி செய்கிறது. அந்த டெஸ்டோஸ்டீரோன் என்ற ஹார்மோன் அந்தக் கருவின் உடம்பு முழுக்கப் பரவி எல்லா செல்களையும் 'ஆண்மைப்படுத்தி' விடுகிறது. ஆறு வாரம் வளர முலைகள், மூளை நரம்புகள், கர்ப்பப்பையாகப் பிறகு வளரப் போகும் முலேரியன் குழாய்கள் என்று முழுவதுமாய் பெண்பாலாய் இருந்த அந்த சிசு, டெஸ்டோஸ்டீரோனின் உபயத்தால் மெல்ல மெல்ல மாறுகிறது. அதன் இனப்பெருக்க உறுப்புகள் ஆண்மைப்படுத்தப்படுவதால் விரைப்புறுப்பு, விந்தகம் மாதிரியான புதுப்புது உறுப்புகள் உருவாகின்றன. அதே போல, சிசுவின் மூளை நரம்புகளும் மாற்றி அமைக்கப்படுவதால் 'ஆண்' என்கிற உடல் உருவம் மூளையில் பதிகிறது. இதனை 'பாடி இமேஜ்' என்கிறோம். நம் எல்லோரின் மூளையிலும் நமது ஒவ்வொரு புற உறுப்பிற்கான உருவகமும் பதிந்திருக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நான் ஆம்பிளையாக்கும்' என்று மீசை முறுக்கும் சண்டியர்கள் எல்லோருமே முதல் ஆறு வாரங்கள் பெண்ணாக இருந்து, 'பெண்மயம்' கருணையினால் ஆண்களாகப் பிழைத்தவர்கள்தான் என்பதை அறியும்போது மகிழ்ச்சி தோன்றுகிறது. அதோடு, மரபணுக்கள் கர்ப்பப்பைக்குள் செய்த யுத்தமும் மூன்றாம் பால் தோன்றக் காரணமாகிறது என்பது விஞ்ஞானம். இதற்கு அப்பன்மார்களும் அண்ணன் மார்களும் குதிப்பதில் என்ன அர்த்தம் இருக்கிறது?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழ் இலக்கணங்களான தொல்காப்பியமும் நன்னூலும் அரவாணிகள் பற்றிப் பரிசீலிக்கின்றன. என்றாலும் அவர்களது மனோபாவம் பற்றிய ஆய்வாக அவை இல்லை. இன்னும் மேலாக, அவர்களைக் கௌரவிக்கும் விதமாகவும் அவை இல்லை. இந்த உலகம், மனிதர்களின் தொகுதியால் ஆனது என்பதையும், உலகத்தின் அடிப்படை அலகாகவும் மக்கள் இருக்கிறார்கள் என்பதையும் அவை ஒப்புகின்றன. அந்த வகையில் அவை முன்னேற்றகரமானவை என்றாலும், மக்கள், ஆண்கள், பெண்கள் என இருவகைத்தானவர் என்ற அளவுக்கு மட்டும் தான் இலக்கண ஆசிரியரின் பயணங்கள் நடந்திருக்கின்றன. 'உயர்திணை என்மனார் மக்கள் சுட்டே' என்கிறார் தொல்காப்பியர். அதாவது, 'மக்கள்' என்று சமூகம் சுட்டுகிற பொருள்களை உயர்திணை என்கிறார். மக்கள் என்று கருதப்படாத பிற பொருள்களை அஃறிணை என்கிறார். மண்ணின்மேல் உள்ள உயிர்ப் பொருள்களில் மக்கள் சிறந்தவர். ஆகவே அவர்கள் உயர்திணை. உரையாசிரியர்கள், மக்கள் பற்றிய ஆராய்ச்சியை மேலும் நீட்டித்தார்கள். 'மக்கள் என்றது மக்கள் எனும் உணர்வை' என்று ஆழப்பட்டார்கள். ஆனால் பால் திரிந்த மக்களிடம் வரும்போது இந்த ஆண்களின் ஆய்வுகள் இறுக்கம் அடைகின்றன. 'ஆண்மை திரிந்து பெண்மையை ஏற்கும் பெடியை உணர்த்துதற்கு, உயர்திணைக்குரிய ஈறுகளைச் (கடைசி எழுத்துகள்) சேர்த்துக்கொண்டு, உயர்திணையாகவே பாவியுங்கள் என்கிறார் தொல்காப்பியர். குறைந்தபட்சம், பெண்மையை விரும்புகிற மக்களை அஃறிணை என்று புறக்கணிக்கவில்லை தொல்காப்பியர். ஆனால் தொல்காப்பியருக்கு ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்குப் பின்வந்த நன்னூல் ஆசிரியர், அரவாணிகள் மேல் கடுமை காட்டுகிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'பெண்போலப் பிறந்து, பெண் தன்மையை விட்டு ஆண்தன்மைகளை அவாவுகிறவர்களைப் பேடுகள் என்றழையுங்கள். அவர்களை ஆண் பாலாகவே அழைக்கலாம். எழுதலாம். அதுபோல, ஆண்போலப் பிறந்து, பெண்தன்மையை அவாவுகிறவர்களும் பேடுகளே ஆவார்கள். அவர்களைப் பெண்கள் (பெண்பால்) என அழையுங்கள். இவர்கள் பேடி என்றும் அறியப்பட்டார்கள். இவர்களை உயர்திணையாகவும், அஃறிணையாகவும் அழைக்கலாம். இது நன்னூல் இலக்கண ஆசிரியரின் திரண்ட கருத்து. நன்னூல் ஆசிரியர் ஒன்று-ஜனநாயக பூர்வமாகவும் இயங்குகிறார். இரண்டு -சமூக வழக்கையும் விமர்சனம் இன்றி ஏற்றுக் கொள்கிறார். ஜனநாயகம் என்றது, மக்கள் தாங்கள் எந்தப் பாலை அவாவுகிறார்களோ, அந்த விரும்பிய பாலாலேயே அவர்களை ஏற்றுக் கொள்ளுங்கள் என்கிறார். இது நம் இலக்கண மரபில் மிகச் சிலாக்கியமானது. ஆனால், தன் காலத்து (எட்டாம் நூற்றாண்டில்) சமூகம், அரவாணிகளுக்கு சமூக அந்தஸ்தை வழங்க மறுத்திருக்கிறது. ஆகவே பால் திரிந்தவர்களை அஃறிணை என்றும் அழைக்கலாம் என்கிறார். தொல்காப்பியர் காலத்தில் இல்லாத இழிவு, நன்னூல் ஆசிரியர் காலத்தில் ஏற்பட்டுவிட்டது. நம் காலத்துவரை, இந்த இழிவு நீடிக்கிறது. &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;காதல் வரலாறு-டயன் அக்கர் மென் (தமிழில்: ச.சரவணன்) எழுதிய உலகப் புகழ்பெற்ற புத்தகம். உலக இனங்கள் காதலை எப்படியெல்லாம் வண்ணம் பூசி, வாசனை தெளித்து வளர்த்து வந்திருக்கிறது என்பதையெல்லாம் மிகுந்த ஆராய்ச்சியோடு (ஆராய்ச்சியின் நெடியே இல்லாமல்) எழுதி இருக்கிறார். கிரேக்கர்கள் வளர்த்த காதல் பற்றி நிறைய நாம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை எழுதி இருக்கிறார். (நமக்கு ருஷ்டி மேல் வழக்கு போடத்தானே தெரியும்?) கிரேக்கம், வாக்கெடுப்பு எடுத்து ஜனநாயகத்தை ஓம்பிய நாடு என்பதை நாம் அறிவோம். வெறும் முப்பது ஆயிரம் மக்களைக் கொண்ட ஏதென்ஸ், ஒரு தனி உரிமை பெற்ற ராஜ்யம். இந்தியா போலவே, அதுவும் ஆண்மையம் கொண்ட நாடுதான். பெண்கள், வீட்டுப் பின் கட்டுகளில், இருள்படிந்த சமையல் அறைகளில் தான் இருந்தார்கள். பாட்டுக் கலையும் நாட்டியமும் விரும்பப்பட்டன. அவை மனைவிமார்களால் கற்று வெளிப் படுத்தப்படாதவரை. விலைமகளிர் மந்தைகளாக அலைந்தார்கள். சாக்ரட்டீஸ்கள் சாதாரணமாகத் தேநீர்க்கடையில் அமர்ந்து தேநீர் அருந்தியபடி தத்துவ உரையாடல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்கள். பிளேட்டோக்கள் விறகு வெட்டிக் கொண்டே மாணவர்களுடன் கதைத்துக் கொண்டிருந்தார்கள் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்தான். ஏதேன்ஸ் தெருக்களில் சாக்கடைகளே இல்லை. அதற்குப் பதிலாக அறிவுத் தேடலே வழிந்து ஓடின என்பதுபோன்ற சித்திரங்களே நமக்குக் காட்டப்பட்டிருந்தன. அங்கே, கிறிஸ்து பிறக்கும் முன்னர் ஆண் பெண் காதல்களைக் காட்டிலும் ஆண் ஆண் காதல்கள் அங்கீகரிக்கப்பட்ட பெருவழக்காக இருந்தன என்பதைப் பற்றிய எந்தப் பதிவும் பொதுவாக வருவதில்லை. டயன் அக்கர்ரெமன் அவ்வழக்கங்களைப் பதிவு செய்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்க இலக்கியங்கள் இந்த வகை உறவுகளைப் போற்றி இருக்கின்றன. உடற்பயிற்சிக் கூடமே, கிரேக்க இளைஞர்கள் காதலர்களைத் தேர்வு செய்யும் இடமாக இருந்துள்ளன. உடற் பயிற்சிக் கூடத்தில் இளைஞர்கள் நிர்வாணமாகவே பயிற்சி செய்தனர். ஆரோக்கியமான உடற்கட்டினை அழகு என்று அவர்கள் நம்பினார்கள். தங்கள் காதலர்களை அங்கே அவர்கள் தேர்வு கொண்டார்கள். அரிஸ் டோபேன்சுடைய 'மேகங்கள்' என்ற படைப்பில் ஒரு சிறுவனுக்கு அறிவுரை கூறும் பகுதி இது: &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'எப்படி அடக்கத்துடன் இருப்பது, விதைகளைக் காட்டாது அமர்வது, எழுந்திருக்கும்போது அவனது புட்டங்களினால் ஏற்பட்ட பதிவு தெரியாதவாறு மண்ணைச் சரி செய்தல், மேலும் எவ்வாறு வலுவாக இருப்பது. . . அழகு வலியுறுத்தப்பட்டது. ஒரு அழகிய இளைஞர் நல்ல இளைஞனாகக் கருதப்பட்டான். கல்வி என்பது ஆணின் காதலுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்ற இந்தக் கருத்து ஸ்பார்ட்டாவினுடைய கருத்தை ஒட்டியிருந்த ஏதென்சின் கருத்தியல் கோட்பாடாயிருந்தது. அவனைவிட மூத்த ஒரு ஆணைக் காதலிக்கும் இளைஞன் அவரைப் பின்பற்ற முயல்வான். அதுதான் அவன் கல்விப் பயிற்சியின் அனுபவ மையம். மூத்த அந்த ஆணும் இளைஞனின் அழகின் மேல் உள்ள விருப்பத்தினால் அவனை மேம்படுத்த தான் செய்யக்கூடிய அனைத்தையும் செய்வார்’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஒரு சிறுவனின் கல்வியில் இவ்வகையான ஓரினச் சேர்க்கை ஒரு பண்பட்ட நிலை என்பது ஒரு கோட்பாடாகவே கிரேக்கப் பகுதியில் இருந்தது என்பது அக்கர்மென் குறிப்பிடும் வரலாற்றுச் செய்தி. ஆசிரியர், பழைய கிரேக்கத்தை வழிமொழிகிறார் என்பதல்ல இதன் பொருள். இன்றைய காதல் மற்றும் காமச் செயல்பாடுகள், அவைகளின் மேல் இன்றைய சமூகம் விதித்திருக்கும் அற மற்றும் சட்டக் கோட்பாடுகள் என்பவை இன்றைய அதிகாரமையங்களின் கருதுகோள்களே ஆகும். மனிதர்களின் காதல் உள்ளிட்ட அனைத்து வாழ்முறைகளும் இன்று அதிகாரம் கட்டமைக்கும் ‘பவித்திர’மாகவே எல்லாக்காலத்தும் இருந்ததாக இல்லை, மற்றும் பல்வேறு கட்டங்களைக் கடந்தே மனிதகுலம் இன்றைய நிலைக்கு வந்து சேர்ந்துள்ளது என்பதைச் சொல்வதே வரலாற்றாசிரியர்கள் நோக்கமாக இருந்தது. இது குற்றம் இது குற்றமற்றது என்கிற இருநிலைகளை, அதன் வழி குற்றமனோபாவங்களை அவ்வக் காலத்துச் சமூகமே கட்டமைக்கிறதே அன்றி, அச் செயல்கள் அல்ல.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தனி மனிதர்களின் படுக்கை அறைக்குள் நுழைந்து சட்ட நகல்களை நீட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன அதிகாரச் சக்திகள். இது மனித உரிமை மீறல் என்பதையே அறிவுவர்க்கம் காலா காலமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரிஸ்டோ பேன்சின் ‘பறவைகள்’ கவிதை. ஒரு முதியவன். இன்னொருவனுக்குச் சொல்வது போல அமைந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘நல்லது. துணிச்சல் மிக்கவனே! நடைமுறைக் காரியங்கள் நன்றாகவே உள்ளன. உடற்பயிற்சிக் கழகக் குளியல் அறையிலிருந்து புத்துணர்ச்சியுடன் வெளிவரும் என் மகனை நீ சந்தித்த போதும், நீ அவனை முத்தமிடவில்லை. நீ அவனிடம் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. நீ அவனை அணைத்துக் கொள்ளவும் இல்லை. நீ அவனது விதைகளை உணர்ந்து பார்க்கவும் இல்லை. மேலும் நீ எங்களுடைய நண்பன் என்று கருதப்படுகிறாய்’&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிரேக்கப் பெண்கள் சாப்போவை நேசிப்பவர்களாக இருந்துள்ளார்கள். பெண் ஒடுக்குமுறையில் இந்தியாவுக்குச் சற்றும் குறையாதது கிரேக்கம். அங்கேயும் பல மநுக்களும் மநு புத்திரர்களும் சாக்ரட்டீசின் அங்கியைப் போர்த்திக் கொண்டு பிரசங்கம் செய்திருக்கிறார்கள். காலம் காலமாகப் பெண்களின் பிறப்புறுப்புகளுக்கு ஆக கனமான பூட்டுகளைப் போட்டு, சாவியைத் தம் இடுப்பில் செருகிக் கொண்டு அலைந்திருக்கிறார்கள் கிரேக்க ஆண்கள். உலக ஆண்களில் முக்கால் வாசிப்பேர்கள், தங்களின் மனைவிமார்களின் அந்தரங்கங்களில் அன்னிய ஆண்கள் பிரவேசித்து விடக் கூடாதே என்ற கவலையிலேயே வாழ்ந்து சாகிறவர்களாக இருக்கிறார்கள். தமிழர்கள் 'கள்ளக்காதல்' என்ற வினோதமான வார்த்தையைக் கண்டு பிடித்திருக்கிறார்கள். காதலில் கள்ளம் ஏது? காதலில் கறுப்பு வெள்ளை இருக்கிறதா என்ன? இந்திய எய்ட்சின் எண்ணிக்கை உலக மக்களைத் திடுக்கிடச் செய்திருக்கிறது என்பதை எவ்வளவு சுலபமாக மறந்து கண்ணகியைப் பற்றிக் கவலைப்படுகிறோம் நாம்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பெண்கள் தன்பால் புணர்ச்சி குறித்து ஒரு மேற்கோளை ரியேடான் னாஹிலிருந்து எடுத்துக் காட்டுகிறார் அக்கர்மென். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'சுய இன்பம், கிரேக்கர்களுக்கு ஒழுங்கீனமான செயலாக இல்லாமல் ஒரு பாதுகாப்புச் சாதனமாக இருந்தது. ஆசியா மைனரில் உள்ள மிலெட்டஸ் என்ற செல்வச் செழிப்பான நெய்தல் நில நகரம், கிரேக்கர்களால் 'ஒலிபாஸ்' என்று அழைக்கப்பட்ட 'டில்டோ' சாதனங்களைத் தயாரிப்பதிலும் ஏற்றுமதி செய்வதிலும் ஒரு முக்கிய கேந்திரமாக விளங்கியது. இது ஆண் குறியின் மாற்று உரு அமைப்பு. கிரேக்கர் காலத்தில் மரத்தினாலோ, தோல் அட்டைகளாலோ செய்யப்பட்டு, உபயோகிப்பதற்கு முன் ஆலிவ் எண்ணெய் கொண்டு வழுவழுப்பாக்கப்பட வேண்டியதாக இருந்தது. கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த புராதன இலக்கிய நாடகத்தில் ஒரு காட்சி. மெட்ரோ மற்றும் கோரிட்டோ எனும் இரண்டு பெண்கள் பேசிக் கொள்ளும் காட்சி. மெட்ரோ, கோரிட்டாவிடம் டில்டோவைக் கடனாகக் கேட்கிறாள். அவள் அதை வேறு ஒருத்திக்குக் கடன் கொடுத்திருக்கிறாள். கடன் வாங்கியவள், இன்னொருத்திக்குக் கொடுத்திருக்கிறாள். . .! &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;உலகம், இன்று வந்து சேர்ந்திருக்கும் இந்தப் புள்ளிக்கு வர நடந்து கடந்து வந்த காலம் பல யுகங்கள் என்பதையும், இன்று விபரீதம், வினோதம் என்றெல்லாம் கணிக்கத்தக்க பல விஷயங்கள் சாதாரண நடை முறைகள் என்பதையும், ஒழுக்கத் தராசைக் கையில் வைத்துக் கொண்டு அலையும் ஒழுக்கப் போலீஸ்காரர்கள் உணரவேண்டும். பெண்கள் கையில் துடைப்பத்தையும், செருப்பையும் கொடுத்துச் சக பெண்ணை எதிர்க்கத் தூண்டும் நாசகார சக்திகள் இதை உணர வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிரியாபாபுவின் வாழ்க்கையை அவரைப் பற்றி எழுதப்பட்ட குறிப்புகளில் இருந்தும், அவர் விழிப்புணர்வு இதழுக்குக் கொடுத்துள்ள (இப்பேட்டி 'அரவாணிகள்' தொகுப்பிலும் இடம் பெற்றுள்ளது. பேட்டி கண்டவர்கள் இராஜீவ் காந்தி, ஆனந்தராஜ்) பேட்டியிலிருந்தும் தொகுத்து அறிந்து கொள்வது நல்லது. எந்தச் சூழலில் இருந்து, எப்படிப்பட்ட மனிதர் மூன்றாம் பாலின் முகம் நாவலைத் தந்திருக்கிறார் என்பதை வாசகர் அறிய வேண்டும். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்த பிரியாவுக்குப் பூர்வீகம் முசிறி கிராமம். 1974-இல் இந்திய இலங்கை ஒப்பந்தம் அவரைத் தமிழ் மண்ணில் கொண்டு வந்து போட்டது. 12 வகுப்புவரை படித்தவர். பள்ளிப் பருவத்திலேயே தன் பால் வேறு பாட்டுப் பிரச்சினையால் சகல துன்பங்களுக்கும் ஆளானார். 1998இல் அறுவைச் சிகிச்சைமூலம் பெண்ணாக அடையாளம் கண்டார். அரவாணிகளுக்கான ஓட்டுரிமை வழக்கில் முக்கிய பங்காற்றியவர். 2007-இல் இவரது 'அரவாணிகள் சமூக வரைவியல்' நூலை வெளியிட்டார். கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் காவல்துறையினருக்கும் (இவர்களிடம் பேசுவதுதான் மிக முக்கியம். அரவாணிகளின் முதல் விரோதிகள் காவல்துறையே என்பதே அரவாணிகளின் கருத்து) அரவாணிகள் பற்றிய வகுப்புகள் நடத்துகிறார். பிரியாபாபு, தன்னைப் பள்ளிக் கூடத்து ஆசிரியர்கள் இரண்டு பேர் பாலியல் இச்சைக்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் என்கிறார். (தெய்வங்களின் வரிசையில் மூன்றாவதாக வருபவர்கள். இவர்களுக்காகத்தான் ஆசிரியர் தினம் கொண்டாடப்படுகிறது) வெளிநாடுகளில் வாழும் அரவாணிகள் மிக உயர்ந்த நிலையில் இருப்பதை பிரியா பாபு நினைவுகூர்கிறார். பாலின மாற்று அறுவைச் சிகிச்சை சட்டபூர்வமாக்கப்பட்டு, பெண்ணாக மாறுவது எளிதானதாக டென்மார்க், ஹாலந்து, மலேசியா, சிங்கப்பூர், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் நிலவுகிறது என்று கூறும் அவர், நார்வே நாடு அரவாணிகளின் சொர்க்கபூமி என்கிறார். அரவாணிகளின் இருத்தலுக்காகவும் மற்றவர்கள் அனுபவிக்கும் சகல மனித உரிமைகளையும் அரவாணிகளும் பெற வேண்டும் என்பதற்காக இயக்கபூர்வமாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். பொதுப்பரப்பில் அரவாணிகள் மேல் திணிக்கப்பட்டிருக்கும் அவமானங்கள் கலைய ஊடகங்கள் மூலம், ஆஷாபாரதியுடன் இணைந்து போராடிக் கொண்டிருக்கிறார். அவரின் இந்த நாவலையும் அந்த எண்ணத்தின் நீட்சியாகவே அவர் காண்கிறார். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அரவாணிகள், அரவாணிகளாக வாழ்வது என்பது அவர்கள் தேர்வு. அது அவர்களின் சுதந்திரம். இதில் ஏனைச் சமூகம் செய்யக்கூடியது, அவர்களுக்கு இசைவாகச் சூழலை உருவாக்கித் தருவதே ஆகும். சூழல், முன்பைவிடவும் மேம்பட்டதாக மாறிக்கொண்டிருக்கிறது. அரவாணிகள் சார்பாக ஓர் உரையாடல் தொடங்கி இருக்கிறது. தமிழக அரசு சில சாதகமான ஏற்பாடுகளை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இந்தியா போன்ற பெரும்பாலும் சட்டபூர்வமற்ற தேசத்தில், சட்டபூர்வமாகவே மக்கள் மட்டும் வாழ வேண்டியிருக்கிறது. எனவே, அரவாணிகளுக்கு சட்டபூர்வமான பாலின அடையாளம் வழங்கப்பட வேண்டும். அவர்கள் ஒடுக்கப்பட்டவர்கள். அப்படியே கருதி, வேலை வாய்ப்பு, கல்வி வாய்ப்பு போன்றவற்றில் அவர்களுக்கான இட ஒதுக்கீடு அவர்களுக்கு மிகவும் அவசியம் ஆகிறது. குடும்பம் என்கிற ஒரு ஒடுக்குமுறை அமைப்பில், பெற்றோர்களால் அவர்களின் கல்வி அழிக்கப்பட்டது. தொழில் அறிவும் அவர்கள் பெரும்பாலோர்க்கு இருக்க நியாயம் இல்லை. அதற்கான சிறப்புப் பள்ளிகளும் தொழிற்பள்ளிகளும் அவர்களுக்கென்றே தொடங்க வேண்டும். பொதுப் பள்ளிகள் அவர்களுக்குப் பயன்பட முடியாது. 'அரவாணிகள் கல்வி' தனிச் சட்ட வரையறைகளுக்குள் கொண்டு வரவேண்டும். அவர்களின் உயிர்த் தேவையாக இருப்பது-வீடும் சமூகமும் புறக்கணித்த பிறகு போக்கிடம் இல்லாமல் இருக்கும் அவர்களுக்கான தங்கும் இடங்கள், வாழ்வதற்கான கொஞ்சம் பணம் இவையே. அந்தப் பணத்தை அவர்களின் உழைப்புக்கான ஊதியமாகத் தரலாம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;விளிம்பு நிலைக்கும் மேலாகச் சிக்கிச் சீரழிந்து கொண்டு வாழ்வதற்காகப் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கும் அவர்கள் செம்மை அடையும் வரை, சமூகம் தன்னை நாகரிகமானது என்று சொல்லிக் கொள்ளும் தகுதியைப் பெறாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பயன் கொண்ட நூல்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;* மூன்றாம் பாலின் முகம் - நாவல் &lt;br /&gt;&lt;br /&gt;பிரியாபாபு, சந்தியா பதிப்பகம், அசோக் நகர், சென்னை-83&lt;br /&gt;&lt;br /&gt;தொலைபேசி : 24896979, 65855704&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-3225680466351174562?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/3225680466351174562'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/3225680466351174562'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/10/aravanigal.html' title='Aravanigal...'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-395124753292057508</id><published>2011-09-26T10:18:00.001-07:00</published><updated>2011-09-26T10:18:54.163-07:00</updated><title type='text'>zha.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ழ + சாட் லவ் இரண்டு ஒரு பக்க கதைகள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'ழ'&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;துறைத்தலைவர் சொன்னார்..கல்வி அமைச்சர் அவசரமாக கேட்டதால் அழைப்பிதழில் கூட என் பெயரை அச்சடிக்க அனுப்பிவிட்டாராம்.. ஒருமுறை கிள்ளிப்பார்த்துக்கொண்டேன். அரசின் உலக தமிழ் மாநாட்டில் பேச எனக்கு அனுமதியா ? நான் இரா.சிவராசு. வருமானத்துக்கு வழியில்லாத மாநிலக்கல்லூரி தமிழ்த்துறை பேராசிரியர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மனைவிக்கும் மகளுக்கும் தாளமுடியாத சந்தோஷம்..விடயத்தை கூறியதும்..மகள் இரண்டு அடிக்கு மேல் துள்ளினாள்...அப்பா..மூன் டிவியில லைவ்வா காட்டுவாங்க இல்லையா ?.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'நேரலை'ன்னு சொல்லு..ம்..கண்டிப்பாக காட்டுவாங்க...&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தமிழின் தனிச்சிறப்பான 'ழ' என்று பெயரிட்டு இரவு பகலாக அமர்ந்து தமிழின் சிறப்பை கட்டுரையாக தயார் செய்தேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அந்த நாளும் வந்தது. விழா மேடை. உலகத்தமிழர்களால் அரங்கு நிரம்பியிருக்க..எனக்கு ஒதுக்கப்பட்ட நேரத்துக்கு சில வினாடிகளுக்கு முன் விழா அமைப்பாளர் என்னை ஓரமாக தள்ளிக்கொண்டு போனார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்புறம் சிவராசு, கல்லூரி பணியெல்லாம் எப்படி இருக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அய்யா, என்னுடைய நேரம் வந்துவிட்டது, நான் கட்டுரை வாசிக்க செல்லவேண்டும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அது வந்து...சிவராசு...அமைச்சர் வீட்ல 'தம்பி' மேடைல பேசனும்னு அவர் வீட்டம்மா ஆசைப்பட்டாங்க. அதனால...என்று கொஞ்சம் தர்மசங்கடமாக இருப்பது போல முகத்தை வைத்துக்கொண்டு....இழுத்தார்..&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அங்கே மேடையில், &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;'தம்பிக்கு' தகுந்தபடி கூன் வளைத்து நிறுத்தப்பட்ட ஒலிப்பெருக்கியில்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குட்மார்னிங் டு ஆல். நான் இப்போ திருக்குறல் சொல்லப்போறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அகர முதல எலுத்தெல்லாம் ஆதி&lt;br /&gt;&lt;br /&gt;பகவன் முதர்ட்டே உயகு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பலத்த கரகோரங்களுடன் 'திருக்குறல்' சொல்லிக்கொண்டிருந்தார் மாண்புமிகு கல்வி அமைச்சரின் ஆறு வயது பேரர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சாட் லவ்.&lt;br /&gt;&lt;br /&gt;***************************************************&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - ஹாய்&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் - ஹாய். எஸ்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - வாட்ஸ் யுவர் நேம் யா ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் - ஸ்வேதா&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - ஸ்வீட் நேம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் - எங்கே இருந்து பேசுறீங்க ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - நான் சென்னையில் தான். ஒரு ஐடி எம்.என்ஸியில் டீம் லீடர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் - சோ நைஸ். நானும் சென்னை தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - ஆர் யூ ஹிண்டு&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் - எஸ். ஸ்வேதான்னா ஹிண்டுன்னு தெரியாதா ? பட் உங்க நேம் நாகப்பன் அப்படீன்னு இருக்கு ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - எஸ். வீ ஆர் செட்டியார்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் - செட்டியார். வெரி குட். நாங்களும் தான்..என்ன சப் கேஸ்ட்?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - வீ ஆர் நாட்டு கோட்டை செட்டியார்ஸ். யூ ?&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் - வீ ஆல்சோ நாட்டுகோட்டை செட்டியார்ஸ்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவன் - ஐ லவ் யு.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அவள் - மீ டூ.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-395124753292057508?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/395124753292057508'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/395124753292057508'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/09/zha.html' title='zha.'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-6397082584374736891</id><published>2011-09-25T23:35:00.000-07:00</published><updated>2011-09-25T23:35:22.178-07:00</updated><title type='text'>just for youi...</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;பொதுவாக என் வீட்டில் இரண்டு இட்லிகளுக்குத் தொட்டுக் கொள்ள குறைந்தது மூன்று வகைச் சட்னிகள் இருக்கும். அது போக பொடி, எண்ணெய், இலசுமணன் கடை வடை என்று சாதாரண நாளில் கூட ராஜபோக விருந்தாகவே இருக்கும். ஏதாவது விசேஷம் என்றால் சொல்லவே தேவையில்லை. இதற்காக நான் ஏதோ பிறக்கும் போதே தங்கக் கரண்டிகளைச் சப்பிக் கொண்டு பிறந்தவனில்லை. என் அப்பாவின் சாப்பாட்டு ரசனை அத்தகையது. ஏன் இப்படி எடுத்தவுடன் எங்கள் வீட்டுச் சமையற்கட்டிலிருந்து ஆரம்பிக்கிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். போகப் போக உங்களுக்குப் புரியதானே போகிறது .&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இன்றோடு என் நாக்கு செத்து ஒரு வருடம் ஏழு மாதம் இருபத்தி ஏழு நாட்கள் ஆகின்றன. அட ஆமாங்க நான் நொய்டா வந்த நாளை வச்சுதான் சொல்றேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இங்கு நொய்டாவுக்கு வந்ததும் அலுவலகம் சார்பாக வரவேற்பு நிகழ்சிகள், அதை ஒட்டி கார்பரேட் பயிற்சி வகுப்புகள் என்று முதல் வாரம் நொய்டாவைச் சுற்றிக் கொண்டிருந்தோம். அன்று அப்படி ஒரு வகுப்பிற்கு வர தாமதமாகிவிட்டதால் எனக்கு முன்னால் எல்லோரும் வந்து அமர்ந்திருக்கவே ஆண்கள் பக்கத்தில் இடம் இல்லாமல் நின்று கொண்டிருந்தேன். அதுவோ " வாங்க பழகலாம் " வகுப்பு. எங்களுக்கு அதைச் சொல்லித் தர வந்த நல்லவர் என்னை பெண்களுடன் சேர்ந்து உட்காரச் சொன்னார். மற்ற எல்லோருடைய வயிற்று எரிச்சலைக் கொட்டியவாறு அங்கு அமர்ந்தேன். என் பக்கத்தில் அமர்ந்திருந்த பெண் அவ்வளவு அழகு. முன்தினம் பார்த்தேனே பாட்டிற்கு முன் சூர்யா வர்ணிப்பாரே அப்படி ஒரு அழகு. அழகான பெண்களை பார்ப்பது எளிது. அவர்களுடன் பேசுவது கடினம். அதிலும் அருகில் அமர்ந்துவிட்டு அவர்களைப் பார்க்காதவாறு நடிப்பதென்பது கொடுமையிலும் கொடுமை. அது ஒரு குழு நடவடிக்கை என்பதால் அவர்களுடன் பேசியே ஆக வேண்டும். காலேஜில் நான் படிச்ச மெகானிகல் இன்ஜினீரிங்க்ல எக்ஸாம் ஹால்ல கூட பொண்ணுங்க பக்கம் உக்கார்ந்தது கிடையாது. என் அதிர்ஷ்டம் அத்தகையது. நல்ல வேளை அந்த பெண்ணே பேச்சை ஆரம்பித்தாள். ஊர்,பேர் கேட்டாள். சொன்னேன். நானும் கேட்டேன். அவளுடைய பெயர் தீபிகா. அழகான பெண்களின் பெயர் மறக்கிற அளவுக்கு முட்டாள் இல்லை நான். அவள் பிறந்து வளர்ந்தது எல்லாம் டெல்லியாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னை நொய்டாவில் ஒரு ப்ரோஜெக்ட்டில் போட்டது போல் அவளை சென்னையில் ஒரு ப்ரோஜெக்ட்டில் போட்டிருந்தார்கள் போல. அதனால் அவள் சென்னையைப் பற்றி விவரங்கள் கேட்டுக் கொண்டிருந்தாள். காலையில் உண்ண என்ன கிடைக்கும் என்றாள். இட்லி, வடை, சாம்பார், தோசை, ஊத்தப்பம், பூரி என்று சரவண பவன் சர்வர் போல அடுக்கிக் கொண்டிருந்தேன். மதியம் ? சாதம், சாம்பார், ரசம், வத்தல் குழம்பு, தயிர், மோர் என்று மறுபடியும் அடுக்கினேன். சப்பாத்தி கிடைக்காதா என்றாள். கிடைக்குமே. சாயும்கால வேலைகளிலும், இரவிலும் கிடைக்குமென்றேன். முகம் மலர்ந்தாள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இப்போ என்னோட டர்ன். இங்க காலையில் என்ன கிடைக்கும் என்றேன் ? ரொட்டி என்றாள். என் ஏமாற்றத்தை வெளிக் காட்டாமல் மதியம் என்றேன். ரொட்டி, தயிர், ஆலு (உருளைக் கிழங்கு ) என்றாள். நீங்கள் சாதமெல்லாம் சாப்பிட மாடீர்களா என்றேன். ஏன் இல்லை ? சாப்பிடுவோமே வாரத்திற்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை என்றாள். எனக்கு கஜினியில் அசினை அடித்தது மாதிரி பின் மண்டையில் யாரோ என்னை அடிப்பது போன்று ட்ங்கென்று ஒரு ஒலி கேட்டது. இப்படி தாங்க ஆரம்பிச்சது இந்த ஊரின் சாப்பாட்டுக் கொடுமை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;என்னோட முதல் எதிரி இந்த உருளைக் கிழங்கு தாங்க. உருளைக் கிழங்கை ஒரு வேளை சாப்பிடலாம் இரண்டு வேளை சாப்பிடலாம். ஆனா அதையே மூணு வேளையும் முப்பது நாளும் சாப்பிடச் சொன்னா என்னங்க பண்றது. காலையில் சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உருளைக்கிழங்கு. மதியம் அதே உருளைக்கிழங்கை உள்ளே வைத்து சப்பாத்தி. இரவில் உருளைக்கிழங்குடன் கொஞ்சம் கோபி (காலி பிளவர்). இன்னும் இங்கு உருளைக்கிழங்கு ஜூஸ் கிடைக்காததுதான் மிச்சம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி ஸ்நாக்ஸ் சாப்பிடலாம் என்று பார்த்தால், நம்மூரில் முக்குக்கு முக்கு வடை சுடுவது போல இங்கு சமோசாவும், ஜிலேபியும் சுடுவார்கள். நம் ஊர் சமோசாக்களில் எல்லாம் கொஞ்சமே என்று உருளைக் கிழங்கு இருக்கும். இங்கோ உருளைக் கிழங்கிற்கு இடையில் கொஞ்சமே என்று சமோசா ஒளிந்திருக்கும். ஏற்கனவே இங்கு வழங்கப்படும் டீ குறித்து கூறியிருக்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவ்வளவுதான் இவர்களின் வெரைட்டியா என்று கேட்டால், இல்லை. தலைப்பில் சொன்னது போல அண்டா பரோட்டா எனில் உருளைக் கிழங்கு இருந்த இடத்தில் முட்டையை வைத்து நிரப்பித் தருவார்கள். அவ்வளவு தான். இந்தியில் அண்டா என்றால் முட்டை என்று அர்த்தம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சரி இவர்களது உணவுகள் தான் நமக்கு சரிப்பட்டு வரவில்லை என்றால் இவர்கள் உண்ணும் முறை கூட நமக்கு ஒத்து வருவதில்லை. எதைச் சாப்பிட்டாலும் கரண்டி(ஸ்பூன்) வைத்தே சாப்பிடுகிறார்கள். நாமும் அப்படியே சாப்பிட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். சாதம் என்றால் ஏதோ முயற்சி செய்து ஸ்பூனில் சாப்பிட்டு விடலாம். ஆனால் நம்மூர் தோசையையும் அவ்வாறு சாப்பிட வேண்டும் என்று சொன்னால் என்ன செய்ய இயலும் மக்களே ? ( அவர்கள் தோசையையும் ஸ்பூனில் தான் சாப்பிடுகிறார்கள்). இங்கே டில்லியில் எனது அக்கா ஒருவர் இருக்கிறார். அவர் வட இந்தியர் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டவர். மிக்க மகிழ்ச்சியாகவே இருக்கிறார் என்ற போதும் அவர் சொல்லும் ஒரு குறை என்ன தெரியுமா? எங்க வீட்டுக்காரர் என்னை என் கையால சாப்பிட விட மாட்டிக்கிறார் என்பதே. அதுபோக இவர்கள் தரையில் அமர்ந்து சாப்பிடும் வழக்கம் இல்லாதவர்கள். என் அக்காவிற்கோ தரையில் உட்கார்ந்து சாப்பிட்டால்தான் சாப்பிட்டபடியே இருக்கும். என்ன செய்வது அவரது கணவர் இல்லாத சமயங்களில் தரையில் உட்கார்ந்து ஒரு கட்டு கட்டுகிறார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அப்படி இவ்வளவு கஷ்டப்பட்டு ஏன் அங்கு இருக்க வேண்டும் என்று நீங்கள் கேட்கலாம். " பிறக்க ஒரு ஊர். பிழைக்க ஒரு ஊர் ". நான் மட்டும் என்ன விதிவிலக்கா?. இன்னும் எவ்வளோ சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால் யாராவது தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த வட இந்தியர் ஒருவர் இதைப் படிக்க நேரிட்டால் என்னை ஆள் வைத்து அடிக்க ஏற்பாடு செய்யலாம். அதனால் இத்துடன் என் சாப்பாட்டு புலம்பல்களை முடித்துக் கொள்கிறேன்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பி.கு : இதே போன்று வட இந்தியாவில் இருந்து சென்னை வந்து ரொட்டி கிடைக்காமல் புலம்பும் ஜீவன்களுக்கு இக்கட்டுரை சமர்ப்பணம். &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-6397082584374736891?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/6397082584374736891'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/6397082584374736891'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/09/just-for-youi.html' title='just for youi...'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-5064841058547560722</id><published>2011-09-25T23:23:00.000-07:00</published><updated>2011-09-25T23:23:26.758-07:00</updated><title type='text'>Na.Murugesh.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;வெளியிலிருந்து வருகிறவர்கள்: யாசிப்பவர்கள் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ந. முருகேசபாண்டியன் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைப் பசலென்ற இயற்கை எழிலும் தூய்மையான காற்றும் எனக் கிராமம் பற்றிப் பொதுப் பிம்பம் கட்டமைக்கப்பட்டுளளது. எல்லோரும் தன்னிச்சையுடன் சுதந்திரமாக இயங்குகிற போது சந்தோஷமும் உற்சாகமும் பொங்குவதாகத் தோன்றும். கள்ளம் கபடமற்ற வெள்ளந்தியான மனிதர்களின் சுபாவம் மனதுக்கு நெருக்கமாக இருக்கும். இவையெல்லாம் ஒருபக்கக் காட்சிகள். இன்னொருபுறம் கிராமம் என்றாலே கண்காணிப்புக்கு உட்பட்ட இறுக்கமான அமைப்பு என்பது பலருக்குத் தெரியாது. சாதி, மதம், வீட்டு வகைப்பு என ஒவ்வொருவரின் அடையாளமும் வரையறுக்கப்பட்டிருக்கும். ஒரு பெரிய கிராமம் எனினும் அங்கிருக்கும் ஒவ்வொருவருடைய நெற்றியிலும் இன்னார் பேரன், இன்ன சாதியைச் சார்ந்தவர் என்பது பதிவாகியிருக்கும். அதிகாரத்தின் வீச்சும் கண்காணிப்பின் அரசியலும் எல்லோருடைய வாழ்க்கையிலும் பதிவாகியிருக்கும். ஊருக்கு வெளியே இருக்கும் ஓடையில் வெள்ளம் புரண்டோடும்போது, பத்துப் பன்னிரண்டு வயதில் சிறுவர்கள் குதித்து நீச்சலடித்துக் கரையேறுவோம். அந்தத் தகவல் எங்கள் தலைமுடி காய்வதற்குள் எங்கள் பெற்றோரின் காதுகளுக்குப் போய்விடும். சின்னப் பையன்களுக்குக் கூட சுதந்திரமான இயக்கம் சாத்தியப்படாது. அதிலும் ஆதிக்கச் சாதியினரின் அதிகாரம் சிறுவர்களின் மீது பாய்வது கொடூர மாக இருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராமம் என்பது பெரும் வெளி போலத் தோன்றினாலும், அவ்வமைப்பிற்குள் வெளியிலிருந்து வந்து போகிறவர்கள் யார்யாரெனத் தெரிந்துவிடும். பொதுவாகக் கிராமத்திற்குப் பரதேசிகளும் சாமியார்களும் வந்து போய்க் கொண்டிருப்பார்கள். அவர்களை யாரும் தொந்தரவாகக் கருதமாட்டார்கள். பகல் முழுக்க வெயிலில் கடுமையாக உழைத்துச் சம்பாதிக்கும் குடியானவர்கள், எவ்விதமான உடலுழைப்பும் இல்லாமல், வீட்டு வாசலில் சோறு கேட்டு நிற்பவர்களைக் கேவலமாக எண்ண மாட்டார்கள். காவியுடை அணிந்த சாமியார்கள் தவிர பிச்சைக்காரர்களும் கிராமத்துக்கு வருவார்கள். ‘நல்ல உடம்பு இருக்கு, உடல் வளைஞ்சு வேலை செய்தால் என்ன கொள்ளை' என்று சொல்வதைச் சாதாரணமாகக் கேட்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;‘அன்னைக் காவடி' தூக்கி வரும் சாமியார் உரிமையுடன் தானியம் கேட்டு வருவார். குளித்து முடித்துச் சுத்தமான காவியுடை உடுத்தி உடம்பெங்கும் திருநீறு பட்டையுடன் சாமியார் வருவார். அவருடைய தோளில் காவடி இருக்கும். உலக்கை மாதிரியான மரமானது வெண்கலப் பூண் பொருத்தப்பட்டிருக்கும். மரத்தின் இடையே பித்தளையிலான பூ வேலைப்பாடு மிக்க தகடுகள் பதிக்கப்பட்டிருக்கும். மரத்தின் முன்னும் பின்னும் தொங்கும் பித்தளைச் சங்கிலியில் தொங்கும் பித்தளைப் பாத்திரங்களில் திருநீறு பட்டையின் பளபளவென மின்னும். மரத்தில் பொருத்தப்பட்டுள்ள வெண்கல மணிகள் சாமியார் நடக்கும்போது ஒலித்துக் கொண்டேயிருக்கும். அவர் வீட்டு வாசலில் நின்று ‘அன்னக் காவடி’ என்று குரல் மட்டும் கேட்பார். சாமியாரின் மிடுக்கான தோற்றப் பொலிவும் பளபளக்கும் பித்தளைக் காவடியும் காரணமாக யாரும் இல்லை' என்று சொல்லமாட்டார்கள். பிச்சை கேட்பதை கலை நுணுக்கத்துடனும் அழகாகவும் கேட்ட ‘அன்னக் காவடிகள்' எழுபதுகளிலே காணாமல் போய்விட்டனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பிச்சை கேட்டு வருவதில் கௌரமாகச் செயற்படுகிறவர்கள் உலகமெங்கும் இருக்கின்றனர். பூம்பூம் மாட்டை ஓட்டிக் கொண்டு, தோளில் உறுமியை மாட்டிக் கொண்டு வீடுவீடாக வரும் பூம்பூம் மாட்டுக்காரர் கிராமத்துத் தெருக்களில் கவர்ச்சிகரமானவர். பூம்பூம் மாட்டின் முகத்தில் அழகிய வண்ணமயமான முகபடம் அணியப்பட்டிருக்கும்; கொம்புகளில் பல வண்ணத் துணிகளால் சுற்றுப்பட்டு நுனியில் குஞ்சலம் தொங்கவிடப்பட்டிருக்கும் துணியில் ஆங்காங்கே கோலிகள, பாசிகள் பொருத்தப்பட்டு பார்க்க அழகாக இருக்கும். பூம்பூம்மாடு தானகவே நடந்து போகும். மாட்டுக்காரர் கழுத்தில் கட்டித் தொங்க விட்டுள்ள உறுமி மேளத்தை அடித்துக் கொண்டு பின்னே நடந்து வருவார். வீட்டு வயலில் நிற்கும் மாட்டிடம், மாட்டுக்காரர், ‘இந்த வீட்டு மகராசி மகாலட்சுமி நமக்கு அரிசி போடுவாங்களா' என்று கேட்பார். அம் மாடு ‘ஆமாம்’ என்பது போலத் தலையை ஆட்டும். ‘இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரபோகுமா' என்ற கேள்விக்கும் மாடு தலையை அசைக்கும். மாட்டுக்காரர் கேட்கும் கேள்விகளுக்கு மாட்டின் எதிர்வினை பார்க்க வேடிக்கையாகவும் அழகாகவும் இருக்கும். அரிசியை வாங்கியவுடன் மாட்டுக்காரர், ‘அம்மாவுக்கு வணக்கம் சொல்லு' என்றவுடன், மாடு முன்னங்காலை மடித்து, தலையைத் தாழ்த்தி வணக்கம் செய்வது அருமையான காட்சியாக இருக்கும். பூம்பூம் மாடு போகும் வீட்டிற்குப் பின்னால் சிறுவர் சிறுமியர் திரண்டு படை போலப் பின்னேயே போவார்கள். அந்த மாடு, மாட்டுக்காரரின் எல்லாப் பேச்சுக்கும் பணிந்து செயற்படுவது எப்படி என்று சிறுவர்கள் லயிப்புடன் பேசிக் கொள்வார்கள். பூம்பூம் மாடு இல்லாத தெருக்களாய் இன்றைய கிராமத்துக் தெருக்கள் வறண்டு போய்விட்டன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கிராமத்தினர் தேநீர் குடிப்பது வீட்டு வாசலில் அல்லது திண்ணையில் தான். இரவு உணவை வீட்டுக்கு முன்னே தரையில் அமர்ந்து சாப்பிடும் குடும்பங்களும் ஊரில் உண்டு. பெரும்பாலும் பகல்வேளையில் ஓய்வாக இருக்கும்போது வீட்டுத் திண்ணைகள் தால் தங்குமிடமாக இருக்கும். தொளதொளத்த சட்டை தோளில் கறுப்புப் போர்வை, தலையில் பெரிய உருமா, கையில் கம்புடன் திடீரென ஒரு பெரியவர் வீட்டு வாசலில் வந்து நின்று, ‘இந்த வீட்டுக்கு நல்ல சேதி வரப் போகுது' என்று சொல்லிவிட்டுக் கையிலிருக்கும் குடுகுடுப்பையை ஆட்டுவார். மணிச்சத்தத்துடன் ஒலிக்கும் சிறிய உடுக்கையின் ஓசை வீட்டிலிருப்போர் கவனத்தை ஈர்க்கும். ‘ஜக்கம்மா சொல்றா. . . . நினைச்ச காரியம் நடக்கப் போகுது’ என்று சொல்லும்போது, அவரைத் தவிர்க்கவியலாமல் போய்விடும். குடுகுடுப்பைக்காரர்கள் நல்ல சேதியை நன்னம்பிக்கையாக எல்லோருடைய மனங்களிலும் விதைத்துக் கொண்டிருந்தனர். ‘இந்த வீட்டில் ஒரு கன்னி- தீயில் மாண்ட கன்னி ஈசன மூலையில் இருக்கா- அவள் ஒரு குறையு வராமல் பார்த்துக் கொள்ளுவாள்' என்று சொன்னவுடன், வீட்டுக்காரர் அரைக்கால் படியளவு அரிசி அல்லது சில்லறைக் காசைக் கொடுப்பார். ‘சாமி ஏடு போட்டுப் பார்க்கலாமா’ என்றவுடன் சரி எனத் தலையை ஆட்டினால் போதும். குடுகுடுப்பைக்காரர் திண்ணையில் உட்கார்ந்து, கண்களை மூடி, ‘தாயே ஜக்கம்மா நல்ல வாக்கு சொல்லு. . .நல்ல வழி காட்டும்மா’ என்று வேண்டி கையில் பனையோலை ஏட்டைக் கையில் வைத்துக் கொண்டு சிறிய கம்பியை வீட்டுக்காரரிடம் கொடுப்பார். அவர் ஓலைகளுக்கிடையில் கம்பியை நுழைத்தவுடன் அந்த ஏட்டிலுள்ள படம், வாசரங்களைக் குடுகுடுப்பைக்காரர் காட்டுவார். இம்மாதிரி மூன்று தடவைகள் காட்டுவார். புராணக் காட்சிகள், சாமி படங்கள் கோட்டோவியமாக வரையப்பட்டிருக்கும் ஓலையை வைத்து எதிர்காலப் பலன்கள் சொல்லப்படும். சீதை அசோகவனத்தில் இருக்கும் ஓவியம் வந்தால், ‘இப்ப உங்களுக்குக் கஷ்டகாலம்தான். ராமபிரான் வந்து காப்பாத்துற மாதிரி விரைவில் அது நீவ்வி விடும்' என்று சொல்லும்போது கேட்பவர்கள் தலையை ஆட்டுவார்கள். பெரும்பாலும் கண்ணேறு, கண் திருஷ்டி காரணமாக உடல் நலக் கோளாறு, பொருளாதாரச் சுணக்கம் ஏற்பட்டுள்ளது, பரிகாரம் பண்ண வேண்டும் என்று குடுகுடுப்பைகாரர் சொல்லும் தொனியே, கேட்பவருக்குப் பயத்தை உருவாக்கிவிடும். தான் ஏதோ மீள இயலாத பிரச்சனை, உருவாக்கி விடும். கஷ்டத்தில் மாட்டியிருப்பதாக நினைக்கத் தொடங்குவார். பிறகென்ன? கோழி, பழைய வேட்டி, நிறை நாழி நெல், 51 ரூபாய் தட்சிணையை வாங்கிக்கொண்டு போய் தீட்டுக் கழிக்கிறேன் என்று விளம்பிப் போய் விடுவார். தலைக்கு வந்தது. தலைப்பாகையோடு போனது போல வீட்டுக்காரர் நினைத்துக் கொள்வார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இரவுவேளை. அம்மாவாசை அன்று கும்மிருட்டாக இருக்கும். தெரு விளக்கு எல்லாம் கிராமத்துக்கு வராத காலம். திடீரென நள்ளிரவு நேரத்தில் இருளைக் கிழித்துக் கொண்டு குடுகுடுப்பை. ஒலிக்கும் சத்தம் கணீரெனக் கேட்கும். தெரு நாய்களும் இடைவிடாமல் குரைத்துக்கொண்டிருக்கும். தூக்கம் வராமல் புரண்டு படுத்துக் கொண்டிருக்கும் பெரிசுகள் எழுந்து உட்கார்ந்து காதைக் கூர்மையாக்குவார்கள். நாய் குரைக்கும் சத்தம் கேட்டு விழிக்கும் சிறுவர்களுக்குக் குடுகுடுப்பைச் சத்தம் பயத்தை ஏற்படுத்தும். உண்களை இறுக்க மூடிக் குப்புறப்படுத்துக் கொள்வார்கள். பேய்களும் முனிகளும் உலாவும் நள்ளிரவில் சுடுகாட்டுக்குப் போய்விட்டு வந்து ஜக்கம்மாவின் அருளுடன் குறி சொல்லும் குடுகுடுப்பைக்காரரின் வாக்கினை வரிக்கு வரி உண்மை என்று நம்புகிறவர்கள் ஊரில் பலர் இருந்தனர். “இந்த வீதியிலே இருக்கிற ஒரு வீட்டுக்கு கெட்ட சேதி வரப் போகுது. . . ஜக்கம்மா சொல்றா. . . பெரிய உசிரு போய்ச் சேரப்போகுது. . . ஐயோ. . .ன்னு போகப் போகுது. . . ஜக்கம்மா சொல்றா” என்று சொல்லிவிட்டு குடுகுடுப்பையை ஒலித்தவாறு நடந்து போகிற குடுகுடுப்பைக்காரரின் ‘பேச்சு' அடுத்த நாள் பகலில் தெரு முழுசாகப் பேச்சாக இருக்கும். சில வீடுகளில் முன்னால் ஓரிரு வார்த்தைகளிலும் வாய்க்கு வந்ததை ‘வாக்கு' என்ற பெயரில் சொல்லிவிட்டுப் போகிற சாமக் கோடாங்கி அல்லது ராக் கோடாங்கியின் சொல்லுக்குக் கிராமத்துப் பெரும் மதிப்பு இருந்தது. இருட்டில் சாமக் கோடாங்கி எதிரில் போக பெரிய ஆட்களே பயப்படுவார்கள். ஏதாவது கெட்டது நிகழ்ந்துவிடும் என்று நம்பினர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;மறுநாள் பகலில் அதே குடுகுடுப்பைக்காரர் ஊருக்குள் வந்து வீடுவீடாகக் குறி சொல்லும்போது, நெல், அரிசி அதிகம் கிடைக்கும். சில பெண்கள் நேற்று ராத்திரி சொன்ன குறியை இன்னும் விளக்கமாகக் சொல்லுமாறு கேட்டுக் காசு தருவார்கள். கிராமங்களில் பெரும்பாலும் வயதானவர்கள் சரியான பரமாரிப்பின்றி திண்ணையில் கட்டப்பட்டுள்ள தென்னந்தட்டி அல்லது சாக்குப் படுதாவுக்குள் படுத்துக் கிடப்பார்கள். அதிலயும் பெரிய உசிரு மேலூருக்குக் கிளம்பி போகுது என்ற வாக்கு, யார் அந்தப் பெரிசு என்று யோசிப்பார்கள். ஓரிரு வாரங்களுக்குள் யாராச்சும் வயதானவர் இறந்து விட்டால் போதும், ‘எனக்கு போன விசாலக் கிழமை ராத்திரி சாமக் கோடாங்கி சொல்றப்பவே சந்தேகமாக இருந்தது. உங்க அப்பச்சி தான் போகப் போறார்ன்னு. . . இப்ப எப்படி சரியாய் போச்சுப் பார்த்தாயா' எனது இழவு வீட்டில் பேசிக் கொண்டிருப்பார்கள். குடுகுடுப்பைக்காரர் எங்கிருந்து வருகிறார் என்று யாருக்கும் தெரியாது. உம்பளத்து நாயக்கரு. . ஜக்கம்மாவோட அருள் பெற்றவர் வாக்குப் பலிக்கும் என்ற நம்பிக்கை மட்டும் பரவலாக இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அறுவடை நேரம் கிராமத்தில் ஆணும் பெண்ணுக்கும் ஆயிரத்தெட்டு வேலைகள் இருக்கும். அந்த ஒரு மாதம் யாருக்கும் உட்கார நேரமிருக்காது. அந்த நேரத்தில் மணியாட்டிக்காரர்கள் ஊருக்குள் நுழைவார்கள். அவர்களுக்கு நாழிக்காரர் என்று இன்னொரு பெயர் இருந்தது. வெள்ளையிலான நீள அங்கியை உடலில் அணிந்திருப்பார்கள் (நைட்டி போல இருக்கும்). தலையில் வெள்ளைத் தலைப்பாகை. அதில் பித்தளைப் பிறை இருக்கும். பிறையின் நடுவில் மயிலிறகு சொருகப்பட்டிருக்கும் வெண்கலத்தினால் பெரிய மணியை வைத்திருப்பார்கள். தோளில் நெல்லை வாங்குவதற்காகப் பெரிய பையைக் கோர்த்திருப்பார்கள். இன்னொரு கையில் கம்பு இருக்கும். இடது கையில் வைத்திருக்கும் மணியை ஆட்டிக் கொண்டே வீடு வீடாகப் போவார்கள். குடிசை வீட்டுப்பக்கம் போக மாட்டார்கள். நிலம் வைத்திருப்பவர்கள், ஓரளவு வசதியானவர் வீட்டு வாசலில் நின்று மணியை ஆட்டியவாறு பாடத் தொடங்குவார்கள். அந்தப் பாடல் வாழ்த்துவது போலிருக்கும். ‘பொலி பெருசு. . . பட்டி பெருசு. . .உளம் பொலிய. . .’என்று எல்லாமே நல்லபடியாக நடக்க வேண்டும்; குடியானவர்களுக்கு நல்ல மகசூல் காண வேண்டும் என வேண்டுவதிலும் கேட்பவர்களுக்கு மன நிறைவு ஏற்படும். நெல் கொண்டுவந்தால் நாழி அளவு நெல் பிடிக்கும் மணியைக் கவிழ்த்துப் பிடித்து இரு தடவைகள் நெல்லை வாங்கிக் கொள்வார்கள். பணம் எனில் குறைந்தது ஒரு ரூபாய் கொடுத்தால்தான் வாங்கிக் கொள்வார்கள். இல்லையெனில் வேண்டாம் எனக் கிளம்பிவிடுவார்கள். நெல் அல்லது பணம் வாங்கிய வீட்டுச் சுவரில் காவிக்கட்டியினால் ஏதோ கிறுக்கி விட்டுப் போவார்கள். வேறு யாராவது மணியாட்டிக்காரர் வந்தால், ஏற்கனவே கொடுத்தாச்சு என்றால், காவிக் கிறுக்கலைப் பார்த்து விட்டுப் போய் விடுவார்கள். மணியாட்டிக்காரர்களுக்கு நெல் கொடுக்க வேண்டிய கட்டாயம் எப்படி ஏற்பட்டது என்பது புலப்படவில்லை. கடந்து பத்தாண்டுகளாக மணியாட்டிக் காரர்கள் வருவதில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பச்சைத் துணியைத் தோளில் மடித்துப் போட்டுக் கொண்டு, தலையில் சிறிய வெள்ளைக் குல்லாயை மாட்டியுள்ள நான்கைந்து பேர் கையில் ‘டேப்’புடன்(பறை) வீடுவீடாக வருவார்கள். நாகூர் ஆண்டவனின் மீது பாடல் பாடும் முஸ்லிம் பாடகர்களின் குரல் கணீரென ஒலிக்கும். டேப்பின் ஓசையும் அதன் வளையத்தில் பொருத்தப்பட்டுள்ள சிறிய வெண்கல மணியின் ஓசையும் கேட்பதற்கு இனிமையாக இருக்கும். பெண்கள் தங்கள் இடுப்பில் வைத்திருக்கும் குழந்தைகளை அவர்களை நோக்கிக் காட்ட, அவர்களில் ஒருவர் மயிற் தோகையால் குழந்தையின் தலையை மூன்று தடவைகள் தடவுவார். உரத்த குரலில் நபியின் புகழைப் பாடும் அந்தப் பாடகர்களைப் பார்த்தால், யாரும் பிச்சை எடுக்கிறவர்களாகக் கருத மாட்டார்கள். அப்படியொரு எடுப்பான தோற்றமளிக்கும்' உள்ளத்தை உருக்கும் பாடல். கிராமத்தினர் தாங்களாகவே முன்வந்து பணம் அல்லது நெல்லைக் கொடுப்பார்கள். அவர்கள் தெருவைக் கடந்து போன பின்னரும், டேப்பின் ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புரட்டாசி சனிக் கிழமைகளில் காலை வேளையில் ஓரளவு வசதியானவர்கள் வீட்டுமுன்னர், ‘வெங்கட்ராமா கோயிந்தா. . . கோயிந்த லட்சம் கோயிந்தா’என்ற குரல் கேட்கும். வெளியே எட்டிப் பார்த்தால், எங்கள் ஊரில் பல்லாண்டுகளாக வாழந்து வரும் நாயக்கர் இனத்துச் சிறுவர்கள் கையில் நாமம் போட்ட பெரிய சொம்புடன் நிற்பார்கள். நெற்றியிலும் உடம்பிலும் நாமம் போட்டிருக்கும். பள்ளிக்கூடத்தில் தங்களுடன் படித்துக் கொண்டிருக்கும் நண்பர்கள் இப்படிக் கிளம்பியிருப்பது சிறுவர்களுக்குக் குதூகலத்தை ஏற்படுத்திவிடும். அவர்கள் ‘வெங்கட்ராமா கோயிந்தா எனக் கத்தி முடித்தவுடன், பின்னாலேயே போகும் சிறுவர்கள் ‘வெங்கட்ராமா கோயிந்தா. . சட்டியைத் தூக்கிடா நயினா’ என்று கேலியுடன் கத்துவார்கள். ஒரே சிரிப்பாக இருக்கும். பெண்கள் வீட்டிலிருந்து அரிசியைக் கொண்டு வந்து, பெரிய சொம்பில் போடுவார்கள். இப்படி வீடு வீடாகச் சென்று சேகரித்த அரிசியை அவர்கள் என்ன செய்வார்கள் என்பது யாருக்கும் தெரியாது. வீட்டுக்கு வந்த ஆளை எப்படி வெறுங்கையோட அனுப்புவது என்பதுதான் கிராமத்துக்காரர்களின் பிரச்சனை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;குரங்கைப் பிடித்துப் பழக்கி, அதன் இடுப்பில் கயிற்றைக் கட்டி வீடுவீடாக அழைத்து வந்து, வித்தை காட்டும் குரங்காட்டிகள் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருப்பார்கள். எங்கே போய் க் குரங்குக் குட்டியைப் பிடிப்பார்கள்? அதை எப்படிப் பழக்குவார்கள்? அது என்ன உணவு சாப்பிடும்? இப்படிப் பல்வேறு கேள்விகளுடன் சிறுவர்கள் பின்னாடி அலைவார்கள். துணிச்சலான சிறுவர்கள் குரங்குக்கு ஏதாவது காசு கொடுப்பார்கள். குரங்காட்டி குரங்கை பார்த்துக் ‘கை கொடு' என்றவுடன் அது தனது சிறுவனை நோக்கிக் கையை நீட்டிக் குறுக்கும். குரங்குடன் கை குலுக்கிய சிறுவன் கூச்சத்துடன் நெளிவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பார்வையிழந்தோர், தொழு நோயாளிகள், கைகால் இல்லாதவர்கள், வயசான ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் எனப் பிச்சையெடுக்கும் கூட்டத்தினர் கிராமத்துத் தெருக்களில் யாசித்துக் கொண்டிருப்பார்கள். சில வீடுகளில் ஏதாவது போடுவார்கள்; சில வீடுகளில் உலை கொதிக்குது என்பார்கள்; சில வீடுகளில் பெரிய ஆட்கள் வெளியே போயிருக்காரர்கள் என்று சிறுவர்கள் சொல்வார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வருஷம் முழுக்க வயலில் வேலை, கட்டிட வேலை, மண் வெட்டுதல், கிணறு தோன்றுதல் என உடலுழைப்பில் வயதான அப்பா, அம்மா எனப் பலரையும் சம்பாதிக்க வேண்டிய நிர்ப்பந்தம் இருக்கும். ஓரளவு நிலம் வைத்து விவசாயம் பார்க்கும் குடியானவர்கள் வாழ்க்கைத்தரம் உயர்வாக இருக்கும். எந்த வகையிலும் உழைப்பில் ஈடுபடாமல், பிறரை அண்டி வாழும் குடும்பம் ஒருபுறம், ஏதோ ஒருவகையில் திறமையை வெளிப்படுத்தி பொருள் ஈட்ட முயலும் கும்பல் ஒருபுறம் எனப் பலதரப்பட்டவர்கள் வெளியிலிருந்து வந்து கிராமத்து தெருக்களில் திரிந்து கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் பொது நீரோட்டத்திலிருந்து பிரிந்து வந்து, கிராமம் கிராமமாகப் பயணித்து வாழ்ந்து வந்த ‘பரதேசிகள்' ஓருவகையில் வித்தியாசமானவர்கள். இப்படிப்பட்டவர்களைக் கிராமத்தினர் புறக்கணிக்கவில்லை. மனுஷன் என்றால் இப்படித் தானிருப்பான் என்று அங்கீகரிக்கரிக்கவே செய்தனர். காளை மாட்டை உழவு, பரம்படித்தல், வண்டிகளில் பூட்டுதல் எனப் பயன்படுத்திய குடியானவர்களுக்குக் ‘பூம்பூம் மாட்டுக்காரன்’ விநோதமாகக் தெரிந்தது வித்தியாசமில்லை. ‘நல்ல சேதி வரப்போகுது’ என்று நம்பிக்கையை விதைக்கும் குடுகுடுப்பைக்காரனும் நல்லனாகத் தெரிகிறான். ஒருவாய் சோற்றுக்காக வாசலில் நின்று கொஞ்சம் பிச்சைக்காரனும் கேவலப்பட்டவன் அல்ல, அவன் தலையெழுத்து நாலு வீட்டில் பிச்சையெடுத்து வாழ வேண்டியிருக்கு என்று நினைத்தனர்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கண்காணிப்பின் மையமாகக் கிராமம் விளங்கினாலும், அடுத்த வேளை உணவுக்காக அங்கு நுழையும் எவரையும் வெறுக்கவில்லை என்பது தான் உண்மை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;/div&gt;&lt;div class="blogger-post-footer"&gt;&lt;img width='1' height='1' src='https://blogger.googleusercontent.com/tracker/3684183065363105574-5064841058547560722?l=rvrrajen.blogspot.com' alt='' /&gt;&lt;/div&gt;</content><link rel='edit' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/5064841058547560722'/><link rel='self' type='application/atom+xml' href='http://www.blogger.com/feeds/3684183065363105574/posts/default/5064841058547560722'/><link rel='alternate' type='text/html' href='http://rvrrajen.blogspot.com/2011/09/namurugesh.html' title='Na.Murugesh.'/><author><name>Rajendiran RVR</name><uri>http://www.blogger.com/profile/10358876040660020759</uri><email>noreply@blogger.com</email><gd:image rel='http://schemas.google.com/g/2005#thumbnail' width='16' height='16' src='http://img2.blogblog.com/img/b16-rounded.gif'/></author></entry><entry><id>tag:blogger.com,1999:blog-3684183065363105574.post-3867070971849430366</id><published>2011-09-18T07:03:00.000-07:00</published><updated>2011-09-18T07:03:11.503-07:00</updated><title type='text'>Shobasakthi.</title><content type='html'>&lt;div dir="ltr" style="text-align: left;" trbidi="on"&gt;ரூபம் &lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;Print this Page &lt;br /&gt;&lt;br /&gt;இவன் வீட்டின் வாசற்படியை அடைந்த போது வீட்டின் உள்ளே தொலைக்காட்சியில் மகிந்த ராஜபக்ச உரையாற்றிக்கொண்டிருந்தார். இவன் வாசற்படியின் ஓரமாக உட்கார்ந்துகொண்டு தலையைச் சாய்த்துத் தொலைக்காட்சியைப் பார்த்தான். “உங்களைக் கவுரவமாகவும் சுயமரியாதையுடனும் வாழ வைப்பது என்னுடைய பொறுப்பு, நான் இந்த நாட்டு மக்கள் அனைவரதும் தலைவன் ” என ராஜபக்ச தமிழில் பேசிக் கொண்டிருந்தார். அந்த அகலமான தொலைக்காட்சித் திரை முழுவதையும் ராஜபக்சவின் முகம் நிறைத்திருந்தது. அவ்வளவு பெரிய தொலைக்காட்சியை இவன் இப்போதுதான் பார்க்கிறான். தட்டையாகவும் நவீனமாகவும் துல்லியமான ஒலியமைப்புடனும் அது இருந்தது. வீட்டுக்காரரின் மகன் அந்தத் தொலைக்காட்சிப் பெட்டியைச் சவூதியிலிருந்து அனுப்பி வைத்திருக்கலாம். இவன் முகத்தைத் திருப்பி வீதியைப் பார்த்தான். வீதியில் இருள் மண்டியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் சிறுவனாய் இருந்தபோது அம்மாவிடம் தொலைக்காட்சியொன்று வாங்கும்படி இடைவிடாமல் நச்சரித்திருக்கிறான். இறந்து போன அப்பாவின் சொற்ப பென்ஷன் பணம் மட்டுமே இவர்களிற்கு வருமானம். அந்தப் பணத்தில் தான் அம்மா இவனையும் இவனது அக்காவையும் பட்டினியில்லாமல் பள்ளிக்கூடம் அனுப்பிக்கொண்டிருந்தார். அப்போது இந்த வீட்டில் ஒரு சிறிய கறுப்பு வெள்ளைத் தொலைக்காட்சியிருந்தது. இவனும் அக்காவும் இரவு நேரத்தில் இங்கே தொலைக்காட்சி பார்க்க வருவார்கள். அக்காவிற்குத் தொலைக்காட்சி பார்ப்பதில் ஏனோ ஆர்வமில்லை. ஆனால் இருளில் தனியாக வருவதற்கு இவன் பயப்படுவான். அதனால் அக்காவைத் துணைக்கு அழைத்து வருவான். தரையில் அமர்ந்து இவன் கண்கொட்டாமல் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருப்பான். சிறிது நேரமானதுமே அக்கா “வீட்ட போகலாமா” என முணுமுணுப்பாள். அது இவனது காதில் விழாது. அக்கா பொறுக்க முடியாமல் இரகசியமாக இவனது தொடையைக் கிள்ளும்போது, இன்னும் கொஞ்ச நேரம் என இவன் அக்காவிடம் மன்றாடுவான். வீட்டுக்காரர்கள் தேனீரும் அவித்த பனங்கிழங்கும் தருவார்கள். அக்கா வெட்கப்படுவாள். அவற்றை வாங்காவிட்டால் தொலைக்காட்சி பார்க்க அனுமதிக்க மாட்டார்களோ என்ற பதற்றத்திலேயே இவன் அவற்றை வாங்கிக்கொள்வான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் வீட்டில் வெறும் தீப்பெட்டியின் மீது வெள்ளைத்தாளை ஒட்டி நடுவே கத்தரித்து பக்கவாட்டில் வர்ணம் தீட்டித் தொலைக்காட்சிப் பெட்டி செய்து விளையாடிக் கொண்டிருப்பான். பள்ளிக்கூடம் எடுத்துச் செல்லும் பையில் எப்போதும் சில தீப்பெட்டித் தொலைக்காட்சிகள் இருக்கும். கொஞ்சம் வளர்ந்ததும் தொலைக்காட்சி பார்ப்பதற்காக இவன் கிராமத்துக் கடைத் தெருவுக்குப் போகத் தொடங்கினான். அங்கேயிருந்த ‘மீனா கபே’யில் எப்போதும் வண்ணத் தொலைக்காட்சி ஓடிக்கொண்டிருக்கும். தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளைப் பார்க்கும் போது இவன் வசியத்தில் விழுந்தவன் போலிருப்பான். அந்த நேரங்களில் இவனது கண்கள் ஒளிர்ந்துகொண்டேயிருக்கும். எந்த நிகழ்ச்சியும் அவனுக்கு அலுப்பூட்டியதேயில்லை. அலைவரிசைக் குழப்பத்தால் அடிக்கடி தொலைக்காட்சியில் வெறும் புள்ளிகள் மட்டுமே தோன்றும். அந்தப் புள்ளிகளை ஆயிரக்கணக்கான மனிதர்கள் ஓடி வந்துகொண்டிருப்பது போல கற்பனை செய்துகொள்வான். தொலைக்காட்சியில் சிலசமயங்களில் படம் மட்டும் வரும், ஒலி வராது. படத்துக்கு ஏற்ற ஒலிகளை இவனாகவே கற்பனை செய்து ஆர்வமாகப் பார்த்துக்கொண்டிருப்பான். ஒலி மட்டும் வந்தாலும் படக்காட்சிகளை இவனால் கற்பனையில் உருவாக்கிக்கொள்ள முடியும். மின்சாரம் துண்டிக்கப்படும் போது வெறுமனே இவனால் தொலைக்காட்சியைக் கண்ணிமைக்கால் பல நிமிடங்கள் பார்த்துக் கொண்டிருக்கவும் முடியும். தொலைக்காட்சிப் பெட்டியொன்று தான் இவனுக்குத் தேவையானது. அதிலிருந்து படங்களையும் ஒலிகளையும் இவனால் உருவாக்கிக்கொள்ள முடியும். கடை மூடப்படும் போதுதான் இவன் வீட்டுக்குத் திரும்பி வருவான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பக்கத்து வீட்டிற்கு இவன் தொலைக்காட்சி பார்க்கப் போவது குறைந்திருந்தது. இரண்டு நகரங்களை இணைக்கும் நெடுஞ்சாலையின் ஓரத்தில் இவனின் கிராமம் அமைந்திருந்தது. அந்த நெடுஞ்சாலையை ஒட்டித்தான் கடைத்தெரு இருந்தது. அந்த நெடுங்சாலையால் இராணுவம் ரோந்து செல்லும் நாட்களில் கடைத் தெரு வெறிச்சோடிவிடும். இராணுவ வாகனங்கள் துரத்தில் வரும் ஒலி கேட்டவுடனேயே கடைகள் சடுதியில் மூடப்படும். கடைத் தெரு மனிதர்கள் நெடுஞ்சாலையிலிருந்து விலகி ஓடிவிடுவார்கள். இராணுவம் கடை வீதியைக் கடந்து செல்லும் போது சில வேட்டுக்களைத் தீர்க்காமல் செல்வதில்லை. அது வெறுமனே எச்சரிக்கை வெடியாகத்தானிருக்கும். இராணும் ஒருபோதும் நெடுஞ்சாலையிலிருந்து விலகிக் கிராமத்திற்குள் நுழைந்ததில்லை.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;கடைத்தெரு மூடிக் கிடக்கும் நாட்களில் இவன் பக்கத்து வீட்டிற்குத்தான் தொலைக்காட்சி பார்க்கப் போவான். அவர்கள் இப்போது ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சியை வாங்கியிருந்தார்கள். இவன் ஆள் கொஞ்சம் வளர்ந்துவிட்டதால் இப்போது இவனை நாற்காலியில் உட்காருமாறு அவர்கள் வற்புறுத்துவார்கள். நொறுக்குத் தீனிகளும் தேனீரும் கொடுப்பார்கள். அவற்றை வாங்கத்தான் இவன் கொஞ்சம் வெட்கப்படுவான். இவ்வளவுக்கும் இவனது தாயாரும் இந்த வீட்டுக்காரியும் நெருங்கிய சிநேகிதிகள் தான். அவசரத்துக்குச் சீனி, தேயிலை என இருபக்கமும் கைமாற்றும் நடப்பதுண்டு. ஆனால், இவனுக்குத்தான் யாரிடமும் எதுவும் வாங்கிக் கொள்ளவதென்றால் கூச்சமாயிருக்கும். தொலைக்காட்சி விசயத்தில் மட்டும் தான் இவன் கூச்சத்தையும் மீறி நடந்துகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தீப்பெட்டித் தொலைக்காட்சி வைத்து விளையாடும் வயது கடந்து போன போது உண்மையாகவே இவனது வீட்டுக்கு ஒரு சிறிய வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி வந்தது. அக்கா ஆசிரியப் பணியில் சேர்ந்து பெற்ற முதலாவது சம்பளப் பணத்துடன் கையிலிருந்த சேமிப்புப் பணத்தையும் போட்டு அம்மா இவனுக்கு அதை வாங்கிக் கொடுத்தார். இவன் அக்காவிடம் கேட்டு ஓர் அழகிய துணியுறையைத் தைக்கச் செய்து அதனால் தொலைக்காட்சியைப் பத்திரம் செய்தான். பள்ளிக்கூடத்துப் பைக்குள் இப்போது தீப்பெட்டிகள் இல்லை. அதற்குப் பதிலாகத் தொலைக்காட்சியை இயக்க வழிகாட்டும் விபரக்கொத்தை இவன் பைக்குள் எப்போதும் வைத்திருந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பள்ளிக்கூடத்தால் வந்ததும் தொலைக்காட்சியின் முன்னால் உட்கார்ந்துவிடுவான். ஆட அசைய மாட்டான். சிலைபோல தொலைக்காட்சியைப் பார்த்தவாறே உட்கார்ந்திருப்பான். சாப்பிடுவதற்கு அம்மா பத்துத் தடவைகள் கூப்பிட்ட பின்பே குசினிக்குள் ஓடிச் சென்று தட்டை எடுத்துக்கொண்டு ஓடிவந்து தொலைக்காட்சிப் பெட்டிக்கு முன்னால் உட்கார்ந்து விடுவான். இதனால் ஒன்றும் அவனது படிப்புப் பாதிக்கப்பட்டதாகத் தெரியவில்லை. வகுப்பில் எப்போதும் அவன் முன்னணி மாணவனாகவேயிருந்தான். அக்காவிடம் ஒரு நாள் தொலைக்காட்சியைச் சுட்டிக்காட்டி ‘எங்கிட வாத்திமார விட இது பிரயோசனமானது’ என்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;பல்கலைக்கழக அனுமதி சொற்ப மதிப்பெண்களால் தவறிப் போனது. கொஞ்சம் மனம் சோர்ந்து போனான். பகல் முழுவதும் தீவிரமாகப் படித்தான். இரவானதும் அறையிலிருந்த விளக்கை அணைத்துவிட்டு இருளில் நடுநிசி வரை தொலைக்காட்சி பார்த்துக்கொண்டிருப்பான். அம்மா அவ்வப்போது வந்து ‘இருட்டுக்குள்ளயிருந்து பார்க்காத தம்பி, கண் பழுதாப் போகும்’ என்பார். அது இவனின் காதில் ஏறாது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு இருபது வயதானபோது அந்தக் கிராமத்திற்குள் இராணுவம் முதற்தடவையாக நுழைந்தது. இராணுவம் வரும் செய்தி கேட்டுச் சனங்கள் வீடுகளிலிருந்து கையில் அகப்பட்டவற்றை எடுத்துக்கொண்டு உயிர் தப்பச் சிதறியோடினார்கள். அக்கா அப்போது நகரத்தில் அறை வாடகைக்கு எடுத்துத் தங்கியிருந்து நகரத்துப் பாடசாலையில் வேலை செய்ததால் இவனும் அம்மாவும் நகரத்திற்குப் போவதென்று முடிவெடுத்தார்கள். இவர்களது உடமைகள் இரு பெட்டிகளிற்குள் அடங்கிவிட்டன. சைக்கிளின் பின்னால் தொலைக்காட்சியை வைத்துக் கட்டிக் கொண்டான். நெடுஞ்சாலை ஓரத்தில் நின்று நகரத்திற்குச் செல்லும் வாகனமொன்றில் அம்மாவையும் பெட்டிகளையும் ஏற்றி விட்டு இவன் வாகனத்தைச் சைக்கிளில் பின் தொடர்ந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நகரத்திற்கு வந்ததும் கிடைத்த விலைக்கு தொலைக்காட்சியை விற்றான். மிகச் சொற்பமான பணமே கிடைத்தது. நகரத்திலிருந்த உறவினரின் கடையொன்றிற்குச் சென்று அங்கே சைக்கிளை நிறுத்திவிட்டு, சற்று நேரத்தில் வருவதாகக் கூறிவிட்டு நடந்து பஸ் நிலையம் வந்து பஸ்ஸில் ஏறி உட்கார்ந்தான். நான்கு மணிநேரப் பயணத்தில் இருபது சோதனைச் சாவடிகளைக் கடக்க வேண்டியிருந்தது. நெடுஞ்சாலையின் ஓரத்தில் இறங்கியவன் அங்கிருந்து வயல்வெளிகளுக்குள்ளால் காட்டை நோக்கி நடந்தான். இடையிடையே எதிர்ப்பட்டவர்களிடம் வழியை விசாரித்துக்கொண்டான். இரவாகிக்கொண்டிருந்தாலும் காட்டின்மீது நிலவு வெளிச்சம் போட்டது. இரவு முழுவதும் காட்டுப் பாதையால் நடந்து ஒரு கிராமத்தை அடைந்தான். அங்கே விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் காட்டிற்குள்ளால் நடந்துவந்து இயக்கத்தில் சேர்ந்ததாலோ என்னவோ இவனுக்குக் கானகன் என்று இயக்கத்தில் பெயர் வைத்தார்கள். ஆனால், தோழர்கள் இவனை ‘யங்கிள்’ என்றே அழைத்தார்கள். தாக்குதலின் முன்னணி அணியில் யங்கிள் நின்றால் அந்தத் தாக்குதல் வெற்றிதான் என்று இயக்கத்திற்குள் கதை இருந்தது. போரிடவே பிறந்தவன் போல அவன் இருந்தான். அவனது இடது கண்ணிற்கு திட்டமிடல் என்றும் வலது கண்ணிற்கு துணிச்சலென்றும் பெயர். அவனது இடது காலிற்கு நிதானம் என்றும் வலது காலிற்கு வேகமென்றும் பெயர். எத்தனையோ முற்றுகைகளை முன்னணியில் நின்று முறியடித்திருக்கிறான். அவனது அணி முழுவதுமாகச் சிதைக்கப்பட்ட நிலையிலும் தனியாளாகப் போராடித் தளம் திரும்பியிருக்கிறான். கடைசியில் விமானக் குண்டு வீச்சொன்றில் வேகமெனப் பெயரிடப்பட்ட கால் துண்டிக்கப்பட்டது. நிதானம் எனப் பெயரிடப்பட்ட கால் எஞ்சியிருந்தது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;ஊன்றுகோலின் உதவியுடன் அவன் முகாமில் நிதானமாக நடந்து திரிந்தான். அம்மாவிற்கோ அக்காவிற்கோ தான் காலிழந்த செய்தி தெரியாமல் பார்த்துக் கொண்டான். யுத்த நிறுத்தம் வந்தபோது கூட இவன் அம்மாவைப் பார்க்கப் போகவில்லை. இவன் இருக்குமிடமும் அம்மாவிற்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான். ஒரு வருடத்திற்குப் பின்பு புலிகளின் தொலைக்காட்சியில் தான் அம்மா இவனைப் பார்த்தார். அடுத்த வாரமே அம்மாவும் அக்காவும் இவனைத் தேடி வந்தார்கள். இவன் பயந்தது போல எதுவும் நடக்கவில்லை. அம்மா இவனது கால் துண்டிக்கப்பட்ட பகுதியை மட்டும் தடவிக்கொடுத்தார். உற்சாகமாகப் பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;புலிகளின் தொலைக்காட்சியில் இவன் மூன்று நிகழ்ச்சிகளிற்குத் தொகுப்பாளராயிருந்தான். அவற்றில் ‘விடுதலை கீதங்கள்’ என்ற அரை மணிநேர நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. சாந்தன், தேனிசை செல்லப்பா, சுகுமார், சிட்டு போன்றோரின் புகழ்பெற்ற பாடல்களை இவன் தொலைக்காட்சியில் தொகுத்து வழங்குவான். பாடல்களிற்கு முன்பு இவன் சொல்லும் கவிதை வரிகளும் இவனது உணர்ச்சி துள்ளும் ஏற்ற இறக்கமான கம்பீரமான குரலும் மக்களைச் சொக்கச் செய்தன. சாந்தன் ஒருமுறை இவனிடம் ‘என்னைவிட உங்களுக்குத்தான் கனக்க ரசிகர்கள்’ எனச் சொல்லிச் சிரித்தார்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;வழிதெருவில் இவனை மக்கள் காணும் போது இவனைச் சூழ்ந்து கொண்டார்கள். இவன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் தோன்றும் போது உட்கார்ந்துகொண்டிருப்பதால் இவனிற்கு ஒரு கால் இல்லை என்பது பலருக்குத் தெரியாது. அந்தக் கம்பீரக் குரல் ஊன்றுகோலோடு தடுமாறி நடந்து வருவதை அவர்கள் நேரில் பார்த்தபோது அவர்களது கண்கள் இருண்டு போயின. சில தாய்மார்கள் இவனை அணைத்து உச்சி மோர்ந்தார்கள். இழந்து போன குழந்தைகள் அவர்களிற்கு ஞாபகம் வந்திருக்கலாம்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவனுக்கு ஏராளமான நேயர் கடிதங்கள் வந்தன. அவற்றில் காதல் கடிதங்களும் இருந்தன. அந்தக் கடிதங்களை இவன் தனிமையில் புன்னகையோடு படித்துவிட்டுக் கிழித்துப் போடுவான். ‘ இயக்கத்துக்கே காதல் கடிதம் எழுத எங்கிட பெட்டையள் துணிஞ்சிற்றாளவ’ என அவனது உதடுகள் முணுமுணுக்கும்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;சமாதான காலத்தில் வன்னியிலிருந்து இசைக்குழுவொன்று அய்ரோப்பாவிற்கு புலம் பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் இசை நிகழ்ச்சிகள் நடத்தச் சென்றபோது நிகழ்ச்சித் தொகுப்பாளராக இவனும் அவர்களுடன் சென்றான். இவன் தான் அவசியம் வர வேண்டுமென நிகழ்ச்சி அமைப்பாளர்கள் கேட்டிருந்தனர். விமானத்தில் மது வழங்கப்பட்ட போது இவனுக்கு அருகிலிருந்த பாடகன் ‘ கன நாளாப் போச்சுது, ஒண்டு எடுக்கவா” என இவனிடம் பகடி மாதிரிக் கேட்டான். இவன் முறைத்த முறைப்பில் பாடகன் “குடிக்கிறதில ஒண்டுமில்ல ஆனால் குரலுக்குக் கூடாதெல்லா” என முனகிவிட்டு இருக்கையில் சாய்ந்துகொண்டான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அய்ரோப்பிய நகரங்களில் பெருந்தீனியால் இவனுக்கு வயிற்று வலியே வந்துவிட்டது. தங்களது வீட்டிற்குச் சாப்பிட வரவேண்டும் என மக்கள் அடிக்காத குறையாக இவனைத் தங்களது வீட்டிற்கு முறை வைத்துக் கடத்திச் சென்றார்கள். நிகழ்ச்சிகளின் போது இவன் மேடைகளில் தோன்றும் போதெல்லாம் இளைஞர்கள் ஆரவாரித்துக் கூக்குரலிட்டார்கள். அங்கிருந்து திரும்பும் போது விலையுயர்ந்த பரிசுப் பொருட்களால் இவனது பெட்டி நிரம்பி வழிந்தது. கொழும்பு விமான நிலையத்தில் சோதனையின் போது பரிசுப் பொருட்களில் ஒன்றைக் கையிலெடுத்து “இதை எனக்குத் தருவாயா” என அதிகாரி கேட்ட போது, அதை அதிகாரியே எடுத்துக் கொள்ளுமாறு புன்னகையுடன் கைகாட்டினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;முகாமுக்குத் திரும்பியவுடனேயே எல்லாப் பரிசுப் பொருட்களையும் தோழர்களிற்குப் பகிர்ந்து கொடுத்தான். அவனுக்கென்று எஞ்சியவை காதலைத் தெரிவிக்கும் மூன்று வாழ்த்து அட்டைகள் மட்டுமே. பாரிஸ் நகரத்தில் இரண்டு அட்டைகளும் சுவிஸில் ஓர் அட்டையும் கிடைத்திருந்தன. பாரிஸ் அட்டைகள் இரண்டும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்தன. சுவிஸ் அட்டையில் மழலைத் தமிழில் ஒரு மட்டமான காதல் கவிதை எழுதப்பட்டிருந்தது. அவற்றில் எழுதப்பட்டிருந்தவற்றுக்காக அல்லாமல் அந்த அட்டைகளின் அழகிற்காக அவற்றைக் கிழித்துப் போட மனமற்றவனாய் எடுத்து வந்திருந்தான். முகாமில் வைத்து அவற்றையும் கிழித்துப் போட்டான். முகாமிலிருந்த தோழர்களிற்கு விடிய விடிய அய்ரோப்பியப் பயணக் கதைகளைச் சொன்னான். புலம் பெயர்ந்த தமிழர்கள் இருக்கும் வரை போராட்டத்தை எவராலும் அழித்துவிட முடியாது என நம்பினான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;நந்திக் கடலின் ஓரத்தில் இவனது அணி சரணடையும் முடிவை எடுத்த போது இவன் அந்த இடத்திலேயே சயனைட் குடித்துவிடலாம் என்றான். சாவதால் ஆகப்போவது எதுவுமில்லை எனப் பொறுப்பாளர் சொன்னார். துப்பாக்கிகள், சீருடைகள், இலக்கத் தகடுகள், சயனைட் குப்பிகள் எல்லாம் மணலில் புதைக்கப்பட்டதும் அணி சிதறி மக்களுக்குள் கரைந்து போனது. இவனுக்கு சயனைட் குப்பியைப் புதைக்க விருப்பமில்லை. அதை மடியில் செருகிக் கொண்டு நந்திக் கடலோரமாக நடந்து வந்தான். கடல் நீரேரியைக் கடந்து இராணுவத்தின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் செல்ல ஆண்களும் பெண்களும் குழந்தைகளுமாக ஒரு படகில் இருபது பேர் வரை தயாராக இருந்தார்கள். இராணுவத்திடமிருந்து வரும் ஷெல் வீச்சுகள் குறையும் போது படகு புறப்படுவதாகத் திட்டம். இவன் செயற்கைக் காலைக் கழற்றிக் கரையிலேயே வைத்து விட்டு ஊன்றுகோலுடன் அந்தப் படகில் ஏறிக்கொண்டான். ஷெல் வீச்சு நின்றிருந்த ஒரு தருணத்தில் படகு புறப்பட்டது. இவன் சயனைட் குப்பியைக் கடல் நீரில் எறிந்தான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;படகு கரையை அடையும் போதுதான் கரையிலேயே வரிசையாக இராணுவீரர்கள் படகை எதிர் நோக்கித் துப்பாக்கிகளைக் குறிவைத்துக் கரையோடு கரையாகப் படுத்துக் கிடந்தது தெரிந்தது. இவர்கள் படகை விட்டு இறங்கியதும் “ஆடைகளைக் களைந்து விட்டு வாருங்கள்!” என்ற உத்தரவு வந்தது. இவர்கள் ” அய்யா நாங்கள் பொது மக்கள்” எனக் கூக்குரலிட்டார்கள். ஆடைகளைக் களையுமாறு மறுபடியும் உத்தரவு வந்தது. இவர்கள் தயங்கி நின்றபோது கரையிலிருந்து சரமாரியாக வெடிகள் கிளம்பின. கடல்நீர் துடித்துச் சிதறியது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள் எல்லோருமே ஆடைகள் முற்றாகக் களையப்பட்டு அவர்களது உடல்களிலே வெடிப்பொருட்கள் கட்டப்பட்டிருக்கின்றனவா எனப் பரிசோதிக்கப்பட்டனர். அந்த மனிதர்களை முழு நிர்வாணமாகவே ஒரு கிலோமீற்றர் நடத்திச் சென்ற இராணுவம் அங்கிருந்த பஸ்ஸில் ஏற்றியதன் பின்பாகத்தான் அவர்களை ஆடைகள் அணிந்துகொள்ள அனுமதித்தது. இவன் தலையைக் குனிந்தவாறேயிருந்தான். எவரையும் ஏறிட்டுப் பார்க்க இவன் விரும்பவில்லை. மணிக்கணக்காக பஸ் ஓடிக்கொண்டிருந்தது. குழந்தைகள் தாகத்தாலும் பசியாலும் வெப்பத்தாலும் அழுதபோது அவர்களது தாய்மார்களால் ‘பளாரென’ அறையப்பட்டு அடக்கப்பட்டன. வவுனியா தடுப்பு முகாமில் பஸ் நின்றபோது இவன் தலையைக் கவிழ்ந்தவாறே இறங்கினான். பூமியைத் தவிர இவனது கண்கள் எதையும் பார்க்கவில்லை. வரிசையில் உட்கார்ந்திருந்தபோது இவனது தோளைத் தொட்டு ஒரு இரகசியக் குரல் ‘கானகன்’ என அழைத்தது. சடுதியில் இவன் தலை நிமிர்த்திப் பார்த்தபோது ஓர் இராணுவ அதிகாரி இவனைப் பார்த்து இளித்துக் கொண்டு நின்றான். தரையில் கிடந்த ஊன்றுகோலைக் கையில் எடுத்தவாறே மறுகையால் இவன் எழுந்திருக்க அதிகாரி உதவினான். இவன் எழுந்ததும் ஊன்றுகோலைக் கொடுத்து விட்டு இவனது தோள் பற்றி அதிகாரி அழைத்துச் சென்றான்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தகரங்களால் அடைக்கப்பட்டிருந்த அந்தச் சிறிய அறைக்குள் தான் விசாரணை தொடங்கியது. இவனது உண்மையான பெயரைக் கேட்ட போது ரவிக்குமார் என்றான். இயக்கப் பெயர் கானகன் என்றான். “உனக்கு யங்கிள் என்று இன்னொரு பெயரும் இருக்கிறதே’ எனச் சொல்லி அதிகாரி சிரித்தான். எந்த உண்மையை மறைத்தும் பலனில்லை என்பது இவனுக்குத் தெரிந்தது. ஆனால், முடிந்தவரை உண்மைகளைப் பேசிவிடாமலிருப்பது தனது கடமை என்று இவன் நினைத்தான். ஆனால், விசாரணையின் போக்கில் மறைப்பதற்கு எந்தத் தகவல்களும் இவனிடம் இல்லாமற் போயின. விசாரணை ஒரு பேரேட்டில் பதிவாகிக்கொண்டிருந்தது. சுற்றி நின்ற இராணுவத்தினரில் சிலர் இவனை செல்போன் வீடியோவில் பதிவு செய்தவாறிருந்தார்கள். இவன் தலையைக் குனிந்தபோதெல்லாம் ஒரு சிங்கள வசைச் சொல்லுடன் இவனது தலை அவர்களால் தூக்கி நிறுத்தப்பட்டது. “கானகன் தான் சங்கடப்படுகிறாரே, படம் பிடிப்பதை நிறுத்துங்கள்” என அதிகாரி புன்னகையுடன் உத்தரவிட்டதும் படம் பிடிப்பது நிறுத்தப்பட்டது. இவன் எதிர்பார்த்த மாதிரியே பிறகு சம்பவங்கள் நிகழ்ந்தன.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;தரையோடு தரையாக நகர முடியாது கிடக்கும் ஒரு முயலை அடிப்பதுபோல சுற்றிநின்று தடிகளாலும் துப்பாக்கியின் பின்புறங்களாலும் இவனை அடித்துக்கொண்டேயிருந்தார்கள். அவர்களது கேள்விகளிற்கு இவனுக்கு உண்மையிலேயே பதில் தெரியாது. இவனை உட்கார வைத்து விட்டு அசையவிடாமல் பிடித்துக்கொண்டே இவனது துண்டிக்கப்பட்ட காலின் தொடைப் பகுதியிலிருந்து மிக நிதானமாகவும் திருத்தமாகவும் ஒரு துண்டுத் தசையைக் ‘கேக்’ போல கத்தியால் வெட்டி எடுத்து இவனது கையில் கொடுத்து அதைச் சாப்பிடச் சொன்னார்கள். இவன் மயங்குவது போல பாவனை செய்து கண்களைச் சுழற்றிக் கீழே சரிந்தான். இவனின் வாய்க்குள் அந்தச் சதைத்துண்டு இரத்தம் வடிய அப்படியே திணிக்கப்பட்டது. அது தொண்டைக்குள் வழுக்கிக் கொண்டு போனது.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;அடுத்த மூன்று நாட்களும் இவன் வாந்தி எடுத்தபடியே இருந்தான். உடலிலிருந்த இரத்தம் வாந்தியாக வெளியேறிக் கொண்டிருந்தது. இவன் புனர்வாழ்வு முகாமுக்கு அனுப்பப்பட்ட பின்பும் அடிக்கடி வாந்தி எடுத்தவாறேயிருந்தான். சாப்பிடும் போது இறைச்சியையோ மீனையோ பார்த்தால் ஓங்காளித்து வாந்தி எடுப்பான். மாமிசம் சாப்பிடுவதை நிறுத்திக்கொண்டான். இந்தப் புனர்வாழ்வு முகாமில் பதினெட்டு வயதுக்கு மேற்பட்ட இருநூறு சரணடைந்த போராளிகள் தங்கவைக்கப்பட்டிருந்தனர். நோயால் இறந்த ஆறுபேருக்கும், தற்கொலை செய்துகொண்ட இருவருக்கும் பதிலாக புதியவர்கள் முகாமில் சேர்க்கப்பட்டார்கள். இருநூறு என்ற எண்ணிக்கை குறையாமல் இராணுவத்தினர் பார்த்துக்கொண்டார்கள்.&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;&lt;br /&gt;இவன் எப்போதும் மனச் சோர்வுடனேயே காணப்பட்டான். முகாமில் இருவருக்கு மனநிலை முற்றாகச் சரிந்திருந்தது
