செவ்வாய், 5 ஜூலை, 2011

Thamizhachi..

My Photo
jump to navigation

எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது அக்டோபர் 13, 2008

Posted by தமிழ் in நேர்காணல்.
add a comment

குமுதத்தில் கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் பேட்டி.
கவிஞர் தமிழச்சி. தமிழிலக்கியத் துக்கு தெரிந்தமுகம். தி.மு.க.வு.க்கு புதிய முகம். நெல்லை மாநாட்டில் தி.மு.க. கொடியேற்றியதன் மூலம் அரசியலுக்குள் அடியெடுத்து வைத்திருக்கிறார்.

‘எஞ்சோட்டுப் பெண்’, ‘வனப்பேச்சி’ கவிதைத் தொகுதிகள் மூலம் கவிஞராக அறிமுகமான தமிழச்சியை சந்தித்தோம்.

இதுவரை இலக்கிய மேடைகளிலும், கல்லூரி வகுப்பறையிலும் பேசிக்கொண்டிருந்துவிட்டு திடீரென்று ஒரு அரசியல் மேடையில் தோன்றியது பற்றிச் சொல்லுங்கள்?

‘‘என்னுடைய தந்தை தங்கபாண்டியன் கிட்டத்தட்ட ஐம்பது ஆண்டுகாலம் தி.மு.க.வில் இருந்தவர். முதல்முறையா அறிஞர் அண்ணாவால் எம்.எல்.சி.யாக நியமனம் செய்யப்பட்டவர். இரண்டு முறை எம்.எல்.ஏ.வாகவும் இருந்தவர். நாங்க பிறந்ததே தி.மு.க. குடும்பம். என்னோட பள்ளிக் காலத்திலேயே கலைஞரின் நெஞ்சுக்கு நீதியைப் படிச்சுட்டேன். அதனால நான் இப்ப திடீரென்று அரசியலுக்கு வந்துட்டதா சொல்லக்கூடாது.’’

கல்லூரிப் பேராசிரியராக இருந்துகொண்டு மேடை நாடகங்களில் பங்கேற்று நடிக்கிறீர்கள், நடிப்பு ஆர்வம் எப்படி வந்தது?

‘‘கல்லூரிப் படிப்பு முடியுற வரைக்கும் நான் பரதநாட்டிய நடனக் கலைஞராகத்தான் இருந்தேன்.

பள்ளியில் படிக்கும்போதே மேடை நாடகங்களில் நடிக்கத் துவங்கிவிட்டேன். எப்படி நடிக்கவேண்டும் என்பதையும் பாடிலாங்வேஜ், குரல் இதெல்லாம் எப்படி அமையவேண்டும் என்பதையெல்லாம் என் தந்தைதான் எனக்குச் சொல்லிக்கொடுத்தார். முதலில் நடனம், பிறகு நாடகம். எப்போதும் என்னோடு இருப்பது கவிதைதான்.’’

ஆங்கில இலக்கியம் படித்துவிட்டு தமிழ்க் கவிதை பக்கம் ஈடுபாடு வந்தது எப்படி? கவிதை எழுத உங்களை உந்துதல் படுத்தியது எது?

‘‘நான் பிறந்து வளர்ந்தது விருதுநகர் பக்கத்தில் இருக்கிற மல்லாங்கிணறு என்கிற ஊர். இது வானம் பார்த்த பூமி. மழை பெய்தால்தான் விவசாயம் என்று வாழ்ந்து வந்த என் கிராமத்து மனிதர்களைப் பற்றி எழுதவேண்டும் என்கிற உந்துதல் வந்துதான் ‘மாரி பொய்த்தது’ என்ற முதல் கவிதையை எழுதினேன். ஆங்கில இலக்கியம் படித்தாலும் நான் பிறந்தது கிராமத்தில்தானே. ரெண்டாவது, தி.மு.க.வையும் தமிழையும் பிரிக்க முடியாது. கவிதையை என் மண் சார்ந்த விஷயங்களைப் பற்றி எழுத பயன்படுத்திக்கொண்டேன். ‘எஞ்சோட்டுப் பெண்’ என் முதல் கவிதைத் தொகுதி. அடுத்து ‘வனப்பேச்சி’. ‘வனப்பேச்சி’ கிராமத்து சிறுதெய்வங்கள்ல ஒன்று.’’
 திராவிட பகுத்தறிவுச் சிந்தனையில் இருந்துகொண்டு கடவுள் பெயரை வைத்து கவிதை எழுதுகிறீர்களே?
‘‘எனக்கு தெய்வ நம்பிக்கை கிடையாது. இது ஆன்மிகமும் கிடையாது. காவல் தெய்வங்களாக அந்த ஊரில் ஏதாவது ஒரு பங்களிப்பு செய்திருப்பவர்கள்தான் பின்னாளில் தெய்வங்களாக வணங்கக்கூடிய ஒரு குறியீடாக வணங்கப்பட்டு வந்தது. அதேபோல் வனப்பேச்சி என்கிற பெண் உருவம் என் கூட்டுக்காரியாக என் கனவுகளின் குறியீடாகத்தான் கவிதைகளில் வருகிறாள்.’’
பாராளுமன்றத்தில் கவிஞர் கனிமொழிக்கு உறுதுணையாக இருப்பதற்காக தங்களைத் தேர்வு செய்து தி.மு.க. தலைமை தயார் செய்து வருவதாக ஒரு பேச்சு எழுந்திருக்கிறதே..?
‘‘அந்த மாதிரி எதுவுமே கிடையாது. கவிஞர் கனிமொழி பாராளுமன்ற உறுப்பினராக பணியைச் சிறப்பாகச் செய்கிறார்.
கவிதை என்கிற தளத்துல இயங்குவதால் நாங்க நெருக்கமான தோழிகளாயிட்டோம். அவங்கள மிகப் பெரிய இன்ஸ்பிரேஷனாகப் பார்க்கிறேன். உண்மையாகவே விளிம்பு நிலை ஆட்களைப் பற்றிக் கவலைப்படக் கூடியவங்க. இன்னும் சொல்லப்போனா எனக்கு மட்டுமல்ல பெண்களுக்கே கனிமொழி ஒரு ரோல்மாடல்னு சொல்லலாம். எந்தச் சூழலிலும் தன்னுடைய அதிகாரத்தை மற்றவர்கள் மீது காட்டமாட்டார். தோழியாக நல்ல ஆலோசனைகளைச் சொல்ல எப்பவும் தயாராக இருப்பார்.’’
ஒரு சக பெண்மணியாக பெரிய இயக்கத்தை நடத்திக் கொண்டிருக்கிற ஜெயலலிதாவை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்..?
‘‘தனிப்பட்ட முறையில் ஆளுமை என்று ஒன்று இருந்து ஒரு இயக்கத்தை வழி நடத்துவது என்பது வேறு. அவங்க சமூகத்துக்கு என்ன பங்களிப்பு பண்றாங்க, ஆளுமை என்ன என்பதை வெச்சுதான் அவங்களப்பத்தி நாம எதுவும் சொல்ல முடியும். அப்படிப்பார்க்கிறப்ப என்னைப் பொறுத்தவரை எந்தவித சிறப்பு அம்சமும் இல்லாத ஒரு பெண்மணி ஜெயலலிதா.’’
வருகிற பாராளுமன்றத் தேர்தலில் உங்களுக்கு வாய்ப்பு கொடுக்கப் போறதாக செய்தி அடிபடுகிறதே?
‘‘நோ… கமெண்ட்ஸ்’’ என்று சிரித்தபடியே கை கூப்புகிறார், அப்படியே வேட்பாளர் ஸ்டைல்.
( நன்றி: குமுதம் )

வனப்பேச்சியிலிருந்து…. April 28, 2008

Posted by தமிழ் in கவிதை.
4 comments

“சுடு சோறு கொதி கஞ்சி
வேப்பம் பழம்
பொசுக்கியதே இல்லை
ஊர் வெயில்.
குளிரூட்டப்பட்ட
நகரத்து அறைகளில் வசிக்கும்
என் மகள் கேட்கிறாள்”
………….
சுருண்டிருக்கும் சர்ப்பமென
அவசரம் புதைந்திருக்கும்
இந்நகரத்தின் எந்த வீட்டில்
குழந்தைக்கான ஒரு தூளிச்சேலையும்
வயது முதிர்ந்தவளுக்கான சுருக்குப்பையும் இருக்கிறதோ
அங்குதான் விருந்தினளாக வருவேன்
என்ற அடம் வனப்பேச்சிக்கு…

எஞ்சோட்டுப்பெண் மார்ச் 30, 2008

Posted by தமிழ் in எஞ்சோட்டுப்பெண்.
3 comments
‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

‘தீராதவள்’ மார்ச் 16, 2008

Posted by தமிழ் in கவிதை.
7 comments
‘எனக்கான வார்த்தைகளை
நீ முடிவு செய்கையில்
நான் தேர்கிற மௌனம்
மிக வலிமையானது
ஒரு வயோதிகப் பிச்சைக்காரனைப்
புறந்தள்ளிய அலட்சியத்துடன்
நீ நடக்கும்பொழுது
அவனுக்கு நிழல் தரும் மரத்தின்
திடத்துடன் உன்னைச் சந்திக்கும்
உரத்த குரலெழுப்பும்
மல்யுத்த வீரனின் சவாலுடன்
நீ திமிர்த்திருக்கையில்
நடுங்கும் கைகளுடன் உணவிடும்
தாயின் கனிவுடன் உன்னை நேரிடும்
தன் இரவிற்கான போர்வையினை
ஒரு நாடோடியிடமிருந்து
இரவலாய்ப் பெற்றுக்கொண்டு
உன்னை உறுதியாய் எதிர்கொள்ளும்
தனித்து வரும்
ஒற்றை யானையின் கோபத்துடனும்
பிடிபடா வண்ணத்துப் பூச்சியின் சாதுரியத்துடனும்.

சிறந்த புரட்சியாளர்கள் எல்லாருமே படைப்பாளிகளாக இருந்தவர்கள்தான்! பெப்ரவரி 28, 2008

Posted by தமிழ் in நேர்காணல்.
3 comments

.
தமிழ்ச் சூழலை இயல், இசை, நாடகம் என மூன்று வகையாகப் பிரிப்பார்கள். இந்த மூன்றிலும் தொடர்ந்து தீவிரமாக இயங்கி வருபவர் “தமிழச்சி’. கவிதை எழுதுகிறார். பரதநாட்டியம் முறையாகக் கற்றிருக்கிறார். நவீன நாடகங்களிலும் நடிக்கிறார். இப்படி பன்முகத்தன்மையுடன் இயங்கும் இவர் சென்னை ராணிமேரி கல்லூரியில் ஆங்கில விரிவுரை யாளராகப் பணியாற்றுகிறார். மிகப்பெரிய திராவிடப் பாரம் பரியத்திலிருந்து வந்தவர். விருதுநகர் மாவட்டம், மல்லாங் கிணறு எனும் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவர். அந்த கிராமத்தின் மண்வாசனையை இவரது பேச்சி லும், எழுத்திலும் லிஏன் தற்போது சென்னையில் வசிக்கும் இவரது வீட்டிலும் காண முடிகிறது.
இவரது “எஞ்சோட்டுப்பெண்’ எனும் முதல் கவிதைத் தொகுப்பு “தமிழ் இலக்கியம் 2004′ என்கிற இலக்கிய விழாவில் வெளியிடப் பட்டது. இந்தத் தொகுப்பிற்கு கவிஞர் சிற்பி அறக்கட்டளை விருதும், மகாகவி பாரதியார் விருதும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்தத் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் தேர்வு செய்யப்பட்டு நந்தனம் அரசு கலைக்கல்லூரியின் தமிழ்ப் பட்டப்படிப்பிற்கான பாடத் திட்டத்திலும் இணைக்கப்பட்டுள் ளது. இலக்கிய விமர்சனக் கட்டுரை களை த. சுமதி என்ற இயற்பெயரில் எழுதுகின்ற இவர், மொழிபெயர்ப்பு இலக்கியத்திலும் முனைப்பு கொண்டு புலம் பெயர்ந்த ஈழத் தமிழர்களது சிறுகதைகள் சிலவற்றை மொழி பெயர்த்து, சென்னை பல்கலைக் கழகத்திலும், பன்னாட்டு தேசிய கருத்தரங்கங்களிலும் அவை குறித்த ஆய்வுக் கட்டுரைகளைச் சமர்ப்பித் துள்ளார். தமிழ் நாடகச் சூழலில் இன்குலாப் அவர்களது “குறிஞ்சிப் பாட்டு’ எனும் நாடகத்தில் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார். குறிப்பாக பழம்பெரும் எழுத்தாளர் கு.ப.ரா.வின் “அகலிகை’ நாடகத்தில் அகலிகைப் பாத்திரத்தில் நடித்து பலரது பாராட்டைப் பெற்றவர். இதுமட்டுமல்லாது, ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களது வாழ்வு குறித்து ஆய்வு செய்து வருகிறார். தற்போது இவரது இரண்டாவது கவிதைத் தொகுப்பு வரவுள்ளது. இவரை இனிய உதயத்திற்காக ராஜா அண்ணாமலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் சந்தித்து உரையாடி னோம். அதிலிருந்து…
எந்தச் சூழலில் எழுத்தைத் தேர்வு செய்தீர்கள்?
“”எனக்கான என் சுயம், அகம், இதற்கான வெளிப்பாடு என்ன என்று ஒவ்வொருவரும் கேட்டுக்கொள்ள ணும். அதாவது பதினேழு, பதினெட்டு வயதில் கொஞ்சம் அறிவு முதிர்ச்சி வரும்போது. அப்படி நான் எனக்கான சுயலி அக வெளிப் பாடாகக் கவிதையைத் தேர்வு செய்தேன். பரதநாட்டியத்தை நான் முறையாகக் கற்றுக் கொண்டவள். அப்பவே மேடை நாடகத்தில் நடித்தவள். திராவிடப் பாரம் பரியத்தைச் சேர்ந்த குடும்பத்தில் முற்போக் குச் சிந்தனையுடன் வளர்ந்தேன். இதோடு ஒரு கிராமம் சார்ந்த நிலப்பரப்பைச் சார்ந்த வள். எனக்கான அடை யாளமாகக் கவிதை என்ற ஊடகத்தைத் தேர்வு செய்தேன்.”
புனைகதைகளில் வட்டார எழுத்து இருப்பதுபோல் கவிதை யிலும் வட்டாரக் கவிதைகள் எழுத விரும்புவதுபோல் உங்கள் கவிதைகள் அமைந்திருக்கின்றன. உதாரணமாக எஞ்சோட்டுப்பெண். இதற்கு என்ன காரணம் என்பதை விளக்குவீர்களா?
“”விரும்பி எந்தவிதமான கூறுகளை யும் கவிதையில் கொண்டு வரமுடி யாது. அப்படிக் கொண்டுவந்தால் அது கவிதை செய்வது போல்தான் இருக்கும். “எஞ்சோட்டுப் பெண்’ணுல நீங்கள் சொல்வது போன்ற கூறுகள் நிறைய கவிதையில் இருக்கிறது. நான் கிராமச்சூழலில் வளர்ந்தவள். என்னைச் செதுக்கியவர்கள் ஒரு குழந்தைவேல் ஆசாரியோ, வெடிவால் கருப்பையாவோ, என் அப்பத்தாவோ, கொத்தனார் பாக்யமோதான். என் அனுபவங் களை நான் எனக்கான மொழியில் சொல்லுகிறேன். மண் சார்ந்த கவிதையை எழுதணும் என்ற எண் ணத்தில் எழுதவில்லை. இயல்பிலேயே வந்தது. வலிந்து செய்வது கவிதையில்லை.”
கவிதையும் எழுது கிறீர்கள். நவீன நாட கத்திலும் நடிக்கி றீர்கள். உங்களுக்கான அடையாளம் கவிதை யிலா, நடிப்பிலா?
“”கவிதை எனக்கான அகத் தேடலின் வெளிப்பாடு. நாடகம் எனக்கான புறவெளிப்பாடு. இரண்டுமே எனக்கு முக்கியமானது. நாடகத்தில் நான் ரொம்ப உணர்வது அந்த நாடகவெளி எனக்குக் கொடுக் கிற சுதந்திரம். ஒரு பெண்ணாக எனக்கு அந்த அரங்கம் கொடுக்கிற வெளி முக்கியமானது. என் உணர்வுகளைலி சமூகம் எனக்குக் கொடுக்கும் பாதிப்புகளை எப்படி நான் கவிதையில் வடிக்கிறேனோ, அதேபோல நாடகத்திலும் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்துகிறேன். பெண் என்பதை மறந்து ஒரு பொதுமைக்குள் போகமுடிகிறது. இரண்டுமே என் அடையாளம்தான்.”
அரசியல் பின்னணி உள்ள குடும்பத்திலிருந்து வந்திருக்கி றீர்கள். உங்களுக்கு அரசியல் ஈடுபாடு உண்டா?
“”எனக்குன்னு இல்ல… சாதாரண மனிதனுக்கும் அரசியல் ஈடுபாடு இருக்கும். பக்கத்து வீட்டுக்காரர் குப்பைகளை நம் வீட்டுப் பக்கம் போடுவதை நாம் ஏனென்று கேட்கும்போதே அரசியல் ஆரம்பம் ஆகிவிடும். என் தந்தையார் பெரியாரின் தொண்டர். திராவிட முன்னேற்றக் கழகத்தில் நீண்ட காலம் பணியாற்றியவர். எப்படி எனக்கு “அனா ஆவன்னா’ கத்துக்கொடுத்தார் களோ, அதேபோல அரசியலும் கத்துத் தந்தார்கள். அருப்புக் கோட்டை தொகுதியில் என் தந்தையார் மூன்று தேர்தல்களில் தோல்வியைச் சந்தித்தார். அப்போது ஊர் மக்கள் எல்லாரும் எங்கள் வீட்டில் கூடுவார்கள். என் திருமணத் திற்கே சுற்று வட்டாரத்திலுள்ள ஐம்பது கிராமத்திலிருந்து மக்கள் வந்தார்கள். எங்கள் குடும்பம் என்பதே தமிழக முதல்வர் கலைஞர் அவர்களோடு சேர்ந்ததுதான். அப்படி இருக்கும்போது எனக்கு அரசியல் ஈடுபாடு இருக்காதா?”
நவீன நாடகங்களில் நடிக்கிறீர் கள். பொதுவாக “கூத்துப்பட்டறை’ போன்ற தீவிர கலை இயக்கங்களில் நடிப்பவர்கள் தற்போது திரைப் படங்களிலும் நடித்துப் புகழ் பெற்று வருகிறார்கள். உங்களுக்குத் திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு வந்தால் நடிப்பீர்களா?
“”திரைப்படத்துறை ஒரு வலிமையான ஊடகம். அதில் கூத்துப் பட்டறை பசுபதி, சந்திரா, கலை ராணி போன்ற சிறந்த கலைஞர்கள் பங்கேற்பது அத்துறைக்கு மேலும் செழுமை சேர்க்கும். சந்திரா ஒரு திரைப்படத்தில் ஒரு காட்சியில் வந்தாலும் மிகச் சிறப்பாகச் செய்வார். பொதுவா நாடகங்கள் மூலம் பெரிய வருமானத்தைச் சம்பாதிக்க முடி யாது. ஆதலால் இவர்கள் திரைப் படத்தில் அதிக வருமானத்தைப் பெற முடியும். அதன் மூலம் அவர் களுடைய வறுமையைப் போக்க முடியும். என்னைப் பொறுத்த மட்டில் தமிழ்த் திரைப்படச் சூழ லில் பெண் கதாபாத்திரங்களுக்கு அதிக முக்கியத்துவம் அவர்கள் கொடுப்பதில்லை. அதனால் நான் யோசிக்க வேண்டியதாக இருக்கிறது. ஷப்னா ஆஸ்மி, ஸ்மிதா பட்டேல், நந்திதாதாஸ் போன்ற சிறந்த கலைஞர்கள்கூட ஆரம்பத்தில் கமர்ஷியல் படங்களில் நடித்த பிறகுதான் மாற்று சினிமாவுக்குள் வந்திருக்கிறார்கள். தமிழ்த் திரைப் படச் சூழலில் அப்படியொரு நிலை வருமா என்பது எனக்குத் தெரிய வில்லை.” உரைநடையை மொழிபெயர்ப் பது சற்று எளிது. ஆனால் கவிதையை மொழிபெயர்ப்பது கடினம். இந்தச் சவாலை உங்களுடைய மொழி பெயர்ப்பில் எவ்வாறு எதிர் கொள்கிறீர்கள்?
“”மொழிபெயர்ப்பாளர்கள் தினம் தினம் சந்திக்கக் கூடிய சிக்கல் இது. மொழிபெயர்ப்பே மூலத்துக்குச் செய்கிற துரோகம் என்பார்கள். டிரான்ஸ்லேட்டர் என்பதை இப்போ நாங்கள் டிரான்ஸ் கிரி யேட்டர் என்று மாற்றி இருக்கி றோம். உரைநடையை மொழி பெயர்க்கும்போதே அதன் மூலத்தைக் கொண்டுவருவது கஷ்டம். கவிதையில் அதன் உணர்வுகளை அப்படியே கொண்டுவருவதும் சிரமமான ஒரு செயல்பாடு. என்னு டைய கவிதையை வேற்றுமொழியில் மொழிபெயர்க்கும்போது அதில் உள்ள பண்பாட்டுச் சொற்கள், வட்டாரச் சொற்கள், கலாச்சாரச் சொற்களுக்குத் தனியாக அடிக் குறிப்போடுதான் மொழிபெயர்க்க முடியும். உதாரணமாக என் அப்பத்தாவைப் பற்றிய கவிதையில் பாம்படம் என்ற சொல் வருகிறது. இன்றைய தமிழ் இளம் தலைமுறை களுக்கோ பாம்படம் தெரியாது. அப்படியிருக்க அதை மொழி பெயர்க்கும்போது பாம்படம் படமே போட வேண்டியிருக்கும். இதெல் லாம் தாண்டி மொழிபெயர்ப்பாளர் களாகிய நாங்கள் முடிந்தவரை மூலத்தைச் சிதைக்காமல் கொண்டு வரவே முயற்சிக்கிறோம்.”
“”இது தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரும் மிக முக்கியமான விஷயமாக எடுத்துக்கொள்ள வேண்டிய கேள்வி. நவீன தமிழ் இலக்கியச் சூழலில் எந்த மாதிரியான படைப்புகள் வருகின்றன? அவற்றின் கருத்தாக்கம் என்ன? எதிர்வினைகள் என்ன? சமூகத் தாக்கம் என்ன என்பன போன்றவற்றை இளைய தலைமுறை வாசகர்களுக்குலி குறிப் பாக மாணவர்களுக்கு அறிமுகப் படுத்த வேண்டிய பொறுப்பு பேராசிரியர்களுக்கு உண்டு. சமீபத்தில் அழகிய பெரியவனின் “வெட்கப்படுகிறது இந்தியா’ என்ற மிக முக்கியமான அந்தக் கட்டுரைத் தொகுப்பு வெகுசிலரே அறிந்திருக்கக் கூடும். கவிதைப் பரப்பில் பார்த்தால் லஷ்மி மணிவண்ணனின் “எதிர்ப்பு கள் தோன்றி மறையும் இடம்’ என்ற தொகுப்பையும் வெகுசில மாணவர் களே அறிவார்கள். ஆக ஒரு மாணவன் இதைப் படிக்கலாம், படிக்க வேண்டாம் என்று சொல்லுகிற பொறுப்பில் இருக்கிற பேராசிரியர் கள் பாட வரைத் திட்டத்தில் அக நானூறு, புறநானூறு, சங்க இலக்கியம், பக்தி இலக்கியம், புதுக்கவிதை ஆகியவற்றிற்குக் கொடுக்கிற முக்கியத்துவத்தை நவீனத்துவ, பின்நவீனத்துவப் படைப்புகளுக்கு இவர்கள் கொடுப் பதில்லை. ஆனால் மலையாள இலக்கிய உலகில் அழகிய பெரிய வன், ரமேஷ்லி பிரேம் போன்ற மிக முக்கியமான தமிழ்ப் படைப்பாளி களைக் கவனத்தில் எடுத்துக்கொண்டு மலையாள வாசகர்களுக்கு அறி முகப்படுத்தி வைக்கிறார்கள். இப்ப டிச் சிறிதளவு நடைபெற்றுக் கொண் டிருக்கின்றன. இவ்வாறான புதிய போக்குகள்கூட பல் கலைக்கழகங்களிலும், கல்லூரிகளிலும் கல்வி சார் நிகழ்வுகளாகக் குறுக்கப்பட்டு விடு கின்றன. மக்களைச் சென்று சேர்கின்ற வணிகப் பத்திரிகை கள் இதைக் கவனத் தில் எடுத்துக்கொண்டு, வாசகர்களுக்கான வாசிப்புத் தளத்தை மேம்படுத்தலி அதிகப் படுத்த வேண்டும்.” உங்களுக்குப் பிடித்த கவிஞர்கள் யார்?
“”எனக்குப் பிடித்த ஆங்கிலக் கவிஞர் ஜான்டன்(Meta physicial Poet). ஜான்டன் தன்னுடைய கவிதைகளில் “ஈர்ய்ங்ண்ற்’ என்கிற புதுமையான படிம வகையை முதன்முறையாகப் புகுத்தியவர். ஷேக்ஸ்பியரோட குறுங்கவிதை களைவிடச் சிறந்தவையாகக் கருதப்பட்டவை.
ஜான்டனுடைய “ஈர்ஹ்ம்ண்ள்ற்ழ்ங்ள்ள்’ என்னும் கவிதைகள், மலையாளத்தில் ஆற்றூர் ரவிவர்மாவின் கவிதை களும், பிரமிள், ஆத்மநாம், சுகுமாரன், லஷ்மிமணிவண்ணன், இரா.மீனாட்சி, கலாப்ரியா, பச்சையப்பன், சங்கர ராமசுப்பிரமணியன், உமாமகேஸ்வரி, மாலதிமைத்ரி, இலங்கைப் பெண் கவிஞர்களில் சிவரமணி, ஆழியாள், ஊர்வசி, சேரன் ஆகியோரது கவிதை கள் எனக்குப் பிடிக்கும். பொதுவாக கவிதைகளில் ஒரு எளிமையையும், அனுபவத்தின் உண்மை யையும் தேடுகின்ற எனக்கு, இவர்களு டைய படைப்புகளில் இந்தக் கூறுகள் இருப் பதால் எனக்குப் பிடித் தவையாகவும், பாதித் தவையாகவும் இருக் கின்றன.” திரைப்படத்திற்குப் பாடல்கள் எழுதும் உத்தேசம் ஏதாவது உண்டா?
“”திரைப்படத்திற்கு இலக்கியவாதிகள் பாடல் எழுதுவது என்பது இங்கு பெரிய குற்றமாகவும், பாவமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படி அல்ல அது. எங்கேயிருந் தாலும் நீங்கள் எதைச் சொல்கிறீர் கள், என்ன எழுதுகிறீர்கள் என்பது தான் முக்கியம். ஆனால் எப்படி ஒரு தலைப்பைக் கொடுத்து அதற்கான கவிதையை என்னால் எழுத முடியாதோ, அதேபோல மெட்டு களுக்கான பாடல் எழுதுவதும் எனக்குச் சாத்தியம் இல்லை. தற்போது திரைப்படப் பாடலா சிரியர்கள் அறிவுமதி, நா.முத்துக் குமார், யுகபாரதி ஆகியோர் எழுதும் பாடல்கள் எனக்குப் பிடிக்கும்.” கவிதையில் பெண் மொழி என்று தனியாக உண்டா? “”உண்டு. எனக்குக் கவிதையைப் பொறுத்தவரையில் பால் கிடையாது. கவிதையைப் படித்தவுடன் இது ஆண் எழுதிய கவிதை, பெண் எழுதிய கவிதை என்று தெரிய வேண்டிய அவசிய மில்லை. ஆனால் இன்றைய தமிழ்ச் சூழலில் ஒரு பெண் குடும்பம், சமூகம், திருமணம், மதம், பாலியல் பாகுபாடு போன்ற நிறுவனங்களால் ஒடுக்கப்படுகிறாள். அதிலிருந்து மீண்டு அவளுக்கான அடை யாளத்தைக் கண்ட டைந்து அதனை வெளிப்படுத்த முனைகையில் ஒரு தனித்துவமான மொழியும், வேட்கை மிகுந்த ஒரு வெளிப்பாடும் பெண் படைப் பாளிக்குத் தேவையாக இருக்கிறது. அந்த வகையில் பெண்மொழி என்ற ஒன்றை பெண்ணியச் சிந்தனை யாளர்களும், பெண் படைப்பாளி களும் பெண்களுக்கான பிரத்தியேக மொழி ஒன்றைக் கையாளுகிறார்கள். இதுதான் அவசியமானலி ஆரோக்கிய மான போக்கு.”
தற்போது தமிழில் தீவிரமாக இயங்கும் படைப்பாளிகள் அரசியலில் பங்கெடுக்கிறார்கள். இவர்களால் அரசியலில் ஒரு ஆரோக்கியமான சூழலைக் கொண்டு வரமுடியுமா?
“”முடியுமா என்று கேட்டால் தெரியாது என்றுதான் சொல்லு வேன். ஏனென்றால் அரசியல் சமரசங்கள் அதிகம் தேவைப்படுகிற ஒரு துறை. ஆனால் நுட்பமான மனஉணர்வுகளும், மனிதநேயமும் அடிப்படையிலேயே அதிகமாக இருக்கும் படைப்பாளிகள் அதிகமாக அரசியலில் பங்கெடுத்தால் கண்டிப்பாக ஒரு மாற்றத்தைக் கொண்டு வரமுடியும் என்று நான் நம்புகிறேன். உலகில் சிறந்த புரட்சியாளர் கள், சிறந்த சிந்தனை யாளர்கள் அனைவருமே படைப்பாளிகளும் தானே.”
பாராளுமன்றத்தில் பெண்களுக் கான 33 சதவிகித இடஒதுக்கீடு நிறைவேறாமலே இருக்கிறது. இது சம்பந்தமாகப் பெண் படைப் பாளிகள் யாருமே குரல் கொடுக்க வில்லை. என்ன காரணம்?
“”பெண் படைப்பாளிகள் ஏன் குரல் கொடுக்கவில்லை என்று கேட்டால் மறுபடியும் அரசியல் தான் அங்கு வருகிறது. படைப் பிலக்கியவாதிகளோ, எழுத்தாளர் களோ இணைந்து ஒரு சிறிய போராட்டத்தின் மூலம் கவனத்தை ஈர்க்கலாமே ஒழிய, முடிவு எடுக்க வேண்டியவர்கள் அரசியல்வாதி களாக இருக்கின்ற நிலைமையில் பெரிய மாறுதல்களை நாம் எதிர்பார்க்க முடியாது. சமீபத்தில் நர்மதா அணைக்காக மேத்தா பட்கருடைய உண்ணாவிரதப் போராட்டத்தைச் சொல்லலாம்.”

நீங்கள் வட்டாரமொழியில் கவிதைகள் எழுதுகிறீர்கள். சா.கந்தசாமி, “வட்டாரமொழியில் எழுதும் படைப்பாளிகளின் படைப்பு அவர்களுடைய காலத்தி லேயே செத்துவிடுகிறது’ என்கிறார். இதைப் பற்றிய உங்கள் கருத் தென்ன?
“”நான் எழுதுவது என் மொழி. வியர்வையும், சொலவடையும் (பழமொழி), வாழ்வனுபவங்களின் சொல்வழக்கு நிரம்பிய என் மண்ணின் மொழி. எனக்குத் தெரிந்த இயல்பான என் மொழியில் எழுது வது உண்மையின் வீரியத்துடன் நிலைத்து நிற்கும்லி அம்மொழி பேசும் எம்மக்கள் இருக்கும்வரை. இதை விடுத்து ஒரு புனைவு மொழியில் நான் இயங்க வேண்டும்; அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதையின் கரு, பண்பாட்டு மூலக்கூறு என்னுடைய மண் சார்ந்து இருக்க வேண்டும். அதில் இருக்கின்ற படிமங்கள், உவமைகள் அறிவு சார்ந்த நவீன மொழியில் இருக்கலாம். நவீனச் சூழலில் நிலம் சார்ந்தும், பண்பாட்டுச் சூழல் சார்ந்தும் உங்களுக்கான ஒரு பிரத்தியேக மொழியில் எழுது வதென்பது, நவீன விமர்சகர்களால் தர்ம்ஹய்ற்ண்ஸ்ரீ சர்ள்ற்ஹப்ஞ்ண்ஹ என்று புறம் தள்ளப்படுகின்றது. இவர்கள் விவரித்து கவிதைகள் எழுதிய ஆங்கிலக் கவிஞர் ரர்ழ்க்ள்ஜ்ர்ழ்ற்ட்லிதை ஏற்றுக்கொள்கிறார்கள். லத்தீன் அமெரிக்கக் கவிதைகளையும், ஆஸ்திரேலியப் பழங்குடியின ருடைய ஆங்கிலக் கவிதைகளையும் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் வித்யா ஷங்கர் எழுதிய “எனது’ கவிதைதான்.
ஆர்தர் கொய்ஸவரும்
ஆல்பர்ட் காம்யூவும்
ஆயிரம்தான் படித்தாலும்
அவை எனக்குச் செய்திகளே
பேர் சொல்லி மிரட்டாதே
வேருண்டு எனக்கு
அறிந்ததும்
அனுபவமும்
கணியான் கூத்து
வரகணி மாரிமுத்து
நையாண்டி மேளம்
கருவநல்லூர் கருப்பசாமி
கரகமாடும்
தச்சநல்லூர் சாரதாவும்தான்.”

தற்போதைய சிறு பத்திரிகை களின் போக்கு எவ்வாறு உள்ளது?
“”சிறு பத்திரிகைச் சூழலில் இன்று பல குழுக்களாக இயங்கிக் கொண் டிருக்கிறார்கள். சார்பு நிலையற்ற நடுநிலையான நுண்ணுணர்வுமிக்க படைப்பாளிகளுக்கு இது மிகவும் கவலையளிக்கக் கூடியது; என்றாலும் அப்படிப்பட்ட படைப்பாளிகள் தங்களுக்கான படைப்புகளை எந்தக் குழுவும் சாராத தளங்களில் வெளிக் கொணர்வதன் மூலம் தொடர்ந்து ஆரோக்கியமான முறையில் இயங்க முடியும் என்று நான் திடமாக நம்புகிறேன். சுதந்திரத்தின் முதல் ஒளியை எடுத்துச் செல்லும் படைப் பாளிகள் எந்தக் குழுக்களுக்குள் ளேயும் இயங்க முடியாது.”
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழர் களுடைய வாழ்நிலை பற்றி ஆய்வு செய்து வருகிறீர்கள். அந்த ஆய்வைப் பற்றிச் சொல்லுங்களேன்.
“”ஆய்வுபற்றி சொல்வதற்கு முன்னால் ஈழத்தமிழர்களோடு எனக்கிருக்கின்ற தொப்புள்கொடி உறவைப் பற்றி சொல்ல வேண்டும். ஒடுக்குதலுக்கு ஆளான ஒரு தமிழ் இனம் மிகப்பெரிய அளவில் இடம் பெயர்ந்தது என்பது (யூத இனத்திற்கு அடுத்தபடியாக) ஈழத்தமிழர்கள்தான். அவர்களுடைய அலைந்து உழல்தலையும், அயல் மண்ணிலே எப்படியாவது பதிவு செய்திட வேண்டும் என்கின்ற என் ஆவல்தான் இந்த ஆய்விற்குக் காரணம். குறிப் பாக ஆஸ்திரேலியாவில் அவர்கள் அதிக அளவில் குடிபெயர்ந்ததால், அங்கிருக்கின்ற தமிழர்களுடைய ஆங்கிலப் படைப்புகளை என் ஆய்வுக்காக எடுத்துக்கொண்டேன். தமிழ் அவர்களுக்கு வாழ்வு மொழி யாக இருக்கிறது. ஆங்கிலம் அவர் களுக்குப் பிழைப்பு மொழியாக இருக்கிறது. அந்த மொழியிலேயே அவர்களுடைய ஆவலாதிகளையும், அடையாளம் குறித்த நிலையற்ற தன்மையையும் எழுதும்போது அது உலகளாவிய வாசகத்தளத்திற்குச் செல்கிறது. இப்பரவலான சென்ற டைதலின் மூலம் உலகம் அவர்களை உற்றுக் கவனிக்கும். அதன் மூலம் சற்றேனும் அவர்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்பது என் நம்பிக்கை. என் ஆய்வுக்கான முனைப்பும் இதுதான்.”

தமிழச்சி என்று புனைபெயர் வைத்திருக்கிறீர்களே என்ன காரணம்?
“”இந்தக் கேள்வியைத்தான் முதல் கேள்வியாகக் கேட்பீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் கடைசியில் கேட்டிருக்கிறீர்கள். பொதுவாக என்னைச் சந்திக்கிற எல்லாருமே இந்தக் கேள்வியை என்னிடம் கேட்கத் தவறுவதே இல்லை. சுமதி என்ற என் சொந்தப் பெயரிலேயே என் படைப்புகளை வெளியிடத்தான் எனக்கு விருப்பம். ஏற்கெனவே என் பெயரில் இன்னொரு சுமதி படைப் பாக்கத்தில் ஈடுபட்டிருக்கிறார் எனக் கேள்விப்படும்பொழுது, என்னை நான் எப்படி அடையாளப்படுத்திக் கொள்வது என யோசித்து, வேறொரு பெயரைத் தேடினேன்.
இந்த “அடையாளம்’ என்பது என்னைப் பிறரிடமிருந்து வித்தி யாசப்படுத்தியோ, வேறுபடுத்தியோ காட்ட வேண்டிய அவசியமில்லை. அது எந்தவிதமான மிகைத்தனங் களுமற்றுலி அதேசமயம் எனது வேர்களின் ஊடோடி இருந்தால் எனக்கு உவப்பானதாகவும், திருப்தி கரமாகவும் இருக்குமே என்பதால் தமிழ்க் கிராமத்திலிருந்து வருகின்ற ஒரு பெண் எனும் பொருள்படும் படியான ஒரு பெயரை யோசித்தேன்.
“”நான் எழுதுவது என் மொழி. வியர்வையும், சொலவடையும் (பழமொழி), வாழ்வனுபவங்களின் சொல்வழக்கு நிரம்பிய என் மண்ணின் மொழி. எனக்குத் தெரிந்த இயல்பான என் மொழியில் எழுது வது உண்மையின் வீரியத்துடன் நிலைத்து நிற்கும்லி அம்மொழி பேசும் எம்மக்கள் இருக்கும்வரை. இதை விடுத்து ஒரு புனைவு மொழியில் நான் இயங்க வேண்டும்; அதுதான் பின்நவீனத்துவம் என்றால் அதில் எனக்கு உடன்பாடு இல்லை. கவிதையின் கரு, பண்பாட்டு மூலக்கூறு என்னுடைய மண் சார்ந்து இருக்க வேண்டும். அதில் இருக்கின்ற படிமங்கள், உவமைகள் அறிவு சார்ந்த நவீன மொழியில் இருக்கலாம். நவீனச் சூழலில் நிலம் சார்ந்தும், பண்பாட்டுச் சூழல் சார்ந்தும் உங்களுக்கான ஒரு பிரத்தியேக மொழியில் எழுது வதென்பது, நவீன விமர்சகர்களால்’ Romantic Nostalgia என்று புறம் தள்ளப்படுகின்றது. இவர்கள் விவரித்து கவிதைகள் எழுதிய ஆங்கிலக் கவிஞர் Wordsworth -்ழ்க்ள்ஜ்ர்ழ்ற்ட்லிதை ஏற்றுக்கொள்கிறார்கள். லத்தீன் அமெரிக்கக் கவிதைகளையும், ஆஸ்திரேலியப் பழங்குடியின ருடைய ஆங்கிலக் கவிதைகளையும் கொண்டாடுகிறார்கள். அவர்களுக்கு என்னுடைய ஒரே பதில் வித்யா ஷங்கர் எழுதிய “எனது’ கவிதைதான்.
சமீபத்தில் தாங்கள் படித்த புத்தகம் எது?
“”சமீபத்தில் நான் படித்த புத்தகம் ஆங்கிலத்தில் தமிழ்ப் பழமொழி களின் மொழிபெயர்ப்பு புத்தகம் (தங்ஸ். ஐங்ழ்ம்ஹய்த்ங்ய்ள்ங்ய் எழுதியது). தென்றல் எழுதிய நீல இறகு ஆகியவை.”
(இப்பேட்டி நக்கீரனில் வெளிவந்தது)

காவியம்

சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது