திங்கள், 20 ஜூன், 2011

Charu.

டென்.டௌனிங்கும் நிர்பீஜ ஸமாதியும்…


June 13th, 2011

உங்களுடைய பிரதான எதிரியே நீங்கள்தான் என்று அடிக்கடி என்னிடம் சொல்லுவார் நண்பர் ஒருவர். என்னைப் பற்றி எப்போதும் உருவாகிக் கொண்டிருக்கும் கட்டுக்கதைகள் பெரும்பாலும் என்னுடைய எழுத்தையே பிறப்பிடமாகக் கொண்டுள்ளன. என்னுடைய ஹீரோ தற்கொலை செய்து கொண்டால் ‘சாரு தற்கொலை முயற்சி’ என்று இணையத்தில் தலைப்புச் செய்தி வருகிறது. அதைப் போலவேதான் நான் எப்போதும் குடியும் குட்டியுமாகவே இருப்பேன் என்பதாகவும் ஒரு வதந்தி. ஆனால் நிஜத்தில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்பது யாருக்கும் தெரியாது. என் கூடவே வாழும் என் மனைவிக்குக் கூடத் தெரியாது. சேலத்தில் ஆர். குப்புசாமி என்ற ஒரு அறிஞர் உண்டு. இந்தியத் தத்துவத்தை அலசி ஆராய்ந்தவர். கருணாநிதி திருவள்ளுவரை ஏதோ திமுகவின் உறுப்பினர் என்பது போல் ஒரு பில்ட் அப் கொடுத்து வைத்திருப்பது போல் குப்புசாமியை ஜெயமோகன் தன்னுடைய நட்பு வட்டத்தைச் சேர்ந்தவராகக் காட்டிக் கொள்வதில் பிரியம் கொண்டவர். குப்புசாமியிடம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விஷயத்தில் சந்தேகம் கேட்டு கடிதம் எழுதியிருந்தேன். அதற்கு அவர் எழுதியிருந்த பதில் எனக்குக் கிடைக்கவில்லை. ஆனால் குப்புசாமி என் கடிதத்தையும் அதற்கு அவர் எழுதிய பதிலையும் அவருடைய இணைய தளத்தில் வெளியிட்டிருக்கிறார் போலிருக்கிறது. அதுவும் எனக்குத் தெரியாது. நேற்று தான் தற்செயலாக ஒரு வாசகர் அதை எனக்கு அனுப்பி ”அந்த சாரு நீங்கள்தானா?” என்று கேட்டு எழுதியிருந்தார்.



30 ஆண்டுகளுக்கு முன்பே நான் விவேகானந்தர் எழுதிய ஞான தீபம் தொகுதிகள் 12-ஐயும் படித்திருக்கிறேன். ஓரளவுக்கு இந்தியத் தத்துவ மரபிலும் எனக்குப் பரிச்சயம் உண்டு. என் எழுத்தை ஊன்றிப் படிப்பவர்களுக்கு அது புரியும். ஸீரோ டிகிரியை இந்துத்துவ நாவல் என்று தாக்கி ரமேஷ் பிரேதன் 10 ஆண்டுகளுக்கு முன்பு எழுதியது நினைவு வருகிறது. இதற்குக் காரணம், இந்தியத் தத்துவ மரபையே இந்துத்துவமாகப் பார்க்கும் குறுகிய மனோபாவம்தான். இந்து மதத்தில் பல தத்துவப் பிரிவுகள் உண்டு. அதில் ஒன்று, சூன்ய வாதம். இதற்கும் ஜென் பௌத்தத்துக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஸீரோ டிகிரி அந்தப் புள்ளியிலிருந்துதான் துவங்குகிறது. மேலும், அந்த நாவல் பல்வேறு கிளைவழிகளையும் புதிர்ப்பாதைகளையும் கொண்டது என்பதால் ஒரே ஒரு தத்துவ மையப் புள்ளியோடு அதைப் பொருத்திப் பார்க்க முடியாது.



நான் எழுதும் டென்.டௌனிங் மேட்டரைப் பற்றி மட்டுமே வாசகர்கள் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் நான் தொடர்ந்து 30 ஆண்டுகளாக மேலை மற்றும் கீழைத் தேசங்களின் தத்துவங்களை விவாதித்து வருகிறேன். நிறப்பிரிகையில் எஸ்.என். நாகராசன் என்பவரின் ஆசார இந்துத்துவம், ஆசார மார்க்சீயம் ஆகியவற்றைக் கடுமையாகச் சாடி நான் எழுதிய ஜென் பௌத்தம் குறித்த கட்டுரைகளையும் ழான் பால் சார்த்தர், ஃபூக்கோ போன்றவர்கள் பற்றிய என்னுடைய கட்டுரைத் தொடர்களையும் வாசகர்கள் படித்துப் பார்க்க வேண்டும். பின்வருவது ஆர். குப்புசாமிக்கு நான் எழுதிய கடிதமும் அதற்கு அவருடைய பதிலும்.

dear mr kuppusamy



how are you. hope you remember me. i am charu nivedita.



now i have a doubt in patanjali’s yoga chutra. in pada one (samadhi pada) in the last sloka, he says tasyapi nirodhe sarvanirodhan nirbija samadhi.



then in the second pada (sadhana pada) he talks about ashtanga yoga. 8 limbs. here, samadhi comes as the eighth one. the ultimate state. what is the difference between these two?



would you please explain.



regards and lov

charu



september 10, 2009.



Dear Mr,Charu



I am glad to hear from you.



Patanjali’s ashtanga yoga has 8 limbs:



1.yama,

2.niyama.

3.asana.

4.pranayama,

5.pratyahara,

6.dharana,

7.dhyana ,and

8.samadhi.



Samadhi is the general term.In samadhi there are many types.The last one is callednirbijasamadhi.Bija means seed.Nirbija means seedless.Only in this type of samadhi seeds or vasanas are totally destroyed.Only in this samadhi, a yogi goes beyond the boundary of prakriti and enters for the first time into the region of the Purusha.

Thanking you,



Love



- R.Kuppusamy



mail id : r.kuppusamy@gmail.com