வியாழன், 19 ஜூலை, 2012

charu..

the making of bhoos: na mile hai…

தமிழ் சினிமாவில் இப்படிப்பட்ட ஒரு பாடலை நான் இதுவரை கேட்டதில்லை.  கிராமிய இசை என்ற பெயரில் வந்த பாடல்கள் எல்லாம் வெறும் ரொமாண்டிக் தன்மையை மட்டுமே கொண்டிருந்தன.  பருத்தி வீரனில் வரும் முதல் பாடலில் உண்மையான நாட்டுப்புற இசை இருந்தாலும் அதில் பொழுதுபோக்கு அம்சம் மட்டுமே இருந்தது.  கேங்க்ஸ் ஆஃப் வாஸேபூர் படத்தில் இடம்பெறும் இந்தப் பாடலைக் கேட்டுப் பாருங்கள்.  இந்தியா ஒரு வல்லரசு என்று சொன்னவர்களின் பொய்யை அம்பலப்படுத்துகிறது இந்தப் பாடல்.  இந்த நாட்டில் நமக்கு ஒன்றும் கிடையாது; இங்கே நேருவும் இந்திராவும் சொன்ன கனவுகள் வெறும் சொற்களாக மட்டுமே எஞ்சி விட்டன.  இப்படிப்பட்ட ஒரு political statement தான் இந்தப் பாடல்.  அதனால்தான் டெக்கான் கிரானிகிள் கட்டுரையில் இந்தப் பாடலை விசேஷமாகக் குறிப்பிட்டேன்.  இந்தப் பாடலை எழுதியவர் வருண்.  இவ்வளவு துணிச்சலாக எழுதக் கூடிய ஒரே ஒரு பாடலாசிரியர் தமிழ் சினிமாவில் உண்டா என்று எனக்குச் சொல்லுங்கள்.  நான் அவருக்குத் தலை வணங்குகிறேன்.    பாடலைப் பாடும் முன்னாவின் குரலைப் போல்  இந்திய சினிமாவில் இதுவரை கேட்டதுண்டா என்று சொல்லுங்கள்.  இவ்வளவு துயரத்தைச் சொல்லும் பாடலில் எங்காவது அழுமூஞ்சித்தனம் இருக்கிறதா என்று பாருங்கள்.  ஒரே ஆட்டம், பாட்டம், கொண்டாட்டம்.    நம் தமிழ் சினிமாவின் சீரியஸ் சினிமா பார்க்கப் போனால் நாலைந்து கர்ச்சீஃப் அல்லவா எடுத்துக் கொண்டு போக வேண்டியிருக்கிறது?  அந்த அளவுக்குப் பிழியப் பிழிய அழ வைத்து சாகடிக்கிறார்களே?  ஐயா, துயரத்தைக் கூட வேறு வகையில்தான் சொல்ல வேண்டியிருக்கிறது; அதுதான் கலை என்றால் நம்மை அடிக்க வருகிறார்கள் தமிழ் இயக்குனர்கள்.  வழக்கு எண் ஓடவில்லை என்று கருப்புக் கண்ணாடி இயக்குனருக்குத்தான் என்னே ஒரு கோபம், ஆவேசம்?  இந்தப் பாடலைப் பாருங்கள்…  கலை என்றால் என்ன என்று தெரியும்…
தமிழ் சினிமாவை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.
http://www.youtube.com/watch?v=yZ6yfdp6w00
Comments are closed.