வெள்ளி, 20 ஆகஸ்ட், 2021

காவிரி முழுகடை வயலில்...

 முழுகடை வயல்களை மூழ்கடித்து 

கரையினைத் 

தழுவி நிற்கிறது காவிரி.

அணையில் தேங்கிய நீரில் எழுந்த சிற்றலை 

விளிம்புவரை வந்து 

வட்டமிட்டு அழகு காட்டுகிறது. சென்றாயப் பெருமாள் மலைக் கோவிலுக்கு எதிரில் 

கரையோரம் மூழ்கிக் கிடக்கும் கிணற்றில் தூண்டில் போட்டுப் 

பிடித்த ஜிலேபி மீன்களை 

அன்று என்ன செய்தோமென நினைவில்லை. 

இன்று அந்த வாய்ப்புக்கு 

வழியுமில்லை, வயசுமில்லை. ஒன்றுமட்டும் நினைவிலிருக்கிறது , பிடித்த மீனிலொன்றை 

டவுசர் பாக்கெட்டில் 

போட்டுக்கொண்டு வந்து, தனபாக்கியத்திடம் 

சேந்து கிணற்றடியில் 

ரகசியமாகக் கொடுத்தது. 


- ஆர்.வி.ஆர். ராஜேந்திரன்.