ஒரு மனிதன் எத்தனை புத்தகங்களைப் படித்தான் என்பதை வைத்துத்தான் அவன் வாழ்ந்த நாட்கள் கணக்கிடப்படும்.
– ஹென்றி டேவிட் தோரோ
என்னுடைய கவலைகள், தீராத பிரச்சனைகள் எல்லாவற்றையும் புத்தகங்கள்தான் போக்கியது. மேலும் வாசிப்பின் மூலமாகத்தான் சாதி, மதம் எல்லாவற்றையும் கடந்து நல்ல மனிதனாக உணர முடிந்தது. இன்றும் நல்ல நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், கட்டுரைகளோடு கண்டதையெல்லாம் வாசித்துக்கொண்டிருக்கிறேன். புத்தகங்களோடு நான் என்று முன்பு எழுதிய பதிவின் தொடர்ச்சிதான் இப்பதிவு. நான் வாசித்த முக்கியமான புத்தகங்களை எல்லாம் தொகுத்திருக்கிறேன். பின்னாளில் திரும்பிப் பார்க்கும் போது நினைத்தாலே இனிக்கும் என்ற எண்ணம்தான். மேலும், இதில் அவ்வப்போது வாசிப்பவைகளை குறித்து வைத்துக் கொள்வதன் மூலம் மறந்து போனாலும் இப்பதிவு மீட்டெடுக்கும் என்ற நம்பிக்கைதான். இது போல ஒரு பதிவை நீங்களும் தொகுத்து வைத்து கொள்ளுங்கள்.
நாவல்கள்
1.துயில் – எஸ்.ராமகிருஷ்ணன்
2.கொற்றவை – ஜெயமோகன்
3.விஷ்ணுபுரம் – ஜெயமோகன்
4.பசித்த மானுடம் – கரிச்சான்குஞ்சு
5.குறிஞ்சிமலர் – நா.பார்த்தசாரதி
6.ஒரு கடலோர கிராமத்தின் கதை – தோப்பில் முகமது மீரான்
7.வாடிவாசல் – சி.சு.செல்லப்பா
8.நாளை மற்றொரு நாளே – ஜி.நாகராஜன்
9.கோபல்ல கிராமம் – கி.ராஜநாராயணன்
10.பார்த்திபன் கனவு – கல்கி
11.பொன்னியின் செல்வன் – கல்கி
12.ஆழி சூழ் உலகு – ஜோ டி குரூஸ்
13.நிழல்முற்றம் – பெருமாள்முருகன்
14.கல்மரம் – திலகவதி
15.ஒரு புளிய மரத்தின் கதை- சுந்தர ராமசாமி
16.பொய்த்தேவு- க.நா.சு
17.கானல் நதி – யுவன் சந்திரசேகர்
18.அபிதா – லா.ச.ரா
19.வேள்வித்தீ – எம்.வி.வெங்கட்ராம்
20.அலைவாய்கரையில் – ராஜம்கிருஷ்ணன்
21.குறிஞ்சித்தேன் – ராஜம்கிருஷ்ணன்
22.பாத்துமாவினுடைய ஆடும் இளம்பிராயத்து தோழியும் – பஷிர்
23.தோட்டியின் மகன் – தகழி சிவசங்கரன்
24.இனி நான் உறங்கட்டும் – பாலகிருஷ்ணன்
25.ஃபேர்வெல் குல்சாரி (நினைவின்நிழல்), ஜமிலா – சிங்கிஸ் ஜத்மதேவ்
26.அந்நியன் – ஆல்பெர் காம்யூ
கட்டுரைத்தொகுப்புகள்
27.பண்பாட்டு அசைவுகள்– தொ.பரமசிவன்
28.தெய்வம் என்பதோர் – தொ.பரமசிவன்
29.தேசாந்திரி– எஸ்.ராமகிருஷ்ணன்
30.விழித்திருப்பவனின் இரவு – எஸ்.ராமகிருஷ்ணன்
31.கோடுகள் இல்லாத வரைபடம் – எஸ்.ராமகிருஷ்ணன்
32.வாசக பர்வம் – எஸ்.ராமகிருஷ்ணன்
33.காண் என்றது இயற்கை– எஸ்.ராமகிருஷ்ணன்
34.இலைகளை வியக்கும் மரம்– எஸ்.ராமகிருஷ்ணன்
35.காற்றில் யாரோ நடக்கிறார்கள் – எஸ்.ராமகிருஷ்ணன்
36.சமணமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
37.தமிழர் வளர்த்த அழகுக்கலைகள் – மயிலை.சீனி.வேங்கடசாமி
38.கிறிஸ்துவமும் தமிழும் – மயிலை.சீனி.வேங்கடசாமி
39.நதியின் பிழையன்று நறும்புனல் இன்மை – நாஞ்சில் நாடன்
40.தீதும் நன்றும் – நாஞ்சில்நாடன்
41.என் இலக்கிய நண்பர்கள் – ந.முருகேச பாண்டியன்
42.உப்பிட்டவரை – ஆ.சிவசுப்ரமணியன்
43.கிறிஸ்துவமும் தமிழ்ச்சூழலும்- ஆ.சிவசுப்ரமணியன்
44.மணல் மேல் கட்டிய பாலம் – சு.கி.ஜெயகரன்
45.தமிழக பழங்குடிகள் – பக்தவத்சலபாரதி
46.உழவுக்கும் உண்டு வரலாறு – கோ.நம்மாழ்வார்
47.இது சிறகுகளின் நேரம் – அப்துல் ரகுமான்
48.தூங்காமல் தூங்கி – மாணிக்கவாசகன்
49.நகுலன் இலக்கியத்தடம் – தொகுப்பு. காவ்யா சண்முகசுந்தரம்
50.இன்னும் பிறக்காத தலைமுறைக்கு – தியடோர் பாஸ்கரன்
சிறுகதைத்தொகுப்புகள்
51.நடந்து செல்லும் நீருற்று – எஸ்.ராமகிருஷ்ணன்
52.மிதமான காற்றும் இசைவான கடலலையும் – ச. தமிழ்ச்செல்வன்
53.மதினிமார்கள் கதை – கோணங்கி
54.உயரப்பறத்தல் – வண்ணதாசன்
55.ஒளிவிலகல் – யுவன்சந்திரசேகர்
56.திசைகளின் நடுவே – ஜெயமோகன்
57.மாபெரும் சூதாட்டம் – சுரேஷ்குமார் இந்திரஜித்
58.ராஜன் மகள் – பா.வெங்கடேசன்
59.பீக்கதைகள் – பெருமாள் முருகன்
60.வெண்ணிலை – சு.வேணுகோபால்
61.மண்பூதம் – வா.மு.கோமு
62.புலிப்பாணி சோதிடர் – காலபைரவன்
63.அன்பின் ஐந்தினை – சு.மோகனரங்கன்
64.ஓய்ந்திருக்கலாகாது – கல்வி குறித்த சிறுகதைகள்
ஆளுமைகள், நேர்காணல்கள், உரையாடல்கள்
65.மாவீரர் உரைகள், நேர்காணல்கள்
66.சமயம் – தொ.பரமசிவன், சுந்தர்காளி
67.எப்போதுமிருக்கும் கதை – எஸ்.ராமகிருஷ்ணன்
68.பாலியல் – சாருநிவேதிதா, நளினிஜமிலா
69.ஆளுமைகள் சந்திப்புகள் நேர்காணல்கள் – தொகுப்பு மணா
மதுரை
70.எனது மதுரை நினைவுகள் – மனோகர் தேவதாஸ்
71.அழகர் கோயில் – தொ.பரமசிவன்
72.எண்பெருங்குன்றம் – வெ.வேதாச்சலம்
73.மதுரை அன்றும் இன்றும் – குன்றில் குமார்
74.கிராமத்து தெருக்களின் வழியே – ந.முருகேச பாண்டியன்
கவிதைகள்
75.விக்ரமாதித்தன் கவிதைகள் – விக்ரமாதித்தன் நம்பி
76.என் படுக்கையறையில் யாரோ ஒளிந்து இருக்கிறார்கள்-மனுஷ்யபுத்திரன்
77.மண்ணே மலர்ந்து மணக்கிறது – மகுடேஸ்வரன்
78.நீரின்றி அமையாது – மாலதிமைத்ரி
79.நட்பூக்காலம் – அறிவுமதி
கதைகள்
80.பஞ்சதந்திரகதைகள்
81.தெனாலிராமன் கதைகள்
82.பீர்பால்கதைகள்
83.மரியாதைராமன் கதைகள்
84.விக்ரமாதித்தன் கதைகள்
85.ஜென் கதைகள் – புவியரசு
86.திராவிடநாட்டுப்புறக்கதைகள்
87.மதனகாமராசன் கதைகள்
88.பரமார்த்த குரு கதைகள்
89.மகாபாரதக்கதைகள்
90.சூஃபி கதைகள்
91.முல்லா கதைகள்
92.ஆயிரத்தோரு அராபிய இரவுகள்
93.கிறுகிறுவானம் – எஸ்.ராமகிருஷ்ணன்
94.நகுலன் வீட்டில் யாருமில்லை – எஸ்.ராமகிருஷ்ணன்
95.மரகத நாட்டு மந்திரவாதி – எல்.பிராங்க்போம். தமிழில் யூமா வாசுகி
96.மறைவாய்ச் சொன்ன பழங்கதைகள் – கி.ரா, கழனியூரன்
மற்றவை
97.திசைகாட்டிப்பறவை – பேயோன்
98.நவீன ஓவியம் – இந்திரன்
99.கோபுலு ஜோக்ஸ், ராஜூ ஜோக்ஸ், தாணு ஜோக்ஸ் – விகடன்
100.தியானம் பரவசத்தின் கலை – ஓஷோ
101.கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து
இப்பட்டியல் இன்னும் தொடரும். நிறைய புத்தகங்களை இன்னும் குறிப்பிட வேண்டியிருக்கிறது. புதுமைப்பித்தன் சிறுகதைகள் மொத்தத் தொகுப்பில் பத்து கதைகள் மட்டும் படிக்காமல் விட்டதால் அதைக்குறிப்பிட முடியவில்லை. சிலநேரம் புத்தகங்களை வாசிக்கவே விடாமல் காலம் கொடுமை செய்துவிடும். மொத்தத் தொகுப்பை வாசிக்கும்போது இப்படி அடிக்கடி நிகழ்ந்துவிடுகிறது.
வலைத்தளங்கள்
பாரதி சொன்னது போல “நோக்குந் திசையெல்லாம் நாமின்றி வேறில்லை, நோக்க நோக்க களியாட்டம்” என்று இணையத்தில் தமிழை பார்த்து, பார்த்து பேருவகை அடைகிறேன்.
தொகுப்புகள், எழுத்தாளர்கள் & வலைப்பதிவர்கள்
1.மதுரைத்திட்டம் http://www.tamil.net/projectmadurai
2.நூலகம் http://noolaham.net/
3.தமிழ்பல்கலைகழகம் www.tamilvu.org
4.தமிழ்விக்கிபீடியா http://ta.wikipedia.org/
5.கீற்று www.keetru.com
6.தமிழ்த்தொகுப்புகள் http://thoguppukal.wordpress.com/
7.அழியாச்சுடர்கள் http://azhiyasudargal.blogspot.com
8.கூடு www.koodu.thamizhstudio.com
9.உயிர்மை www.uyirmmai.com
10.காலச்சுவடு http://kalachuvadu.com/
11.நட்பூ www.natpu.in
12.முத்தமிழ்மன்றம் http://www.muthamilmantram.com/
13. உலகபுத்தகதினம் http://bookdaytn.blogspot.com/
எழுத்தாளர்கள் & வலைப்பதிவர்கள்
14.எஸ்.ராமகிருஷ்ணன் www.samakrishnan.com
15.பிரபஞ்சன் www.prapanchan.in
16.ஜெயமோகன் http://www.jeyamohan.in
17.வண்ணதாசன் www.vannathasan.wordpress.com
18.நாஞ்சில்நாடன் www.nanjilnadan.wordpress.com
19.சாருநிவேதிதா http://charuonline.com/
20.கலாப்பிரியா http://kalapria.blogspot.com/
21.ச.தமிழ்ச்செல்வன் http://satamilselvan.blogspot.com/
22.கீரனூர்ஜாகிர்ராஜா http://jakirraja.blogspot.com/
23.மகுடேஸ்வரன் www.kavimakudeshwaran.blogspot.com
24.சுகுமாரன் http://vaalnilam.blogspot.com/
25.பவா.செல்லத்துரை http://bavachelladurai.blogspot.com/
26.தி.க.சி http://thikasi.blogspot.com/
27.வாமு.கோமு www.vaamukomu.blogspot.com
28.க.சீ.சிவக்குமார் http://sivakannivadi.blogspot.com
29.நாகர்ஜூணன் http://nagarjunan.blogspot.com/
30.காலபைரவன் http://kalabairavan.blogspot.com/
31.தமிழ்நதி www.tamilnathy.blogspot.com
32.சுப்ரபாரதிமணியன் http://rpsubrabharathimanian.blogspot.com
33.கிழக்கு பதிப்பகம் பத்ரி http://thoughtsintamil.blogspot.com
34.புத்தகம் http://puththakam.blogspot.com/
35.தமிழ்ச்சமணம் www.banukumar_r.blogspot.com
36.ஷாஜி http://musicshaji.blogspot.com/
37.மரபின்மைந்தன் http://marabinmaindanmuthiah.blogspot.com
38.வெயிலான் http://veyilaan.com/
39.பிச்சைப்பாத்திரம் www.pitchaipathiram.blogspot.com
40.தனிமையின் இசை http://ayyanaarv.blogspot.com
41.ஆடுமாடுகாடு http://aadumaadu.blogspot.com/
42.தீராதபக்கங்கள் www.mathavaraj.com
43.மொழிவிளையாட்டு http://jyovramsundar.blogspot.com/
44.தமிழில் http://linguamadarasi.blogspot.com
45.பதியம் http://www.pathiyam.com
46.நிசப்தம் www.nisaptham.com
47.பி.கே.பி. http://pkp.blogspot.com/
48.கூட்டாஞ்சோறு http://koottanchoru.wordpress.com
49.என் காலடி ஓசை http://adhiyaman.blogspot.com/
மதுரைப்பதிவர்கள்
50.மதுரை சரவணன் http://veeluthukal.blogspot.com/
51.தருமி http://dharumi.blogspot.com
52.யாழிசை http://yalisai.blogspot.com
53.ஹைக்கூ அதிர்வுகள் http://ananthi5.blogspot.com
54.ஸ்ரீ http://sridharrangaraj.blogspot.com
55.பொன்னியின் செல்வன் http://ponniyinselvan-mkp.blogspot.com
56.ஆம்பல் www.aambal.wordpress.com
57.கல்வெட்டு http://kalvetu.blogspot.com/
58.மதுரைக்காரன் http://maduraipandi1984.blogspot.com/
59.தீதும்நன்றும் பிறர்தரவாரா http://yaathoramani.blogspot.com/
60.மதுரைவாசகன் http://maduraivaasagan.wordpress.com/
வலைத்தள வாசிப்புக்கு நான் வந்தே இரண்டு ஆண்டுகள்தானிருக்கும். எனவே மேலே உள்ள பட்டியல் நீளும். இதில் உள்ளதைத் தாண்டியும் வாசித்துக் கொண்டுதானிருக்கிறேன். பின்னூட்டமிடும் நண்பர்களின் தளங்கள் மற்றும் கீழேயுள்ள தளங்களில் உள்ள இணைப்புகளில் இருந்து புதிய முகவரிகளுக்கு சென்று வாசித்துக்கொண்டுதானிருக்கிறேன். மதுரைப்பதிவர்களின் தளங்களையோ, மதுரையையோ குறித்து வாசிக்கும்போது அடையும் மனமகிழ்ச்சிக்கு இணையே இல்லை. இன்னும் நிறைய வாசிக்கணும்.
எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களின் தளம்தான் முதலில் வாசித்தது. அவரது தளம்தான் என் இணைய வாசிப்பை அதிகரிக்க காரணம். எனவே, எஸ்.ரா அவர்களுக்கும் மற்றும் அனைவருக்கும் நன்றி. எனக்கு முதன்முதலில் பின்னூட்டம் இட்டு வாழ்த்திய மதுரைசரவணன் அவர்களுக்கும் நன்றி. மதுரைக்கும் தமிழுக்கும் நன்றி!