செவ்வாய், 27 டிசம்பர், 2011

Sukumaran.Bharathimani

வாழிய நிலனே! --சுகுமாரன் உயிர்மையின் நூல் வெளியீட்டு விழா.

by Bharati Mani on Monday, December 26, 2011 at 7:02pm
டிசம்பர் 25-ம் தேதி உயிர்மை நூல் வெளியீட்டு விழாவில் சுகுமாரன் எழுதிய வாழிய நிலனே! கட்டுரைத்தொகுப்பை வெளியிட்டு நான் பேசியதன் சுருக்கம்:


வாழிய நிலனே!

முதலில்,  உயிர்மை பதிப்பகம் நேற்றும் இன்றும் வெளியிடும் புத்தகங்களின் ஆசிரியர்களுக்கும், 2012 சென்னை புத்தகச்சந்தைக்காக வெளியிடப்படும் எல்லா நூல்களின் ஆசிரியர்களுக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகளும், பாராட்டுக்களும்! ’உயிர்மை’ பதிப்பாளர் மனுஷ்ய புத்திரன் வெளியிடும் எல்லா புத்தகங்களும் சந்தையிலேயே விற்றுத்தீர்ந்து பணமாகக்கொட்ட நான் வணங்கும் ஆண்டவன் அருள்வானாக!

நண்பர் சுகுமாரன் எழுதிய வாழிய நிலனே! புத்தகத்தை வெளியிட மனுஷ்ய புத்திரன் கேட்டபோது, ‘சார்! முக்கியமானவங்களையெல்லாம் கூப்பிட்டாச்சு. பிரபலங்கள் யாரும் இல்லே. அதனாலே உங்க பெயர் போட்டிருக்கேன்!’ என்று சொன்னபோது அதிலிருந்த உட்குத்து எனக்கும் புரிந்தது. அவர் என்னை நன்றாக தெரிந்துவைத்திருக்கிறார்! மனுஷ்ய புத்திரனுக்கு என் நன்றி!

’இந்தப்புத்தகம் நேற்றுத்தான் வந்தது….அதனால் படிக்கமுடியவில்லை’யென்று பொய் சொல்லி தப்பித்துக்கொள்ள நான் விரும்பவில்லை. இப்போதெல்லாம் வாசிக்கும் பழக்கம் அறவே நின்றுவிட்ட போதிலும், சுகுமாரனின் 29 சிறிய கட்டுரைகள் கொண்ட வாழிய நிலனே! புத்தகத்தை ஒரே மூச்சில் படித்து முடித்தேன். வாசிக்க வாசிக்க அவரது பரந்த ஆளுமை இந்தப்புத்தகத்தில் வெளிப்பட்டது. சுகுமாரன் எனக்கு… தூரத்து உறவினர் என்பது போல ‘தூரத்து நண்பர்’. பார்க்கும்போதெல்லாம் ‘வணக்கம்’ சொல்லியிருக்கிறேனே தவிர நெருங்கிப்பழகியதில்லை. மாறாத புன்சிரிப்புக்குப்பின் இவரைப்போன்ற அறிவுஜீவிகள்,  நெருங்கிப்பழகினால்,  ஒரே வார்த்தையால் நம்மை ஆயுசுக்கும் மறக்காத  சந்தோஷத்துக்கோ அல்லது ஒரே வார்த்தையில் எப்போதும் வலிக்கும் காயத்துக்கோ ஆளாக்கிவிடுவார்களென்ற தேவையற்ற பயம் எனக்குண்டு! மலையாளத்தில் சொன்னால் ’அயாள் ஒரு அமுக்கனாணு’ என்பது எனக்குப்புரிந்தது.

முதல் கட்டுரையிலேயே ‘ஒரு கலைப்படைப்பை ஒரு மொழியிலிருந்து இன்னொரு மொழிக்கு பெயர்ப்பதென்பது திருமணமான பெண்ணைக்காதலிப்பது போல. அதை அவள் கணவனின் நேரடி மேற்பார்வையில் செய்யமுடியாது!’ என்பது எனக்குப்பிடித்தமான வரி. ஒரு இடத்தில், ‘கவிதை வாசிப்பில் சிற்பி பாலசுப்பிரமணியம் ஒரு கவிதை வாசித்தார். அதில் கவிதை காற்பங்கு, சாதுரியம் முக்காற்பங்கு. இதை சிற்பியும் ஒப்புக்கொள்வார்’ என்று பூத்தாப்போலெ ஒரு வெடியை கொளுத்தி போட்டுவிட்டுப் போகிறார்.

இன்னொரு கட்டுரையில் அதிகம் பிரபலமாகாத புல்லாங்குழல் வித்வான் குடமாளூர் ஜனார்த்தனன் இவரிடம் பேசிக்கொண்டிருக்கும்போது, தியாகராஜர் ராமனைத்தேடி, நெக்குருக வேண்டிக்கொள்ளும் ஒரு கீர்த்தனைக்கு ஏன் நீண்ட ராக ஆலாபனை, விஸ்தாரமான நிரவல், ஸ்வரம்? என்று கேட்கும் கேள்விக்கு நம்மிடமும் பதில் இல்லை. அவரது இன்னொரு கேள்வி: ‘உலகத்தில் எங்காவது நூற்றுக்கணக்கான கலைஞர்கள் ஒரே சமயம் அபஸ்வரத்தில் பாடுவதைக்கேட்டிருக்கிறீர்களா?’ விடை தெரியாத சுகுமாரனுக்கு ஜனார்த்தனன் சிரிக்காமல் சொன்ன பதில்: ‘திருவையாறு ஆராதனை என்பது வேறு என்ன?’ அந்தக்கலைஞர் சொன்ன பொன்மொழி எனக்கும் பிடித்திருந்தது: “எவருடைய பாராட்டுக்கும் அல்லது குற்றச்சாட்டுக்கும் நான் அக்கறை காட்டுவதில்லை. என்னுடைய உணர்வுகளை மட்டுமே பின்தொடர்கிறேன்.”  புத்தகத்திலிருந்து இன்னொரு வரி: ‘பத்துக்கிணறுகள் ஒரு குளத்துக்கு சமம். பத்துக்குளங்கள் ஓர் ஏரிக்கு சமம். பத்து ஏரிகள் ஒரு மகனுக்கு சமம். பத்து மகன்கள் ஒரு மரத்துக்கு சமம்.”

’கடவுளில் நித்திரையான நாத்திகம்’ கட்டுரையில், ஒரு பசுவுக்கும் கொக்குக்குமான அழகான நட்பை விவரிக்கும்போது, அந்தப்பசுவுக்கு சொந்தக்காரர் பெயர் சோமன் என்றிருக்கிறது. இரண்டு பாரா தள்ளி அவர் சார்ங்கதரன் ஆகிறார். அதற்கடுத்த பாராவில் மீண்டும் சோமனாகவே மாறி பசுவை மேய்ச்சலுக்கு கொண்டுவருகிறார். இந்த செப்பிடுவித்தை சுகுமாரன் கட்டுரையில் ஏன்….எப்படி நிகழ்ந்தது?

இவரது கட்டுரைகளில், நிறைய Names Dropping ... பல பெயர்களை உதிர்த்துக்கொண்டே போகிறார். இளைய ராஜாவிலிருந்து, ஜாஃபர் பனாஹி, சியாட்டில் மூப்பன், ஞானபீட விருது பெற்ற ஓ.என்.வி. குறுப், ஷெஹ்ரியார், விர்ஜீனியா உல்ஃப், ஸல்மான் ருஷ்டி,  புற்றுநோயால் இறந்துபோன சூஸன் சாண்டக், கேளிக்கை கலைஞன் மைக்கெல் ஜாக்ஸன், பாப்லோ நெரூதா, சிறுமி ஜீனத், நோபல் பரிசு பெற்ற சீன எழுத்தாளர் காவ் ஜிங்ஜியானிலிருந்து கதகளி மகாபாரதக்கதை மூலம் விசித்திரமான பெயர் தேடிக்கொண்ட, இரண்டு காலும் இல்லாத ரயில் பிச்சைக்காரர் கலலன் வரை இவருக்கு கதைமாந்தர்கள். திருவனந்தபுரத்தில் பாளையம் பள்ளிவாசலுக்குப்போய், மாதவிக்குட்டி, கமலா தாஸ், கமலா சுரய்யா என்று பலபெயர் கொண்டவரின் சமாதியைத்தேடி பார்த்துவிட்டு வருகிறார்.

என்னை அறிந்தவர்கள் ‘ஸார்! உங்ககிட்டே அந்த ’வயோதிகக்குசும்பு’ கொஞ்சம் இருக்கு!’ என்று சொல்வார்கள். சுகுமாரனிடம் ’இளமைக்குசும்பு’ நிறையவே இருக்கிறது.

இவர் அசோக மித்திரனையும் விட்டுவைக்கவில்லை. நண்பர் தேவிபாரதியோடு, காலில் அடிபட்டு, சிகிச்சையிலிருந்த அசோக மித்திரனை அவர் வீட்டில் பார்க்கப்போகிறார். வாசலில் நின்று வரவேற்ற எழுத்தாளரிடம் பேசிவிட்டு விடைபெறும்போது, வழியனுப்ப வந்த அசோக மித்திரன் சொன்னார்: ‘ஒடம்பு சரியில்லாத ஒரு ஆளைப்பார்க்க வந்தா, அந்த ஆளே வாசல்லே  வரவேற்கிறது உங்களுக்கு ஏமாற்றமாக இருந்திருக்கும்……..ஸாரி!’ இப்படி யார் சொல்லமுடியும் அசோக மித்திரனைத்தவிர?

தில்லி சாகித்ய அகாதெமியின் கவியரங்கில் சந்தித்த மராத்தியக்கவிஞர் அருண் கொலாட்கர் மாதிரி தானும் ஒரு தான்தோன்றிக் கவிஞனாக இருக்கமுடியுமாவென்று ஏங்கியிருக்கிறார் சுகுமாரன். அங்கே சந்தித்த மூத்த அசாமியக்கவிஞர் ஹிரேன் பட்டாச்சார்யா இவரிடம் கேள்வி கேட்கிறார்: ‘நீ எந்த மொழியில் எழுதுகிறாய்?.... தமிழில்……சரி!..... அதை எவனாவது படிக்கிறானா? ....தெரியாது!.....உனக்கு எத்தனை வாசகர்கள் இருக்கிறார்களென்று தெரியாமல், நீ யாருக்காக எழுதுகிறாய்?’ என்று கேட்டுவிட்டு, சுகுமாரன் கவிதைகளின் ஹிந்தி மொழிபெயர்ப்பை சிலாகித்து படித்துப்பார்த்துவிட்டு, ‘அரே பையா! உனக்கு நிச்சயம் மூன்று வாசகர்கள் இருக்கிறார்கள்…….. உறுதி……. ஒன்று…நீ………இரண்டாவது உன் மனைவி………மூன்றாவது அசாமியக்கவிஞனான ஹிரேன் பட்டாச்சார்யா!’ என்று கூறி இவரை ஆரத்தழுவிக்கொள்கிறார். அதோடு விடவில்லை…. இந்தக்குசும்பன். ’அந்தக்கிழவர் நெருக்கத்தில் வந்தபோது, முந்தியநாள் அருந்திய மதுவின் நெடியும், சற்றுமுன் புகைத்த சாக்லேட் புகையிலையின் மணமும் என் மூக்கில் பரவியது!’ என்று முடிக்கிறார்! ஹிரேன் தாவும் என்னைப்போல் பைப் பிடிக்கும் நல்ல பழக்கத்தை வைத்திருந்தார்!

கட்டுரைகளில், இவரைத்தொடர்ந்து பயணித்தால் மட்டுமே, அவர் என்ன சொல்ல விழைகிறார் என்பது புலப்படும்.

அடூர் கோபாலகிருஷ்ணன் பற்றிய ஒரு கட்டுரையில், அவர் நடிகர்களின் ‘உடல் மொழி’க்கு கொடுக்கும் முக்கியத்தை விளக்கியிருப்பார். ‘நிழல் குத்து’ படப்பிடிப்பின்போது, காந்தி வழியில் வந்த முத்துவாக பாத்திரமேற்ற நடிகர் நரேனை, சரியான உடல் மொழிக்காக, பத்து நாட்கள் தொடர்ந்து சர்க்காவில் நூல் நூற்க பயிற்சியளித்தாராம்! இவ்வளவுக்கும் படத்தில் இந்தக்காட்சி இடம்பெறவில்லை. அடூரிடம் இதைப்பற்றி கேட்டதற்கு, ‘ராட்டை நூற்கும்போதுள்ள  உடல்மொழி….அதை வேறு எப்படித்தான் கொண்டு வருவது?’ நாடக நடிகனான எனக்கும் உடல்மொழி முக்கியம். பல தமிழ்ப்படங்களில் நீங்கள் பார்த்திருக்கலாம்…..ஷாட்டுக்கு முன்னால், கதாநாயகன் கையில் ஒரு வயலினை திணித்து வாசிக்கச்சொன்னால், நளினமாக வலதுகை மூன்று விரல்களால் வில்லை பிடிப்பதற்கு பதிலாக, ஏதோ திருப்பாச்சி அருவாளை சாணை தீட்டுவதுபோல ஐந்து விரல்களாலும் அழுந்தப்பிடித்து, வயலின் குறுக்காக – கிச்சுக்கிச்சு தாம்பாளமாக -- ஒரே சீரில் அறுப்பார்கள். ஆனால் பின்னணியில் லால்குடி ஜெயராமன் வாசித்த வசந்தபைரவி சுநாதமாக காதில் விழும்! இதுவாவது பரவாயில்லை….சில சமயங்களில் Interlude-ல் நம் ஹீரோ திரையில் அறுக்கும் வயலினுக்கு பின்னணியில் ஸிதார் ஒலி கேட்கும்! வயலினுக்கும் சித்தாருக்கும் வித்யாசம் தெரியாத இயக்குநர் திலகங்கள்!.........ஒரு பழைய படத்தில் எம்.ஆர். ராதா கடம் வாசிப்பார்……ஆனால் திரையில் நாம் கேட்பது மிருதங்க ஒலி! என்ன கொடுமை……..சரவணா!

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்! ஆனால் என் பேச்சை நிறுத்துமாறு சீட்டு வருவதற்குமுன், நான் முடித்தாகவேண்டும்.

சுகுமாரனின் வாழிய நிலனே! புத்தகத்தில் நிறைய விஷயங்கள் புதைந்திருக்கின்றன. நான் படித்து ரசித்தேன். நீங்களும் அவசியம் படியுங்கள்.

நன்றி……வணக்கம்! 

பாரதி மணி 
25 டிசம்பர், 2011.

ஞாயிறு, 27 நவம்பர், 2011

Jayamohan..Aram.

கோவை முருகன் விடுதி அறையில் அதிகாலையில் ஐந்துமணிக்கு  எங்கள் குழுவின் கமாண்டராக தன்னை தானே நியமனம் கொண்டிருந்த கிருஷ்ணன் எழுந்து படாரென்று கழிப்பறை கதவைத் திறந்து, பெரியபடாராக அதை மூடி, அனைவரையும் பதறி எழச்செய்தார். அவர் துண்டை உதறிய ஒலியில் அந்த விடுதி அலறி எழுந்திருக்கும். வேறுவழியில்லை, ஈரோடு அழைக்கிறது. இருந்தாலும் நான் அரைமணிநேரம் கண்மூடி படுத்திருந்தேன்.
எல்லாரும் குளித்து முடித்ததும் கிளம்ப ஆரம்பித்தோம். ஆறரைக்கு கிளம்ப கமாண்டர் போட்டிருந்த திட்டம் ஏழாகியும்  ஆரம்பிக்கவில்லை. ஆகவே நாஞ்சில்நாடனையும் மரபின்மைந்தன் முத்தையாவையும் கிளம்பி ஈரோட்டுக்கே செல்லும்படி சொல்லிவிட்டார். செந்தில் நிதானமாகவே குளித்தார். பாட்டுபாடாமல் இத்தனைநேரம் குளிப்பவராக அவரை மட்டுமே நான் பார்த்திருக்கிறேன்.
நான், கிருஷ்ணன், தங்கமணி, அரங்கசாமி ,செந்தில் ஆகியோர் ஒருவழியாகக் கிளம்பி ஈரோட்டுக்கு செல்லும் வழியில் கோவைக்கு வெளியே ஒரு உணவகத்தில் அவர்களைச் சந்தித்தோம். நாஞ்சில்நாடன் புதிதாக இருந்தார். எனக்கு எப்போதுமே அவரைப்போல நேர்த்தியாக உடையணியும் ஆசை உண்டு. மிகையாகவும் போகாமல், குறைவாகவும் ஆகாமல் உடையணிவதென்பது ஒரு கலை. அதற்கு நாம் அவரைப்போல விற்பனைமேலாளராக கொஞ்சநாள் பணியாற்றியிருக்கவேண்டும்போல.
ஈரோட்டுக்கு செல்லும் வழி முழுக்க விதவிதமான நகைச்சுவை நிகழ்ச்சிகளைப் பேசிக்கொண்டிருந்தோம். சென்றுசேர்ந்தபோது தாமதமாகிவிட்டது. சாலையோரமாக என்னுடைய முகம் கொண்ட வினைல்போர்டு. உள்ளே போனால் சாயரசாயன விற்பனையாளர் சங்கத்தின் புதிய அரங்கில் வாசலில் வசந்தகுமார் கடைவிரித்து தம்பியர் புடைசூழ அமர்ந்திருந்தார்.
பத்துமணிக்கு நிகழ்ச்சி. ஒன்பது ஐம்பதுக்கு அமைப்பாளர் தவிர யாருமே இல்லை. பத்துமணிக்கு ஒரு பத்துபேர் தேறினார்கள். பத்து என்றால் பத்துக்கே ஆரம்பிக்கவேண்டும் என்றார் பாபு. அது ஈரோடு பசுமைபாரதத்தின் கொள்கை என்று சொல்லப்பட்டாலும் உண்மை என்பது சரியான நேரத்தில் ஆரம்பிக்கப்படாத பிற நிகழ்ச்சிகளில் சென்று கலாட்டா செய்த இறந்தகாலம் குறித்த அச்சம்தான்.
அமைப்பாளர் விஜயராகவன் காய்ச்சல்கண்ட முகத்துடன் இருந்தார். ‘என்ன விஜயராகவன்’ என்றேன் ”ஏமாத்திட்டாங்களே சார்…யாருமே வரல்லியே’ என்றார். ‘வந்தவங்க போரும்…இப்ப என்ன?” என்றேன்.
ஆரம்பித்தோம். காலி நாற்காலிகளை நோக்கி பேசுவது எழுத்தாளர்களுக்கு ஒன்றும் புதியவிஷயம் அல்லதானே? முதலில் ஈரோடு வாசிப்பியக்கத்தைச் சேர்ந்த பாபு பம்மிப்போய் வரவேற்புரை அளித்தார். விமரிசகர் க.மோகனரங்கன் ஜெயில்சிங் போன்ற அதிநிதானத்துடன் மேடைக்கு வந்து மென்மையான குரலில் – பாலியல் வழக்கில் சிக்கியவர் நீதிமன்றத்தில் வாக்குமூலம் கொடுப்பது போல குனிந்த தலையுடன் – விழாவை அறிவித்தார். ‘இன்றையகாந்தி’  நூலை நாஞ்சில்நாடன் வெளியிட இராசு பெற்றுக்கொண்டார்.
தலைமையுரையாக ஜீவானந்தம் சுருக்கமாகப் பேசினார். தன்னை காந்தியில் ஆர்வம்கொண்டவரே ஒழிய காந்தியவாதி என்று சொல்லிவிடமுடியாது என்றார். காந்தியம் என்பது ஒரு பெரிய பொறுப்பு. இடைவிடாத சோதனைகள் கொண்டது. தன் சூழலில் செயல்பட காந்தியம் ஒரு வழிகாட்டு நெறியாக இருந்தது, அவ்வளவுதான் என்றார்.
அடுத்து நாஞ்சில்நாடன் பேசினார். காந்தியின் பாலியல் சோதனைகள் குறித்த விவாதத்தை மையமாக்கிய உரை அவருடையது. காந்தியின் சோதனைகளை கிறுக்குத்தனமானவை என்று நூலாசிரியர் சொல்வதை தான் ஒப்புக்கொள்ளவில்லை என்றார் நாஞ்சில்நாடன். பாலியலை அவதானிப்பதும் அதை கடந்துசெல்ல முயல்வதும் எந்த மனிதனுக்கும் இயல்பான விஷயமே. காந்தி அந்த விஷயத்தில் அப்பட்டமானவராக வெளிப்படையானவராக இருந்திருக்கிறார்.
அடுத்துப்பேசிய செ.இராசு தமிழகத்தில் ஈரோட்டில்தான் முதன்முறையாக காந்திக்குச் சிலை வைக்கப்பட்டது என்று சொல்லி அந்தப்படத்தைக் காட்டினார். 1932ல் காந்தி உயிருடன் இருக்கும்போதே சிலை வைக்கப்பட்டுவிட்டது. காந்திக்கும் ஈவேராவின் குடும்பத்திற்கும் உள்ள உறவைப்பற்றி விரிவாகப்பேசினார். காந்தி ஈரோட்டுக்கு இருமுறை வந்திருக்கிறார். முதன்முறை ஈவேரா அவர்களின் இல்லத்தில் தங்கினார். மறுமுறை கிட்டப்பா மறைவால் பொதுவாழ்க்கையில் இருந்து ஒதுங்கி இருந்த கெ.பி.சுந்தராம்பாளைப் பார்த்து பொதுப்பணிக்கு வரச்சொல்லுவதற்காக வந்தார் என்றார்.
‘நாஞ்சில்நாடன் என் காதில் ‘ என்ன, கூட்டம் ஒருமணிநேரத்திலே முடிஞ்சிரும் போல இருக்கே’ என்றார். ஆனால் அடுத்து மரபின் மைந்தன் முத்தையா  பேச ஆரம்பித்தபோது மெல்லமெல்ல கூட்டம் அரங்கை நிறைக்க ஆரம்பித்து, பதினொருமணிக்கு அரங்கு முழுமையாக நிரம்பியிருந்தது. ஈரோட்டில் பத்து என்றால் பதினொருமணி என்றுதான் அர்த்தமாம்.
முத்தையா காந்தியின் மகன்களைப்பற்றி பேசினார். காந்தி தன் புதல்வர்களை சரியாக வளர்க்கவில்லை என்ற பொதுநம்பிக்கை சூழலில் உள்ளது. ஆனால் காந்தி அவர்களை போராளிகளாக, அதிகாரத்துடன் சமரசம்செய்துகொள்ளாதவர்களாக வளர்த்தார். அதை ஆசிரியர் விரிவாக விளக்குகிறார்
காந்தியின் எல்லைகளையும் நாம் கவனிக்கவேண்டும், ஆகவே தனக்கு காந்தி மீது வழிபாட்டுணர்வு ஏதும் இல்லை என்றார் முத்தையா.காந்தி இந்திய அரசியலில் பதவி இல்லாத அதிகாரமையமாக விளங்க விரும்பினார். பதவியில் இல்லாத அவர் இந்திய அரசை பாகிஸ்தானுக்கு கஜனாவை பங்கிட்டுக்கொடுக்க நிர்ப்பந்தித்தது உதாரணம்.
காந்தியின் பிள்ளைகள் என்னும்போது இன்றைய இந்தியர்களையே அப்படிக் குறிப்பிடலாம். இந்தியாவுக்கு காந்தி ஒரு இலட்சியத்தையும் அதை அடைவதற்கான வழிமுறையையும் அளித்தார் என்று ஆசிரியர் சொல்கிறார். காந்தி ஒரு கனவை அளித்தார், ஆனால் அவர் காட்டிய வழி குழப்பமானது. அதுவே இந்தியா சிக்கல்களில் ஆழ்ந்தமைக்கு வழிவகுத்தது என்றார் முத்தையா.
தந்தை பழ.கருப்பையா அவர்களின் குரல், உடலசைவுடன் பேசினார் ஆறுமுகத்தமிழன். காந்தி ஓர் அடையாளமாகவே தனக்குக் கிடைத்தார் என்றவர் அந்த அடையாளம் இன்று செலவேறியதாக ஆகிவிட்டிருக்கிறது என்றார். அவரது தந்தையின் காந்திய நோக்கு காரணமாக அவர் சிறுவயது முதலே கதர் அணிபவர் என்றார். ஆனால் தினம் பத்து ரூபாய் இல்லாமல் கதரை சலவைசெய்து அணிய முடியாது, அது உயர்தர உடையைவிட செல்வேறியது….
இத்த¨கைய அடையாளங்களில் இருந்து காந்தியை விடுவிக்கும் முயற்சியாக  இன்றைய காந்தி நூலை தான் காண்பதாக ஆறுமுகத் தமிழன் சொன்னார். காந்திய வழி என்பது தனக்கு ஏற்புடையதாக இருந்தாலும் தன்னால் பிரபாகரனையும் விட்டுவிட முடியாது. காந்தி தந்தை என்றால் பிரபாகரன் அண்ணன் போல. இருவருடைய வழிமுறைகள் வேறு ஆனால் அர்ப்பணிப்பும் தியாகமும் சமம்தான். ஈழப்போராட்டம் வன்முறையால் வெல்ல முடியவில்லை, அது காந்தியவழியால் வென்றிருக்கலாம். ஆனால் அதனால் பிரபாகரனின் தியாகம் அர்த்தமற்றது என்று ஆகிவிடாது.
இன்றையகாந்தி நூலில் தேசியம் குறித்து சொல்லப்படும் ஆசிரியரின் கருத்துக்களில் தனக்கு உடன்பாடில்லை என்றார் ஆறுமுகத்தமிழன். ஆசிரியர் மொழிவழித்தேசியத்தை பிளவுவாதம் என்று எதிர்க்கிறார், அதை உணர்வுபூர்வமாக ஏற்பவன் நான் என்றார். மொழிவழித்தேசியம் சிலரை அன்னியராக்கும் என்றால் அவர் பேசும் பண்பாட்டுத்தேசியமும் அதேபோல வேறுசிலரை அன்னியர்களாக்க்கும். இந்திய தேசியம் என்பது செயற்கையானது, மொழிவழித்தேசியமே இயற்கையானது என்றார்.
அடுத்துப்பேசிய முருகானந்தம் இன்றையகாந்தி நூல் இளைய தலைமுறைக்கு காந்தியை மீட்டளித்திருக்கிறது என்றார். இன்றைய இளைஞன் காந்தியை இன்றைய வாழ்க்கையில் பொருத்திப்பார்க்க ஆசைப்படுகிறான். அவனுடைய வினாக்களுக்குப் பதிலாக அமையும் நூல் இது. ஆனால் இதில் சில விஷயங்கள் தவறாக உள்ளன. காந்தியின் அழகியலுணர்வின்மை குறித்து ஆசிரியர் சுட்டும் பகுதிகள் உதாரணம். காந்தி  இலக்கியம், இசை குறித்த உணர்வில்லாதவரல்ல. அவர் அவற்றைப்பற்றி விரிவாகவே பேசியிருக்கிறார்.  அவர் போராட்டக்களத்தில் இருந்தார். இந்தியாவையே போராட்டத்தில்  நிறுத்தினார். ஆகவே அவர் கலையிலக்கியங்களை ஊக்குவிக்கவில்லை என்று முருகானந்தம் சொன்னார்.
பவா செல்லத்துரை ஒரு மார்க்ஸியச்சூழலில் வளர்ந்த தனக்கு படத்தில்கூட காந்தி கவரக்கூடியவராக இருந்ததில்லை என்றார். ஆனால் இந்த நூல் காந்தியைப்பற்றிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. காந்தியை சாமானிய மக்களுடன் பேசிய ஒரு மக்கள்தலைவராக இது காட்டுகிறது. காந்தியின் எளிமையும் மக்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பையும் இந்நூலில் ஒரு கட்டுரையில் கூறும் ஆசிரியர் இன்றைய மார்க்ஸிய தலைவர்களிடம் காண்பதாகச் சித்தரித்திருப்பது குறிப்பிடத்தக்கது.ஆசிரியர்  காந்தியத்தாக்கம் கொண்ட தலைவராக சொல்லும் ஈ.எம்.எஸ் குறித்து அவர் ஒரு நல்ல நூல் எழுதவேண்டும் என்று கோருவதாக பவா சொன்னார்.
கடைசியாக நான் பேசினேன். ‘மூன்று சந்திப்புகள், மூன்று அவதூறுகள்’ என அவ்வுரையை சுருக்கலாம். காந்தியை நானும் எதிர்மறையாகவே புரிந்துகொண்டிருந்தேன். மூன்று சந்திப்புகள் வழியாக காந்தியை புரிந்துகொள்ள முடிந்தது.
முதல் சந்திப்பு, எம்.கோவிந்தன். மலையாளச் சிந்தனையாளரான கோவிந்தனைச் சந்தித்தபோது அண்டோனியோ கிராம்ஷி பற்றி சொன்னார். இப்போது ஆளும் ஆட்சியாளர்களை அதிகாரிகளை ஒட்டுமொத்த அதிகாரவற்கத்தை கொன்றழித்தால் என்ன ஆகும்? அதே அதிகார அமைப்பு மீண்டும் உருவாகி வரும். புல்லை வெட்டினால் மீண்டும் முளைப்பதுபோல. அதாவது வேர், உண்மையான அதிகாரம் கண்ணுக்கு தெரியாமல் உள்ளே இருக்கிறது. அது மக்களிடம் கருத்தியல்வடிவில் உள்ளது.
மக்கள் அரசுக்கு அளிக்கும் ஆதரவில் இருந்தே அரசு அதிகாரத்தை பெறுகிறது என்று கிராம்ஷி சொல்வதைச் சொன்னார் கோவிந்தன். அந்த ஆதரவு கருத்தியல்ரீதியானது. அன்றைய பிரிட்டிஷ் அரசின் உண்மையான அதிகாரம் அன்றிருந்த மக்கள் அதற்கு அளித்த ஆதரவில் இருந்தது. காந்தி அந்த மக்களை நோக்கி பேசியது அதனாலேயே. அரசை வீழ்த்த அவர் முயலவில்லை, மக்களை மாற்றவே முயன்றார். அதுவே காந்தியப்போராட்டம். மக்களுக்கு பிரிட்டிஷ் அரசு அளித்த நல்ல நிர்வாகம்மீது மதிப்பிருந்தது. அதன் மாபெரும் சுரண்டல் தெரிந்திருக்கவில்லை. அதை மக்களுக்குத் தெரிவிக்கவே காந்தி உப்புசத்தியாக்கிரம் போன்ற போராட்டங்களை உருவாக்கினார்.
காந்தியைப்பற்றிய புதிய பார்வையை உருவாக்கியது அந்த கருத்துதான். காந்தியை பிரிட்டிஷ் அரசை ‘பிளாக்மெயில்’ செய்பாவ்ர் என்றே நானும் எண்ணியிருந்தேன். அந்த எண்ணம் மாறி அவரை புதிய கோணத்தில் பார்க்க ஆரம்பித்தேன்.
இரண்டாவது சந்திப்பு லாரிபேக்கர். நவீன கட்டிடவரைகலை நிபுணர் அவர். அவர் கார்ட்டூன் வரைவதற்காக காந்தியைப் பார்க்கச் சென்றார். காந்தி அவரிடம் ‘சிறந்த கட்டிடம் என்றால் என்ன?’ என்றார். விடையாக அவரே ‘குறைந்த அளவுக்கு சரக்குப் போக்குவரத்துச் செலவு உடையது’ என்றார். அந்த வரி பேக்கரை மாற்றியமைத்தது. இந்தியாவில் தங்கி ‘தேசிய வீடு’ என்ற கருத்தை உருவாக்க வைத்தது
அப்படி காந்தி அவரைச் சந்தித்த எத்தனையோ பேரை பாதித்திருக்கிறார். சந்தித்தவர்களை எல்லாம் புரட்சிகரமாக மாற்றி அமைத்திருக்கிறார். அவர்களெல்லாம் மாமனிதர்களாக ஆனார்கள். காந்தி வாழ்நாள் முழுக்க காந்திகளை உருவாக்கிக்கொண்டே இருந்தார். வெரியர் எல்வின், ஜெ.சி.குமரப்பா என எத்தனையோ பேரைச் சொல்லலாம்.
மூன்றாவது சந்திப்பு ஈ.எம்.எஸ். வாழ்நாள் முழுக்க காந்தியக் கோட்பாடுகளுக்கு எதிரான அரசியலை நடத்தியவர் அவர். ஆனால் தனிவாழ்க்கையில் காந்தியின் எளிமையை அர்ப்பணிப்பை தானும் கொண்டிருந்தார். எதிரிகளிடம் கூட ஆழமாக ஊடுருவும் காந்தியை அவரிடம் கண்டுகொண்டேன்.
பின்னர் மூன்று அவதூறுகள். ஒன்று ரயிலில் ஒருவர் காந்தி தன் மூத்தமகனை பாரிஸ்டர் படிப்புக்கு அனுப்பாத காரணத்தால் அவன் குடிகாரன் ஆனான் என்றார். மீண்டும் மீண்டும் மேடையில் சொல்லப்படுகிறது அது. ஆனால் ஹரிலால் மெட்ரிகுலேஷனை நான்குமுறை எழுதி தோற்றவர் என்பதை நானே வாசித்து தெரிந்துகொண்டேன்.
காந்தி தகுதியிருந்தும் பட்டேலை விட்டுவிட்டு நேருவை தலைவராக்கியது தனிப்பட்ட விருப்பு வெறுப்பினால் என்ற அவதூறை அடுத்து கேட்டேன். ஆனால் இந்தியா மதவெறுப்பால் அழிந்துகொண்டிருந்த நாட்களில் முற்றிலும் மதச்சார்பற்ற ஒருவர் இந்தியாவை வழிநடத்தவேண்டுமென காந்தி விரும்பியதை வரலாற்றில் இருந்து புரிந்துகொண்டேன்.
கடசியாக, காந்தியின் மூன்றாம் வகுப்பு ரயில்பயணம் முதல்வகுப்பு பயணத்தைவிட செலவேறியது என்று சரோஜினிநாயிடு சொன்ன அவதூறை எதிர்கொண்டேன். அது சொல்லப்பட்ட தருணத்தை அன்றைய சூழலை தேடி அறிந்தேன். லட்சக்கணக்கான தொண்டர்கள் காந்தி பேச்சை கேட்டு எளிமையிலும் எளிமையான வாழ்க்கக்கு சென்று தொண்டாற்றியது காந்தியும் எளிமையாக இருந்தமையாலேயே. அந்த எளிமை ஒரு பதாகை. ஒரு முன்னுதாரணம். எந்த பாதுகாப்பும் இல்லாமல் தனியாக இந்தியாவைச் சுற்றி வந்த காலத்தில்கூட காந்தி மூன்றாம்வகுப்பிலேயே பயணம்செய்திருக்கிறார்
அந்த அவதூறில் இருந்து காந்தியை பற்றி எழுத ஆரம்பித்ததே இந்நூல். இதில் சமகாலத்தில் காந்தியை எப்படி புரிந்துகொள்வதென்ற தேடல் உள்ளது. இத்தனை அவதூறுகள் ஒரு சிந்தனையாளரைப் பற்றி ஏன் எழுகிறதென்ற கேள்வியே என்னை காந்திக்குள் செல்ல வைத்தது.
இந்திய தேசியம் குறித்த என் கருத்துக்களை நான் பதிவுசெய்திருக்கிறேன். நான் சொல்லும் தேசியம் நேற்றில் இருந்து எடுக்கும் அடையாளங்களால் ஆனதல்ல. இந்தமண்ணில் இப்போது வாழும் அனைவரும் நாளை குறித்த ஒரு கனவை உருவாக்கிக் கொள்வதனால் வரும் தேசியம் அது. எவரையுமே விலக்குவதல்ல.
இந்திய மண்ணில் இரண்டாயிரம் வருடங்களாக போர்களால், பண்பாட்டுக்காரணங்களால், கடைசியாக பஞ்சங்களால், மக்கள்ப்பரிமாற்றம் நிகழ்ந்து இன்று இந்த நிலம் ஒரே பண்பாட்டு வெளியாக உள்ளது. மக்கள் எங்கும் கலந்து வாழ்கிறார்கள். ஆகவே இவர்கள் சேர்ந்து வாழ்ந்தாகவேண்டும். இது வரலாற்று நிர்ப்பந்தம். அதற்கான தேசியமே நம் தேவை.
எல்லைப்பிரிவினை இந்தியாவில் 1948ல் ஐந்து லட்சம்பேரை பலிகொண்டது. சின்னஞ்சிறு இலங்கையில் ஒரு பிரிவினை லட்சம்பேரை காவுகொண்டது.இந்திய மக்கள்தொகையில் 20 சதவீதம் பேராவது இன்று மாற்றுமொழி நிலங்களில் நூற்றாண்டுகளாக குடியேறி வாழ்கிறார்கள். கிட்டத்தட்ட இருபதுகோடிப்பேர்! இந்தியாவில் எங்குமாக ஒருகோடி தமிழர்கள் அப்படி குடியேறி வாழ்கிறார்கள். யாரோ எதற்கோ பேசும் பிரிவினைவாதம் கோடிக்கணக்கான மக்களை இடம்பெயரச்செயும். பரஸ்பர வெறுப்பை கிளறும்.  அவர்களை அர்த்தமற்ற அழிவுக்கே கொண்டுசெல்லும். அந்த மனுடப்பேரழிவு நடந்தபின்னும் அதைப் பேசியவர்கள் அதற்குப் பொறுப்பேற்க மாட்டார்கள்.
தேசியம் மயிர் மட்டை என்று கொள்கை பேசி உயிர்களுடன் விளையாடாதீர்கள். அதிகாரவெறியால் உயிர்வாழ மட்டுமே விரும்பும் எளிய மக்களை கொன்றழித்துவிட்டு எண்ணிக்கைக் கணக்கையும் கோட்பாட்டையும் சேர்த்துப்பேசும் திமிரை அறிவுஜீவிகள் இனிமேலாவது கைவிட வேண்டும் என்றேன். ஈ.எம்.எஸ்.குறித்து ஒரு நூல் எழுதும் எண்ணம் உண்டு என்று சொல்லி முடித்துக்கொண்டேன்.
ஈரோட்டுக்கும் வெளியூரில் இருதெல்லாம் வாசகர்கள் வந்திருந்தார்கள். பெங்கலூரில் இருந்து கார்த்திகேயன் வந்திருந்தார். அனைவரிடமும் தனியாக நிறையவே பேசமுடிந்தது
விழா சரியாக ஒரு மணிக்கே முடிந்தது. மாடியில் அனைவருக்கும் மதிய உணவு ஏற்பாடாகியிருந்தது. கூட்டத்துக்கு வந்தவர்களே பரிமாறியது உற்சாகமாக இருந்தது. விஜயராகவன் முகமலர்ச்சியுடன் ”ஈரோடு காப்பாத்திடிச்சு சார்” என்றார்.
மாலை ஐந்து மணிவரைக்கும் அங்கேயே அறையில் அமர்ந்து நண்பர்களிடம் பேசிக்கொண்டிருந்தேன். பின்னர் இருகார்களிலும் இருசக்கரவண்டிகளிலுமாக வள்ளிபுரத்தான்பாளையம் சென்றோம். எட்டுமணிவரை அங்கே பேசிக்கொண்டிருந்துவிட்டு திரும்பினோம். நான் இரவு பத்து மணிக்கு நாகர்கோயில் ரயிலை பிடித்தேன். நண்பர்கள் வந்து வழியனுப்பி வைத்தார்கள். படுத்ததுதான் தெரியும். காலையில் நாகர்கோயில்.
http://erodetamizh.blogspot.com/2010/01/blog-post_24.html

வெள்ளி, 25 நவம்பர், 2011

vairamuthu sanga kavithaigal

 கவிஞர் வைரமுத்துவின்கவிதைகள் ? இசை
.
   * * * * *
துளைகள் கொண்டது மனிதமனது
எறும்பின் கண்ணினும் நுண்ணிய துளைகள்
விழியினும் சவ்வினும் மெல்லிய துளைகள்
ஆயிரம் லட்சம் கோடித் துளைகள்

பல துளைகள்
பிறந்தது முதலாய்ப் பூட்டிக் கிடப்பவை
இறக்கும் வரைக்கும் திறக்காதவை

அத்தனை துளைகளும்
திறத்தல் அரிது

அத்தனை கோடித் துளைகளையும்
ஒரே கணத்தில் திறந்துவைக்கும்
விசை எங்கு கண்டாய்
இசையே!

   * * * * *

காற்றை நுரைக்க வைக்கிறாய்
காயப்பூக்கள் பூப்பிக்கிக்கிறாய்
வெறுமை நிரப்புகிறாய்
மாயைக்குள் மெய்யாகிறாய்

கடவுளர்க்கு நிஜம் சொல்கிறாய்
மிருகங்களுக்குக் கனவு தருகிறாய்
தாவரங்களின் தலை கோதுகிறாய்
மேகங்கள் பீச்சுகிறாய்

மூங்கிலில் வண்டு செய்த
புண்ணில் பண்ணிசைக்கிறாய்
பிறையை வளர்ப்பிக்கிறாய்
விண்மீன்கள் தூங்கவைக்கிறாய்

எங்கள்
மனப்பாறை இடுக்குகளில்
தேன்கூடு கட்டுகிறாய்

உன் வருகைக்கு எங்கள்
கண்ணிமைகள் தாழ்ந்து
கம்பளம் விரிக்க

கண்ணீர் ஆங்காங்கே
திரவமலர் தெளிக்க

புல்லரிக்கும் உரோமங்கள்
எழுந்து நின்று வரவேற்க

உனக்குத்தான் எத்தனை
ராஜமரியாதை இசையே!

   * * * * *
நாவுக்குச் சிக்காத அமிர்தம்
நீ நாசிக்குச் சிக்காத வாசம் நீ
கண்ணுக்குச் சிக்காத நிறப்பிரிகை நீ
ஸ்பரிசம் இல்லாத தீண்டல் நீ

 
 
நீயே சொல் இசையே
ி ?
ி?
 
மரக்கிளை அசைவில் மணிகளின் ஒலியில்
பறவையர் பாட்டில் அலைகளின் அதிர்வில்
மாறுவேடம் போட்டபடி
நீயே எங்கும் நிறைந்துள்ளாய் இசையே!
 
   * * * * *
நதி -
நடந்துபோகும் சங்கீதம்

மழை -
அவரோகண சங்கீதம்

மழலை -
பிழைகளின் சங்கீதம்

மெளனம் கூட
உறைந்துபோன சங்கீதம்

பூமி சுற்றிக் காற்று
காற்று சுற்றி இசை
இசைக்குள் மிதக்குகம்
ஜீவராசிகள்
 
   * * * * *
இசையே!
தூங்கவை எங்களை

உன் மயிற்பீலி விரல்கொண்டு
மனசு தடவு

இரத்தக் குழாய்களின்
துருக்கள் துலக்கு

உள்ளிருக்கும் விலங்குத்தோல்
உரி

மென்குணங்கள் மேம்படுத்து

நாங்கள்
இறுகி இறுகிக்
கல்லாகும்போது
இளகவிடு

குழைந்து குழைந்து
கூழாகும்போது
இறுகவிடு

நீயில்லாத பூமி
மயானம்

மன்னித்துவிடு
மயானத்திலும் இசை உண்டே.

vairamuthu sanga kavithaigal

கவிஞர் வைரமுத்துவின் கவிதைகள் ? காலந்தோறும் காதல
.
 
ஈராயிரம் ஆண்டு நீண்டு கிடக்கிறது தமிழ் இலக்கியப் பரப்பு. காதல் என்ற உள்ளடக்கம் மட்டும் மாறாமல் தொடர்கிறது வடிவங்களை மாற்றிக்கெண்டு. அந்தந்தக் காலங்களில் மேலோங்கி விளங்கும் இயக்கங்களில் காற்றெடுத்துக் கொண்டுதான் காதல் சுவாசித்து வந்திருக்கிறது. இதை உணர்த்தவே - இந்தக் கவிதைகளில் அந்தந்தக் கால உள்ளீடுகளையும் வடிவங்களையும் சொல்லாட்சிகளையும் கையாண்டிருக்கிறேன்.

   * * * * *
 1. சங்க காலம்
ஆற்றுத் தூநீர் ஆரல் உண்டு
குருகு பறக்கும் தீம்புனல் நாடன்

கற்றை நிலவு காயும் காட்டிடை
என்கை பற்றி இலங்குவளை ஞெகிழ்த்து

மேனி வியர்ப்ப மெல்லிடை ஒடித்து
வாட்கண் மயங்க உண்டதை மீண்டும்
பசலை உண்ணும் பாராய் தோழி

   * * * * *
 2 காவிய காலம்
பொன்னங் கொடியென்பார் போதலரும் பூவென்பார்
மின்னல் மிடைந்த இடையென்பார் - இன்னும்
கரும்பிருக்கும் கூந்தல் சுடர்த்தொடிஉன் சொல்லில்
கரும்பிருக்கும் என்பார் கவி.

* * * * *
 3 சமய காலம்

வெண்ணிலவால் பொங்குதியோ
விரக்தியால் பொங்குதியோ
பெண்ணொருத்தி நான்விடுக்கும்
பெருமூச்சாற் பொங்குதியோ
பண்ணளந்த மால்வண்ணன் பள்ளிகொண்ட பான்மையினால்
விண்ணளந்து பொங்குதியோ
விளம்பாய் பாற்கடலே!
 
   * * * * *
 4 சிற்றிலக்கியக் காலம்

தூக்கி நிறுத்திவைத்த கொண்டையாள் - மனம்
துள்ளி ஓடும்விழிக் கெண்டையாள் - நெஞ்சைத்
தாக்கி மறுநொடியில் தவிடுபொடியாக்கும்
சண்டையாள் - வெள்ளித் தண்டையாள்
முலை அதிரும்படி மணி உதிரும்படி
மனம் பதறும்படிஆடும் பாவையாள் - வில்
மாரன் பகைமுடிக்கத் தேவையாள்
 
   * * * * *
 5 தேசிய காலம்

சின்னஞ் சிறுகமலப் பூவினாள் - என்
சித்தத்திலே வந்து மேவினாள்
கண்ணில் ஜோதிஒன்று காட்டினாள் - என்
கவியில் காதல்ரசம் ஊற்றினாள்
விண்ணில் நிலவெரியும் வேளையில் - பொன்
வீணை கரம்கொண்டு மீட்டினாள்
மண்ணில் விண்ணகம் காட்டியே - அவள்
மறைந்தகதை எங்கு சொல்குவேன்?
 
   * * * * *
 
 6 திராவிட காலம் - 1

இல்லாத கடவுள் போன்ற
இடைகொண்ட பெண்ணே உந்தன்
பொல்லாத அழகு பாடப்
பூவாடும் கூந்தல் பாட
சல்லாப விழிகள் பாடத்
தனித்தமிழ் கொண்டு வந்தேன்
நில்லாமற் போனால் கூட்டில்
நிற்குமோ எந்தன் ஆவி?
 
   * * * * *
 7 திராவிட காலம் - 2

விண் - அப்பம் போன்ற நிலவுவந்து - காதல்
விண்ணப்பம் எழுதுகின்ற இரவு
முத்தமென்ற சொல்போல - நான்
இதழ்சேர வரும்போது
உதடுஒட்டாத குறள்போல - நீ
தள்ளியா நிற்பது?
விடையாட வேண்டும் வாடிஎன் கண்ணே
விடிவெள்ளி கண்ணயரும் முன்னே
 
   * * * * *
 8 புதுக்கவிதைக் காலம் - 1

ஏப்ரல் சூரியன்
டீசல் புகை
பேருந்து நெரிசல்
அலுவலக எரிச்சல்
இவையெதிலும் வாடாமல்
பத்திரமாய் வைத்திருக்கிறேன்
உனக்குத் தெரியாமல் உதிர்ந்து
யாருக்கும் தெரியாமல் நான் கவர்ந்த
உன் கருங்கூந்தற் சிறுபூவை
 
   * * * * *
 9 புதுக்கவிதைக் காலம் - 2

உன்வீட்டு ஆன்ட்டனாவிலும்
என்வீட்டு நைலான் கொடியிலும்
தனித்தனியே காயும்
நேற்று
ஊருக்கு வெளியே நாம்
ஒன்றாய் அழுக்குச் செய்த உள்ளாடைகள்.
 
   * * * * *

Vairamuthu..Sangakavithaigal

வியாழன், 24 நவம்பர், 2011

Uyirin osai...

நீங்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் சமூகமும், தேசமும் மிகப்பெரிய பொருளாதார வளர்ச்சியை நோக்கிச் செல்கிறது எனும் பின்பத்தை இந்திய தேசியம் கட்டமைத்துக் கொண்டிருக்கும் தருணத்தில், பிச்சையெடுக்கும் குடிகளிடம் பிச்சையெடுத்து அப்படியான பின்பும் போலியானது என்று உடைத்தெறிந்துள்ளார்.
ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொள்ளும் தமிழாளர்கள்  வழக்கம்போல் இம்முறையும் கொள்ளைக் கூட்டத்திடமிருந்து தமிழகத்தைப் பாதுகாக்க சர்வாதிகாரியின் கைகளில் மாட்டிக்கொண்டிருக்கின்றனர். மூன்று தமிழர் உயிர்காக்க சட்டப்பேரவையில் தீர்மானமேற்றி சிறிது  நம்பிக்கை தந்த புது ஆட்சியாளர், சமச்சீர் கல்வியில் ஆரம்பித்தார் தனது பழைய செயல்பாடுகளை.
பரமக்குடி படுகொலைகள்,சமச்சீர் கல்வி, கூடங்குளம் போராட்டத்துக்கு ஆதரவாய் எதுவும் செயல்படாமல் மௌனம் காப்பது, சட்டமன்றத் தீர்மானத்தை முழுமையாய் முரண்கொண்டு மூன்று தமிழர்களுக்கு எதிராய் நீதிமன்றதில் பதில்தந்தது, அண்ணா நூலகத்தை இடமாற்ற முனைந்தது, இறுதியாய் அடிப்படைத் தேவைகளின் விலையேற்றம். 6.25 காசுகள் உயர்த்தப்பட்டிருக்கும் பால்விலை, உயரப்போகும் மின்சார கட்டணம், உயர்ந்துபோன பேருந்துக் கட்டணங்கள். விலைஉயர்வுக்குக் கொடுக்கப்பட்டுள்ள காரணம் அரசுத்துறை நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்குகின்றன என்பதுவே. பொது நிறுவனங்கள் என்பவை மக்களுக்கான சேவை செய்பவையே அன்றி லாபமீட்டத் தொடங்கியவையன்று.
அவை லாபத்தில் இயங்க ஏழை எளியவர் குருதியை சுவைக்கக் கூடாது என்பதை புரியாத ஆட்சியாளர்கள் இருக்கும் தேசத்தில் எதன் மீதும் நம்பிக்கையில்லை. இருக்கின்ற ஏரி குளங்கள் அனைத்தையும் குப்பைகளால் நிரப்பி வானளவு கட்டிடங்கள் காட்டி பன்னாட்டு நிறுவனங்களுக்கும், டாடாவுக்கும், ரிலையன்சுக்கும் சேவகம் செய்யும் ஆட்சியாளர்களுக்கு இந்த தேசத்தில் இன்னும் நாற்பது கொடி மக்கள் உறங்க வீடின்றி வீதிகளில் உறங்குவதையோ, சுகாதாரமில்லாத வாழ்க்கை குறித்தோ, தினமும் உண்ணும் ஒருவேளை உணவு குறித்தோ எந்த அக்கறையுமேயில்லை.
பன்னாட்டு எசமானர்களுக்கு சேவகம் புரியும் பத்துக் கோடி பேருக்கு மட்டுமே இந்த தேசம் சுருங்கிக் கிடக்கிறது, தமிழக ஆட்சியாளர்களும் முந்தய ஆட்சி சீர்கேடுகள், மைய அரசு நிதி தராமை எனும் பல காரணங்களைக்  கொண்டு இப்பணிகளை செவ்வனே செய்கின்றனர் . ஆறு ரூபாய் விலை உயர்வு என்பது ஆட்சியாளர்களின் பிள்ளைகளையோ, இருக்கும் சிறுஅளவு மேல்வர்க்கத்துக்கோ எந்த பாதிப்புமில்லை ஆனால் மிகுதியான மக்கள் வறுமையில் வாழ்வது என்பதே நிசம்.
பேருந்து பயணக் கட்டண உயர்வென்பது கார்களில் பவனி வருபவரையும், குளிரூட்டப்பட்ட சொகுசு தனியார் பேருந்துகளில் செல்பவரை எந்த அளவிலும் பாதிக்கப்போவதில்லை ஆனால் எதார்த்தத்தில் தினமும் இரண்டு ரூபாய் கட்டணத்தில் பிதுங்கி வழியும் பேருந்துகளில் பயணிக்கும் மனிதர்களே முழுமையான தாக்குதலுக்கு ஆட்படுகின்றனர்.
முந்மைய ஆட்சியினர் இருக்கும் சாதாரணப் பேருந்துகளை டீலக்ஸ் , அல்ட்ரா டீலக்ஸ்  எனும் வழியில் இயக்கி ஒரு தாக்குதலைத் தொடுத்தனர், இன்றைய ஆட்சியாளர்கள் கட்டணங்களை உயர்த்தி அடுத்த தாக்குதலைத் தொடுத்துள்ளனர். என் நண்பனொருவன் சொன்னதைப்போல் பேருந்துக் கட்டணங்கள் விமானக் கட்டணங்களுடன் போட்டியிடுகின்றன. சாதிய அடக்குமுறை, அறிவு அடக்குமுறை, பொருளாதாரத் தாக்குதல் என்று அனைத்து வகையிலும் இன்றைய ஆட்சியாளர்கள் சர்வாதிகார ஆட்சி புரிகின்றனர்.
நாமும் நம் மீது கட்டவிழ்க்கப்படும் அடக்குமுறைகள், கலாசார இருட்டடிப்புகள் என்று எதையும் உணராமல் உன்ன சோறு கிடைக்கின்ற ஒரே காரணத்துக்காய் எதையும் கண்டுகொள்ளாமல் சிறந்த அடிமைகளாய் எதையும் எதிர்த்துப் போராடத் துணிவின்றி வாழ்கிறோம். ஆட்சியாளர்கள் தம்சுயலாபத்துக்காய் நம் நிலத்தை கொலை பூமியாய் மாற்றுவர்.
நாம் நம் நிலத்தை விட்டே துரத்தப்படுவோம். உறவுகளின்றி, நிலமின்றி ஏதோ ஓர் தேசத்தில் நம் தலைமுறைகள் அகதிகளாய் அலைந்துகொண்டிருக்கும் காலம் தொலைவிலேயில்லை. இதைத் தமிழ்பெருமை பேசும் முன்னாள் ஆட்சியாளர்களும், ஆர்ய புகழ் பாடும் இன்றைய ஆட்சியாளர்களும் செவ்வனே செய்வர். பேய்க்குப் பயந்து சாத்தானிடம் மாட்டிக்கொண்ட கதை முடியும்போது தமிழகம் எனும் தேசம் வரலாறுகளின் நீண்டதூரத்தில் புதையுண்டு கிடக்கும்.
சில நாட்களுக்குமுன் ஈழத்து நண்பன் இப்படிச் சொன்னான் " நாங்கள் நிலத்தை, லட்சக்கணக்கான மக்களை இழந்திருக்கலாம். ஆனால் தமிழகத் தமிழர்களைப் போல் தன்மானமற்ற அடிமைகளில்லை."

வியாழன், 20 அக்டோபர், 2011

Pothigai.

தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை. பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில், மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல் எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும் திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம் முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள் சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம் பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி ஆசிரியர் பசுபதி இளமைக் காலத்தில் ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுதான் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார். அப்பா வழிப்பாட்டி சொன்ன இயற்கை குறித்தான கதைகளும் இப்பெரு முயற்சிக்கு அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம், எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன், ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.
இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன் காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.
தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும் பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில் இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம் பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.
கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன் செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு, பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும் வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக் காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.
ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00 எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை” சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும் யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால் படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.
தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில் சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு, கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம் படமாகப்பட்டிருக்கின்றது.
ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும் மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது. பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான். பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.
சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி, திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.
சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428
Clap
எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும் நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது. நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை இசைக்கும் முதல் மணி இவர்தான். ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
Clap

Pothigai.

தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை. பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில், மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல் எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும் திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம் முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள் சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம் பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி ஆசிரியர் பசுபதி இளமைக் காலத்தில் ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுதான் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார். அப்பா வழிப்பாட்டி சொன்ன இயற்கை குறித்தான கதைகளும் இப்பெரு முயற்சிக்கு அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம், எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன், ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.
இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன் காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.
தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும் பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில் இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம் பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.
கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன் செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு, பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும் வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக் காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.
ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00 எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை” சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும் யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால் படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.
தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில் சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு, கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம் படமாகப்பட்டிருக்கின்றது.
ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும் மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது. பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான். பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.
சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி, திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.
சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428
Clap
எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும் நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது. நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை இசைக்கும் முதல் மணி இவர்தான். ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
Clap

Pothigai.

தமிழ் முனிவர் அகத்தியர் வாழும் மலை பொதிகை என்பது தமிழர்தம் நம்பிக்கை. பொதிகையின் புதையல்கள் சுரண்டை சுப்பிரமணியன் மோகன்ராம் அவர்களால் உள்ளங்கை நெல்லிக்கனி ஆக்கப்பட்டுவிட்டன. ஆம்! பல லட்சம் பொருட் செலவில், மூன்றாண்டுகால உழைப்பில், 2000கிலோ.மீட்டர் மலைப் பயணத்தில், 2000அரிய வகை உயிரினங்கள், தாவரங்கள், மரம், செடி, கொடிகள் என பொதிகையின் சுற்றுச் சூழல் எனும் புதையல் படமாக்கப்பட்டுள்ளது.
முன்னாள் தொலைக்காட்சிப் படப்பிடிப்பாளர் வெங்கடாச்சலம், மற்றும் திரைப்படக் கல்லூரி மாணாக்கர் மூவர் கொண்ட குழுவினர் மோகன்ராம் முயற்சிகளுக்குத் துணையாய் செயல்பட்டுள்ளனர். இவர்கள் தமது தயாரிப்பு நிறுவனத்திற்கு வைத்த பெயர் வனபாரதி மீடியா. தயாரித்துள்ள ஆவணப்படத்திற்கு இவர்கள் சூட்டியுள்ள பெயர், ஓர் அருந்தமிழ்க் காடு. இந்த ஆண்டு இறுதிக்குள் சாமான்யர்களும் கண்டு களித்திட வாய்ப்புக் கிடைக்கும் என்று பெருமிதம் பொஙகச் சொல்கின்றார், எஸ்.மோகன்ராம்.
சென்னை வண்ணாரப்பேட்டை பி.ஏ.கே. பழனிச்சாமி பள்ளி ஆசிரியர் பசுபதி இளமைக் காலத்தில் ஊட்டிய சுற்றுச் சூழல், மரம் வளர்ப்பு குறித்த விழிப்புணர்வுதான் அடிப்படைக்காரணம் என்று நன்றியோடு நினைவு கூர்கின்றார். அப்பா வழிப்பாட்டி சொன்ன இயற்கை குறித்தான கதைகளும் இப்பெரு முயற்சிக்கு அடித்தளமாய் அமைந்ததையும் மறக்காமல் சொல்கின்றார்.
தமிழக- கேரள எல்லைப் பகுதியில் வாவதி-சீவதி என்ற உடன்பிறப்புக்களான தமிழ், மலையாள குறியீட்டுக் கோவில்களும் படமாக்கப்பட்டுள்ளன. பொதிகை மலையின் வயது250மில்லியன் ஆண்டுகள் முதல்400 மில்லியன் ஆண்டுகள் வரை இருக்கலாம் என்பது மோகன்ராமின் ஆய்வின் முடிவு. பறவை இயல் நிபுணர் சலீம், எம்.எஸ் இராமசாமி, ஏ.என்.ஹென்றி, ஏ.ஜே.டி.ஜான்கிட், ரால்ப் அலி, ஸ்டீபன், ஜான் ஓட்ஸ் ஆகியோரும் பொதிகையை ஆய்வு செய்துள்ளனர்.
இராஜநாகம் உள்ளிட்ட இருபது வகைப் பாம்புகள், புலிவரிக் கோடுகளுடன் காணப்படும்பத்து வகையான உயிரினங்கள், பறக்கும் பல்லி உள்ளிட்ட இருபது வகையான பல்லி இனங்கள், மனித முகமுடைய பூச்சி, மர்றும் பதினைந்து வகையான எறும்புகள் துல்லியமாகப் படமாக்கப்பட்டுள்ளன.
மிகச் சாதாரண ஈ, தேனீயைப்போன்று150 மடங்கு பெரிதான15 வகையான ஈ,தேனீக்களையும், மிகப் பெரிய மரக் கூட்டுக்குள் கோடிக்கணக்கான எறும்பினங்கள் வசிப்பதையும், அந்த மரங்களுக்குள் மிகப்பெரிய உலகமே படைக்கப்பட்டிருப்பதையும் படமாக்கியுள்ளனர்.
தூக்கணாங்குருவிகள், தஙகள் கூட்டுக்குள் மின் மினிப் பூச்சிகளைக் கொத்திக் கொண்டு வந்து விளக்கொளி பாய்ச்சுவதையும், அழகிய பீ-ஈட்டர் மற்றும் பி ஜே என்னும் பறவை இனங்களையும், இராஜாளி கழுகுகள் வானத்தில் ஒரே இடத்தில் இறக்கையை விரித்து நின்று அழகு காட்டுவதையும், பலவகை வண்ணங் கொண்ட பட்டாம் பூச்சிகளையும், ஹனிபில் என்ற நீர்ப்பறவையையும் படமாக்கியுள்ளனர்.
கருங்குரங்கின் பல்வேறு வளர்ச்சி நிலைகளையும், மொழி உச்சரிப்புடன் செல்போனில் பேசினால், பதில் பேசுகின்ற அரிய வகைப் பறைவைகள், மகிழ்ச்சி மொழிகளைப் பரிமாறி ஜோடி சேரும் பறவைகள் என அரிய காட்சிகளைப் படமாக்கியுள்ளனர்.
11வகையான காடுகளைப்பற்றியும், பொருணைநதியாம் தாமிரபரணி உற்பத்தியாகும் பொதிகைமலை உச்சிப்பகுதி படமாக்கப்பட்டுள்ளது. அதன் வற்றாத கிளை நதிகளான சிற்றாறு, கடனா நதி, ராமா நதி, அனுமன் நதி, சேர்வலாறு, மணிமுத்தாறு, பம்பாறு, க்வுதலை ஆறு, பச்சையாறு, கோதையாறு, குண்டாறு ஆகிய அனைத்தும் வழிப்பாதைகளுடன் படமாக்கப்பட்டுள்ளன. உலகின் மிகப் பெரிய பரப்பளவிலான மழைக் காடுகளையும் மோகன்ராம் குழுவினர் படமாக்கியுள்ளனர்.
ஓர் அருந்தமிழ்க் காடு” என்ற இந்த ஆவணப்படத்தை டி50, டி55, ௪௫0-௫00 எனும் துல்லியமான லென்ஸ் பொருத்தப்பட்ட கேமிராக்களைப் பயன்படுத்தி எடுத்துள்ளனர். இந்தக் கேமிராக்களைத் தாஙகக் கூடிய “ட்ரைபாட் ஸ்டாண்ட்களை” சிலுவையைப்போல் சுமந்து சென்றதாக படப்பிடிப்புக் குழுவினர் கூறுகின்றனர். பல நாட்களில் மலைக் குகைகளில் முடங்கியும் கிடந்துள்ளனர். ரத்தத்தை உறிஞ்சும் அட்டைகளச் சமாளிக்க மூக்குப்பொடி, ஓடோமோஸ், விளக்கெண்ணெய் கலந்த நீரை உடலெங்கும் பூசிக்கொண்டும் சமாளிக்க வேண்டியதாயிற்று. வழி மறிக்கும் யானைக் கூட்டங்கள், பாதையில் பரவிடும் பாம்புகள் மலைவாசிகளின் உதவிகளால் படப்பிடிப்புக் குழுவினரின் பயணம் தொடர்ந்தது.
தாராளமாய்க் கிடைத்த மூட்டுப்பழம், தேன், ஆரோக்கியப் பச்சை என்ற அகத்தியர் மூலிகை ஆகியவற்றைச் சாப்பிட்டு இருபது மணி நேரம் படப்பிடிப்பில் சோர்வில்லாமல் ஈடுபடமுடிந்தது.
தமிழ்நாட்டைச் சேர்ந்த இருஞ்சிக்குடி, பெரியமையிலாறு, சின்ன மயிலாறு, கேரளப் பகுதிகளான தேபாரா மற்றும் பாணாக் காடு எஸ்டேட் பகுதிகளி எல்லாம் படமாகப்பட்டிருக்கின்றது.
ஆதிவாசிகளும், மலை சாதியினரும் மரவள்ளிக் கிழங்கையும், தேனையும் மீன்களையும் உண்டு எழுபது சதவிகிதம் பேர் சாமான்யராகவே வாழ்ந்து வருகின்றனர். மிகச் சிலரே இயற்கையோடு இணந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த ஆதிவாசிகளின் துணையோடுதான் “ஓர் அருந்தமிழ்க் காடு “ ஆவணப்படத்தினை உருவாக்க முடிந்தது என்கிறார் வனபாரதி மீடியா குழுவினரின் அச்சாணியான எஸ்.மோகன்ராம். தமிழக-ஆந்திர அரசுகள் தாரளாமாய் அனுமதி வழங்கியதையும் குறிப்பிட மறக்கவில்லை.
அக்டோபர்18ல் ஜனசக்தியில் இக்கட்டுரையைப் படித்தவுடன் உளம் மகிழ்ந்தது. பொதிகையையும், இலமூரியாவையும் நேரடி ஆய்வுக்குட்படுத்தமாட்டார்களா என்று ஏங்கும் பலருள் நானும் ஒருவன். பொதிகையில் இது ஒரு துவக்கம்தான். பொதிகையும், குமரிக் கண்டமும் முழுமையாக வெளிப்படும் பொழுது தமிழர் பெருமை மேலும் உயரும். அதற்கான ஆதாரங்கள் கிட்டும்.
சுப்பிரமணியன் மோகன்ராமின் மனைவியார் தேன்மொழியும், சுப்பிரமணி பாரதி, திவ்ய பாரதி, பொதிகை பாரதி ஆகிய வாரிசுகளும் பெறும் பேறு பெற்றவர்கள்.
சென்னை பி.ஏ.கே.பள்ளி04425951428
Clap
எஸ்.இசைக்கும் மணியை அறிமுகப்படுத்திய கே.ஜீவபாரதிக்கும், ஜனசக்திக்கும் நன்றி.ஜனசக்தியில் இக்கட்டுரையை எழுதியவரின் பெயரும் வித்தியாசமானது. நெல்லை மாவட்டத்தில் எசக்கியம்மன் பெயரினடிப்படையில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் பெயர் சூட்டுவார்கள். இவருக்கும் எசக்கிமணி என்று பெயரிட்டுள்ளார்கள். சென்னைக்குக் குடி பெயர்ந்தது குடும்பம். பெயரை ஆசிரியர் இசைக்கும் மணி என்று மாற்றி விட்டார். பொதிகையின் ஆவணப்படப் புகழை இசைக்கும் முதல் மணி இவர்தான். ஜனசக்தியின் தொடர்பிற்கு; 04422502447/48
சுப்பிரமணியன் மோகன்ராமைத் தொடர்புகொள்ள9944814445
Clap

ஞாயிறு, 9 அக்டோபர், 2011

Prabanchan. Two ladies.



இரண்டு பிரஞ்சுப் பெண்கள்



இரண்டு பிரஞ்ச் பெண்களை அறிமுகம் செய்துகொள்ளப் போகிறோம். பொதுப்புத்தியில் பதிந்து போயிருக்கும் 'அழகி' என்கிற பிம்பமோ, வீர தீரச் சாகசம் செய்த பெண்மணிகளோ அல்லர். அவர்கள் இருவருமே தம் காலத்து சமூக வரம்புகளுக்குள் ஒரு மீறலை ஏற்படுத்தியவர்கள் என்பதனாலும், தங்கள் செயல்பாடுகளுக்குத் தங்கள் ஆத்மாவின் உள்ளுணர்வின் திசை காட்டுதலுக்கேற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டார்கள் என்பதாலேயே நம் கவனத்தைக் கோருப வர்களாக இருக்கிறார்கள். முதலில் ழான். பிரான்சில் பாரிசில் பிறந்து மருத்துவம் பயின்று இந்தியாவுக்கு வந்தவர் அவ்பேர். அரசு மருத்துவமனை அதிகாரியாகப் புகழ்பெற்றவர் அவர். பிரஞ்சுக்காரர்களின் தலை நகரான புதுச்சேரித் தெருவில் அவ் பேர், எலிசபெத்தைச் சந்திக்கிறார். ஒரு போர்ச்சுக்கீசியரின் இந்திய மனைவிக்குப் பிறந்தவர் எலிசபெத். புதுச்சேரித் தெருக்களில் ஷாம் பெய்ன் ஒயினின் மதுர மணம் பரவிய ஒரு மாலையில் அவர்கள் திருமணத்தில் இணைகிறார்கள். அவர்கள் எட்டுக் குழந்தைகளைப் பெறுகிறார்கள். அதில் மூத்தவள் ழான். பிறந்த வருடம் 1706.



ழானின் குழந்தைப் பருவம், கோட்டையைச் சுற்றிய பூங்காக்களில் பட்டாம்பூச்சியின் பின்னே மலர்ந்து கொண்டிருந்தது. நோயாளிக் கிடங்குக்கு அருகேயே இருந்த அவர்கள் வீட்டிலிருந்து பார்த்தால், கரும் பச்சைப் பாய் விரித்த கடல் தெரிந்தது. வீட்டு மாடி ஜன்னலிலிருந்து, புரண்டு புரண்டு வரும் அலைகளைப் பார்த்துக் கொண்டிருப்பதில் தன்னை மறப்பவள் ழான். கடலும் அலையும் அவளுக்குத் தினம் தினம் புதிது புதிதாய் என்னென்னவோ சொல்லிக் கொண்டே இருந்தன.



கடல் எப்போதும் ஒரு கண்ணாடி. மனிதர்களின் சந்தோஷத்தையும் துக்கத்தையும் அது பிரதிபலித்துக் கொண்டே இருக்கும். தெருக் குழந்தைகளிடம்தான் அவள் தமிழ் பேசக் கற்றாள். பிரஞ்ச் ஒலியில் தமிழ் பேசினாள். கடற்கரை மணலில் அவள் நிறைய வீடுகள் கட்டினாள். மறுநாள் சென்று பார்த்தால், அவை இருப்பதில்லை. தெருக்களில் ராணுவ, காவல் துறை ஆட்கள் நடமாட்டம் எப்போதும் இருக்கும். வெள்ளைக்காரர்கள், தனியாகவும் தம்பதி சமேதராகவும் தெருக்களில் நிரம்பி இருப்பார்கள். கோட்டைக்குள் அடிக்கடி உயர் உத்தியோகஸ்தர்கள், குவர்னர், துணை குவர்னர்களின் கொண்டாட்டங்கள் நிகழும். நிறைய மதுப்புட்டிகளுடன் வயதான ஒயின்கள் மனிதர்களைப் பருகிக்கொண்டே இருக்கும். பெரிய பெரிய தீனி மேசைகள் போடப்பட்டு இந்திய ஐரோப்பிய உணவு வகைகள் பரிமாறிக் கொள்ளப்படும். ழான் இந்திய உணவை நோக்கியே கை நீட்டுகிறவளாக இருந்தாள்.



அம்மா எலிசபெத் 'இந்தியப் பெண்ணின்' மனோபாவங்களைக் கொண்டவளாக இருந்தார். அதாவது தன்னைப் பின் கட்டிலேயே வைத்திருக்கும் பெண். (ஆண்களால் அப்படி வைக்கப்பட்டு அதை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் பெண்.) ழானுக்கும் அவள் அம்மாவுக்கும் இது பற்றியே முரண்கள் தோன்றிக் கொண்டிருந்தன. தனக்குப் பறக்கத் தோன்றுவதை நினைவுறுத்தினாள் ழான். பெண்ணுக்குச் சிறகுகள் தேவையில்லை என்றார் எலிசபெத்.



ஒருநாள், கடற்கரை ஓரம் நின்று வந்துபோகும் கப்பல்களை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தாள் ழான். அவளைத் தேடிவந்து அவள் வீட்டார் அழைத்துச் சென்றார்கள். வீட்டில் அவளை மணக்கப்போகும் மாப் பிள்ளை வேன்சான் காத்திருந்தார். பிரஞ்ச் கும்பினியில் ஒரு உத்தியோகஸ்தர். அதோடு வணிகர். தேவகுமாரனுக்கு முன்னால் அவள் விரலில் வேன்சான் திருமணத்தை உறுதி செய்தார். ழானுக்கு அப்போது வயது 13.



திருமணத்தின் அர்த்தத்தை இரவுகளில் அவள் புரிந்துகொள்ள நேர்ந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. கூடிக் குசுகுசுத்துக் குருட்டறைகள் இட்ட கரு. போர்க் குதிரைகளின் காலில் இடர்பட்டாற்போல் இருந்தது. தொடர்ந்து பதினொரு குழந்தைகளைப் பெற்றாள் ழான். சிலது வாழ்ந்தன. சிலதைக் கர்த்தர் எடுத்துக் கொண்டார்.



வீட்டின் வரவேற்பறையில் இப்போதெல்லாம் புதிய நபர், அவள் கணவனுடன் பேசிக்கொண்டு இருப்பதை அவள் காணத் தொடங்கினாள். புதுச்சேரிப் பகல்கள் இத்தனை வெளிச்சமாக இருப்பதை இப்போது தான் அவள் பார்த்தாள். வேன்சானின் மதாம் என்ற முறையில் விருந்தாளிக்குக் குடிக்கவும், அருந்தவும், தின்னவும் அவள் பணி செய்ய வேண்டி இருந்தது. அந்த இளைஞன், பிறந்த பிரான்ஸ் தேசத்தையும் விட்டு தனிமையில் வாழ்ந்துகொண்டிருக்கும் துய்ப்பிளக்ஸ். அவன் கண்களில் கனவு மிதந்து கொண்டிருந்தது. அரசியலில் பெரும் சாதனைகளைச் செய்யப் போகிறவன்தான் என்று அவன் சொல்லிக் கொண்டிருந்தான். அவன் வார்த்தைகளில் தங்க நாணயங்களின் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. பணம் பண்ண வேண்டும். பண மூட்டைகளை இருக்கைகளாகப் போட்டு அவைகளின்மேல் உட்கார வேண்டும். கும்பினியின் மிக முக்கிய இடத்தில் இருந்தான். விரைவில் துய்ப்பிளக்ஸ், வேன்சானின் வியாபாரக் கூட்டாளியாக மாறினான். இருவரும் சேர்ந்து வியாபாரம் செய்யத் தொடங்கினார்கள். சரக்குகளைக் கப்பல்களில் ஏற்றிக் கரைகடந்த நாடுகளுக்குச் சென்று விற்றுத் திரும்பிக் கொண்டிருந்தான் வேன்சான்.



துய்ப்பிளக்ஸ், மிக நுணுக்கமான மெல்லிய உணர்ச்சிகள் கொண்டவனாகத் தெரிந்தான், ழானுக்கு. அவள் குழந்தைகளிடம் அவன் பிரியமாக இருந்தான். அவன் வருகை, வரவேற்பறையில் பகல் நேரத்திலும் மெழுகுவர்த்திகளை ஏற்றி வைத்திருப்பதாயும், சாம்பிராணிப்புகை மணமூட்டுவதாகவும் ழானுக்குத் தோன்றியது. புகை, இரவு நேரத்திலும் அவள் கட்டில் ஓரம் கமழ்வதாகவும் அவளுக்குத் தோன்றவாரம்பித்தது. இந்த நேரத்தில்தான், குழந்தைக் கை முறுக்கைக் காக்கை அடித்ததுபோல், துய்ப்பிளக்ஸ், புதுச்சேரியிலிருந்து கல்கத்தாவை அடுத்த சந்திரநாகூருக்கு மாற்றப்படுகிறான். அங்கு அவன் கும்பினியின் இயக்குநர். ஹுக்ளி நதிக்கரை ஓரம் அவன் இருக்கை இருந்தது. சில்லிட்டு வீசிய இரவு நேரக் காற்று துய்ப்பிளக்ஸை இம்சை செய்தது என்று ஒரு வரலாற்றாளர் எழுதுகிறார். வேன்சானைத் தான் இருக்கும் பகுதிக்கே அழைத்துக் கொண்டு வியாபாரத்தைத் தொடர்கிறான் துய்ப்பிளக்ஸ். வேன்சானுடன் ழானும் வங்கத்துக்குக் குடிபெயர்கிறாள்.



விரைவிலேயே ஒரு பெரிய வணிகப் பயணத்தை மேற்கொண்ட வேன்சான், புயலில் சிக்கி, உடல் நலம் கெட்டு, வங்கம் திரும்பிய சில நாட்களுக்குள் மரணத்தை அழைத்துக் கொள்கிறான். நண்பனுக்காகத் துக்கம் காத்த துய்ப்பிளக்ஸ், கிறித்துவ நெறிகளுக்குட்பட்டு ழானைத் திருமணம் செய்துகொள்கிறான். திருமணம் நிகழ்ந்த சில நாட்களுக்குள் துய்ப்பிளக்ஸ், புதுச்சேரியைத் தலைமை அகமாகக் கொண்ட பிரஞ்சு பிரதேசத்துக்குக் குவர்னராக உயர்த்தப்படுகிறான்.



ழான், தன் கனவு நகரமான புதுச்சேரிக்குத் திரும்புகிறாள். கடல் அலைகள், அதே சப்தத்துடன் ஆர்ப்பரிக்கிறது. கடற்கரை மணல் மட்டும் லேசாக அழுக்குப்பட்டிருப்பது போல அவளுக்குத் தோன்றியது. இப்போது அவள் நகரத்தின் முதல் பெண்மணி. குவர்னர் துய்ப்பிளக்ஸின் மதாம். ஆகவே மதாம் துய்ப்பிளக்ஸ். ஒரு உயர்தரத்து அதிகாரி, 'மதாம் துய்ப் பிளக்ஸுக்கு நகரத்தின் நல்வரவு' என்கிற போது, 'நான் மதாம் துய்ப்பிளக்ஸ் மட்டும் இல்லை. நான் ழான் அல்பெரும்கூட, என்கிறாள். பதவியும், சௌகர்யப் பௌதிகப் பொருள்களும், திரும்பிய பக்கமெல்லாம் ஏவல் பாத்திரங்களும், அதீத உண்மைக் கலப்படம் அற்ற பணிவு நாடகங்களும் அவளை எரிச்சல் அடையச் செய்தன. கடற்கரையில் தன்னந்தனியாகக் காலாற நடக்கும்போதுகூட, துப்பாக்கிச் சனியன்கள் அவள் பாதுகாப்பாயின. துய்ப்பிளக்ஸ் குவர்னர் என்றால், நான் அதில் பாதி. அதிகாரச் சுவருக்குள் அலங்கார பொம்மை அல்ல நான் என்ற முடிவுக்கு அவள் ஒரு நாள் வந்தாள்.



அந்தக் காலத்தில் லஞ்சம், ஊழல் என்பதெல்லாம் அரசு அந்தஸ்தோடு விளங்கின. அதிலும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற மானுட சங்கல்பங்களை உலகுக்கு வழங்கிய பிரான்சிலா என்றால் நமக்கு வியப்பாகத் தோன்றலாம். பிரஞ்சுப் புரட்சிக்கு முந்தியவள் ழான். அதோடு, பின்வந்த காலனிய வாதிகள், அந்தத் தத்துவங்களை பிரஞ்சு நாட்டு எல்லைக்குள் முடக்கிக் கொண்டார்கள். காலனி நாடுகளில் மிக மோசமான ஆதிக்கச் சக்திகளாகவே இருந்தார்கள். பிரான்ஸ் தேசத்தில் முக்கிய, அ-முக்கியப் பதவிகள் எல்லாமும் ஏலத்துக்கு விற்று அதிகப் பணம் தருவோரே பதவியில் அமர்த்தப்பட்டனர்.



மாநிலத்தில் கோர்த்தியேவாக, மிக முக்கிய அரசுப் பொறுப்பில் இருந்த கனகராயமுதலி, காலம் பண்ணிப் போனார். ஒரு பெரிய அறுவடை பூமியாயிற்று புதுச்சேரி. ஏற்கெனவே, துணை கோர்த்தியே வாக-துபாஷியாக-குவர்னருக்கு நெருக்கமான ஆனந்தரங்கப் பிள்ளைக்கே அந்தப் பதவி போய்ச்சேரும் என்றே அரசியல் வட்டாரம் நினைத்தது. ஊடாக, அன்னபூர்ண ஐயன் என்கிற வைத்தியன் புகுந்து, ழானைச் சந்திக்கிறான். அவளுக்கு 1500 வராகனும் (1 வராகன்- 3 ரூபாய்), குவர்னருக்கு 5000 வராகனும் தருவதாகவும், அந்தப் பதவி தனக்கு வேண்டும் என்கிறான். செத்துப்போன கனகராய முதலியின் தம்பி சின்ன முதலியும் அந்தப் பதவிக்குப் பணம் தரத் தயாராகிறான். ழான், மிக புத்திசாலித்தனமாக யோசிக்கிறாள். பதவியின் 'விலை'யை ஆனந்தரங்கப் பிள்ளையிடம் இவ்வாறு சொல்லிக் கொக்கி போடுகிறாள்.



'அந்த அன்னபூர்ண ஐயனுக்கு வாணிபம், நிர்வாகம் போன்ற எதிலுமே அனுபவம் இல்லை. நீயானால் இந்த உத்தியோகத்தில் சின்னப் பிள்ளையாயிருந்து எங்கள் கையின் கீழ் பழகினவன். . . நீ எனக்குப் பிள்ளை. துரையும் உன்னைப் பிள்ளையாக நினைத்தே என்னிடம் கெட்டியாகச் சொன்னார்' என்பதாகச் சொல்லி, பிள்ளையை ஆராய்கிறாள் ழான்.



'காசு சத்தம் கேட்டாலே அம்மாள் வாயைத் திறக்கிறாள்' என்று பிள்ளை (தன் டைரியில்) எழுதுகிறார். குவர்னர் துரை வாங்கலாம். துரைசானி லஞ்சம் வாங்கக் கூடாதா என்பது ழானின் கேள்வியாக இருந்தது. ஆனந்தரங்கர், குவர்னருக்கு மட்டுமல்லாமல் தனக்கும் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறாள் ழான். கனகராய முதலி வாரிசில்லாமல் செத்துப் போக, அவர் சொத்துக்கு மனைவி, மருமகள், தம்பி என உறவுகள் எதிர்பார்க்க, சொத்துகளைத் தன்பக்கம் வளைத்துக் கொள்ள பெரு முயற்சி எடுத்து வெற்றியும் பெறுகிறாள் ழான். அரசாங்கத்தின் முக்கிய அச்சாணியாகவும் பணி ஆற்றுகிறாள். பிரஞ்சியர்க்கும் ஆங்கிலேயர்க்கும் விளைந்த யுத்தத்தின் போது, ஊரைவிட்டு ஓடிப்போன செட்டிகள், கோமட்டிகளின் வீடுகளில் தாழ்த்தப்பட்ட, வீடற்றவர்களைக் குடியேற்றுகிறாள் ழான். தனக் கென்று தனிப்படையே வைத்துக் கொண்டு ஆட்சி செய்திருக்கிறாள் ழான்.



துய்ப்பிளக்ஸுக்குப் பன்னிரண்டாவது குழந்தையைப் பெறுகிறாள் ழான். ஆண் குழந்தை. அது காலை நேரத்தில் பிறக்கிறது. கோயில் மணியோசை ஊரை மகிழ்ச்சியில் ஆழ்த்துகிறது. மக்களுக்குச் சர்க்கரை விநியோகம் செய்கிறார் பிள்ளை. மாலை, மணியோசை துக்கத்தைக் கொண்டு சேர்க்கிறது. பிறந்த குழந்தை சில மணி நேரத்தில் இறந்து போகிறது.



சுமார் 12 ஆண்டுத் துரைத்தனத்துக்குப் பிறகு, பிரான்ஸ், துய்ப்பிளக்ஸைத் திருப்பி அழைத்துக் கொள்கிறது. வியாபாரம் செய்வதற்கு மாறாக, நாடு பிடிக்கும் வேலையில் ஈடுபட்டான் என்பது குற்றச்சாட்டு. நாடு பிடிக்கும் வியாபாரம் வெற்றி பெற்றிருக்கும் என்றால் பிரான்ஸ் அவனைப் பாராட்டி இருக்கும். துய்ப்பிளக்ஸ் வீழ்ந்த இடத்தில் கிளைவ் வெற்றி பெற்றான். ஏறக்குறைய ஒரு கைதியாகப் பிரான்சுக்குப் புறப்பட்டான் துய்ப்பிளக்ஸ். மகள்கள், மரு மகன்கள் ழானைத் தங்களுடன் வைத்துக் கொள்ளவே பிரியப்பட்டார்கள். ஆனாலும் கைதியுடன் தான் தன் வாழ்க்கையை இணைத்துக் கொண்டாள் ழான். பிரான்சுக்குப் சென்ற ழான், அங்குள்ள குளிர் வாட்ட, மண் ஒட்டாமல் போக, வறுமை வந்தெய்த, நிராசையுடன் அங்கேயே தன் கடைசி மூச்சை விட்டாள். இறக்கும்முன், சில நாட்கள் முன்னர், புதுச்சேரியில் இருந்த தன் தோழிக்கு எழுதினாள்.



'புதுச்சேரி மண்ணில் இறந்து, அங்கேயே புதைக்கப்படவேண்டும் என்று விரும்புகிறேன். அது நடக்காது என்றே தோன்றுகிறது'



ழான் ஆசை நிறைவேறவில்லை. சரியாக ஐம்பது ஆண்டுகளே மண்ணில் வாழ்ந்தாள், அவள். ஆண்களால் மட்டுமே நிரம்பி இருந்த அரசியல் களத்தில் தனக்கான இடத்தைக் கடும் பிரயாசையுடன் ஏற்படுத்திக் கொண்டவள் அவள். அவள் அரசியல் பிழைத்தாள் என்கிறார்கள் வரலாற்றாளர்கள். முதலிலும் இடையிலும் கடைசியிலும் தப்பாகவே ஆகிப்போன அரசியலில் அவள் மட்டுமே பிழை செய்தாள் என்பது எங்ஙனம் சரி? அவள், அவள் விருப்பப்படி வாழ்ந்தாள். தனக்கான தடத்தைத் தானே தேடினாள். தனக்கான கூட்டைக் கட்டினாள்.



வாழ்க்கை அவளுக்காகத் தரப்பட்டது. அதை முழுதுமாகவே அவள் வாழ்ந்தாள். அப்புறம் என்ன?



அடுத்த பெண், மார்க்கெரித் துராஸ். பிரஞ்சு மொழியில் எழுதிய 'காதலன்' நாவலில் இடம் பெறும் அந்த 'அவள்'. பிரஞ்சு மூலத்திலிருந்தே தமிழ் எழுத்தாளர் நாகரத்தினம் கிருஷ்ணா அவர்களால் தமிழில் மொழியாக்கம் செய்யப்பட்டது. உலகம் முழுதும் சுமார் 40 மொழிகளில் ஆக்கம் செய்யப்பட்ட நாவல் இது.



ஆசிரியை மார்க்கெரித் துராஸ், 1996 வரை வாழ்ந்தவர். வாழ்வின் கடைசிப் பகுதியில் மிகுந்த புகழோடு, நிறைய மர்மப் பூச்சுகளைப் பூண்டவராக விளங்கியவர். தீவிரமான அரசியல் ஈடுபாட்டுக்கும் செயல்பாட்டுக்கும் இவர் பேசப்பட்டிருக்கிறார். பிரான்சின் அனைத்து அரசியல், கலாச்சாரப் போராட்டங்களிலும் அழுத்தமாகப் பங்கெடுத்துக் கொண்டவர். பிரான்ஸ், ஜெர்மனியின் ஆக்கிரமிப்புக்குள்ளானபோது தலைமறைவு வாழ்க்கையை மேற் கொண்டு நாஜிகளுக்கு எதிராக இயங்கியவர். மே 68 மாணவர் போராட்டம், அல்ஜீரியா நாட்டின் விடுதலை ஆதரவுப் போராட்டம், தீவிரப் பெண்ணியம் என்று இவர் வாழ்க்கையை அடர்த்தி பண்ணிக் கொண்டார். கீழைத் தேசத்தை நேசித்த பெண்மணி. கங்கையையும், கல்கத்தாவையும் எழுதி இருக்கிறார். துராசின் நண்பரும், பிரான்சின் ஜனாதிபதியுமான மித்ரானிடம், ஒரு உணவு விடுதியில் உரையாடியபோது அவர் சொன்னார். 'மித்ரான். நான் இப்போ சாதாரணமானவள் இல்லை. உன்னைக் காட்டிலும் நான் பெரியவள். உலகம் என்னை அறியத் தொடங்கி இருக்கிறது.’ என்றபோது மித்ரான் 'அதிலென்ன சந்தேகம். உன் மரியாதை பற்றி நான் ஆச்சரியப்படவில்லை' என்றார்.



துராசின் எல்லாப் படைப்புகளுமே தன் வரலாறு வகையைச் சேர்ந்தவை. அந்த வரலாற்றைச் சொல்ல அவர் தேர்ந்தெடுத்த வசீகரமான மொழியும், விசித்திரச் சொப்பனம் காணும் பாத்திரங்களும் அவர் படைப்புகளைத் தரப்படுத்தி இருக்கின்றன. ஒற்றைத் திறப்பு அல்லாது, பாத்திரங்களின் பல கதவங்களைத் திறக்கிற நுட்பம் அவருக்கு இருந்தது. ஒன்றைச் சொல்லும்போதே பல அடுக்குகளையும் வெளிச்சப்படுத்திக் கொண்டே நகரும் எழுத்துப்போக்கு துராசுடையது.



மனிதப் புரிதலில், 'முழுமை' என் பதில் அறவே நம்பிக்கை இல்லாதவராக இருக்கிறார் துராஸ். தத்தளிப்பவர்கள், கனவுலகவாசிகள், நீர்த்த கற்பனையில் மிதப்பவர்கள், தூக்கத்தில் நடப்பவர்கள், விட்டேற்றியான வழிப்போக்குப் பயணிகளின் மனோபாவக்காரர்கள், உறுதி என்பதை அறியாதவர்கள் என்பவர்களே துராசின் பாத்திரங்கள். உண்மை என்பது ஒன்று இல்லை ஆதலால், உண்மை என்பது போன்ற ஒன்றைக் கட்டமைக்கிறவராக இருக்கிறார் துராஸ். தான் அறிந்த 'உண்மையை', மொழிக்குக் கொண்டுவரச் சிரமப்படுபவர்போல நடிக்கிறார் துராஸ். எதிர்காலத்தில் எழுத்து எப்படி இருக்கும் என்பது பற்றித் துராஸ் இப்படிச் சொல்கிறார். 'எதிர் காலத்தில் எழுத்தென்பது எழுதப்படாததாக இருக்கக்கூடும். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை. மிகச்சுருக்கமாக இலக்கணம் இன்றி சொற்களை மட்டும் நம்பி எழுதப்படும். இலக்கணம் மறுக்கும். அலைக்கழிக்கும் சாத்தியங்களுடன் இருக்கும்'.



காதலன் 1984-இல் பிரசுரமாயிற்று. பதினாறு வயதுகூட நிறையாத ஒரு பெண்ணுக்கு அவளை விடவும் இரு மடங்கு வயதான ஆணுடன் காதல் ஏற்படுகிறது. அவன், பணக்கார சீன இளைஞன். அவள், வியட்நாமில், பிரஞ்ச் ஆதிக்கத்துக்குப் பட்ட பூமியில் பிறந்து வளர்பவள். ஏழை. அல்லது தேவைகள் பூர்த்திசெய்து கொள்ள முடியாத சூழல் உள்ள குடும்பம். இருவருக்குமான 'காதல்', நிகழ்காலம் தொடங்கிக் கடந்த காலத்துக்கும் பின்வாங்கிச் சொல்லப்படுகிறது. இருவருக்குமே இக் காதல் 'கைகூடாது' என்பது தெரியும். அவளுக்கு அவன் தான் முதல் அனுபவம். அவனுக்கு அது உண்மையான முதல் காதல்.



'கை கூடாது' என்பதுதான் என்ன? காதல் என்பது முறையாக, திருமணத்தில் பழுத்து, குடும்பத்தில் நிலை பேறுடையது என்பதாகக் கருதுவதையே கைகூடுதல் என்று கருதப்படக் கூடியது. இவ்வாறு நலமோங்கும் விதத்தில் அதன் வளர்ச்சிப் போக்காக அமையாதது, திரளாதது, கைகூடாதது. துராஸ், கைகூடாமல் போனால் என்ன போயிற்று என்கிறார். சூரியன் அஸ்தமனம் நின்றுவிடுமா என்கிறார் அவர். புத்திக்குள் ஏன் இந்த நிறுவனச் சிலுவைகளைச் சுமக்கிறீர்கள் என்கிறார் துராஸ். நியாயம்தானே?



துராசின் காதலன் நாவலில் வரும் அவள், அந்த அந்தக் கணத்தில் வாழ்பவள். அவனுக்கு அருளப்பட்ட அற்புதம் எனத்தக்க வாழ்வின் கணங்களின் முழுமையில் தன்னைக் கரைத்துக் கொள்கிறாள். அவள் தன் அனுபவங்களைச் சொல்வதாக, தன்மை இடத்தில்வைத்து நிகழ் காலத்தையும் கடந்ததையும் இணைத்துச் சொல்லுவதாக நாவல் நிகழ்கிறது. நாவல் இப்படித் தொடங்குகிறது.



'ஒரு நாள் வளர்ந்து பெரியவளாக இருந்த காலம். பொது மண்டபமொன்றில் நின்று கொண்டிருக்கிறேன். என்னை நோக்கி ஒருவன் வந்தான். தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபின், 'வெகுநாட்களாக உங்களை அறிவேன். பலரும், நீங்கள் இளவயதில் அழகாய் இருந்ததாகச் சொல்கிறார்கள். எனக்கென்னவோ இப்பொழுதுதான் உங்கள் முகம் அழகாயிருக்கிறது. அதைச் சொல்லவே வந்தேன். உங்கள் இளவயது முகத்திலும் பார்க்க, சோபையற்றிருக்கும், இப்போதைய முகத்தை விரும்புகிறேன்' என்றான்.



'எனக்கென்று ஒரு வாழ்க்கை இல்லை. இருந்தால்தானே சொல்ல. மையம் என்ற ஒன்றை ஒரு போதும் கண்டதில்லை' எனச் சொல்லும் அவள், தொடர்கிறாள். ‘என் பதின்பருவத்துக் காலங்களான பதினெட்டும் பதினைந்தும் என் கண்முன்னே விரிகின்றன. தெரிகிற முகம் பின்னர் (அதாவது எனது நடுத்தர வயதில்) குடித்துச் சீரழியவிருந்த எனது முகத்தை ஓரளவு முன்கூட்டியே தெரிவிக்கும் முகம். கடவுளால் நிறைவேற்ற இயலாத பணியினை மது முடித்து வைத்தது. என்னைக் கொல்லும் பணியையும் மது ஏற்றிருந்தது’ என்று விசாரத்துக்குள் புகுகிறாள் துராசின் கதை நாயகி.



இப்போது அந்தப் பெண்ணின் முகம் சுமாராக, கதாநாயகித்தனம் இல்லாத விதத்தில் தட்டுப்பட்டிருக்கும். அவள் தன் அம்மாவிடம், 'தான் எழுதப்போவதாகச் சொல்கிறாள். அம்மா மௌனம் காத்தாள். பின், 'என்ன எழுதப்போகிறாய்' என்கிறாள். அவள் 'புத்தகங்கள், நாவல்கள்' என்கிறாள். அம்மா முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, தடித்த குரலில் 'முதலில் கணக்கில் பட்டம் பெற்றாகணும். பிறகு உனது விருப்பம் போல் எதையாவது எழுதித் தொலை' என்கிறாள். எழுத்தின்மேல் இப்படியான 'கரிசனம்' உலகம் முழுதும் இருக்கிறது போலும்.



நமது அவளின் ஆசிரியர், அவள் அம்மாவிடம், அவள் பிரஞ்சுப் பாடத்தில் முதலாவதாக வந்திருப்பதைச் சொல்கிறாள். அம்மா அமைதியாக இருக்கிறாள். அம்மாவின் முகத்தில் மகிழ்ச்சி இல்லை. நமது கதாநாயகி இப்படி எழுதுகிறாள். 'பிரஞ்சுப் பாடத்தில் முதலாக வந்திருப்பது அம்மாவின் ஆண்பிள்ளைகள் அல்லவே!'



ஆண்களுக்கான தொப்பியை அவள் அணிய நேர்கிறது. அதற்கும் வீட்டு வறுமைக்கும் சம்பந்தம் இருக்கிறது. அம்மாவைச் சுற்றி இருப்பது வறட்சியும் பாலையும். அவள் பிள்ளைகள் பாலை நிலமே, எஞ்சி இருப்பது பெண் மட்டுமே. அனேகமாக பணத்தை எப்படி வீட்டுக்குக் கொண்டுவருவது என்பதை அவள் புரிந்து கொள்ளலாம். ஒரு வேளை அதற்காகத்தான் அம்மா தன் மகளை வேசிக்கோலத்தில் வெளியில் அனுப்புகிறாளோ என்னவோ?



அவள் முதல் முறையாக ஆணை அறிந்த அந்த நிகழ்ச்சியை வர்ணிக்கிறாள். ஒரு பெண்ணின் பார்வை மட்டுமல்ல. ஒரு ஐரோப்பியப் பெண், ஒரு சீனனை ஏற்றுக் கொண்ட விதம் பற்றியும்கூட. அவள், தான் ஒரு பிரஞ்சுக்காரி என்பதை ஏனோ மறப்பதே இல்லை. 'தனது சொகுசுக் காரிலிருந்து மிடுக்குடன் ஒருவன் இறங்குகிறான். இங்கிலீஷ் சிகரட் ஒன்றைப் பிடித்துக் கொண்டிருக்கிறான். ஆண்கள் தொப்பியும், மின்னும் காலணியுமாக நிற்கும் சிறுமியைப் பார்க்கிறான். அவளை நோக்கி நடந்து வருகிறான். அவன் தயங்குவதுபோலத் தெரிந்தது. அவனது கை நடுங்குகிறது. சிகரட்டை நீட்டுகிறான். சைகோனில் இருக்கிற வீட்டுக்கு வருகிறாயா என்கிறான். அவள் மறுக்கவில்லை. கறுப்புநிற வாகனத்துக்குள் அவள் நுழைகிறாள். வாகனத்தின் கதவு மூடிக் கொள்கிறது. திடுக்கென்று மெலிதான ஒரு துயரம் அவளைச் சூழ்கிறது. ஒருவித அயற்சி, மெல்ல மெல்ல நதிமீது பரவி இருந்த வெளிச்சம் மங்கி வருவதுபோலத் தோற்றம். . நதியெங்கும் மூடுபனி.



இந்த நிகழ்வுக்குப் பின்னர், அவள் நினைவுகள் இப்படிச் செல்கின்றன.



'இனி உள்ளூர் மக்களுடன் பேருந்தில் பயணிப்பது நின்று போகலாம். விடுதியில் இருந்து உயர்நிலைப் பள்ளிக்குப் போகவும் வரவும் சொகுசு வாகனம் ஒன்று வைத்துக் கொள்வேன். இரவு உணவுக்கு, நகரத்தில் உள்ள மிகவும் ஆடம்பரமான இடங்களுக்குச் செல்லக்கூடும்.. . .'



ஒரு வியாழக்கிழமை அவன், பின் நேரம் விடுதிக்கு வந்திருந்தான். அவளைத் தன் கறுப்பு நிற மோட்டார் வாகனத்தில் அழைத்துப் போனான். அவனது இருப்பிடம் நவீனமாக இருந்தது. தனி அறை. போதிய வெளிச்சம் இல்லை. ஜன்னலைத் திறக்கச் சொல்லவில்லை அவள். சூழலுக்கு இணங்கும் பக்குவம். நிராகரிக்கும் மனம் இல்லை. அவன் உடலில் நடுக்கம். அவன் அவள் கருணையை எதிர் பார்த்துக் கொண்டிருந்தான். அது அவளுக்கு மகிழ்ச்சி தந்திருக்கக்கூடும். உன்னை வெறித்தனமாக நேசிக்கிறேன் என்று முணுமுணுக்கிறான். இவள் 'உன்னிடத்தில் அப்படி ஒன்றும் பிரியம் இல்லை' என்று சொல்ல வேண்டும். ஆனால் சொல்லவில்லை. ஒன்று புரிகிறது அவனுக்கு. அவளை அவனுக்குப் புரியாது. இப்போது மட்டும் அல்ல. ஒரு போதும் அவளைப் புரிந்து கொள்ள அவனால் முடியாது.



அவள் அவனிடத்தில், 'என்னை நீ விரும்பித்தான் அழைத்து வந்திருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பிற பெண்களை நீ எப்படி நடத்துவாயோ, அப்படியே என்னை நீ நடத்தலாம். அதற்கு என்னை நீ விரும்ப வேண்டிய கட்டாயம் இல்லை' என்கிறாள். அவன் முகம் வெளிறுகிறது. அவன் மிக நெருக்கடிக்குள்ளானான். அவர்கள் அவர்களுக்கிடையில் எழுந்து நிற்கும் பருத்த முரண்களுக்கிடையே, தூர தூரங்களுக்கிடையே உரையாடலை, பெரும்பாலும் மாற்று வார்த்தைகளில் நிகழ்த்திக் கொள்கிறாள். 'தயவு செய்து உடனே ஆரம்பி' என்கிறாள் அவள்.

அவன் பரவசம் கொள்கிறான்.



அவன் அவள் குடும்பத்து நிலைக்கு வருந்துகிறான். அது தேவை இல்லை என்கிறாள் அவள். அவன் பணம் தருகிறான். வாங்கிக் கொள்கிறாள். . .



அவளுக்குப் பணம் தேவைப்படுகிறது உண்மைதான். ஆனால், பணம் மட்டுமே இந்த நிகழ்ச்சிக்குக் காரணம் இல்லை. இருவருக்கும் இடையே காதல் இருந்ததா என்றால் உண்டு என்றும் இல்லை என்றும் சொல்லலாம். அவன் அவளது கருணையை எதிர்பார்த்தே இருந்தான் என்பது மட்டும் உண்மை. நமது அவளை இன்புறுத்துவது இந்த நுட்பம்தான்.



இந்தக் காதல், உண்மையில் விருப்பத்தின் அடிப்படையில் எழுந்தது அல்ல. வெறுப்பில், பரஸ்பரம் வெறுப்பில் எழுந்தது என்று சொன்னால், அது பெரும்பாலும் உண்மை ஆகலாம். அவளுக்கு அவன் கறுப்பு நிற சொகுசுக் கார் பிடித்திருந்தது. அவன் படுக்கை சுகமாக இருந்தது. அவன் அழைத்துச் செல்லும் இரவு உணவு விடுதிகள் பிடித்திருந்தன. எல்லாமும் பிடித்திருந்தன.



அவன் அவளுக்காக உருகுவதாகச் சொல்கிறான். அப்படி ஒன்றும் இல்லை. அவள் இடத்தில் வேறு அவள்கள் இருந்தாலும், அவன் அப்படி உருகி இருப்பான். அவனுக்கு அவன் மேல் அப்படியான சாய்வு எதுவும் இல்லை.

நாவல் முழுக்க, பச்சையான மனித மாமிச வாசனை, எந்த மணப்பூச்சும் இல்லாமல் விசுகிறது. ஆண் பெண் உறவின் நுட்பத்துக்குப் புதுப்பரிமாணம் தந்த நாவல் இது. நமது கதை நாயகி அவள், எந்தக் காதல் கதைக்கும் உகந்தவள் இல்லை. அவள் அவளாக மிக இயற்கையாக இருக்கிறாள். அது அவளது பலம் என்றாலும் சரி, பலவீனம் என்றாலும் சரி, இரண்டுக்கும் அவள் பொறுப்பானவள் இல்லை.



அவளும் சரி, ழானும் சரி இரு வருமே பிரஞ்சு மண்ணில் இருந்து வந்தவர்கள். இருவருக்கும் இடையே 300 ஆண்டுகள் பாரதூரம் இருக்கிறது. என்றாலும் எலும்பும் சதையுமாக நமக்குத் தென்படுகிறார்கள். வாழ்க்கை, இதுகாறும் இலக்கியம் காணாத, கண்டு முடிக்காத, இன்னும் இருளிலேயே உலவுகிற, வெளிச்சம் காணாத மனிதச் சுரங்கங்களைக் கொண்டே இருக்கிறது. தரிசிக்கும் கண்களுக்கு எப்போதாவது அவர்கள் தட்டுப்படுகிறார்கள். மாறுபடுகிறவர்களால்தான் உலகம் முன்னோக்கி அடி வைக்கிறது.



ஓவியங்கள் : ஆ.விஜயகுமார்



Mathu.


Prabanchan.
மது நமக்கு மது நமக்கு மது நமக்கு உலகெலாம்



எழுதப்பட்ட வரலாறு தொடங்கும் காலத்துக்கு முன்பிருந்தே, நாங்கள் மது அருந்தி வாழ்ந்து வந்திருக்கிறோம். நாங்கள் என்பது புதுச்சேரி (பாண்டிச்சேரி என்பது தவறான வழக்கு) மக்களை உணர்த்துகிறது என்று கொள்க. தமிழ்நாடே வறண்டு கிடந்த, மதுவிலக்கு எனும் மூடத்தனமான சட்டங்கள் அமலில் இருந்த காலத்தில் நாங்கள் மது என்கிற அர்த்தத்தினால் வாழ்வைச் செறிவூட்டிக் கொண்டிருக்கிறோம். பூக்கள் என்கிற அதிசயத்தை ரசிக்கத் தெரியாதவர்களே, குழந்தைகள் என்கிற அபூர்வத்தை உணரத் தெரியாதவர்கள், கோழிக்குஞ்சுகளை, ஓடும் நதியை, எதையெதையோ மொழிந்து கொண்டிருக்கும் மலைச் சிகரங்களை, ரகசியங்களை மௌன வெளிகளில் முணு முணுத்துக் கொண்டே இருக்கும் காடுகளை நேசிக்கத் தெரியாதவர்கள், ஒரு அழகிய சம்போகத்தை நிகழ்த்த முடியாத உள்ளீடற்ற வெற்று மனிதர்களே மதுவை வெறுப்பவர்களாக இருக்கிறார்கள் என்கிறார் ஒரு பிரஞ்சுக் கவிஞர்.



பிரான்ஸ் தேசத்தோடு தொடர்பு கொண்டிருந்த, அழகிய பிரஞ்சுக் கலாச்சாரத்தோடு தம்மைப் பிணைத்துக் கொண்ட பல நூறு பிரஞ்சுக் குடும்பங்களைக் கொண்ட ஞானபூமி எங்கள் புதுவை. ஓரிரண்டு பத்து ஆண்டுகளுக்கு முன்னால், அக்குடும்ப நண்பர்கள் வீட்டுக்குச் சென்றால், அங்கே இருக்கும் முசியோவோ, மதாமோ நம்மிடம், 'முசியோ / மதாம், எது உங்களுக்கு உவப்பு, தண்ணீரா, சோடாவா' என்று கேட்கிற இன்னோசையைக் கேட்டு வளர்ந்தவன் நான். பூத்தையில் போர்த்திய சௌகரியமான இருக்கைகளில் நாம் அமர்ந்த பிறகு, நம்மை நோக்கி, தட்டில் உட்கார்ந்து வரும் நீலகண்டப் பறவை மாதிரி, மதுரம் நம்மைத் தேடிவரும். மது என்ற ஆச்சரியத்தைக் கண்டுபிடித்த உலகத்தின் அந்த ஆதி விஞ்ஞானியை நீங்கள் நினைக்க மறக்காதீர்கள் என்றால், சொர்க்கத்தின் கதவுகள் உங்களுக்கு ஒரு போதும் திறக்காது.



மது என்ற முறையில் நான் முதலில் அருந்தியது தென்னங்கள்ளைத் தான். தாய்ப்பாலுக்கு அடுத்தது தென்னங்கள்தானே? துரதிருஷ்டம் பிடித்த தமிழ்நாட்டிலிருந்து பலரும் வந்து எங்கள் (அக்காலத்து) சத்திரம் போன்ற வீட்டில் தங்கி, கள் குடித்து விட்டுச் செல்வார்கள். அவர்களின் வைத்தியர்கள், தினம் ஒரு மரத்துக் கள்ளாகக் குடித்து வந்தால், ஒரு மண்டலமோ, அரை மண்டலமோ (ஒரு மண்டலம் என்பது 48 நாட்கள்) கள்ளைப் பாவித்து வந்தால், மேனி புடமிட்ட பொன்னாகும் என்று சொல்லி இருப்பார். அதாவது ஒரு தென்னையிலிருந்து வடிந்த ஒரு மரத்துக் கள். காலை, மாலை இருவேளை பாவிக்க. 'கோல் கொண்டு முக்காலோடு நடந்து வந்த கிழம் கூட, வேட்கொண்டு களம் நோக்கி விரைந்து செல்வாரே, கள்ளுணர்ந்து குடித்தோரே' என்று யாரோ ஒரு பாரதி பாடியதாக ஒரு கள்ளன்பர் எனக்கும் சொல்லி இருக்கிறார்.



உடம்பைப் பொன் செய்ய வரும் முக்கிய உறவினர்களைத் தோப்புக்கு அழைத்துச் சென்று, அங்குள்ள கிராமணிகள் யாரையேனும் கள் வடித்துத் தரச் சொல்லி, அவரைக் குடிக்கச் செய்து, பாதுகாப்பாக வீட்டுக்கு அழைத்து வரும் பொறுப்பு எனக்களிக்கப்படும். வழிகாட்டியாக இருப்பது எனக்கும் பிடிப்பதில்லையானாலும் தென்னந்தோப்பில் மரங்களின் கீழ், ஓலைகளின் கூச்சல்களைக் கேட்டுக் கொண்டிருப்பது எனக்குப் பிடிக்கும். தோப்பில், சூரியனைக் கீழே விழாமல் தாங்கிக் கொண்டிருக்கும் தென்னைகள். அதனாலேயே, மண் எப்போதும் குளிர்ச்சியாக இருக்கும். தரையில், விழுந்து உருளும் சின்னக் கால்பந்து போல இருக்கும் குரும்பிகள் எனக்கு விளையாட்டுப் பொருள். கள் மணக்கும் காற்று.



ஒரு தஞ்சாவூர் உறவினர், "நீயும் கொஞ்சம் குடியேன்டா" என்றார். கிராமணியைப் பார்த்து, "இவனுக்கும் கொஞ்சம் கொடு" என்றார். நான் குடிக்க மாட்டேன் என்று சொல்லவில்லை. புதிய மொந்தையொன்றில் கள்ளை ஊற்றிக் கொடுத்தார் அவர். கள் மட்டுமல்ல, அது வார்க்கப்படும் பாத்திரமும் மிக முக்கியம். அக்பர் குடித்த பொற்கோப்பைகளில் கள்ளை நீங்கள் ஊற்றிக் கொடுத்தாலும் கூட நான் மண்ணால் ஆன மொந்தையைத்தான் விரும்புவேன். மண்ணுக்குள் வேரோடி நாகலோகத்திலிருந்து தென்னை கொணர்ந்து தரும் கள்ளை, மண்ணால் ஆன பாத்திரத்தில் அல்லவோ அருந்த வேண்டும். தென்னையை நன்றி மறவா மரம் என்கிறாள் அவ்வை. நமக்கு வேண்டாமா நன்றி.



எட்டாம் வகுப்பு வரும்போது,கள் பற்றிய ஞானத்தை நான் எய்திவிட்டேன். கள்கள் மூன்று. ஒன்று தென்னங்கள், இரண்டு பனங்கள், மூன்று ஈச்சைக்கள். தென்னைக் கள், வைகறைக்குப் பிறகான காலத்துக்கு மிக சிலாக்கியம். மதியத்தை நெருங்கும் வேளை மிக உன்னதம். போதை, செங்குத்தாக, மலை ஏற்றக்காரர்களைப் போல தாவித் தாவி எகிறும். தென்னங்கள்ளை அருந்திவிட்டு, கப்பி ரஸ்தாவுக்கு வருவது போலப் பாவம் உலகில் வேறு ஏதும் இல்லை. தென்னை ஓலை உங்களுக்குச் சாமரம் வீசும். நீங்கள் ஆணாக இருந்தால், மரங்கள், பெண்ணாக தீட்சை பெறும். பெண்ணாக இருந்தால் மரங்கள் யுவர்களாகும். அரவாணியாக இருந்தால், நீங்கள் தேர்வு செய்யும் பாலாகவோ அவை மாறும். உங்கள் தேர்வு உங்களுடையது. தென்னங்கள், வெளியே இருக்கும் உங்களை உள்ளே கொண்டு சேர்க்கும். சுருதியோடு இழையும் சுத்த சங்கீதத்தை நீங்கள் அப்போது உணர்வீர்கள். பனங்கள், இருள் புலராத, கதிர் உதிக்கும் முன் அருந்த வேண்டி வஸ்து. மத்திய வயது நரைமுடி என ஒளியும் இருளும் பிணைந்த பொழுதில் அருந்தத் தொடங்குவது மிக உத்தமம். பனங்கள்ளுக்கும் சூரிய உதயத்தில் ரேகைகளுக்கும் நுணுக்கமான உறவுண்டு. காலை வெயில் ஏற ஏறப் போதை ஏறிக் கொண்டிருக்கும். பனங்கள், 'கோமூத்ரி' போதைத் தன்மையைக் கொண்டதாம். மகான்கள் சொல்கிறார்கள். 'கோமூத்ரி' என்பது என்னவோவெனில் நடக்கும் மாட்டின் மூத்திரம் மண்ணில் படிகிற வடிவு. வளைந்து, வட்டமிட்டு, மேலேறும் தன்மையது. பனங்கள் அருந்திய பிறகு, கடற்கரையில் உலவுவது சாலச் சிறந்தது. கேவலம் மனித ஜென்மங்களை, விசுவத்தோடு இணைக்கும் ஞானப்பால் பனையின் பால். ஈச்சை, மிக அருகியே நம் மண்ணில் காணப்படுகிறது. பாலையின் தோழன்/தோழி அது. மாலை நேரத்து பானம் அது. வீட்டில் இருந்து, பனங்கள்ளும் வாய்க்கப் பெற்றால், கசல் கேளுங்கள். பாகிஸ்தான் பாடகர்களுடைய கசல். இறைமையின் மிக அருகில் உங்களைக் கொண்டு வைப்பது ஈச்சைக் கள். அதோடு, உங்கள் காம வீரியத்தைக் குதிரையின் பக்கத்தில் கொண்டு சேர்க்கும் என்று விளம்பர வைத்தியர்கள் சொல்வார்கள். நம்பாதீர்கள். சிட்டுக் குருவி, குதிரை முதலான சமாச்சாரங்கள் எல்லாம், அந்தந்தச் சூழல், மனநிலை, உடல்நிலைகளைப் பொறுத்தவை. லேகியங்கள் புக முடியாத பிரதேசங்கள் அவை.



ஒன்பதிலிருந்து பத்தாம் வகுப்புக்கு வருகிற, கோடை கால விடுமுறை ஒன்றின் போதுதான் முதன்முதலாக சாராயம் என்கிற மதுவை நான் அறிந்தேன். சுஜனரஞ்சனி என்கிற பழம் பெரும் பத்திரிகை நடந்த கட்டடத்தின் மாடி அறைகளில் ஒன்றில், பாரதிதாசனின் முக்கிய சிஷ்யர்களில் ஒருவரைப் பார்க்கச் செல்கிறேன். (அப்போது நான் கவியாக முயன்று கொண்டிருந்த காலம். அதற்கு இசைவாக காதல் ஒன்றில் தோல்வி பெற்றிருந்தேன். ஆகவே கவிதை எழுதத் தொடங்கி இருந்தேன்.) அக்கவி இன்றும் இருக்கிறார். புதுச்சேரியில் வரலாற்றுப் புகழ் பெற்ற உணவு விடுதி நடத்திய குடும்பத்தைச் சேர்ந்தவர். அங்கு, தமிழகத்தில் மாபெரும் நகைச்சுவை நடிகரும், கலைவாணரும் ஆனவரின் மகனுமான என்.எஸ்.கே.கோலப்பன் இருந்தார். பாரதிதாசனின் எதிர்பாராத முத்தத்தில் (சினிமா பெயர் பொன்முடி) நடித்த கதாநாயகர் நரசிம்ம பாரதி இருந்தார். அந்தக் கலைக்குழுவில் பொடியன் நான் ஒருவனே. கவிஞர் ஒரு கண்ணாடிக் கிளாசில் புதுச்சேரிச் சாராயத்தை ஊற்றி, எலுமிச்சைப் பழம் பிழிந்து, 'சாப்பிடு' என்று சொல்லித் தந்தார். காரநெடியும், வினோதமான கசப்பும், எலுமிச்சைப் புளிப்பும் இணைந்து வினோதமாக இருந்தது அந்தச் சரக்கு. பின்னாளில் தமிழ்நாட்டில் விற்ற 'கடா' மார்க் சாராயம் எங்கள் புதுச்சேரி சாராயத்துக்கு முன், ஒன்றுமே இல்லை. தமிழ்நாடு கடாதான். எங்களுடையது புலி.



மீண்டும் ஒரு 'கிளாஸ்' எனக்கு அருளப்பட்டது. அருந்தினேன். வீட்டுக்குப் புறப்பட்டேன். அஜந்தா தியேட்டரில் கர்ணனும், ராஜா தியேட்டரில் வணங்கா முடியும். ரத்னா தியேட்டரில் விசுவரூபம் எடுத்து நின்றார் மாயாபஜார் கிருஷ்ணன். என்னுடைய பிரக்ஞையை மீறியே, என் உடம்பு கடிகாரப் பெண்ணுருவம் மாதிரி ஆடியபடி இருந்தது. கால்கள் என்கிற உடம்பின் உறுப்பு சாட்டின் துணி மாதிரி காற்றில் வெலவெலத்தது. தெரு விளக்குகள் மிகப் பிரகாசமாக எரிந்ததன் காரணம் விளங்கவில்லை. என் சுட்டு விரலால் காற்று வெளியில் ஏதோ எழுதிக் கொண்டே நடந்தேன். எதுவும் நடக்காமலேயே சிரிப்பு சிரிப்பாய் வந்து கொண்டிருந்தது. குடித்தது வெளியே தெரியக்கூடாது என்கிற அதீதப் பிரக்ஞையில் மிக நிதானமாக, நிமிர்ந்து நேராக நடந்து கொண்டிருந்தேன். எவனும் என்மேல் குறை காணமுடியாது. அவ்வப்போது என் நினைவுகளில் என் அப்பா வந்து பயமுறுத்திக் கொண்டிருந்தார். எங்கள் குலத் தொழிலே கள் விற்பதும், சாராயம் விற்பதும்தான். மூன்று கள்ளுக் கடைகளுக்கும் இரண்டு சாராயக் கடைகளுக்கும் சொந்தக்காரராக இருந்தவர்தான் என் அப்பா. அவர் குடித்ததே இல்லை. நான் குடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியுமா. அதோடு, அவர் கைக்கு அசுர பலம் இருந்தது என் கேடு காலம். ஒருமுறை என்னை அவர் அறைந்ததில் அவர் விரலில் இருந்த மோதிரத்தின் வைரக்கல் தெறித்து விழுந்தது. அதையும் நானே தேடிக் கொடுக்கும் படியான துரதிருஷ்டம் நேர்ந்தது.



நடந்து கொண்டிருந்த என் முன், ஒரு சைக்கிள் வந்து நின்றது. மங்கலாக என் உறவினர் முகம் தெரிந்தது. அவர் சொன்னார்.



"இப்படியாடா குடிக்கிறது. தெருகூட தெரியாமே, சாக்கடை மேலேயே நடக்கிறியே, ஓரமா நகர்ந்து தெருவிலே நட."



அவர் என்னைத் தெருவுக்குக் கொண்டு வந்து நிலை நிறுத்தினார். 'நேரா நடந்து போ' என்றார். வளைவுகள், திருப்பங்கள் அற்ற, பிரஞ்சுக்காரர் போட்ட அருமையான தெருவில் நடக்கத் தொடங்கினேன்.



இரண்டு, மது தொடர்பான பிரஞ்சுத் தொடர்புகள். ஒன்று எங்கள் ஊருக்கும் குறுகிய சில மாதங்கள் மது விலக்கு வந்தது.



கடந்த ஐயாயிர ஆண்டுக்கால எங்கள் ஈர வாழ்வில், ஆறு மாதங்கள் மட்டும் நாங்கள் வறட்சிக்கு ஆளானோம். பிரஞ்சு ஆட்சியின்போது, அந்தப் பதினெட்டாம் நூற்றாண்டின் காலகட்டத்தில் எங்கள் ஊர் தொடர்ந்த படையெடுப்பைக் கண்டது. படை வீரர்களுக்குச் சம்பளம் கொடுக்கக் கஜானாவில் காசு இல்லையென்றால், ராஜாக்கள் படையெடுப்பார்கள். அப்படி மராத்தியர்கள் எங்கள் ஊர்ப்பக்கம் வந்தார்கள். திருப்பாப்புலியூர் (கடலூர்), மஞ்சக்குப்பம், சிங்கிரி கோவில், அழிசப்பாக்கம் என்று எங்கள் ஊருக்கு எல்லை ஊர்களைக் கொள்ளை போட்டுக் கொண்டிருந்தார்கள். அந்தச் சமயம், மக்களிடம் ஒழுங்கு, கட்டுப்பாடு குழைந்து போய்விடக் கூடாதென்று காரணம் சொல்லி, அப்போதைய குவர்னர் துய்மா ஒரு சட்டம் போட்டான். 1741 பிப்ரவரி 28-ஆம் தேதி.



'வெள்ளைக்காரர், தமிழர், மற்றும் கறுத்த சனங்களுக்கு (Black Town) அறிவிக்கிறதாவது: மார்ச் மாதம் தொடங்கி செப்டம்பர் மாதம் வரைக்கும் பிராந்தி, சாராயம், கோவை (கோவா) சாராயம், லிக்கர் சாராயம் (புதுச்சேரி சாராயம்), பத்தாவி (படேவியா) சாராயம், கொழும்பு சாராயம், பட்டை சாராயம் போன்றவற்றை விற்றாலும், விற்பித்தாலும் ஆயிரம் வராகன் அபராதமும் கொடுத்து ஒரு வருடம் காவலில் கிடக்கிறது. அவற்றை வாங்கிப் போகிறவனுக்குக் காலடியிலே கட்டி அடிச்சு வலது தோளிலே சுணக்கி நோய் முத்திரை போட்டு ஊருக்கு வெளியே துரத்தி விடுகிறது. தோட்டத்திலும் வீட்டிலும் தென்னை மரம் வைத்திருப்பவர்கள் எவருக்காவது கள்ளு ஒரு காசளவிலே வித்தாலும் விற்கச் செய்தாலும், யார் ஒருத்தர் குடிச்சாலும், குடிக்கச் செய்வித்தாலும் அவர்களுக்கும் முன்னே சொன்ன அபராதம் உண்டு'.



ஆறு மாதம் மட்டுமே இந்தச் சட்டம் அமலில் இருந்தது. அதன்பின் எங்கள் வீர முன்னோர்கள் இச்சட்டத்தைத் தூக்கி வங்கக் கடலில் எறிந்தார்கள்.



மது ஒரு அற்புதம் என்றால், அதை அடக்கிக் கொள்ளும் பாட்டிலும் ஒரு அற்புதம்தான். அந்தப் பாட்டில்கள், எங்கள் ஊரை மராத்தியர்களிடம் இருந்து காப்பாற்றியதை நீங்கள் கட்டாயம் அறிய வேண்டும். நன்றி மறப்பது நன்றன்று. மராத்தியப் படைத் தலைவன், ரகோஜி போஸ்லே புதுச்சேரியைச் சுற்றிக் கொண்டு குவர்னர் துய்மாவுக்கு (Dumas) ஒரு கடிதம் அனுப்புகிறான். ஆற்காடு நவாப்புக் குடும்பத்தார், குறிப்பாக சந்தாசாகிப்பின் மனைவியும், மகனும் உங்கள் பாதுகாப்பில் இருக்கிறார்கள். அவர்களையும், அவர்கள் புதுச்சேரி வரும்போது கொண்டு வந்திருக்கிற நகைகள், தங்க, வைர அணிகலன்கள், தங்கக் காசுகள், குதிரைகள், யானைகள், ஒட்டகங்கள் அனைத்தையும் எங்கள் வசம் ஒப்படைத்துவிட வேண்டும். இல்லையெனில் புதுச்சேரி ஜனத்தொகையை விட அதிகமான எங்கள் படை ஊருக்குள் நுழையும்.



துய்மாவிடம் படை பலம் இல்லை. நெஞ்சில் நேர்மையும், துணிவும் மட்டுமே அவனிடம் இருந்தன. பிரஞ்சு புதுச்சேரியின் சிறந்த மூன்று குவர்னர்களில் அவன் ஒருவன். அவன் பதில் கடிதம் எழுதினான்.



'.... பல ஆற்காட்டு நவாப்புகள் பிரஞ்சுக்காரர்களிடம் நட்பு பாராட்டி நண்பர்களாக இருந்துள்ளார்கள். அந்த நட்பை முன்னிட்டு ஆபத்துக் காலத்தில் எங்களிடம் தஞ்சம் புகுந்துள்ளார்கள். நண்பர்கள் உதவி கேட்டு வரும்போது, கதவை அடைப்பது மனித தர்மம்தானா? என்னிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்றால், எங்கள் பேரரசர் பிரஞ்சு தேச மாமன்னரிடம் தஞ்சம் புகுந்தார்கள் என்றே அர்த்தம். அவருக்குமானக்குறைவு ஏற்படுத்தும் காரியத்தை நான் செய்யமாட்டேன். தோஸ்த் அலியின் விதவையும், சந்தா சாயபுவின் மனைவியும், மகனும் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கிறார்கள். அவர்களை நாங்கள் வெளியேற்ற முடியாது. புதுச்சேரியில் இருக்கும் கடைசிப் பிரஞ்சுக்காரனின் கடைசித்துளி ரத்தம் மண்ணில் விழும் வரைக்கும், கடைசிப் பிரஞ்சுக்காரன் உயிருடன் இருக்கும் வரைக்கும் அடைக்கல மனிதர்களை நாங்கள் விட்டுக் கொடுக்கமாட்டோம் . . .'



இந்த வீரம் மிகுந்த பதில், ரகோஜி போஸ்லேவுக்குக் கோபத்தை உண்டு பண்ணியது. சந்தா சாகிப்பின் குடும்பம் மட்டுமல்ல, துய்மாவின் அலட்சியத்து அபராதமாக ஆறு கோடி ரூபாய் அபராதமும், ஆண்டு தோறும் பிரஞ்சு அரசு கோடிக்கணக்கில் தமக்குக் கப்பம் கட்ட வேண்டும் எனச் சொல்லி, ஒரு தூதுவரையும் அனுப்பி வைத்தேன். மராத்தியத் தூதுவரை மிக மரியாதையுடன் வரவேற்ற துய்மா, அவரைச் சிறப்பாக நடத்தி தன் படைக்கலச் சாலையை அவருக்குக் காண்பித்தான். துப்பாக்கிகள், பீரங்கிகள், படை அணிவகுப்பையும், ராணுவ ஒழுங்கையும் கண்ட தூதுவர் மனநிலை மாற்றம் அடைந்தது. அவர் விடைபெறும்போது, ரகுஜி போஸ்லேவுக்கு மரியாதை நிமித்தம் 10 ஐரோப்பிய மது பாட்டிலையும் கொடுத்து அனுப்பினான்.

கதையின் முக்கிய இடத்தை அடைந்திருக்கிறோம். அந்த பாட்டில் மதுவை ரகுஜி தன் அன்புக்குரிய

மனைவியுடன் பகிர்ந்து கொண்டான். மராத்திய வரலாறு அவளைப் 'பேரழகி' என்று சொல்கிறது. அந்தப் பேரழகி, அத்தனை பாட்டில்களையும் அனுபவித்து அருந்தி முடித்து 'இன்னும் வேண்டும்' என்றாள். ரகுஜிக்கு என்ன செய்வது என்று விளங்கவில்லை. விரோதியிடம் பாட்டில் கேட்பதா என்பது அவன் பிரச்சினை. ஒரு பக்கம் பேரழகி. மறுபக்கம் கௌரவம். எது வெல்லும்? எது வென்றிருக்கிறது? அதுதானே வென்றிருக்கிறது. அந்த இல்லாத, இருப்பது போல் இல்லாத, ஆனால் இருக்கிற, சூன்ய மாயும், சேதன மாயும், அசேதனமாயும், மாயமாயும், ரூபமாயும் நிலைபேறுற்ற அதுதான் கடைசியில் வென்றது. 'சந்தா சாயுபு மனைவியா, மகனா, பணமா, இதெல்லாம் என்ன' என்றான் ரகுஜி. துய்மா மிக அன்புடன் முப்பது பாட்டில்கள் - அன்புடன்தான்- அனுப்பி வைத்தான். ரகுஜி, கொள்ளை அடிக்க வேறு பக்கம் நகர்ந்தான்.



முப்பது பாட்டில்களும் தீர்ந்த பிறகு, அந்தப் பேரழகி என்ன செய்து அவன் தாகத்தைத் தீர்த்துக் கொண்டாள், என்பதை எந்த சரித்திர ஆசிரியனும் எழுதி வைக்கவில்லை. யுத்தங்களை மனிதர்கள் உருவாக்குகிறார்கள். பாட்டில்கள் தீர்த்து வைக்கின்றன.



தமிழ்நாட்டில் நிலவி இருந்த மது விலக்கு, தி.மு.கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு திரும்பப் பெறப்பட்டது. மதுக்கடை மீண்டும் தமிழ்நாட்டில் திறக்கப்பட்ட அந்த நள்ளிரவில், நான் தஞ்சாவூரில் மாணவனாக இருந்தேன். தஞ்சைப் பழைய பேருந்து நிலையத்து அருகில், இன்று ஆரிய பவன் இருக்கும் இடத்துக்குச் சற்றுத் தள்ளி, சாராயக் கடை திறக்கப்பட இருந்தது. நானும் பிரகாஷும் அந்தச் சொர்க்க வாசல் திறப்பைக் காணக் காத்திருந்தோம். பிரகாஷ் குடிக்க மாட்டார். நானும் பிரடரிக் சுந்தர்ராஜன், இருளாண்டி, தஞ்சை மோகன் முதலான நண்பர்களும் நின்றிருந்தோம். ரஜினி திரைப்படத் தொடக்கக் காட்சி போல் மக்கள் குழுமி இருந்தார்கள். கடை, சீரியல் விளக்குகளாலும் மல்லிகைச் சரங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. நாழியாக நாழியாக கூட்டம் எங்களை நெருக்கித் தள்ளியது. திடுமென மழை லேசாகத் தூறத் தொடங்கியது. லவுட் ஸ்பீக்கரிலிருந்து மிகப் பெரும் சப்தமுடன் சினிமாப் பாடல்கள், முழங்கிக் கொண்டியிருந்தன. எல்லாமும் எம்.ஜி.ஆர். படத்துப் பாடல்கள், எம்.ஜி.ஆர் தத்துவ, சமூக, காதல் பாடல்கள் சூழலுக்குப் பெரும் சோபையை நல்கிக் கொண்டிருந்தன. தமிழ்நாட்டின் இருண்ட காலம் நீங்கி, பொற்காலம் பிறந்து கொண்டிருந்த ஒரு அற்புத யுகத்தின் பிரசவ அறைக்குள் நாங்கள் இருந்தோம். குழந்தையின் தலை வெளியே தெரிந்தது. கடை உரிமையாளர், கடை விளம்பரப் பலகைக்குக் கற்பூரத் தீபம் காட்டிக் கொண்டிருந்தார். கூட்டம் வாயிலை நோக்கிச் சாடி முன்னேறியது. சரியாக மணி 12. இந்த நிமிஷம் முதல் குடிப்பவர்கள் சட்ட பூர்வமான குடிமக்கள். பத்து நிமிஷத்துக்கு முன் குடித்தவர்கள் குற்றவாளிகள். அரசு, எவ்வளவு எளிதாக மக்களின் முகங்களை மாற்றி அமைக்கிறது? எனக்கு எப்போதும் குடித்தே ஆக வேண்டும் என்ற கட்டாயமோ, பெரு விருப்போ இருந்ததில்லை. நான் குடிப்பது பெரும்பாலும் என்னுடன் அமரும் நண்பர்களைப் பொறுத்தது. என் அளவு ர-ழ ஆகும் வரை. அதாவது ராயப்பேட்டை ழாயப்பேட்டை என்று எந்தக் கணம் உச்சரிக்கிறேனோ, அந்தக் கணமே நான் எழுந்துவிடுவேன். பிரகாஷுக்கு எல்லா மட்டத்திலும் அறிமுகம் உண்டு. அவருடைய செல்வாக்கைக் கொண்டு, ஒரு பாட்டில்ரம் வாங்கிக் கொண்டு அறைக்குத் திரும்பினோம். அந்தக் காலத்திலிருந்தே, சாராயக் கடைகள் இன்றைய டாஸ்மாக் கடைகள் வரை பெரும்பாலும் நாய்கள் புகத் தயங்கும் அழுக்குக் கட்டிடமாகவே இருப்பதன் காரணம் என்ன என்பதின் பதில், குடிகாரர்கள் மேல், சமூகத்துக்கு இருக்கும் மனோபாவம்தான். அவர்களுக்கு இதுபோதும் என்று அரசு நினைக்கிறது. ஆனால், அவர்கள் பணம் மட்டும் வேண்டும்.



எங்கள் ஊர் பிராந்திக் கடைகள் மிக அழகியவை. நாகரிகமானவை. பார்கள் மிக நவீனமானவை. உங்களை மதிப்பவை. புதுச்சேரிகாரர்களாகிய நாங்கள் மது அருந்துபவர்கள். குடிகாரர்கள் அல்லர். குடிப்பது வேறு. அருந்துவது வேறு. தமிழ் நாட்டில் டாஸ்மாக் கடையைப் போல ஒரு ஆபாசக் கட்டிடம் எங்கள் ஊரில் இருக்கவே முடியாது. நாங்கள் அதைச் சகிக்க மாட்டோம். இது பிரஞ்சியரிடம் இருந்து நாங்கள் கற்ற பல அழகுகளில் ஒன்று.



உணவு மேசையை (இதைத் தீனி மேசை என்பார் ஆனந்த ரங்கர்) நாங்கள் அலங்கரிக்கும் முறையே வேறு. அழகும், சௌகரியமும் மிகுந்த மேசையும், நாற்காலிகளும் முக்கியம். மேசை மேல், அப்பழுக்கற்ற, பூப் போட்ட வெள்ளைத் துணிகள் விரித்து ஒழுங்கு செய்வோம். மதுவில் வகைக்கு ஏற்ப கிளாஸ்களை மட்டுமே பயன்படுத்துவோம். பீர் என்றால் பெரிய அகன்ற கிளாஸ். விஸ்கி, பிராந்திக்கு வேறு. சின்னக் குப்பிகளையும் ஒயின்களுக்குப் பயன்படுத்துவோம். சுற்றி அழகான சீனத் தட்டுகள். நிறைய பூக்கள் வரையப்பட்டவை. அவைகளில் உபகாரத் தீனி (சைட்டிஷ்) இருக்கும்.ஆளுக்கொரு சிறிய கைத்துண்டு கட்டாயம். தனியாக சோடா, தண்ணீர், இனிப்பு பாட்டில் டிரிங்க் என்று இருக்கும். எங்கள் சப்தம், அடுத்த மேசைக்குக் கேட்பது அநாகரிகம் என்று எங்களுக்குத் தெரியும்.



தெருவில், துணியில்லாமல், குறியை வானத்துக்குக் காட்டியபடி மயங்கிக் கிடப்பவர்கள் சர்வ நிச்சயமாகத் தமிழ்நாட்டுக்காரர்களாகவே இருப்பார்கள். நாங்கள் காட்டுவதில்லை. அண்மைக் காலமாக புதுச்சேரியும் சீரழியத் தொடங்கி இருக்கிறது.



ஜப்பானியர்களின் தேநீர் அருந்துவதில் இருக்கும் ஓர்மை மற்றும் ஆன்மீகப் பரவசத்துடன் அருந்த வேண்டிய ஒரு உள்நோக்குப் பயணம் மது. வன்மம், பகை, கோப தாபம், சிறுமைகளை வெளிப்படுத்திக் கொள்ளும் இடமாக மதுப்பிரதேசம் சீரழிவது, மதுவை அல்ல, அதைக் குடிப்ப வரையே நிரூபிக்கிறது.